background img

புதிய வரவு

Showing posts with label Sarathkumar place Ok. Show all posts
Showing posts with label Sarathkumar place Ok. Show all posts
சென்னை: விஜயகாந்த் தொகுதியில் பிரச்சாரம் செய்ய முதலில் ஒப்புக் கொண்ட ஜெயலலிதா, இன்று அந்தத் திட்டத்தை மாற்றிக் கொண்டார். சரத்குமார் போட்டியிடும் தொகுதியில் மட்டும் அவர் பிரச்சாரம் செய்கிறார்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத் திட்டம் இப்போது திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

அதன்டி 30ஆம் தேதி உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, செய்யார் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்கிறார்.

30ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் செல்லும் ஜெயலலிதா, அம்மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக முதலில் கூறப்பட்டது. இப்போது அந்தத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விஜயகாநத் தொகுதிக்குள் செல்லாமல் அருகில் உள்ள தொகுதியில் மட்டும் பிரச்சாரம் செய்கிறார். இதேபோல் தமிழகம் முழுவதும் தேமுதிக போட்டியிடும் தொகுதிகளுக்கு அருகாமையில் பிரச்சாரம் செய்யும் ஜெயலலிதா, தேமுதிக வேட்பாளர்கள் போட்டியிடும் பெரும்பாலான தொகுதிகளில் பிரச்சாரம் செய்யாமல் ஒதுக்கிவிட்டுச் செல்கிறார்.

ஆனால் விஜயகாந்த், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். பெரும்பாலான அதிமுக தொகுதிகளில் அவர் நீண்ட நேரம் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அதே நேரம் ஏப்ரல் 3ஆம் தேதி தென்காசி, சிவகாசி, தூத்துக்குடி, மதுரை ஆகிய இடங்களில் ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார். அதில், தென்காசி தொகுதியில் போட்டியிடும் நடிகர் சரத்குமாருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

தென்காசி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கருப்புசாமி பாண்டியனை தோற்கடிக்க வேண்டும் என்பதாலும், கொடுத்த தொகுதிகளை மறுக்காமல் சரத்குமார் பெற்றுக்கொண்டதாலும், அவருக்கு இந்த அபார ஆதரவை ஜெயலலிதா காட்டுவதாகக் கூறப்படுகிறது.

பெரும் இழுபறிக்கு பின்னர் அதிமுக - தேமுதிக தொகுதி உடன்பாடு முடிந்ததாலும், அதிமுக போட்டியிட விரும்பிய தொகுதிகளை தேமுதிக வலியுறுத்தி பெற்றதாலும் இப்போது ஜெயலலிதா அந்தத் தொகுதிகளை புறக்கணித்து வருவதாகக் கூறப்படுகிறது. இது தேமுதிக தொண்டர்கள் மத்தியில் பெரும் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

சரத்குமார் தொகுதிக்கு ஓகே... விஜயகாந்துக்கு நோ சொன்ன ஜெ!

சென்னை: விஜயகாந்த் தொகுதியில் பிரச்சாரம் செய்ய முதலில் ஒப்புக் கொண்ட ஜெயலலிதா, இன்று அந்தத் திட்டத்தை மாற்றிக் கொண்டார். சரத்குமார் போட்டியிடும் தொகுதியில் மட்டும் அவர் பிரச்சாரம் செய்கிறார்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத் திட்டம் இப்போது திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

அதன்டி 30ஆம் தேதி உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, செய்யார் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்கிறார்.

30ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் செல்லும் ஜெயலலிதா, அம்மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக முதலில் கூறப்பட்டது. இப்போது அந்தத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விஜயகாநத் தொகுதிக்குள் செல்லாமல் அருகில் உள்ள தொகுதியில் மட்டும் பிரச்சாரம் செய்கிறார். இதேபோல் தமிழகம் முழுவதும் தேமுதிக போட்டியிடும் தொகுதிகளுக்கு அருகாமையில் பிரச்சாரம் செய்யும் ஜெயலலிதா, தேமுதிக வேட்பாளர்கள் போட்டியிடும் பெரும்பாலான தொகுதிகளில் பிரச்சாரம் செய்யாமல் ஒதுக்கிவிட்டுச் செல்கிறார்.

ஆனால் விஜயகாந்த், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். பெரும்பாலான அதிமுக தொகுதிகளில் அவர் நீண்ட நேரம் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அதே நேரம் ஏப்ரல் 3ஆம் தேதி தென்காசி, சிவகாசி, தூத்துக்குடி, மதுரை ஆகிய இடங்களில் ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார். அதில், தென்காசி தொகுதியில் போட்டியிடும் நடிகர் சரத்குமாருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

தென்காசி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கருப்புசாமி பாண்டியனை தோற்கடிக்க வேண்டும் என்பதாலும், கொடுத்த தொகுதிகளை மறுக்காமல் சரத்குமார் பெற்றுக்கொண்டதாலும், அவருக்கு இந்த அபார ஆதரவை ஜெயலலிதா காட்டுவதாகக் கூறப்படுகிறது.

பெரும் இழுபறிக்கு பின்னர் அதிமுக - தேமுதிக தொகுதி உடன்பாடு முடிந்ததாலும், அதிமுக போட்டியிட விரும்பிய தொகுதிகளை தேமுதிக வலியுறுத்தி பெற்றதாலும் இப்போது ஜெயலலிதா அந்தத் தொகுதிகளை புறக்கணித்து வருவதாகக் கூறப்படுகிறது. இது தேமுதிக தொண்டர்கள் மத்தியில் பெரும் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

முக நூல்

Popular Posts