background img

புதிய வரவு

Showing posts with label 2g spectrum. Show all posts
Showing posts with label 2g spectrum. Show all posts
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்ற கூட்டுக் குழு முன் தலைமை கணக்கு தணிக்கைத் துறை அதிகாரி வினோத் ராய் இன்று ஆஜராகி விளக்கமளித்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததால் மத்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கைத்துறை தகவல் வெளியிட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்தே இந்த விவகாரத்தில் விசாரணை சூடு பிடித்தது. இதனால் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் பதவியில் இருந்து ஆ.ராசா பதவி விலக நேரிட்டது.

இந்த ஊழல குறித்து சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கப்பிரிவு, நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு ஆகியவையும் விசாரணை நடத்தி வருகின்றன.

இதற்கிடையே எதிர்க்கட்சிகளின் போராட்டம் காரணமாக இது குறித்து நாடாளுமன்றத்தின் அரு அவைகளைச் சேர்ந்த எம்பிக்கள் அடங்கிய கூட்டுக் குழுவும் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த குழுவுக்கு முன்பு பாஜக எம்பி முரளி மனோகர் ஜோஷி தலைவராக இருந்து விசாரணை நடத்தினார். குழுவின் பிற உறுப்பினர்களை கலந்தாலோசிக்காமலேயே தானாகவே ஒரு அறிக்கை தயாரித்து சபாநாயகரிடம் தந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடு்த்து அவரது பதவிக் காலம் முடிந்தது. இப்போது காங்கிரஸ் கட்சி எம்.பி. சாக்கோ இந்தக் குழுவின் தலைவராக உள்ளனர்.

இந்தக் குழு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணைக்கு வருமாறு மத்திய கணக்கு தணிக்கைத் துறை அதிகாரிக்கு கூட்டுக் குழு உத்தரவிட்டிருந்தது. அதை ஏற்று இன்று காலை கூட்டுக் குழு முன்பு மத்திய கணக்கு தணிக்கைத்துறை தலைவர் வினோத் ராய் ஆஜரானார்.

அவரிடம், கூட்டுக் குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். குறிப்பாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில் ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக, எந்த அடிப் படையில் கணிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு வினோத் ராய் விளக்கம் அளித்தார்.

1998ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விதத்தை எடுத்துக் கூறிய அதிகாரி வினோத் ராய், ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களையும் விளக்கமாகக் கூறியதாகத் தெரிகிறது.

முன்னதாக நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு முன்பும் ஆஜராகி ராய் விளக்கம் தந்துள்ளது நினைவுகூறத்தக்கது.

2ஜி: நாடாளுமன்ற குழு முன் சிஏஜி வினோத் ராய் ஆஜர்-ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு குறித்து விளக்கம்

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்ற கூட்டுக் குழு முன் தலைமை கணக்கு தணிக்கைத் துறை அதிகாரி வினோத் ராய் இன்று ஆஜராகி விளக்கமளித்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததால் மத்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கைத்துறை தகவல் வெளியிட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்தே இந்த விவகாரத்தில் விசாரணை சூடு பிடித்தது. இதனால் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் பதவியில் இருந்து ஆ.ராசா பதவி விலக நேரிட்டது.

இந்த ஊழல குறித்து சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கப்பிரிவு, நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு ஆகியவையும் விசாரணை நடத்தி வருகின்றன.

இதற்கிடையே எதிர்க்கட்சிகளின் போராட்டம் காரணமாக இது குறித்து நாடாளுமன்றத்தின் அரு அவைகளைச் சேர்ந்த எம்பிக்கள் அடங்கிய கூட்டுக் குழுவும் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த குழுவுக்கு முன்பு பாஜக எம்பி முரளி மனோகர் ஜோஷி தலைவராக இருந்து விசாரணை நடத்தினார். குழுவின் பிற உறுப்பினர்களை கலந்தாலோசிக்காமலேயே தானாகவே ஒரு அறிக்கை தயாரித்து சபாநாயகரிடம் தந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடு்த்து அவரது பதவிக் காலம் முடிந்தது. இப்போது காங்கிரஸ் கட்சி எம்.பி. சாக்கோ இந்தக் குழுவின் தலைவராக உள்ளனர்.

இந்தக் குழு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணைக்கு வருமாறு மத்திய கணக்கு தணிக்கைத் துறை அதிகாரிக்கு கூட்டுக் குழு உத்தரவிட்டிருந்தது. அதை ஏற்று இன்று காலை கூட்டுக் குழு முன்பு மத்திய கணக்கு தணிக்கைத்துறை தலைவர் வினோத் ராய் ஆஜரானார்.

அவரிடம், கூட்டுக் குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். குறிப்பாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில் ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக, எந்த அடிப் படையில் கணிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு வினோத் ராய் விளக்கம் அளித்தார்.

1998ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விதத்தை எடுத்துக் கூறிய அதிகாரி வினோத் ராய், ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களையும் விளக்கமாகக் கூறியதாகத் தெரிகிறது.

முன்னதாக நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு முன்பும் ஆஜராகி ராய் விளக்கம் தந்துள்ளது நினைவுகூறத்தக்கது.

