background img

புதிய வரவு

Showing posts with label Vegetables. Show all posts
Showing posts with label Vegetables. Show all posts
சர்வதேச விதை நிறுவனங்கள் இயற்கையான காய்கறி - பழ விதைகளில் விலங்குகளின் உயிரணு மற்றும் சில வைரஸ் கிருமிகளை சேர்த்து மரபணு காய்கறி - பழங்களை உருவாக்குகிறார்கள். மரபணு காய்கறி - பழங்களில் விலங்குகளின் மரபணு சேர்வதால் அவை அசைவமாகி விடுகின்றன.

பெரும்பாலான மரபணு காய்கறி - பழங்களில் தவளை, எலி, கரப்பான் பூச்சி, பூனை, முயல் போன்ற விலங்குகளின் மரபணுக்கள் சேர்க்கப்படுகின்றன. காய்கறி - பழங்களை எலி, கரப்பான் பூச்சி போன்றவை சாப்பிடாமல் இருப்பதற்காக அந்த மரபணுக்களை சேர்க்கிறோம் என்று அமெரிக்க மரபணு தொழில்நுட்ப விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.

இந்த வகை காய்கறி - பழங்கள் சீக்கிரம் கெடாது. மாதக்கணக்கில் புத்தம் புதிதாக காய்த்த காய்கறி - பழுத்த பழம்போல் தோன்றும். இந்த வகை காய்கறி - பழங்களை சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் கள்ளத்தனமாக விற்கப்படுவதாக இயற்கை ஆர்வலர்கள் புகார் கூறி உள்ளனர்.

மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த வகை பழங்களில் வாஷிங்டன், பிஜி, ஆஸ்திரேலியா என்று ஸ்டிக்கர் ஒட்டி விற்கப்படுவதாக அவர்கள் கூறினார்கள். அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக விற்கப்படும் இப்பழங்கள் பற்றி உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெங்களூரை சேர்ந்த இயற்கை ஆர்வலர் கிருஷ்ணா மற்றும் தொண்டு நிறுவன அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த நிலையில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மரபணு மாற்று தரக்கட்டுப் பாட்டு குழு விஞ்ஞானிகள் பலர் மரபணு கத்திரிக்காயை பாதி அளவு பயிரிட அனுமதிக்கலாம். மேலும் இதுபற்றி சோதனை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் பரிந்துரை செய்தனர். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் மத்திய பிரதேச அரசு மரபணு கத்திரிக்காய் மட்டும் அல்ல, மரபணு காய்கறி - பழங்கள் அனைத்துக்கும் திடீர் தடை விதித்துள்ளது. இதுபற்றி மாநில விவசாய மந்திரி ராம்கிருஷ்ணா குஷ் மரியா, ட்மோ நகரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மரபணு காய்கறி- பழங்களில் பல்வேறு விலங்கு களின் மரபணு சேர்க்கப்படுவதால் அவை அசைவமாகி விடுகிறது. நம் நாட்டில் சைவ உணவு சாப்பிடுவோர் அதிகம் உள்ளனர். இந்த மரபணு காய்கறி - பழங்களை அனுமதித்தால் நம் நாட்டில் உள்ள சைவ கலாசாரம் அடியோடு அழிந்து விடும் அபாயம் உள்ளது.

இதனால் மத்திய பிரதேசத்தில் மரபணு காய்கறி - பழங்கள் பயிரிடுவதற்கும் விற்பதற்கும் தடை விதித் துள்ளோம். மத்திய சுற்றுச்சூழல் மந்திரி ஜெய்ராம் ரமேஷ் மரபணு பயிர்கள் பற்றி மேலும் பரிசோதனை நடத்துவோம் என்று கூறி உள்ளார்.

நாங்கள் இதையும் எதிர்க்கிறோம். எங்களது மாநிலத்தில் மரபணு பயிர்களை பரிசோதனை செய்வதற்கு கூட அனுமதி தர மாட்டோம். இப்பயிர்களை பரிசோதனை செய்தால் நம் நாட்டில் இயற்கையான பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும். நிலங்களும் கடுமையாக பாதிக்கப்படும்.

