Sunday, May 29, 2011

அண்ணா பல்கலைக்கழகம் தமிழக அரசு ஓரிரு நாளில் அதிரடி முடிவு?

அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் ஒரே இடத்தில் (சென்னை) இருந்தது. கடந்த திமுக ஆட்சியில் கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் அண்ணா பல்கலைக்கழக கிளை துவங்கப்பட்டது.

இந்த திட்டத்தை பற்றி தற்போதைய அதிமுக அரசின் ஆலோசனைக் கூட்டத்தில், மற்ற இடங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழக கிளைகளை கலைத்துவிட்டு, மீண்டும் சென்னையில் மட்டும் இயக்குவதற்கான அரசாணையை பிறபிக்க போவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான உத்தரவு ஓரிரு நாளில் வெளியாகலாம் எனவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment