background img

புதிய வரவு

Showing posts with label Hanumantha rao. Show all posts
Showing posts with label Hanumantha rao. Show all posts
திருப்பதி,மே 9: கனிமொழி தவறு செய்திருந்தால் நிச்சயம் கைது செய்யப்படுவார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான வி. ஹனுமந்தராவ் தெரிவித்தார்.
திங்கள்கிழமை திருமலை வந்த அவர் பெருமாளை வழிபட்ட பின் செய்தியாளகளுக்கு பேட்டியளித்த போது மேலும் கூறியதாவது:

சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஊழலுக்கு எதிரானது. அதனால் தான் அண்ணா ஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவரது கோரிக்கையையும் நிறைவேற்றியது.

மேலும் காமன்வெல்த் போட்டியில் ஊழல் நடைபெற்றதால் கல்மாடி கைது செய்யப்பட்டார். 2 ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தற்போது நீதிமன்ற விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். அவர் தவறு செய்திருந்தால் நிச்சயம் கைது செய்யப்படுவார்.

அதே போல அதிக அளவில் சொத்து வைத்துள்ள ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி மீதும் வருங்காலத்தில் விசாரணை மேற்கொள்ளப்படும். அவரும் தவறு செய்தது தெரிய வந்தால் கைது செய்யப்படுவார்.

தற்போது மத்தியிலும், ஆந்திர மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்தாலும், கடப்பா மற்றும் புலிவெந்துலா இடைத்தேர்தல்களில், அரசு அலுவலர்கள், தேர்தல் ஆணைய அதிகாரிகள் என அனைவரும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவாக உள்ளனர் என்று ஹனுமந்தராவ் தெரிவித்தார்.

கனிமொழி தவறு செய்திருந்தால் கைது செய்யப்படுவார்: ஹனுமந்தராவ்

திருப்பதி,மே 9: கனிமொழி தவறு செய்திருந்தால் நிச்சயம் கைது செய்யப்படுவார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான வி. ஹனுமந்தராவ் தெரிவித்தார்.
திங்கள்கிழமை திருமலை வந்த அவர் பெருமாளை வழிபட்ட பின் செய்தியாளகளுக்கு பேட்டியளித்த போது மேலும் கூறியதாவது:

சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஊழலுக்கு எதிரானது. அதனால் தான் அண்ணா ஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவரது கோரிக்கையையும் நிறைவேற்றியது.

மேலும் காமன்வெல்த் போட்டியில் ஊழல் நடைபெற்றதால் கல்மாடி கைது செய்யப்பட்டார். 2 ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தற்போது நீதிமன்ற விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். அவர் தவறு செய்திருந்தால் நிச்சயம் கைது செய்யப்படுவார்.

அதே போல அதிக அளவில் சொத்து வைத்துள்ள ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி மீதும் வருங்காலத்தில் விசாரணை மேற்கொள்ளப்படும். அவரும் தவறு செய்தது தெரிய வந்தால் கைது செய்யப்படுவார்.

தற்போது மத்தியிலும், ஆந்திர மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்தாலும், கடப்பா மற்றும் புலிவெந்துலா இடைத்தேர்தல்களில், அரசு அலுவலர்கள், தேர்தல் ஆணைய அதிகாரிகள் என அனைவரும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவாக உள்ளனர் என்று ஹனுமந்தராவ் தெரிவித்தார்.

முக நூல்

Popular Posts