தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியதும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் போளூர் வரதன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு நாள் முழுவதும் அவை தள்ளிவைக்கப்பட்டது.
இன்று காலை 9.30 மணிக்கு அவைத் தொடங்கியம் அவைத் தலைவர் ஆவுடையப்பன், மறைந்த செங்கம் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் போளூர் வரதன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.
இதைத் தொடர்ந்து அனைத்து எழுப்பினர்கள் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து நாள் முழுவதும் அவையை தள்ளிவைப்பதாக அவைத் தலைவர் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அவைத் தலைவர் ஆவுடையப்பன் தலைமையில் நடக்க உள்ள அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.
நாளை 2011 - 2012 ஆம் ஆண்டிற்காக இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்கிறார்.

0 comments :
Post a Comment