Monday, February 28, 2011

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: ஜிம்பாப்வே அணி 175 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நாக்பூரில் நடந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வே-கனடா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தைபு 9 பவுண்டரிகளுடன் 98 ரன்களும், எர்வின் 81 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 85 ரன்களும் எடுத்தனர்.

பந்து வீச்சில் பாலாஜி ராவ் 4 விக்கெட்களை வீழ்த்தினார். 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கனடா அணி 42.1 ஓவர்களில் 123 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து 175 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது.

கனடா அணியில் அதிகபட்சமாக சுர்காரி 26 ரன்களும், குனசேகரா 24 ரன்களும் எடுத்தனர். ஜிம்பாப்வே அணி தரப்பில் பிரைசர், கிரீமர் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

No comments:

Post a Comment