புதுடில்லி: கடந்த 3 மாத காலமாக ஜெயிலில் இருக்கும் மாஜி மத்திய அமைச்சர் ராஜா முதலில் சக கைதிகள் யாருடனும் சரியாக பேசாமல் இருந்து வந்தார். ஆனால் போக, போக சகஜமாக பழகிவிட்டார், காலை எழுந்தவுடன் வாக்கிங், மாலையில் பேட்மின்டன் என தமது ஜெயில் வாழக்கையை கடந்து வருகிறார். மற்ற கைதிகளை விட அது வேணும், இது வேணும் என அடம் பிடிக்கவில்லை என்றாலும் தனக்கு தமிழ் நாளிதழ் மட்டும் கண்டிப்பாக வாங்கித்தர வேண்டும் என கேட்டுக்கொண்டாராம். இதனை ஏற்று இவருக்கு ஜெயில் அதிகாரிகள் வாங்கி கொடுத்துள்ளனர். இவரது நடவடிக்கை முழு திருப்தி அளிப்பதாகவும் பெயர் சொல்ல விரும்பாத ஒரு ஜெயில் அதிகாரி கூறியுள்ளார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக தி.மு.க.,வின் மத்திய அமைச்சராக இருந்த ராஜா கடந்த பிப்ரவரி மாதம் 13 ம் தேதி திகார் ஜெயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவருடன் 12 பேர் தற்போது ஜெயிலில் உள்ளனர். இதில் ராஜா 9 வார்டு சிறையில் 1 ம் நம்பர் அறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது அன்றாட ஜெயில் வாழ்க்கை விவரத்தை ஒரு அதிகாரி கூறியுள்ளார். ராஜா நாள்தோறும் எவ்வாறு கழிக்கிறார் என்ற முழு விவரம் வருமாறு:

ராஜாவுடன் மாஜி போலீஸ் அதிகாரிகள் : இவருக்கு 15 க்கு 10 அளவு கொண்ட தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் 6 மணி வரை ஜெயில் வளாகத்தின் அனுமதிக்கப்பட்ட பகுதியில் வாக்கிங் செல்கிறார். பின்னர் நேராக ஜெயிலுக்கு வந்து நாளிதழ்கள் படிக்கிறார். மாலையில் சக நண்பர்களுடன் ஒரு மணி நேரம் பாட்மின்டன் ஆடுகிறார். இரவில் சரியான நேரத்தில் தூங்கி விடுவார்.

இவரது வார்டுக்கு உட்பட்ட சிறையில் பத்திரிகையாளர் சிவானி பத்கர் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக தண்டனை பெற்ற ஆர். கே., சர்மா, மற்றும் கன்னாட் துப்பாக்கிச்சூடு தொடர்பான குற்றத்தில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட உதவி கமிஷனர் எஸ். எஸ்., ரதி முக்கியஸ்தர்கள். ஏனைய 12 பேர் ஆயுள் உள்பட உயர்ந்த பட்ச தண்டனை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சக கைதிகளுக்கும் உணவு வழங்கும் ராஜா :முதலில் ராஜா ஜெயில் கைதிகளுடன் சகஜமாக பழகாமல் உம்மெனவே இருந்தார். ஆனால் போக, போக தனது விறைப்புத்தன்மையை குறைத்து சிரித்து பேசலானார். ராஜாவுக்கு வீட்டு பதார்த்தம் வழங்க கோர்ட் அனுமதி தந்திருப்பதால் வீட்டில் சுடச்சுட தயாரான பதார்த்தங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இட்லி, சாம்பார், வடை, பொங்கல், மதியம் சாம்பார், ரசம், தயிர் என வரும். முதலில் சிரிய டிபன்பாக்சில் வந்தது தொடர்ந்து அதன் அளவு உயர்த்தப்பட்டது. இவைகளை தங்களுடைய சக கைதிகளுக்கும் கொடுத்து சாப்பிட சொல்கிறார். ஜெயில் சாப்பாட்டை சில நாட்களாக சாப்பிட்டும் கொள்கிறார். மேலும் இங்குள் கேண்டீனில் ஸ்னாக்ஸ் அயிட்டங்கள் வாங்கி கொள்ள அனுமதி உண்டு. ஜெயிலில் இருக்கும் ராஜா எவ்வித தொந்தரவும் தருவதில்லை, மற்ற கைதிகளுடன் ஒப்பிடுகையில் அவர் மிக சிறந்தவராக உள்ளார். தமிழ் பத்திரிகை எனக்கு அவசியம் வாங்கித்தர வேண்டும் என கேட்டார். அதற்கு மட்டும் கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் ஒரு ஜெயில் அதிகாரி.

கனிமொழிக்கு இன்று ஜாமின் கிடைக்குமா ? : தி.மு.க., தலைவரும், முன்னாள் முதல்வருமான கனிமொழியின் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று டில்லி ஐகோர்ட்டில் வருகிறது. மொரானியின் மனுவும் விசாரணைக்கு வருகிறது.

வாக்கிங்- பேட்மின்டன் - சுவையான இட்லி சாம்பார்;ராஜாவின் ஜெயில் வாழ்க்கை குறிப்பு இது.,

புதுடில்லி: கடந்த 3 மாத காலமாக ஜெயிலில் இருக்கும் மாஜி மத்திய அமைச்சர் ராஜா முதலில் சக கைதிகள் யாருடனும் சரியாக பேசாமல் இருந்து வந்தார். ஆனால் போக, போக சகஜமாக பழகிவிட்டார், காலை எழுந்தவுடன் வாக்கிங், மாலையில் பேட்மின்டன் என தமது ஜெயில் வாழக்கையை கடந்து வருகிறார். மற்ற கைதிகளை விட அது வேணும், இது வேணும் என அடம் பிடிக்கவில்லை என்றாலும் தனக்கு தமிழ் நாளிதழ் மட்டும் கண்டிப்பாக வாங்கித்தர வேண்டும் என கேட்டுக்கொண்டாராம். இதனை ஏற்று இவருக்கு ஜெயில் அதிகாரிகள் வாங்கி கொடுத்துள்ளனர். இவரது நடவடிக்கை முழு திருப்தி அளிப்பதாகவும் பெயர் சொல்ல விரும்பாத ஒரு ஜெயில் அதிகாரி கூறியுள்ளார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக தி.மு.க.,வின் மத்திய அமைச்சராக இருந்த ராஜா கடந்த பிப்ரவரி மாதம் 13 ம் தேதி திகார் ஜெயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவருடன் 12 பேர் தற்போது ஜெயிலில் உள்ளனர். இதில் ராஜா 9 வார்டு சிறையில் 1 ம் நம்பர் அறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது அன்றாட ஜெயில் வாழ்க்கை விவரத்தை ஒரு அதிகாரி கூறியுள்ளார். ராஜா நாள்தோறும் எவ்வாறு கழிக்கிறார் என்ற முழு விவரம் வருமாறு:

ராஜாவுடன் மாஜி போலீஸ் அதிகாரிகள் : இவருக்கு 15 க்கு 10 அளவு கொண்ட தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் 6 மணி வரை ஜெயில் வளாகத்தின் அனுமதிக்கப்பட்ட பகுதியில் வாக்கிங் செல்கிறார். பின்னர் நேராக ஜெயிலுக்கு வந்து நாளிதழ்கள் படிக்கிறார். மாலையில் சக நண்பர்களுடன் ஒரு மணி நேரம் பாட்மின்டன் ஆடுகிறார். இரவில் சரியான நேரத்தில் தூங்கி விடுவார்.

இவரது வார்டுக்கு உட்பட்ட சிறையில் பத்திரிகையாளர் சிவானி பத்கர் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக தண்டனை பெற்ற ஆர். கே., சர்மா, மற்றும் கன்னாட் துப்பாக்கிச்சூடு தொடர்பான குற்றத்தில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட உதவி கமிஷனர் எஸ். எஸ்., ரதி முக்கியஸ்தர்கள். ஏனைய 12 பேர் ஆயுள் உள்பட உயர்ந்த பட்ச தண்டனை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சக கைதிகளுக்கும் உணவு வழங்கும் ராஜா :முதலில் ராஜா ஜெயில் கைதிகளுடன் சகஜமாக பழகாமல் உம்மெனவே இருந்தார். ஆனால் போக, போக தனது விறைப்புத்தன்மையை குறைத்து சிரித்து பேசலானார். ராஜாவுக்கு வீட்டு பதார்த்தம் வழங்க கோர்ட் அனுமதி தந்திருப்பதால் வீட்டில் சுடச்சுட தயாரான பதார்த்தங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இட்லி, சாம்பார், வடை, பொங்கல், மதியம் சாம்பார், ரசம், தயிர் என வரும். முதலில் சிரிய டிபன்பாக்சில் வந்தது தொடர்ந்து அதன் அளவு உயர்த்தப்பட்டது. இவைகளை தங்களுடைய சக கைதிகளுக்கும் கொடுத்து சாப்பிட சொல்கிறார். ஜெயில் சாப்பாட்டை சில நாட்களாக சாப்பிட்டும் கொள்கிறார். மேலும் இங்குள் கேண்டீனில் ஸ்னாக்ஸ் அயிட்டங்கள் வாங்கி கொள்ள அனுமதி உண்டு. ஜெயிலில் இருக்கும் ராஜா எவ்வித தொந்தரவும் தருவதில்லை, மற்ற கைதிகளுடன் ஒப்பிடுகையில் அவர் மிக சிறந்தவராக உள்ளார். தமிழ் பத்திரிகை எனக்கு அவசியம் வாங்கித்தர வேண்டும் என கேட்டார். அதற்கு மட்டும் கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் ஒரு ஜெயில் அதிகாரி.

கனிமொழிக்கு இன்று ஜாமின் கிடைக்குமா ? : தி.மு.க., தலைவரும், முன்னாள் முதல்வருமான கனிமொழியின் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று டில்லி ஐகோர்ட்டில் வருகிறது. மொரானியின் மனுவும் விசாரணைக்கு வருகிறது.

டெல்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழியும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியும் இன்று ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர்.

மே 20ம் தேதி இவர்கள் இருவரும் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த சிறப்பு சிபிஐ கோர்ட் நீதிபதி ஓ.பி.ஷைனி, மனுக்களை நிராகரித்தார். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு உடனடியாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ளார் கனிமொழி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கனிமொழியும், சரத்குமாரும் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று மனு செய்தனர்.

ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் கனிமொழி, சரத்குமார் மனு

டெல்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழியும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியும் இன்று ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர்.

மே 20ம் தேதி இவர்கள் இருவரும் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த சிறப்பு சிபிஐ கோர்ட் நீதிபதி ஓ.பி.ஷைனி, மனுக்களை நிராகரித்தார். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு உடனடியாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ளார் கனிமொழி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கனிமொழியும், சரத்குமாரும் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று மனு செய்தனர்.

டெல்லி: சுதந்திரப் பறவையாக டெல்லிக்கும், சென்னைக்குமாக வந்து போய்க் கொண்டிருந்த கனிமொழி இன்று புழுக்கத்தில், தவிப்பில் திஹார் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்.

சென்னையில் உள்ள தனது வீட்டில் எவ்வளவு வசதியாக இருந்தாரோ அதற்கு அப்படியே தலை கீழாக மாறிப் போயுள்ளது கனிமொழியின் வாழ்க்கை. திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் குட்டியூண்டு அறைக்குள் சுருண்டு போய்க் கிடக்கிறார்.

இரவில் சரிவர தூக்கம் வராமல் தவிக்கிறார். ஒருபக்கம் கொசுக்கடி, மறுபக்கம் புழுக்கம், இன்னொரு பக்கமோ டாய்லெட்டுக்குப் பக்கத்திலேயே படுக்க வேண்டிய நிலை என்று தவித்து வருகிறார் கனிமொழி.

வெள்ளிக்கிழமை இரவு தனது முதல் நாளை திஹார் சிறையில் மிகவும் நெருக்கடியுடன் சமாளித்த கனிமொழிக்கு நேற்றும் நரகமாகவே அது கழிந்துள்ளது.

நேற்று காலை ஐந்தரை மணியளவில் தன்னை எழுப்ப வந்த சிறை வார்டனிடம், தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாதீர்கள். ராத்திரி சரியாக தூங்க முடியாமல் தவித்து இப்போதுதான் தூங்கினேன் என்று கூறினாராம் கனிமொழி. இருப்பினும் சிறை விதிப்படி நீண்ட நேரம் தூங்க முடியாது என்று வார்டன் சற்று கண்டிப்புடன் கனிமொழியிடம் கூறினாராம். இதையடுத்து எழுந்துள்ளார் கனிமொழி.

தனது சிறை அறைக்குள்ளேயே பெரும்பாலான நேரத்தைக் கழிக்கிறார் கனிமொழி. அறைக்குள் மிகவும் புழுக்கமாக இருக்கிறதாம். கொசுத் தொல்லை தாங்க முடியவில்லையாம். கொசுக்களிடமிருந்து தப்பிக்க கொசுவர்த்தி கொடுத்தால் தேவலாம் என்று சிறைக் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை வைத்துள்ளாராம் கனிமொழி. ஆனால் அது கிடைத்ததா என்பது தெரியவில்லை.

காலையில் எழுந்ததும் அவர் இரண்டு துண்டு பிரெட், சப்ஜி, காபி குடித்தார். நேற்று காலையில் எழுந்து காலை உணவைச் சாப்பிட்டு முடித்ததும் தான் அடைக்கப்பட்டுள்ள சிறைப் பகுதியை சுற்றிப் பார்த்தாராம் கனிமொழி. அங்கு அடைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண் கைதிகளிடமும் அவர் பேசினாராம்.

கனிமொழி அடைக்கப்பட்டுள்ள சிறை அறையில் டாய்லெட்வசதி சரியாக இல்லையாம். இதை சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிபதியிடமே கூறினார் கனிமொழி.

நேற்று மாலை கோர்ட்டிலிருந்து சிறைக்குத் திரும்பியதும் அங்கிருந்த தமிழகத்தைச் சேர்ந்த சிறப்புகா காவல் படை போலீஸாரிடம் சிறிது நேரம் பேசினார். பின்னர் தனது அறையில் அமர்ந்து சில புத்தகங்களைப் படித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை கோர்ட் விடுமுறை என்பதால் சிறைக்குள்ளேயே இன்றைய பொழுதைக் கழித்து வருகிறார் கனிமொழி. டிவி பார்ப்பதிலும், புத்தகம் படிப்பதிலும் தனது பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறார்.

கொசுக்கடி, புழுக்கம், டாய்லெட் பிரச்சினை-திஹார் சிறையில் தவிக்கும் கனிமொழி

டெல்லி: சுதந்திரப் பறவையாக டெல்லிக்கும், சென்னைக்குமாக வந்து போய்க் கொண்டிருந்த கனிமொழி இன்று புழுக்கத்தில், தவிப்பில் திஹார் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்.

சென்னையில் உள்ள தனது வீட்டில் எவ்வளவு வசதியாக இருந்தாரோ அதற்கு அப்படியே தலை கீழாக மாறிப் போயுள்ளது கனிமொழியின் வாழ்க்கை. திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் குட்டியூண்டு அறைக்குள் சுருண்டு போய்க் கிடக்கிறார்.

இரவில் சரிவர தூக்கம் வராமல் தவிக்கிறார். ஒருபக்கம் கொசுக்கடி, மறுபக்கம் புழுக்கம், இன்னொரு பக்கமோ டாய்லெட்டுக்குப் பக்கத்திலேயே படுக்க வேண்டிய நிலை என்று தவித்து வருகிறார் கனிமொழி.

வெள்ளிக்கிழமை இரவு தனது முதல் நாளை திஹார் சிறையில் மிகவும் நெருக்கடியுடன் சமாளித்த கனிமொழிக்கு நேற்றும் நரகமாகவே அது கழிந்துள்ளது.

நேற்று காலை ஐந்தரை மணியளவில் தன்னை எழுப்ப வந்த சிறை வார்டனிடம், தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாதீர்கள். ராத்திரி சரியாக தூங்க முடியாமல் தவித்து இப்போதுதான் தூங்கினேன் என்று கூறினாராம் கனிமொழி. இருப்பினும் சிறை விதிப்படி நீண்ட நேரம் தூங்க முடியாது என்று வார்டன் சற்று கண்டிப்புடன் கனிமொழியிடம் கூறினாராம். இதையடுத்து எழுந்துள்ளார் கனிமொழி.

தனது சிறை அறைக்குள்ளேயே பெரும்பாலான நேரத்தைக் கழிக்கிறார் கனிமொழி. அறைக்குள் மிகவும் புழுக்கமாக இருக்கிறதாம். கொசுத் தொல்லை தாங்க முடியவில்லையாம். கொசுக்களிடமிருந்து தப்பிக்க கொசுவர்த்தி கொடுத்தால் தேவலாம் என்று சிறைக் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை வைத்துள்ளாராம் கனிமொழி. ஆனால் அது கிடைத்ததா என்பது தெரியவில்லை.

காலையில் எழுந்ததும் அவர் இரண்டு துண்டு பிரெட், சப்ஜி, காபி குடித்தார். நேற்று காலையில் எழுந்து காலை உணவைச் சாப்பிட்டு முடித்ததும் தான் அடைக்கப்பட்டுள்ள சிறைப் பகுதியை சுற்றிப் பார்த்தாராம் கனிமொழி. அங்கு அடைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண் கைதிகளிடமும் அவர் பேசினாராம்.

கனிமொழி அடைக்கப்பட்டுள்ள சிறை அறையில் டாய்லெட்வசதி சரியாக இல்லையாம். இதை சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிபதியிடமே கூறினார் கனிமொழி.

நேற்று மாலை கோர்ட்டிலிருந்து சிறைக்குத் திரும்பியதும் அங்கிருந்த தமிழகத்தைச் சேர்ந்த சிறப்புகா காவல் படை போலீஸாரிடம் சிறிது நேரம் பேசினார். பின்னர் தனது அறையில் அமர்ந்து சில புத்தகங்களைப் படித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை கோர்ட் விடுமுறை என்பதால் சிறைக்குள்ளேயே இன்றைய பொழுதைக் கழித்து வருகிறார் கனிமொழி. டிவி பார்ப்பதிலும், புத்தகம் படிப்பதிலும் தனது பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறார்.

டெல்லி சி.பி.ஐ. தனி கோர்ட்டில் ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்ற வக்கீல் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,

"ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில், அரசியல் பெண் தரகர் நீரா ராடியா, தொழில் அதிபர்கள் அனில் அம்பானி, ரத்தன் டாடா, தயாளு அம்மாள் ஆகியோருக்கு முக்கிய பங்கு உள்ளது. ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் சி.பி.ஐ. மேற்கொள்ளவில்லை.

எனவே குற்றப்பத்திரிகையில் அவர்களுடைய பெயரையும் சேர்த்தால்தான் உண்மை வெளிவரும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த மனு மீதான விசாரணை வருகிற 30-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் அனில் அம்பானி, ரத்தன் டாடாவையும் சேர்க்கக்கோரி மனு

டெல்லி சி.பி.ஐ. தனி கோர்ட்டில் ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்ற வக்கீல் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,

"ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில், அரசியல் பெண் தரகர் நீரா ராடியா, தொழில் அதிபர்கள் அனில் அம்பானி, ரத்தன் டாடா, தயாளு அம்மாள் ஆகியோருக்கு முக்கிய பங்கு உள்ளது. ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் சி.பி.ஐ. மேற்கொள்ளவில்லை.

எனவே குற்றப்பத்திரிகையில் அவர்களுடைய பெயரையும் சேர்த்தால்தான் உண்மை வெளிவரும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த மனு மீதான விசாரணை வருகிற 30-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுடில்லி : 2ஜி வழக்கில் சி.பி.ஐ., தாக்கல் செய்த 2வது குற்றப்பத்திரிகையில் கூட்டு சதியாளர் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த தி.மு.க., எம்.பி.,யும், கருணாநிதியின் மகளுமான கனிமொழி ‌நேற்று ( 21ம் தேதி) டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். டில்லி திகார் சிறை எண் 6ல் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் கிடைத்தது என்ன ? சிறை எண் 6ல் 8வது வார்டில் கனிமொழி நேற்று மாலை 4.30 மணிக்கு அடைக்கப்பட்டார். முதல் முறையாக குற்றப் பின்னணியுடன் வருபவர்கள் இந்த சிறையில் அடைக்கப்படுவது வழக்கம். கனிமொழி தனி செல்லில் இருக்கிறார். அவருக்கு தென் இந்திய உணவு வகை வழங்கப்படுகிறது. 10 அடி அகலமும் 15 அடி நீளமும் கொண்ட அறை தான் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கனிமொழி சிறைக்குள் செல்லும் போது, மருந்துப் பொருட்கள், புத்தகங்கள், மூக்கு கண்ணாடி ஆகியனவற்றை எடுத்துச் சென்றார். அறையில் மின்விசிறி, தொலைக்காட்சி பெட்டி, மற்றும் போர்வை ஆகியன தரப்பட்டுள்ளதாக திகார் சிறை துணை ஆய்வாளர் ஆர்.என்.சர்மா தெரிவித்துள்ளார். நாளிதழ்களும் வழங்கப்படும் என தெரிகிறது.


மூக்குத்திக்கு தடை : கனிமொழி சிறைக்கு செல்லும் போது அவரது மூக்குத்தியை அகற்றி விடுமாறு அதிகாரிகள் வலியுறுத்தினர். இதனையடுத்து அவர் மூக்குத்தியை அகற்றினார். சிறை விதிமுறைகளின் படி அவர் ஒரு வாரத்துக்கு இரண்டு முறை அவரது உறவினர்களை சந்திக்க முடியும்.


பக்கத்து சிறையில் உளவாளி ! கனிமொழியின் பக்கத்து சிறையில் பாகிஸ்தான் நாட்டுக்கு உளவு பார்த்து மாஜி ஐ.எப்.எஸ்., அதிகாரி மாதுரி குப்தாவும், விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட பு‌ரோக்கர் சோனு பஞ்சாபன் ஆகியோரும் இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

சப்பாத்தி , சப்ஜி, சாதம் : நேற்றிரவு கனிமொழிக்கு சப்பாத்தி, சிறிது அளவு சாதம், சப்ஜி, பருப்பு கூட்டு ஆகியன வழங்கப்பட்டன. சி‌றை அறையிலேயே இருந்து உணவு அருந்தினார். கொசுத் தொல்லை அதிகமாக இருந்ததால், தனக்கு கொசு விரட்டி ஏற்பாடு செய்து தருமாறு சிறை அதிகாரிகளுடன் கேட்டுக் கொண்டுள்ளார் கனி. கனிமொழி அறைக்குள்ளேயே அட்டாச்ட் டாய்லட் இருக்கிறது. ஆனால் அதற்கு கதவு இல்லை. கனிமொழி டாய்லட் பயன்படுத்தும் நேரம் சிறைக் காவலர்களிடம் சொன்னால் பெரிய திரை ஒன்று போடப்படும். இதற்கு வேறு வழியில்லை, இது சிறை வழக்கம் என அதிகாரி்கள் கூறினர்.

பேசக்கூடாது......... கனிமொழி சிறை எண் 6ல் இருக்கிறார். சிறை எண் 1, 3,4 ல் 2ஜி வழக்கில் கைதான மற்றவர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் எக்காரணம் கொண்டும் கனிமொழி பேசக்கூடாது என கனி‌மொழிக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

கண்ணீர், மவுனம், கனிமொழி : ‌கோர்ட் சீன்
நேற்று ( 21ம் தேதி) பிற்பகல் டில்லி பட்டியாலா சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் ஜாமீன் மனு மீதான தீர்ப்புக்காக காத்திருந்த கனிமொழி இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தார். கோர்ட்டில் 2ஜி வழக்கில் ஏற்கனவே கைதான ராஜா, சாகித் பால்வா, சஞ்சய் சந்திரா, வினோத் கோயன்கா ஆகியோரும் இருந்தனர். கனிமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஓ.பி.செய்னி வாசிக்க ஆரம்பித்தார். யாராவது அதை மொழி பெயர்த்து செல்ல மாட்டார்களா என்ற படி கனிமொழி சுற்றி இருந்தவர்களை ஏக்கத்துடன் ஒரு நோட்டம் விட்டார். கனிமொழி ஜாமீன் மனு ரத்து, அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை புரிந்து கொண்ட ராஜா, எழுந்து நின்றார். சமிக்ஞைகளில் கனி கைது என்பதை தெரிவித்தார். அதிர்ந்து போனார் கனிமொழி. சென்னையில் இருந்து வந்திருந்த கனிமொழியின் உறவுக்கார பாட்டி, கனிமொழியின் மெய்க்காப்பாளர் ஆகியோர் அழுது கொண்டே கோர்ட்டில் இருந்து வெளியேறினர். மவுனம் மட்டுமே மொழியாக, கண்களில் இருந்து கண்ணீர் வழிய கணவர் அரவிந்தனை நோக்கி நகர்ந்தார் கனிமொழி. கணவரை கண்ணீருடன் ஆரத் தழுவி மவுனத்தடன் நகர்ந்தார். கோர்ட்டில் இருந்த டி.பி.ரியால்டி நிறுவனர் சாகித் பால்வாவின் தந்தை, கனிமொழியை நோக்கி நடந்து வந்து, கனியின் தலையில் கைவைத்து எதுவும் நடக்காது என ஆசிர்வதிப்போல் செய்து விட்டுச் சென்றார்.

 உடைகளுக்கு ஏற்ப விதவிதமாக, வித்தியாசமாக கைப்பைகளை ‌பயன்படுத்தும் கனிமொழி, அவர் கையில் வைத்திருந்த பையை கணவரிடம் தந்து விட்டு நகர்ந்தார். யாருடனும் பேசவில்லை. அவரது ஆதரவாளர்களை நோக்கி கையை மட்டும் அசைத்து விட்டுச் சென்றனர். அதற்குள் கோர்ட்டில் இருந்த போலீசார் கனிமொழியை சுற்றிலும் பாதுகாப்புக்கு வந்தனர். வெளியில் இருந்து உள்ளே நுழைய முயன்ற பத்திரிகையாளர்களை தடுத்து நிறுத்தி, கனிமொழியையும், சரத்குமாரையும் கோர்ட் வளாகத்தில் இருக்கும் லாக் அப்புக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர்

கனிமொழியின் புதிய முகவரி : நம்பர்-6 திகார் ஜெயில்

புதுடில்லி : 2ஜி வழக்கில் சி.பி.ஐ., தாக்கல் செய்த 2வது குற்றப்பத்திரிகையில் கூட்டு சதியாளர் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த தி.மு.க., எம்.பி.,யும், கருணாநிதியின் மகளுமான கனிமொழி ‌நேற்று ( 21ம் தேதி) டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். டில்லி திகார் சிறை எண் 6ல் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் கிடைத்தது என்ன ? சிறை எண் 6ல் 8வது வார்டில் கனிமொழி நேற்று மாலை 4.30 மணிக்கு அடைக்கப்பட்டார். முதல் முறையாக குற்றப் பின்னணியுடன் வருபவர்கள் இந்த சிறையில் அடைக்கப்படுவது வழக்கம். கனிமொழி தனி செல்லில் இருக்கிறார். அவருக்கு தென் இந்திய உணவு வகை வழங்கப்படுகிறது. 10 அடி அகலமும் 15 அடி நீளமும் கொண்ட அறை தான் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கனிமொழி சிறைக்குள் செல்லும் போது, மருந்துப் பொருட்கள், புத்தகங்கள், மூக்கு கண்ணாடி ஆகியனவற்றை எடுத்துச் சென்றார். அறையில் மின்விசிறி, தொலைக்காட்சி பெட்டி, மற்றும் போர்வை ஆகியன தரப்பட்டுள்ளதாக திகார் சிறை துணை ஆய்வாளர் ஆர்.என்.சர்மா தெரிவித்துள்ளார். நாளிதழ்களும் வழங்கப்படும் என தெரிகிறது.


மூக்குத்திக்கு தடை : கனிமொழி சிறைக்கு செல்லும் போது அவரது மூக்குத்தியை அகற்றி விடுமாறு அதிகாரிகள் வலியுறுத்தினர். இதனையடுத்து அவர் மூக்குத்தியை அகற்றினார். சிறை விதிமுறைகளின் படி அவர் ஒரு வாரத்துக்கு இரண்டு முறை அவரது உறவினர்களை சந்திக்க முடியும்.


பக்கத்து சிறையில் உளவாளி ! கனிமொழியின் பக்கத்து சிறையில் பாகிஸ்தான் நாட்டுக்கு உளவு பார்த்து மாஜி ஐ.எப்.எஸ்., அதிகாரி மாதுரி குப்தாவும், விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட பு‌ரோக்கர் சோனு பஞ்சாபன் ஆகியோரும் இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

சப்பாத்தி , சப்ஜி, சாதம் : நேற்றிரவு கனிமொழிக்கு சப்பாத்தி, சிறிது அளவு சாதம், சப்ஜி, பருப்பு கூட்டு ஆகியன வழங்கப்பட்டன. சி‌றை அறையிலேயே இருந்து உணவு அருந்தினார். கொசுத் தொல்லை அதிகமாக இருந்ததால், தனக்கு கொசு விரட்டி ஏற்பாடு செய்து தருமாறு சிறை அதிகாரிகளுடன் கேட்டுக் கொண்டுள்ளார் கனி. கனிமொழி அறைக்குள்ளேயே அட்டாச்ட் டாய்லட் இருக்கிறது. ஆனால் அதற்கு கதவு இல்லை. கனிமொழி டாய்லட் பயன்படுத்தும் நேரம் சிறைக் காவலர்களிடம் சொன்னால் பெரிய திரை ஒன்று போடப்படும். இதற்கு வேறு வழியில்லை, இது சிறை வழக்கம் என அதிகாரி்கள் கூறினர்.

பேசக்கூடாது......... கனிமொழி சிறை எண் 6ல் இருக்கிறார். சிறை எண் 1, 3,4 ல் 2ஜி வழக்கில் கைதான மற்றவர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் எக்காரணம் கொண்டும் கனிமொழி பேசக்கூடாது என கனி‌மொழிக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

கண்ணீர், மவுனம், கனிமொழி : ‌கோர்ட் சீன்
நேற்று ( 21ம் தேதி) பிற்பகல் டில்லி பட்டியாலா சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் ஜாமீன் மனு மீதான தீர்ப்புக்காக காத்திருந்த கனிமொழி இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தார். கோர்ட்டில் 2ஜி வழக்கில் ஏற்கனவே கைதான ராஜா, சாகித் பால்வா, சஞ்சய் சந்திரா, வினோத் கோயன்கா ஆகியோரும் இருந்தனர். கனிமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஓ.பி.செய்னி வாசிக்க ஆரம்பித்தார். யாராவது அதை மொழி பெயர்த்து செல்ல மாட்டார்களா என்ற படி கனிமொழி சுற்றி இருந்தவர்களை ஏக்கத்துடன் ஒரு நோட்டம் விட்டார். கனிமொழி ஜாமீன் மனு ரத்து, அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை புரிந்து கொண்ட ராஜா, எழுந்து நின்றார். சமிக்ஞைகளில் கனி கைது என்பதை தெரிவித்தார். அதிர்ந்து போனார் கனிமொழி. சென்னையில் இருந்து வந்திருந்த கனிமொழியின் உறவுக்கார பாட்டி, கனிமொழியின் மெய்க்காப்பாளர் ஆகியோர் அழுது கொண்டே கோர்ட்டில் இருந்து வெளியேறினர். மவுனம் மட்டுமே மொழியாக, கண்களில் இருந்து கண்ணீர் வழிய கணவர் அரவிந்தனை நோக்கி நகர்ந்தார் கனிமொழி. கணவரை கண்ணீருடன் ஆரத் தழுவி மவுனத்தடன் நகர்ந்தார். கோர்ட்டில் இருந்த டி.பி.ரியால்டி நிறுவனர் சாகித் பால்வாவின் தந்தை, கனிமொழியை நோக்கி நடந்து வந்து, கனியின் தலையில் கைவைத்து எதுவும் நடக்காது என ஆசிர்வதிப்போல் செய்து விட்டுச் சென்றார்.

 உடைகளுக்கு ஏற்ப விதவிதமாக, வித்தியாசமாக கைப்பைகளை ‌பயன்படுத்தும் கனிமொழி, அவர் கையில் வைத்திருந்த பையை கணவரிடம் தந்து விட்டு நகர்ந்தார். யாருடனும் பேசவில்லை. அவரது ஆதரவாளர்களை நோக்கி கையை மட்டும் அசைத்து விட்டுச் சென்றனர். அதற்குள் கோர்ட்டில் இருந்த போலீசார் கனிமொழியை சுற்றிலும் பாதுகாப்புக்கு வந்தனர். வெளியில் இருந்து உள்ளே நுழைய முயன்ற பத்திரிகையாளர்களை தடுத்து நிறுத்தி, கனிமொழியையும், சரத்குமாரையும் கோர்ட் வளாகத்தில் இருக்கும் லாக் அப்புக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர்

புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட்டுச்சதியாளராக இருக்கும் கனிமொழிக்கு ஜாமின் வழங்க முடியாது என்ற நீதிபதியின் முடிவை அடுத்து தி.மு.க., தலைவரும். தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழி இன்று கைது செய்யப்பட்டார். இவருக்கு ஜாமின் நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு பாட்டியாலா கோர்ட்டில் முன்னதாக வைக்கப்பட்டார்.