மரபணு பயிர் விளைவித்த நிலத்தில் வேறு பயிர்களை விளைவிக்க முடியாது. இதனால் நான் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமே சுக்கு சமீபத்தில் அனுப் பிய கடிதத்தில் எங்கள் மாநிலத்தில் உள்ள விவசாயிகள் ஒருபோதும் மரபணு பயிர்களை பயிரிட தயாராக இல்லை.

அதை எங்கள் மாநிலத்தில் பயிரிட வைக்கும் முயற்சியை கைவிட்டு விடுங்கள். நாங்கள் மக்கள் நலனுக்கு உகந்த இயற் கையான காய்கறி - பழங் களை மட்டுமே பயிரிடுவோம்!! என்று குறிப்பிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

விலங்கு மரபணு சேர்ப்பதால் அசைவமாகும் மரபணு காய்கறி - பழங்களுக்கு மத்திய பிரதேச அரசு தடை

சர்வதேச விதை நிறுவனங்கள் இயற்கையான காய்கறி - பழ விதைகளில் விலங்குகளின் உயிரணு மற்றும் சில வைரஸ் கிருமிகளை சேர்த்து மரபணு காய்கறி - பழங்களை உருவாக்குகிறார்கள். மரபணு காய்கறி - பழங்களில் விலங்குகளின் மரபணு சேர்வதால் அவை அசைவமாகி விடுகின்றன.

பெரும்பாலான மரபணு காய்கறி - பழங்களில் தவளை, எலி, கரப்பான் பூச்சி, பூனை, முயல் போன்ற விலங்குகளின் மரபணுக்கள் சேர்க்கப்படுகின்றன. காய்கறி - பழங்களை எலி, கரப்பான் பூச்சி போன்றவை சாப்பிடாமல் இருப்பதற்காக அந்த மரபணுக்களை சேர்க்கிறோம் என்று அமெரிக்க மரபணு தொழில்நுட்ப விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.

இந்த வகை காய்கறி - பழங்கள் சீக்கிரம் கெடாது. மாதக்கணக்கில் புத்தம் புதிதாக காய்த்த காய்கறி - பழுத்த பழம்போல் தோன்றும். இந்த வகை காய்கறி - பழங்களை சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் கள்ளத்தனமாக விற்கப்படுவதாக இயற்கை ஆர்வலர்கள் புகார் கூறி உள்ளனர்.

மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த வகை பழங்களில் வாஷிங்டன், பிஜி, ஆஸ்திரேலியா என்று ஸ்டிக்கர் ஒட்டி விற்கப்படுவதாக அவர்கள் கூறினார்கள். அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக விற்கப்படும் இப்பழங்கள் பற்றி உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெங்களூரை சேர்ந்த இயற்கை ஆர்வலர் கிருஷ்ணா மற்றும் தொண்டு நிறுவன அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த நிலையில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மரபணு மாற்று தரக்கட்டுப் பாட்டு குழு விஞ்ஞானிகள் பலர் மரபணு கத்திரிக்காயை பாதி அளவு பயிரிட அனுமதிக்கலாம். மேலும் இதுபற்றி சோதனை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் பரிந்துரை செய்தனர். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் மத்திய பிரதேச அரசு மரபணு கத்திரிக்காய் மட்டும் அல்ல, மரபணு காய்கறி - பழங்கள் அனைத்துக்கும் திடீர் தடை விதித்துள்ளது. இதுபற்றி மாநில விவசாய மந்திரி ராம்கிருஷ்ணா குஷ் மரியா, ட்மோ நகரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மரபணு காய்கறி- பழங்களில் பல்வேறு விலங்கு களின் மரபணு சேர்க்கப்படுவதால் அவை அசைவமாகி விடுகிறது. நம் நாட்டில் சைவ உணவு சாப்பிடுவோர் அதிகம் உள்ளனர். இந்த மரபணு காய்கறி - பழங்களை அனுமதித்தால் நம் நாட்டில் உள்ள சைவ கலாசாரம் அடியோடு அழிந்து விடும் அபாயம் உள்ளது.

