Tuesday, April 12, 2011

மை வைக்காமல் ஓட்டு போட்ட வீரபாண்டி ஆறுமுகம் மகள்

வீரபாண்டி ஆறுமுகத்தின் மகள் நிர்மலா, வீரபாண்டி தொகுதிக்கு உட்பட்ட பூலாவரி கிராம வாக்குச் சாவடியில் ஓட்டளித்தார். அப்போது அவர், தன் கையில் மை வைத்துக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

அதிகாரிகள் வற்புறுத்தவே, கையில் அலர்ஜி ஏற்படும் என்பதால் தான் மை வைத்துக்கொள்ள முடியாது என்று வாதிட்டார்.

இதனால் வேறு வழியின்றி அதிகாரிகள் அவர் விரலில் மை வைக்காமலேயே ஓட்டளிக்க அனுமதித்தனர். இதற்கு அதிமுகவினர் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

No comments:

Post a Comment