background img

புதிய வரவு

Showing posts with label TEMPLES. Show all posts
Showing posts with label TEMPLES. Show all posts
ஸ்தல வரலாறு:

தஞ்சாவூரில் இருந்து திருக்கருக்காவூர் செல்லும் வழியில் 10-வது கிலோ மீட்டரில் தற்போது திட்டை என அழைக்கப்படும் தென்குடித்திட்டை கிராமத்தில் வசிஷ்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஆதிப்பிரளய காலத்தில் இவ்வுலகம் முழுவதும் நீரால் சூழப்பட்டது.

மும்மூர்த்திகளும் மாயை வசப்பட்டு நீர் சூழ்ந்தும், இருள் கவிழ்ந்தும் இருந்த பிரமாண்ட உலகத்தைக் கண்டு அஞ்சினர். பரம் பொருளை பலவாறு துதித்தனர். பார்வதி பரமேஸ்வரின் அருளால் ஊழிப்பெரு வெள்ளத்தின் நடுவில் நீண்ட பரப்பளவு உள்ள ஒரு மேட்டுப்பகுதியை கண்டு வியந்தனர். அம்மேட்டுப்பகுதியில் ஜோதிமயமான லிங்கத்தை கண்டு பூஜித்தனர்.

இந்த லிங்கத்தினின்று காட்சி தந்த இறைவன் மும்மூர்த்திகளிடம் ஏற்பட்ட மயக்கத்தை அகற்றி அபயமளித்து அவர்களுக்கு படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் அதற்கான வேத, வேதாந்த, சாஸ்திர அறிவையும் அருளினார். இந்த திருவிளையாடல் நடந்த திருத்தலமே திட்டை.

இங்கு இறைவன் தானாக தோன்றியதால் தான் தோன்றீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். வசிஷ்டர் இங்கு வந்து தவம் புரிந்து பிரம்ம ஞானிகளில் தலைசிறந்தவர் ஆனார். அதனால் இத்தல இறைவன் வசிஷ்டேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

பிரளய காலத்திலும், பேருழிக்காலத்திலும் அழியாத பெருமை உடையது திட்டைத் தலம். மூலவர் வசிஷ்டேஸ்வரர் விமானத்தில் சந்திரகாந்தக்கல் வைத்து கட்டப்பட்டுள்ளது. சந்திரனிடமிருந்து கிரணங்களைப் பெறுகிறது அந்தக்கல்.

அது நீராக மாறி 24 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு சொட்டு தீர்த்தமாக இறைவன் மீது விழுகிறது. இந்த அதிசயத்தை இப்போதும் இத்தலத்தில் காணலாம்.

சிறப்புகள்:

சிவாலயங்களிலும் தென்கோஷ்டத்தில் சிவபெருமானின் ஞான வடிவான தட்சிணாமூர்த்தியே குருவாகப் பாதித்து வழிபடப்படுகிறார். ஆனால் தஞ்சை மாவட்டம் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குரு பகவானே சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் தனி சன்னதியில் குரு விமானத்துடன் ராஜ குருவாக நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத்தகைய அமைப்பு உலகில் வேறு எந்த ஒரு சிவாலயத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பரிகாரங்கள்:

ஒருவரது ஜாதகத்தில் மிகக்கடுமையான பாவக்கிரகங்களால் ஏற்படக்கூடிய விளைவுகளை கூட தனது பார்வை பலத்தினால் கட்டுப்படுத்தும் சக்தி குரு பகவானுக்கு உண்டு. எனவே தான் குரு பார்க்க கோடி நன்மை என்பர். இந்த குரு பகவான் வருடத்திற்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவது வழக்கம்.

இதனால் அவரவர் ராசிக்கு ஏற்ப பலன்கள் ஏற்படும். எனவே குரு பெயர்ச்சி நடைபெறும் நாளில் இருந்து 15 நாட்களுக்குள் குரு பகவானை தரிசித்து லட்சார்ச்சனை அல்லது பரிகார ஹோமங்களில் பங்கு கொண்டால் நற்பலன்கள் பல பெறலாம் என்பது ஐதீகம்.

இங்கு தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள குரு பகவானுக்கு ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

8-ந்தேதி குருபெயர்ச்சி விழா:

இந்த ஆண்டு குரு பகவான் வருகிற 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். அதனைத்தொடர்ந்து வருகிற 16-ந் தேதி ராகு பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கும், கேது பகவான் மிதுன ராசியில் இருந்து ரிஷப ராசிக்கும் இடப்பெயர்ச்சி ஆகின்றனர்.

ஆதலால் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்து கொள்வது நல்லது. குரு, ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு வசிஷ்டேஸ்வரர் கோவிலில் 12 ராசிக்காரர்களுக்கும் நன்மை பெற வேண்டி லட்சார்ச்சனை மற்றும் பரிகார ஹோமங்கள் நடைபெறுகின்றன.

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் வருகிற மே 19-ந் தேதி (வியாழக்கிழமை) ஏகதின லட்சார்ச்சனை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ரூ.300 மட்டும் கட்டணமாக செலுத்த வேண்டும். வருகிற 20-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 3 தினங்கள் தொடர்ந்து பரிகார ஹோமங்களும் நடைபெற உள்ளது.

ஹோமங்களில் நேரில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்து பரிகாரம் செய்யப்படும். இதற்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படும். லட்சார்ச்சனை மற்றும் குருபரிகார ஹோமங்கள் நடைபெறும் நாட்களில் நேரில் வருபவர்கள் உரிய கட்டணத்தை செலுத்தி அதில் பங்கு கொள்ளலாம்.

நேரில் வர முடியாதவர்கள் லட்சார்ச்சனைக்கு ரூ.300 மற்றும் குரு பரிகார ஹோமத்திற்கு ரூ.500 மணியார்டர் அல்லது டிமாண்ட் டிராப்ட் எடுத்து, அத்துடன் தங்களது பெயர், ராசி, நட்சத்திரம், லக்னம் ஆகியவற்றுடன் சரியான முகவரியை எழுதி

நிர்வாக அதிகாரி,
வசிஷ்டேஸ்வரர் கோவில்,
திட்டை,
தஞ்சை மாவட்டம்

என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் பிரசாதத்துடன் குருபகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலர் மற்றும் குருபகவான் படம் அனுப்பி வைக்கப்படும். முன்கூட்டியே பணம் அனுப்புபவர்கள் பெயர்கள் வரிசை முறையில் முன் பதிவு செய்யப்பட்டு உரிய முறையில் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு 04362-252858 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு செயல் அலுவலர் கோவிந்தராஜீ கூறியுள்ளார்.

போக்குவரத்து வசதி:

இந்த கோவிலுக்கு செல்ல சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ் வசதி உள்ளது.

குருபகவான் அருள்பாலிக்கும் வசிஷ்டேஸ்வரர் கோவில்

ஸ்தல வரலாறு:

தஞ்சாவூரில் இருந்து திருக்கருக்காவூர் செல்லும் வழியில் 10-வது கிலோ மீட்டரில் தற்போது திட்டை என அழைக்கப்படும் தென்குடித்திட்டை கிராமத்தில் வசிஷ்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஆதிப்பிரளய காலத்தில் இவ்வுலகம் முழுவதும் நீரால் சூழப்பட்டது.

மும்மூர்த்திகளும் மாயை வசப்பட்டு நீர் சூழ்ந்தும், இருள் கவிழ்ந்தும் இருந்த பிரமாண்ட உலகத்தைக் கண்டு அஞ்சினர். பரம் பொருளை பலவாறு துதித்தனர். பார்வதி பரமேஸ்வரின் அருளால் ஊழிப்பெரு வெள்ளத்தின் நடுவில் நீண்ட பரப்பளவு உள்ள ஒரு மேட்டுப்பகுதியை கண்டு வியந்தனர். அம்மேட்டுப்பகுதியில் ஜோதிமயமான லிங்கத்தை கண்டு பூஜித்தனர்.

இந்த லிங்கத்தினின்று காட்சி தந்த இறைவன் மும்மூர்த்திகளிடம் ஏற்பட்ட மயக்கத்தை அகற்றி அபயமளித்து அவர்களுக்கு படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் அதற்கான வேத, வேதாந்த, சாஸ்திர அறிவையும் அருளினார். இந்த திருவிளையாடல் நடந்த திருத்தலமே திட்டை.

இங்கு இறைவன் தானாக தோன்றியதால் தான் தோன்றீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். வசிஷ்டர் இங்கு வந்து தவம் புரிந்து பிரம்ம ஞானிகளில் தலைசிறந்தவர் ஆனார். அதனால் இத்தல இறைவன் வசிஷ்டேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

பிரளய காலத்திலும், பேருழிக்காலத்திலும் அழியாத பெருமை உடையது திட்டைத் தலம். மூலவர் வசிஷ்டேஸ்வரர் விமானத்தில் சந்திரகாந்தக்கல் வைத்து கட்டப்பட்டுள்ளது. சந்திரனிடமிருந்து கிரணங்களைப் பெறுகிறது அந்தக்கல்.

அது நீராக மாறி 24 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு சொட்டு தீர்த்தமாக இறைவன் மீது விழுகிறது. இந்த அதிசயத்தை இப்போதும் இத்தலத்தில் காணலாம்.

சிறப்புகள்:

சிவாலயங்களிலும் தென்கோஷ்டத்தில் சிவபெருமானின் ஞான வடிவான தட்சிணாமூர்த்தியே குருவாகப் பாதித்து வழிபடப்படுகிறார். ஆனால் தஞ்சை மாவட்டம் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குரு பகவானே சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் தனி சன்னதியில் குரு விமானத்துடன் ராஜ குருவாக நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத்தகைய அமைப்பு உலகில் வேறு எந்த ஒரு சிவாலயத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பரிகாரங்கள்:

ஒருவரது ஜாதகத்தில் மிகக்கடுமையான பாவக்கிரகங்களால் ஏற்படக்கூடிய விளைவுகளை கூட தனது பார்வை பலத்தினால் கட்டுப்படுத்தும் சக்தி குரு பகவானுக்கு உண்டு. எனவே தான் குரு பார்க்க கோடி நன்மை என்பர். இந்த குரு பகவான் வருடத்திற்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவது வழக்கம்.

இதனால் அவரவர் ராசிக்கு ஏற்ப பலன்கள் ஏற்படும். எனவே குரு பெயர்ச்சி நடைபெறும் நாளில் இருந்து 15 நாட்களுக்குள் குரு பகவானை தரிசித்து லட்சார்ச்சனை அல்லது பரிகார ஹோமங்களில் பங்கு கொண்டால் நற்பலன்கள் பல பெறலாம் என்பது ஐதீகம்.

இங்கு தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள குரு பகவானுக்கு ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

8-ந்தேதி குருபெயர்ச்சி விழா:

இந்த ஆண்டு குரு பகவான் வருகிற 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். அதனைத்தொடர்ந்து வருகிற 16-ந் தேதி ராகு பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கும், கேது பகவான் மிதுன ராசியில் இருந்து ரிஷப ராசிக்கும் இடப்பெயர்ச்சி ஆகின்றனர்.

ஆதலால் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்து கொள்வது நல்லது. குரு, ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு வசிஷ்டேஸ்வரர் கோவிலில் 12 ராசிக்காரர்களுக்கும் நன்மை பெற வேண்டி லட்சார்ச்சனை மற்றும் பரிகார ஹோமங்கள் நடைபெறுகின்றன.

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் வருகிற மே 19-ந் தேதி (வியாழக்கிழமை) ஏகதின லட்சார்ச்சனை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ரூ.300 மட்டும் கட்டணமாக செலுத்த வேண்டும். வருகிற 20-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 3 தினங்கள் தொடர்ந்து பரிகார ஹோமங்களும் நடைபெற உள்ளது.

ஹோமங்களில் நேரில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்து பரிகாரம் செய்யப்படும். இதற்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படும். லட்சார்ச்சனை மற்றும் குருபரிகார ஹோமங்கள் நடைபெறும் நாட்களில் நேரில் வருபவர்கள் உரிய கட்டணத்தை செலுத்தி அதில் பங்கு கொள்ளலாம்.

நேரில் வர முடியாதவர்கள் லட்சார்ச்சனைக்கு ரூ.300 மற்றும் குரு பரிகார ஹோமத்திற்கு ரூ.500 மணியார்டர் அல்லது டிமாண்ட் டிராப்ட் எடுத்து, அத்துடன் தங்களது பெயர், ராசி, நட்சத்திரம், லக்னம் ஆகியவற்றுடன் சரியான முகவரியை எழுதி

நிர்வாக அதிகாரி,
வசிஷ்டேஸ்வரர் கோவில்,
திட்டை,
தஞ்சை மாவட்டம்

என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் பிரசாதத்துடன் குருபகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலர் மற்றும் குருபகவான் படம் அனுப்பி வைக்கப்படும். முன்கூட்டியே பணம் அனுப்புபவர்கள் பெயர்கள் வரிசை முறையில் முன் பதிவு செய்யப்பட்டு உரிய முறையில் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு 04362-252858 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு செயல் அலுவலர் கோவிந்தராஜீ கூறியுள்ளார்.

போக்குவரத்து வசதி:

இந்த கோவிலுக்கு செல்ல சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ் வசதி உள்ளது.

ஸ்தல வரலாறு:

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருத்தலம் குணசீலம். இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கும் பெருமாள் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். இவர் சுயம்பு மூர்த்தி ஆவார்.

தாயாருக்கு என்று தனி சன்னதி இல்லை. பெருமாளின் மார்பில் தாயார் அலமேலுமங்கை அமர்ந்து அருள்பாலிப்பதே அதற்கு காரணம். குணசீல மகரிஷி தவம் செய்த இடம் இது என்பதால் இந்த ஊரும் குணசீலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மகரிஷியின் விருப்பப்படி மகாவிஷ்ணு, பிரசன்ன வெங்கடாஜலபதியாக இங்கே அருள்பாலித்து வருகிறார்.

சிறப்புகள்:

திருப்பதிக்கு, சூழ்நிலைகள் காரணமாக செல்ல முடியாதவர்கள், அந்த பிரார்த்தனையை இந்த திருத்தலத்தில் செலுத்தலாம் என்கிறார்கள். இந்த கோவிலில் மனநிலை பாதிப்பு உள்ளவர்கள் 48 நாட்கள் தங்கி, காலை, மாலை இரு வேளைகளிலும் காவிரியில் நீராடி பெருமாளை பிரதட்சணம் செய்ய வேண்டும்.

பூஜை நேரத்தின்போது மனநிலை பாதிப்பு உள்ளவர்களை வரிசையாக நிற்க வைத்து, அவர்களுக்கு சுவாமியின் பிரசாதத்தை கொடுக்கிறார்கள். இந்த வழிபாட்டின் மூலம் அவர்களது மனநிலை பாதிப்பு குணமாகும் என்று நம்பப்படுகிறது.

போக்குவரத்து வசதி :

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் 16 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து நேரடி பஸ் வசதி உள்ளது.

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் மூலம் திருச்சி சென்று பின் அங்கிருந்து உள்ளூர் பேருந்து மூலம் இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.

பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில்-குணசீலம்

ஸ்தல வரலாறு:

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருத்தலம் குணசீலம். இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கும் பெருமாள் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். இவர் சுயம்பு மூர்த்தி ஆவார்.

தாயாருக்கு என்று தனி சன்னதி இல்லை. பெருமாளின் மார்பில் தாயார் அலமேலுமங்கை அமர்ந்து அருள்பாலிப்பதே அதற்கு காரணம். குணசீல மகரிஷி தவம் செய்த இடம் இது என்பதால் இந்த ஊரும் குணசீலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மகரிஷியின் விருப்பப்படி மகாவிஷ்ணு, பிரசன்ன வெங்கடாஜலபதியாக இங்கே அருள்பாலித்து வருகிறார்.

சிறப்புகள்:

திருப்பதிக்கு, சூழ்நிலைகள் காரணமாக செல்ல முடியாதவர்கள், அந்த பிரார்த்தனையை இந்த திருத்தலத்தில் செலுத்தலாம் என்கிறார்கள். இந்த கோவிலில் மனநிலை பாதிப்பு உள்ளவர்கள் 48 நாட்கள் தங்கி, காலை, மாலை இரு வேளைகளிலும் காவிரியில் நீராடி பெருமாளை பிரதட்சணம் செய்ய வேண்டும்.

பூஜை நேரத்தின்போது மனநிலை பாதிப்பு உள்ளவர்களை வரிசையாக நிற்க வைத்து, அவர்களுக்கு சுவாமியின் பிரசாதத்தை கொடுக்கிறார்கள். இந்த வழிபாட்டின் மூலம் அவர்களது மனநிலை பாதிப்பு குணமாகும் என்று நம்பப்படுகிறது.

போக்குவரத்து வசதி :

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் 16 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து நேரடி பஸ் வசதி உள்ளது.

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் மூலம் திருச்சி சென்று பின் அங்கிருந்து உள்ளூர் பேருந்து மூலம் இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.

அட்சய திருதியை அன்று குபேரர் கோவிலை வழிபட்டால் சலக செல்வங்களும் பெருகும். இக்கோவில் சென்னை அருகே வண்டலுர் அடுத்த ரத்னமங்கலத்தில் உள்ளது. இந்தியாவிலேயே லட்சுமி குபேரருக்கு என்று தனியாக உள்ள ஒரே கோவில் என்ற பெருமையை இக்கோவில் பெற்றுள்ளது.

இக்கோவிலைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் லட்சுமி கணபதி, குபேர லிங்கம், செல்வ முத்துக்குமரன், யோக ஆஞ்சநேயர், நவகிரகங்கள் உள்ளன. கோசாலையும் உள்ளது. செல்வத்துக்கு அதிபதி லட்சுமி. அதைக் கண்காணித்துக் காப்பவர் குபேரன். இவ்விருவரையும் இணைத்து லட்சுமி குபேர பூஜை செய்து வர நிலையான செல்வம் உண்டாகும்.

இழந்த செல்வத்தையும் பெற்று புகழோடு வாழலாம். ரத்னமங்கலம் குபேரரையும் லட்சுமியையும் ஒருசேர ஒருமுறை தரிசித்து வந்தால், அவர்கள் வாழ்வில் செல்வம் செழித்தோங்கும் என்பதில் ஐயமில்லை. திருப்பதி செல்லும் முன் ரத்னமங்கலம் குபேரனை வழிபட்டுச் செல்வது மிகவும் விசேஷமானதாகும்.

வளமான வாழ்வுக்காக இங்கு லட்சுமி குபேர பூஜை செய்வது விசேஷம். இந்த பூஜையை பவுர்ணமி மற்றும் அமாவாசையில் செய்வது மிகுந்த பலன் தரும். குபேரன் காட்சி தரும் கோலமே பெரும் பரவசத்தை ஏற்படுத்தும். சிரித்த முகம், இடது கையில் சங்கநிதி, வலது கையில் பதுமநிதி அடங்கிய கலசத்தை அணைத்துக் கொண்டு அன்னை லட்சுமி, துணைவி சித்தரிணீயுடன் குபேரன் தரும் காட்சியை காண கண் கோடி வேண்டும்.

கோவில் வரலாறு:

பிரம்மாவின் புத்திரரான புலஸ்தியருக்கும் திருவண விந்துவின் புத்திரிக்கும் விஸ்வாரா என்பவர் பிறந்தார். இந்த விஸ்வாராவின் மகனே குபேரன். இவரது மாற்றாந்தாய்க்கு பிறந்தவனே ராவணன். முதலில் இலங்கை அதிபதியாக இருந்தவர் குபேரனே. அவரிடம் இருந்து ராவணன் ஆட்சியைக் கைப்பற்றி விட்டான்.

குபேரனின் விமானம் எங்கு பறந்து சென்றாலும் அந்த விமானம் தங்கம், முத்து ஆகியவற்றை சிந்திக் கொண்டே செல்லும். குபேரனை ராவணன் இலங்கையில் இருந்து வெளியேற்றியதைத் தொடர்ந்தே அவன் பல சோதனைகளைச் சந்திக்க நேர்ந்தது என்றும், கூறுவதுண்டு. குபேரன் சிவனிடம் அதிக பக்தி கொண்டவர். குபேரன் கடுந்தவம் புரிந்து சிவனை வழிபட்டார்.

அவரது பக்திக்கு மெச்சிய சிவனும், பார்வதி சமேதராகக் காட்சி தந்தார். சிவனுடன் அழகே வடிவான பார்வதியைக் கண்ட குபேரன், ஆஹா இப்படியொரு தேவியை இதுநாள் வரை துதிக்கவில்லை என்று எண்ணினான். இந்த நினைப்பில் குபேரனின் ஒரு கண் துடித்து அடங்கியது. இதைப் பார்த்து பார்வதி மிகவும் ஆத்திரமடைந்து, குபேரனின் துடித்த கண்ணை வெடிக்கச் செய்தாள்.

குபேரனுக்கு ஒரு கண் போய் விட்டது. பின், அவர் மன்னிப்பு கேட்க, பார்வதியும் பெருந்தன்மையுடன் குபேரனை மன்னித்தாள். ஆனால், போன கண் போனது தான் என்றாலும் அதற்குப் பதிலாக சிறிய கண் ஒன்றை குபேரனுக்கு தோன்றும்படி செய்தார் சிவபெருமான். அத்துடன் குபேரனின் தவத்தையும், பூஜையையும் மெச்சி எட்டு திக்கு காவலர்களில் ஒருவராக குபேரனை சிவன் நியமித்தார்.

அதன்பின், லட்சுமிதேவி குபேரனை தன தானிய அதிபதியாக்கினாள். அதாவது பணத்துக்கும், தானியத்துக்கும் அவர் சொந்தக்காரர் அல்ல, அவற்றை கண்காணிப்பது மட்டுமே அவர் பொறுப்பு. கொடுப்பது அன்னை லட்சுமி.

அட்சய திருதி விழா:

ரத்ன மங்கலம் ஸ்ரீலட்சுமி குபேரர் கோவிலில் அட்சய திருதியையொட்டி நாளை (6-ந்தேதி) சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அன்று சுக்ர ஓரை காலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனத்துடன், கோ பூஜை செய்து சுக்ரனின் அதிதேவதையான குபேர லட்சுமி ஆராதனையும் அதை தொடர்ந்து மகாலட்சுமிக்கு உகந்த ஸ்லோகமும், ஸ்ரீசுத்தம் மற்றும் லட்சுமி அஷ்டகம் படித்து அன்று நாள் முழுவதும் ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்லோகம் படித்து பக்தர்கள் பூஜை செய்வார்கள்.

அவர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளியினால் ஆன நாணயங்களும், பச்சை நிற குங்குமத்துடன் கூடிய அட்சய திருதியை சிறப்பு பிரசாதமான ஹரி பலம் என்று அழைக்கப்படும் நெல்லிக்கனி அனை வருக்கும் பிரசாதமாக வழங்கப்படும். பக்தர்கள் தங்கள் கொண்டு வரும் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை குபேர லட்சுமியிடம் வைத்தும் அட்சய திருதியை சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு ஆசி பெறலாம்.

அட்சய புரீஸ்வரர் கோவில்:

அட்சய திருதியை அன்று அட்சயபுரீஸ்வரர் கோவிலில் வழிபட்டால் காரிய தடைகள் நீங்கி சகல யோகங்கள் பெறலாம். இக்கோவில் தஞ்சாவூர் அருகே பட்டுக்கோட்டையில் இருந்து தெற்கே 30 கி.மீ. தொலைவில் விளங்குளம் என்ற பகுதியில் அமைந்துள்ளது. பேராவூரணியிலிருந்து நகரப் பேருந்திலும் இந்தத் திருக்கோவிலுக்கு செல்லலாம்.

கல்வெட்டு ஆராய்ச்சிகளின்படி, இத்திருக்கோவில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக தெரிய வருகிறது. இந்த ஆலயத்தில் அருள் பாலிக்கும் ஈசன் திருநாமம்- ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர். புராணங்களின்படி சூரிய பகவானின் மகன் சனி பகவானுக்கும் இன்னொரு மகன் எமதர்மனுக்கும் பகை இருந்து வந்தது.

அந்தப் பகை காரணமாக ஒரு முறை சனி பகவானின் காலில் எமதர்சனம் ஓங்கி அடிக்க... சனி பகவானுக்கு ஊனம் ஏற்பட்டது. கால் ஊனத்துடன் விமோசனம் தேடி மானுட ரூபத்தில் பூலோகத்தில் பல திருத்தலங்களுக்கும் அலைந்தார். அப்போது விளாமரங்கள் அடர்ந்த (விளங்குளம்) பகுதிக்கு வந்தபோது, பரந்து விரிந்து தரையில் காணப்பட்ட ஒரு விளாமரத்தின் வேர் தடுக்கி, அருகில் உள்ள ஒரு பள்ளத்தில் விழுந்து விட்டார் சனி பகவான்.

அட்சய திருதியை நாளில்:

அந்த நாள் திருதியையும் பூச நட்சத்திரமும் சனி வாரமும் சேர்ந்த புனித நன்னாள். சனி விழுந்த அந்த நேரத்தில், பல கோடி யுகங்களாக மறைந்திருந்த பூச ஞான வாவி என்ற ஞான தீர்த்தம் சுரந்து, சனி பகவானை மேலெழுப்பி கரை சேர்த்தது. இந்நிகழ்வில், சனி பகவானின் கால் ஊனம் நிவர்த்தி ஆகி விட்டது.

மேலும் விளா வேர் தடுத்து விழுந்து சுரந்த குளமானதால், விளம்குளம் என்றழைக்கப்பட்டு, பின்னர் இந்தக் கிராமம் விளங்குளம் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் திருக்கோவிலில் விஜய விநாயகர் மேற்கு முகமாக இருந்து அரள்பாலிக்கிறார். அட்சயபுரீஸ்வரர் சனிக்குக் காட்சி அளித்து, இந்த தலத்தில் திருமணப் பிராப்தியையும் அவருக்குத் தந்தார்.

பின்னர் குறைவில்லாத செல்வத்தை அள்ளித்தரும் அட்சயபுரீஸ்வரராக இங்கு நிலை கொண்டார். இறைவன் இங்கே, அருவுருவமாக லிங்க வடிவில் அருள்புரிகிறார். அம்பாளுக்கு, அபிவிருத்தி நாயகி எனும் திருநாமம் வழங்கப்பெறுகிறது. தவிர ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்ரமண்யர், ஸ்ரீநாகர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீசண்டிகேஸ்வரர், ஸ்ரீசூரிய பகவான், ஸ்ரீபைரவர், ஸ்ரீகஜலட்சுமி உள்பட பல தெய்வங்களுக்கும் சந்நிதி உண்டு.

திருமண தடை நீங்கும்:

சனி கால் ஊனம் நீங்கி மந்தா, ஜேஷ்டா எனும் இரு பத்தினியரை மணம் செய்து கொண்டு ஆதி பிருஹத் சனீஸ்வரராக, திருமணக் கோலத்தில் இங்கே அருள்பாலித்து வருகிறார். இங்கு அமைந்துள்ள பூச ஞான வாவி தீர்த்தத்தில் பூச நட்சத்திரம், திருதியை, சனிக்கிழமை ஆகிய ஏதாவது ஒரு நாளில் நீராடி வழிபட்டால், உடல் வகை துன்பங்களும், நரம்பியல் சம்பந்தப்பட்ட நோய்களும் நிவர்த்தியாகும்.

திருமணத் தடைகளும் விலகும். சனி பகவானின் நட்சத்திரம் பூசம். பூச மருங்கர் எனும் சித்தர், சனிப்பரணி சித்திரை சத்குருவாக கொண்டவர். பூசமருங்க சித்தர் ஸ்தூல, சூட்சும வடிவங்களில் வழிபடும் தலம் விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் ஆலயம்.

வழிபடுவது எப்படி?

அட்சய திரிதியை அன்று விளங்குளம் ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர் ஆலயம் சென்று சிறப்பு வழிபாடு செய்வது மிகவும் நல்லது. மூல மூர்த்தி சிவலிங்கத்துக்கு, சந்தனக் காப்பில் முத்துக்கள் பதித்து வழிபட வேண்டும். பின், ஸ்ரீசனீஸ்வரமூர்த்திக்கு புனுகு கலந்த சந்தனக் காப்பிட்டு, அதில் எள், அரிசி, கோதுமை, பாதாம் பருப்பு, குங்குமப்பூ மற்றும் நவதானியங்களைப் பதித்து பூஜிக்க வேண்டும்.

இதனால், சந்ததிகள் உணவுப் பஞ்சம் இல்லாமல் நல்வாழ்வு வாழ்வார்கள். பெண் பிள்ளைகள் புகுந்த வீட்டில் துன்பமில்லாமல் வாழ்வர். அட்சய திருதியை அன்று குறைந்தது ஒரு வார காலத்துக்கு தேவையான உணவுப் பண்டங்களை தானமாக அளிக்க வேண்டும். இது நவக்கிரகங்களின் அனுக்கிரக சக்திகளைப் பெருக்கிடும். அருள் பெருகும் என்கிறார் ஜோதிடர் சதீஷ்குமார்.

அட்சய திருதியன்று வழிபடும் கோவில்கள்

அட்சய திருதியை அன்று குபேரர் கோவிலை வழிபட்டால் சலக செல்வங்களும் பெருகும். இக்கோவில் சென்னை அருகே வண்டலுர் அடுத்த ரத்னமங்கலத்தில் உள்ளது. இந்தியாவிலேயே லட்சுமி குபேரருக்கு என்று தனியாக உள்ள ஒரே கோவில் என்ற பெருமையை இக்கோவில் பெற்றுள்ளது.

இக்கோவிலைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் லட்சுமி கணபதி, குபேர லிங்கம், செல்வ முத்துக்குமரன், யோக ஆஞ்சநேயர், நவகிரகங்கள் உள்ளன. கோசாலையும் உள்ளது. செல்வத்துக்கு அதிபதி லட்சுமி. அதைக் கண்காணித்துக் காப்பவர் குபேரன். இவ்விருவரையும் இணைத்து லட்சுமி குபேர பூஜை செய்து வர நிலையான செல்வம் உண்டாகும்.

