Sunday, May 15, 2011

தமிழகத்தில் ஆட்சி மாற்றம்: அரசு ஊழியர்கள் இனி ஒழுங்காக வேலை பார்ப்பார்கள்

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 203 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. 146 இடங்களை பெற்று தனித்து ஆட்சி அமைக்கிறது. இது தொடர்பாக மாலை மலர் இணைய தளத்தில் வாசகர்கள் கருத்து:-

வெளிநாட்டு தமிழர்களும் ஜெயலலிதா வெற்றியை கொண்டாடுகிறார்கள்.
-சுதன்

மக்கள் இப்போது ரொம்ப தெளிவாக இருக்கிறார்கள். இந்த வெற்றியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.
-மைதீன்

இனி அனைத்து அரசு அலுவலகத்திலும் ஊழியர்கள் ஒழுக்கமாக வேலை பார்ப்பார்கள்.
-பிரபாகரன்

ரேஷன் கார்டில் இருப்பிடத்தை மாற்ற 1 வாரத்துக்கும் மேல் அலைந்தேன். இனியாரும் அப்படி அலைய வேண்டியது இருக்காது.
-ராஜா

முந்தைய ஆட்சி கால தவறுகளை களைந்து மீண்டும் தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஜெயலலிதாவிடம் மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். ஈழ பிரச்சினையில் ஜெயலலிதாவின் நிலைப்பாடு உள்ளார்ந்த கொள்கையாக இருக்க வேண்டும்.
-ஆதி

No comments:

Post a Comment