Friday, April 8, 2011

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கிய நீரா ராடியா மயங்கி விழுந்தார்; ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொழில் தரகர் நீரா ராடியாவுக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஸ்பெக்ட்ரம் தொடர்பாக அவர் பல்வேறு தொழில் அதிபர்களிடமும் மற்றவர்களிடமும் டெலிபோனில் பேசிய டேப் ஆதாரங்கள் சிக்கி இருந்தன. அதுபற்றி நீரா ராடியாவிடம் சி.பி.ஐ. பல்வேறு கட்டமாக விசாரணை நடத்தியது.

சமீபத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு அவரிடம் விசாரித்தது. இந்த நிலையில் நேற்று நீரா ராடியா திடீரென மயங்கி விழுந்தார். பேச்சு, மூச்சு இல்லாமல் மயங்கி கிடந்த அவரை தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்த்தனர். நீண்ட நேர சிகிச்சைக்கு பிறகு அவர் மயக்கம் தெளிந்தார்.

இதுபற்றி டாக்டர்களிடம் கேட்டபோது, ராடியா உடலில் ஏற்பட்ட ஏதோ பாதிப்பின் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளது.இதை கண்டறிய பல்வேறு சோதனைகளை நடத்தி வருகிறோம். சோதனை முடிவில்தான் மயக்கத்துக்கான காரணம் தெரிய வரும். பின்னர் அதற்குரிய சிகிச்சை அளிக்கப்படும் என்றனர்.

No comments:

Post a Comment