இழந்த செல்வத்தையும் பெற்று புகழோடு வாழலாம். ரத்னமங்கலம் குபேரரையும் லட்சுமியையும் ஒருசேர ஒருமுறை தரிசித்து வந்தால், அவர்கள் வாழ்வில் செல்வம் செழித்தோங்கும் என்பதில் ஐயமில்லை. திருப்பதி செல்லும் முன் ரத்னமங்கலம் குபேரனை வழிபட்டுச் செல்வது மிகவும் விசேஷமானதாகும்.

வளமான வாழ்வுக்காக இங்கு லட்சுமி குபேர பூஜை செய்வது விசேஷம். இந்த பூஜையை பவுர்ணமி மற்றும் அமாவாசையில் செய்வது மிகுந்த பலன் தரும். குபேரன் காட்சி தரும் கோலமே பெரும் பரவசத்தை ஏற்படுத்தும். சிரித்த முகம், இடது கையில் சங்கநிதி, வலது கையில் பதுமநிதி அடங்கிய கலசத்தை அணைத்துக் கொண்டு அன்னை லட்சுமி, துணைவி சித்தரிணீயுடன் குபேரன் தரும் காட்சியை காண கண் கோடி வேண்டும்.

கோவில் வரலாறு:

பிரம்மாவின் புத்திரரான புலஸ்தியருக்கும் திருவண விந்துவின் புத்திரிக்கும் விஸ்வாரா என்பவர் பிறந்தார். இந்த விஸ்வாராவின் மகனே குபேரன். இவரது மாற்றாந்தாய்க்கு பிறந்தவனே ராவணன். முதலில் இலங்கை அதிபதியாக இருந்தவர் குபேரனே. அவரிடம் இருந்து ராவணன் ஆட்சியைக் கைப்பற்றி விட்டான்.

குபேரனின் விமானம் எங்கு பறந்து சென்றாலும் அந்த விமானம் தங்கம், முத்து ஆகியவற்றை சிந்திக் கொண்டே செல்லும். குபேரனை ராவணன் இலங்கையில் இருந்து வெளியேற்றியதைத் தொடர்ந்தே அவன் பல சோதனைகளைச் சந்திக்க நேர்ந்தது என்றும், கூறுவதுண்டு. குபேரன் சிவனிடம் அதிக பக்தி கொண்டவர். குபேரன் கடுந்தவம் புரிந்து சிவனை வழிபட்டார்.

அவரது பக்திக்கு மெச்சிய சிவனும், பார்வதி சமேதராகக் காட்சி தந்தார். சிவனுடன் அழகே வடிவான பார்வதியைக் கண்ட குபேரன், ஆஹா இப்படியொரு தேவியை இதுநாள் வரை துதிக்கவில்லை என்று எண்ணினான். இந்த நினைப்பில் குபேரனின் ஒரு கண் துடித்து அடங்கியது. இதைப் பார்த்து பார்வதி மிகவும் ஆத்திரமடைந்து, குபேரனின் துடித்த கண்ணை வெடிக்கச் செய்தாள்.

குபேரனுக்கு ஒரு கண் போய் விட்டது. பின், அவர் மன்னிப்பு கேட்க, பார்வதியும் பெருந்தன்மையுடன் குபேரனை மன்னித்தாள். ஆனால், போன கண் போனது தான் என்றாலும் அதற்குப் பதிலாக சிறிய கண் ஒன்றை குபேரனுக்கு தோன்றும்படி செய்தார் சிவபெருமான். அத்துடன் குபேரனின் தவத்தையும், பூஜையையும் மெச்சி எட்டு திக்கு காவலர்களில் ஒருவராக குபேரனை சிவன் நியமித்தார்.

அதன்பின், லட்சுமிதேவி குபேரனை தன தானிய அதிபதியாக்கினாள். அதாவது பணத்துக்கும், தானியத்துக்கும் அவர் சொந்தக்காரர் அல்ல, அவற்றை கண்காணிப்பது மட்டுமே அவர் பொறுப்பு. கொடுப்பது அன்னை லட்சுமி.

அட்சய திருதி விழா:

ரத்ன மங்கலம் ஸ்ரீலட்சுமி குபேரர் கோவிலில் அட்சய திருதியையொட்டி நாளை (6-ந்தேதி) சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அன்று சுக்ர ஓரை காலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனத்துடன், கோ பூஜை செய்து சுக்ரனின் அதிதேவதையான குபேர லட்சுமி ஆராதனையும் அதை தொடர்ந்து மகாலட்சுமிக்கு உகந்த ஸ்லோகமும், ஸ்ரீசுத்தம் மற்றும் லட்சுமி அஷ்டகம் படித்து அன்று நாள் முழுவதும் ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்லோகம் படித்து பக்தர்கள் பூஜை செய்வார்கள்.

அவர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளியினால் ஆன நாணயங்களும், பச்சை நிற குங்குமத்துடன் கூடிய அட்சய திருதியை சிறப்பு பிரசாதமான ஹரி பலம் என்று அழைக்கப்படும் நெல்லிக்கனி அனை வருக்கும் பிரசாதமாக வழங்கப்படும். பக்தர்கள் தங்கள் கொண்டு வரும் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை குபேர லட்சுமியிடம் வைத்தும் அட்சய திருதியை சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு ஆசி பெறலாம்.

அட்சய புரீஸ்வரர் கோவில்:

அட்சய திருதியை அன்று அட்சயபுரீஸ்வரர் கோவிலில் வழிபட்டால் காரிய தடைகள் நீங்கி சகல யோகங்கள் பெறலாம். இக்கோவில் தஞ்சாவூர் அருகே பட்டுக்கோட்டையில் இருந்து தெற்கே 30 கி.மீ. தொலைவில் விளங்குளம் என்ற பகுதியில் அமைந்துள்ளது. பேராவூரணியிலிருந்து நகரப் பேருந்திலும் இந்தத் திருக்கோவிலுக்கு செல்லலாம்.

கல்வெட்டு ஆராய்ச்சிகளின்படி, இத்திருக்கோவில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக தெரிய வருகிறது. இந்த ஆலயத்தில் அருள் பாலிக்கும் ஈசன் திருநாமம்- ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர். புராணங்களின்படி சூரிய பகவானின் மகன் சனி பகவானுக்கும் இன்னொரு மகன் எமதர்மனுக்கும் பகை இருந்து வந்தது.

அந்தப் பகை காரணமாக ஒரு முறை சனி பகவானின் காலில் எமதர்சனம் ஓங்கி அடிக்க... சனி பகவானுக்கு ஊனம் ஏற்பட்டது. கால் ஊனத்துடன் விமோசனம் தேடி மானுட ரூபத்தில் பூலோகத்தில் பல திருத்தலங்களுக்கும் அலைந்தார். அப்போது விளாமரங்கள் அடர்ந்த (விளங்குளம்) பகுதிக்கு வந்தபோது, பரந்து விரிந்து தரையில் காணப்பட்ட ஒரு விளாமரத்தின் வேர் தடுக்கி, அருகில் உள்ள ஒரு பள்ளத்தில் விழுந்து விட்டார் சனி பகவான்.

அட்சய திருதியை நாளில்:

அந்த நாள் திருதியையும் பூச நட்சத்திரமும் சனி வாரமும் சேர்ந்த புனித நன்னாள். சனி விழுந்த அந்த நேரத்தில், பல கோடி யுகங்களாக மறைந்திருந்த பூச ஞான வாவி என்ற ஞான தீர்த்தம் சுரந்து, சனி பகவானை மேலெழுப்பி கரை சேர்த்தது. இந்நிகழ்வில், சனி பகவானின் கால் ஊனம் நிவர்த்தி ஆகி விட்டது.

மேலும் விளா வேர் தடுத்து விழுந்து சுரந்த குளமானதால், விளம்குளம் என்றழைக்கப்பட்டு, பின்னர் இந்தக் கிராமம் விளங்குளம் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் திருக்கோவிலில் விஜய விநாயகர் மேற்கு முகமாக இருந்து அரள்பாலிக்கிறார். அட்சயபுரீஸ்வரர் சனிக்குக் காட்சி அளித்து, இந்த தலத்தில் திருமணப் பிராப்தியையும் அவருக்குத் தந்தார்.

பின்னர் குறைவில்லாத செல்வத்தை அள்ளித்தரும் அட்சயபுரீஸ்வரராக இங்கு நிலை கொண்டார். இறைவன் இங்கே, அருவுருவமாக லிங்க வடிவில் அருள்புரிகிறார். அம்பாளுக்கு, அபிவிருத்தி நாயகி எனும் திருநாமம் வழங்கப்பெறுகிறது. தவிர ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்ரமண்யர், ஸ்ரீநாகர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீசண்டிகேஸ்வரர், ஸ்ரீசூரிய பகவான், ஸ்ரீபைரவர், ஸ்ரீகஜலட்சுமி உள்பட பல தெய்வங்களுக்கும் சந்நிதி உண்டு.

திருமண தடை நீங்கும்:

சனி கால் ஊனம் நீங்கி மந்தா, ஜேஷ்டா எனும் இரு பத்தினியரை மணம் செய்து கொண்டு ஆதி பிருஹத் சனீஸ்வரராக, திருமணக் கோலத்தில் இங்கே அருள்பாலித்து வருகிறார். இங்கு அமைந்துள்ள பூச ஞான வாவி தீர்த்தத்தில் பூச நட்சத்திரம், திருதியை, சனிக்கிழமை ஆகிய ஏதாவது ஒரு நாளில் நீராடி வழிபட்டால், உடல் வகை துன்பங்களும், நரம்பியல் சம்பந்தப்பட்ட நோய்களும் நிவர்த்தியாகும்.

திருமணத் தடைகளும் விலகும். சனி பகவானின் நட்சத்திரம் பூசம். பூச மருங்கர் எனும் சித்தர், சனிப்பரணி சித்திரை சத்குருவாக கொண்டவர். பூசமருங்க சித்தர் ஸ்தூல, சூட்சும வடிவங்களில் வழிபடும் தலம் விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் ஆலயம்.

வழிபடுவது எப்படி?

அட்சய திரிதியை அன்று விளங்குளம் ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர் ஆலயம் சென்று சிறப்பு வழிபாடு செய்வது மிகவும் நல்லது. மூல மூர்த்தி சிவலிங்கத்துக்கு, சந்தனக் காப்பில் முத்துக்கள் பதித்து வழிபட வேண்டும். பின், ஸ்ரீசனீஸ்வரமூர்த்திக்கு புனுகு கலந்த சந்தனக் காப்பிட்டு, அதில் எள், அரிசி, கோதுமை, பாதாம் பருப்பு, குங்குமப்பூ மற்றும் நவதானியங்களைப் பதித்து பூஜிக்க வேண்டும்.

இதனால், சந்ததிகள் உணவுப் பஞ்சம் இல்லாமல் நல்வாழ்வு வாழ்வார்கள். பெண் பிள்ளைகள் புகுந்த வீட்டில் துன்பமில்லாமல் வாழ்வர். அட்சய திருதியை அன்று குறைந்தது ஒரு வார காலத்துக்கு தேவையான உணவுப் பண்டங்களை தானமாக அளிக்க வேண்டும். இது நவக்கிரகங்களின் அனுக்கிரக சக்திகளைப் பெருக்கிடும். அருள் பெருகும் என்கிறார் ஜோதிடர் சதீஷ்குமார்.

ஸ்தல வரலாறு:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியம் அனுமந்தை ஊராட்சி காளியாங்குப்பத்தில் புகழ்பெற்ற காசேரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. காடுகள் நிறைந்த இந்த பகுதியில் இந்த கோவில் எப்படி தோன்றியது என்று ஒரு வரலாறு கூறப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு புதிய கிராமத்தை உருவாக்க திட்டமிட்டனர். அங்கு நிறைந்திருந்த காசான் செடிகளை அகற்ற விவசாயி பெருமாள் கடப்பாறையால் தோண்டினார். அப்போது பூமிக்கடியில் ஒரு சிலை கிடைத்ததாகவும் காசான் செடிக்கு அடியில் கிடைத்ததால் இந்த அம்மன் காசேரி அம்மன் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

முதலில் ஓலைக் கொட்டகையில் இருந்த இந்த கோவில் பின்னர் பெரிய கட்டிடம் கட்டப்பட்டு அதில் இயங்கி வருகிறது. இங்குள்ள காசேரி அம்மன் உற்சவர் சிலை மிகவும் கம்பீரமாக காட்சி தருகிறது.

பூஜைகள்:

காசேரி அம்மன் கோவிலில் வெள்ளிக் கிழமை பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது. வெள்ளிக்கிழமை தோறும் இரவு 7 மணிக்கு சென்னை, புதுவை உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசித்து அருள் பெற்று செல்கின்றனர்.

சிறப்புகள்:

திருமணம் வரம் வேண்டி வரும் பெண்கள் குளித்துவிட்டு வந்து அம்மனை 9 முறை வலம் வந்து வழிபடுவார்கள். எலுமிச்சம் பழம் மற்றும் வேப்பிலையை பூசாரியிடம் கொடுத்து காசேரி அம்மன் மடியில் வைத்து பூஜை செய்து வாங்கி செல்வார்கள்.

அவர்கள் வீட்டுக்கு கொண்டு சென்று அங்கு பழைய சாதத்தில் எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து வேப்பிலையுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். பின்னர் எலுமிச்சம் பழம் தோலை தலையில் தேய்த்து குளிப்பார்கள். இவ்வாறு 48 வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு எலுமிச்சம் பழச்சாறு மற்றும் வேப்பிலை சாப்பிட்டு வந்தால் தோஷம் நீங்கி திருமணம் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

இதேபோல் திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களும் குளித்து விட்டு இந்த கோவிலுக்கு வந்து அம்மனை 9 முறை சுற்றி வழிபடுவார்கள். அரச மரத்தையும் 9 முறை சுற்றுவார்கள். இதையடுத்து எலுமிச்சம் பழத்தையும், வேப்பிலையையும் அம்மன் முன் வைத்து பூஜை செய்து பூசாரியிடம் பெற்று வீட்டுக்கு செல்வார்கள்.

அங்கு பழைய சாதத்தில் எலுமிச்சம் பழ சாறுடன் வேப்பிலையையும் சேர்த்து உண்பார்கள். இவ்வாறு 48 வெள்ளிக்கிழமை அம்மனை வழிபட்டு எலுமிச்சம் பழச்சாறு மற்றும் வேப்பிலை சாப்பிட்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் பெண்கள் அங்கு வந்து பூசாரிக்கு ஆடைகள் மற்றும் தட்சணைகள் வழங்கி அம்மனுக்கு 108 எலுமிச்சை பழங்களும் மாலையாக அணிவித்து வணங்கி செல்கின்றனர்.

வித்தியாசமான கழுமரம் ஏறும் நிகழ்ச்சி:

காசேரி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமியை யொட்டி 3 நாள் உற்சவம் நடைபெறும். 3-வது நாள் நடைபெறும் காத்தான் கழுமரம் ஏறும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். காசேரி அம்மனுக்கு காத்தவராயன், போத்திராஜன் ஆகியோர் காவலர்களாக உள்ளதாக கூறப்படுகிறது.

காசேரி அம்மனின் அருள் சக்தியை விளக்கும் வகையில் நாடக நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதில் நாடக கலைஞர் ஒருவர் காத்தவராயனாக வேடமிட்டு நடிக்கிறார். அவர் கழுமரம் ஏறுவதற்காக கோவிலில் 60 அடி உயரமுள்ள கழுமரம் அமைக்கப்பட்டிருக்கும்.

அதில் 18 படிகள் இருக்கும் அதிகாலை 4 மணிக்கு நாடக கலைஞர் அந்த கழுமரத்தில் ஏறத் தொடங்குவார். ஒவ்வொரு படியிலும் மணி நேரம் நின்று தேவதங்கள் ஓதி, காசேரி அம்மன் புகழ்பாடி பூஜை செய்வார். ஒவ்வொரு படியாக ஏறி மதியம் 10 மணி அளவில் கழுமரத்தின் உச்சிக்கு சென்று சூரியவழிபாடு செய்வார்.

கோவிலில் பூஜை செய்து வைக்கப்பட்ட 100 எலுமிச்சம் பழங்களையும் கீழே குவிந்திருக்கும் பெண்களுக்கு வேதம் கூறி வீசுவார். ஒவ்வொருவரும் போட்டிப்போட்டுக் கொண்டு அந்த எலுமிச்சம் பழத்தை பெறுவார்கள். அந்த எலுமிச்சம் பழம் கிடைத்தவர்களுக்கு வாழ்க்கை செழிக்கும் என்பது ஐதீகம்.

அன்னதானம்:

சித்திரா பவுர்ணமி நிகழ்ச்சியையொட்டி கோவிலில் 3-ம் நாள் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். பகல் 12 மணிக்கு காசேரி அம்மனின் சக்தி கரகம் காத்தவராயன் சாமி சிலையுடன் மேள தாளம் முழங்க காளியாங்குப்பத்தில் உள்ள அனைத்து வீதிகளிலும் வலம் வரும்.

அப்போது 1000 பெண்கள் நேர்த்தி கடன் செலுத்த விரதமிருந்து கேழ்வரகு கூழ் குடம் ஏந்தி சாமி ஊர்வலத்தில் வருவார்கள். இறுதியில் கோவிலின் எதிர்புறம் அமைந்துள்ள பந்தலில் வரிசையாக கூழ் குடத்தை வைப்பார்கள். காசேரி அம்மனிடம் உத்தரவு பெற்ற பின் ஏழைகளுக்கு, கிராம மக்கள் இந்த கூழினை வழங்குவார்கள்.

மேலும் இரவு 10 மணி அளவில் கும்பம் கொட்டும் நிகழ்ச்சியும் கிராம மக்கள் சார்பில் நடைபெறும். அப்போது பெரிய அண்டாவில் திரட்டி வைக்கப்பட்ட உணவை ஏழைகளுக்கு கிராம மக்கள் வழங்குவார்கள். இந்த கோவிலில் தீ மிதித்தல், தேர் இழுத்தல், அலகு குத்துதல் நிகழ்ச்சிகள் கிடையாது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் பசியோடும், பட்டினியோடும் செல்லக் கூடாது. கோவில் உற்சவத்தின் போது முக்கிய விழாவான கூழ்வார்த்தல் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று அம்மன் கூறியதால் இந்த கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சியும் நடப்பதாக கூறப்படுகிறது.

எலுமிச்சம் பழத்தின் மகிமை:

பொதுவாக அம்மன் கோவிலில் ஆடு, கோழி பலியிடப்படும். ஆனால் காசேரி அம்மன் கோவிலில் இந்த பலியிடும் நிகழ்ச்சிகள் கிடையாது. கோவிலில் எலுமிச்சம் பழம் மற்றும் வேப்பிலையே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எலுமிச்சம் பழத்தில் அம்மனின் சக்தி முழுவதும் அடங்கி உள்ளதாக நம்பப்படுகிறது.

எலுமிச்சம் பழத்தை தெய்வகனி என்று பக்தர்கள் கூறுகின்றனர். காசேரி அம்மன் உற்சவ சிலையில் உள்ள நாகப்பாம்பின் மீது பூவை சுற்றி அதன் மேல் எலுமிச்சம் பழத்தை வைத்து குறிகேட்கும் பழக்கம் உள்ளது. எலுமிச்சம் பழம் துள்ளி கீழே விழுந்த பின்பே உற்சவ நிகழ்ச்சி தொடங்குகிறது.கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் விபூதி குங்குமத்துடன் வேப்பிலையும், எலுமிச்சம் பழமும் வழங்கப்படுகிறது.

போக்குவரத்து வசதி:

இந்த கோவிலுக்கு செல்ல பேருந்து மற்றும் ரெயில் வசதி உள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் மற்றும் அரசு பஸ் வசதி உள்ளது. முதலில் விழுப்புரம் சென்று பின் உள்ளூர் பேருந்து மூலம் காளியாங்குப்பத்தில் உள்ள இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.

குழந்தை வரம் தரும் காசேரி அம்மன் கோவில்

ஸ்தல வரலாறு:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியம் அனுமந்தை ஊராட்சி காளியாங்குப்பத்தில் புகழ்பெற்ற காசேரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. காடுகள் நிறைந்த இந்த பகுதியில் இந்த கோவில் எப்படி தோன்றியது என்று ஒரு வரலாறு கூறப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு புதிய கிராமத்தை உருவாக்க திட்டமிட்டனர். அங்கு நிறைந்திருந்த காசான் செடிகளை அகற்ற விவசாயி பெருமாள் கடப்பாறையால் தோண்டினார். அப்போது பூமிக்கடியில் ஒரு சிலை கிடைத்ததாகவும் காசான் செடிக்கு அடியில் கிடைத்ததால் இந்த அம்மன் காசேரி அம்மன் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

முதலில் ஓலைக் கொட்டகையில் இருந்த இந்த கோவில் பின்னர் பெரிய கட்டிடம் கட்டப்பட்டு அதில் இயங்கி வருகிறது. இங்குள்ள காசேரி அம்மன் உற்சவர் சிலை மிகவும் கம்பீரமாக காட்சி தருகிறது.

பூஜைகள்:

காசேரி அம்மன் கோவிலில் வெள்ளிக் கிழமை பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது. வெள்ளிக்கிழமை தோறும் இரவு 7 மணிக்கு சென்னை, புதுவை உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசித்து அருள் பெற்று செல்கின்றனர்.

சிறப்புகள்:

திருமணம் வரம் வேண்டி வரும் பெண்கள் குளித்துவிட்டு வந்து அம்மனை 9 முறை வலம் வந்து வழிபடுவார்கள். எலுமிச்சம் பழம் மற்றும் வேப்பிலையை பூசாரியிடம் கொடுத்து காசேரி அம்மன் மடியில் வைத்து பூஜை செய்து வாங்கி செல்வார்கள்.

அவர்கள் வீட்டுக்கு கொண்டு சென்று அங்கு பழைய சாதத்தில் எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து வேப்பிலையுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். பின்னர் எலுமிச்சம் பழம் தோலை தலையில் தேய்த்து குளிப்பார்கள். இவ்வாறு 48 வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு எலுமிச்சம் பழச்சாறு மற்றும் வேப்பிலை சாப்பிட்டு வந்தால் தோஷம் நீங்கி திருமணம் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

இதேபோல் திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களும் குளித்து விட்டு இந்த கோவிலுக்கு வந்து அம்மனை 9 முறை சுற்றி வழிபடுவார்கள். அரச மரத்தையும் 9 முறை சுற்றுவார்கள். இதையடுத்து எலுமிச்சம் பழத்தையும், வேப்பிலையையும் அம்மன் முன் வைத்து பூஜை செய்து பூசாரியிடம் பெற்று வீட்டுக்கு செல்வார்கள்.

அங்கு பழைய சாதத்தில் எலுமிச்சம் பழ சாறுடன் வேப்பிலையையும் சேர்த்து உண்பார்கள். இவ்வாறு 48 வெள்ளிக்கிழமை அம்மனை வழிபட்டு எலுமிச்சம் பழச்சாறு மற்றும் வேப்பிலை சாப்பிட்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் பெண்கள் அங்கு வந்து பூசாரிக்கு ஆடைகள் மற்றும் தட்சணைகள் வழங்கி அம்மனுக்கு 108 எலுமிச்சை பழங்களும் மாலையாக அணிவித்து வணங்கி செல்கின்றனர்.

வித்தியாசமான கழுமரம் ஏறும் நிகழ்ச்சி:

காசேரி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமியை யொட்டி 3 நாள் உற்சவம் நடைபெறும். 3-வது நாள் நடைபெறும் காத்தான் கழுமரம் ஏறும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். காசேரி அம்மனுக்கு காத்தவராயன், போத்திராஜன் ஆகியோர் காவலர்களாக உள்ளதாக கூறப்படுகிறது.

காசேரி அம்மனின் அருள் சக்தியை விளக்கும் வகையில் நாடக நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதில் நாடக கலைஞர் ஒருவர் காத்தவராயனாக வேடமிட்டு நடிக்கிறார். அவர் கழுமரம் ஏறுவதற்காக கோவிலில் 60 அடி உயரமுள்ள கழுமரம் அமைக்கப்பட்டிருக்கும்.

அதில் 18 படிகள் இருக்கும் அதிகாலை 4 மணிக்கு நாடக கலைஞர் அந்த கழுமரத்தில் ஏறத் தொடங்குவார். ஒவ்வொரு படியிலும் மணி நேரம் நின்று தேவதங்கள் ஓதி, காசேரி அம்மன் புகழ்பாடி பூஜை செய்வார். ஒவ்வொரு படியாக ஏறி மதியம் 10 மணி அளவில் கழுமரத்தின் உச்சிக்கு சென்று சூரியவழிபாடு செய்வார்.

கோவிலில் பூஜை செய்து வைக்கப்பட்ட 100 எலுமிச்சம் பழங்களையும் கீழே குவிந்திருக்கும் பெண்களுக்கு வேதம் கூறி வீசுவார். ஒவ்வொருவரும் போட்டிப்போட்டுக் கொண்டு அந்த எலுமிச்சம் பழத்தை பெறுவார்கள். அந்த எலுமிச்சம் பழம் கிடைத்தவர்களுக்கு வாழ்க்கை செழிக்கும் என்பது ஐதீகம்.

அன்னதானம்:

சித்திரா பவுர்ணமி நிகழ்ச்சியையொட்டி கோவிலில் 3-ம் நாள் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். பகல் 12 மணிக்கு காசேரி அம்மனின் சக்தி கரகம் காத்தவராயன் சாமி சிலையுடன் மேள தாளம் முழங்க காளியாங்குப்பத்தில் உள்ள அனைத்து வீதிகளிலும் வலம் வரும்.

அப்போது 1000 பெண்கள் நேர்த்தி கடன் செலுத்த விரதமிருந்து கேழ்வரகு கூழ் குடம் ஏந்தி சாமி ஊர்வலத்தில் வருவார்கள். இறுதியில் கோவிலின் எதிர்புறம் அமைந்துள்ள பந்தலில் வரிசையாக கூழ் குடத்தை வைப்பார்கள். காசேரி அம்மனிடம் உத்தரவு பெற்ற பின் ஏழைகளுக்கு, கிராம மக்கள் இந்த கூழினை வழங்குவார்கள்.

மேலும் இரவு 10 மணி அளவில் கும்பம் கொட்டும் நிகழ்ச்சியும் கிராம மக்கள் சார்பில் நடைபெறும். அப்போது பெரிய அண்டாவில் திரட்டி வைக்கப்பட்ட உணவை ஏழைகளுக்கு கிராம மக்கள் வழங்குவார்கள். இந்த கோவிலில் தீ மிதித்தல், தேர் இழுத்தல், அலகு குத்துதல் நிகழ்ச்சிகள் கிடையாது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் பசியோடும், பட்டினியோடும் செல்லக் கூடாது. கோவில் உற்சவத்தின் போது முக்கிய விழாவான கூழ்வார்த்தல் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று அம்மன் கூறியதால் இந்த கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சியும் நடப்பதாக கூறப்படுகிறது.

எலுமிச்சம் பழத்தின் மகிமை:

பொதுவாக அம்மன் கோவிலில் ஆடு, கோழி பலியிடப்படும். ஆனால் காசேரி அம்மன் கோவிலில் இந்த பலியிடும் நிகழ்ச்சிகள் கிடையாது. கோவிலில் எலுமிச்சம் பழம் மற்றும் வேப்பிலையே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எலுமிச்சம் பழத்தில் அம்மனின் சக்தி முழுவதும் அடங்கி உள்ளதாக நம்பப்படுகிறது.

எலுமிச்சம் பழத்தை தெய்வகனி என்று பக்தர்கள் கூறுகின்றனர். காசேரி அம்மன் உற்சவ சிலையில் உள்ள நாகப்பாம்பின் மீது பூவை சுற்றி அதன் மேல் எலுமிச்சம் பழத்தை வைத்து குறிகேட்கும் பழக்கம் உள்ளது. எலுமிச்சம் பழம் துள்ளி கீழே விழுந்த பின்பே உற்சவ நிகழ்ச்சி தொடங்குகிறது.கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் விபூதி குங்குமத்துடன் வேப்பிலையும், எலுமிச்சம் பழமும் வழங்கப்படுகிறது.

போக்குவரத்து வசதி:

இந்த கோவிலுக்கு செல்ல பேருந்து மற்றும் ரெயில் வசதி உள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் மற்றும் அரசு பஸ் வசதி உள்ளது. முதலில் விழுப்புரம் சென்று பின் உள்ளூர் பேருந்து மூலம் காளியாங்குப்பத்தில் உள்ள இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.

ஸ்தல வரலாறு:

காசியிலே விசாலாட்சியாக, மதுரையிலே மீனாட்சியாக, காஞ்சியிலே காமாட்சியாக, திருவல்லிக்கேணியில் அருள் தரும் தாயாக எல்லம்மன் காட்சி தருகிறாள். 300 ஆண்டுகளுக்கு முன் எல்லம்மன் ஆலயம் தோன்றியதாக செய்திகள் உண்டு.

கோவிலில் உள்ளே சென்றதும் முதலில் கொடிமரம், பிறகு கிழக்கு முகம் பார்த்த வண்ணமாக காட்சித் தரும் எல்லம்மனை காணலாம். சக்தி விநாயகர் சன்னதி, நவக்கிரக சன்னதி, காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி சன்னதி, வன்னி மரம், நாகதேவியர் சன்னதி, எல்லம்மன் உற்சவ சன்னதி, பக்த ஆஞ்சநேயர் சன்னதி இவைகள்யாவும் இங்கு உள்ளது.

சிறப்புகள்:

இங்கு ஆடி மாதம் பிரம்மோற்சவம் 13 நாட்கள் சிறப்பாக நடைபெறும் நவராத்திரி, கந்த சஷ்டி விழா, சித்திரையில் ஆயிரத்தெட்டு அபிஷேகம் சிறந்த முறையில் நடக்கிறது.