இதனால் மத்திய பிரதேசத்தில் மரபணு காய்கறி - பழங்கள் பயிரிடுவதற்கும் விற்பதற்கும் தடை விதித் துள்ளோம். மத்திய சுற்றுச்சூழல் மந்திரி ஜெய்ராம் ரமேஷ் மரபணு பயிர்கள் பற்றி மேலும் பரிசோதனை நடத்துவோம் என்று கூறி உள்ளார்.

நாங்கள் இதையும் எதிர்க்கிறோம். எங்களது மாநிலத்தில் மரபணு பயிர்களை பரிசோதனை செய்வதற்கு கூட அனுமதி தர மாட்டோம். இப்பயிர்களை பரிசோதனை செய்தால் நம் நாட்டில் இயற்கையான பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும். நிலங்களும் கடுமையாக பாதிக்கப்படும்.

மரபணு பயிர் விளைவித்த நிலத்தில் வேறு பயிர்களை விளைவிக்க முடியாது. இதனால் நான் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமே சுக்கு சமீபத்தில் அனுப் பிய கடிதத்தில் எங்கள் மாநிலத்தில் உள்ள விவசாயிகள் ஒருபோதும் மரபணு பயிர்களை பயிரிட தயாராக இல்லை.

அதை எங்கள் மாநிலத்தில் பயிரிட வைக்கும் முயற்சியை கைவிட்டு விடுங்கள். நாங்கள் மக்கள் நலனுக்கு உகந்த இயற் கையான காய்கறி - பழங் களை மட்டுமே பயிரிடுவோம்!! என்று குறிப்பிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதுடில்லி : காய்கறிகள், எண்ணெய் வித்துகள், பயறு வகைகள் ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதையடுத்து, அவற்றின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பொது பட்ஜெட்டில் 2,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பட்ஜெட் தாக்கல் செய்து பேசியதாவது: கடந்த சில மாதங்களாக, உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, காய்கறிகள், எண்ணெய் வித்துகள், பயறு வகைகள், தினை மற்றும் கால்நடைகளுக்கான தீவனம் ஆகியவற்றின் விலை அதிகரித்தது, அரசுக்கு கவலை அளித்தது. மொத்த விலை குறியீட்டு எண்ணில், பழங்கள், காய்கறிகள், பால், இறைச்சி ஆகியவற்றின் பங்கு 70 சதவீதம். எனவே, இவற்றின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
இவற்றின் விலையை கட்டுப்படுத்தும் வகையிலும், இந்த பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும், இந்த பட்ஜெட்டில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, இந்த பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக 2,200 கோடி ரூபாய், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாநிலங்களில் பசுமை புரட்சிக்கு வித்திடும் திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடர்ந்து செயல்படும். இதற்காக, 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பயறு வகைகளில் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டத்துக்கும் 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்களின் உற்பத்தி மற்றும் வினியோகம் ஆகிய இரண்டு துறைகளுக்கும் இடையில், பெரும் பிரச்னை நிலவுகிறது. இந்த பிரச்னையை போக்குவதற்கு, இந்த ஆண்டில் கவனம் செலுத்தப்படும். உணவு பணவீக்கத்தின் அளவு, தொடர்ந்து கவலை அளிக்கும் வகையில் தான் உள்ளது. ராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா திட்டத்துக்கான ஒதுக்கீடு, ஏற்கனவே இருந்த 6,755 கோடி ரூபாயில் இருந்து, தற்போது 7,860 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பயறு உள்ளிட்ட தானிய வகைகளின் உற்பத்தி, இந்த நிதியாண்டில் 20 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இருந்தாலும், இத்துறையின் தன்னிறவை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்த இலக்கு எட்டப்படும். சமையல் எண்ணெய் இறக்குமதி செய்வதால், அதிக செலவு ஏற்படுகிறது. எனவே, எண்ணெய் வித்துக்களை பயிரிடுவதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும். இதற்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தரமான காய்கறிகளை, குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக, 300 கோடி ரூபாய் செலவில் காய்கறி சந்தை அமைக்கப்படும். முக்கியமான இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

