background img

புதிய வரவு

Showing posts with label Cheif minister. Show all posts
Showing posts with label Cheif minister. Show all posts
பாட்னா : கடந்த 28ம் தேதிக்குள் சொத்து விவரங்களை சமர்ப்பிக்காத அரசு ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, பீகார் மாநில அரசு பரிசீலித்து வருகிறது. பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பாரதிய ஜனதா கூட்டணி அரசு உள்ளது. பொது வாழ்வில் ஊழலை வேரறுக்க வேண்டும் என்பதில், அந்த அரசு உறுதியாக உள்ளது. இதனால், முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் சுஷில்குமார் மோடி மற்றும் 28 அமைச்சர்கள், கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன்னதாக தங்களது சொத்து விவரங்களை சமர்ப்பித்தனர். இதேபோல், மாநில அரசு ஊழியர்களும், உயர் அதிகாரிகளும் தங்களது சொத்து விவரங்களை கடந்த பிப்ரவரி 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, பீகார் மாநில அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ஏற்று 329 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், 241 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட 4.5 லட்சம் அரசு ஊழியர்கள் தங்களது சொத்து விவரங்களை சமர்ப்பித்துள்ளனர். இந்த விவரங்கள் எல்லாம் விரைவில் பீகார் மாநில அரசின் வெப்சைட்டில் வெளியிடப்பட உள்ளன. மொத்தம் 88 சதவீத ஊழியர்கள் சொத்து விவரங்களை சமர்ப்பித்துள்ளனர். மீதமுள்ள ஊழியர்கள் இன்னும் சமர்ப்பிக்கவில்லை; இவர்களில் ஐந்து பேர் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள். சொத்துக் கணக்கு சமர்ப்பிக்காதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, பீகார் மாநில அரசு பரிசீலித்து வருகிறது.

சொத்து விவரம் தராதவர்கள் : நடவடிக்கை எடுக்கிறார் நிதிஷ்

பாட்னா : கடந்த 28ம் தேதிக்குள் சொத்து விவரங்களை சமர்ப்பிக்காத அரசு ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, பீகார் மாநில அரசு பரிசீலித்து வருகிறது. பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பாரதிய ஜனதா கூட்டணி அரசு உள்ளது. பொது வாழ்வில் ஊழலை வேரறுக்க வேண்டும் என்பதில், அந்த அரசு உறுதியாக உள்ளது. இதனால், முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் சுஷில்குமார் மோடி மற்றும் 28 அமைச்சர்கள், கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன்னதாக தங்களது சொத்து விவரங்களை சமர்ப்பித்தனர். இதேபோல், மாநில அரசு ஊழியர்களும், உயர் அதிகாரிகளும் தங்களது சொத்து விவரங்களை கடந்த பிப்ரவரி 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, பீகார் மாநில அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ஏற்று 329 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், 241 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட 4.5 லட்சம் அரசு ஊழியர்கள் தங்களது சொத்து விவரங்களை சமர்ப்பித்துள்ளனர். இந்த விவரங்கள் எல்லாம் விரைவில் பீகார் மாநில அரசின் வெப்சைட்டில் வெளியிடப்பட உள்ளன. மொத்தம் 88 சதவீத ஊழியர்கள் சொத்து விவரங்களை சமர்ப்பித்துள்ளனர். மீதமுள்ள ஊழியர்கள் இன்னும் சமர்ப்பிக்கவில்லை; இவர்களில் ஐந்து பேர் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள். சொத்துக் கணக்கு சமர்ப்பிக்காதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, பீகார் மாநில அரசு பரிசீலித்து வருகிறது.

பெங்களூரு : ""கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பாவே நீடிப்பார்,'' என, அம்மாநில பா.ஜ., தலைவர் ஈஸ்வரப்பா கூறியுள்ளார்.

கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடக்கலாம் என, செய்திகள் வெளியாகின.

இந்த சூழலில், கர்நாடக மாநில பா.ஜ., தலைவர் ஈஸ்வரப்பா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:கர்நாடக சட்டசபைக்கு முன்னதாகவே தேர்தல் நடக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியும், இடைத்தேர்தல் வர உள்ளதாக மக்கள் மனதை குழப்ப முயற்சி செய்கின்றன. அவர்களின் சதித் திட்டம் மக்களிடம் எடுபடாது. 2013ம் ஆண்டு தான் இங்கு சட்டசபை தேர்தல் நடக்கும். முதல்வர் எடியூரப்பாவை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை. அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கும் அவரே முதல்வராக நீடிப்பார். அவரது தலைமையின் கீழ் நாங்கள் ஒற்றுமையாகச் செயல்படுவோம்.தென்மாநிலங்களில், முதன் முறையாக கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சியைப் பிடித்துள்ளது. பா.ஜ., பொறுப்பேற்று ஆயிரமாவது நாள் நிறைவடைய உள்ளது. இதை கொண்டாடும் வகையில், பா.ஜ., சார்பில், வரும் 20ம் தேதி மிகப்பெரிய பேரணி நடக்க உள்ளது. இதில், பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கலந்து கொள்வார்.இவ்வாறு ஈஸ்வரப்பா கூறினார்.

முதல்வராக எடியூரப்பா நீடிப்பார் : கர்நாடக பா.ஜ., தலைவர் தகவல்

பெங்களூரு : ""கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பாவே நீடிப்பார்,'' என, அம்மாநில பா.ஜ., தலைவர் ஈஸ்வரப்பா கூறியுள்ளார்.

கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடக்கலாம் என, செய்திகள் வெளியாகின.

இந்த சூழலில், கர்நாடக மாநில பா.ஜ., தலைவர் ஈஸ்வரப்பா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:கர்நாடக சட்டசபைக்கு முன்னதாகவே தேர்தல் நடக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியும், இடைத்தேர்தல் வர உள்ளதாக மக்கள் மனதை குழப்ப முயற்சி செய்கின்றன. அவர்களின் சதித் திட்டம் மக்களிடம் எடுபடாது. 2013ம் ஆண்டு தான் இங்கு சட்டசபை தேர்தல் நடக்கும். முதல்வர் எடியூரப்பாவை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை. அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கும் அவரே முதல்வராக நீடிப்பார். அவரது தலைமையின் கீழ் நாங்கள் ஒற்றுமையாகச் செயல்படுவோம்.தென்மாநிலங்களில், முதன் முறையாக கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சியைப் பிடித்துள்ளது. பா.ஜ., பொறுப்பேற்று ஆயிரமாவது நாள் நிறைவடைய உள்ளது. இதை கொண்டாடும் வகையில், பா.ஜ., சார்பில், வரும் 20ம் தேதி மிகப்பெரிய பேரணி நடக்க உள்ளது. இதில், பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கலந்து கொள்வார்.இவ்வாறு ஈஸ்வரப்பா கூறினார்.

முக நூல்

Popular Posts