Tuesday, April 12, 2011

கண்டிப்பா ஓட்டுப்போடுங்க... காதுல பூ சுத்தற விஷயமா அரசியல் தெரிஞ்சாலும் இது உங்க ஜனநாயக கடமை

இன்று காலை 8 மணி முதல் ஓட்டுப் பதிவு துவங்குகிறது. மாலை 5 மணிக்கு முடிந்துவிடும். மறக்காமல் உங்கள் ஓட்டை, மனசாட்சிப் பொதுவாக யார் நல்லவர் எனக் கருதுகிறீர்களோ, எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தால் நல்லது என நினைக்கிறீர்களோ... அவர்களுக்குப் போடுங்கள்...

மாலை 5 மணி வரை காத்திருக்கத் தேவையில்லை. கள்ள ஓட்டு போடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. அதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை, தேர்தல் கமிஷன் பெருமளவு மேற்கொண்டுள்ளது. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலும், அடையாள அட்டையும், பூத் சிலிப்பும் வழங்கப்பட்டுள்ளன.

இருந்தாலும், தவறு நடப்பதற்கான எந்த சந்தர்ப்பத்தையும் அளிக்காமல், நாமே முந்திக்கொண்டு நமது ஓட்டைப் பதிவு செய்வது நல்லது.

No comments:

Post a Comment