காய்கறிகள், பயறு உற்பத்தி அதிகரிக்க ரூ.2,200 கோடி

புதுடில்லி : காய்கறிகள், எண்ணெய் வித்துகள், பயறு வகைகள் ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதையடுத்து, அவற்றின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பொது பட்ஜெட்டில் 2,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பட்ஜெட் தாக்கல் செய்து பேசியதாவது: கடந்த சில மாதங்களாக, உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, காய்கறிகள், எண்ணெய் வித்துகள், பயறு வகைகள், தினை மற்றும் கால்நடைகளுக்கான தீவனம் ஆகியவற்றின் விலை அதிகரித்தது, அரசுக்கு கவலை அளித்தது. மொத்த விலை குறியீட்டு எண்ணில், பழங்கள், காய்கறிகள், பால், இறைச்சி ஆகியவற்றின் பங்கு 70 சதவீதம். எனவே, இவற்றின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
இவற்றின் விலையை கட்டுப்படுத்தும் வகையிலும், இந்த பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும், இந்த பட்ஜெட்டில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, இந்த பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக 2,200 கோடி ரூபாய், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாநிலங்களில் பசுமை புரட்சிக்கு வித்திடும் திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடர்ந்து செயல்படும். இதற்காக, 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பயறு வகைகளில் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டத்துக்கும் 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்களின் உற்பத்தி மற்றும் வினியோகம் ஆகிய இரண்டு துறைகளுக்கும் இடையில், பெரும் பிரச்னை நிலவுகிறது. இந்த பிரச்னையை போக்குவதற்கு, இந்த ஆண்டில் கவனம் செலுத்தப்படும். உணவு பணவீக்கத்தின் அளவு, தொடர்ந்து கவலை அளிக்கும் வகையில் தான் உள்ளது. ராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா திட்டத்துக்கான ஒதுக்கீடு, ஏற்கனவே இருந்த 6,755 கோடி ரூபாயில் இருந்து, தற்போது 7,860 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பயறு உள்ளிட்ட தானிய வகைகளின் உற்பத்தி, இந்த நிதியாண்டில் 20 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இருந்தாலும், இத்துறையின் தன்னிறவை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்த இலக்கு எட்டப்படும். சமையல் எண்ணெய் இறக்குமதி செய்வதால், அதிக செலவு ஏற்படுகிறது. எனவே, எண்ணெய் வித்துக்களை பயிரிடுவதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும். இதற்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தரமான காய்கறிகளை, குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக, 300 கோடி ரூபாய் செலவில் காய்கறி சந்தை அமைக்கப்படும். முக்கியமான இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.


பனிக்காலத்தில் இயல்பாகவே நமது உடல் மிகவும் சூடாக இருக்கும். அப்போது நமது உடம்பின் உஷ்ணத்தை சமன்படுத்த, குளிர்ச்சியான காய்கறிகளை சாப்பிடுவது அவசியம். பனிக்கால பிரச்சினைகளான இருமல், காய்ச்சல், ஜலதோஷம் ஆகியவை ஏற்படாமல் கீழ்கண்ட காய்கறிகள் நம்மை பாதுகாக்கும்.
 