பிள்ளைப் பேறு, திருமணம் நடக்க, நோய் நொடிகள் தீர, கடன் தொல்லைகள் விலக, புகழ் பெற, எல்லாவித பிரச்சினைகளுக்கும் வெள்ளிக்கிழமை தோறும் இங்கு வந்து வணங்கினால் நன்மைகள் பெருகி கேட்டவரம் கிடைக்கும்.

சர்க்கரை வியாதி கொண்டவர்கள் அந்நோய் தீர அம்மனை வேண்டி அம்மனுக்கு சர்க்கரை காப்பால் அலங்காரம் செய்து வியாதி தீர்த்துள்ளார்கள்.

போக்குவரத்து வசதி:

இந்த ஆலயம் 48, சுந்தரமூர்த்தி வினாயகர் கோவில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5ல் அமைந்துள்ளது.இந்த கோவிலுக்கு செல்ல சென்னையில் அனைத்து பகுதியில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது.

அருள் தரும் எல்லம்மன் கோவில்அருள் தரும் எல்லம்மன் கோவில்

ஸ்தல வரலாறு:

காசியிலே விசாலாட்சியாக, மதுரையிலே மீனாட்சியாக, காஞ்சியிலே காமாட்சியாக, திருவல்லிக்கேணியில் அருள் தரும் தாயாக எல்லம்மன் காட்சி தருகிறாள். 300 ஆண்டுகளுக்கு முன் எல்லம்மன் ஆலயம் தோன்றியதாக செய்திகள் உண்டு.

கோவிலில் உள்ளே சென்றதும் முதலில் கொடிமரம், பிறகு கிழக்கு முகம் பார்த்த வண்ணமாக காட்சித் தரும் எல்லம்மனை காணலாம். சக்தி விநாயகர் சன்னதி, நவக்கிரக சன்னதி, காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி சன்னதி, வன்னி மரம், நாகதேவியர் சன்னதி, எல்லம்மன் உற்சவ சன்னதி, பக்த ஆஞ்சநேயர் சன்னதி இவைகள்யாவும் இங்கு உள்ளது.

சிறப்புகள்:

இங்கு ஆடி மாதம் பிரம்மோற்சவம் 13 நாட்கள் சிறப்பாக நடைபெறும் நவராத்திரி, கந்த சஷ்டி விழா, சித்திரையில் ஆயிரத்தெட்டு அபிஷேகம் சிறந்த முறையில் நடக்கிறது.

பிள்ளைப் பேறு, திருமணம் நடக்க, நோய் நொடிகள் தீர, கடன் தொல்லைகள் விலக, புகழ் பெற, எல்லாவித பிரச்சினைகளுக்கும் வெள்ளிக்கிழமை தோறும் இங்கு வந்து வணங்கினால் நன்மைகள் பெருகி கேட்டவரம் கிடைக்கும்.

சர்க்கரை வியாதி கொண்டவர்கள் அந்நோய் தீர அம்மனை வேண்டி அம்மனுக்கு சர்க்கரை காப்பால் அலங்காரம் செய்து வியாதி தீர்த்துள்ளார்கள்.

போக்குவரத்து வசதி:

இந்த ஆலயம் 48, சுந்தரமூர்த்தி வினாயகர் கோவில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5ல் அமைந்துள்ளது.இந்த கோவிலுக்கு செல்ல சென்னையில் அனைத்து பகுதியில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது.

ஸ்தல வரலாறு:

திருமலை திருப்பதி தேவஸ்தான செய்தி மையம் தி.நகரில் இயங்குகிறது. இம்மையம் 1969 ஆண்டு முதல் இயங்குகிறது. இது பக்த பெருமக்களால் வெங்கடேஸ்வரா கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு வெங்கடாஜலபதி சுவாமிக்கு சிலை இல்லை. ஆனால் அதை வேலைப்பாடுடன் கூடிய வெங்கடாஜலபதி ஆஜானுபாகுவாக உள்ளார். இது ஒரு தரிசன கூடம். அவ்வளவே.

வழிபாடுகள்:

வெங்கடாஜலபதியின் பிறந்த நட்சத்திரமான ஸ்ரவண நட்சத்திரம் வரும் நாளில் இங்கு மாதா மாதம் பக்தி பாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது மட்டுமின்றி ஒவ்வொரு ஞாயிறு அன்றும் மாலையிலும் பக்தி பாடல் நிகழ்ச்சி இங்கு நடைபெறுகிறது.

இங்கு ஒரு சிறப்பு என்னவெனில்- தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு சுப்ரபாதத்தை கோவில் பெரியவர்களே பாடி மகிழ்கிறார்கள்- ஒலி நாடா ஒலிப்பதில்லை.

திருப்பதிக்குச் சென்று வெங்கடேசப் பெருமானை கண்டு களித்து, மகிழ்ந்து அருள் பெற இயலாத பலர் இந்த மையத்திற்கு வந்து வெங்கடாஜலபதியை நாள் தோறும் தரிசனம் செய்து அருள் பெறுகின்றனர்.

நடை திறக்கும் நேரம்:

தினமும் காலை முதல் மணி வரையும் மாலை முதல் மணி வரையும் திறந்திருக்கும்.மேலும் ஒவ்வொரு ஞாயிறும் காலை ஐந்து மணிக்கே நடை திறந்திருக்கும்.

போக்குவரத்து வசதி:

இந்த கோவிலுக்கு செல்ல அனைத்து பகுதிகளில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது. தி.நகர் செல்லும் அனைத்து பேருந்துகளும் இந்த கோவிலுக்கு செல்லும்.

சென்னையில் ஒரு திருப்பதி

ஸ்தல வரலாறு:

திருமலை திருப்பதி தேவஸ்தான செய்தி மையம் தி.நகரில் இயங்குகிறது. இம்மையம் 1969 ஆண்டு முதல் இயங்குகிறது. இது பக்த பெருமக்களால் வெங்கடேஸ்வரா கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு வெங்கடாஜலபதி சுவாமிக்கு சிலை இல்லை. ஆனால் அதை வேலைப்பாடுடன் கூடிய வெங்கடாஜலபதி ஆஜானுபாகுவாக உள்ளார். இது ஒரு தரிசன கூடம். அவ்வளவே.

வழிபாடுகள்:

வெங்கடாஜலபதியின் பிறந்த நட்சத்திரமான ஸ்ரவண நட்சத்திரம் வரும் நாளில் இங்கு மாதா மாதம் பக்தி பாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது மட்டுமின்றி ஒவ்வொரு ஞாயிறு அன்றும் மாலையிலும் பக்தி பாடல் நிகழ்ச்சி இங்கு நடைபெறுகிறது.

இங்கு ஒரு சிறப்பு என்னவெனில்- தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு சுப்ரபாதத்தை கோவில் பெரியவர்களே பாடி மகிழ்கிறார்கள்- ஒலி நாடா ஒலிப்பதில்லை.

திருப்பதிக்குச் சென்று வெங்கடேசப் பெருமானை கண்டு களித்து, மகிழ்ந்து அருள் பெற இயலாத பலர் இந்த மையத்திற்கு வந்து வெங்கடாஜலபதியை நாள் தோறும் தரிசனம் செய்து அருள் பெறுகின்றனர்.

நடை திறக்கும் நேரம்:

தினமும் காலை முதல் மணி வரையும் மாலை முதல் மணி வரையும் திறந்திருக்கும்.மேலும் ஒவ்வொரு ஞாயிறும் காலை ஐந்து மணிக்கே நடை திறந்திருக்கும்.

போக்குவரத்து வசதி:

இந்த கோவிலுக்கு செல்ல அனைத்து பகுதிகளில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது. தி.நகர் செல்லும் அனைத்து பேருந்துகளும் இந்த கோவிலுக்கு செல்லும்.

ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது காணிப்பாக்கம் என்ற ஊர். இங்குள்ள வரசித்தி விநாயகர் கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. இங்கு விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு விநாயகர் சுயம்புவாக தோன்றிய கிணறு இப்போதும் உள்ளது.

இங்கிருந்து எடுக்கப்படும் நீர் தான் இங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது. வழிபாடு: இங்கு நடைபெறும் சத்தியப் பிரமாணம் நிகழ்ச்சி புகழ்பெற்றது. தினமும் மாலையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தவறு செய்தவர்களை விநாயகர் முன்பு சத்தியம் செய்யச் சொல்கிறார்கள்.

பொய் சத்தியம் செய்தால் கடவுள் தண்டிப்பார் என்று பயந்து உண்மையை ஒப்புக்கொண்டு விடுகிறார்கள். மிகச் சிலரே பொய் சத்தியம் செய்கிறார்கள். அப்படி பொய் சத்தியம் செய்வோரை இந்த விநாயகர் கடுமையாக தண்டிப்பார் என்று இங்கு வரும் பக்தர்கள் கூறுகிறார்கள்.

ஸ்தல வரலாறு:

முன்னொரு காலத்தில் இந்தப் பகுதியில் வாய் பேச முடியாத, பார்க்க முடியாத, கேட்க முடியாத மூன்று சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். விவசாயம் செய்து வந்த அவர்களுக்கு, தங்களது உடல்குறைபாடுகளால் விவசாயத்தை சிறப்பாக செய்ய முடியவில்லை.

பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. ஊமையாக இருப்பவர் சைகை மூலம் உரம் போடு என்றால், செவிடாக இருப்பவர் தவறாக புரிந்து கொண்டு களை பறிக்க சென்று விடுவார். இவர்கள் மீது இறைவன் இரக்கம் கொண்டான். ஒருமுறை சகோதரர்கள் கிணற்றில் நீர் இறைத்து கொண்டிருந்தனர்.

தண்ணீர் வற்றிப் போனதால், கிணற்றை மேலும் தோண்டினர். அப்போது ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டது. உள்ளே கவனித்தபோது, அங்கே சுயம்பு வடிவில் விநாயகப் பெருமான் காட்சித் தந்தார். அவரது திருமேனியில் இருந்து ரத்தம் கசிந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த ஊர் மக்கள் அங்கு திரண்டனர். சிலையை வெளியே எடுக்க முயற்சித்தபோது அவர்களுக்கு தோல்விதான் கிடைத்தது. வேறு வழி தெரியாத அவர்கள் கிணற்றுக்குள் இருந்த நிலையிலேயே விநாயகரின் திருமேனிக்கு ஏராளமான இளநீர் கொண்டு அபிஷேகம் செய்தனர்.

அந்த இளநீர் அருகில் இருந்த காணி நிலத்திற்குள் பாய்ந்தது. அதனால் அந்த ஊருக்கு காணிப்பாக்கம் என்ற பெயர் ஏற்பட்டது. பிறகு கிணற்றுக்குள்ளேயே விநாயகர் இருந்த இடத்தைச் சுற்றி சன்னதி எழுப்பினர். நீண்ட காலத்திற்கு பின் தற்போதுள்ள கோவில் உருவானது.

இந்தியாவின் மிகப்பெரிய விநாயகர் கோவில்களுள் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து வசதி:

இந்த கோவிலுக்கு செல்ல சித்தூர் சென்று பின் அங்கிருந்து தான் இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சித்தூர் செல்ல பேருந்து வசதி உள்ளது. சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இந்த கோவிலுக்கு செல்ல ரெயில் வசதி உள்ளது.

சத்தியம் காக்கும் வரசித்தி விநாயகர் கோவில்

ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது காணிப்பாக்கம் என்ற ஊர். இங்குள்ள வரசித்தி விநாயகர் கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. இங்கு விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு விநாயகர் சுயம்புவாக தோன்றிய கிணறு இப்போதும் உள்ளது.

இங்கிருந்து எடுக்கப்படும் நீர் தான் இங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது. வழிபாடு: இங்கு நடைபெறும் சத்தியப் பிரமாணம் நிகழ்ச்சி புகழ்பெற்றது. தினமும் மாலையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தவறு செய்தவர்களை விநாயகர் முன்பு சத்தியம் செய்யச் சொல்கிறார்கள்.

பொய் சத்தியம் செய்தால் கடவுள் தண்டிப்பார் என்று பயந்து உண்மையை ஒப்புக்கொண்டு விடுகிறார்கள். மிகச் சிலரே பொய் சத்தியம் செய்கிறார்கள். அப்படி பொய் சத்தியம் செய்வோரை இந்த விநாயகர் கடுமையாக தண்டிப்பார் என்று இங்கு வரும் பக்தர்கள் கூறுகிறார்கள்.

ஸ்தல வரலாறு:

முன்னொரு காலத்தில் இந்தப் பகுதியில் வாய் பேச முடியாத, பார்க்க முடியாத, கேட்க முடியாத மூன்று சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். விவசாயம் செய்து வந்த அவர்களுக்கு, தங்களது உடல்குறைபாடுகளால் விவசாயத்தை சிறப்பாக செய்ய முடியவில்லை.

பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. ஊமையாக இருப்பவர் சைகை மூலம் உரம் போடு என்றால், செவிடாக இருப்பவர் தவறாக புரிந்து கொண்டு களை பறிக்க சென்று விடுவார். இவர்கள் மீது இறைவன் இரக்கம் கொண்டான். ஒருமுறை சகோதரர்கள் கிணற்றில் நீர் இறைத்து கொண்டிருந்தனர்.

தண்ணீர் வற்றிப் போனதால், கிணற்றை மேலும் தோண்டினர். அப்போது ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டது. உள்ளே கவனித்தபோது, அங்கே சுயம்பு வடிவில் விநாயகப் பெருமான் காட்சித் தந்தார். அவரது திருமேனியில் இருந்து ரத்தம் கசிந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த ஊர் மக்கள் அங்கு திரண்டனர். சிலையை வெளியே எடுக்க முயற்சித்தபோது அவர்களுக்கு தோல்விதான் கிடைத்தது. வேறு வழி தெரியாத அவர்கள் கிணற்றுக்குள் இருந்த நிலையிலேயே விநாயகரின் திருமேனிக்கு ஏராளமான இளநீர் கொண்டு அபிஷேகம் செய்தனர்.

அந்த இளநீர் அருகில் இருந்த காணி நிலத்திற்குள் பாய்ந்தது. அதனால் அந்த ஊருக்கு காணிப்பாக்கம் என்ற பெயர் ஏற்பட்டது. பிறகு கிணற்றுக்குள்ளேயே விநாயகர் இருந்த இடத்தைச் சுற்றி சன்னதி எழுப்பினர். நீண்ட காலத்திற்கு பின் தற்போதுள்ள கோவில் உருவானது.

இந்தியாவின் மிகப்பெரிய விநாயகர் கோவில்களுள் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து வசதி:

இந்த கோவிலுக்கு செல்ல சித்தூர் சென்று பின் அங்கிருந்து தான் இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சித்தூர் செல்ல பேருந்து வசதி உள்ளது. சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இந்த கோவிலுக்கு செல்ல ரெயில் வசதி உள்ளது.

ஸ்தல வரலாறு::

திருவல்லிக்கேணி கடற்கரையில் சீரணியரங்கம் அருகாமையில் அமைந்துள்ளது இவ்வாலயம். கடந்த ஆறு வருடங்களுக்கு முன் மீனவர்கள் சிலர் கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த போது நடுக்கடலில் இங்குள்ள அம்மன் சிலையைக் கண்டுள்ளார்கள்.

பின்னர் இவ்வம்மன் சிலையை கொண்டு வந்து கோயிலமைத்து கொண்டாடி வருகிறார்கள். இக்கோயிலில் அம்மனின் சிலை தெய்வ கடாட்சத்துடன் விளங்குகிறது.

ஐந்து தலை கொண்ட நாகம் குடைபிடிக்க கிரீடத்தில் பிறை சந்திரன் சுடர்விட, சிரசு மட்டும் கடலலைகளையும், சூரிய சந்திரர்களையும் ஆசிர்வதிக்கும் படியான வகையில் அன்னை ஸ்ரீதேவி கடல்கன்னி முத்து மாரியம்மன் அழகே வடிவாக அருள்பாவிக்கிறாள்.

போக்குவரத்து வசதி::

இந்த கோவில் திருவல்லிக்கேணி கடற்கரையில் சீரணியரங்கம் அருகில் அமைந்துள்ளது.திருவல்லிக்கேணிக்கு செல்ல அனைத்து பகுதிகளிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது.

ஸ்ரீதேவி கடல் கன்னி முத்துமாரியம்மன் ஆலயம்

ஸ்தல வரலாறு::

திருவல்லிக்கேணி கடற்கரையில் சீரணியரங்கம் அருகாமையில் அமைந்துள்ளது இவ்வாலயம். கடந்த ஆறு வருடங்களுக்கு முன் மீனவர்கள் சிலர் கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த போது நடுக்கடலில் இங்குள்ள அம்மன் சிலையைக் கண்டுள்ளார்கள்.

பின்னர் இவ்வம்மன் சிலையை கொண்டு வந்து கோயிலமைத்து கொண்டாடி வருகிறார்கள். இக்கோயிலில் அம்மனின் சிலை தெய்வ கடாட்சத்துடன் விளங்குகிறது.

ஐந்து தலை கொண்ட நாகம் குடைபிடிக்க கிரீடத்தில் பிறை சந்திரன் சுடர்விட, சிரசு மட்டும் கடலலைகளையும், சூரிய சந்திரர்களையும் ஆசிர்வதிக்கும் படியான வகையில் அன்னை ஸ்ரீதேவி கடல்கன்னி முத்து மாரியம்மன் அழகே வடிவாக அருள்பாவிக்கிறாள்.

போக்குவரத்து வசதி::

இந்த கோவில் திருவல்லிக்கேணி கடற்கரையில் சீரணியரங்கம் அருகில் அமைந்துள்ளது.திருவல்லிக்கேணிக்கு செல்ல அனைத்து பகுதிகளிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது.

ஸ்தல வரலாறு::

குரோம்பேட்டையில் லக்ஷ்மிபுரம்-பச்சைமலை அடிவாரத்தில் ஸ்ரீநவசக்தி சுயம்பு துர்க்கையம்மன் ஆலயம் உள்ளது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னதாக இப்பகுதியில் ஓர் விவசாயி தம் நிலத்தில் ஏர் உழுதுக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அவரது ஏர்க்கால் உடைந்து போக, அப்பகுதியில் இருந்த ஒரு கல்லில் இருந்து தொடர்ந்து ரத்தம் கசிய ஆரம்பித்தது. இந்த அதிசயத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். ரத்தம் கசிந்தது வெறும் கல் அல்ல.

அன்னை நவசக்தி துர்க்கையம்மனின் சுயம்பு மேனி திருவுருவம் என்று தெரிய வந்தது ஆம்! அன்னையே இங்கு சுயம்புவாக எழுந்தளிருயுள்ளாள். அன்னையின் சுயம்புவாக எழுந்தருளியுள்ளாள்.

அன்னையின் சுயம்புத் திருமேனி ஆரம்பத்தில் சாதாரணமாக காட்சியளித்தாலும் பின்னர் அவளது அருட்கடாட்சத்தால் கண், காது, மூக்கு என்று ஒவ்வொன்றாய் தோன்ற ஆரம்பித்து தற்போது பூரண உருவுடன் பக்தர்களுக்கு காட்சியளித்து அருளாட்சி செய்து வருகிறாள்.

இவ்வன்னையை நினைத்து செய்யப்படும் காரியங்கள் அனைத்தும் வெகு சிறப்புடன் எந்தத் தடங்கலும் இன்றி நடை பெறுகின்றன என்பது பக்தர்களின் அனுபவமாக இருந்து வருகிறது.

போக்குவரத்து வசதி::

இந்த கோவிலுக்கு செல்ல சென்னையில் அனைத்து பகுதியில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது.

ஸ்ரீநவசக்தி துர்க்கையம்மன் கோவில்

ஸ்தல வரலாறு::

குரோம்பேட்டையில் லக்ஷ்மிபுரம்-பச்சைமலை அடிவாரத்தில் ஸ்ரீநவசக்தி சுயம்பு துர்க்கையம்மன் ஆலயம் உள்ளது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னதாக இப்பகுதியில் ஓர் விவசாயி தம் நிலத்தில் ஏர் உழுதுக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அவரது ஏர்க்கால் உடைந்து போக, அப்பகுதியில் இருந்த ஒரு கல்லில் இருந்து தொடர்ந்து ரத்தம் கசிய ஆரம்பித்தது. இந்த அதிசயத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். ரத்தம் கசிந்தது வெறும் கல் அல்ல.

அன்னை நவசக்தி துர்க்கையம்மனின் சுயம்பு மேனி திருவுருவம் என்று தெரிய வந்தது ஆம்! அன்னையே இங்கு சுயம்புவாக எழுந்தளிருயுள்ளாள். அன்னையின் சுயம்புவாக எழுந்தருளியுள்ளாள்.

அன்னையின் சுயம்புத் திருமேனி ஆரம்பத்தில் சாதாரணமாக காட்சியளித்தாலும் பின்னர் அவளது அருட்கடாட்சத்தால் கண், காது, மூக்கு என்று ஒவ்வொன்றாய் தோன்ற ஆரம்பித்து தற்போது பூரண உருவுடன் பக்தர்களுக்கு காட்சியளித்து அருளாட்சி செய்து வருகிறாள்.

இவ்வன்னையை நினைத்து செய்யப்படும் காரியங்கள் அனைத்தும் வெகு சிறப்புடன் எந்தத் தடங்கலும் இன்றி நடை பெறுகின்றன என்பது பக்தர்களின் அனுபவமாக இருந்து வருகிறது.

போக்குவரத்து வசதி::

இந்த கோவிலுக்கு செல்ல சென்னையில் அனைத்து பகுதியில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது.

ஸ்தல வரலாறு::

விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயர் காலத்தில் ஆந்திரா மாநிலத்தில் இருந்த ராஜாக்கள் இனத்தை சேர்ந்தவர்களில் சிலர் ராஜபாளையம் பகுதிக்கு வந்து குடியேறினர்.

அவர்கள் அங்கு வந்தபோது தாங்கள் வழிபடுவதற்காக ஒரு ராமர் சிலையை கையோடு எடுத்து வந்தனர். அந்த சிலையை ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்து சிறிய கோவில் எழுப்பினர்.

காலப்போக்கில் அந்த கோவில் விரிவாக்கம் செய்யப்பட்டு தற்போது அழகிய சிற்பங்கள் கொண்ட கோவிலாக காட்சியளிக்கிறது. இங்குள்ள ராமர் வில் (கோதண்டம்) ஏந்தி இருப்பதால் `கோதண்டராமர்' என்று அழைக்கப்படுகிறார்.

ராமருக்கு அருகில் புன்னகை காட்டிய முகத்துடன் அவரது மனைவி சீதையும், தம்பி லட்சுமணரும் உள்ளனர். அனுமன் இவர்களுக்கு முன்பு இருகை கூப்பி வணங்கிய நிலையில் காணப்படுகிறார்.

பொதுவாக பெருமாள் கோவில்களில் சுவாமிக்கு இடது பக்கம்தான் தாயார் வீற்றிருப்பார். ஆனால் இந்த கோவிலில் கோதண்டராமருக்கு வலது பக்கம் சீதை வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்.

ராமருக்கு வலதுபக்கம் சீதாதேவி வீற்றிருப்பதால் அவருக்கு கூடுதல் சக்தி உண்டு என்கிறார்கள். இவரை வணங்கினால் கைக்கூடாத காரியமே இல்லை என்று கூறி மெய்சிலிர்க்கிறார்கள் இங்கு வரும் பக்தர்கள்.

போக்குவரத்து வசதி::

இந்த கோவிலுக்கு செல்ல தனியார் மற்றும் அரசு பேருந்து வசதி உள்ளது.ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் சென்று பின் அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் உள்ளது.

கோதண்டராமர் கோவில்

ஸ்தல வரலாறு::

விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயர் காலத்தில் ஆந்திரா மாநிலத்தில் இருந்த ராஜாக்கள் இனத்தை சேர்ந்தவர்களில் சிலர் ராஜபாளையம் பகுதிக்கு வந்து குடியேறினர்.

அவர்கள் அங்கு வந்தபோது தாங்கள் வழிபடுவதற்காக ஒரு ராமர் சிலையை கையோடு எடுத்து வந்தனர். அந்த சிலையை ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்து சிறிய கோவில் எழுப்பினர்.

காலப்போக்கில் அந்த கோவில் விரிவாக்கம் செய்யப்பட்டு தற்போது அழகிய சிற்பங்கள் கொண்ட கோவிலாக காட்சியளிக்கிறது. இங்குள்ள ராமர் வில் (கோதண்டம்) ஏந்தி இருப்பதால் `கோதண்டராமர்' என்று அழைக்கப்படுகிறார்.

ராமருக்கு அருகில் புன்னகை காட்டிய முகத்துடன் அவரது மனைவி சீதையும், தம்பி லட்சுமணரும் உள்ளனர். அனுமன் இவர்களுக்கு முன்பு இருகை கூப்பி வணங்கிய நிலையில் காணப்படுகிறார்.

பொதுவாக பெருமாள் கோவில்களில் சுவாமிக்கு இடது பக்கம்தான் தாயார் வீற்றிருப்பார். ஆனால் இந்த கோவிலில் கோதண்டராமருக்கு வலது பக்கம் சீதை வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்.

ராமருக்கு வலதுபக்கம் சீதாதேவி வீற்றிருப்பதால் அவருக்கு கூடுதல் சக்தி உண்டு என்கிறார்கள். இவரை வணங்கினால் கைக்கூடாத காரியமே இல்லை என்று கூறி மெய்சிலிர்க்கிறார்கள் இங்கு வரும் பக்தர்கள்.

போக்குவரத்து வசதி::

இந்த கோவிலுக்கு செல்ல தனியார் மற்றும் அரசு பேருந்து வசதி உள்ளது.ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் சென்று பின் அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் உள்ளது.

ஸ்தல வரலாறு::

புனித நகரமான காஞ்சீபுரத்தில் ஸ்ரீகர்ணகி அம்பாள் சமேத ஸ்ரீசித்ரகுப்தசுவாமி கோயில் உள்ளது.

பூமியில் கண்டெடுக்கப்பட்ட சிலை::

1907-ல் கோயில் திருப்பணி மேற்கொண்ட போது பூமிக்கடியில் தோண்டும் போது மதில்கள் மற்றும் கட்டிடங்கள் தெரிந்தது. அந்த கட்டிடத்தினுள்ளே ஒரே பீடத்தில் அமைந்த அம்பாள் சதேமராக சித்ரகுப்தா சிலை ஒன்று கிடைத்தது. இதனுடைய காலம் சரியாக தெரியவில்லை.

பூமியில் கண்டெடுக்கப்பட்ட சிலையினை கருவறையில் வைத்துள்ளனர். ஆனால், சென்னி வளவன் என்ற பிற்கால சோழ மன்னனின் காலத்தில் அமைச்சராக இருந்த துலாபார மண்டபம் கனகராயரால் செய்யப்பட்ட உற்சவரும், அம்பாளும் தனித்தனியாக உள்ளது. இதுவே, பூஜையில் இருந்து வீதியுலா வருகின்றது.

சிறப்பு பூஜைகள்::

சித்ரா பௌர்ணமியன்று நவகலச பூஜை, திருக்கல்யாண உற்சவம், அன்னதானம் நடைபெற்று வருகின்றது. நவக்கிரகங்களில் எட்டு கிரகங்கள் 1962-ஆம் ஆண்டு தை மாதம் இரண்டரை நாட்கள் 8 கிரகங்களும் ஒரே வீட்டில், அதாவது மகர ராசியில் இருந்தபோது, உலக நன்மைக்காக வெகுசிறப்பாக சிறப்பு பூஜைகள் நடந்துள்ளது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீசித்ரகுப்த சுவாமியின் வரலாறு::

ஸ்ரீசித்ரகுப்த சுவாமியின் வரலாறு மூன்று விதமாக கூறப்படுகிறது. பார்வதி அம்பாம் சித்திரம் எழுதி உயிர் கொடுத்தார். சித்திரத்தில் உயிர் பெற்றதினால் சித்ரகுப்தா எனப் பெயர் பெற்றார்.

காமதேனுள்ள வயிற்றில் உதித்தார் என்றும் அதனால் பசும்பால், பசும் தயிர் இவருக்கு அபிஷேகம் நைவேத்யம் செய்யக் கூடாது, எருமைப் பால், எருமை தயிர் தான் அபிஷேகம் நைவேத்யம் செய்ய வேண்டும் என்று சிலர் கூறுவர்.

சித் என்றால் மனம், அப்தம் என்றால் மறைவு, மனிதனுடைய மனதில் மறைவாக இருக்கக் கூடிய எண்ணங்களை எழுதி அதன் மூலம் அவர்களின் வாழ்க்கை முறைகளை அமைத்து தருகின்றார்.

அதனால் சித்ரகுப்தா என்று பெயர். தனியொரு நபராக கோடிக் கணக்கான மக்களின் பாவ, புண்ணியங்களை மேற்கொள்ளும் பணி கடினமாக இருக்கவே, ஈசனிடம் எமதர்மன் வேண்டிக் கொள்ளும் பொருட்டு அருகில் நின்றிருந்த பிரம்மனிடம் எமதர்மனுக்கு ஒரு உதவியாளரை தர வேண்டியது உமது பொறுப்பு என்றார்.

இதனை எமனின் தந்தையான சூரிய பகவானுக்குத் தான் அச்செயலை ஈடேற்றும்படி செய்ய இயலும் என அறிந்த பிரம்மா, சூரியனுக்குள்ளே ஓர் அக்னியை தோற்றுவித்தார். மனதுக்குள் புகுந்த மாயத்தால் காதல் ஏற்பட்டது.

அதன் பொருட்டு சூரியன் வானில் சஞ்சரிக்கும் போது எதிர்ப்பட்ட வானவில்லை ஏழு வண்ணங்களை ஒருங்கிணைத்து ஒரு பெண்ணாக உருமாற்றி அப்பெண்ணை நீனாதேவி என்றும் பெயரிட்டு அவளுடன் வாழ்ந்து வந்தார்.

