background img

புதிய வரவு

Showing posts with label Air India. Show all posts
Showing posts with label Air India. Show all posts
டெல்லி: ஏற்கெனவே பெரும் நஷ்டம் மற்றும் கடனில் தத்தளிக்கும் ஏர் இந்தியா நிறுவனம், இப்போதைய விமானிகளின் ஸ்ட்ரைக்கால் ரூ 27 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இதுவரை 280-க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், விமானிகளின் வேலை நிறுத்தம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. வேலை நிறுத்தம் செய்து வரும் சங்கத்துடன் எக்சிகியூட்டிவ் பைலட்டுகள் 300 பேரும் நேற்று வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.

எங்களுக்கு உடல் நலம் இல்லை என்று விடுப்பில் சென்ற அவர்கள், 'எங்கள் இளம் விமானிகளுக்கு ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறோம்' என்று அறிவித்தனர்.

இதன் காரணமாக 280-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 5 நாட்களுக்கு விமானங்களுக்கான முன்பதிவு ரத்து செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

ரூ.27 கோடி இழப்பு

இதனால் பல்லாயிரக்கணக்கான விமானப் பயணிகள், உரிய நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும், குடும்ப நிகழ்ச்சிகளுக்கு போக முடியாமலும், ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளை கொண்டு சேர்க்க முடியாமலும் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.

விமானிகளின் 3 நாள் வேலை நிறுத்தம் காரணமாக ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 27 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு சில தனியார் விமான நிறுவனங்கள் தங்கள் இஷ்டம் போல் கட்டணங்களை உயர்த்தி வசூலித்து வருகின்றன.

சில விமானங்களில் கட்டணம் 3 மடங்கு அதிகமாக வசூலிக்கப்பட்டது. முக்கிய வழித்தடங்களில் முன்கூட்டியே அனைத்து டிக்கெட்டுகளையும் ப்ளாக் செய்துவிட்ட சிலர், அதை எக்கச் சக்க விலையில் விற்று வந்தனர்.

280 விமானங்கள் ரத்து; 27 கோடி நஷ்டம்!

டெல்லி: ஏற்கெனவே பெரும் நஷ்டம் மற்றும் கடனில் தத்தளிக்கும் ஏர் இந்தியா நிறுவனம், இப்போதைய விமானிகளின் ஸ்ட்ரைக்கால் ரூ 27 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இதுவரை 280-க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், விமானிகளின் வேலை நிறுத்தம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. வேலை நிறுத்தம் செய்து வரும் சங்கத்துடன் எக்சிகியூட்டிவ் பைலட்டுகள் 300 பேரும் நேற்று வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.

எங்களுக்கு உடல் நலம் இல்லை என்று விடுப்பில் சென்ற அவர்கள், 'எங்கள் இளம் விமானிகளுக்கு ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறோம்' என்று அறிவித்தனர்.

இதன் காரணமாக 280-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 5 நாட்களுக்கு விமானங்களுக்கான முன்பதிவு ரத்து செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

ரூ.27 கோடி இழப்பு

இதனால் பல்லாயிரக்கணக்கான விமானப் பயணிகள், உரிய நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும், குடும்ப நிகழ்ச்சிகளுக்கு போக முடியாமலும், ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளை கொண்டு சேர்க்க முடியாமலும் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.

விமானிகளின் 3 நாள் வேலை நிறுத்தம் காரணமாக ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 27 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு சில தனியார் விமான நிறுவனங்கள் தங்கள் இஷ்டம் போல் கட்டணங்களை உயர்த்தி வசூலித்து வருகின்றன.

சில விமானங்களில் கட்டணம் 3 மடங்கு அதிகமாக வசூலிக்கப்பட்டது. முக்கிய வழித்தடங்களில் முன்கூட்டியே அனைத்து டிக்கெட்டுகளையும் ப்ளாக் செய்துவிட்ட சிலர், அதை எக்கச் சக்க விலையில் விற்று வந்தனர்.

ஏர் இந்தியா நிறுவன விமானிகளில் ஒரு பகுதியினர் நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு எடுத்தனர். விமான நிறுவனங்களுக்கு இடையே ஒரே மாதிரியான சம்பள விகிதம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

கோரிக்கை தொடர்பாக நிர்வாகத்துக்கும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கும் இடையே பல நாட்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, நேற்று நள்ளிரவில் இந்த வேலை நிறுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.


