விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாட்டு வண்டியில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி மாநில சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆளுநர் இக்பால் சிங் உரைக்கு முன் முதலமைச்சர் வைத்திலிங்கம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இந்நிலையில் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாட்டு வண்டியில் அ.இ.அ.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்தனர்.
ஆனால் சட்டப்பேரவைக்குள் விட காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனை கண்டித்து சட்டப்பேரவை நுழைவு வாயில் முன்பு சட்டமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ஆளுநர் உரை தொடங்கியும் பேரவைக்குள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வந்தனர். அப்போது விலைவாசி உயர்வை கண்டித்து காங்சிரஸ் அரசுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர். பின்னர் பேரவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி மாநில சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆளுநர் இக்பால் சிங் உரைக்கு முன் முதலமைச்சர் வைத்திலிங்கம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இந்நிலையில் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாட்டு வண்டியில் அ.இ.அ.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்தனர்.
ஆனால் சட்டப்பேரவைக்குள் விட காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனை கண்டித்து சட்டப்பேரவை நுழைவு வாயில் முன்பு சட்டமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ஆளுநர் உரை தொடங்கியும் பேரவைக்குள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வந்தனர். அப்போது விலைவாசி உயர்வை கண்டித்து காங்சிரஸ் அரசுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர். பின்னர் பேரவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
0 comments :
Post a Comment