அதன் காரணமாக ஒரு சித்திரைத் திங்களில், பௌர்ணமி நாளில் பிறந்த புத்திரனுக்கு சித்திரபுத்திரன் என்று பெயரிட்டனர். அக்குழந்தையின் இடக்கையில் ஏடும், வலக்கையில் எழுத்தாணியுமாக தோன்றினார். பல வண்ணங்களை உணர்த்தும் பொருட்டுத் தான் சித்ரகுப்தருக்கு பல வண்ண துணியை சாற்றுவார்கள்.

சித்ர குப்தர் காஞ்சியில் சிவபெருமானை கடுமையாக பூஜை செய்தார். அதன் பயனாக அறிவாற்றாலும், எல்லா சித்திகளும் கிடைத்தன. ஆகவே, தனது சக்தியினை சோதிக்க விரும்பியதால், படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் போது, பிரம்மன் உட்பட அனைவரும் அதிர்ந்தனர்.

இதனை சூரியனிடம் தெரிவித்தனர். உடனே சூரியன் மகனிடம் மக்களின் இரவு, பகல் என்று பொழுதினை கணக்கிட்டு, மக்களின் வாழ்க்கையை நடைமுறைப்படுத்துபவன் நான். அதே போல நீயும் மக்களின் கணக்கினை, அதிலும் பாவ புண்ணியத்தை கணக்கெடுப்பாயாக படைப்புத்தொழில் உனக்கன்று,அது பிரம்மனின் தொழில் என அறிவுறுத்தினார்.

மேலும், மகனுக்கு திருமணம் செய்தால் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வருவான் என்பதனை உணர்ந்த சூரியன், சித்ரகுப்தருக்கு மனைவியாக வரவேண்டி தவம் இயற்றிய கன்னியர்களான சிவாம்சத்தில் உதித்து சத்ரிய தர்மத்தை வகித்த மயப்பிரம்மனின் பெண் பிரபாவதி,மனுப்பிரம்மனின் மகள் நீலாவதி, அந்தணர் தர்மத்தை வகித்த விஸ்வப் பிரம்மாவின் மகளான கர்ணகி ஆகிய மூவருமே தன் மகனுக்கு ஏற்ற மனைவியர் என்று திருமணம் செய்வித்தார்.

(இந்த ஆலயத்தில் கர்ணகி அம்பாள் மட்டும் தான் உள்ளார்). சித்ரகுப்தன் பணியினை மறந்து சந்தோஷமாக குடும்பம் நடத்தியதில் கலவரம் அடைந்த எமதர்மன் நேராக தந்தை சூரியனிடம் சென்று தன் குறையை விளக்கினார்.

சித்ர குப்தனின் பொறுப்புகளை விளக்கி எமதர்மனுக்கு உதவி புரிய அனுப்பி வைத்தார். தன் மனைவியருடன் எமபுரிக்கு புறப்பட்ட சித்ரகுப்தர் அங்கே அமர்ந்து மக்களின் பாவ, புண்ணிய கணக்குகளை எந்த தவறும் வராதபடி இப்பொழுதும் கணக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்.

நல்ல பலன்கள் தருபவர்::

ஞானத்திற்கும், மோட்சத்திற்கும் சித்ரகுப்தர் அதிபதி நவக்கிரகத்தில் கேது கிரகம் ஞானத்திற்கும், மோட்சத்திற்கும் காரகத்தின் அதிதேவதை சித்ரகுப்தர் ஆகிறார். கேது திசை, புத்தி, அந்தரம் மற்றும் கேதுவினால் வரும் தோஷங்கள், பூர்வ ஜென்ம பாவங்கள், தடைபடும் திருமணம், மக்கட்செல்வம் கிடைக்க, மனக்குழப்பம் அகல இவர் துணை புரிகிறார்.

ஆயுள்பாவ தோஷங்கள், கடன்கள், வழக்குகள் போன்ற கெட்ட பலன்கள் நீங்க, இவரை வழிபடுவதால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. இத்தகைய சக்தி வாய்ந்த சித்ரகுப்தருக்கு என்று தனிக்கோயில் பழமை வாய்ந்த அற்புத திருக்கோயில் காஞ்சிபுரத்தில் மட்டுமே உள்ளது.

இத்திருக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் நிர்வாகத் திட்டப்படி அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அறங்காவலர்கள் மற்றும் செயல் அலுவலர் மூலம் நிர்வாகம் செய்யப்படுகிறது. ஆருத்ரா உற்சவம் சித்ரா பவுர்ணமி திருக்கல்யாண உற்சவம் சித்ரா பவுர்ணமி திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

வழிபாட்டு முறை::

சித்திரை பவுர்ணமியில் சித்ர குப்தருக்கு விரதமிருந்தால் விசேஷம், அன்று சித்ரகுப்தரை தரிசத்து அருள் பெறுவது வெகு சிறப்பாகும். 7 தீபம் ஏற்றி, 7 பிரதட்சணம் செய்து வழிபடுவது சிறப்பாகும்.

மேலும் 200 கிராம் கொள்ளு, 200 கிராம் உளுந்து, 1 மீட்டர் பூ போட்ட பல வர்ண துணி சித்ரகுப்தருக்கு சாற்றி அர்ச்சனை செய்து கொள்ளு, உளுந்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் பால் கறக்கும் பசுவிற்கு தானம் கொடுக்க அனைத்து தோஷங்களும் நீங்கும்.

போக்குவரத்து வசதி::

இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ் வசதி உள்ளது.மேலும் எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்ல ரெயில் வசதியும் உள்ளது.

சித்ரகுப்தர் கோவில்

ஸ்தல வரலாறு::

புனித நகரமான காஞ்சீபுரத்தில் ஸ்ரீகர்ணகி அம்பாள் சமேத ஸ்ரீசித்ரகுப்தசுவாமி கோயில் உள்ளது.

பூமியில் கண்டெடுக்கப்பட்ட சிலை::

1907-ல் கோயில் திருப்பணி மேற்கொண்ட போது பூமிக்கடியில் தோண்டும் போது மதில்கள் மற்றும் கட்டிடங்கள் தெரிந்தது. அந்த கட்டிடத்தினுள்ளே ஒரே பீடத்தில் அமைந்த அம்பாள் சதேமராக சித்ரகுப்தா சிலை ஒன்று கிடைத்தது. இதனுடைய காலம் சரியாக தெரியவில்லை.

பூமியில் கண்டெடுக்கப்பட்ட சிலையினை கருவறையில் வைத்துள்ளனர். ஆனால், சென்னி வளவன் என்ற பிற்கால சோழ மன்னனின் காலத்தில் அமைச்சராக இருந்த துலாபார மண்டபம் கனகராயரால் செய்யப்பட்ட உற்சவரும், அம்பாளும் தனித்தனியாக உள்ளது. இதுவே, பூஜையில் இருந்து வீதியுலா வருகின்றது.

சிறப்பு பூஜைகள்::

சித்ரா பௌர்ணமியன்று நவகலச பூஜை, திருக்கல்யாண உற்சவம், அன்னதானம் நடைபெற்று வருகின்றது. நவக்கிரகங்களில் எட்டு கிரகங்கள் 1962-ஆம் ஆண்டு தை மாதம் இரண்டரை நாட்கள் 8 கிரகங்களும் ஒரே வீட்டில், அதாவது மகர ராசியில் இருந்தபோது, உலக நன்மைக்காக வெகுசிறப்பாக சிறப்பு பூஜைகள் நடந்துள்ளது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீசித்ரகுப்த சுவாமியின் வரலாறு::

ஸ்ரீசித்ரகுப்த சுவாமியின் வரலாறு மூன்று விதமாக கூறப்படுகிறது. பார்வதி அம்பாம் சித்திரம் எழுதி உயிர் கொடுத்தார். சித்திரத்தில் உயிர் பெற்றதினால் சித்ரகுப்தா எனப் பெயர் பெற்றார்.

காமதேனுள்ள வயிற்றில் உதித்தார் என்றும் அதனால் பசும்பால், பசும் தயிர் இவருக்கு அபிஷேகம் நைவேத்யம் செய்யக் கூடாது, எருமைப் பால், எருமை தயிர் தான் அபிஷேகம் நைவேத்யம் செய்ய வேண்டும் என்று சிலர் கூறுவர்.

சித் என்றால் மனம், அப்தம் என்றால் மறைவு, மனிதனுடைய மனதில் மறைவாக இருக்கக் கூடிய எண்ணங்களை எழுதி அதன் மூலம் அவர்களின் வாழ்க்கை முறைகளை அமைத்து தருகின்றார்.

அதனால் சித்ரகுப்தா என்று பெயர். தனியொரு நபராக கோடிக் கணக்கான மக்களின் பாவ, புண்ணியங்களை மேற்கொள்ளும் பணி கடினமாக இருக்கவே, ஈசனிடம் எமதர்மன் வேண்டிக் கொள்ளும் பொருட்டு அருகில் நின்றிருந்த பிரம்மனிடம் எமதர்மனுக்கு ஒரு உதவியாளரை தர வேண்டியது உமது பொறுப்பு என்றார்.

இதனை எமனின் தந்தையான சூரிய பகவானுக்குத் தான் அச்செயலை ஈடேற்றும்படி செய்ய இயலும் என அறிந்த பிரம்மா, சூரியனுக்குள்ளே ஓர் அக்னியை தோற்றுவித்தார். மனதுக்குள் புகுந்த மாயத்தால் காதல் ஏற்பட்டது.

அதன் பொருட்டு சூரியன் வானில் சஞ்சரிக்கும் போது எதிர்ப்பட்ட வானவில்லை ஏழு வண்ணங்களை ஒருங்கிணைத்து ஒரு பெண்ணாக உருமாற்றி அப்பெண்ணை நீனாதேவி என்றும் பெயரிட்டு அவளுடன் வாழ்ந்து வந்தார்.

அதன் காரணமாக ஒரு சித்திரைத் திங்களில், பௌர்ணமி நாளில் பிறந்த புத்திரனுக்கு சித்திரபுத்திரன் என்று பெயரிட்டனர். அக்குழந்தையின் இடக்கையில் ஏடும், வலக்கையில் எழுத்தாணியுமாக தோன்றினார். பல வண்ணங்களை உணர்த்தும் பொருட்டுத் தான் சித்ரகுப்தருக்கு பல வண்ண துணியை சாற்றுவார்கள்.

சித்ர குப்தர் காஞ்சியில் சிவபெருமானை கடுமையாக பூஜை செய்தார். அதன் பயனாக அறிவாற்றாலும், எல்லா சித்திகளும் கிடைத்தன. ஆகவே, தனது சக்தியினை சோதிக்க விரும்பியதால், படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் போது, பிரம்மன் உட்பட அனைவரும் அதிர்ந்தனர்.

இதனை சூரியனிடம் தெரிவித்தனர். உடனே சூரியன் மகனிடம் மக்களின் இரவு, பகல் என்று பொழுதினை கணக்கிட்டு, மக்களின் வாழ்க்கையை நடைமுறைப்படுத்துபவன் நான். அதே போல நீயும் மக்களின் கணக்கினை, அதிலும் பாவ புண்ணியத்தை கணக்கெடுப்பாயாக படைப்புத்தொழில் உனக்கன்று,அது பிரம்மனின் தொழில் என அறிவுறுத்தினார்.

மேலும், மகனுக்கு திருமணம் செய்தால் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வருவான் என்பதனை உணர்ந்த சூரியன், சித்ரகுப்தருக்கு மனைவியாக வரவேண்டி தவம் இயற்றிய கன்னியர்களான சிவாம்சத்தில் உதித்து சத்ரிய தர்மத்தை வகித்த மயப்பிரம்மனின் பெண் பிரபாவதி,மனுப்பிரம்மனின் மகள் நீலாவதி, அந்தணர் தர்மத்தை வகித்த விஸ்வப் பிரம்மாவின் மகளான கர்ணகி ஆகிய மூவருமே தன் மகனுக்கு ஏற்ற மனைவியர் என்று திருமணம் செய்வித்தார்.

(இந்த ஆலயத்தில் கர்ணகி அம்பாள் மட்டும் தான் உள்ளார்). சித்ரகுப்தன் பணியினை மறந்து சந்தோஷமாக குடும்பம் நடத்தியதில் கலவரம் அடைந்த எமதர்மன் நேராக தந்தை சூரியனிடம் சென்று தன் குறையை விளக்கினார்.

சித்ர குப்தனின் பொறுப்புகளை விளக்கி எமதர்மனுக்கு உதவி புரிய அனுப்பி வைத்தார். தன் மனைவியருடன் எமபுரிக்கு புறப்பட்ட சித்ரகுப்தர் அங்கே அமர்ந்து மக்களின் பாவ, புண்ணிய கணக்குகளை எந்த தவறும் வராதபடி இப்பொழுதும் கணக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்.

நல்ல பலன்கள் தருபவர்::

ஞானத்திற்கும், மோட்சத்திற்கும் சித்ரகுப்தர் அதிபதி நவக்கிரகத்தில் கேது கிரகம் ஞானத்திற்கும், மோட்சத்திற்கும் காரகத்தின் அதிதேவதை சித்ரகுப்தர் ஆகிறார். கேது திசை, புத்தி, அந்தரம் மற்றும் கேதுவினால் வரும் தோஷங்கள், பூர்வ ஜென்ம பாவங்கள், தடைபடும் திருமணம், மக்கட்செல்வம் கிடைக்க, மனக்குழப்பம் அகல இவர் துணை புரிகிறார்.

ஆயுள்பாவ தோஷங்கள், கடன்கள், வழக்குகள் போன்ற கெட்ட பலன்கள் நீங்க, இவரை வழிபடுவதால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. இத்தகைய சக்தி வாய்ந்த சித்ரகுப்தருக்கு என்று தனிக்கோயில் பழமை வாய்ந்த அற்புத திருக்கோயில் காஞ்சிபுரத்தில் மட்டுமே உள்ளது.

இத்திருக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் நிர்வாகத் திட்டப்படி அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அறங்காவலர்கள் மற்றும் செயல் அலுவலர் மூலம் நிர்வாகம் செய்யப்படுகிறது. ஆருத்ரா உற்சவம் சித்ரா பவுர்ணமி திருக்கல்யாண உற்சவம் சித்ரா பவுர்ணமி திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

வழிபாட்டு முறை::

சித்திரை பவுர்ணமியில் சித்ர குப்தருக்கு விரதமிருந்தால் விசேஷம், அன்று சித்ரகுப்தரை தரிசத்து அருள் பெறுவது வெகு சிறப்பாகும். 7 தீபம் ஏற்றி, 7 பிரதட்சணம் செய்து வழிபடுவது சிறப்பாகும்.

மேலும் 200 கிராம் கொள்ளு, 200 கிராம் உளுந்து, 1 மீட்டர் பூ போட்ட பல வர்ண துணி சித்ரகுப்தருக்கு சாற்றி அர்ச்சனை செய்து கொள்ளு, உளுந்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் பால் கறக்கும் பசுவிற்கு தானம் கொடுக்க அனைத்து தோஷங்களும் நீங்கும்.

போக்குவரத்து வசதி::

இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ் வசதி உள்ளது.மேலும் எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்ல ரெயில் வசதியும் உள்ளது.

சித்தர் கோவில்::

மேல்மருவத்தூரில் சுயம்பு வடிவத்தில் அன்னை எழுந்தருளியுள்ள இடத்தில் ஒரு பெரிய பெண் சித்தர் இருக்கின்றார். அவரே சித்தர்களின் தலைவியான ஆதிபராசக்தி ஆவாள். இந்த புண்ணிய பூமியில் ஒரு சித்தர் கூட்டமே உறைகின்றது. கோவிலின் வடபுறம் நஞ்சை நிலம் இருந்தது.

இந்த வயல் பகுதியில் இங்கு வந்து இரவில் தங்கும் பக்தர்களின் வசதியைக் கருதி, ஒரு கீற்றுக்கொட்டகையாவது அமைக்க வேண்டும் என சில அன்பர்கள் விரும்பினர். ஆனால் அந்த இடத்தில் கொட்டகை அமைக்க அன்னையின் உத்தரவு கிடைக்கவில்லை.

மேலும் அந்த நிலத்தின் அடியில் பல சித்தர்கள் இருப்பதாகவும் பங்காரு அடிகளார் தெரிவித்தார். எனவேதான் இந்த கோவிலை `சித்தர்பீடம்' என்று அழைத்தனர்.

பெண்களுக்கு முக்கியத்துவம்::

பெண்கள் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்யும் காட்சியை பிற கோவில்களில் காண முடியாது. மேலும் மாதவிலக்கு காலத்தில் அவர்கள் கோவிலுக்கு செல்வதும் இல்லை. மருவத்தூர் கோவிலில் இத்தகைய கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. ஆண்டு தோறும் பெண்களே கோவில் விழாவை கொண்டாடுகின்றனர். கருவறைக்குள் சென்று பூஜை செய்கின்றனர். மாதவிலக்கு என்பது வழக்கமாக வரும் உபாதை என்பதால் அதுபற்றியும் பெரிதுபடுத்தி பேச வேண்டியதில்லை என்று பங்காரு அடிகளார் கூறியிருக்கிறார்.

சமூக சேவை::

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் சார்பில் மருத்துவக்கல்லூரி, இன்ஜினியரிங் கல்லூரி, பாலிடெக்னிக் முதலியவை இயங்குகின்றன. பிரம்மாண்டமான ஆஸ்பத்திரி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் இலவசமாக உணவளிக்கப்படுகிறது. 2 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிட கூடம் இருக்கிறது.

இன்னல் தீர்க்கும் இருமுடி::

இருமுடி அணிவது உன் அழுக்கை நீக்கிக் கொள்ளவே! ஒன்று உன் அழுக்கு. இன்னொன்று உன் குடும்ப அழுக்கு. அந்த இரண்டு அழுக்குகளை நீக்கிக் கொள்ளவே அந்த இருமுடி என்பது அன்னையின் அருள்வாக்கு. உன் அழுக்கு என்பது குடும்பத் தலைவன் ஊழ்வினை.

குடும்ப அழுக்கு என்பது குடும்பத்துக்கு ஏற்பட்டுள்ள ஊழ்வினை. ஒரு குடும்பம் அல்லல் பட பல காரணங்கள் உண்டு. அவற்றை குடும்ப அழுக்கு என்கிறாள் அன்னை. அவற்றுள் சில...

1) பிதிர் சாபம், நாக சாபம், பெண் சாபம் - இவற்றால் வரும் கஷ்டங்கள்.

2) ஏவல், பில்லி, சூனியம் காரணமாக வரும் கஷ்டங்கள்.

3) வாஸ்து முறையில் கட்டப்படாத வீட்டில் வசிப்பதால் வரும் கஷ்டங்கள்.

4) தீய ஆவிகள், தீய சக்திகளின் ஆதிக்கத்தின் பிடியில் இருப்பதால் வரும் கஷடங்கள்.

5) தோஷமுள்ள மனையில் வசிப்பதால் வரும் கஷ்டங்கள்.

6) பிறர் கண் திருஷ்டியால் வரும் கஷ்டங்கள். இவையே குடும்ப அழுக்கு -இவற்றிலிருந்து விடுபடவே இருமுடி.

சித்திரா பவுர்ணமி வேள்வி::

ஒவ்வொரு ஆண்டும் சித்திரைப் பவுர்ணமியை ஒட்டி நம் சித்தர் பீடத்தில் மிகப்பெரிய அளவில் கலச விளக்கு வேள்விப் பூஜை நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் கோள்களின் இயக்கத்தாலும் மாற்றத்தாலும் ஏற்படுகிற பாதிப்புகளிலிருந்து விடுபடவும், தணித்துக் கொள்ளவும் இந்த வேள்வி நடத்தப்படுகிறது.

கோள்களின் சுழற்சியை ஒட்டித் தனிமனிதர் வாழ்விலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே உலக நன்மைக்கும் இயற்கைச் சூழலை ஒழுங்குப்படுத்தவும்,தனி மனிதர்கள் கிரகங்களினால் பாதிக்கப்படுவதிலிருந்து
விடுபடவும் இவ்வேள்வி நடத்தப்படுகிறது.

எனவே இல்வேள்வியில் கலந்து கொண்டு, யாக சாம்பலைப் பெற்று செல்லுங்கள். கலசங்களையும், விளக்குகளையும் வாங்கிச் சென்று வீட்டில் வைத்து வழிபாடு செய்யுங்கள்.

தாமரை பீடம்::

அன்னை ஆதிபராசக்தி அமர்ந்துள்ள தாமரை பீடம், `இருதய கமலம்', `நெஞ்சத்தாமரை' என்று கூறப்படுவது போல, உயிர்களின் நெஞ்சமே தன்னுடைய உறைவிடம் என்பதை உணர்த்துகிறது. தாமரை மலரின் புற இதழ்கள் மேல் நோக்கி உள்ளன.

நெஞ்சின் இரண்டு பகுதிகளை அக இதழும், புற இதழும் குறிக்கின்றன. இதனை அகமனம், புறமனம் என்றும் கூறலாம். நம் புறமனம் உலக இன்பங்களில் ஈடுபட்டு அமிழ்ந்து, கீழ்நோக்கி இருக்கிறது. அகமனம் அன்னையின் அருளை நாடி மேல்நோக்கி எழுவதைக் குறிக்கிறது. அன்னையின் இடக்கால் கீழ் நோக்கி புற இதழ்களின் மேல் படிந்துள்ளது.

அதாவது உலக இன்பங்களில் மூழ்கியுள்ள மக்கள் அழிந்து விடாமல் அவர்களை காக்க, அன்னை தனது திருவடிகளை தந்திருக்கிறாள் என புரிந்து கொள்ளலாம். தனது இடது திருவடியை ஊன்றியிருப்பதன் மூலம் தனக்கு மேற்பட்டவர்கள் யாரும் இல்லை என்பதற்கு அடையாளமாக காட்டப்பட்டிருக்கிறது. இந்த சிலையை மாமல்லபுரம் சிற்பக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் கணபதி ஸ்தபதி வடித்துள்ளார்.

சமுதாய மேம்பாட்டிற்காக::

ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மனித சமுதாய மேம்பாட்டிற்காக பாடுபட வேண்டும். ஆன்மிகத்தால் தான் அமைதியும், கட்டுப்பாடும் இருக்கும். ஆன்மிக நெறி மூலமாக ஒவ்வொருவனும் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டும். ஆன்மிகத்தில் ஐம்புலன்களை அடக்கும் தன்மையும், கட்டுப்பாடும் தேவை!

ஆதிபராசக்தி இயக்கத்தின் வழிபாடு::

பல்லாயிரம் ஆண்டுகளாகவே சக்திக்கும், சித்தர்கட்கும், பஞ்ச பூதங்கட்கும் வழிபாடு உண்டு. சக்தியையும், சித்தர்களையும், பஞ்சபூதங்களையும் வழிபடுகின்ற வழிபாடு தான் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் வழிபாடு.

அடிகளாரும்,ஆன்மிக இயக்கமும்::

அடிகளார் இல்லறத் துறவியாக இருப்பதுதான் இந்த ஆன்மிக இயக்கத்துக்கே சிறப்பு! இந்த ஆன்மிக இயக்கத்தில் நீங்கள் கணவன்-மனைவியாக இருவரும் ஈடுபடுவது தான் மிகச்சிறப்பு!.

கட்டுப்பாடு தேவை::

ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்திற்கு ஆன்மிக வழிதான் தேவை! அதற்கு கட்டுப்பாடு அவசியமான தேவை! ஆதிபராசக்தி இயக்கம் நல்லொழுக்கம் உள்ள ஒரு இயக்கமாக இருக்க வேண்டும்.

பெண்களுக்கு முக்கியத்துவம் உண்டு::

நாளைய உலகத்தில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்திற்கு பெருமை உண்டு. அதில் பெண்களுக்கு முக்கியத்துவம் உண்டு. இந்த இயக்கம் பெண்கள் இயக்கமாக மாறும்!.

எதற்காக ஆன்மிகம்?

ஆன்மிக நெறியில் இயற்கை உண்டு, செயற்கை இல்லை. ஐம்புலன்களை அடக்கிப் பழகுவதற்கே ஆன்மிகம். ஐம்புலன்களை நீங்கள் கட்டுப்படுத்தினால் பஞ்ச பூதங்களைக் கட்டுப்படுத்த முடியும்.

அழுக்குள்ளவனும் வந்து சேர்வான்::

ஓடுகின்ற ஆற்றில் சாக்கடையும் வந்து கலக்கும். முதலில் அசத்தமாகத்தான் இருக்கும். ஆற்று வெள்ளத்தின் ஓட்டத்தில் சிறிதுதூரம் ஓடிச்சென்று தெளிந்து போகும். அதுபோல இந்த ஆன்மிக வெள்ளத்தில் அழுக்குள்ளவனும் வந்து விழுவான். காலப் போக்கில் தெளிவடைவான். ஆன்மிகவாதியாக மாறுவான்.

பட்டி தொட்டிகளிலெல்லாம்::

"பட்டி தொட்டிகளிலெல்லாம் பக்தி மயமாக்குவேன்''. உன்னைத் தேடி நதி வராது; நதியை நோக்கி நீ வரவேண்டும்: "மகனே! அழுக்கு உடம்பிலும் உண்டு. மனத்திலும் உண்டு, உடல் அழுக்கைப் போக்கிக் கொள்ள நீதான் நதியை நோக்கி வரவேண்டும். உன்னை நோக்கி நதி வராது. மன அழுக்கைப் போக்கிக் கொள்ள நீதான் ஆன்மிக இயக்கத்தை நோக்கி வரவேண்டும். உன்னை நோக்கி இயக்கம் வராது.''

கலியுகத்தின் இயல்பு::

ஆன்மிகத்தை உலகமே எதிர்க்கும். அதுதான் கலியுகத்தின் இயல்பு! நீ உன் கடமைகளை செய்து கொண்டே போ! தோல்வி வரும்! சோர்ந்து போகாதே! முடிவில் ஆன்மிகம்தான் வெல்லும்.

பழுத்து உதிர்வன உண்டு:::

"இந்த ஆன்மிக இயக்கத்தில் இலையாய் இருக்கும்போது உதிர்வன உண்டு. பூவாய் இருக்கும்போது உதிர்வன உண்டு. பிஞ்சாகி உதிர்வன உண்டு, காயாகி உதிர்வன உண்டு. கனியாக உதிவன உண்டு.

தொண்டர்கட்கு::

"மற்றவர்கட்கு கொடுக்காமல் வாழ்வதே பாவம்!
பகிர்ந்துண்ணும் பழக்கம் உங்கட்கு வரவேண்டும்''

"ஏற்றத்தாழ்வு இல்லாமலும், தாழ்வு மனப்பான்மை
இல்லாமலும் நீங்கள் தொண்டு செய்ய வேண்டும்''.

"என் பணியை நீ செய்!
உன் பணியை நான் பார்த்துக் கொள்வேன்!''

"முழுவதுமாக என்னைச் சரண் அடைந்து
ஆன்மிகத் தொண்டு செய்பவன் குடும்பம்
என பொறுப்பில் வந்து விடுகிறது.''

"என்னையும் என் வழிமுறைகளையும் ஆராயாதே!
உன் மூளைக்கு அவைகள் எட்டாது.
நான் என்ன கட்டளை இடுகிறேனோ
அதன்படிச் செய்.''

"இயற்கையின் எந்த ரூபத்திலும் நான் ஆன்மிகம் வளர்ப்பேன்.
உனக்கு கொடுக்கிற வாய்ப்பையும்,
கிடைக்கிற வாய்ப்பையும் பயன்படுத்திக்
கொண்டு ஆன்மிகத்தில்முன்னேறு.

"ஆதிபராசக்தி இயக்கத்தினால் ஏழ்மை,
வறுமை ஒழிக்கப்பட்டு வருகின்றன.''

"செவ்வாடையென்றால் ஆன்மிகம்!
ஆன்மிகம் என்றால் ஆதிபராசக்தி
மன்றங்கள்! என்ற நிலைக்கு
வருதல் வேண்டும்.
இம்மன்றங்கள் தமிழ்நாட்டையே மாற்ற வேண்டும்!.

அரசியல் தொண்டும், ஆன்மிகத் தொண்டும்::

"நீ அரசியலில் தொண்டு செய்தால், அதன் தலைவன் உன்னைக் கறிவேப்பிலையாக பயன்படுத்திக் கொண்டு உன்னைத் தூக்கி எறிந்து விடும் நிலைமை உண்டு. தெய்வத்தை மையமாக வைத்து நீ ஆன்மிகத் தொண்டு செய்யும் போது அகங்காரம் குறைய வாய்ப்புண்டு. அதனால் ஆன்மிக முன்னேற்றம் பெற வாய்ப்பு உண்டு.

தெய்வத்துக்கும் ஆன்மிகத்துக்கும் தொண்டு செய்பவனுக்கு ஐந்து தலைமுறைக்கு என் அருள் உண்டு. அந்த அருள் உன் பேரன் பேத்திகட்கும் சென்று பயன் தருவது. அழுக்குள்ளவனையும் ஏன் ஈர்க்கிறேன்? பாத்திரத்தில் பாசி படர்ந்துள்ளது என்பதற்காக பாத்திரத்தையே தூக்கி எறிய முடியுமா? அதுபோலத் தாயாகிய என்னிடம் வந்து சேர்கின்ற ஆன்மாக்களின் பாசியை நீக்க வேண்டி அவர்களையும் ஈர்க்கிறேன். பாத்திரங்களை வீசி எறிய மாட்டேன்

மகனே! அமைதிக்கு வழி:
நாளைய உலகம் ஆன்மிக உலகம்!
ஆதிபராசக்தி உலகம்!
ஆதிபராசக்தி யுகம்

அரும்பத் தொடங்கி விட்டது. நாளைய உலகிற்கு ஆன்மிகமும் வேள்விகளும் முக்கியம்.

