background img

புதிய வரவு

Showing posts with label Tamil Cinema. Show all posts
Showing posts with label Tamil Cinema. Show all posts

நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தின் மீதான தடை உத்தரவு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விலக்கி கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 25 அன்று விஸ்வரூபம் வெளியாகவிருந்தது, ஆனால் பல்வேறு முஸ்லீம் அமைப்புக்களின் எதிர்ப்பின் பின்னணியில், தமிழக அரசு, சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144வது பிரிவின் கீழ் இருவாரத் தடை விதித்தது.
கமல்ஹாசன் தரப்பினர் சென்னை நீதிமன்றத்தினை அணுகியபோது, ஒரு நீதிபதி அரசின் தடையினை நிறுத்திவைத்து உத்திரவிட்டாலும் இரு நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், அரசின் மேல் முறையீட்டினை ஏற்று தடை தொடரும் எனக் கூறிவிட்டது.

பின்னர் நேற்று தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் நடந்த முத்தரப்புப் பேச்சுவார்த்தைகளின் போது சில ஆட்சேபிக்கப்பட்ட காட்சிகளை நீக்குவதாக கமல்ஹாசன் ஒத்துக்கொண்ட நிலையில் முஸ்லீம் அமைப்பினர் தங்கள் எதிர்ப்பைக் கைவிடுவதாக அறிவித்தனர்.
இதையடுத்து சென்னை உட்பட மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திரைப்படம் வெளியாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டிருக்கிறது.

விஸ்வரூபம் தடை நீங்கியது


நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தின் மீதான தடை உத்தரவு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விலக்கி கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 25 அன்று விஸ்வரூபம் வெளியாகவிருந்தது, ஆனால் பல்வேறு முஸ்லீம் அமைப்புக்களின் எதிர்ப்பின் பின்னணியில், தமிழக அரசு, சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144வது பிரிவின் கீழ் இருவாரத் தடை விதித்தது.
கமல்ஹாசன் தரப்பினர் சென்னை நீதிமன்றத்தினை அணுகியபோது, ஒரு நீதிபதி அரசின் தடையினை நிறுத்திவைத்து உத்திரவிட்டாலும் இரு நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், அரசின் மேல் முறையீட்டினை ஏற்று தடை தொடரும் எனக் கூறிவிட்டது.

பின்னர் நேற்று தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் நடந்த முத்தரப்புப் பேச்சுவார்த்தைகளின் போது சில ஆட்சேபிக்கப்பட்ட காட்சிகளை நீக்குவதாக கமல்ஹாசன் ஒத்துக்கொண்ட நிலையில் முஸ்லீம் அமைப்பினர் தங்கள் எதிர்ப்பைக் கைவிடுவதாக அறிவித்தனர்.
இதையடுத்து சென்னை உட்பட மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திரைப்படம் வெளியாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டிருக்கிறது.


இசைஞானி இளையராஜா இசையில் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ள நீதானே என் பொன்வசந்தம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியது.

Sony Music Acquires Neethane Enn Ponvasantham சமீபத்தில் எந்தப் பட இசைக்கும் தராத மிகப் பெரிய விலையை நீதானே என் பொன்வசந்தத்துக்கு கொடுத்துள்ளது சோனி.

கவுதம் மேனன் இயக்கத்தில், ஆர் எஸ் இன்போடெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், ஜீவா - சமந்தா நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகிறது.

இளையராஜா இசை என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே, இந்தப் படத்துக்கு ஏக எதிர்ப்பார்ப்பு. படத்துக்காக வெளியான இசை முன்னோட்டம் அந்த எதிர்ப்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியது.

ரூ 2.5 கோடிவரை இந்தப் படத்தின் இசை உரிமைக்கு விலை தர சோனி நிறுவனம் முன்வந்ததாகக் கூறப்பட்டது. இது ரஹ்மான் இசையில் வந்த விண்ணைத் தாண்டி வருவாயாவை விட மிக அதிகம்.

இந்த நிலையில், சோனிக்கு நீதானே என் பொன்வசந்தம் இசை உரிமை விற்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூலை 1-ம் தேதி இசை வெளியீடு பிரமாண்டமாக நடக்கவிருப்பதாக கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

விண்ணைத்தாண்டி வருவாயாவை விட அதிக விலைக்குப் போன நீதானே என் பொன்வசந்தம்!

இசைஞானி இளையராஜா இசையில் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ள நீதானே என் பொன்வசந்தம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியது.

Sony Music Acquires Neethane Enn Ponvasantham சமீபத்தில் எந்தப் பட இசைக்கும் தராத மிகப் பெரிய விலையை நீதானே என் பொன்வசந்தத்துக்கு கொடுத்துள்ளது சோனி.

கவுதம் மேனன் இயக்கத்தில், ஆர் எஸ் இன்போடெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், ஜீவா - சமந்தா நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகிறது.

இளையராஜா இசை என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே, இந்தப் படத்துக்கு ஏக எதிர்ப்பார்ப்பு. படத்துக்காக வெளியான இசை முன்னோட்டம் அந்த எதிர்ப்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியது.

ரூ 2.5 கோடிவரை இந்தப் படத்தின் இசை உரிமைக்கு விலை தர சோனி நிறுவனம் முன்வந்ததாகக் கூறப்பட்டது. இது ரஹ்மான் இசையில் வந்த விண்ணைத் தாண்டி வருவாயாவை விட மிக அதிகம்.

இந்த நிலையில், சோனிக்கு நீதானே என் பொன்வசந்தம் இசை உரிமை விற்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூலை 1-ம் தேதி இசை வெளியீடு பிரமாண்டமாக நடக்கவிருப்பதாக கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

Shankar Titles His New Movie I
தனது அடுத்த படத்துக்கு வித்தியாசமாக 'ஐ' எனப் பெயர் சூட்டியுள்ளார் இயக்குநர் ஷங்கர்.
இந்தப் படத்தில் ஷங்கருடன் இணைபவர் விக்ரம். நாட்டின் தலையாய பிரச்சினையான தேர்தல் முறைகேடுகள் பின்னணியில் இந்தப் படம் உருவாகவிருப்பதாக சொல்லப்படுகிறது.
படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஏஆர் ரஹ்மான் இசையமைக்க, பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழில் 'ஐ' என்றால் ஐவர் என்று ஒரு பொருள் உண்டு. ஆங்கிலத்தில் 'நான்' என்று சொல்லலாம்.
படத்தின் நாயகியாக சமந்தா ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தப் படத்துக்காக அவர் மணிரத்னம் படத்தை துறந்ததோடு, மொத்தமாக கால்ஷீட்டை கொடுத்துள்ளாராம்.
விரைவில் படத்தின் பிற விவரங்களை ஷங்கர் வெளியிடவிருக்கிறார்.

ஷங்கரின் புதிய மெகா பட்ஜெட் படம் 'ஐ' - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Shankar Titles His New Movie I
தனது அடுத்த படத்துக்கு வித்தியாசமாக 'ஐ' எனப் பெயர் சூட்டியுள்ளார் இயக்குநர் ஷங்கர்.
இந்தப் படத்தில் ஷங்கருடன் இணைபவர் விக்ரம். நாட்டின் தலையாய பிரச்சினையான தேர்தல் முறைகேடுகள் பின்னணியில் இந்தப் படம் உருவாகவிருப்பதாக சொல்லப்படுகிறது.
படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஏஆர் ரஹ்மான் இசையமைக்க, பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழில் 'ஐ' என்றால் ஐவர் என்று ஒரு பொருள் உண்டு. ஆங்கிலத்தில் 'நான்' என்று சொல்லலாம்.
படத்தின் நாயகியாக சமந்தா ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தப் படத்துக்காக அவர் மணிரத்னம் படத்தை துறந்ததோடு, மொத்தமாக கால்ஷீட்டை கொடுத்துள்ளாராம்.
விரைவில் படத்தின் பிற விவரங்களை ஷங்கர் வெளியிடவிருக்கிறார்.

தனது அடுத்த படத்தில் மிக ஸ்லிம்மாகத் தோன்ற வேண்டும் என்பதற்காக தினமும் மணி நேரம் கடும் உடற்பயிற்சியில் இறங்கியுள்ளார் நடிகர் அஜீத்.
விஷ்ணுவர்த்தன் இயக்க நயன்தாராம ஜோடியாக நடிக்கும் இந்தப் படம் இந்தியில் வெளியான ரேஸ் படத்தின் ரீமேக் என்கிறார்கள்.

Ajith Spends 5 Hours Gym படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. படப்பிடிப்பு கடந்த 18-ந்தேதி பெங்களூரில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஆர்யாவும் நடிக்கிறார். நாயகிகளாக நயன்தாரா, டாப்ஸி நடிக்கின்றனர்.

இந்த படத்தில் அஜீத்தை மங்காத்தாபோல் இல்லாமல் மிகவும் இளமையாக காட்டப் போகிறாராம் விஷ்ணுவர்த்தன். இதற்காக தலைமுடி காஸ்ட்யூம் என எல்லாவற்றையும் மாற்றுகிறார்கள்.

அத்துடன் உடல் எடையை குறைக்கும்படியும் கேட்டுக் கொண்டாராம். இதனை ஏற்று அஜீத் கடந்த 7 நாட்களாக ஜிம்முக்கு செல்கிறார். தினமும் 5 மணி நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து விஷ்ணுவர்த்தன் கூறும்போது, தீவிர உடற்பயிற்சி செய்கிறார் அஜீத். அவரது உருவம் இப்போது நம்ப முடியாத அளவுக்கு மாறியிருக்கிறது," என்றார்.

தினம் 5 மணி நேரம் உடற்பயிற்சி- அடுத்த ரிஸ்க்குக்கு ஆயத்தமாகும் அஜீத்!

தனது அடுத்த படத்தில் மிக ஸ்லிம்மாகத் தோன்ற வேண்டும் என்பதற்காக தினமும் மணி நேரம் கடும் உடற்பயிற்சியில் இறங்கியுள்ளார் நடிகர் அஜீத்.
விஷ்ணுவர்த்தன் இயக்க நயன்தாராம ஜோடியாக நடிக்கும் இந்தப் படம் இந்தியில் வெளியான ரேஸ் படத்தின் ரீமேக் என்கிறார்கள்.

Ajith Spends 5 Hours Gym படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. படப்பிடிப்பு கடந்த 18-ந்தேதி பெங்களூரில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஆர்யாவும் நடிக்கிறார். நாயகிகளாக நயன்தாரா, டாப்ஸி நடிக்கின்றனர்.

இந்த படத்தில் அஜீத்தை மங்காத்தாபோல் இல்லாமல் மிகவும் இளமையாக காட்டப் போகிறாராம் விஷ்ணுவர்த்தன். இதற்காக தலைமுடி காஸ்ட்யூம் என எல்லாவற்றையும் மாற்றுகிறார்கள்.

அத்துடன் உடல் எடையை குறைக்கும்படியும் கேட்டுக் கொண்டாராம். இதனை ஏற்று அஜீத் கடந்த 7 நாட்களாக ஜிம்முக்கு செல்கிறார். தினமும் 5 மணி நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து விஷ்ணுவர்த்தன் கூறும்போது, தீவிர உடற்பயிற்சி செய்கிறார் அஜீத். அவரது உருவம் இப்போது நம்ப முடியாத அளவுக்கு மாறியிருக்கிறது," என்றார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் தலைப்பை பயன்படுத்த கோர்ட் தடை விதித்துள்ளது.

Chennai Court Bans Thuppakki Title நடிகர் கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்தவர் தயாரிப்பாளார் ரவிதேவன். இவரது தயாரிப்பில் லோகியாஸ் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு ‘கள்ளத்துப்பாக்கி' என்ற படத்தலைப்பு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு துப்பாக்கி என்று தலைப்பு வைக்கப்பட்டது.

துப்பாக்கி படத்தின் டைட்டில் டிசைனும் கள்ளத்துப்பாக்கி படத்தின் டைட்டில் பாணியில் இருந்தது.

இதையடுத்து கள்ளத்துப்பாக்கி குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டனர். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைவராக இருப்பதால், தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று கூறி நீதிமன்றத்துக்குப் போனார்கள் கள்ளத்துப்பாக்கி குழுவினர்.

கள்ளத்துப்பாக்கி குழுவினரின் மனுவை விசாரித்த நீதிபதி, விஜய் நடித்து வரும் படத்திற்கு துப்பாக்கி என்று டைட்டில் வைக்கக்கூடாது என தடை விதித்து உத்தரவிட்டார்!

விஜய்யின் துப்பாக்கி படத் தலைப்புக்கு நீதிமன்றம் தடை!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் தலைப்பை பயன்படுத்த கோர்ட் தடை விதித்துள்ளது.

Chennai Court Bans Thuppakki Title நடிகர் கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்தவர் தயாரிப்பாளார் ரவிதேவன். இவரது தயாரிப்பில் லோகியாஸ் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு ‘கள்ளத்துப்பாக்கி' என்ற படத்தலைப்பு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு துப்பாக்கி என்று தலைப்பு வைக்கப்பட்டது.

துப்பாக்கி படத்தின் டைட்டில் டிசைனும் கள்ளத்துப்பாக்கி படத்தின் டைட்டில் பாணியில் இருந்தது.

இதையடுத்து கள்ளத்துப்பாக்கி குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டனர். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைவராக இருப்பதால், தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று கூறி நீதிமன்றத்துக்குப் போனார்கள் கள்ளத்துப்பாக்கி குழுவினர்.

கள்ளத்துப்பாக்கி குழுவினரின் மனுவை விசாரித்த நீதிபதி, விஜய் நடித்து வரும் படத்திற்கு துப்பாக்கி என்று டைட்டில் வைக்கக்கூடாது என தடை விதித்து உத்தரவிட்டார்!


அஜீத் நடித்துள்ள பில்லா 2 படம் வரும் ஜூலை 13-ம் தேதி வெளியாவதாக படத்தின் தயாரிப்பாளர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் மட்டும் 500 க்கும் மேற்பட்ட அரங்குகளில் படம் வெளியாகிறது.
இந்தப் படத்தின் ரிலீஸ் கடந்த மே மாதத்திலிருந்தே இதோ அதோ என இழுத்தடித்துக் கொண்டிருந்தது. சில தினங்களுக்கு முன் படம் சென்சார் செய்யப்பட்டபோது, ஏ சான்று கொடுத்துவிட்டனர். ஏராளமான காட்சிகளை வெட்டியும் விட்டனர்.
இதனால் பட வெளியீடு திட்டமிட்டபடி ஜூன் 21-ம் தேதி நடக்கவில்லை. மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளிப்போய்விட்டது.
இந்த நிலையில், படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
“ஆவலுடன் எதிர்ப்பார்த்த தல ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க வருகிறது பில்லா 2. அனைத்து வேலைகளும் முடிந்து பக்கா ஆக்ஷன் த்ரில்லராக வரும் ஜூலை 13-ம் தேதி பில்லா 2ஐ வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் 500க்கும் அதிகமான அரங்குகளில் பில்லா 2திரையிடப்படும். உலகம் முழுவதும் வெளியாகவுள்ள திரையரங்குகள் விவரம் விரைவில் வெளியிடப்படும்,” என்று கூறியுள்ளார்.

500 தியேட்டர்களில் பில்லா 2 – 10-ம் தேதி முதல் முன்பதிவு ஆரம்பம்!


அஜீத் நடித்துள்ள பில்லா 2 படம் வரும் ஜூலை 13-ம் தேதி வெளியாவதாக படத்தின் தயாரிப்பாளர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் மட்டும் 500 க்கும் மேற்பட்ட அரங்குகளில் படம் வெளியாகிறது.
இந்தப் படத்தின் ரிலீஸ் கடந்த மே மாதத்திலிருந்தே இதோ அதோ என இழுத்தடித்துக் கொண்டிருந்தது. சில தினங்களுக்கு முன் படம் சென்சார் செய்யப்பட்டபோது, ஏ சான்று கொடுத்துவிட்டனர். ஏராளமான காட்சிகளை வெட்டியும் விட்டனர்.
இதனால் பட வெளியீடு திட்டமிட்டபடி ஜூன் 21-ம் தேதி நடக்கவில்லை. மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளிப்போய்விட்டது.
இந்த நிலையில், படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
“ஆவலுடன் எதிர்ப்பார்த்த தல ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க வருகிறது பில்லா 2. அனைத்து வேலைகளும் முடிந்து பக்கா ஆக்ஷன் த்ரில்லராக வரும் ஜூலை 13-ம் தேதி பில்லா 2ஐ வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் 500க்கும் அதிகமான அரங்குகளில் பில்லா 2திரையிடப்படும். உலகம் முழுவதும் வெளியாகவுள்ள திரையரங்குகள் விவரம் விரைவில் வெளியிடப்படும்,” என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் வெளியான படங்களில் அதிக பொருட்செலவில் உருவாகி வரும் படம் ‘விஸ்வரூபம்’. கமல் நடித்து, இயக்கி, தயாரித்து இருக்கிறார்.
கமலுடன் ஆண்ட்ரியா, பூஜாகுமார் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். இப்படத்தின் FIRST LOOK-ஐ கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட்டார் கமல்.
இப்படத்தில் கமல் இரட்டை வேடத்தில் எல்லாம் நடிக்கவில்லையாம். விஸ்வநாத் (எ) விஸ் என்ற பாத்திரத்தில் நடித்து இருக்கிறார். விஸ்வநாத் பாத்திரத்தில் கதக் நடன கலைஞராகவும், விஸ் பாத்திரத்தில் FBI ஏஜெண்டாகவும் நடித்து இருக்கிறார்.
‘விஸ்வரூபம்’ படத்திற்காக இதுவரை எடுத்த காட்சிகள் மிகவும் அதிகமாக இருப்பதால் அதில் சில காட்சிகளை பயன்படுத்தி ‘விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பயன்படுத்த இருக்கிறார் கமல் என்று செய்திகள் வெளியாகின.
இச்செய்தி குறித்து கமல் தெரிவித்து இருப்பது ” விஸ்வரூபம் படத்தினைத் துவங்கும் போதே, இப்படம் மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெறும் என்று பரிபூரணமாக நம்பி தான் துவக்கினோம். இரண்டாம் பாகமும் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு 40 % முடிவடைந்துவிட்டது.
இந்திய திரையுலகில் இதுவரை விஸ்வரூபம் மாதிரியான கதைகள் வந்தது இல்லை. தேசிய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து இப்படத்தில் கையாண்டுள்ளோம் ” என்று தெரிவித்து இருக்கிறார்

விஸ்வரூபம் இரண்டாம் பாகம் வருவது நிச்சயம். கமல் பேட்டி

இந்தியாவில் வெளியான படங்களில் அதிக பொருட்செலவில் உருவாகி வரும் படம் ‘விஸ்வரூபம்’. கமல் நடித்து, இயக்கி, தயாரித்து இருக்கிறார்.
கமலுடன் ஆண்ட்ரியா, பூஜாகுமார் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். இப்படத்தின் FIRST LOOK-ஐ கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட்டார் கமல்.
இப்படத்தில் கமல் இரட்டை வேடத்தில் எல்லாம் நடிக்கவில்லையாம். விஸ்வநாத் (எ) விஸ் என்ற பாத்திரத்தில் நடித்து இருக்கிறார். விஸ்வநாத் பாத்திரத்தில் கதக் நடன கலைஞராகவும், விஸ் பாத்திரத்தில் FBI ஏஜெண்டாகவும் நடித்து இருக்கிறார்.
‘விஸ்வரூபம்’ படத்திற்காக இதுவரை எடுத்த காட்சிகள் மிகவும் அதிகமாக இருப்பதால் அதில் சில காட்சிகளை பயன்படுத்தி ‘விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பயன்படுத்த இருக்கிறார் கமல் என்று செய்திகள் வெளியாகின.
இச்செய்தி குறித்து கமல் தெரிவித்து இருப்பது ” விஸ்வரூபம் படத்தினைத் துவங்கும் போதே, இப்படம் மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெறும் என்று பரிபூரணமாக நம்பி தான் துவக்கினோம். இரண்டாம் பாகமும் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு 40 % முடிவடைந்துவிட்டது.
இந்திய திரையுலகில் இதுவரை விஸ்வரூபம் மாதிரியான கதைகள் வந்தது இல்லை. தேசிய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து இப்படத்தில் கையாண்டுள்ளோம் ” என்று தெரிவித்து இருக்கிறார்

புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்றும் வில்லன் கதாப்பாத்திரங்களில் நடிக்க விரும்புவதாகவும் ஓ.கே ஓ.கே நாயகன் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
கொலிவுட்டில் உதயநிதி நடித்துள்ள ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் 50வது நாள் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட உதயநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், சீர்திருந்த படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பேன்.
புகை பிடிக்கும் காட்சி, புகையிலை பயன்படுத்தும் காட்சியில் நடிக்க மாட்டேன். வித்தியாசமான கதை அம்சம் உள்ள படங்களில் நடிக்க முயற்சி செய்வேன் என்றார்.
மேலும் ஜனரஞ்சகமான நகைச்சுவைப் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கவுள்ளதாகவும் வித்தியாசமான ஆக்ஷன் படங்கள், வில்லன் கதாப்பாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்தார்.
ராஜேஷ் படத்தில் மீண்டும் நடிக்க ஆசைப்படுவதாகவும் சந்தானத்துடன் கூட்டணி மீண்டும் தொடரும் எனவும் கூறினார்.
மேலும் நடிகர் வடிவேல் தனக்கு நல்ல நண்பர் என்றும் அவருடன் சேர்ந்து நடிக்க விரும்புவதாகவும் பேட்டியில் தெரிவித்தார்.

வில்லனாக நடிக்க ஆசைப்படும் உதயநிதி

புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்றும் வில்லன் கதாப்பாத்திரங்களில் நடிக்க விரும்புவதாகவும் ஓ.கே ஓ.கே நாயகன் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
கொலிவுட்டில் உதயநிதி நடித்துள்ள ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் 50வது நாள் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட உதயநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், சீர்திருந்த படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பேன்.
புகை பிடிக்கும் காட்சி, புகையிலை பயன்படுத்தும் காட்சியில் நடிக்க மாட்டேன். வித்தியாசமான கதை அம்சம் உள்ள படங்களில் நடிக்க முயற்சி செய்வேன் என்றார்.
மேலும் ஜனரஞ்சகமான நகைச்சுவைப் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கவுள்ளதாகவும் வித்தியாசமான ஆக்ஷன் படங்கள், வில்லன் கதாப்பாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்தார்.
ராஜேஷ் படத்தில் மீண்டும் நடிக்க ஆசைப்படுவதாகவும் சந்தானத்துடன் கூட்டணி மீண்டும் தொடரும் எனவும் கூறினார்.
மேலும் நடிகர் வடிவேல் தனக்கு நல்ல நண்பர் என்றும் அவருடன் சேர்ந்து நடிக்க விரும்புவதாகவும் பேட்டியில் தெரிவித்தார்.

சினேகா- பிரசன்னா திருமணம் சமீபத்தில் நடந்தது. திருமணத்துக்கு பின் சினேகா சினிமாவில் நடிப்பாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அவர் விரும்பினால் தொடர்ந்து நடிக்கலாம் என்று பிரசன்னா கூறினார். நடிப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்று சினேகா தெரிவித்தார்.
திருமணம் முடிந்து ஓரிரு வாரங்கள் ஆன நிலையில் சினேகா தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்கும் ஹரிதாஸ் படத்தில் நடிக்கிறார். அதில் சினேகாவுக்கு வித்தியாசமான வேடமாம். கேரக்டர் ரொம்ப பிடித்து போனதால் நடிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளதால் தேனிலவுக்கு போவதை சினேகாவும், பிரசன்னாவும் தள்ளி வைத்துள்ளனர்.

தேனிலவு தள்ளி வைப்பு: சினேகா மீண்டும் நடிக்கிறார்

சினேகா- பிரசன்னா திருமணம் சமீபத்தில் நடந்தது. திருமணத்துக்கு பின் சினேகா சினிமாவில் நடிப்பாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அவர் விரும்பினால் தொடர்ந்து நடிக்கலாம் என்று பிரசன்னா கூறினார். நடிப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்று சினேகா தெரிவித்தார்.
திருமணம் முடிந்து ஓரிரு வாரங்கள் ஆன நிலையில் சினேகா தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்கும் ஹரிதாஸ் படத்தில் நடிக்கிறார். அதில் சினேகாவுக்கு வித்தியாசமான வேடமாம். கேரக்டர் ரொம்ப பிடித்து போனதால் நடிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளதால் தேனிலவுக்கு போவதை சினேகாவும், பிரசன்னாவும் தள்ளி வைத்துள்ளனர்.

கலகலப்பு படத்துக்காக லைட்டாக குண்டடித்த அஞ்சலி தற்போது அதைக் கஷ்டப்பட்டு இறக்கி வருகிறாராம். இதற்காக ஜிம்முக்கு அடிக்கடி போய் வந்து கொண்டிருக்கிறார். சீக்கிரம் பழையபடி ஸ்லிம்மாகி விடுவாராம்.கலகலப்பு படத்தில் ஓவியாவுக்கு ஈக்வலாக கவர்ச்சியில் புகுந்து விளையாடி ரசிகர்களை புல்லரிக்க வைத்திருக்கிறார் அஞ்சலி. அவரும், ஓவியாவும் ஒரு பாட்டில் போட்டுள்ள கிளாமர் ஆட்டம்தான் இந்த நிமிடம் வரை அத்தனை பேரின் பேச்சாகவும் இருக்கிறது.
இப்படத்துக்காக கொஞ்சம் போல குண்டடித்திருந்தார் அஞ்சலி. காட்சியில் கிளாமர் வருவதால் அதற்கேற்ற உடல் வாகுக்காக இந்த குண்டடிப்பாம். இப்போது அதைக் குறைக்க கடுமையாக உடற்பயிற்சியில் குதித்துள்ளார் அஞ்சலி.
அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கப் போகிறார் அஞ்சலி. இதற்காகத்தான் இந்த உடல் குறைப்பு முயற்சியாம். இந்தப் புதிய படத்தில் காலேஜ் கேர்ள் வேடத்தில் வருகிறாராம் அஞ்சலி. எனவேதான் உடலைக் குறைத்தாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளாராம்.
ஜிம்முக்குப் போய் கடுமையாக உடற் பயிற்சி செய்து வரும் அஞ்சலிக்கு எடையில் நல்ல குறைவு ஏற்பட்டுள்ளதாம். இதனால் ஹேப்பியாகியிருக்கிறார்.
இந்தப் படம் தவிர டெல்லி பெல்லியின் தமிழ் ரீமேக்கான வருத்தப்படாத வாலிபர் சங்கத்திலும் நடிக்கப் போகிறார் அஞ்சலி.
தொடர்ந்து படங்கள் கை வசம் குவிந்து வருவதால் அஞ்சலிக்கு செம டைட்டாகியிருக்கிறதாம் கால்ஷீட் புக். இதனால் பார்த்துப் பார்த்துத்தான் வாய்ப்ப்புகளை ஏற்கிறாராம்.

சுந்தர்.சி க்காக ஏற்றிய உடம்பை முருதாஸுக்காக குறைக்கும் அஞ்சலி!

கலகலப்பு படத்துக்காக லைட்டாக குண்டடித்த அஞ்சலி தற்போது அதைக் கஷ்டப்பட்டு இறக்கி வருகிறாராம். இதற்காக ஜிம்முக்கு அடிக்கடி போய் வந்து கொண்டிருக்கிறார். சீக்கிரம் பழையபடி ஸ்லிம்மாகி விடுவாராம்.கலகலப்பு படத்தில் ஓவியாவுக்கு ஈக்வலாக கவர்ச்சியில் புகுந்து விளையாடி ரசிகர்களை புல்லரிக்க வைத்திருக்கிறார் அஞ்சலி. அவரும், ஓவியாவும் ஒரு பாட்டில் போட்டுள்ள கிளாமர் ஆட்டம்தான் இந்த நிமிடம் வரை அத்தனை பேரின் பேச்சாகவும் இருக்கிறது.
இப்படத்துக்காக கொஞ்சம் போல குண்டடித்திருந்தார் அஞ்சலி. காட்சியில் கிளாமர் வருவதால் அதற்கேற்ற உடல் வாகுக்காக இந்த குண்டடிப்பாம். இப்போது அதைக் குறைக்க கடுமையாக உடற்பயிற்சியில் குதித்துள்ளார் அஞ்சலி.
அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கப் போகிறார் அஞ்சலி. இதற்காகத்தான் இந்த உடல் குறைப்பு முயற்சியாம். இந்தப் புதிய படத்தில் காலேஜ் கேர்ள் வேடத்தில் வருகிறாராம் அஞ்சலி. எனவேதான் உடலைக் குறைத்தாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளாராம்.
ஜிம்முக்குப் போய் கடுமையாக உடற் பயிற்சி செய்து வரும் அஞ்சலிக்கு எடையில் நல்ல குறைவு ஏற்பட்டுள்ளதாம். இதனால் ஹேப்பியாகியிருக்கிறார்.
இந்தப் படம் தவிர டெல்லி பெல்லியின் தமிழ் ரீமேக்கான வருத்தப்படாத வாலிபர் சங்கத்திலும் நடிக்கப் போகிறார் அஞ்சலி.
தொடர்ந்து படங்கள் கை வசம் குவிந்து வருவதால் அஞ்சலிக்கு செம டைட்டாகியிருக்கிறதாம் கால்ஷீட் புக். இதனால் பார்த்துப் பார்த்துத்தான் வாய்ப்ப்புகளை ஏற்கிறாராம்.

தமிழ் சினிமாவின் சிறந்த படங்கள்: 1931 முதல் 2010 வரை' புத்தகத்தை எழுதிய தனஞ்செயனை நேரில் வழரவழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார் ரஜினி.

80 ஆண்டுகால தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான ஆயிரம் படங்களைத் தொகுத்துத் தந்திருக்கிறது தனஞ்செயன் தலைமையிலான ஒரு குழு.

தனஞ்செயன் முன்பு மோசர் பேர் நிறுவனத்தின் தமிழ்ப் படத் தயாரிப்புப் பிரிவில் தலைமை அதிகாரியாக இருந்தவர். பூ உள்ளிட்ட நான்கைந்து படங்களை அந்த நிறுவனம் தயாரித்த பிறகு, படத் தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இப்போது மோசர் பேரிலிருந்து விலகி யுடிவி நிறுவனத்தின் தென் இந்தியப் பிரிவின் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.

இந்தப் புத்தகத்தை அண்மையில் கமல்ஹாஸன் வெளியிட்டது நினைவிருக்கலாம். இப்போது தனஞ்செயனை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார் ரஜினி.

ரஜினியை சந்தித்த பின் தனஞ்செயன் இப்படிக் கூறியுள்ளார்:

"இன்று என் வாழ்க்கையில் மறக்க முடியாத, மிகப் பெரிய நாள் இதுவே. ரஜினி சார் என்னைப் பாராட்டியதையும், அவரது சிலையைப் பரிசளித்ததையும் மறக்க முடியாது. அவர் உண்மையிலேயே மிகச் சிறந்த மனிதர். மனிதாபிமானி. அவரைப் போல எளிமையான ஒருவரை என் வாழ்க்கையில் சந்தித்ததே இல்லை. என் மனதை வென்றுவிட்டார் ரஜினி..." என்றார்.

இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ள இந்த ஆங்கிலப் புத்தகத்தின் விலை ரூ 3000. தமிழ்ப் பதிப்பு விரைவில் வரவிருக்கிறது. எம்ஜிஆர், ரஜினியின் படங்கள் பல இந்தப் புத்தகத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், ரஜினி பாராட்டுத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

'தமிழ் சினிமா வரலாறு'... ரஜினி பாராட்டு!

தமிழ் சினிமாவின் சிறந்த படங்கள்: 1931 முதல் 2010 வரை' புத்தகத்தை எழுதிய தனஞ்செயனை நேரில் வழரவழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார் ரஜினி.

80 ஆண்டுகால தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான ஆயிரம் படங்களைத் தொகுத்துத் தந்திருக்கிறது தனஞ்செயன் தலைமையிலான ஒரு குழு.

தனஞ்செயன் முன்பு மோசர் பேர் நிறுவனத்தின் தமிழ்ப் படத் தயாரிப்புப் பிரிவில் தலைமை அதிகாரியாக இருந்தவர். பூ உள்ளிட்ட நான்கைந்து படங்களை அந்த நிறுவனம் தயாரித்த பிறகு, படத் தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இப்போது மோசர் பேரிலிருந்து விலகி யுடிவி நிறுவனத்தின் தென் இந்தியப் பிரிவின் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.

இந்தப் புத்தகத்தை அண்மையில் கமல்ஹாஸன் வெளியிட்டது நினைவிருக்கலாம். இப்போது தனஞ்செயனை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார் ரஜினி.

ரஜினியை சந்தித்த பின் தனஞ்செயன் இப்படிக் கூறியுள்ளார்:

"இன்று என் வாழ்க்கையில் மறக்க முடியாத, மிகப் பெரிய நாள் இதுவே. ரஜினி சார் என்னைப் பாராட்டியதையும், அவரது சிலையைப் பரிசளித்ததையும் மறக்க முடியாது. அவர் உண்மையிலேயே மிகச் சிறந்த மனிதர். மனிதாபிமானி. அவரைப் போல எளிமையான ஒருவரை என் வாழ்க்கையில் சந்தித்ததே இல்லை. என் மனதை வென்றுவிட்டார் ரஜினி..." என்றார்.

இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ள இந்த ஆங்கிலப் புத்தகத்தின் விலை ரூ 3000. தமிழ்ப் பதிப்பு விரைவில் வரவிருக்கிறது. எம்ஜிஆர், ரஜினியின் படங்கள் பல இந்தப் புத்தகத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், ரஜினி பாராட்டுத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


அரும்புமீசை குறும்புபார்வை சினிமா டிரைலர்



ஆடு புலி சினிமா டிரைலர்


முக நூல்

Popular Posts