இதன் காரணமாக, உள்நாட்டு விமான போக்குவரத்து பாதிக்கும் என்று விமான நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இன்று காலை ஏறக்குறைய 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தம்: 20 விமானங்கள் ரத்து

ஏர் இந்தியா நிறுவன விமானிகளில் ஒரு பகுதியினர் நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு எடுத்தனர். விமான நிறுவனங்களுக்கு இடையே ஒரே மாதிரியான சம்பள விகிதம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

கோரிக்கை தொடர்பாக நிர்வாகத்துக்கும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கும் இடையே பல நாட்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, நேற்று நள்ளிரவில் இந்த வேலை நிறுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.


இதன் காரணமாக, உள்நாட்டு விமான போக்குவரத்து பாதிக்கும் என்று விமான நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இன்று காலை ஏறக்குறைய 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

புதுடில்லி: லிபியாவில் சிக்கியுள்ள 18 ஆயிரம் இந்தியர்களை மீட்கும் பணி நேற்று துவங்கியது. இதற்காக, இரண்டு சிறப்பு விமானங்கள் லிபியா தலைநகர் டிரிபோலிக்கு அனுப்பப்பட்டன. இதில், முதல் விமானத்தில் 300 பேர் நேற்றிரவு டில்லி வந்து சேர்ந்தனர். விமானங்கள் தவிர நான்கு கப்பல்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

லிபியா தலைவர் மும்மர் கடாபி, பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, கடந்த இரு வாரங்களாக, அந்நாட்டு மக்கள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். கடாபி ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்ததால், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அங்கு தங்கியிருந்த வெளிநாட்டவர்கள், அந்தந்த நாடுகளால் படிப்படியாக மீட்கப்பட்டு வருகின்றனர். கலவர பூமியாக மாறிவிட்ட லிபியாவில், தற்போது 18 ஆயிரம் இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் லிபியாவில் உள்ள இந்திய தூதரகம் தீவிரமாக இறங்கியுள்ளன.

இரண்டு சிறப்பு விமானங்கள்: டிரிபோலி, பெங்காசி, சபா மற்றும் குப்ரா நகரங்களின் உள்ள விமான நிலையங்களில் இந்தியர்கள் காத்துக் கிடக்கின்றனர். அவர்களை மீட்பதற்காக, ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 747 விமானம் மற்றும் ஏர்பஸ் 330 விமானம் இரண்டும், நேற்று டிரிபோலியில் தரையிறங்கின. இந்த விமானங்கள் இரண்டிலும், 640 பேர் பயணிக்க முடியும். முதல் விமானம் 300 பேருடன் நேற்று மாலை 4.10 மணிக்கு டிரிபோலியில் இருந்து புறப்பட்டு, இரவு 12 மணிக்கு டில்லி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது. அவர்களை மத்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். மீட்புப் பணியில் இந்த விமானங்கள் மார்ச் 7ம் தேதி வரை ஈடுபடுத்தப்படும்.

நான்கு கப்பல்கள்: இவை தவிர, ஐ.என்.எஸ்., ஜலஸ்வா மற்றும் ஐ.என்.எஸ்., மைசூர் என்ற இரண்டு கப்பல்கள், மும்பையில் இருந்து நேற்று புறப்பட்டுள்ளன. எகிப்தின் "போர்ட் சயீத்' துறைமுகத்தில் இருந்து நேற்று புறப்பட்ட "ஸ்காட்டியா பிரின்ஸ்' என்ற கப்பல், நாளை நண்பகலில் பெங்காசி போய்ச் சேரும். இக்கப்பலில் 1,200 பேர் பயணிக்க முடியும். மத்திய தரைக் கடலில் உள்ள மால்டா நாட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் மற்றொரு பயணிகள் கப்பல், லிபியாவுக்குத் திருப்பி விடப்பட்டு, அதன் மூலமும் இந்தியர்கள் மீட்கப்படுகின்றனர். இந்த இரண்டாவது கப்பலில் 1,600 பேர் பயணிக்க முடியும். இதுதவிர, மேலும் இரண்டு கப்பல்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கப்பல்கள் மூலம் லிபியாவில் இருந்து மீட்கப்படும் இந்தியர்கள், எகிப்தின் அலெக்சாண்டிரியா நகருக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவர். மீட்புப் பணியில் உதவுவதற்காக, டிரிபோலியில் உள்ள இந்திய தூதரகத்தில் மேலும் பல அதிகாரிகளை, இந்திய வெளியுறவு அமைச்சகம் பணிக்கு அமர்த்தியுள்ளது.

உணவு, தண்ணீரின்றி தவிப்பு: லிபியா - டுனீசியா எல்லைக்கருகில் உள்ள ஜாவியா நகரில், கடாபி ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் கடும் மோதல் நடந்து வருவதால், அங்குள்ள இந்தியர்கள், உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்குள்ள ஓர் இந்தியர் கூறுகையில்,"ஜாவியாவில் நிலவரம் மிகவும் மோசமாக உள்ளது. உணவு, தண்ணீர் உள்ளிட்ட எந்தப் பொருளும் கிடைக்கவில்லை' என்று கவலையுடன் தெரிவித்தார்.

லிபியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி துவங்கியது: முதல் விமானம் டில்லி வந்தது

புதுடில்லி: லிபியாவில் சிக்கியுள்ள 18 ஆயிரம் இந்தியர்களை மீட்கும் பணி நேற்று துவங்கியது. இதற்காக, இரண்டு சிறப்பு விமானங்கள் லிபியா தலைநகர் டிரிபோலிக்கு அனுப்பப்பட்டன. இதில், முதல் விமானத்தில் 300 பேர் நேற்றிரவு டில்லி வந்து சேர்ந்தனர். விமானங்கள் தவிர நான்கு கப்பல்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

லிபியா தலைவர் மும்மர் கடாபி, பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, கடந்த இரு வாரங்களாக, அந்நாட்டு மக்கள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். கடாபி ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்ததால், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அங்கு தங்கியிருந்த வெளிநாட்டவர்கள், அந்தந்த நாடுகளால் படிப்படியாக மீட்கப்பட்டு வருகின்றனர். கலவர பூமியாக மாறிவிட்ட லிபியாவில், தற்போது 18 ஆயிரம் இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் லிபியாவில் உள்ள இந்திய தூதரகம் தீவிரமாக இறங்கியுள்ளன.

இரண்டு சிறப்பு விமானங்கள்: டிரிபோலி, பெங்காசி, சபா மற்றும் குப்ரா நகரங்களின் உள்ள விமான நிலையங்களில் இந்தியர்கள் காத்துக் கிடக்கின்றனர். அவர்களை மீட்பதற்காக, ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 747 விமானம் மற்றும் ஏர்பஸ் 330 விமானம் இரண்டும், நேற்று டிரிபோலியில் தரையிறங்கின. இந்த விமானங்கள் இரண்டிலும், 640 பேர் பயணிக்க முடியும். முதல் விமானம் 300 பேருடன் நேற்று மாலை 4.10 மணிக்கு டிரிபோலியில் இருந்து புறப்பட்டு, இரவு 12 மணிக்கு டில்லி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது. அவர்களை மத்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். மீட்புப் பணியில் இந்த விமானங்கள் மார்ச் 7ம் தேதி வரை ஈடுபடுத்தப்படும்.

நான்கு கப்பல்கள்: இவை தவிர, ஐ.என்.எஸ்., ஜலஸ்வா மற்றும் ஐ.என்.எஸ்., மைசூர் என்ற இரண்டு கப்பல்கள், மும்பையில் இருந்து நேற்று புறப்பட்டுள்ளன. எகிப்தின் "போர்ட் சயீத்' துறைமுகத்தில் இருந்து நேற்று புறப்பட்ட "ஸ்காட்டியா பிரின்ஸ்' என்ற கப்பல், நாளை நண்பகலில் பெங்காசி போய்ச் சேரும். இக்கப்பலில் 1,200 பேர் பயணிக்க முடியும். மத்திய தரைக் கடலில் உள்ள மால்டா நாட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் மற்றொரு பயணிகள் கப்பல், லிபியாவுக்குத் திருப்பி விடப்பட்டு, அதன் மூலமும் இந்தியர்கள் மீட்கப்படுகின்றனர். இந்த இரண்டாவது கப்பலில் 1,600 பேர் பயணிக்க முடியும். இதுதவிர, மேலும் இரண்டு கப்பல்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கப்பல்கள் மூலம் லிபியாவில் இருந்து மீட்கப்படும் இந்தியர்கள், எகிப்தின் அலெக்சாண்டிரியா நகருக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவர். மீட்புப் பணியில் உதவுவதற்காக, டிரிபோலியில் உள்ள இந்திய தூதரகத்தில் மேலும் பல அதிகாரிகளை, இந்திய வெளியுறவு அமைச்சகம் பணிக்கு அமர்த்தியுள்ளது.

உணவு, தண்ணீரின்றி தவிப்பு: லிபியா - டுனீசியா எல்லைக்கருகில் உள்ள ஜாவியா நகரில், கடாபி ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் கடும் மோதல் நடந்து வருவதால், அங்குள்ள இந்தியர்கள், உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்குள்ள ஓர் இந்தியர் கூறுகையில்,"ஜாவியாவில் நிலவரம் மிகவும் மோசமாக உள்ளது. உணவு, தண்ணீர் உள்ளிட்ட எந்தப் பொருளும் கிடைக்கவில்லை' என்று கவலையுடன் தெரிவித்தார்.

முக நூல்

Popular Posts