போக்குவரத்து வசதி::

இந்த கோவிலுக்கு செல்ல ரெயில் மற்றும் பஸ் வசதி உள்ளது.கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இந்த கோவிலுக்கு செல்ல நேரடி பஸ் வசதி உள்ளது.மேலும் எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து செல்லும் (எக்ஸ்பிரஸ்,மதுரை,செங்கல்பட்டு) அனைத்து ரெயில்களும் மேல்மருவத்தூரில் (வழியாக) நின்று செல்லும்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில்

சித்தர் கோவில்::

மேல்மருவத்தூரில் சுயம்பு வடிவத்தில் அன்னை எழுந்தருளியுள்ள இடத்தில் ஒரு பெரிய பெண் சித்தர் இருக்கின்றார். அவரே சித்தர்களின் தலைவியான ஆதிபராசக்தி ஆவாள். இந்த புண்ணிய பூமியில் ஒரு சித்தர் கூட்டமே உறைகின்றது. கோவிலின் வடபுறம் நஞ்சை நிலம் இருந்தது.

இந்த வயல் பகுதியில் இங்கு வந்து இரவில் தங்கும் பக்தர்களின் வசதியைக் கருதி, ஒரு கீற்றுக்கொட்டகையாவது அமைக்க வேண்டும் என சில அன்பர்கள் விரும்பினர். ஆனால் அந்த இடத்தில் கொட்டகை அமைக்க அன்னையின் உத்தரவு கிடைக்கவில்லை.

மேலும் அந்த நிலத்தின் அடியில் பல சித்தர்கள் இருப்பதாகவும் பங்காரு அடிகளார் தெரிவித்தார். எனவேதான் இந்த கோவிலை `சித்தர்பீடம்' என்று அழைத்தனர்.

பெண்களுக்கு முக்கியத்துவம்::

பெண்கள் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்யும் காட்சியை பிற கோவில்களில் காண முடியாது. மேலும் மாதவிலக்கு காலத்தில் அவர்கள் கோவிலுக்கு செல்வதும் இல்லை. மருவத்தூர் கோவிலில் இத்தகைய கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. ஆண்டு தோறும் பெண்களே கோவில் விழாவை கொண்டாடுகின்றனர். கருவறைக்குள் சென்று பூஜை செய்கின்றனர். மாதவிலக்கு என்பது வழக்கமாக வரும் உபாதை என்பதால் அதுபற்றியும் பெரிதுபடுத்தி பேச வேண்டியதில்லை என்று பங்காரு அடிகளார் கூறியிருக்கிறார்.

சமூக சேவை::

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் சார்பில் மருத்துவக்கல்லூரி, இன்ஜினியரிங் கல்லூரி, பாலிடெக்னிக் முதலியவை இயங்குகின்றன. பிரம்மாண்டமான ஆஸ்பத்திரி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் இலவசமாக உணவளிக்கப்படுகிறது. 2 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிட கூடம் இருக்கிறது.

இன்னல் தீர்க்கும் இருமுடி::

இருமுடி அணிவது உன் அழுக்கை நீக்கிக் கொள்ளவே! ஒன்று உன் அழுக்கு. இன்னொன்று உன் குடும்ப அழுக்கு. அந்த இரண்டு அழுக்குகளை நீக்கிக் கொள்ளவே அந்த இருமுடி என்பது அன்னையின் அருள்வாக்கு. உன் அழுக்கு என்பது குடும்பத் தலைவன் ஊழ்வினை.

குடும்ப அழுக்கு என்பது குடும்பத்துக்கு ஏற்பட்டுள்ள ஊழ்வினை. ஒரு குடும்பம் அல்லல் பட பல காரணங்கள் உண்டு. அவற்றை குடும்ப அழுக்கு என்கிறாள் அன்னை. அவற்றுள் சில...

1) பிதிர் சாபம், நாக சாபம், பெண் சாபம் - இவற்றால் வரும் கஷ்டங்கள்.

2) ஏவல், பில்லி, சூனியம் காரணமாக வரும் கஷ்டங்கள்.

3) வாஸ்து முறையில் கட்டப்படாத வீட்டில் வசிப்பதால் வரும் கஷ்டங்கள்.

4) தீய ஆவிகள், தீய சக்திகளின் ஆதிக்கத்தின் பிடியில் இருப்பதால் வரும் கஷடங்கள்.

5) தோஷமுள்ள மனையில் வசிப்பதால் வரும் கஷ்டங்கள்.

6) பிறர் கண் திருஷ்டியால் வரும் கஷ்டங்கள். இவையே குடும்ப அழுக்கு -இவற்றிலிருந்து விடுபடவே இருமுடி.

சித்திரா பவுர்ணமி வேள்வி::

ஒவ்வொரு ஆண்டும் சித்திரைப் பவுர்ணமியை ஒட்டி நம் சித்தர் பீடத்தில் மிகப்பெரிய அளவில் கலச விளக்கு வேள்விப் பூஜை நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் கோள்களின் இயக்கத்தாலும் மாற்றத்தாலும் ஏற்படுகிற பாதிப்புகளிலிருந்து விடுபடவும், தணித்துக் கொள்ளவும் இந்த வேள்வி நடத்தப்படுகிறது.

கோள்களின் சுழற்சியை ஒட்டித் தனிமனிதர் வாழ்விலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே உலக நன்மைக்கும் இயற்கைச் சூழலை ஒழுங்குப்படுத்தவும்,தனி மனிதர்கள் கிரகங்களினால் பாதிக்கப்படுவதிலிருந்து
விடுபடவும் இவ்வேள்வி நடத்தப்படுகிறது.

எனவே இல்வேள்வியில் கலந்து கொண்டு, யாக சாம்பலைப் பெற்று செல்லுங்கள். கலசங்களையும், விளக்குகளையும் வாங்கிச் சென்று வீட்டில் வைத்து வழிபாடு செய்யுங்கள்.

தாமரை பீடம்::

அன்னை ஆதிபராசக்தி அமர்ந்துள்ள தாமரை பீடம், `இருதய கமலம்', `நெஞ்சத்தாமரை' என்று கூறப்படுவது போல, உயிர்களின் நெஞ்சமே தன்னுடைய உறைவிடம் என்பதை உணர்த்துகிறது. தாமரை மலரின் புற இதழ்கள் மேல் நோக்கி உள்ளன.

நெஞ்சின் இரண்டு பகுதிகளை அக இதழும், புற இதழும் குறிக்கின்றன. இதனை அகமனம், புறமனம் என்றும் கூறலாம். நம் புறமனம் உலக இன்பங்களில் ஈடுபட்டு அமிழ்ந்து, கீழ்நோக்கி இருக்கிறது. அகமனம் அன்னையின் அருளை நாடி மேல்நோக்கி எழுவதைக் குறிக்கிறது. அன்னையின் இடக்கால் கீழ் நோக்கி புற இதழ்களின் மேல் படிந்துள்ளது.

அதாவது உலக இன்பங்களில் மூழ்கியுள்ள மக்கள் அழிந்து விடாமல் அவர்களை காக்க, அன்னை தனது திருவடிகளை தந்திருக்கிறாள் என புரிந்து கொள்ளலாம். தனது இடது திருவடியை ஊன்றியிருப்பதன் மூலம் தனக்கு மேற்பட்டவர்கள் யாரும் இல்லை என்பதற்கு அடையாளமாக காட்டப்பட்டிருக்கிறது. இந்த சிலையை மாமல்லபுரம் சிற்பக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் கணபதி ஸ்தபதி வடித்துள்ளார்.

சமுதாய மேம்பாட்டிற்காக::

ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மனித சமுதாய மேம்பாட்டிற்காக பாடுபட வேண்டும். ஆன்மிகத்தால் தான் அமைதியும், கட்டுப்பாடும் இருக்கும். ஆன்மிக நெறி மூலமாக ஒவ்வொருவனும் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டும். ஆன்மிகத்தில் ஐம்புலன்களை அடக்கும் தன்மையும், கட்டுப்பாடும் தேவை!

ஆதிபராசக்தி இயக்கத்தின் வழிபாடு::

பல்லாயிரம் ஆண்டுகளாகவே சக்திக்கும், சித்தர்கட்கும், பஞ்ச பூதங்கட்கும் வழிபாடு உண்டு. சக்தியையும், சித்தர்களையும், பஞ்சபூதங்களையும் வழிபடுகின்ற வழிபாடு தான் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் வழிபாடு.

அடிகளாரும்,ஆன்மிக இயக்கமும்::

அடிகளார் இல்லறத் துறவியாக இருப்பதுதான் இந்த ஆன்மிக இயக்கத்துக்கே சிறப்பு! இந்த ஆன்மிக இயக்கத்தில் நீங்கள் கணவன்-மனைவியாக இருவரும் ஈடுபடுவது தான் மிகச்சிறப்பு!.

கட்டுப்பாடு தேவை::

ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்திற்கு ஆன்மிக வழிதான் தேவை! அதற்கு கட்டுப்பாடு அவசியமான தேவை! ஆதிபராசக்தி இயக்கம் நல்லொழுக்கம் உள்ள ஒரு இயக்கமாக இருக்க வேண்டும்.

பெண்களுக்கு முக்கியத்துவம் உண்டு::

நாளைய உலகத்தில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்திற்கு பெருமை உண்டு. அதில் பெண்களுக்கு முக்கியத்துவம் உண்டு. இந்த இயக்கம் பெண்கள் இயக்கமாக மாறும்!.

எதற்காக ஆன்மிகம்?

ஆன்மிக நெறியில் இயற்கை உண்டு, செயற்கை இல்லை. ஐம்புலன்களை அடக்கிப் பழகுவதற்கே ஆன்மிகம். ஐம்புலன்களை நீங்கள் கட்டுப்படுத்தினால் பஞ்ச பூதங்களைக் கட்டுப்படுத்த முடியும்.

அழுக்குள்ளவனும் வந்து சேர்வான்::

ஓடுகின்ற ஆற்றில் சாக்கடையும் வந்து கலக்கும். முதலில் அசத்தமாகத்தான் இருக்கும். ஆற்று வெள்ளத்தின் ஓட்டத்தில் சிறிதுதூரம் ஓடிச்சென்று தெளிந்து போகும். அதுபோல இந்த ஆன்மிக வெள்ளத்தில் அழுக்குள்ளவனும் வந்து விழுவான். காலப் போக்கில் தெளிவடைவான். ஆன்மிகவாதியாக மாறுவான்.

பட்டி தொட்டிகளிலெல்லாம்::

"பட்டி தொட்டிகளிலெல்லாம் பக்தி மயமாக்குவேன்''. உன்னைத் தேடி நதி வராது; நதியை நோக்கி நீ வரவேண்டும்: "மகனே! அழுக்கு உடம்பிலும் உண்டு. மனத்திலும் உண்டு, உடல் அழுக்கைப் போக்கிக் கொள்ள நீதான் நதியை நோக்கி வரவேண்டும். உன்னை நோக்கி நதி வராது. மன அழுக்கைப் போக்கிக் கொள்ள நீதான் ஆன்மிக இயக்கத்தை நோக்கி வரவேண்டும். உன்னை நோக்கி இயக்கம் வராது.''

கலியுகத்தின் இயல்பு::

ஆன்மிகத்தை உலகமே எதிர்க்கும். அதுதான் கலியுகத்தின் இயல்பு! நீ உன் கடமைகளை செய்து கொண்டே போ! தோல்வி வரும்! சோர்ந்து போகாதே! முடிவில் ஆன்மிகம்தான் வெல்லும்.

பழுத்து உதிர்வன உண்டு:::

"இந்த ஆன்மிக இயக்கத்தில் இலையாய் இருக்கும்போது உதிர்வன உண்டு. பூவாய் இருக்கும்போது உதிர்வன உண்டு. பிஞ்சாகி உதிர்வன உண்டு, காயாகி உதிர்வன உண்டு. கனியாக உதிவன உண்டு.

தொண்டர்கட்கு::

"மற்றவர்கட்கு கொடுக்காமல் வாழ்வதே பாவம்!
பகிர்ந்துண்ணும் பழக்கம் உங்கட்கு வரவேண்டும்''

"ஏற்றத்தாழ்வு இல்லாமலும், தாழ்வு மனப்பான்மை
இல்லாமலும் நீங்கள் தொண்டு செய்ய வேண்டும்''.

"என் பணியை நீ செய்!
உன் பணியை நான் பார்த்துக் கொள்வேன்!''

"முழுவதுமாக என்னைச் சரண் அடைந்து
ஆன்மிகத் தொண்டு செய்பவன் குடும்பம்
என பொறுப்பில் வந்து விடுகிறது.''

"என்னையும் என் வழிமுறைகளையும் ஆராயாதே!
உன் மூளைக்கு அவைகள் எட்டாது.
நான் என்ன கட்டளை இடுகிறேனோ
அதன்படிச் செய்.''

"இயற்கையின் எந்த ரூபத்திலும் நான் ஆன்மிகம் வளர்ப்பேன்.
உனக்கு கொடுக்கிற வாய்ப்பையும்,
கிடைக்கிற வாய்ப்பையும் பயன்படுத்திக்
கொண்டு ஆன்மிகத்தில்முன்னேறு.

"ஆதிபராசக்தி இயக்கத்தினால் ஏழ்மை,
வறுமை ஒழிக்கப்பட்டு வருகின்றன.''

"செவ்வாடையென்றால் ஆன்மிகம்!
ஆன்மிகம் என்றால் ஆதிபராசக்தி
மன்றங்கள்! என்ற நிலைக்கு
வருதல் வேண்டும்.
இம்மன்றங்கள் தமிழ்நாட்டையே மாற்ற வேண்டும்!.

அரசியல் தொண்டும், ஆன்மிகத் தொண்டும்::

"நீ அரசியலில் தொண்டு செய்தால், அதன் தலைவன் உன்னைக் கறிவேப்பிலையாக பயன்படுத்திக் கொண்டு உன்னைத் தூக்கி எறிந்து விடும் நிலைமை உண்டு. தெய்வத்தை மையமாக வைத்து நீ ஆன்மிகத் தொண்டு செய்யும் போது அகங்காரம் குறைய வாய்ப்புண்டு. அதனால் ஆன்மிக முன்னேற்றம் பெற வாய்ப்பு உண்டு.

தெய்வத்துக்கும் ஆன்மிகத்துக்கும் தொண்டு செய்பவனுக்கு ஐந்து தலைமுறைக்கு என் அருள் உண்டு. அந்த அருள் உன் பேரன் பேத்திகட்கும் சென்று பயன் தருவது. அழுக்குள்ளவனையும் ஏன் ஈர்க்கிறேன்? பாத்திரத்தில் பாசி படர்ந்துள்ளது என்பதற்காக பாத்திரத்தையே தூக்கி எறிய முடியுமா? அதுபோலத் தாயாகிய என்னிடம் வந்து சேர்கின்ற ஆன்மாக்களின் பாசியை நீக்க வேண்டி அவர்களையும் ஈர்க்கிறேன். பாத்திரங்களை வீசி எறிய மாட்டேன்

மகனே! அமைதிக்கு வழி:
நாளைய உலகம் ஆன்மிக உலகம்!
ஆதிபராசக்தி உலகம்!
ஆதிபராசக்தி யுகம்

அரும்பத் தொடங்கி விட்டது. நாளைய உலகிற்கு ஆன்மிகமும் வேள்விகளும் முக்கியம்.

போக்குவரத்து வசதி::

இந்த கோவிலுக்கு செல்ல ரெயில் மற்றும் பஸ் வசதி உள்ளது.கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இந்த கோவிலுக்கு செல்ல நேரடி பஸ் வசதி உள்ளது.மேலும் எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து செல்லும் (எக்ஸ்பிரஸ்,மதுரை,செங்கல்பட்டு) அனைத்து ரெயில்களும் மேல்மருவத்தூரில் (வழியாக) நின்று செல்லும்.

ஸ்தல வரலாறு:

திருத்தணி முருகன் கோவில் மிகவும் பழமையானது. விஜய நகர அரசனான பிரபுட தேவராஜன் காலத்தில் இருந்த அருணகிரி நாதர் முருகனின் அடியார்களில் ஒருவராவார். இத்தலத்தைப் போற்றி 63 திருப்பாடல்களைப் பாடினார். ஆகவே இத்தலம் 600 ஆண்டுகளுக்கு முன்பே புகழ்பெற்று இருந்திருக்கிறது.

திருத்தணி நகரம் சென்னைக்கு வடமேற்கே 84 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இத்தலத்திற்குக் கிழக்கே திருவாலங்காடு. மேற்கே விரிஞ்சிபுரம், வள்ளிமலை, சோளிங்கர், தெற்கே காஞ்சீபுரம், வடக்கே திருக்காளத்தி, திருப்பதி ஆகிய தலங்கள் சூழ்ந்து இருக்கின்றன.

தேவர்களுக்குத் தீராத துன்பம் கொடுத்து வந்த சூரபத்மனுடன் போர் புரிந்து தேவர்களின் துயரத்தை நீக்கி, வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாகப் போர் புரிந்து, முருகப்பெருமான் கோபம் தணிந்து அமர்ந்த தலம் திருத்தணி.

ஆகையால் இந்த தலம் தணிகை எனப் பெயர் பெற்றது. தேவர்கள் பயம் நீங்கிய இடம், முனிவர்கள் காமவெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம், அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை முதலியவற்றைத் தணிக்கும் இடமாதலாலும் திருத்தணி என பெயர் பெற்றது. முருகன் இத்தலத்தில் ஒரு தனி மலையில் கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார்.

இம்மலையின் இரு பக்கங்களிலும் மலைத் தொடர்ச்சி பரவியுள்ளது. வடக்கே உள்ள மலை வெண்மையாக இருப்பதால் பச்சரிசி மலையென்றும் தெற்கே உள்ள மலை கருநிறமாக இருப்பதால் புண்ணாக்கு மலை என்றும் அழைக்கப்படுகிறது. "சரவணப் பொய்கை'' என்ற புகழ்மிக்க `குமார தீர்த்தம்' என்ற திருக்குளம் மலைஅடிவாரத்தில் உள்ளது.

இத்திருக்குளத்தைச் சுற்றி பல மடங்கள் இருப்பதால் இது `மடம் கிராமம்' என்று அழைக்கப்படுகிறது. குளத்தின் கிழக்குக் கரையிலிருந்து மலையைப் பார்த்தால் வளைவாக இடப்பெற்ற மாலையைப் போல் இருக்கும். அக்காட்சி மிகவும் அழகாகத் திகழும். ஆகையால் அருணகிரிநாதர் இதை `அழகு திருத்தணி மலை' எனப் புகழ்ந்து பாடியுள்ளார்.


முருகனுக்கு இணையான தெய்வமோ, திருத்தணிகைக்குச் சமமான தலமோ இல்லை என்றே சொல்ல வேண்டும். கச்சியப்ப சிவாசாரியார், தமது கந்தபுராணத்தில் `மலர்களில் தாமரை மலர் போலவும், நதிகளில் கங்கைநதி போலவும், தலங்களில் காஞ்சீபுரம் போலவும் மலைகளில் சிறந்து ஓங்கி வளர்வது திருத்தணியே என்றும்

"உலகில் மலைகள் பல இருந்தாலும் சிவபெருமான் கயிலாயத்தில் இருப்பது போல முருகன் திருத்தணி மலையை மிகவும் விரும்பி, அங்கு மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கின்றான்''

என்றும் இதனைச் சிறப்பித்துக் கூறியுள்ளார். முருகப் பெருமானை இங்கு தேவேந்திரன் கழுநீர் மலர்கொண்டு பூஜித்ததாக ஸ்தலவரலாறு கூறுகிறது. முருகப்பெருமான், தன் கிரியா சக்தியாகிய தெய்வயானையைத் திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொண்டார்.

இச்சா சக்தியாகிய வள்ளியம்மையை திருத்தணியில் திருமணம் செய்து கொண்டு இனிது வீற்றிருக்கிறார். திருத்தணியின் சிறப்புக்கு இதுவே முக்கிய காரணமாகும். பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், வடலூர் இராமலிங்க அடிகள், கந்தப்பைய தேசிகர், கச்சியப்ப முனிவ கச்சியப்ப சிவாசாரியார் மற்றும் அருணகிரி நாதர் முதலிய சான்றோர்கள் திருத்தணி முருகனைப் பெரிதும் புகழ்ந்துள்ளனர்.

சிறப்புகள்::

ஆடிக்கிருத்திகை, தைக்கிருத்திகை மற்றும் மாசிக் கிருத்திகை முதலிய சிறப்பு நாட்களில் திருத்தணியில் பக்த கோடிகள் பூக்காவடி, பால்காவடி ஆகிய பிரார்த்தனையைச் செலுத்துகின்றனர்.

நூற்றுக்கணக்கான திருப்புகழ்ச் சபையினர், பக்திப்பாடல்களைப் பாடிக்கொண்டும் முருகன் திருநாமங்களைக் சொல்லிக்கொண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏறும் போது, பக்தியில்லாதவனுக்குக் கூட திருத்தணி முருகன் மீது பக்தியை உண்டாக்கி பரவசப்படுத்தும். இத்தலத்தில் சிவபெருமான் முருகப்பெருமானைத் தியானித்து பிரணவப் பொருள் உபதேசிக்கப் பெற்றார்.

குழந்தை முருகன் பிரணவத்தின் பொருளை விளக்கிய திறனைக் கேட்ட சிவபெருமான் "மக்கள் மெய்தீண்டல் உடன்கின்பம், மற்றவர் சொல் கேட்டல் இன்பம் செவிக்கு'' என்றபடி பெருமுழக்கம் செய்து சிரித்து மகிழ்ந்தருளினார். அதனால் இவருக்கு வீர அட்டகாசர் என்ற பெயர் ஏற்பட்டது.

திருத்தணியில் முருகனை வழிபட்டு, தாரகாசுரனால் கவரப்பட்ட தமது சங்கு, சக்கரம் முதலியவற்றைத் திருமால் மீண்டும் பெற்றார். அவர் உண்டாக்கிய விஷ்ணு தீர்த்தம் மலையின் மேல் கோயிலுக்கு மேற்கேயுள்ளது. இங்கு முருகனை வழிபட்டு ராவணனை வெல்லும் ஆற்றலையும் அருட்படைகளையும் ராமர் பெற்றார்.

ராவணனை வென்ற பின் வந்து மீண்டும் முருகனைப் பூஜித்து, சிவஞானம் பெற்றார். ராவணனை வென்று விஜயம் பெற்று வந்ததனால், இங்குள்ள ராமபிரானுக்கு விஜயராகவப் பெருமாள் என்றும் அன்னையின் பெயர் விஜயவல்லித் தாயார் என்றும் வழக்குகிறது. இந்த கோவில் ஆறுமுக சுவாமி கோவிலுக்குத் தெற்கில் உள்ளது.

பிரம்மதேவர் திருத்தணி முருகப்பெருமானைப் பூஜித்து படைப்புத் தொழில் செய்யும் ஆற்றலைப் பெற்றார். சூரபத்மனால் கவரப்பட்ட தமது செல்வங்களையும் முருகன் அருளால் திரும்பப் பெற்றார். கலைமகளும் முருகனைப் பூஜித்தாள். கிழக்கே மலையடிவாரத்திலிருந்து மலைமேல் ஏறிச் செல்லும் வழியில் பாதி தூரத்தில் பிரம்ம தேவரால் உண்டாக்கப்பட்ட பிரம்ம தீர்த்தம் உள்ளது. இது "பிரமசுனை'' என வழங்கப்படுகிறது.

வழிபடும் முறைகள்::

திருத்தணிக்குச் செல்லும் பக்த கோடிகள் முதலில் குமார தீர்த்தம் என்ற சரவணப் பொய்கையில் நீராடி, சுத்தம் செய்து கொண்டு தோய்த்து உலர்ந்த ஆடை தரித்து, திருநீறு பூசி உத்திராக்கம் முதலிய சிவசின்னங்களை அணிந்து, பக்தியுடன் மலை ஏற வேண்டும்.

மலை ஏறும்போது திருப்புகழ் பாடல்களை முடிந்த வரை இசையுடன் உருக்கமாகப் பாடிக்கொண்டு படிஏற வேண்டும். மலை உச்சியை அடைந்ததும் கிழக்கு பிரகாரத்திலுள்ள கொடிக்கம்ப விநாயகரையும், ஐராவத யானையையும் தரிசிக்க வேண்டும்.

தெற்கிலுள்ள இந்திர நீலச் சுனையைத் தரிசித்து விட்டுப்பின் கோவிலின் உள்ளே சென்று ஆபத்சகாய விநாயகரையும் அருகில் உள்ள வீரவாகு முதலிய நவ வீரர்களையும் குமாரலிங்கேசுவரரையும் வணங்க வேண்டும். பின்னர் மூலஸ்தானத்திலுள்ள ஞானசக்திதரர் என்னும் முருகனையும் வள்ளி தெய்வானை அம்மையாரையும் வழிபடுதல் வேண்டும்.

சந்நிதிகளில் திருநீறு குங்குமப் பிரசாதங்கள் வழங்கப்படுவதுடன் இங்கு திருமேனிப் பூச்சு என்னும் சந்தனம் முருகன் சந்நிதியில் சிறப்பாக வழங்கப்படும். இச்சந்தனத்தை உட்கொள்ளும் பக்தர்கள் நோய்கள் பலவும் தீரப்பெறுவர்.
போக்குவரத்து வசதி::

இந்த கோவிலுக்கு செல்ல நேரடி பஸ் மற்றும் ரெயில் வசதி உள்ளது.சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து திருத்தணிக்கு நேரடி ரெயில் வசதி உள்ளது. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து திருத்தணி கோவிலுக்கு செல்ல சிறப்பு பஸ் வசதி உள்ளது.

திருத்தணி முருகன் கோவில்

ஸ்தல வரலாறு:

திருத்தணி முருகன் கோவில் மிகவும் பழமையானது. விஜய நகர அரசனான பிரபுட தேவராஜன் காலத்தில் இருந்த அருணகிரி நாதர் முருகனின் அடியார்களில் ஒருவராவார். இத்தலத்தைப் போற்றி 63 திருப்பாடல்களைப் பாடினார். ஆகவே இத்தலம் 600 ஆண்டுகளுக்கு முன்பே புகழ்பெற்று இருந்திருக்கிறது.

திருத்தணி நகரம் சென்னைக்கு வடமேற்கே 84 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இத்தலத்திற்குக் கிழக்கே திருவாலங்காடு. மேற்கே விரிஞ்சிபுரம், வள்ளிமலை, சோளிங்கர், தெற்கே காஞ்சீபுரம், வடக்கே திருக்காளத்தி, திருப்பதி ஆகிய தலங்கள் சூழ்ந்து இருக்கின்றன.

தேவர்களுக்குத் தீராத துன்பம் கொடுத்து வந்த சூரபத்மனுடன் போர் புரிந்து தேவர்களின் துயரத்தை நீக்கி, வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாகப் போர் புரிந்து, முருகப்பெருமான் கோபம் தணிந்து அமர்ந்த தலம் திருத்தணி.

ஆகையால் இந்த தலம் தணிகை எனப் பெயர் பெற்றது. தேவர்கள் பயம் நீங்கிய இடம், முனிவர்கள் காமவெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம், அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை முதலியவற்றைத் தணிக்கும் இடமாதலாலும் திருத்தணி என பெயர் பெற்றது. முருகன் இத்தலத்தில் ஒரு தனி மலையில் கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார்.

இம்மலையின் இரு பக்கங்களிலும் மலைத் தொடர்ச்சி பரவியுள்ளது. வடக்கே உள்ள மலை வெண்மையாக இருப்பதால் பச்சரிசி மலையென்றும் தெற்கே உள்ள மலை கருநிறமாக இருப்பதால் புண்ணாக்கு மலை என்றும் அழைக்கப்படுகிறது. "சரவணப் பொய்கை'' என்ற புகழ்மிக்க `குமார தீர்த்தம்' என்ற திருக்குளம் மலைஅடிவாரத்தில் உள்ளது.

இத்திருக்குளத்தைச் சுற்றி பல மடங்கள் இருப்பதால் இது `மடம் கிராமம்' என்று அழைக்கப்படுகிறது. குளத்தின் கிழக்குக் கரையிலிருந்து மலையைப் பார்த்தால் வளைவாக இடப்பெற்ற மாலையைப் போல் இருக்கும். அக்காட்சி மிகவும் அழகாகத் திகழும். ஆகையால் அருணகிரிநாதர் இதை `அழகு திருத்தணி மலை' எனப் புகழ்ந்து பாடியுள்ளார்.


முருகனுக்கு இணையான தெய்வமோ, திருத்தணிகைக்குச் சமமான தலமோ இல்லை என்றே சொல்ல வேண்டும். கச்சியப்ப சிவாசாரியார், தமது கந்தபுராணத்தில் `மலர்களில் தாமரை மலர் போலவும், நதிகளில் கங்கைநதி போலவும், தலங்களில் காஞ்சீபுரம் போலவும் மலைகளில் சிறந்து ஓங்கி வளர்வது திருத்தணியே என்றும்

"உலகில் மலைகள் பல இருந்தாலும் சிவபெருமான் கயிலாயத்தில் இருப்பது போல முருகன் திருத்தணி மலையை மிகவும் விரும்பி, அங்கு மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கின்றான்''

என்றும் இதனைச் சிறப்பித்துக் கூறியுள்ளார். முருகப் பெருமானை இங்கு தேவேந்திரன் கழுநீர் மலர்கொண்டு பூஜித்ததாக ஸ்தலவரலாறு கூறுகிறது. முருகப்பெருமான், தன் கிரியா சக்தியாகிய தெய்வயானையைத் திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொண்டார்.

இச்சா சக்தியாகிய வள்ளியம்மையை திருத்தணியில் திருமணம் செய்து கொண்டு இனிது வீற்றிருக்கிறார். திருத்தணியின் சிறப்புக்கு இதுவே முக்கிய காரணமாகும். பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், வடலூர் இராமலிங்க அடிகள், கந்தப்பைய தேசிகர், கச்சியப்ப முனிவ கச்சியப்ப சிவாசாரியார் மற்றும் அருணகிரி நாதர் முதலிய சான்றோர்கள் திருத்தணி முருகனைப் பெரிதும் புகழ்ந்துள்ளனர்.

