background img

புதிய வரவு

Showing posts with label Curry. Show all posts
Showing posts with label Curry. Show all posts
தேவையான பொருள்கள்:

முட்டை - 2
காலிஃபிளவர் - 1 (400 கிராம்)
வெங்காயம் - 2 (100 கிராம்)
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறு துண்டு
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 3 பல்
க‌றிவேப்பிலை - ‌சி‌றிதளவு
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

காலிஃபிளவரை நறுக்கி, சுத்தம் செய்து கொள்ளவேண்டும்.

அத்துடன் மிளகாய்த் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு ஒரு ஆழாக்கு தண்ணீர்விட்டு 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.

வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, சோம்பு ஆகியவற்றை சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.

முட்டைகளை உடைத்துப் பாத்திரத்தில் ஊற்றி, சிறிது மஞ்சள் தூளைப் போட்டு கரண்டியால் நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும், க‌றிவேப்பிலையையும் கொட்டிக் கிளறவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்க்கவும்.

சிவந்து மணம் வந்தவுடன், முட்டையை ஊற்றி கரண்டியால் நன்றாக அடித்து, தூள் தூளாகச் செய்து கிளறவும்.

5 நிமிடங்கள் கிளறிய பின் வேகவைத்துள்ள காலிபிளவரைக் கொட்டிக் கிளறவும். தண்ணீர் சுண்டிய பின், நன்றாகக் கிளறி வாணலியை இறக்கிவிடவும்.

முட்டை - காலிஃபிளவர் பொரியல்

தேவையான பொருள்கள்:

முட்டை - 2
காலிஃபிளவர் - 1 (400 கிராம்)
வெங்காயம் - 2 (100 கிராம்)
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறு துண்டு
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 3 பல்
க‌றிவேப்பிலை - ‌சி‌றிதளவு
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

காலிஃபிளவரை நறுக்கி, சுத்தம் செய்து கொள்ளவேண்டும்.

அத்துடன் மிளகாய்த் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு ஒரு ஆழாக்கு தண்ணீர்விட்டு 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.

வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, சோம்பு ஆகியவற்றை சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.

முட்டைகளை உடைத்துப் பாத்திரத்தில் ஊற்றி, சிறிது மஞ்சள் தூளைப் போட்டு கரண்டியால் நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும், க‌றிவேப்பிலையையும் கொட்டிக் கிளறவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்க்கவும்.

சிவந்து மணம் வந்தவுடன், முட்டையை ஊற்றி கரண்டியால் நன்றாக அடித்து, தூள் தூளாகச் செய்து கிளறவும்.

5 நிமிடங்கள் கிளறிய பின் வேகவைத்துள்ள காலிபிளவரைக் கொட்டிக் கிளறவும். தண்ணீர் சுண்டிய பின், நன்றாகக் கிளறி வாணலியை இறக்கிவிடவும்.

பெரிய தேங்காய் அளவு உள்ள பலாக்காய் ஒன்றை அறிந்து அதில் உள்ள பலாப்பிஞ்சுகளை எடுத்து சுமாரான அளவில் அரிந்து கொள்ளவும்.

பிறகு, ஆழாக்கு தண்ணீரில் போதிய அளவு உப்பும், மஞ்சள் பொடியும் போட்டு நன்றாக வேகவைத்து, தண்ணிரைக் கொடவிட்டு பலாப்பிஞ்சுகளை எடுத்துக் கொள்ளவும்.

கால் ஆழாக்குப் பயற்றம் பருப்பை நெந்யில் வறுத்து, அரை ஆழாக்கு தண்ணீர் வேகவிடவும்.

மிளகாய் இரண்டு, மிளகு ஆறு, மல்லி ஒரு தேக்கரண்டி, கொப்பரைத் துருவல் இரண்டு தேக்கரண்டி இவற்றை நெய்விட்டு வறுத்து நன்கு அரைத்து பின்னர், கால் ஆழாக்கு தண்ணீரில் கரைத்துப் பருப்பில் கொட்டி பலாப்பிஞ்சுத் துண்டுகளைப் போடவும்.

பலாப்பிஞ்சு நன்றாக வெந்து தண்ணீர் சுண்டியதும், தாளிப்புக்கு ஒரு பாத்திரம் வைத்து, நெய் இரண்டு தேக்கரண்டி விட்டு காய்ந்ததும் அரிந்த வெங்காயம் சிறிதளவு, சீரகம் அரை தேக்கரண்டி, உளுந்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி, கறிவேப்பிலை சிறிது போட்டு சிவந்ததும் பலாப்பிஞ்சுகளை அத்துடன் கொட்டி, தேங்காயத் துருவல் கால் முடி போட்டு, மல்லி தழை போட்டு கிளறி இறக்கவும்.

பலாக்காய் பொரியல்

பெரிய தேங்காய் அளவு உள்ள பலாக்காய் ஒன்றை அறிந்து அதில் உள்ள பலாப்பிஞ்சுகளை எடுத்து சுமாரான அளவில் அரிந்து கொள்ளவும்.

பிறகு, ஆழாக்கு தண்ணீரில் போதிய அளவு உப்பும், மஞ்சள் பொடியும் போட்டு நன்றாக வேகவைத்து, தண்ணிரைக் கொடவிட்டு பலாப்பிஞ்சுகளை எடுத்துக் கொள்ளவும்.

கால் ஆழாக்குப் பயற்றம் பருப்பை நெந்யில் வறுத்து, அரை ஆழாக்கு தண்ணீர் வேகவிடவும்.

மிளகாய் இரண்டு, மிளகு ஆறு, மல்லி ஒரு தேக்கரண்டி, கொப்பரைத் துருவல் இரண்டு தேக்கரண்டி இவற்றை நெய்விட்டு வறுத்து நன்கு அரைத்து பின்னர், கால் ஆழாக்கு தண்ணீரில் கரைத்துப் பருப்பில் கொட்டி பலாப்பிஞ்சுத் துண்டுகளைப் போடவும்.

பலாப்பிஞ்சு நன்றாக வெந்து தண்ணீர் சுண்டியதும், தாளிப்புக்கு ஒரு பாத்திரம் வைத்து, நெய் இரண்டு தேக்கரண்டி விட்டு காய்ந்ததும் அரிந்த வெங்காயம் சிறிதளவு, சீரகம் அரை தேக்கரண்டி, உளுந்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி, கறிவேப்பிலை சிறிது போட்டு சிவந்ததும் பலாப்பிஞ்சுகளை அத்துடன் கொட்டி, தேங்காயத் துருவல் கால் முடி போட்டு, மல்லி தழை போட்டு கிளறி இறக்கவும்.

முக நூல்

Popular Posts