background img

புதிய வரவு

Showing posts with label 140Crores. Show all posts
Showing posts with label 140Crores. Show all posts
கோல்கட்டா : "மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு பகுதி, வளர்ச்சி திட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ளது. எனவே, அந்த பகுதியின் வளர்ச்சிக்கு, மாநில அரசு முன்னுரிமை அளிக்கும். அந்த பகுதிக்கு, கூடுதலாக 140 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்' என, முதல்வர் மம்தா அறிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில், மம்தா பானர்ஜி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. புதிய அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்துக்கு பின், மம்தா கூறியதாவது: மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஆறு மாவட்டங்கள், மாநிலத்தின் மற்ற பகுதிகளை விட, வளர்ச்சி பணிகளில் மிகவும் பின்தங்கியுள்ளன. இந்த ஆறு மாவட்டகளிலும், முழு அளவில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது தான், அரசின் நோக்கம். இந்த ஆறு மாவட்டங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
வடக்கு பகுதிக்கு, தற்போது ஆண்டுக்கு 60 கோடி ரூபாய், வளர்ச்சி பணிகளுக்காக நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த பகுதியில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதற்கு, இந்த நிதி போதுமானது அல்ல. எனவே, இனிமேல், ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். தற்போதுள்ள நிலையில், மேற்கு வங்க மாநில அரசு, இரண்டு லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. ஆனாலும், வளர்ச்சி பணிகளை செயல்படுத்தும் விஷயத்தில், சிக்கனம் காட்ட முடியாது. இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
இது குறித்து மேற்கு வங்க மாநில அரசு வட்டாரங்கள் கூறுகையில், "மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள மாவட்டங்களில், வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதில், மம்தா பானர்ஜி தீவிரமாக உள்ளார். எனவே, இந்த மாவட்டங்களில் நடக்கவுள்ள வளர்ச்சி திட்டங்களை, நேரடியாக கண்காணிக்கவும் அவர் முடிவு செய்துள்ளார்' என்றன.
இது குறித்து காங்கிரசை சேர்ந்த ஜல்பய்குரி தொகுதி எம்.எல்.ஏ., தேவபிரசாத் ராய் கூறுகையில், "கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டதன் மூலம், வடக்கு மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது' என்றார்.

வடக்கு மாவட்டங்களின் வளர்ச்சிக்கு கூடுதலாக ரூ.140 கோடி ஒதுக்கீடு : மம்தா அறிவிப்பு

கோல்கட்டா : "மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு பகுதி, வளர்ச்சி திட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ளது. எனவே, அந்த பகுதியின் வளர்ச்சிக்கு, மாநில அரசு முன்னுரிமை அளிக்கும். அந்த பகுதிக்கு, கூடுதலாக 140 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்' என, முதல்வர் மம்தா அறிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில், மம்தா பானர்ஜி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. புதிய அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்துக்கு பின், மம்தா கூறியதாவது: மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஆறு மாவட்டங்கள், மாநிலத்தின் மற்ற பகுதிகளை விட, வளர்ச்சி பணிகளில் மிகவும் பின்தங்கியுள்ளன. இந்த ஆறு மாவட்டகளிலும், முழு அளவில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது தான், அரசின் நோக்கம். இந்த ஆறு மாவட்டங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
வடக்கு பகுதிக்கு, தற்போது ஆண்டுக்கு 60 கோடி ரூபாய், வளர்ச்சி பணிகளுக்காக நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த பகுதியில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதற்கு, இந்த நிதி போதுமானது அல்ல. எனவே, இனிமேல், ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். தற்போதுள்ள நிலையில், மேற்கு வங்க மாநில அரசு, இரண்டு லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. ஆனாலும், வளர்ச்சி பணிகளை செயல்படுத்தும் விஷயத்தில், சிக்கனம் காட்ட முடியாது. இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
இது குறித்து மேற்கு வங்க மாநில அரசு வட்டாரங்கள் கூறுகையில், "மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள மாவட்டங்களில், வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதில், மம்தா பானர்ஜி தீவிரமாக உள்ளார். எனவே, இந்த மாவட்டங்களில் நடக்கவுள்ள வளர்ச்சி திட்டங்களை, நேரடியாக கண்காணிக்கவும் அவர் முடிவு செய்துள்ளார்' என்றன.
இது குறித்து காங்கிரசை சேர்ந்த ஜல்பய்குரி தொகுதி எம்.எல்.ஏ., தேவபிரசாத் ராய் கூறுகையில், "கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டதன் மூலம், வடக்கு மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது' என்றார்.

முக நூல்

Popular Posts