சிறப்புகள்::

ஆடிக்கிருத்திகை, தைக்கிருத்திகை மற்றும் மாசிக் கிருத்திகை முதலிய சிறப்பு நாட்களில் திருத்தணியில் பக்த கோடிகள் பூக்காவடி, பால்காவடி ஆகிய பிரார்த்தனையைச் செலுத்துகின்றனர்.

நூற்றுக்கணக்கான திருப்புகழ்ச் சபையினர், பக்திப்பாடல்களைப் பாடிக்கொண்டும் முருகன் திருநாமங்களைக் சொல்லிக்கொண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏறும் போது, பக்தியில்லாதவனுக்குக் கூட திருத்தணி முருகன் மீது பக்தியை உண்டாக்கி பரவசப்படுத்தும். இத்தலத்தில் சிவபெருமான் முருகப்பெருமானைத் தியானித்து பிரணவப் பொருள் உபதேசிக்கப் பெற்றார்.

குழந்தை முருகன் பிரணவத்தின் பொருளை விளக்கிய திறனைக் கேட்ட சிவபெருமான் "மக்கள் மெய்தீண்டல் உடன்கின்பம், மற்றவர் சொல் கேட்டல் இன்பம் செவிக்கு'' என்றபடி பெருமுழக்கம் செய்து சிரித்து மகிழ்ந்தருளினார். அதனால் இவருக்கு வீர அட்டகாசர் என்ற பெயர் ஏற்பட்டது.

திருத்தணியில் முருகனை வழிபட்டு, தாரகாசுரனால் கவரப்பட்ட தமது சங்கு, சக்கரம் முதலியவற்றைத் திருமால் மீண்டும் பெற்றார். அவர் உண்டாக்கிய விஷ்ணு தீர்த்தம் மலையின் மேல் கோயிலுக்கு மேற்கேயுள்ளது. இங்கு முருகனை வழிபட்டு ராவணனை வெல்லும் ஆற்றலையும் அருட்படைகளையும் ராமர் பெற்றார்.

ராவணனை வென்ற பின் வந்து மீண்டும் முருகனைப் பூஜித்து, சிவஞானம் பெற்றார். ராவணனை வென்று விஜயம் பெற்று வந்ததனால், இங்குள்ள ராமபிரானுக்கு விஜயராகவப் பெருமாள் என்றும் அன்னையின் பெயர் விஜயவல்லித் தாயார் என்றும் வழக்குகிறது. இந்த கோவில் ஆறுமுக சுவாமி கோவிலுக்குத் தெற்கில் உள்ளது.

பிரம்மதேவர் திருத்தணி முருகப்பெருமானைப் பூஜித்து படைப்புத் தொழில் செய்யும் ஆற்றலைப் பெற்றார். சூரபத்மனால் கவரப்பட்ட தமது செல்வங்களையும் முருகன் அருளால் திரும்பப் பெற்றார். கலைமகளும் முருகனைப் பூஜித்தாள். கிழக்கே மலையடிவாரத்திலிருந்து மலைமேல் ஏறிச் செல்லும் வழியில் பாதி தூரத்தில் பிரம்ம தேவரால் உண்டாக்கப்பட்ட பிரம்ம தீர்த்தம் உள்ளது. இது "பிரமசுனை'' என வழங்கப்படுகிறது.

வழிபடும் முறைகள்::

திருத்தணிக்குச் செல்லும் பக்த கோடிகள் முதலில் குமார தீர்த்தம் என்ற சரவணப் பொய்கையில் நீராடி, சுத்தம் செய்து கொண்டு தோய்த்து உலர்ந்த ஆடை தரித்து, திருநீறு பூசி உத்திராக்கம் முதலிய சிவசின்னங்களை அணிந்து, பக்தியுடன் மலை ஏற வேண்டும்.

மலை ஏறும்போது திருப்புகழ் பாடல்களை முடிந்த வரை இசையுடன் உருக்கமாகப் பாடிக்கொண்டு படிஏற வேண்டும். மலை உச்சியை அடைந்ததும் கிழக்கு பிரகாரத்திலுள்ள கொடிக்கம்ப விநாயகரையும், ஐராவத யானையையும் தரிசிக்க வேண்டும்.

தெற்கிலுள்ள இந்திர நீலச் சுனையைத் தரிசித்து விட்டுப்பின் கோவிலின் உள்ளே சென்று ஆபத்சகாய விநாயகரையும் அருகில் உள்ள வீரவாகு முதலிய நவ வீரர்களையும் குமாரலிங்கேசுவரரையும் வணங்க வேண்டும். பின்னர் மூலஸ்தானத்திலுள்ள ஞானசக்திதரர் என்னும் முருகனையும் வள்ளி தெய்வானை அம்மையாரையும் வழிபடுதல் வேண்டும்.

சந்நிதிகளில் திருநீறு குங்குமப் பிரசாதங்கள் வழங்கப்படுவதுடன் இங்கு திருமேனிப் பூச்சு என்னும் சந்தனம் முருகன் சந்நிதியில் சிறப்பாக வழங்கப்படும். இச்சந்தனத்தை உட்கொள்ளும் பக்தர்கள் நோய்கள் பலவும் தீரப்பெறுவர்.
போக்குவரத்து வசதி::

இந்த கோவிலுக்கு செல்ல நேரடி பஸ் மற்றும் ரெயில் வசதி உள்ளது.சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து திருத்தணிக்கு நேரடி ரெயில் வசதி உள்ளது. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து திருத்தணி கோவிலுக்கு செல்ல சிறப்பு பஸ் வசதி உள்ளது.

ஸ்தல வரலாறு::

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக் கோட்டையை அடுத்த அண்ணமங்கலத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது காட்டு மாரியம்மன் கோவில் இந்த கோவிலை ஈர ஆடையுடன் வலம் வந்து மஞ்சள் கட்டிய கயிற்றை அம்மனிடம் வைத்து பூஜை செய்து அதனை அங்குள்ள வேப்ப மரத்தில் கட்டினால்,அவ்வாறு செய்த எட்டாவது நாளிலேயே திருமணத் தடை நீங்கி விடும் என்கிறார்கள்.

அதே வேப்ப மரத்தில் குழந்தை பாக்கியம் தாமதமாகும் பெண்கள் தொட்டில் கட்டி வழிபட்டால் அந்த பாக்கியம் வெகு விரைவில் அமையும் என்பதும் நம்பிக்கை.

இது தவிர படிப்பில் சிறந்து விளங்க ஆசைப்படும் மாணவ மாணவியர் காட்டு மாரியம்மன் துணை என்று 108 முறை துண்டுச் சீட்டுகளில் எழுதி அதை மாலையாக கட்டி இந்த வேப்ப மரத்திலோ அல்லது சூலத்திலோ அணிவித்து வழிப்படுவதையும் காண முடிகிறது இங்குள்ள நாகதேவியை வணங்கினால் நாகதோஷமும் நீங்குகிறது. செய்வினை அகலவும் இங்கு பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள். ஆடி மாதம் வரும் வெள்ளிக் கிழமைகள் இங்கு மிகவும் விஷேசம்.
போக்குவரத்து வசதி::

இந்த கோவிலுக்கு செல்ல பஸ் மற்றும் ரெயில் வசதி உள்ளது.சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து விழுப்புரம் சென்று பின் அங்கிருந்து உள்ளூர் பேருந்து மூலம் செஞ்சிக் கோட்டையை வழியாக அண்ணமங்கலத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பேருந்து மூலம் செஞ்சிக் கோட்டை சென்று பின் அங்கிருந்து உள்ளூர் பேருந்து மூலம் அண்ணமங்கலம் வழியாக ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவிலுக்கு செல்லலாம்.

காட்டு மாரியம்மன் கோவில்

ஸ்தல வரலாறு::

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக் கோட்டையை அடுத்த அண்ணமங்கலத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது காட்டு மாரியம்மன் கோவில் இந்த கோவிலை ஈர ஆடையுடன் வலம் வந்து மஞ்சள் கட்டிய கயிற்றை அம்மனிடம் வைத்து பூஜை செய்து அதனை அங்குள்ள வேப்ப மரத்தில் கட்டினால்,அவ்வாறு செய்த எட்டாவது நாளிலேயே திருமணத் தடை நீங்கி விடும் என்கிறார்கள்.

அதே வேப்ப மரத்தில் குழந்தை பாக்கியம் தாமதமாகும் பெண்கள் தொட்டில் கட்டி வழிபட்டால் அந்த பாக்கியம் வெகு விரைவில் அமையும் என்பதும் நம்பிக்கை.

இது தவிர படிப்பில் சிறந்து விளங்க ஆசைப்படும் மாணவ மாணவியர் காட்டு மாரியம்மன் துணை என்று 108 முறை துண்டுச் சீட்டுகளில் எழுதி அதை மாலையாக கட்டி இந்த வேப்ப மரத்திலோ அல்லது சூலத்திலோ அணிவித்து வழிப்படுவதையும் காண முடிகிறது இங்குள்ள நாகதேவியை வணங்கினால் நாகதோஷமும் நீங்குகிறது. செய்வினை அகலவும் இங்கு பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள். ஆடி மாதம் வரும் வெள்ளிக் கிழமைகள் இங்கு மிகவும் விஷேசம்.
போக்குவரத்து வசதி::

இந்த கோவிலுக்கு செல்ல பஸ் மற்றும் ரெயில் வசதி உள்ளது.சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து விழுப்புரம் சென்று பின் அங்கிருந்து உள்ளூர் பேருந்து மூலம் செஞ்சிக் கோட்டையை வழியாக அண்ணமங்கலத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பேருந்து மூலம் செஞ்சிக் கோட்டை சென்று பின் அங்கிருந்து உள்ளூர் பேருந்து மூலம் அண்ணமங்கலம் வழியாக ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவிலுக்கு செல்லலாம்.

ஸ்தல வரலாறு:

கும்பகோணத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் சூரியனார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் அருள்மிகு சிவசூரியபெருமான் திருக்கோயில் என்றும் அழைக்க்படுகிறது. சூரியனை முதன்மையாகக் கொண்டு நவக்கிரகங்களுக்கெனத் தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பம்சம் பெற்றுள்ளது. இந்த ஸ்ரீ சூரிய பகவானின் ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.

இரண்டு தலங்கள்:

புராண காலத்தில் இத்தலம் எருக்கங்காடாக இருந்தது. ஜனநடமாட்டம் காரணமாக பின்னர் காடுகள் அழிந்து, ஸ்ரீபிராணநாதேஸ்வரர் எழுந்தருளியுள்ள மேற்குப் பகுதி திருமங்கலக்குடி என்றும் சூரியன் உள்பட நவநாயகர்கள் ஆலயம் அமைந்துள்ள வடகிழக்குப் பகுதி சூரியனார்கோயில் என்றும் பெயர் பெற்று இரண்டு தலங்களாகப் பிரிந்தன.

சூரியன் நீராடிய தீர்த்தம்:

தொழுநோய் தோஷத்தைப் போக்கிக் கொள்ள நவ நாயகர்கள் தவம் செய்ய வந்தபோது இங்குள்ள ஒன்பது தீர்த்தங்களில் அவர்கள் நீராடித் தவம் புரிந்ததால், அத்தீர்த்தங்கள் நவ நாயகர்களின் பெயர் பெற்றன. அவற்றுள் ஒன்றான "சூரிய புஷ்கரணி", சூரியன் நீராடிய தீர்த்தம் என்று வரலாறு கூறுகிறது.

கோள் தீர்த்த விநாயகர்::

நவக்கிரக நாயகர்கள் இத்தலத்தில் தவம் செய்யத் தொடங்கும்போது, தங்களுக்கு ஏற்பட்ட தோஷம் நீங்கும் பொருட்டு விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அவர்களின் தோஷத்தை இவ்விநாயகர் தீர்த்ததால் இவருக்கு கோள்தீர்த்த விநாயகர் என்று பெயர் உண்டாயிற்று. கோயில் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் இந்தவிநாயகரின் ஆலயம் உள்ளது.

ஸ்ரீ சூரியபகவான்:

பிரதானமான கருவறையில் மேற்கு முகமாக நின்ற கோலத்தில் ஸ்ரீசூரிய பகவான் காட்சி தருகிறார். இவருக்கு இடதுபுறத்தில் உஷா தேவியும், வலது புறத்தில் பிரத்யுஷாதேவி என்னும் சாயா தேவியும் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர்.

சூரியனின் கர்ப்பக்கிரகத்தை ஒட்டினாற்போல் நவநாயகர்களில் சனி, புதன், செவ்வாய், சந்திரன், கேது, சுக்கிரன், ராகு ஆகிய ஏழு கிரக நாயகர்களுக்கு தனித் தனிச் சிறு கோயில்கள் உள்ளன. இந்த சிறப்பு வேறு எந்த கோவில்களிலும் இல்லை.

குரு மண்டபம் :

சூரியனின் உக்கிரத்தைத் தணிக்க சூரியனை நோக்கியபடி கிழக்கு முகமாக மகா மண்டபத்தில் குரு காட்சி தருகிறார். கருவறைக்கு வெளியே தென் மேற்கில் சனீஸ்வரனும், தெற்கில் புதனும், வடகிழக்கில் கேதுவும், வடக்கில் சுக்கிரனும், வடமேற்கில் ராகுவும்,தென் கிழக்கில் அங்காரகனும் (செவ்வாய்), கிழக்கில் சந்திரனும், தனித் தனிக் கோயில்களில் எழுந்தருளியுள்ளனர். அதாவது சூரியனைச் சுற்றியுள்ள எட்டுத் திசைகளிலும் ஏனைய எட்டு கிரக கோவில்கள் எழுந்தருளியுள்ளனர்.

வழிபடும் முறை :

ஆலயத்தை அடைந்தவுடன் முதலில் ராஜ கோபுரத்துக்கு வெளியே உள்ள சூரிய புஷ்கரணியில் நீராட வேண்டும் அல்லது அந்தத் தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் கோபுர தரிசனம் செய்துவிட்டு, கோள்தீர்த்த விநாயகரைத் தரிசிக்க வேண்டும். அதன் பின்னர் நவக்கிரக உற்சவ மூர்த்திகளைத் தரிசனம் செய்ய வேண்டும். அடுத்து ஸ்தபன மண்டபத்தை அடைந்து ஸ்ரீகாசி விசுவநாதர், ஸ்ரீவிசாலாட்சி அம்மையை வழிபட வேண்டும்.

பின் பிரதான ஸ்ரீ சூரிய பகவானைத் தரிசிக்க வேண்டும். சூரிய பகவானிடம் பிரார்த்தனை செய்த பிறகு, திரும்பி நின்று குரு பகவானை வழிபட வேண்டும். அடுத்து கிழக்கு முகமாக சனீஸ்வரர் உள்பட கிரக நாயகர்களை வழிபட்டால் மிகவும் நல்லது. கொடி மரத்தை வீழ்ந்து வணங்கி, பின் அங்கிருந்து வடகிழக்கு தெற்குப் பிரகாரம் வழியாக ஒன்பது முறை வலம் வரவேண்டும்.

வலம் வந்து முடித்த பிறகு, கொடி மரத்தடியில் மீண்டும் வீழ்ந்து வணங்கிவிட்டு, ஒருபுறமாகச் சென்று உட்கார்ந்து நவக்கிரக நாயகர்களைத் நினைத்து வணங்கவேண்டும்.

தோஷ நிவர்த்தி::

இந்த ஆலயத்தில் உள்ள நவக்கிரக நாயகர்கள், ஆயுதம் - வாகனம் இல்லாமல் அமைதியும் புன்முறுவல் தவழும் முகத்துடன் அனுக்கிரக மூர்த்திகளாக விளங்குவது சிறப்பு. புத்திர தோஷம், விவாகப் பிரதிபந்த தோஷம், உத்தியோகப் பிரதிபந்த தோஷம், சூரிய புத்தி, சூரிய திசை உள்ளவர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபட்டால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

சிறப்பு வழிபாடுகள் :

இத்திருக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் ஞாயிறு அன்று இங்கு உள்ள அருள்மிகு சிவசூரியப் பெருமானுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது நடைமுறையில் உள்ளது.

சூரியன் குணங்கள்::

சூரியன் (ஞாயிறு) சூரிய தசை - ஆறு ஆண்டுகள்
ஒவ்வொரு ராசியிலும் : ஒரு மாதம் தங்கும் காலம்
ராசி - சிம்மம்
நட்சத்திரங்கள் - கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
நட்பு வீடுகள் - கடகம், விருச்சிகம், தனுசு, மீனம்
பகை வீடுகள் - ரிஷபம், மகரம், கும்பம்
உச்சம் - மேஷம்
நீச்சம் - துலாம்
அதி தேவதை - அக்னி
நிறம் - சிவப்பு
வாகனம் - ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்
தானியம் - கோதுமை
மலர் - வெண் தாமரை, எருக்கு
வஸ்திரம் - சிவப்பு ஆடை
ராசிக் கற்கள் - மாணிக்கம்
அன்னம் - கோதுமை, ரவா, சர்க்கரைப் பொங்கல்
பலன் - கண் நலம், உடல் நலம், ஆயுள் விருத்தி, சகல காரியங்களும் கைகூடும்.

நடை திறக்கும் நேரம்:

கோயில் தினமும் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமை விசேஷ நாள். எனவே ஞாயிற்றுக்கிழமை கூட்டம் மிக அதிகமாக இருக்கும் என்பதால், ஞாயிறுதோறும் காலை 5.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலும் மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.


ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாதம் சூரியன் சஞ்சரிப்பார். தனது சுழற்சியில் ஒருவருடைய ராசிக் கட்டத்தில் வந்து தங்கும் இடத்துக்கு ஏற்ப பலன்கள் இருக்கும். இவரது பிரவேசத்தைக் கொண்டே விசேஷ தினங்கள் கொண்டாடப்படுகின்றன.

உதாரணமாக மகர ராசியில் சூரியன் பிரவேசிக்கும்போது தை மாதப் பிறப்பைக் கொண்டாடுகிறோம். மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கும்போது தமிழ் வருஷப் பிறப்பு; சித்திரை பிறக்கிறது. மேஷ ராசியில் சூரியன் உச்சம் என்பதால் கடும் வெப்பம். ஜன்ம ராசியில் இருக்கும் சமயம் ஜாதகருக்கு அலைச்சல் இருந்தாலும் புகழ், கௌரவம், செல்வாக்கு அதிகரிக்கும்.

மரியாதை ஏற்படும். நோய்கள் வந்து வந்து போகும். வாழ்க்கையில் ஏற்றம் ஏற்படும். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறும் நிலையில், 5 நாட்களுக்கு முன்பாகவே செல்லப் போகும் ராசிக்கு உரிய பலன்களை சூரியன் தர ஆரம்பித்து விடுவார்.

போக்குவரத்து வசதி::

இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து நேரடி பஸ் வசதி உள்ளது.அல்லது கும்பகோணம் சென்று பின் அங்கிருந்து உள்ளூர் பஸ் மூலம் இந்த கோவிலுக்கு செல்லலாம்.

சூரியனார் கோயில்

ஸ்தல வரலாறு:

கும்பகோணத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் சூரியனார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் அருள்மிகு சிவசூரியபெருமான் திருக்கோயில் என்றும் அழைக்க்படுகிறது. சூரியனை முதன்மையாகக் கொண்டு நவக்கிரகங்களுக்கெனத் தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பம்சம் பெற்றுள்ளது. இந்த ஸ்ரீ சூரிய பகவானின் ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.

இரண்டு தலங்கள்:

புராண காலத்தில் இத்தலம் எருக்கங்காடாக இருந்தது. ஜனநடமாட்டம் காரணமாக பின்னர் காடுகள் அழிந்து, ஸ்ரீபிராணநாதேஸ்வரர் எழுந்தருளியுள்ள மேற்குப் பகுதி திருமங்கலக்குடி என்றும் சூரியன் உள்பட நவநாயகர்கள் ஆலயம் அமைந்துள்ள வடகிழக்குப் பகுதி சூரியனார்கோயில் என்றும் பெயர் பெற்று இரண்டு தலங்களாகப் பிரிந்தன.

சூரியன் நீராடிய தீர்த்தம்:

தொழுநோய் தோஷத்தைப் போக்கிக் கொள்ள நவ நாயகர்கள் தவம் செய்ய வந்தபோது இங்குள்ள ஒன்பது தீர்த்தங்களில் அவர்கள் நீராடித் தவம் புரிந்ததால், அத்தீர்த்தங்கள் நவ நாயகர்களின் பெயர் பெற்றன. அவற்றுள் ஒன்றான "சூரிய புஷ்கரணி", சூரியன் நீராடிய தீர்த்தம் என்று வரலாறு கூறுகிறது.

கோள் தீர்த்த விநாயகர்::

நவக்கிரக நாயகர்கள் இத்தலத்தில் தவம் செய்யத் தொடங்கும்போது, தங்களுக்கு ஏற்பட்ட தோஷம் நீங்கும் பொருட்டு விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அவர்களின் தோஷத்தை இவ்விநாயகர் தீர்த்ததால் இவருக்கு கோள்தீர்த்த விநாயகர் என்று பெயர் உண்டாயிற்று. கோயில் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் இந்தவிநாயகரின் ஆலயம் உள்ளது.

ஸ்ரீ சூரியபகவான்:

பிரதானமான கருவறையில் மேற்கு முகமாக நின்ற கோலத்தில் ஸ்ரீசூரிய பகவான் காட்சி தருகிறார். இவருக்கு இடதுபுறத்தில் உஷா தேவியும், வலது புறத்தில் பிரத்யுஷாதேவி என்னும் சாயா தேவியும் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர்.

சூரியனின் கர்ப்பக்கிரகத்தை ஒட்டினாற்போல் நவநாயகர்களில் சனி, புதன், செவ்வாய், சந்திரன், கேது, சுக்கிரன், ராகு ஆகிய ஏழு கிரக நாயகர்களுக்கு தனித் தனிச் சிறு கோயில்கள் உள்ளன. இந்த சிறப்பு வேறு எந்த கோவில்களிலும் இல்லை.

குரு மண்டபம் :

சூரியனின் உக்கிரத்தைத் தணிக்க சூரியனை நோக்கியபடி கிழக்கு முகமாக மகா மண்டபத்தில் குரு காட்சி தருகிறார். கருவறைக்கு வெளியே தென் மேற்கில் சனீஸ்வரனும், தெற்கில் புதனும், வடகிழக்கில் கேதுவும், வடக்கில் சுக்கிரனும், வடமேற்கில் ராகுவும்,தென் கிழக்கில் அங்காரகனும் (செவ்வாய்), கிழக்கில் சந்திரனும், தனித் தனிக் கோயில்களில் எழுந்தருளியுள்ளனர். அதாவது சூரியனைச் சுற்றியுள்ள எட்டுத் திசைகளிலும் ஏனைய எட்டு கிரக கோவில்கள் எழுந்தருளியுள்ளனர்.

வழிபடும் முறை :

ஆலயத்தை அடைந்தவுடன் முதலில் ராஜ கோபுரத்துக்கு வெளியே உள்ள சூரிய புஷ்கரணியில் நீராட வேண்டும் அல்லது அந்தத் தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் கோபுர தரிசனம் செய்துவிட்டு, கோள்தீர்த்த விநாயகரைத் தரிசிக்க வேண்டும். அதன் பின்னர் நவக்கிரக உற்சவ மூர்த்திகளைத் தரிசனம் செய்ய வேண்டும். அடுத்து ஸ்தபன மண்டபத்தை அடைந்து ஸ்ரீகாசி விசுவநாதர், ஸ்ரீவிசாலாட்சி அம்மையை வழிபட வேண்டும்.

பின் பிரதான ஸ்ரீ சூரிய பகவானைத் தரிசிக்க வேண்டும். சூரிய பகவானிடம் பிரார்த்தனை செய்த பிறகு, திரும்பி நின்று குரு பகவானை வழிபட வேண்டும். அடுத்து கிழக்கு முகமாக சனீஸ்வரர் உள்பட கிரக நாயகர்களை வழிபட்டால் மிகவும் நல்லது. கொடி மரத்தை வீழ்ந்து வணங்கி, பின் அங்கிருந்து வடகிழக்கு தெற்குப் பிரகாரம் வழியாக ஒன்பது முறை வலம் வரவேண்டும்.

வலம் வந்து முடித்த பிறகு, கொடி மரத்தடியில் மீண்டும் வீழ்ந்து வணங்கிவிட்டு, ஒருபுறமாகச் சென்று உட்கார்ந்து நவக்கிரக நாயகர்களைத் நினைத்து வணங்கவேண்டும்.

தோஷ நிவர்த்தி::

இந்த ஆலயத்தில் உள்ள நவக்கிரக நாயகர்கள், ஆயுதம் - வாகனம் இல்லாமல் அமைதியும் புன்முறுவல் தவழும் முகத்துடன் அனுக்கிரக மூர்த்திகளாக விளங்குவது சிறப்பு. புத்திர தோஷம், விவாகப் பிரதிபந்த தோஷம், உத்தியோகப் பிரதிபந்த தோஷம், சூரிய புத்தி, சூரிய திசை உள்ளவர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபட்டால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

சிறப்பு வழிபாடுகள் :

இத்திருக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் ஞாயிறு அன்று இங்கு உள்ள அருள்மிகு சிவசூரியப் பெருமானுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது நடைமுறையில் உள்ளது.

சூரியன் குணங்கள்::

சூரியன் (ஞாயிறு) சூரிய தசை - ஆறு ஆண்டுகள்
ஒவ்வொரு ராசியிலும் : ஒரு மாதம் தங்கும் காலம்
ராசி - சிம்மம்
நட்சத்திரங்கள் - கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
நட்பு வீடுகள் - கடகம், விருச்சிகம், தனுசு, மீனம்
பகை வீடுகள் - ரிஷபம், மகரம், கும்பம்
உச்சம் - மேஷம்
நீச்சம் - துலாம்
அதி தேவதை - அக்னி
நிறம் - சிவப்பு
வாகனம் - ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்
தானியம் - கோதுமை
மலர் - வெண் தாமரை, எருக்கு
வஸ்திரம் - சிவப்பு ஆடை
ராசிக் கற்கள் - மாணிக்கம்
அன்னம் - கோதுமை, ரவா, சர்க்கரைப் பொங்கல்
பலன் - கண் நலம், உடல் நலம், ஆயுள் விருத்தி, சகல காரியங்களும் கைகூடும்.

நடை திறக்கும் நேரம்:

கோயில் தினமும் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமை விசேஷ நாள். எனவே ஞாயிற்றுக்கிழமை கூட்டம் மிக அதிகமாக இருக்கும் என்பதால், ஞாயிறுதோறும் காலை 5.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலும் மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.


ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாதம் சூரியன் சஞ்சரிப்பார். தனது சுழற்சியில் ஒருவருடைய ராசிக் கட்டத்தில் வந்து தங்கும் இடத்துக்கு ஏற்ப பலன்கள் இருக்கும். இவரது பிரவேசத்தைக் கொண்டே விசேஷ தினங்கள் கொண்டாடப்படுகின்றன.

உதாரணமாக மகர ராசியில் சூரியன் பிரவேசிக்கும்போது தை மாதப் பிறப்பைக் கொண்டாடுகிறோம். மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கும்போது தமிழ் வருஷப் பிறப்பு; சித்திரை பிறக்கிறது. மேஷ ராசியில் சூரியன் உச்சம் என்பதால் கடும் வெப்பம். ஜன்ம ராசியில் இருக்கும் சமயம் ஜாதகருக்கு அலைச்சல் இருந்தாலும் புகழ், கௌரவம், செல்வாக்கு அதிகரிக்கும்.

மரியாதை ஏற்படும். நோய்கள் வந்து வந்து போகும். வாழ்க்கையில் ஏற்றம் ஏற்படும். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறும் நிலையில், 5 நாட்களுக்கு முன்பாகவே செல்லப் போகும் ராசிக்கு உரிய பலன்களை சூரியன் தர ஆரம்பித்து விடுவார்.

போக்குவரத்து வசதி::

இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து நேரடி பஸ் வசதி உள்ளது.அல்லது கும்பகோணம் சென்று பின் அங்கிருந்து உள்ளூர் பஸ் மூலம் இந்த கோவிலுக்கு செல்லலாம்.

ஸ்தல வரலாறு:

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், ஸ்ரீரமணா ஆசிரமத்துக்கும் பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்துக்கும் அருகில் ஸ்ரீவனதுர்கையம்மன் ஆலயம் உள்ளது. முன்னொரு காலத்தில் காடாக திகழ்ந்த இந்த மலையடிவாரப் பகுதியில், குளம் வெட்டும் பணி நடைபெற்றபோது, பூமியில் இருந்து அழகிய துர்கை விக்கிரகம் கிடைத்தது.

வனப் பகுதியில் கிடைத்ததால் அம்மனுக்கு ஸ்ரீவனதுர்கை என்று பெயர் சூட்டினார்கள். பிறகு அந்த இடத்தில் கோவிலும் கட்டி ஊர்மக்கள் வழிபட ஆரம்பித்தனர். திருவண்ணாமலையில், முன்பு ஒரு காலத்தில் முனிவர் ஒருவர் தவம் செய்து வந்தார். ஒருநாள், அந்த வழியே வந்த அரக்கன் ஒருவன், முனிவரின் தவத்தைத் கலைத்தான்.

அவரைக் கொல்ல முயன்றான். அவனிடம் இருந்து தப்பிக்க நினைத்த முனிவர், மானாக உருமாறினார். பிறகு வேகமாக ஓடி மலையடிவாரத்தை அடைந்து ஸ்ரீவனதுர்க்கை அம்மனிடம் சரணடைந்தார். தேவியும் அரக்கனை அழித்து முனிவரைக் காப்பாற்றினாள் என்கிறது ஸ்தல வரலாறு.

இன்றும், பக்தர்களுடைய துயரங்களையெல்லாம் போக்கி அருள்மாரி பொழியும் இந்த அம்மனை, கிரிவலத்துக்கு வரும் லட்சோப லட்சம் மக்கள் வழிபட்டு பயன் பெறுகிறார்கள் என்பது கண் கூடான உண்மை. கிரிவலத்துக்கு தவறாமல் செல்பவர்களுக்கு இது புரியும்.

