Wednesday, March 30, 2011

பாகிஸ்தானில் குண்டு வெடித்தது; 6 பேர் பலி

பாகிஸ்தானில் வடமேற்கு பகுதி தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ளது. அங்கு அடிக்கடி குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த நிலையில், அப்பகுதியில் சுவாபி என்ற இடத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடி அருகே இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் 6 பேர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். பலர் காயம் அடைந்தனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.

No comments:

Post a Comment