Monday, January 31, 2011

ஆர்யா, அனுஷ்கா, தமன்னாவிற்கு கலைமாமணி விருது

நடிகர்கள் ஆர்யா, அனுஷ்கா, தமன்னா உட்பட 74பேருக்கு கலைமாமணி விருதுகளை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.


தமிழக அரசின் இயல், இசை நாடக மன்றம், கலைத் துறையில் சிறப்பாக பணியாற்றும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும், "கலைமாமணி விருதுகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. கடந்த 2008,2009, 2010ம் ஆண்டுகளுக்கு விருதுகளை பெறும் கலைஞர்களது பெயர்களை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இதில் கலைத்துறையில் நடிகர்கள் ஆர்யா, ராஜீவ் மேனன், கருணாஸ், சின்னி ஜெயந்த் ஆகியோருக்கும், நடிகைகளில் அனுஷ்கா, தமன்னா, சரண்யா, ரோகினி, இசையமைப்பாளர் பரத்வாஜ், எம்டன் மகன், விலங்கியல் மூன்றாம் ஆண்டு போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் திருமுருகன் உள்ளிட்டவர்களுக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வருகிற பிப்ரவரி 13ம் தேதி நடைபெறுகிறது. விருதுகளை முதல்வர் கருணாநிதி வழங்க இருக்கிறார்.

No comments:

Post a Comment