கேட்டதெல்லாம் தரும் கற்பகவிருட்சகமாக திகழும் ஸ்ரீவதுர்க்கையை கருணைத் தெய்வம், தாயினும் நல்லாள் எனப்போற்றுகின்றனர் கிரிவலபக்தர்கள். இவளை வழிபட, தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. திருமணத் தடையாமல் கலங்கித் தவிப்பவர்கள் வெள்ளிக்கிழமை.

அமாவாசை அல்லது பவுர்ணமி தினத்தில் இங்கு வந்து அம்மனை தரிசித்து, எலுமிச்சை மாலை அணிவித்து, 48, எலுமிச்சை தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட கல்யாண வரம் வேண்டும். கன்னிப் பெண்களுக்கு மனதுக்கினிய மாப்பிள்ளையும், திருமணம் தள்ளிப்போகும் ஆண்களுக்கு நல்ல மணப்பெண்ணும் அமைவார்கள்.

அண்ணாமலையை கிரிவலம் வரும் எண்ணற்ற பக்தர்கள், ஸ்ரீவனதுர்க்கையின் அருளை அறிந்து ஆலயத்துக்கு வந்து எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டுப் பலன் பெறுகின்றனர். திருமண வரம், பிள்ளை பாக்கியம், உடல் ஆரோக்கியம் ஆகிய பிராத்தனைகள் பலித்த சந்தோஷத்தில் அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவித்தும், தீ மிதித்தும், பொங்கலிட்டும் தங்களது நேர்த்திக்கனைச் செலுத்திவிட்டுச் செல்கிறார்கள்.

இந்த தேவியின் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் விநாயகரும் விஷேமானவர். இவரை பஞ்சம் தவிர்க்கும் பிள்ளையார் என்று சிறப்பிக்கிறார்கள். கடும் வறட்சியோ, பஞ்சமோ ஏற்பட்டால், ஸ்ரீவனதுர்கையம்மன் கோவிலுக்கு வந்து, இந்தப் பிள்ளையாரை மனமுருகப் பிரார்த்தித்து வழிபட்டுவிட்டு, அவரது விக்கிரகத்தை அப்படியே சாய்த்து வைத்துவிடுவார்கள்.

சில நாட்களில் மழை வெளுத்து வாங்கும். ஏரி குளங்கள் எல்லாம் நீர் நிரம்பி வழியும். பிறகு ஆலயத்துக்கு வந்து, விநாயகரை நிமிர்த்தி வைத்து, அவருக்கு வழிபட்டுச் செல்வார்கள். கோவிலுக்கு அருகில் ஒரு வேப்ப மரமும், புற்றும் உள்ளன. செவ்வாய், வெள்ளி மற்றும்

ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனை வணங்கி, புற்றுக்குப் பால் ஊற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர். இதனால் நாக தோஷம் நீங்கி, நலமுடன் வாழலாம் என்பது நம்பிக்கை.

போக்குவரத்து வசதி:

இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ் வசதி உள்ளது. திருவண்ணாமலை சென்று பின் அங்கிருந்து நடை பயணமாக அல்லது ஆட்டோ மூலம் இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.

ஸ்ரீவனதுர்கையம்மன் கோவில்

ஸ்தல வரலாறு:

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், ஸ்ரீரமணா ஆசிரமத்துக்கும் பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்துக்கும் அருகில் ஸ்ரீவனதுர்கையம்மன் ஆலயம் உள்ளது. முன்னொரு காலத்தில் காடாக திகழ்ந்த இந்த மலையடிவாரப் பகுதியில், குளம் வெட்டும் பணி நடைபெற்றபோது, பூமியில் இருந்து அழகிய துர்கை விக்கிரகம் கிடைத்தது.

வனப் பகுதியில் கிடைத்ததால் அம்மனுக்கு ஸ்ரீவனதுர்கை என்று பெயர் சூட்டினார்கள். பிறகு அந்த இடத்தில் கோவிலும் கட்டி ஊர்மக்கள் வழிபட ஆரம்பித்தனர். திருவண்ணாமலையில், முன்பு ஒரு காலத்தில் முனிவர் ஒருவர் தவம் செய்து வந்தார். ஒருநாள், அந்த வழியே வந்த அரக்கன் ஒருவன், முனிவரின் தவத்தைத் கலைத்தான்.

அவரைக் கொல்ல முயன்றான். அவனிடம் இருந்து தப்பிக்க நினைத்த முனிவர், மானாக உருமாறினார். பிறகு வேகமாக ஓடி மலையடிவாரத்தை அடைந்து ஸ்ரீவனதுர்க்கை அம்மனிடம் சரணடைந்தார். தேவியும் அரக்கனை அழித்து முனிவரைக் காப்பாற்றினாள் என்கிறது ஸ்தல வரலாறு.

இன்றும், பக்தர்களுடைய துயரங்களையெல்லாம் போக்கி அருள்மாரி பொழியும் இந்த அம்மனை, கிரிவலத்துக்கு வரும் லட்சோப லட்சம் மக்கள் வழிபட்டு பயன் பெறுகிறார்கள் என்பது கண் கூடான உண்மை. கிரிவலத்துக்கு தவறாமல் செல்பவர்களுக்கு இது புரியும்.

கேட்டதெல்லாம் தரும் கற்பகவிருட்சகமாக திகழும் ஸ்ரீவதுர்க்கையை கருணைத் தெய்வம், தாயினும் நல்லாள் எனப்போற்றுகின்றனர் கிரிவலபக்தர்கள். இவளை வழிபட, தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. திருமணத் தடையாமல் கலங்கித் தவிப்பவர்கள் வெள்ளிக்கிழமை.

அமாவாசை அல்லது பவுர்ணமி தினத்தில் இங்கு வந்து அம்மனை தரிசித்து, எலுமிச்சை மாலை அணிவித்து, 48, எலுமிச்சை தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட கல்யாண வரம் வேண்டும். கன்னிப் பெண்களுக்கு மனதுக்கினிய மாப்பிள்ளையும், திருமணம் தள்ளிப்போகும் ஆண்களுக்கு நல்ல மணப்பெண்ணும் அமைவார்கள்.

அண்ணாமலையை கிரிவலம் வரும் எண்ணற்ற பக்தர்கள், ஸ்ரீவனதுர்க்கையின் அருளை அறிந்து ஆலயத்துக்கு வந்து எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டுப் பலன் பெறுகின்றனர். திருமண வரம், பிள்ளை பாக்கியம், உடல் ஆரோக்கியம் ஆகிய பிராத்தனைகள் பலித்த சந்தோஷத்தில் அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவித்தும், தீ மிதித்தும், பொங்கலிட்டும் தங்களது நேர்த்திக்கனைச் செலுத்திவிட்டுச் செல்கிறார்கள்.

இந்த தேவியின் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் விநாயகரும் விஷேமானவர். இவரை பஞ்சம் தவிர்க்கும் பிள்ளையார் என்று சிறப்பிக்கிறார்கள். கடும் வறட்சியோ, பஞ்சமோ ஏற்பட்டால், ஸ்ரீவனதுர்கையம்மன் கோவிலுக்கு வந்து, இந்தப் பிள்ளையாரை மனமுருகப் பிரார்த்தித்து வழிபட்டுவிட்டு, அவரது விக்கிரகத்தை அப்படியே சாய்த்து வைத்துவிடுவார்கள்.

சில நாட்களில் மழை வெளுத்து வாங்கும். ஏரி குளங்கள் எல்லாம் நீர் நிரம்பி வழியும். பிறகு ஆலயத்துக்கு வந்து, விநாயகரை நிமிர்த்தி வைத்து, அவருக்கு வழிபட்டுச் செல்வார்கள். கோவிலுக்கு அருகில் ஒரு வேப்ப மரமும், புற்றும் உள்ளன. செவ்வாய், வெள்ளி மற்றும்

ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனை வணங்கி, புற்றுக்குப் பால் ஊற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர். இதனால் நாக தோஷம் நீங்கி, நலமுடன் வாழலாம் என்பது நம்பிக்கை.

போக்குவரத்து வசதி:

இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ் வசதி உள்ளது. திருவண்ணாமலை சென்று பின் அங்கிருந்து நடை பயணமாக அல்லது ஆட்டோ மூலம் இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.

சிலருக்கு குழந்தைகள் பிறந்தாலும், இறைசித்தத்தால் நம்மோடு வாழக் கொடுத்து வைப்பதில்லை. இவர்களின் குறைகளை தீர்த்து, ஆயுள்பலமுள்ள குழந்தைகள் பிறக்க அருள் செய்கிறார் இந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர். இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.குழந்தைகளின் ஆயுள்விருத்திக்கு இக்கோயில் மிகவும் பெயர் பெற்றது.

ஸ்தல வரலாறு:::

சித்தர்கள் சிலர் மீனாட்சி சுந்தரேஸ்வரரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தனர். இவர்கள் நினைத்தபோதெல்லாம் சுந்தரேஸ்வரரை தரிசிக்க விரும்பினர். சித்தர்கள் தனித்து சிவனை வணங்குவதையே விரும்புவர். இதற்காக, இவர்கள் காட்டுப்பகுதியில் லிங்கம் இருக்கிறதா என தேடி அலைந்தனர் . ஓரிடத்தில் லிங்கம் ஒன்று இருந்தது. அதையே சுந்தரேஸ்வரராக கருதி வழிபட்டனர். ஆண்டிகளான சித்தர்கள் தங்கியதால், அந்தப்பகுதிக்கு ஆண்டிப்பட்டி என்று பெயர் வந்தது.

சிறப்புகள்:::

இந்த கோவிலில் சூரியனும் சந்திரனும் அருகருகே அருள் பாலிக்கின்றனர். எனவே இங்கு தினமும் அமாவாசை தர்ப்பணம் செய்கின்றனர். சிவனுக்கும் அம்மனுக்கும் நடுவில் முருகன் சன்னதி அமைந்துள்ளதால், சோமாஸ்கந்த தலமாக உள்ளது. இதை வழிபட்டால் கைலாயத்தை வழிபட்ட பலன் கிடைக்கும். இத்தல பிள்ளையார் 'கோடி விநாயகர்' எனப்படுகிறார்.

முருகன் வடக்கு பார்த்து மயில் மீது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்குள்ள வீராசன தட்சிணாமூர்த்தியின் பாதத்தின் கீழ் சப்த ரிஷிகள் அருள்பாலிக்கின்றனர். ஏழு நிலை ராஜகோபுரம் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது.மூலவர் சுந்தரேஸ்வர் கிழக்கு நோக்கியும், அன்னை மீனாட்சி தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர்.

கோயில் பிரகாரத்தில் கோடி விநாயகர், சந்தான விநாயகர், நாகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை, சண்டிகேஸ்வரர், கஜலட்சுமி, நவக்கிரகங்கள், பைரவர் அருள்பாலிக்கின்றனர். ஆண்டிபட்டியை சுற்றியுள்ள ஊர்களில் நடக்கும் எந்த விழாவாக இருந்தாலும் இத்தலத்தில் வழிபாடு செய்த பின்னரே தொடங்குவது இன்றும் நடை முறையில் உள்ளது..

முக்கிய சிறப்புகள்:::

குழந்தை பிறந்து, பிறந்து இறக்கும் தோஷம் உள்ளவர்கள், இங்குள்ள சிவன், முருகன், அம்மன் மூவருக்கும் பாலபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்தால், தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. குழந்தைபாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள சந்தான விநாயகரை வழிபடுகிறார்கள். வழக்குகளில் சிக்கி தவிப்பவர்கள் நெய் விளக்கேற்றுகின்றனர்.

சிவனாண்டி சித்தரின் ஜீவ சமாதி இங்குள்ளது. தீராத நோய்களால் அவதிப்படுபவர்கள் இவரது சன்னதியில் தரப்படும் விபூதியை பூசினால் நோய்கள் குணமாகும் என்று நம்புகிறார்கள்.. இங்கு திருமணம் செய்து கொண்டால், எந்தவித குறைபாடும் இன்றி வாழலாம் என்பதால், ஏராளமான திருமணங்கள் இன்றும் நடை பெறுகிறது.

நடை திறக்கும் நேரம்:::

இந்த கோவிலில் காலை 7 -12 மணிக்கும் , மாலை 5.30 - மணிக்கும்,இரவு 8.30 மணிக்கும் நடை திறந்திருக்கும்.

போக்குவரத்து வசதி:::

இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து செல்ல வேண்டும்.பஸ் மூலம் தேனி சென்று பின் அங்கிருந்து 60 கி.மீ., தூரத்தில் ஆண்டிபட்டி உள்ளது. அங்குள்ள சந்தை அருகே இந்த கோவில் அமைந்துள்ளது. மதுரை அல்லது ஆண்டிபட்டி சென்றும் இந்த கோவிலுக்கு செல்லலாம்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்

சிலருக்கு குழந்தைகள் பிறந்தாலும், இறைசித்தத்தால் நம்மோடு வாழக் கொடுத்து வைப்பதில்லை. இவர்களின் குறைகளை தீர்த்து, ஆயுள்பலமுள்ள குழந்தைகள் பிறக்க அருள் செய்கிறார் இந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர். இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.குழந்தைகளின் ஆயுள்விருத்திக்கு இக்கோயில் மிகவும் பெயர் பெற்றது.

ஸ்தல வரலாறு:::

சித்தர்கள் சிலர் மீனாட்சி சுந்தரேஸ்வரரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தனர். இவர்கள் நினைத்தபோதெல்லாம் சுந்தரேஸ்வரரை தரிசிக்க விரும்பினர். சித்தர்கள் தனித்து சிவனை வணங்குவதையே விரும்புவர். இதற்காக, இவர்கள் காட்டுப்பகுதியில் லிங்கம் இருக்கிறதா என தேடி அலைந்தனர் . ஓரிடத்தில் லிங்கம் ஒன்று இருந்தது. அதையே சுந்தரேஸ்வரராக கருதி வழிபட்டனர். ஆண்டிகளான சித்தர்கள் தங்கியதால், அந்தப்பகுதிக்கு ஆண்டிப்பட்டி என்று பெயர் வந்தது.

சிறப்புகள்:::

இந்த கோவிலில் சூரியனும் சந்திரனும் அருகருகே அருள் பாலிக்கின்றனர். எனவே இங்கு தினமும் அமாவாசை தர்ப்பணம் செய்கின்றனர். சிவனுக்கும் அம்மனுக்கும் நடுவில் முருகன் சன்னதி அமைந்துள்ளதால், சோமாஸ்கந்த தலமாக உள்ளது. இதை வழிபட்டால் கைலாயத்தை வழிபட்ட பலன் கிடைக்கும். இத்தல பிள்ளையார் 'கோடி விநாயகர்' எனப்படுகிறார்.

முருகன் வடக்கு பார்த்து மயில் மீது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்குள்ள வீராசன தட்சிணாமூர்த்தியின் பாதத்தின் கீழ் சப்த ரிஷிகள் அருள்பாலிக்கின்றனர். ஏழு நிலை ராஜகோபுரம் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது.மூலவர் சுந்தரேஸ்வர் கிழக்கு நோக்கியும், அன்னை மீனாட்சி தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர்.

கோயில் பிரகாரத்தில் கோடி விநாயகர், சந்தான விநாயகர், நாகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை, சண்டிகேஸ்வரர், கஜலட்சுமி, நவக்கிரகங்கள், பைரவர் அருள்பாலிக்கின்றனர். ஆண்டிபட்டியை சுற்றியுள்ள ஊர்களில் நடக்கும் எந்த விழாவாக இருந்தாலும் இத்தலத்தில் வழிபாடு செய்த பின்னரே தொடங்குவது இன்றும் நடை முறையில் உள்ளது..

முக்கிய சிறப்புகள்:::

குழந்தை பிறந்து, பிறந்து இறக்கும் தோஷம் உள்ளவர்கள், இங்குள்ள சிவன், முருகன், அம்மன் மூவருக்கும் பாலபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்தால், தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. குழந்தைபாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள சந்தான விநாயகரை வழிபடுகிறார்கள். வழக்குகளில் சிக்கி தவிப்பவர்கள் நெய் விளக்கேற்றுகின்றனர்.

சிவனாண்டி சித்தரின் ஜீவ சமாதி இங்குள்ளது. தீராத நோய்களால் அவதிப்படுபவர்கள் இவரது சன்னதியில் தரப்படும் விபூதியை பூசினால் நோய்கள் குணமாகும் என்று நம்புகிறார்கள்.. இங்கு திருமணம் செய்து கொண்டால், எந்தவித குறைபாடும் இன்றி வாழலாம் என்பதால், ஏராளமான திருமணங்கள் இன்றும் நடை பெறுகிறது.

நடை திறக்கும் நேரம்:::

இந்த கோவிலில் காலை 7 -12 மணிக்கும் , மாலை 5.30 - மணிக்கும்,இரவு 8.30 மணிக்கும் நடை திறந்திருக்கும்.

போக்குவரத்து வசதி:::

இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து செல்ல வேண்டும்.பஸ் மூலம் தேனி சென்று பின் அங்கிருந்து 60 கி.மீ., தூரத்தில் ஆண்டிபட்டி உள்ளது. அங்குள்ள சந்தை அருகே இந்த கோவில் அமைந்துள்ளது. மதுரை அல்லது ஆண்டிபட்டி சென்றும் இந்த கோவிலுக்கு செல்லலாம்.

ஸ்தல வரலாறு::

இங்குள்ள இறைவன் சுவர்ணபுரீஸ்வரர் இறைவி சுவர்ணாம்பிகை பைரவர் சுவர்ண பைரவர் ஆவர்.இத்தலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. சிவனின் தரிசனம் வேண்டி 16 ஆண்டு காலம் கடும் தவம் மேற்கொண்டார் காகபுஜண்ட சித்தர். இவர மேற்கொண்ட தவத்தின் காரணமாக இறைவன் 16 முகங்களை கொண்டவராக லிங்கமாக காட்சி தந்தார்.

இந்த சித்தர் இறையடி சேர்ந்தபின், வானகோவராயன் என்ற மன்னன் இவ்விடத்தில் கோவில் எழுப்பினான். இத்தலத்தின் இறைவன் அருளால் இப்பகுதி மக்கள் பொன், பொருளுடன் செல்வச் செழிப்பாக வாழ்ந்தனர். எனவே இத்தலம் "பொன்பரப்பி' என்றும், இறைவன் "சுவர்ணபுரீஸ்வரர்' என்றும், அம்மன் "சுவர்ணாம்பிகை' என்றும், பைரவர் "சுவர்ண பைரவர்' என்றும் அழைக்கப்படுகின்றனர்.

இத்திருத்தலத்தின் மூலஸ்தானமும்,அர்த்த மண்டபமும் எப்போதும் உஷ்ணத்துடன் இருக்கும். ஏனென்றால் இத்தலத்தில் உள்ள சிவலிங்கத்தை சூரியகாந்தக்கல்லால் வடித்துள்ளனர். சிவபெருமான் இத்தலத்தில் அக்னி சொரூபமாக உள்ளார். சூரியகாந்தக்கல் நவபாஷாணத்திற்கு ஒப்பானது. லிங்கத்திற்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை பருகினால் நோய்கள் விரைவில் குணமாக குணமடைகின்றன.

மேலும் குழந்தை செல்வம் வேண்டுவோர், ஐப்பசி பௌவுர்ணமியில் நடைபெறும் அன்னாபிஷேகத்தின் போது தரப்படும் பாகற்காய் குழம்பை பிரசாதமாக சாப்பிடுகிறார்கள். இத்தலத்திலுள்ள இறைவன் பதினாறு பட்டைகளுடன் இருப்பதால் பதினாறு முக லிங்கம் எ‌ன்றும் அழைக்கப்படுகிறார்.

பொதுவாக பதினாறு முக லிங்கத்தில், அதன் பாணம் மட்டுமே 16 பட்டைகளுடன் இருக்கும். ஆனால், இங்கு ஆவுடையாரும் (பீடம்) 16 பட்டைகளுடன் அமைந்துள்ளது மிகவும் தனி சிறப்பு ஆகும். பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ, 16 பட்டை லிங்கமான சுவர்ணபுரீஸ்வரரை கார்த்திகை சோமவாரத்தில் வழிபடுவது சிறப்பு.

இத்திருத்தலத்தில் உள்ள அம்பாள் மகாலட்சுமி அம்சத்துடன் சுவர்ணாம்பிகை என்ற பெயருடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். மேலும் இந்த கோவிலில் காகபுஜண்டர், மனைவி பகுளாதேவி ஆகியோரின் ஜீவசமாதி அம்பாளின் பார்வையில் படும்படி உள்ளது சிறப்பு வாய்ந்தது ஆகும். காகபுஜண்டர் சித்தர், சிவனின் தலையிலுள்ள சந்திரனின் கலையிலிருந்து தோன்றியவர்.

நினைத்த நேரத்தில் காக வடிவம் எடுக்கும் தன்மை கொண்டவர். இத்தலத்தில் உள்ள நந்தி சிறியதாக இருக்கும். ராகு தோஷ நிவர்த்திக்காக இந்த நந்திக்கு பால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அப்போது அபிஷேகப்பால் நீல நிறமாக மாறுகிறது. "பால நந்தி' என்பது இதன் திருநாமம் ஆகும். முருகன் ஆறுமுகத்துடனும், 12 திருக்கரங்களுடனும் 8 அடி உயரத்தில் மயிலில் அமர்ந்த கோலத்தில் உள்ளார். முருகனுக்கு வலது பக்கம் உள்ள வள்ளி தலை சாய்த்து நிற்கிறாள்.

வழிபடுவதால் ஏற்படும் பலன்கள்:::

மூலஸ்தானத்தில் காகபுஜண்டரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க இங்குள்ள பாணலிங்கத்திற்கு, பாலில் மிளகை அரைத்து கலந்து தடவி வழிபாடு செய்கின்றனர். அவிட்டம் நட்சத்திரத்திற்குரியவர்கள் தங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று, சிவனுக்கு தேனபிஷேகம் வழிபடுவது சிறப்பு.

சந்திர தோஷம், சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வழிபட்டால் தோஷங்கள் நீங்கும். இங்குள்ள சிவலிங்கம் சித்தர் பிரதிஷ்டை என்பதால், கிரக தோஷம் உள்ளவர்கள், சிவனுக்கு தேனபிஷேகம் செய்து வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை..

நடை திறக்கும் நேரம்::

கோவில் காலை 5.30-லிருந்து இரவு 9.30 மணி வரை.

போக்குவரத்து வசதி::

சென்னை கோயம்பேட்டில் இருந்து கள்ளக்குறிச்சி சென்று பின் அங்கிருந்து 27 கி.மீ. தூரத்தில் உள்ள அம்மையகரகம் சென்று பின் அங்கிருந்து பேருந்தில் சென்றால் ஒரு கி.மீ. தூரத்தில் இந்த கோவில் உள்ளது. சென்னையில் இருந்து சேலம் சென்று பின் அங்கிருந்து கள்ளக்குறிச்சி வழியாகவும் இந்த கோவிலுக்கு செல்லலாம்.

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து சேலம் செல்ல நேரடி ரெயில் வசதி உள்ளது.சேலம் செல்லும் ரெயில்கள் (எழும்பூர் ரெயில் நிலையம் வழியாக) திருவனந்தபுரம் மெயில் இரவு7.45 மணி, சேரன் எக்ஸ்பிரஸ் இரவு 10.10 மணி, கோவை எக்ஸ்பிரஸ் காலை 6 .25 மணிக்கு

சுவர்ணபுரீஸ்வரர் கோவில்

ஸ்தல வரலாறு::

இங்குள்ள இறைவன் சுவர்ணபுரீஸ்வரர் இறைவி சுவர்ணாம்பிகை பைரவர் சுவர்ண பைரவர் ஆவர்.இத்தலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. சிவனின் தரிசனம் வேண்டி 16 ஆண்டு காலம் கடும் தவம் மேற்கொண்டார் காகபுஜண்ட சித்தர். இவர மேற்கொண்ட தவத்தின் காரணமாக இறைவன் 16 முகங்களை கொண்டவராக லிங்கமாக காட்சி தந்தார்.

இந்த சித்தர் இறையடி சேர்ந்தபின், வானகோவராயன் என்ற மன்னன் இவ்விடத்தில் கோவில் எழுப்பினான். இத்தலத்தின் இறைவன் அருளால் இப்பகுதி மக்கள் பொன், பொருளுடன் செல்வச் செழிப்பாக வாழ்ந்தனர். எனவே இத்தலம் "பொன்பரப்பி' என்றும், இறைவன் "சுவர்ணபுரீஸ்வரர்' என்றும், அம்மன் "சுவர்ணாம்பிகை' என்றும், பைரவர் "சுவர்ண பைரவர்' என்றும் அழைக்கப்படுகின்றனர்.

இத்திருத்தலத்தின் மூலஸ்தானமும்,அர்த்த மண்டபமும் எப்போதும் உஷ்ணத்துடன் இருக்கும். ஏனென்றால் இத்தலத்தில் உள்ள சிவலிங்கத்தை சூரியகாந்தக்கல்லால் வடித்துள்ளனர். சிவபெருமான் இத்தலத்தில் அக்னி சொரூபமாக உள்ளார். சூரியகாந்தக்கல் நவபாஷாணத்திற்கு ஒப்பானது. லிங்கத்திற்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை பருகினால் நோய்கள் விரைவில் குணமாக குணமடைகின்றன.

மேலும் குழந்தை செல்வம் வேண்டுவோர், ஐப்பசி பௌவுர்ணமியில் நடைபெறும் அன்னாபிஷேகத்தின் போது தரப்படும் பாகற்காய் குழம்பை பிரசாதமாக சாப்பிடுகிறார்கள். இத்தலத்திலுள்ள இறைவன் பதினாறு பட்டைகளுடன் இருப்பதால் பதினாறு முக லிங்கம் எ‌ன்றும் அழைக்கப்படுகிறார்.

பொதுவாக பதினாறு முக லிங்கத்தில், அதன் பாணம் மட்டுமே 16 பட்டைகளுடன் இருக்கும். ஆனால், இங்கு ஆவுடையாரும் (பீடம்) 16 பட்டைகளுடன் அமைந்துள்ளது மிகவும் தனி சிறப்பு ஆகும். பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ, 16 பட்டை லிங்கமான சுவர்ணபுரீஸ்வரரை கார்த்திகை சோமவாரத்தில் வழிபடுவது சிறப்பு.

இத்திருத்தலத்தில் உள்ள அம்பாள் மகாலட்சுமி அம்சத்துடன் சுவர்ணாம்பிகை என்ற பெயருடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். மேலும் இந்த கோவிலில் காகபுஜண்டர், மனைவி பகுளாதேவி ஆகியோரின் ஜீவசமாதி அம்பாளின் பார்வையில் படும்படி உள்ளது சிறப்பு வாய்ந்தது ஆகும். காகபுஜண்டர் சித்தர், சிவனின் தலையிலுள்ள சந்திரனின் கலையிலிருந்து தோன்றியவர்.

நினைத்த நேரத்தில் காக வடிவம் எடுக்கும் தன்மை கொண்டவர். இத்தலத்தில் உள்ள நந்தி சிறியதாக இருக்கும். ராகு தோஷ நிவர்த்திக்காக இந்த நந்திக்கு பால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அப்போது அபிஷேகப்பால் நீல நிறமாக மாறுகிறது. "பால நந்தி' என்பது இதன் திருநாமம் ஆகும். முருகன் ஆறுமுகத்துடனும், 12 திருக்கரங்களுடனும் 8 அடி உயரத்தில் மயிலில் அமர்ந்த கோலத்தில் உள்ளார். முருகனுக்கு வலது பக்கம் உள்ள வள்ளி தலை சாய்த்து நிற்கிறாள்.

வழிபடுவதால் ஏற்படும் பலன்கள்:::

மூலஸ்தானத்தில் காகபுஜண்டரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க இங்குள்ள பாணலிங்கத்திற்கு, பாலில் மிளகை அரைத்து கலந்து தடவி வழிபாடு செய்கின்றனர். அவிட்டம் நட்சத்திரத்திற்குரியவர்கள் தங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று, சிவனுக்கு தேனபிஷேகம் வழிபடுவது சிறப்பு.

சந்திர தோஷம், சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வழிபட்டால் தோஷங்கள் நீங்கும். இங்குள்ள சிவலிங்கம் சித்தர் பிரதிஷ்டை என்பதால், கிரக தோஷம் உள்ளவர்கள், சிவனுக்கு தேனபிஷேகம் செய்து வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை..

நடை திறக்கும் நேரம்::

கோவில் காலை 5.30-லிருந்து இரவு 9.30 மணி வரை.

போக்குவரத்து வசதி::

சென்னை கோயம்பேட்டில் இருந்து கள்ளக்குறிச்சி சென்று பின் அங்கிருந்து 27 கி.மீ. தூரத்தில் உள்ள அம்மையகரகம் சென்று பின் அங்கிருந்து பேருந்தில் சென்றால் ஒரு கி.மீ. தூரத்தில் இந்த கோவில் உள்ளது. சென்னையில் இருந்து சேலம் சென்று பின் அங்கிருந்து கள்ளக்குறிச்சி வழியாகவும் இந்த கோவிலுக்கு செல்லலாம்.

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து சேலம் செல்ல நேரடி ரெயில் வசதி உள்ளது.சேலம் செல்லும் ரெயில்கள் (எழும்பூர் ரெயில் நிலையம் வழியாக) திருவனந்தபுரம் மெயில் இரவு7.45 மணி, சேரன் எக்ஸ்பிரஸ் இரவு 10.10 மணி, கோவை எக்ஸ்பிரஸ் காலை 6 .25 மணிக்கு

கோவில் வரலாறு:::

திருச்செந்தூர் முருகன் கோவில் இசை முழங்கும் கடலோரம் அமைந்துள்ளது. சூரிய உதயம் முருகனின் கண் முன்பே நடைபெறுகிறது. அலைகள் ஓம் எனும் பிரணவ மந்திரத்தை ஓதியபடி அழகன் திருவடிகளை பணிந்து செல்கிறது. உலகத்தை ஆளும் மும்மூர்த்தியாக சுப்பிரமணிய சுவாமி அருள் பாலிக்கிறார்.

இந்த கோவிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு உந்து சக்தியாக பஞ்சலிங்கங்களும் வெங்கடேச பெருமாளும் உள்ளனர். பெருமாள் சன்னதியில் பள்ளி கொண்டுள்ள பெருமாள் வயிற்றின் தொப்புள் கொடியில் அமர்ந்து பிரம்மா அருள் பாலிக்கிறார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தூத்துக்குடியில் இருந்து 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. குறிஞ்சிக் (மலை) கடவுள் முருகன்.

இங்கு கடற்கரையில் சந்தான மலையில் அமர்ந்துள்ளார். "செந்தில் மாமலையுறும் செங்கல்வராயன்'' என்று கந்தசஷ்டி கவசத்தில் தேவராய சுவாமிகள் குறிப்பிடுகிறார். வடமொழியில் இதை கந்தமாதன பர்வதம் என்பர். திருமுருகாற்றுப் படையில் இவ்வூர் திருச்சீரலைவாய் எனக் கூறப்படுகிறது. செந்தில் என்ற பெயரும் உண்டு.

செந்து என்றால் உயிர். இல்-அடைக்கலமான இடம். உயிர்களுக்கு அடைக்கலமான இடமான செந்தில், என்ற பெயர் மருவி செந்தூர் என்றாயிற்று. வடமொழியில் ஜெயந்திபுரம் என்று கூறுவர். சேந்து (முருகன்)+இல் என்றும் கூறலாம். சூரனை வென்ற பின்னரே திருப்பரங்குன்றத்தில் தெய்வானை திருமணம் நடைபெற்றது.

எனவே திருச்செந்தூரே முதற்படை வீடு என்று கூறுவாரும் உண்டு. ஆனால் நக்கீரர் திருப்பரங்குன்றத்தை முதலிலும், திருச்செந்தூரை இரண்டாவதும் குறிப்பிடுகிறார். கடைச்சங்க காலப்புலவர்கள் இவ்வூரைக் குறித்திருப்பதால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவ்வூர் சிறப்புற்று விளங்கியதை அறிய முடிகிறது.

அகநானூரில் பரணர் என்னும் புலவர் அலைவாயின் சிறப்பைப் பாடியுள்ளார். புறநானூற்றில் மதுரை மருதன் இளநாகனார்மானும் புலவர் "வெண் தலைப்புணரி அலைக்குஞ்செந்தில்'' எனப்பாடுகிறார். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் "சீர்கெழு செந்தில்'' எனப்பாடி உள்ளார்.

முருகன் கோவிலில் ரூ.3-க்கு சாப்பாடு::

திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் ஏழை-எளிய மக்கள் பசியுடன் செல்லக்கூடாது என்பதால் பல்லாண்டுகளுக்கு முன்பே பச்சரிசி சாதம் விற்பனை கோவில் நிர்வாகம் சார்பில் நடந்து வருகிறது. தற்போது ரூ. 3-க்கு விற்பனை செய்யப்படும் இந்த கட்டி சாதத்தை வாங்கினால் 2 பேர் வரை உண்டு பசி ஆறலாம்.

தினமும் நூற்றுக்கணக்கான கட்டி சாதம் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த கட்டி சாதம் கோவில் நிலத்துக்கு குத்தகையாக கிடைக்கும். நெல் மற்றும் விவசாயிகள் காணிக்கையாக செலுத்தும் நெல் மூலம் அரிசி உற்பத்தி செய்து சமையல் செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது கோவில் அன்னதானத் திட்டம் மூலம் ஏராளமான வெளியூர் பக்தர்கள் சாப்பிட்டு செல்வது குறிப்பிடத்தக்கது ஆகும்.

திருச்செந்தூரில் இருந்து இலங்கை சென்ற அனுமன்::::

திருச்செந்தூர் கடல் பகுதியில் இருந்து தென் இலங்கை மிக அருகாமையில் அமைந்துள்ளது. திருச்செந்தூரின் கடலோரத்தில் உள்ள 24 தீர்த்தங்களில் சேது தீர்த்தமும் ஒன்று. இங்கிருந்து தான் அனுமன் பாலம் அமைத்து இலங்கைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொண்டால் சேதுசமுத்திர திட்டம் எந்தவித இடையூறும் இல்லாமல் நிறைவேறும் என்ற கருத்து வரலாற்று ஆய்வாளர்களால் எடுத்து கூறப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்துக்கு அருகாமையில் அமைந்திருப்பது வட இலங்கை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் விளக்கம் ஆகும்.

கேட்டவரம் தரும் வள்ளல் செந்திலாண்டவர்:::

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி சூரனை வதம் செய்துவிட்டு சிவனை பூஜை செய்யும் தவக் கோலத்தில் காட்சி அளிக்கிறார். அவரது கையில் உத்ராட்ச மாலை, அபயகஸ்தம், தாமரை ஆகியவை உள்ளன. மேலும் ஒரு கையால் அவர் பக்தர்களை பார்த்து ஆசீர்வதிக்கிறார். சாந்த சொரூபியாக உள்ள செந்திலாண்டவர் கடல் போல் கருணை மனம் கொண்டவர்.

கடல் பல உயிர்களை பாதுகாத்து அடைக்கலம் கொடுத்துள்ளது போல செந்திலாண்டவர் தன்னை நம்பி வரும் பக்தர்களின் குறை தீர்த்து வைக்கிறார். அவர் பக்தர்களை ஆசீர்வதிப்பதால் அவரை தரிசிக்கும் பக்தர்கள் பகையை வென்று வலம் காணுவார்கள் என்பது ஐதீகம். அது மட்டுமின்றி முருகன் அருளால் பக்தர்கள் கேட்கும் வரம் அனைத்தும் கிடைக்கும்.

வரவு-செலவு கேட்கும் முருகன்: சுப்பிரமணிய சுவாமி தினமும் இரவு வள்ளியம்மாள் சன்னதிக்கு சென்றதும் அங்கு சுவாமியும் - வள்ளியும் பள்ளியறை மஞ்சத்தில் எழுந்தருள்வார்கள். அப்போது முருகனுக்கு வரவு-செலவு குறித்த விவரங்கள் கூறப்படும். கோவில் கட்டணம் மூலம் கிடைக்கும் வருமானமும், திருப்பணி செலவும் தெரிவிக்கப்படும்.

அதன்பிறகு பள்ளியறை தீபாராதனையாகி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். முன்னதாக சிவிலி என்றழைக்கப்படும் பல்லக்கில் சுவாமி கோவிலை 3 முறை வலம் வருவார். மேலும் ஆவணி, மாசி 6-ம் திருவிழாவின் போது பட்டோலை மூலம் முருகனிடம் சொத்து விபரங்களை தெரிவிப்பார்கள்.

எல்லா செல்வமும் கிடைக்கும்:::

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தினம் முதல் சஷ்டிதிதி வரை சஷ்டி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. எல்லா முருகன் கோவில்களிலும் மிகவும் விசேஷமாக இந்த உற்சவம் கொண்டாடப்படுகிறது.

குறிப்பாக திருச்செந்தூர் முருகன் திருத்தலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பாலசுப்பிரமணியரின் புகழைப்பாடி சண்முக கவசம் முழங்க வலம் வருவார்கள். கந்தசஷ்டி விரதத்தை சிலர் பஞ்சாமிர்தம் மட்டுமே சாப்பிட்டு இருப்பவர்களும் உண்டு. என்றாலும் அவரவர் உடல் நலத்துக்கு ஏற்ப விரதம் இருக்கலாம்.

முருகனைப் போற்றித் துதிக்க எத்தனையோ கவசங்கள் உள்ளன. ஆனால் கோடிக்கணக்கான பக்தர்கள் நாவில் விளையாடுவது கந்தசஷ்டி கவசம் மற்றும் சுப்பிரமணிய கவசம். இந்த கவசத்தை எந்த அளவுக்கு நாம் மனம் உருகி சொல்கிறோமோ அந்த அளவுக்கு முருகன் திருஅருள்ளால் நம் வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும்.

6 பொருள்:::

ஆறு சமயங்கட்கும், ஆறு ஆதாரங்கட்கும், ஆறு அத்துவாக்களுக்கும், அறுபடை வீடுகட்கும் அதிபன் ஆறுமுருகப் பெருமான். முருகன் என்ற பெயரும் 6 பொருளைக் கொண்டது. தெய்வத்தன்மை, இனிமை, இளமை, மணம், மகிழ்ச்சி, அழகு ஆகிய 6 தன்மைகளை உடையவன் முருகன்.

கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு, மேல், கீழ் என்ற 6 திசைகளிலும் பார்வை உள்ளதால் ஆறுமுகன் என்கிறார் அருணகிரிநாதர். ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோ முகமும் சேர்ந்தது ஆறுமுகம்.

தெய்வசிகாமணி:::

நமது உடம்பில் உயர்ந்த பாகம் தலை. அதற்கு மேல் இருப்பது சிகை. அதற்கும் மேல் இருப்பது மணி. அதாவது சிகாமணி மனிதனை விட உயர்ந்தவர்கள் தேவர்கள். தேவர்களுள் உயர்ந்தவர்கள் சிவன், பிரம்மா, விஷ்ணு. இந்த மூவரில் உயர்ந்தவர் சிவன். அவருக்கே உபதேசம் செய்தவர் முருகப்பெருமான். இதனால் தன் உச்சி மேல் வைத்து முருகனை சிவன் பூஜித்தார். இதனால் முருகன் தெய்வசிகாமணி என்ற சிறப்பு நாமத்தைப் பெற்றார்.

தமிழே முருகன்::::

முருகக் கடவுளின் உருவ அமைப்பையும் தமிழ்மொழியின் அமைப்பையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நிறைய ஒற்றுமை இருப்பதைக் காணலாம். முருகன் 3 கண் உடையவர். இடதுக் கண் சந்திரன். வலது கண் சூரியன். மத்தியில் அக்னி எனும் நெற்றிக்கண். 6 முகங்களிலும் மொத்தம் 18 கண் தமிழில் வழங்கும் மெய் எழுத்துக்களும் 18.

மெய் எழுத்துக்களில் வல்லினம் 6, மெல்லினம் 6, இடையினம் 6. முருகனின் முகங்களும் 6. தமிழில் உயிரெழுத்துக்கள் 12. முருகனின் தோள்கள் 12. உலகின் தமிழ் மொழியில் மட்டுமே ஆயுத எழுத்து உள்ளது. இச்சை, கிரியை, ஞானம் என்ற 3 சக்திகளின் வடிவம் வேல். இ

து முருகப் பெருமானுக்கே உரிய தனி ஆயுதம். முருகு என்ற சொல்லிலும் மு-மெல்லினம், ரு-இடையினம், கு-வல்லினம் என்ற 3 வகை எழுத்துக்களும் அமைந்திருப்பது அருமையிலும் அருமை. இதனால் முருகனை தமிழ்க் கடவுள் என்கிறோம். இதை உணர்ந்த அருணகிரிநாதர் முருகனை, ``செந்தமிழ்ப் பெருமாளே'' என்று அழைத்தார்.

போக்குவரத்து வசதி::

இந்த கோவிலுக்கு செல்ல பஸ் மற்றும் ரெயில் வசதி உள்ளது.சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்ல தினமும் நேரடி பஸ் வசதி உள்ளது. மேலும் எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து நேரடியாக இந்த கோவில்லுக்கு செல்ல வாரம் ஒரு முறை செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (நேரம் பகல்2 .40 ) உள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோவில்

கோவில் வரலாறு:::

திருச்செந்தூர் முருகன் கோவில் இசை முழங்கும் கடலோரம் அமைந்துள்ளது. சூரிய உதயம் முருகனின் கண் முன்பே நடைபெறுகிறது. அலைகள் ஓம் எனும் பிரணவ மந்திரத்தை ஓதியபடி அழகன் திருவடிகளை பணிந்து செல்கிறது. உலகத்தை ஆளும் மும்மூர்த்தியாக சுப்பிரமணிய சுவாமி அருள் பாலிக்கிறார்.

இந்த கோவிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு உந்து சக்தியாக பஞ்சலிங்கங்களும் வெங்கடேச பெருமாளும் உள்ளனர். பெருமாள் சன்னதியில் பள்ளி கொண்டுள்ள பெருமாள் வயிற்றின் தொப்புள் கொடியில் அமர்ந்து பிரம்மா அருள் பாலிக்கிறார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தூத்துக்குடியில் இருந்து 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. குறிஞ்சிக் (மலை) கடவுள் முருகன்.

இங்கு கடற்கரையில் சந்தான மலையில் அமர்ந்துள்ளார். "செந்தில் மாமலையுறும் செங்கல்வராயன்'' என்று கந்தசஷ்டி கவசத்தில் தேவராய சுவாமிகள் குறிப்பிடுகிறார். வடமொழியில் இதை கந்தமாதன பர்வதம் என்பர். திருமுருகாற்றுப் படையில் இவ்வூர் திருச்சீரலைவாய் எனக் கூறப்படுகிறது. செந்தில் என்ற பெயரும் உண்டு.

செந்து என்றால் உயிர். இல்-அடைக்கலமான இடம். உயிர்களுக்கு அடைக்கலமான இடமான செந்தில், என்ற பெயர் மருவி செந்தூர் என்றாயிற்று. வடமொழியில் ஜெயந்திபுரம் என்று கூறுவர். சேந்து (முருகன்)+இல் என்றும் கூறலாம். சூரனை வென்ற பின்னரே திருப்பரங்குன்றத்தில் தெய்வானை திருமணம் நடைபெற்றது.

எனவே திருச்செந்தூரே முதற்படை வீடு என்று கூறுவாரும் உண்டு. ஆனால் நக்கீரர் திருப்பரங்குன்றத்தை முதலிலும், திருச்செந்தூரை இரண்டாவதும் குறிப்பிடுகிறார். கடைச்சங்க காலப்புலவர்கள் இவ்வூரைக் குறித்திருப்பதால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவ்வூர் சிறப்புற்று விளங்கியதை அறிய முடிகிறது.

அகநானூரில் பரணர் என்னும் புலவர் அலைவாயின் சிறப்பைப் பாடியுள்ளார். புறநானூற்றில் மதுரை மருதன் இளநாகனார்மானும் புலவர் "வெண் தலைப்புணரி அலைக்குஞ்செந்தில்'' எனப்பாடுகிறார். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் "சீர்கெழு செந்தில்'' எனப்பாடி உள்ளார்.

முருகன் கோவிலில் ரூ.3-க்கு சாப்பாடு::

திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் ஏழை-எளிய மக்கள் பசியுடன் செல்லக்கூடாது என்பதால் பல்லாண்டுகளுக்கு முன்பே பச்சரிசி சாதம் விற்பனை கோவில் நிர்வாகம் சார்பில் நடந்து வருகிறது. தற்போது ரூ. 3-க்கு விற்பனை செய்யப்படும் இந்த கட்டி சாதத்தை வாங்கினால் 2 பேர் வரை உண்டு பசி ஆறலாம்.

தினமும் நூற்றுக்கணக்கான கட்டி சாதம் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த கட்டி சாதம் கோவில் நிலத்துக்கு குத்தகையாக கிடைக்கும். நெல் மற்றும் விவசாயிகள் காணிக்கையாக செலுத்தும் நெல் மூலம் அரிசி உற்பத்தி செய்து சமையல் செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது கோவில் அன்னதானத் திட்டம் மூலம் ஏராளமான வெளியூர் பக்தர்கள் சாப்பிட்டு செல்வது குறிப்பிடத்தக்கது ஆகும்.

திருச்செந்தூரில் இருந்து இலங்கை சென்ற அனுமன்::::

திருச்செந்தூர் கடல் பகுதியில் இருந்து தென் இலங்கை மிக அருகாமையில் அமைந்துள்ளது. திருச்செந்தூரின் கடலோரத்தில் உள்ள 24 தீர்த்தங்களில் சேது தீர்த்தமும் ஒன்று. இங்கிருந்து தான் அனுமன் பாலம் அமைத்து இலங்கைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொண்டால் சேதுசமுத்திர திட்டம் எந்தவித இடையூறும் இல்லாமல் நிறைவேறும் என்ற கருத்து வரலாற்று ஆய்வாளர்களால் எடுத்து கூறப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்துக்கு அருகாமையில் அமைந்திருப்பது வட இலங்கை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் விளக்கம் ஆகும்.

கேட்டவரம் தரும் வள்ளல் செந்திலாண்டவர்:::

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி சூரனை வதம் செய்துவிட்டு சிவனை பூஜை செய்யும் தவக் கோலத்தில் காட்சி அளிக்கிறார். அவரது கையில் உத்ராட்ச மாலை, அபயகஸ்தம், தாமரை ஆகியவை உள்ளன. மேலும் ஒரு கையால் அவர் பக்தர்களை பார்த்து ஆசீர்வதிக்கிறார். சாந்த சொரூபியாக உள்ள செந்திலாண்டவர் கடல் போல் கருணை மனம் கொண்டவர்.

கடல் பல உயிர்களை பாதுகாத்து அடைக்கலம் கொடுத்துள்ளது போல செந்திலாண்டவர் தன்னை நம்பி வரும் பக்தர்களின் குறை தீர்த்து வைக்கிறார். அவர் பக்தர்களை ஆசீர்வதிப்பதால் அவரை தரிசிக்கும் பக்தர்கள் பகையை வென்று வலம் காணுவார்கள் என்பது ஐதீகம். அது மட்டுமின்றி முருகன் அருளால் பக்தர்கள் கேட்கும் வரம் அனைத்தும் கிடைக்கும்.

வரவு-செலவு கேட்கும் முருகன்: சுப்பிரமணிய சுவாமி தினமும் இரவு வள்ளியம்மாள் சன்னதிக்கு சென்றதும் அங்கு சுவாமியும் - வள்ளியும் பள்ளியறை மஞ்சத்தில் எழுந்தருள்வார்கள். அப்போது முருகனுக்கு வரவு-செலவு குறித்த விவரங்கள் கூறப்படும். கோவில் கட்டணம் மூலம் கிடைக்கும் வருமானமும், திருப்பணி செலவும் தெரிவிக்கப்படும்.

அதன்பிறகு பள்ளியறை தீபாராதனையாகி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். முன்னதாக சிவிலி என்றழைக்கப்படும் பல்லக்கில் சுவாமி கோவிலை 3 முறை வலம் வருவார். மேலும் ஆவணி, மாசி 6-ம் திருவிழாவின் போது பட்டோலை மூலம் முருகனிடம் சொத்து விபரங்களை தெரிவிப்பார்கள்.

எல்லா செல்வமும் கிடைக்கும்:::

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தினம் முதல் சஷ்டிதிதி வரை சஷ்டி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. எல்லா முருகன் கோவில்களிலும் மிகவும் விசேஷமாக இந்த உற்சவம் கொண்டாடப்படுகிறது.

குறிப்பாக திருச்செந்தூர் முருகன் திருத்தலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பாலசுப்பிரமணியரின் புகழைப்பாடி சண்முக கவசம் முழங்க வலம் வருவார்கள். கந்தசஷ்டி விரதத்தை சிலர் பஞ்சாமிர்தம் மட்டுமே சாப்பிட்டு இருப்பவர்களும் உண்டு. என்றாலும் அவரவர் உடல் நலத்துக்கு ஏற்ப விரதம் இருக்கலாம்.

முருகனைப் போற்றித் துதிக்க எத்தனையோ கவசங்கள் உள்ளன. ஆனால் கோடிக்கணக்கான பக்தர்கள் நாவில் விளையாடுவது கந்தசஷ்டி கவசம் மற்றும் சுப்பிரமணிய கவசம். இந்த கவசத்தை எந்த அளவுக்கு நாம் மனம் உருகி சொல்கிறோமோ அந்த அளவுக்கு முருகன் திருஅருள்ளால் நம் வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும்.

6 பொருள்:::

ஆறு சமயங்கட்கும், ஆறு ஆதாரங்கட்கும், ஆறு அத்துவாக்களுக்கும், அறுபடை வீடுகட்கும் அதிபன் ஆறுமுருகப் பெருமான். முருகன் என்ற பெயரும் 6 பொருளைக் கொண்டது. தெய்வத்தன்மை, இனிமை, இளமை, மணம், மகிழ்ச்சி, அழகு ஆகிய 6 தன்மைகளை உடையவன் முருகன்.

கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு, மேல், கீழ் என்ற 6 திசைகளிலும் பார்வை உள்ளதால் ஆறுமுகன் என்கிறார் அருணகிரிநாதர். ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோ முகமும் சேர்ந்தது ஆறுமுகம்.

தெய்வசிகாமணி:::

நமது உடம்பில் உயர்ந்த பாகம் தலை. அதற்கு மேல் இருப்பது சிகை. அதற்கும் மேல் இருப்பது மணி. அதாவது சிகாமணி மனிதனை விட உயர்ந்தவர்கள் தேவர்கள். தேவர்களுள் உயர்ந்தவர்கள் சிவன், பிரம்மா, விஷ்ணு. இந்த மூவரில் உயர்ந்தவர் சிவன். அவருக்கே உபதேசம் செய்தவர் முருகப்பெருமான். இதனால் தன் உச்சி மேல் வைத்து முருகனை சிவன் பூஜித்தார். இதனால் முருகன் தெய்வசிகாமணி என்ற சிறப்பு நாமத்தைப் பெற்றார்.

தமிழே முருகன்::::

முருகக் கடவுளின் உருவ அமைப்பையும் தமிழ்மொழியின் அமைப்பையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நிறைய ஒற்றுமை இருப்பதைக் காணலாம். முருகன் 3 கண் உடையவர். இடதுக் கண் சந்திரன். வலது கண் சூரியன். மத்தியில் அக்னி எனும் நெற்றிக்கண். 6 முகங்களிலும் மொத்தம் 18 கண் தமிழில் வழங்கும் மெய் எழுத்துக்களும் 18.

மெய் எழுத்துக்களில் வல்லினம் 6, மெல்லினம் 6, இடையினம் 6. முருகனின் முகங்களும் 6. தமிழில் உயிரெழுத்துக்கள் 12. முருகனின் தோள்கள் 12. உலகின் தமிழ் மொழியில் மட்டுமே ஆயுத எழுத்து உள்ளது. இச்சை, கிரியை, ஞானம் என்ற 3 சக்திகளின் வடிவம் வேல். இ

து முருகப் பெருமானுக்கே உரிய தனி ஆயுதம். முருகு என்ற சொல்லிலும் மு-மெல்லினம், ரு-இடையினம், கு-வல்லினம் என்ற 3 வகை எழுத்துக்களும் அமைந்திருப்பது அருமையிலும் அருமை. இதனால் முருகனை தமிழ்க் கடவுள் என்கிறோம். இதை உணர்ந்த அருணகிரிநாதர் முருகனை, ``செந்தமிழ்ப் பெருமாளே'' என்று அழைத்தார்.

போக்குவரத்து வசதி::

இந்த கோவிலுக்கு செல்ல பஸ் மற்றும் ரெயில் வசதி உள்ளது.சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்ல தினமும் நேரடி பஸ் வசதி உள்ளது. மேலும் எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து நேரடியாக இந்த கோவில்லுக்கு செல்ல வாரம் ஒரு முறை செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (நேரம் பகல்2 .40 ) உள்ளது.

இந்த கோவிலில் வீற்றிருக்கும் இறைவன் - அர்த்தநாரீஸ்வரர்;இறைவி பாகம்பிரியாள்.இந்த அர்த்தநாரீஸ்வரர் கோவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1900 அடி உயரத்தில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு செல்ல மலைப்பாதை வழியாக பேருந்து மற்றும் கார் மூலம் மட்டுமே செல்ல முடியும்.

மேலும் கோவிலுக்கு பாதயாத்திரை செல்ல விரும்புவோர் படிகட்டுகள் மூலம் செல்லலாம். இந்த கோவிலுக்கு 1200 படிகட்டுகள் கொண்ட நடைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோவிலுக்கு செல்லும் வழிகளில் ஒய்வு எடுத்துவிட்டுச் செல்ல வசதியாக பல மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.அதில் பல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இங்கு படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில் பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்றது. அர்த்தநாரீஸ்வரர் என்றால் சிவன் பாதி ஆணாகவும்,பாதி பெண்ணாகவும் (பார்வதி தேவி) காட்சி அளிப்பதே ஆகும்.

இந்த கோவிலில் மாதொரு பாகர் என்று அழைக்கப்படும் மூலவர் சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் காட்சி அளிக்கிறார்.

புனித தீர்த்தங்கள்::::

தீர்த்தங்கள் சிவபெருமானாலும் விநாயபெருமானாலும் முருகபெருமானாலும், தேவர்கள் மற்றும் முனிவர்களாலும் உருவாக்கப்பட்டதாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

இவற்றுள் சில முக்கிய தீர்த்தங்கள் , குமார தீர்த்தம், சக்தி தீர்த்தம், பாவநாச தீர்த்தம், பைவர தீர்த்தம், நாக தீர்த்தம், சூரிய புஷ்கரணி, அல்லி சுனை, சித்தர் முலிகை தீர்த்தம்,கணபதி தீர்த்தம், தேவ தீர்த்தம், அம்மையப்ப தீர்த்தம், குமார தீர்த்தம்,மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம் ஆகும்.

இந்த தீர்த்தங்கள் எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும் தன்மை கொண்டவை. மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தேவதீர்த்தம் தான் தீர்த்தமாக வழங்கப்படுகிறது. இந்தக் கோவிலில் கிழக்கு நோக்கி உள்ள செங்கோட்டு வேலவர் சந்நிதி மிகவும் புகழ் பெற்றது.

மேலும் அருணகிரிநாதர் தனது "திருப்புகழில்" இத்திருத்தலத்தி உள்ள முருகனைப் பற்றி அழகாக பாடியுள்ளார். செங்கோட்டு வேலவர் சந்நிதியில் உள்ள சிற்பங்கள் மிகுந்த கலை நுணுக்கத்துடன் சிற்ப வேலைப்பட்டிற்கு மிக சிறந்த வரலாற்று சான்றாகக் காட்சி அளிக்கின்றன.

இங்குள்ள நாகர் சந்நிதியில் வழிப்பட்டால் நாக தோஷங்கள் நீங்குவதற்காக பக்தர்கள் நம்புகின்றனர்.எனவே அதிக அளவில் இங்கு பக்தர்கள் வ‌ந்து வழிபடுவார்கள்.

போக்குவரத்து வசதி:::

இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் சென்று பின் அங்கிருந்து திருச்செங்கோட்டிற்கு சென்று பின் இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில் திருச்செங்கோடு

இந்த கோவிலில் வீற்றிருக்கும் இறைவன் - அர்த்தநாரீஸ்வரர்;இறைவி பாகம்பிரியாள்.இந்த அர்த்தநாரீஸ்வரர் கோவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1900 அடி உயரத்தில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு செல்ல மலைப்பாதை வழியாக பேருந்து மற்றும் கார் மூலம் மட்டுமே செல்ல முடியும்.

மேலும் கோவிலுக்கு பாதயாத்திரை செல்ல விரும்புவோர் படிகட்டுகள் மூலம் செல்லலாம். இந்த கோவிலுக்கு 1200 படிகட்டுகள் கொண்ட நடைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோவிலுக்கு செல்லும் வழிகளில் ஒய்வு எடுத்துவிட்டுச் செல்ல வசதியாக பல மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.அதில் பல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இங்கு படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில் பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்றது. அர்த்தநாரீஸ்வரர் என்றால் சிவன் பாதி ஆணாகவும்,பாதி பெண்ணாகவும் (பார்வதி தேவி) காட்சி அளிப்பதே ஆகும்.

இந்த கோவிலில் மாதொரு பாகர் என்று அழைக்கப்படும் மூலவர் சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் காட்சி அளிக்கிறார்.

புனித தீர்த்தங்கள்::::

தீர்த்தங்கள் சிவபெருமானாலும் விநாயபெருமானாலும் முருகபெருமானாலும், தேவர்கள் மற்றும் முனிவர்களாலும் உருவாக்கப்பட்டதாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

இவற்றுள் சில முக்கிய தீர்த்தங்கள் , குமார தீர்த்தம், சக்தி தீர்த்தம், பாவநாச தீர்த்தம், பைவர தீர்த்தம், நாக தீர்த்தம், சூரிய புஷ்கரணி, அல்லி சுனை, சித்தர் முலிகை தீர்த்தம்,கணபதி தீர்த்தம், தேவ தீர்த்தம், அம்மையப்ப தீர்த்தம், குமார தீர்த்தம்,மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம் ஆகும்.

இந்த தீர்த்தங்கள் எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும் தன்மை கொண்டவை. மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தேவதீர்த்தம் தான் தீர்த்தமாக வழங்கப்படுகிறது. இந்தக் கோவிலில் கிழக்கு நோக்கி உள்ள செங்கோட்டு வேலவர் சந்நிதி மிகவும் புகழ் பெற்றது.

மேலும் அருணகிரிநாதர் தனது "திருப்புகழில்" இத்திருத்தலத்தி உள்ள முருகனைப் பற்றி அழகாக பாடியுள்ளார். செங்கோட்டு வேலவர் சந்நிதியில் உள்ள சிற்பங்கள் மிகுந்த கலை நுணுக்கத்துடன் சிற்ப வேலைப்பட்டிற்கு மிக சிறந்த வரலாற்று சான்றாகக் காட்சி அளிக்கின்றன.

இங்குள்ள நாகர் சந்நிதியில் வழிப்பட்டால் நாக தோஷங்கள் நீங்குவதற்காக பக்தர்கள் நம்புகின்றனர்.எனவே அதிக அளவில் இங்கு பக்தர்கள் வ‌ந்து வழிபடுவார்கள்.

போக்குவரத்து வசதி:::

இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் சென்று பின் அங்கிருந்து திருச்செங்கோட்டிற்கு சென்று பின் இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.

முக நூல்

Popular Posts