வெண்டைக்காய் :
 
குளிர்ச்சியான தன்மை கொண்டது வெண்டைக்காய். இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில் வைட்டமின் `சி', `பி' மற்றும் உயிர்ச்சத்துக்கள் உள்ளன. இதை அடிக்கடி உட்கொண்டு வந்தால் சிறுநீர் பெருகும். உஷ்ண இருமலைக் குணமாக்கும். வாய்வுத் தொல்லை உள்ளவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்றுவலியை ஏற்படுத்தி விடும். அதனால் அவர்கள் வெண்டைக் காயை அளவோடு எடுத்துக்கொள்வது அவசியம்.    
 
அவரைக்காய் :
 
இதிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை, நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இதை சமைத்து உண்டால் உடலை வலுவாக்கும். சூடான தேகம் கொண்டவர்களுக்கு இது மிகவும் நல்லது. ரத்த அழுத்தம் உள்ளவர்களும் இதை விரும்பி சாப்பிடலாம்.
 
புடலங்காய் :
 
நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய் இது. சூடான தேகம் கொண்டவர்கள் இதை அதிக அளவில் உணவில் எடுத்துக்கொள்வது நல்லது. தொடர்ந்து புடலங்காய் சாப்பிட்டு வந்தால் தேகம் செழிப்பாகும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாதம், பித்தம், கபம் பிரச்சினைகளால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும் சக்தி இதற்கு உண்டு. வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி பிரச்சினைக்கும் இது நல்லது.
 
சுரைக்காய் :
 
இது உடல் சூட்டைத் தணிக்கக்கூடியது. சிறுநீரைப் பெருக்குதல், உடலை வலிமையாக்குதல், தாகத்தை அடக்குதல் போன்றவற்றிலும் உதவுகிறது.

அவசியமான காய்கறிகள்..!


பனிக்காலத்தில் இயல்பாகவே நமது உடல் மிகவும் சூடாக இருக்கும். அப்போது நமது உடம்பின் உஷ்ணத்தை சமன்படுத்த, குளிர்ச்சியான காய்கறிகளை சாப்பிடுவது அவசியம். பனிக்கால பிரச்சினைகளான இருமல், காய்ச்சல், ஜலதோஷம் ஆகியவை ஏற்படாமல் கீழ்கண்ட காய்கறிகள் நம்மை பாதுகாக்கும்.
 
வெண்டைக்காய் :
 
குளிர்ச்சியான தன்மை கொண்டது வெண்டைக்காய். இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில் வைட்டமின் `சி', `பி' மற்றும் உயிர்ச்சத்துக்கள் உள்ளன. இதை அடிக்கடி உட்கொண்டு வந்தால் சிறுநீர் பெருகும். உஷ்ண இருமலைக் குணமாக்கும். வாய்வுத் தொல்லை உள்ளவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்றுவலியை ஏற்படுத்தி விடும். அதனால் அவர்கள் வெண்டைக் காயை அளவோடு எடுத்துக்கொள்வது அவசியம்.    
 
அவரைக்காய் :
 
இதிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை, நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இதை சமைத்து உண்டால் உடலை வலுவாக்கும். சூடான தேகம் கொண்டவர்களுக்கு இது மிகவும் நல்லது. ரத்த அழுத்தம் உள்ளவர்களும் இதை விரும்பி சாப்பிடலாம்.
 
புடலங்காய் :
 
நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய் இது. சூடான தேகம் கொண்டவர்கள் இதை அதிக அளவில் உணவில் எடுத்துக்கொள்வது நல்லது. தொடர்ந்து புடலங்காய் சாப்பிட்டு வந்தால் தேகம் செழிப்பாகும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாதம், பித்தம், கபம் பிரச்சினைகளால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும் சக்தி இதற்கு உண்டு. வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி பிரச்சினைக்கும் இது நல்லது.
 
சுரைக்காய் :
 
இது உடல் சூட்டைத் தணிக்கக்கூடியது. சிறுநீரைப் பெருக்குதல், உடலை வலிமையாக்குதல், தாகத்தை அடக்குதல் போன்றவற்றிலும் உதவுகிறது.

முக நூல்

Popular Posts