background img

புதிய வரவு

Showing posts with label Yeddyurappa. Show all posts
Showing posts with label Yeddyurappa. Show all posts
முதல் அமைச்சர், அமைச்சர்கள் யாரும் இல்லை என்று கூறும் குமாரசாமி முதலில் கர்நாடக மாநிலத்தில்தான் இருக்கிறாரா? என்று புரிந்து கொள்ள வேண்டும் என்று எடியூரப்பா கூறினார்.

மைசூர் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு நடத்துவதற்காக முதல் அமைச்சர் எடியூரப்பா மைசூர் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா,


கர்நாடக மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்திக்கொண்டு இருக்கிறோம். ஏப்ரல் மாதத்துக்குள் இந்த ஆய்வு பணிகளை முடித்து வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.


அப்போது எடியூரப்பாவிடம், முன்னாள் முதல் அமைச்சர் குமாரசாமி கர்நாடக மாநிலத்தில் முதல் அமைச்சர், அமைச்சர்கள் யாரும் இல்லை என்று கூறி இருக்கிறாரே? என்று கேட்டனர்.


அதற்கு எடியூரப்பா பதில் அளிக்கையில், முதலில் குமாரசாமி இந்த மாநிலத்தில்தான் இருக்கிறாரா? என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எங்களை பற்றி கேலி செய்யக்கூடாது. நான் மற்றும் எனது ஆட்சியில் உள்ள மந்திரிகள் மாநிலத்தில் என்ன வேலைகள் செய்து உள்ளோம் என்பது மாநில மக்களுக்கு தெரியும். ஆனால் அதுபற்றி குமாரசாமிக்கு தெரியாது என்றார்.

குமாரசாமி, கர்நாடகத்தில்தான் இருக்கிறாரா? எங்களைப் பற்றி கேலி செய்யக் கூடாது: எடியூரப்பா

முதல் அமைச்சர், அமைச்சர்கள் யாரும் இல்லை என்று கூறும் குமாரசாமி முதலில் கர்நாடக மாநிலத்தில்தான் இருக்கிறாரா? என்று புரிந்து கொள்ள வேண்டும் என்று எடியூரப்பா கூறினார்.

மைசூர் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு நடத்துவதற்காக முதல் அமைச்சர் எடியூரப்பா மைசூர் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா,


கர்நாடக மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்திக்கொண்டு இருக்கிறோம். ஏப்ரல் மாதத்துக்குள் இந்த ஆய்வு பணிகளை முடித்து வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.


அப்போது எடியூரப்பாவிடம், முன்னாள் முதல் அமைச்சர் குமாரசாமி கர்நாடக மாநிலத்தில் முதல் அமைச்சர், அமைச்சர்கள் யாரும் இல்லை என்று கூறி இருக்கிறாரே? என்று கேட்டனர்.


அதற்கு எடியூரப்பா பதில் அளிக்கையில், முதலில் குமாரசாமி இந்த மாநிலத்தில்தான் இருக்கிறாரா? என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எங்களை பற்றி கேலி செய்யக்கூடாது. நான் மற்றும் எனது ஆட்சியில் உள்ள மந்திரிகள் மாநிலத்தில் என்ன வேலைகள் செய்து உள்ளோம் என்பது மாநில மக்களுக்கு தெரியும். ஆனால் அதுபற்றி குமாரசாமிக்கு தெரியாது என்றார்.

பெங்களூரு : ""என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு, இடைத்தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறுவதன் மூலம் பதிலளிப்பேன்,'' என, முதல்வர் எடியூரப்பா கூறினார். கர்நாடக பா.ஜ.,வில் உட்கட்சி பூசல், நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. டில்லிக்கு சென்றுள்ள மாநில பா.ஜ., தலைவர் ஈஸ்வரப்பா தலைமையிலான அதிருப்தியாளர்கள், பா.ஜ., தலைவர்கள் அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, முரளிமனோகர் ஜோஷி ஆகியோரை சந்தித்து, முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பாவை இறக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.
இந்நிலையில், முதல்வர் எடியூரப்பா இன்று டில்லி செல்கிறார். பெங்களூருவில் நேற்று அவர் கூறுகையில், "கர்நாடகாவில் நடக்கும் மூன்று தொகுதி இடைத்தேர்தலில், பா.ஜ., வெற்றி பற்றி தான் நான் சிந்தித்து வருகிறேன். கடவுள் அருளால் மூன்று தொகுதிகளிலும் பா.ஜ., கண்டிப்பாக வெற்றி பெறும். இது பா.ஜ.,வின் கவுரவ பிரச்னை.

எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ம.ஜ.த., கூறிய குற்றச்சாட்டுகள் எடுபடாது. கர்நாடக பா.ஜ.,வில் எந்த குழப்பமும் இல்லை. ஈஸ்வரப்பா என் நெருங்கிய நண்பர். அவருக்கும், எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை. மீடியாக்கள் தேவையில்லாத பிரச்னையை கூறி வருகின்றன. நாங்கள் ஒற்றுமையுடன் செயல்படுகிறோம். எங்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை' என்றார்.

நேற்று முன்தினம் முதல்வர் எடியூரப்பாவின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற சில அமைச்சர்கள், டில்லிக்கு சென்றுள்ளனர். மேலிட தலைவர்களை சந்தித்து, எடியூரப்பா மீது புகார் கூற திட்டமிட்டுள்ளனர்.

கர்நாடக மாநில பா.ஜ., மேலிட பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான் பெங்களூரு வந்து, அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்துவார் என்று தெரிகிறது.

