background img

புதிய வரவு

நாகர்கோவிலு‌க்கு நாளை சிறப்பு இரயில் இய‌க்க‌‌ம்

சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் (06303) நாளை இயக்கப்படுகிறது எ‌ன்று தெ‌ற்கு இர‌யி‌ல்வே அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இந்த ரயில், நாளை மாலை 6.50 மணிக்கு புறப்பட்டு, மறுநா‌ள் காலை 8.10 மணிக்கு நாகர்கோவில் செ‌ன்றடை‌கிறது.

மறுமார்க்கத்தில், நாகர்கோவிலில் இருந்து இந்த ரயில் (06304) 6ஆ‌ம் தேதி மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்து சேரு‌கிறது.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சிமணியாச்சி, நெல்லை, வள்ளியூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

நாகர்கோவில் இருந்து சென்னைக்கு வரு‌ம்போது, மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இ‌ந்த ‌சிற‌ப்பு இரயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது எ‌ன்று தெற்கு ரயில்வே வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts