Monday, May 16, 2011

சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவிய 3 தொலைக்காட்சி அதிபர்கள்

நெல்லை: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொலைக்காட்சி அதிபர்கள் 3 பேரும் தோல்வி அடைந்துள்ளனர்.

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாங்குநேரி தொகுதியில் வசந்த் தொலைக்காட்சி அதிபர் வசந்த குமாரும், வி்ன் தொலைக்காட்சி அதிபர் தேவநாதனும், எர்ணாவூர் நாராயனனும் போட்டியிட்டனர். இதில் எர்ணாவூர் நாராயணன் வெற்றி பெற்றார். இரு தொலைக்காட்சி அதிபர்களும் தோல்வியடைந்தனர். வசந்த குமார் தோல்விக்கு வின் தொலைக்காட்சி அதிபர் போட்டியிட்டதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

இதே போன்று தேர்தல் களத்தில் இருந்த மெகா டிவி அதிபர் தங்கபாலுவும் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment