Monday, January 3, 2011

4 வயது சிறுமி கழுத்து அறுத்து கொலை

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள கச்சைகட்டியைச் சேர்ந்தவர் தொத்தன். மனைவி அன்னக்கிளி. இவர்களது மகள் ராஜலட்சுமியை (4) நேற்று முன்தினம் மதியம் முதல் காணவில்லை. பெற்றோரும், உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், கச்சைகட்டி அருகே வீரணன் என்பவருக்குச் சொந்தமான மாட்டுக் கொட்டகையில் ராஜலட்சுமி, கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment