background img

புதிய வரவு

Showing posts with label Actor Vijay. Show all posts
Showing posts with label Actor Vijay. Show all posts
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் தலைப்பை பயன்படுத்த கோர்ட் தடை விதித்துள்ளது.

Chennai Court Bans Thuppakki Title நடிகர் கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்தவர் தயாரிப்பாளார் ரவிதேவன். இவரது தயாரிப்பில் லோகியாஸ் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு ‘கள்ளத்துப்பாக்கி' என்ற படத்தலைப்பு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு துப்பாக்கி என்று தலைப்பு வைக்கப்பட்டது.

துப்பாக்கி படத்தின் டைட்டில் டிசைனும் கள்ளத்துப்பாக்கி படத்தின் டைட்டில் பாணியில் இருந்தது.

இதையடுத்து கள்ளத்துப்பாக்கி குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டனர். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைவராக இருப்பதால், தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று கூறி நீதிமன்றத்துக்குப் போனார்கள் கள்ளத்துப்பாக்கி குழுவினர்.

கள்ளத்துப்பாக்கி குழுவினரின் மனுவை விசாரித்த நீதிபதி, விஜய் நடித்து வரும் படத்திற்கு துப்பாக்கி என்று டைட்டில் வைக்கக்கூடாது என தடை விதித்து உத்தரவிட்டார்!

விஜய்யின் துப்பாக்கி படத் தலைப்புக்கு நீதிமன்றம் தடை!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் தலைப்பை பயன்படுத்த கோர்ட் தடை விதித்துள்ளது.

Chennai Court Bans Thuppakki Title நடிகர் கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்தவர் தயாரிப்பாளார் ரவிதேவன். இவரது தயாரிப்பில் லோகியாஸ் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு ‘கள்ளத்துப்பாக்கி' என்ற படத்தலைப்பு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு துப்பாக்கி என்று தலைப்பு வைக்கப்பட்டது.

துப்பாக்கி படத்தின் டைட்டில் டிசைனும் கள்ளத்துப்பாக்கி படத்தின் டைட்டில் பாணியில் இருந்தது.

இதையடுத்து கள்ளத்துப்பாக்கி குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டனர். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைவராக இருப்பதால், தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று கூறி நீதிமன்றத்துக்குப் போனார்கள் கள்ளத்துப்பாக்கி குழுவினர்.

கள்ளத்துப்பாக்கி குழுவினரின் மனுவை விசாரித்த நீதிபதி, விஜய் நடித்து வரும் படத்திற்கு துப்பாக்கி என்று டைட்டில் வைக்கக்கூடாது என தடை விதித்து உத்தரவிட்டார்!

ரவுடி ரத்தோர் இந்திப் படத்தை இயக்கியுளள பிரபுதேவா நைட் பார்ட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் நடிகர்கள் விஜய், அக்ஷய்குமார், சஞ்சய் கபூர், காமெடியன் விவேக், நடிகை திரிஷா உள்பட பலரும் கலந்து கொண்டு கேக் வெட்டி சாப்பிட்டு கலகலப்பாக்கியுள்ளனர்.
இந்த நள்ளிரவு பார்ட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக்கானும், கொல்கத்தா அணியின் ஆதரவாளர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டதால் விருந்து சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
ரவுடி ரத்தோர் படக் குழு சார்பில் தமிழ் மற்றும் இந்தி நடிகர், நடிகைகளுக்கு ஒரு பார்ட்டிய ஏற்பாடு செய்திருந்தார் பிரபுதேவா. இதில் அக்ஷய் குமார், சபீனா கான், சோனாக்ஷி சின்ஹா, ஷாருக் கான், அவரது மனைவி கெளரி, ரித்தேஷ், அவருடய மனைவி ஜெனிலியா, சங்கி பாண்டே, கரீம் மொரானி, சஞ்சய் கபூர், சாஜத் கான், நடிகர்கள் விஜய், விவேக், சுதீப், பிரசன்னா, பிரகாஷ் ராஜ், ஜெயம் ரவி, சுந்தர்.சி, சித்தார், நடிகைகள் திரிஷா, சிம்ரன், சோனியா அகர்வால், சார்மி, சினேகா, குத்து ரம்யா, லட்சுமி மஞ்சு, பிரியா ஆனந்த், பூனம் கெளர், பிரகாஷ் ராஜ் மனைவி போனி வர்மா, இசையமைப்பாளர்கள் தேவி ஸ்ரீ பிரசாத், விஜய் ஆண்டனி, நடிகை சங்கீதா அவருடைய கணவர் கிருஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆடல், பாடல், விருந்து என தடபுடலாக போனதாம் விருந்து. இதற்கிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் இறுதிப் போட்டியில் தோற்ற அன்று இரவு நடந்த இந்த பார்ட்டி சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. போட்டியில் வென்ற கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கானையும் கொல்கத்தா ஆதரவாளர்களையும் அழைத்து விருந்து வைத்துள்ளார் பிரபுதேவா என்று சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

விஜய், ஷாருக்கான், பிரபுதேவா பங்கேற்ற ‘ரவுடி’ பார்ட்டி!

ரவுடி ரத்தோர் இந்திப் படத்தை இயக்கியுளள பிரபுதேவா நைட் பார்ட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் நடிகர்கள் விஜய், அக்ஷய்குமார், சஞ்சய் கபூர், காமெடியன் விவேக், நடிகை திரிஷா உள்பட பலரும் கலந்து கொண்டு கேக் வெட்டி சாப்பிட்டு கலகலப்பாக்கியுள்ளனர்.
இந்த நள்ளிரவு பார்ட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக்கானும், கொல்கத்தா அணியின் ஆதரவாளர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டதால் விருந்து சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
ரவுடி ரத்தோர் படக் குழு சார்பில் தமிழ் மற்றும் இந்தி நடிகர், நடிகைகளுக்கு ஒரு பார்ட்டிய ஏற்பாடு செய்திருந்தார் பிரபுதேவா. இதில் அக்ஷய் குமார், சபீனா கான், சோனாக்ஷி சின்ஹா, ஷாருக் கான், அவரது மனைவி கெளரி, ரித்தேஷ், அவருடய மனைவி ஜெனிலியா, சங்கி பாண்டே, கரீம் மொரானி, சஞ்சய் கபூர், சாஜத் கான், நடிகர்கள் விஜய், விவேக், சுதீப், பிரசன்னா, பிரகாஷ் ராஜ், ஜெயம் ரவி, சுந்தர்.சி, சித்தார், நடிகைகள் திரிஷா, சிம்ரன், சோனியா அகர்வால், சார்மி, சினேகா, குத்து ரம்யா, லட்சுமி மஞ்சு, பிரியா ஆனந்த், பூனம் கெளர், பிரகாஷ் ராஜ் மனைவி போனி வர்மா, இசையமைப்பாளர்கள் தேவி ஸ்ரீ பிரசாத், விஜய் ஆண்டனி, நடிகை சங்கீதா அவருடைய கணவர் கிருஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆடல், பாடல், விருந்து என தடபுடலாக போனதாம் விருந்து. இதற்கிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் இறுதிப் போட்டியில் தோற்ற அன்று இரவு நடந்த இந்த பார்ட்டி சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. போட்டியில் வென்ற கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கானையும் கொல்கத்தா ஆதரவாளர்களையும் அழைத்து விருந்து வைத்துள்ளார் பிரபுதேவா என்று சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Vijay Fulfills Lakshmi Rai S Desire இளைய தளபதியுடன் நடிக்க வேண்டும் என்ற லக்ஷ்மி ராயின் ஆசையை இயக்குனர் விஜய் நிறைவேற்றியுள்ளார்.

சீயான் விக்ரமை வைத்து தாண்டவம் படத்தை எடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் விஜய் அடுத்ததாக இளைய தளபதி விஜயை வைத்து தலைவன் படத்தை இயக்குகிறார். தாண்டவம் படத்தில் நடித்து வரும் லக்ஷ்மி ராய் தனது நீண்ட நாள் ஆசை ஒன்றை இயக்குனர் விஜயிடம் தெரிவித்துள்ளார். அதை கேட்ட விஜய் உடனே அவரது ஆசையை நிறைவேற்றிவிட்டாராம்.

இளைய தளபதியுடன் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையைத் தான் லக்ஷ்மி ராய் தெரிவித்துள்ளார். அதற்கு விஜய் தான் எடுக்கும் தலைவன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் தருவதாக வாக்களித்துள்ளார்.

தாண்டவம் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அனுஷ்கா, ஏமி ஜாக்சன் இருக்கையில் லக்ஷ்மிராய் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த படத்தில் தான் விக்ரமை காதலிக்காவிட்டாலும் தன்னுடைய கதாபாத்திரம் பேசப்படும் என்று நம்பிக்கையுடன் பணியாற்றுகிறார்.

லக்ஷ்மி ராயின் ஆசையை நிறைவேற்றிய விஜய்

Vijay Fulfills Lakshmi Rai S Desire இளைய தளபதியுடன் நடிக்க வேண்டும் என்ற லக்ஷ்மி ராயின் ஆசையை இயக்குனர் விஜய் நிறைவேற்றியுள்ளார்.

சீயான் விக்ரமை வைத்து தாண்டவம் படத்தை எடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் விஜய் அடுத்ததாக இளைய தளபதி விஜயை வைத்து தலைவன் படத்தை இயக்குகிறார். தாண்டவம் படத்தில் நடித்து வரும் லக்ஷ்மி ராய் தனது நீண்ட நாள் ஆசை ஒன்றை இயக்குனர் விஜயிடம் தெரிவித்துள்ளார். அதை கேட்ட விஜய் உடனே அவரது ஆசையை நிறைவேற்றிவிட்டாராம்.

இளைய தளபதியுடன் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையைத் தான் லக்ஷ்மி ராய் தெரிவித்துள்ளார். அதற்கு விஜய் தான் எடுக்கும் தலைவன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் தருவதாக வாக்களித்துள்ளார்.

தாண்டவம் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அனுஷ்கா, ஏமி ஜாக்சன் இருக்கையில் லக்ஷ்மிராய் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த படத்தில் தான் விக்ரமை காதலிக்காவிட்டாலும் தன்னுடைய கதாபாத்திரம் பேசப்படும் என்று நம்பிக்கையுடன் பணியாற்றுகிறார்.


 இளைய தளபதி விஜய் நடித்து வெளிவரவுள்ள ”துப்பாக்கி” திரைப்படத்தின் First Look போஸ்டர் கடந்த மே மாதம் முதலாம் திகதி, அப் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
அதில் தளபதி, புகைபொருள் புகைப்பது போன்று போஸ் கொடுத்திருந்தார். இது பொது மக்களை தவறாக வழிநடாத்துகிறது என ஓர் கட்சி ஒன்றினால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ் ஆர்ப்பாட்டம், குறித்த போஸ்டரை தடைசெய்யகோரி நடாத்தப்பட இருப்பதாக தெரியவருகிறது.
மின்வெட்டு….. விலைவாசி உயர்வு….. போன்றவற்றிற்கு மௌனம் காத்த குறித்த மருத்துவர் பெயர் கொண்ட குழு தளபதி விடயத்தில் கொந்தளிப்பது ஏன்?
குறித்த போஸ்டரில் புகைப்பது உடல்நலத்துக்கு கேடு என குறிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தளபதியின் ”துப்பாக்கி” போஸ்டருக்கு விஷமிகள் கிளப்பியிருக்கும் பிரச்சினை!


 இளைய தளபதி விஜய் நடித்து வெளிவரவுள்ள ”துப்பாக்கி” திரைப்படத்தின் First Look போஸ்டர் கடந்த மே மாதம் முதலாம் திகதி, அப் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
அதில் தளபதி, புகைபொருள் புகைப்பது போன்று போஸ் கொடுத்திருந்தார். இது பொது மக்களை தவறாக வழிநடாத்துகிறது என ஓர் கட்சி ஒன்றினால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ் ஆர்ப்பாட்டம், குறித்த போஸ்டரை தடைசெய்யகோரி நடாத்தப்பட இருப்பதாக தெரியவருகிறது.
மின்வெட்டு….. விலைவாசி உயர்வு….. போன்றவற்றிற்கு மௌனம் காத்த குறித்த மருத்துவர் பெயர் கொண்ட குழு தளபதி விடயத்தில் கொந்தளிப்பது ஏன்?
குறித்த போஸ்டரில் புகைப்பது உடல்நலத்துக்கு கேடு என குறிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

காவலன் படத்திற்காக அரசியல் சதுரங்கத்தில் வெட்டப்பட்டதில் ரொம்பவே தில் ஏறிப் போயிருக்கிறது இளைய தளபதிக்கு. ஆளும் கட்சியை கை நீட்டி குற்றம்சாற்றியதோடு அரசியலில் கண்டிப்பாக நுழைவேன் என கட்டியமும் கூறியிருக்கிறார். அதற்கான அஸ்திவாரம் வரும் 22ஆம் தேதி பலமாகப் போடப் போகிறார், மீனவர்களின் துணையுடன்.

ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்ற பிறகும் சுரணையற்றுக் கிடக்கின்றன மத்திய, மாநில அரசுகள். தந்தி அனுப்பறோம், தூதரை கண்டித்தோம் என்பது போன்ற இவர்களின் கண் துடைப்பு நாடக‌ங்க‌ள்தா‌ன் நடக்கின்றன. ஈழமும், மீனவனும் அரசியல்வாதிகளுக்கும், அரசியல்வாதியாக ஆசைப்படுகிறவர்களுக்கும் தேவைப்படும் போது கையிலெடுக்க பயன்படும் ஆயுதம்.

விஜயக்கும் காவலனுக்கு பழிவாங்க மீனவன் கிடைத்திருக்கிறான். வருகிற 22ஆம் தேதி மத்திய மாநில அரசுகளை கண்டித்து நாகப்பட்டினத்தில் நடத்தப்படும் பேரணியில் விஜய் கலந்து கொள்கிறார். மீனவன் சாவை கண்டு கொள்ளாத காங்கிரஸ் கட்சியில் இணைய ராகுல் காந்தியை சந்தித்தவர்தான் விஜய் என்பதும், அப்போதும் மீனவர்கள் கொல்லப்பட்டுக் கொண்டுதான் இருந்தார்கள் என்பதும் அன்று குரல் கொடுக்காதவர் சொந்தப் பிரச்சனை வந்ததும் மத்திய மாநில அரசுகளை மிரட்ட மீனவர் பிரச்சனையை கையிலெடுத்திருக்கிறார் என்பதும்.....

ஒருபோதும் மறக்கக் கூடிய விஷயங்களல்ல.

பேரணி நடத்தும் விஜய்

காவலன் படத்திற்காக அரசியல் சதுரங்கத்தில் வெட்டப்பட்டதில் ரொம்பவே தில் ஏறிப் போயிருக்கிறது இளைய தளபதிக்கு. ஆளும் கட்சியை கை நீட்டி குற்றம்சாற்றியதோடு அரசியலில் கண்டிப்பாக நுழைவேன் என கட்டியமும் கூறியிருக்கிறார். அதற்கான அஸ்திவாரம் வரும் 22ஆம் தேதி பலமாகப் போடப் போகிறார், மீனவர்களின் துணையுடன்.

ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்ற பிறகும் சுரணையற்றுக் கிடக்கின்றன மத்திய, மாநில அரசுகள். தந்தி அனுப்பறோம், தூதரை கண்டித்தோம் என்பது போன்ற இவர்களின் கண் துடைப்பு நாடக‌ங்க‌ள்தா‌ன் நடக்கின்றன. ஈழமும், மீனவனும் அரசியல்வாதிகளுக்கும், அரசியல்வாதியாக ஆசைப்படுகிறவர்களுக்கும் தேவைப்படும் போது கையிலெடுக்க பயன்படும் ஆயுதம்.

விஜயக்கும் காவலனுக்கு பழிவாங்க மீனவன் கிடைத்திருக்கிறான். வருகிற 22ஆம் தேதி மத்திய மாநில அரசுகளை கண்டித்து நாகப்பட்டினத்தில் நடத்தப்படும் பேரணியில் விஜய் கலந்து கொள்கிறார். மீனவன் சாவை கண்டு கொள்ளாத காங்கிரஸ் கட்சியில் இணைய ராகுல் காந்தியை சந்தித்தவர்தான் விஜய் என்பதும், அப்போதும் மீனவர்கள் கொல்லப்பட்டுக் கொண்டுதான் இருந்தார்கள் என்பதும் அன்று குரல் கொடுக்காதவர் சொந்தப் பிரச்சனை வந்ததும் மத்திய மாநில அரசுகளை மிரட்ட மீனவர் பிரச்சனையை கையிலெடுத்திருக்கிறார் என்பதும்.....

ஒருபோதும் மறக்கக் கூடிய விஷயங்களல்ல.

நடிகர் விஜய் தீவிர அரசியலில் குதிக்கிறார். தேர்தலுக்கு முன் திருச்சியில் ரசிகர்கள் மாநாடு நடத்தி இதற்கான அறிவிப்பை அவர் வெளியிடுகிறார். அதன் பிறகு பிரசாரத்திலும் குதிக்கிறார்.

தமிழகம் முழுவதும் ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள், அரசியல் பணிகளில் ஈடுபடத் துவங்கியுள்ளனர்.அவர்கள் விளம்பரங்களும் செய்து வருகிறார்கள். தேர்தலுக்கு முன் நாகப்பட்டினம் பகுதியில் சுற்றுப் பயணம் செய்து மீனவர்களை சந்திக்கவும் விஜய் திட்டமிட்டுள்ளார்.

சமீபத்தில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நாகப்பட்டினம் சென்று கொல்லப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, உதவி தொகைகளும் வழங்கப்பட்டன.

இது போல் விஜய்யும் அங்கு சென்று மீனவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.விஜய்யை வரவேற்பதற்காக ஏற்பாடுகளை அங்குள்ள ரசிகர் மன்றத்தினர் செய்து வருகின்றனர். விஜய்யுடன் அவரது தந்தை டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகரனும் நாகப்பட்டினம் செல்வார் என தெரிகிறது.

இலங்கை கடற்படை தாக்குதலை கண்டித்து நாகப்பட்டினம் கடலோர பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.வருகிற 22-ந்தேதி விஜய் அப்பகுதிகளுக்கு செல்வார் என கூறப்படுகிறது. அப்போது விஜய் ரசிகர்கள் 1 லட்சம் பேர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாகப்பட்டினம் வருவார்கள் என்று திருச்சி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் ராஜா கூறினார்.

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்தை விஜய் சந்திக்கிறார்

நடிகர் விஜய் தீவிர அரசியலில் குதிக்கிறார். தேர்தலுக்கு முன் திருச்சியில் ரசிகர்கள் மாநாடு நடத்தி இதற்கான அறிவிப்பை அவர் வெளியிடுகிறார். அதன் பிறகு பிரசாரத்திலும் குதிக்கிறார்.

தமிழகம் முழுவதும் ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள், அரசியல் பணிகளில் ஈடுபடத் துவங்கியுள்ளனர்.அவர்கள் விளம்பரங்களும் செய்து வருகிறார்கள். தேர்தலுக்கு முன் நாகப்பட்டினம் பகுதியில் சுற்றுப் பயணம் செய்து மீனவர்களை சந்திக்கவும் விஜய் திட்டமிட்டுள்ளார்.

சமீபத்தில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நாகப்பட்டினம் சென்று கொல்லப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, உதவி தொகைகளும் வழங்கப்பட்டன.

இது போல் விஜய்யும் அங்கு சென்று மீனவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.விஜய்யை வரவேற்பதற்காக ஏற்பாடுகளை அங்குள்ள ரசிகர் மன்றத்தினர் செய்து வருகின்றனர். விஜய்யுடன் அவரது தந்தை டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகரனும் நாகப்பட்டினம் செல்வார் என தெரிகிறது.

இலங்கை கடற்படை தாக்குதலை கண்டித்து நாகப்பட்டினம் கடலோர பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.வருகிற 22-ந்தேதி விஜய் அப்பகுதிகளுக்கு செல்வார் என கூறப்படுகிறது. அப்போது விஜய் ரசிகர்கள் 1 லட்சம் பேர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாகப்பட்டினம் வருவார்கள் என்று திருச்சி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் ராஜா கூறினார்.

முக நூல்

Popular Posts