background img

புதிய வரவு

Showing posts with label Election Commission and PMK. Show all posts
Showing posts with label Election Commission and PMK. Show all posts
சட்டசபை தேர்தலில் கிடைத்த ஓட்டு சதவீதங்களின் அடிப்படையில், தே.மு.தி.க.,வுக்கு தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் கிடைக்க உள்ளது. அதே நேரத்தில், அங்கீகாரத்தையும், சின்னத்தையும் பா.ம.க., இழக்க உள்ளது.

தமிழக அரசியலில், தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெற்ற தேசியக் கட்சிகள் தவிர, மாநில கட்சிகளில் தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் மட்டுமே இருந்தன. தற்போது நடந்துள்ள சட்டசபை பொதுத் தேர்தலில், ம.தி.மு.க., போட்டியிடாததால், அதற்கு மீண்டும் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பில்லை. பா.ம.க., இந்த தேர்தலில், 30 தொகுதிகளில் போட்டியிட்டு, மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், ஓட்டு சதவீதம், 5.23 தான் உள்ளது. 6 சதவீத ஓட்டுகளை பெற்றிருந்தால், அங்கீகாரத்தை தக்க வைத்திருக்க முடியும். அதேநேரத்தில், 29 தொகுதிகளில் வென்ற தே.மு.தி.க.,வுக்கு அங்கீகாரமும், சின்னமும் கிடைக்க உள்ளது. தே.மு.தி.க., 41 தொகுதிகளில் போட்டியிட்டு, 7.88 சதவீதம் ஓட்டு பெற்றுள்ளது. தேர்தல் கமிஷனின் விதிப்படி, அரசியல் கட்சிக்கு அங்கீகாரம் வழங்க, சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி, சட்டசபைக்கு நடந்த பொதுத் தேர்தலில், ஒரு அரசியல் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள், மொத்தம் செல்லுபடியான ஓட்டுகளில், 6 சதவீதத்துக்கு குறையாமல் ஓட்டு பெற்றிருக்க வேண்டும். அத்துடன், சட்டசபைக்கு இரண்டு உறுப்பினர்களாவது தேர்வு பெற்றிருக்க வேண்டும். அல்லது, லோக்சபா தேர்தலில் ஒரு கட்சியின் வேட்பாளர், 6 சதவீதத்துக்கு குறையாமல் ஓட்டுகள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன், அந்த மாநிலத்தில் நடந்த தேர்தலில் இருந்து, லோக்சபாவுக்கு ஒரு உறுப்பினராவது தேர்வாகி இருக்க வேண்டும். அல்லது, சட்டசபையில் உள்ள மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில், 3 சதவீத இடங்களை பெற்றிருக்க வேண்டும். அல்லது, சட்டசபைக்கு மூன்று உறுப்பினர்கள் தேர்வாகி இருக்க வேண்டும். இதில், எது அதிகமோ அதை பெற்றிருக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளில், ஒரு நிபந்தனை மட்டுமே பா.ம.க., பெற்ற இடங்களுக்கு பொருந்துகிறது. அதாவது, மூன்று எம்.எல். ஏ.,க்களை பெற்றிருக்க வேண்டும் என்பது. ஆனால், அதே விதியில், மொத்த இடங்களில், 3 சதவீத இடங்கள் பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், மொத்தமுள்ள, 234 இடங்களில், 3 சதவீத இடங்களை பா.ம.க., பெற்றிருக்க வேண்டும். எது அதிகமோ அது தான் எடுத்துக் கொள்ளப்படுமென குறிப்பிட்டுள்ளதால், பா.ம.க., வுக்கு தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் ரத்தாகும். எனினும், இது தொடர்பாக அக்கட்சிக்கு முதலில் தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பும். பின்னர், கட்சியின் விளக்கம் கிடைத்த பின், நேரில் அழைத்து விசாரணை நடத்தும். அதன்பின் தான், அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்து முடிவெடுக்கும். இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து உட்பட, பல்வேறு வகைகளில் பலனடைந்துள்ள தே.மு.தி.க., வுக்கு, தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் முதல் முறையாக கிடைக்க உள்ளது. சட்டசபை தேர்தல் தொடர்பாக, தேர்தல் கமிஷன் விதித்துள்ள நிபந்தனைகள் அனைத்தையும் தே.மு.தி.க., பூர்த்தி செய்துள்ளது.

தே.மு.தி.க.,வுக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம்: சின்னத்தை இழக்கிறது பா.ம.க.,

சட்டசபை தேர்தலில் கிடைத்த ஓட்டு சதவீதங்களின் அடிப்படையில், தே.மு.தி.க.,வுக்கு தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் கிடைக்க உள்ளது. அதே நேரத்தில், அங்கீகாரத்தையும், சின்னத்தையும் பா.ம.க., இழக்க உள்ளது.

தமிழக அரசியலில், தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெற்ற தேசியக் கட்சிகள் தவிர, மாநில கட்சிகளில் தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் மட்டுமே இருந்தன. தற்போது நடந்துள்ள சட்டசபை பொதுத் தேர்தலில், ம.தி.மு.க., போட்டியிடாததால், அதற்கு மீண்டும் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பில்லை. பா.ம.க., இந்த தேர்தலில், 30 தொகுதிகளில் போட்டியிட்டு, மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், ஓட்டு சதவீதம், 5.23 தான் உள்ளது. 6 சதவீத ஓட்டுகளை பெற்றிருந்தால், அங்கீகாரத்தை தக்க வைத்திருக்க முடியும். அதேநேரத்தில், 29 தொகுதிகளில் வென்ற தே.மு.தி.க.,வுக்கு அங்கீகாரமும், சின்னமும் கிடைக்க உள்ளது. தே.மு.தி.க., 41 தொகுதிகளில் போட்டியிட்டு, 7.88 சதவீதம் ஓட்டு பெற்றுள்ளது. தேர்தல் கமிஷனின் விதிப்படி, அரசியல் கட்சிக்கு அங்கீகாரம் வழங்க, சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி, சட்டசபைக்கு நடந்த பொதுத் தேர்தலில், ஒரு அரசியல் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள், மொத்தம் செல்லுபடியான ஓட்டுகளில், 6 சதவீதத்துக்கு குறையாமல் ஓட்டு பெற்றிருக்க வேண்டும். அத்துடன், சட்டசபைக்கு இரண்டு உறுப்பினர்களாவது தேர்வு பெற்றிருக்க வேண்டும். அல்லது, லோக்சபா தேர்தலில் ஒரு கட்சியின் வேட்பாளர், 6 சதவீதத்துக்கு குறையாமல் ஓட்டுகள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன், அந்த மாநிலத்தில் நடந்த தேர்தலில் இருந்து, லோக்சபாவுக்கு ஒரு உறுப்பினராவது தேர்வாகி இருக்க வேண்டும். அல்லது, சட்டசபையில் உள்ள மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில், 3 சதவீத இடங்களை பெற்றிருக்க வேண்டும். அல்லது, சட்டசபைக்கு மூன்று உறுப்பினர்கள் தேர்வாகி இருக்க வேண்டும். இதில், எது அதிகமோ அதை பெற்றிருக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளில், ஒரு நிபந்தனை மட்டுமே பா.ம.க., பெற்ற இடங்களுக்கு பொருந்துகிறது. அதாவது, மூன்று எம்.எல். ஏ.,க்களை பெற்றிருக்க வேண்டும் என்பது. ஆனால், அதே விதியில், மொத்த இடங்களில், 3 சதவீத இடங்கள் பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், மொத்தமுள்ள, 234 இடங்களில், 3 சதவீத இடங்களை பா.ம.க., பெற்றிருக்க வேண்டும். எது அதிகமோ அது தான் எடுத்துக் கொள்ளப்படுமென குறிப்பிட்டுள்ளதால், பா.ம.க., வுக்கு தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் ரத்தாகும். எனினும், இது தொடர்பாக அக்கட்சிக்கு முதலில் தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பும். பின்னர், கட்சியின் விளக்கம் கிடைத்த பின், நேரில் அழைத்து விசாரணை நடத்தும். அதன்பின் தான், அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்து முடிவெடுக்கும். இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து உட்பட, பல்வேறு வகைகளில் பலனடைந்துள்ள தே.மு.தி.க., வுக்கு, தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் முதல் முறையாக கிடைக்க உள்ளது. சட்டசபை தேர்தல் தொடர்பாக, தேர்தல் கமிஷன் விதித்துள்ள நிபந்தனைகள் அனைத்தையும் தே.மு.தி.க., பூர்த்தி செய்துள்ளது.

சென்னை: சட்டசபைத் தேர்தலில் படுதோல்வி அடைந்த பாமகவின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்யப் போகிறது. அதே நேரத்தில் தேமுதிக தேர்தல் ஆணைய அங்கீகாரத்தைப் பெறவுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு அரசியல் கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற வேண்டுமானால், இருக்கும் அங்கீகாரத்தை தக்க வைக்க வேண்டுமானால் 4 நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றை நிறைவு செய்திருக்க வேண்டும்.

நம்பர்-1:

கடைசியாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 6 சதவீதத்துக்கு குறையாத வாக்குகளைப் பெற்றிருப்பதோடு, குறைந்தது ஒரு எம்பியாவது தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

நம்பர்-2:

இந்த வாக்கு சதவீதத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால், அக்கட்சியின் சார்பில் குறைந்தது 2 எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

நம்பர்-3:
கடைசியாக நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 6 சதவீதத்துக்கு குறையாத வாக்குகளைப் பெற்றிருப்பதுடன், அக்கட்சியின் சார்பில் குறைந்தது 2 எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

நம்பர்-4:

சட்டமன்றத் தேர்தல் வாக்கு சதவீதத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால், குறைந்தபட்சம் 8 எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், கடந்த 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாமக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. எனவே, முதல் இரண்டு நிபந்தனைகளையும் அக்கட்சி நிறைவேற்றவிலலை.

நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அந்தக் கட்சிக்கு 5.23 சதவீத வாக்குகளே கிடைத்தன. மேலும் வெறும் 3 எம்.எல்.ஏக்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே, கடைசி இரண்டு நிபந்தனைகளையும் அக்கட்சி நிறைவேற்றவிலலை.

இதனால் அக்கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்யும் என்று தெரிகிறது.

2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் புதுச்சேரி மாநிலத்தில் பாமக தனது அங்கீகாரத்தைஇழந்துவிட்டது. இப்போது தமிழகத்திலும் இழக்கப் போகிறது.

அங்கீகாரத்தை இழந்துவிட்டாலும் அடுத்த 6 ஆண்டுகளுக்கு அந்தக் கட்சிக்கு மாம்பழ சின்னம் தொடர்ந்து ஒதுக்கப்படும். இந்த 6 ஆண்டுக்குள் நடைபெறும் தேர்தல்களில் 4 நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றை நிறைவு செய்துவிட்டால் மீண்டும் அக் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்துவிடும்.

இல்லாவிட்டால், 6 ஆண்டுகள் முடியும்போது மாம்பழ சின்னத்தையும் பாமக இழந்து, சுயேச்சை சின்னத்தில் தான் போட்டியிட முடியும்.

தேமுதிகவுக்கு கிடைக்கும் அங்கீகாரம்:

அதே நேரத்தில் நடிகர் விஜயகாந்த்தின் தேமுதிகவுக்கு 2006 சட்டமன்றத் தேர்தலில் 8 சதவீத வாக்குகள் கிடைத்திருந்தன. ஆனால், அக்கட்சியின் சார்பில்விஜயகாந்த் மட்டுமே எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். நாடாளுமன்ற தேர்தலில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. இதனால் அந்தக் கட்சியால் தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற முடியவில்லை.

இந்நிலையில், நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அக்கட்சிக்கு 7.88 சதவீத வாக்குகள் கிடைதுள்ளன. மேலும் அக்கட்சியைச் சேர்ந்த 29 பேர் எம்எல்ஏவாகிவிட்டனர். இதனால் அந்தக் கட்சிக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரம் கிடைப்பதோடு முரசு சின்னம் நிரந்தரமாக ஒதுக்கப்படவுள்ளது.

தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை இழக்கும் பாமக, அங்கீகாரம் பெறப் போகும் தேமுதிக!

சென்னை: சட்டசபைத் தேர்தலில் படுதோல்வி அடைந்த பாமகவின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்யப் போகிறது. அதே நேரத்தில் தேமுதிக தேர்தல் ஆணைய அங்கீகாரத்தைப் பெறவுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு அரசியல் கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற வேண்டுமானால், இருக்கும் அங்கீகாரத்தை தக்க வைக்க வேண்டுமானால் 4 நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றை நிறைவு செய்திருக்க வேண்டும்.

நம்பர்-1:

கடைசியாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 6 சதவீதத்துக்கு குறையாத வாக்குகளைப் பெற்றிருப்பதோடு, குறைந்தது ஒரு எம்பியாவது தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

நம்பர்-2:

இந்த வாக்கு சதவீதத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால், அக்கட்சியின் சார்பில் குறைந்தது 2 எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

நம்பர்-3:
கடைசியாக நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 6 சதவீதத்துக்கு குறையாத வாக்குகளைப் பெற்றிருப்பதுடன், அக்கட்சியின் சார்பில் குறைந்தது 2 எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

நம்பர்-4:

சட்டமன்றத் தேர்தல் வாக்கு சதவீதத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால், குறைந்தபட்சம் 8 எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், கடந்த 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாமக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. எனவே, முதல் இரண்டு நிபந்தனைகளையும் அக்கட்சி நிறைவேற்றவிலலை.

நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அந்தக் கட்சிக்கு 5.23 சதவீத வாக்குகளே கிடைத்தன. மேலும் வெறும் 3 எம்.எல்.ஏக்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே, கடைசி இரண்டு நிபந்தனைகளையும் அக்கட்சி நிறைவேற்றவிலலை.

இதனால் அக்கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்யும் என்று தெரிகிறது.

2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் புதுச்சேரி மாநிலத்தில் பாமக தனது அங்கீகாரத்தைஇழந்துவிட்டது. இப்போது தமிழகத்திலும் இழக்கப் போகிறது.

அங்கீகாரத்தை இழந்துவிட்டாலும் அடுத்த 6 ஆண்டுகளுக்கு அந்தக் கட்சிக்கு மாம்பழ சின்னம் தொடர்ந்து ஒதுக்கப்படும். இந்த 6 ஆண்டுக்குள் நடைபெறும் தேர்தல்களில் 4 நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றை நிறைவு செய்துவிட்டால் மீண்டும் அக் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்துவிடும்.

இல்லாவிட்டால், 6 ஆண்டுகள் முடியும்போது மாம்பழ சின்னத்தையும் பாமக இழந்து, சுயேச்சை சின்னத்தில் தான் போட்டியிட முடியும்.

தேமுதிகவுக்கு கிடைக்கும் அங்கீகாரம்:

அதே நேரத்தில் நடிகர் விஜயகாந்த்தின் தேமுதிகவுக்கு 2006 சட்டமன்றத் தேர்தலில் 8 சதவீத வாக்குகள் கிடைத்திருந்தன. ஆனால், அக்கட்சியின் சார்பில்விஜயகாந்த் மட்டுமே எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். நாடாளுமன்ற தேர்தலில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. இதனால் அந்தக் கட்சியால் தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற முடியவில்லை.

இந்நிலையில், நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அக்கட்சிக்கு 7.88 சதவீத வாக்குகள் கிடைதுள்ளன. மேலும் அக்கட்சியைச் சேர்ந்த 29 பேர் எம்எல்ஏவாகிவிட்டனர். இதனால் அந்தக் கட்சிக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரம் கிடைப்பதோடு முரசு சின்னம் நிரந்தரமாக ஒதுக்கப்படவுள்ளது.

முக நூல்

Popular Posts