Tuesday, April 12, 2011

தேர்தல் பிரசாரத்தில் கேரள மந்திரி மீது கல்வீச்சு; மண்டை உடைந்தது

கேரள சட்டசபை தேர்தல் இறுதிக்கட்ட பிரசாரம் நேற்று நடந்தது.கேரள மந்திரி சுரேந்திரன் பிள்ளை தான் போட்டியிடும் திருவனந்தபுரம் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். பூதுரா என்ற இடத்தில் அவர் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது காங்கிரஸ் தொண்டர்களுக்கும் கம்யூனிஸ்டு தொண்டர்களுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.

ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர். கல்வீச்சும் நடந்தது. இதில் ஒரு கல் மந்திரி சுரேந்திரன் பிள்ளை தலையில் பட்டது. இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

முன்னதாக இதே பகுதியில் மத்திய மந்திரி ஏ.கே. அந்தோணி பிரசாரம் செய்தார். அப்போது அவரை பிரசாரம் செய்ய விடாமல் கம்யூனிஸ்டு தொண்டர்கள் தடுக்க முயன்றனர். இதனாலும் மோதல் ஏற்பட்டது. அதேபோல காயம்குணம், கருணாகப்பிளி, பிரிதலமனா, கைபிமங்கலம் ஆகிய இடங்களிலும் இரு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.

No comments:

Post a Comment