இடைத்தேர்தல் வெற்றி மூலம் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் : எடியூரப்பா

பெங்களூரு : ""என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு, இடைத்தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறுவதன் மூலம் பதிலளிப்பேன்,'' என, முதல்வர் எடியூரப்பா கூறினார். கர்நாடக பா.ஜ.,வில் உட்கட்சி பூசல், நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. டில்லிக்கு சென்றுள்ள மாநில பா.ஜ., தலைவர் ஈஸ்வரப்பா தலைமையிலான அதிருப்தியாளர்கள், பா.ஜ., தலைவர்கள் அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, முரளிமனோகர் ஜோஷி ஆகியோரை சந்தித்து, முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பாவை இறக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.
இந்நிலையில், முதல்வர் எடியூரப்பா இன்று டில்லி செல்கிறார். பெங்களூருவில் நேற்று அவர் கூறுகையில், "கர்நாடகாவில் நடக்கும் மூன்று தொகுதி இடைத்தேர்தலில், பா.ஜ., வெற்றி பற்றி தான் நான் சிந்தித்து வருகிறேன். கடவுள் அருளால் மூன்று தொகுதிகளிலும் பா.ஜ., கண்டிப்பாக வெற்றி பெறும். இது பா.ஜ.,வின் கவுரவ பிரச்னை.

எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ம.ஜ.த., கூறிய குற்றச்சாட்டுகள் எடுபடாது. கர்நாடக பா.ஜ.,வில் எந்த குழப்பமும் இல்லை. ஈஸ்வரப்பா என் நெருங்கிய நண்பர். அவருக்கும், எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை. மீடியாக்கள் தேவையில்லாத பிரச்னையை கூறி வருகின்றன. நாங்கள் ஒற்றுமையுடன் செயல்படுகிறோம். எங்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை' என்றார்.

நேற்று முன்தினம் முதல்வர் எடியூரப்பாவின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற சில அமைச்சர்கள், டில்லிக்கு சென்றுள்ளனர். மேலிட தலைவர்களை சந்தித்து, எடியூரப்பா மீது புகார் கூற திட்டமிட்டுள்ளனர்.

கர்நாடக மாநில பா.ஜ., மேலிட பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான் பெங்களூரு வந்து, அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்துவார் என்று தெரிகிறது.

பெங்களூரு : ""கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பாவே நீடிப்பார்,'' என, அம்மாநில பா.ஜ., தலைவர் ஈஸ்வரப்பா கூறியுள்ளார்.

கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடக்கலாம் என, செய்திகள் வெளியாகின.

இந்த சூழலில், கர்நாடக மாநில பா.ஜ., தலைவர் ஈஸ்வரப்பா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:கர்நாடக சட்டசபைக்கு முன்னதாகவே தேர்தல் நடக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியும், இடைத்தேர்தல் வர உள்ளதாக மக்கள் மனதை குழப்ப முயற்சி செய்கின்றன. அவர்களின் சதித் திட்டம் மக்களிடம் எடுபடாது. 2013ம் ஆண்டு தான் இங்கு சட்டசபை தேர்தல் நடக்கும். முதல்வர் எடியூரப்பாவை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை. அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கும் அவரே முதல்வராக நீடிப்பார். அவரது தலைமையின் கீழ் நாங்கள் ஒற்றுமையாகச் செயல்படுவோம்.தென்மாநிலங்களில், முதன் முறையாக கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சியைப் பிடித்துள்ளது. பா.ஜ., பொறுப்பேற்று ஆயிரமாவது நாள் நிறைவடைய உள்ளது. இதை கொண்டாடும் வகையில், பா.ஜ., சார்பில், வரும் 20ம் தேதி மிகப்பெரிய பேரணி நடக்க உள்ளது. இதில், பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கலந்து கொள்வார்.இவ்வாறு ஈஸ்வரப்பா கூறினார்.

முதல்வராக எடியூரப்பா நீடிப்பார் : கர்நாடக பா.ஜ., தலைவர் தகவல்

பெங்களூரு : ""கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பாவே நீடிப்பார்,'' என, அம்மாநில பா.ஜ., தலைவர் ஈஸ்வரப்பா கூறியுள்ளார்.

கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடக்கலாம் என, செய்திகள் வெளியாகின.

இந்த சூழலில், கர்நாடக மாநில பா.ஜ., தலைவர் ஈஸ்வரப்பா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:கர்நாடக சட்டசபைக்கு முன்னதாகவே தேர்தல் நடக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியும், இடைத்தேர்தல் வர உள்ளதாக மக்கள் மனதை குழப்ப முயற்சி செய்கின்றன. அவர்களின் சதித் திட்டம் மக்களிடம் எடுபடாது. 2013ம் ஆண்டு தான் இங்கு சட்டசபை தேர்தல் நடக்கும். முதல்வர் எடியூரப்பாவை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை. அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கும் அவரே முதல்வராக நீடிப்பார். அவரது தலைமையின் கீழ் நாங்கள் ஒற்றுமையாகச் செயல்படுவோம்.தென்மாநிலங்களில், முதன் முறையாக கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சியைப் பிடித்துள்ளது. பா.ஜ., பொறுப்பேற்று ஆயிரமாவது நாள் நிறைவடைய உள்ளது. இதை கொண்டாடும் வகையில், பா.ஜ., சார்பில், வரும் 20ம் தேதி மிகப்பெரிய பேரணி நடக்க உள்ளது. இதில், பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கலந்து கொள்வார்.இவ்வாறு ஈஸ்வரப்பா கூறினார்.

முக நூல்

Popular Posts