Thursday, May 26, 2011

பத்தாம் வகுப்பு தேர்வு: 85.3 சதவீதம் தேர்ச்சி

கடந்த மார்ச், ஏப்ரலில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்தன. மார்ச் 28 முதல், ஏப்ரல் 11 வரை நடந்த எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை, எட்டு லட்சத்து, 57 ஆயிரத்து, 956 மாணவர்கள் எழுதினர்.

மெட்ரிக் தேர்வை, ஒரு லட்சத்து, 45 ஆயிரத்து, 252 பேர் எழுதினர். ஓ.எஸ்.எல்.சி., தேர்வை, 1,561 பேரும் எழுதினர். இன்று காலை 10 மணியளவில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின.


500க்கு 496 மதிப்பெண் பெற்று 5 பேர் மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளனர். 12 பேர் இரண்டாவது இடத்தையும், 24 பேர் 3ம் இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 85.3 சதவீதமாகும்.

No comments:

Post a Comment