Sunday, February 13, 2011

தாய் பாதுகாப்பு

பிரசவத்தின் போது ஏற்படும் மரணம்:

அடிக்கடி குழந்தை பெறுதல், ஆண்குழந்தை வேண்டுமென இருத்தல், ரத்த சோகை, ரத்தபோக்கு அதிகமாகுதல், மருத்துவ காரணம், பிரசவத்திற்கு தேவையான வசதிகள், சிறிய வயதிலேயே திருமணம், மருத்துவ குழுவின் கவனக்குறைவு, மருத்துவ வசதி குறைவுகள், மருத்துவ உதவியில் தாமதம், தொற்றுநோய்கள் தாக்கம், பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் இல்லாமை போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன.


பிரசவத்தினால் ஏற்படும் பிரச்னைகள் பற்றி இன்னும் மக்களிடையே விழிப்புணர்வு இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதை பற்றி தெரிந்து கொள்ள அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. தாய்மை அடைந்த உடன் பெண்கள் இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று தேவையான ஆலோசனைகளை பெற்று கொள்ளலாம்.

No comments:

Post a Comment