 தொடர்ந்து அவர் பலத்த போலீஸ பாதுகாப்புடன் திகார் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஜெயில் எண் 6 ல் அடைக்கப்பட்டார். இவரை மீண்டு் நாளை காலை 10 மணிக்கு வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி ஓ.பி.,சைனி கூறியுள்ளார். தமிழக ஆட்சி மாற்றம் காரணமாக கோட்டையை இழந்த தி.மு.க.,வுக்கு கனிமொழி ரிமாண்ட் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் தந்திருக்கிறது.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழலில் சிக்கிய மாஜி அமைச்சர் ராஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விஷயத்தில் ஆதாயம் அடைந்த டி.பி., ரியாலிட்டி குழுமத்தின் சினியுக் என்ற நிறுவனம் மூலம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி கைமாறியது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் கருணாநிதியின் மகள் கனிமொழி, டி.வி.,யின் இயக்குனர் சரத்குமார் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். கனிமொழி கூட்டுச்சதியில் ஈடுபட்டுள்ளார் என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பாக கடந்த 6 ம் தேதி சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் படி ஆஜராகி தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என பிரபல கிரிமினல் வக்கீல் ராம்ஜெத்மலானி மூலம் வாதாடினார். இந்த மனு மீதான உத்தரவை வரும் 14 ம் தேதி அறிவிப்பதாக நீதிபதி கூறியிருந்தார் ஆனால் அன்று உத்தரவு எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனையடுத்து 20 ம் தேதிக்கு தள்ளி வைத்தார். இருப்பினும் கோர்ட்டில் தினமும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கனிமொழியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நீதிபதி ஓ.பி.,சைனி ஜாமின் மனு மீதான தீர்ப்பை அறிவித்தார். கூட்டுச்சதியாளராக கருதப்படும் கனிமொழிக்கு ஜாமின் வழங்க முடியாது என கைவிரித்து விட்டார். இதனையடுத்து கனிமொழியும், கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.


நீதிபதி சொல்லியிருப்பது என்ன? : இன்றைய ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவில் நீதிபதி ஓ.பி., சைனி கூறியிருப்பதாவது: கனிமொழிக்கு ஜாமின் கொடுக்க இயலாது, காரணம் இவர் புரிந்துள்ள குற்றம் மிக பெரிய அளவிலானது. இவர் மீதான குற்ற முக்கியத்துவம் அடிப்படையில் இவர் பெண் என்பதால் ஜாமின் வழங்க வேண்டும் என்பதை பரிசீலனையில் எடுத்துக்கொள்ள முடியாது. இத்துடன் இந்த வழக்சில் சம்பந்தப்பட்ட யாருக்கும் ஜாமின் வழங்கப்படவில்லை. எனவே இந்த தருணத்தில் இவருக்கு ஜாமின் வழங்க முடியாது. மேலும் இவர் உடனடியாக கைது செய்யப்பட்டு நாளை காலை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளார்.

“ ராஜாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட கனி” : சி.பி.ஐ.,வக்கீல் வாதம் ; ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறையில் இருக்கும் மாஜி அமைச்சர் ராஜாவுடன் கனிமொழி நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என்று சி.பி.ஐ.,வக்கீல் யு.யு., லலித் வாதாடினார். மேலும் அவர் வாதாடுகையில் , கனிமொழி கலைஞர் தொலைக்காட்சியின் பின்னணியில் இருந்து மூளையாக செயல்பட்டார் என்றும், கலைஞர் டி.வி., துவங்கும் நேரத்தில் ராஜாவுடன் நெருக்கமாக இருந்தார். நெருக்கமாக இருந்ததால் கலைஞர் டி.வி.,க்கு எவ்வித ஆவணமும் இல்லாமல் ஸ்பெக்டரம் ஊழலில் ஆதாயம் பெற்ற டி.பி.,ரியாலிட்டி நிறுவனம் மூலம் எளிதாக ரூ. 214 கோடி கைமாறியது. இதில் இருவரது பங்கும் இருந்தது என்றும் இதனால் கனிமொழியை ஜாமினில் விடக்கூடாது நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் .

கலைஞர் தொலைக்காட்சியின் அன்றாட பணிகள் அனைத்தும் கனிமொழிக்கு தெரியும் . ராஜாவுடன் நெருக்கமாக இருந்ததால் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் பணம் கலைஞர் டி.வி., க்கு பரிமாற்றம் நடந்திருக்கிறது. கனிமொழியும் இந்த சதியில் பங்கு கொண்டவர் . இவர் கலைஞர் டி.வி.,யின் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். மேலும் பண பரிமாற்றம், திரும்ப அளித்தல் உள்ளிட்டவைகளில் போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. கலைஞர் டி.வி.,க்கு தொடர்பில்லை என்றும் பணம் பரிவர்த்தனை நேர்மையாக நடந்தது என்பதும் நம்ப முடியாததாகவே உள்ளது. எனவே கனிமொழியை ஜாமினில் விட முடியாது என்றார்.

“ முழுச்சதிக்கும் ராஜாதான் காரணம் ”; கனிமொழி வக்கீல் சொன்னது: 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மாஜி அமைச்சர் ராஜாதான் முழுச்சதிக்கும் காரணம் என்றும், இதில் கனிமொழிக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் இந்தியாவின் பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி கோர்ட்டில் தெரிவித்தார். கனிமொழிக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் அவர் வாதாடுகையில்; இந்த விவகாரத்தில் கனிமொழிக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. அவர் எந்தவொரு ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை. இவரால் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் இவர் மீது எவ்வித குற்றமும் இல்லை. இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு 20 சதவீத பங்குதாரர் மட்டுமே .கருணாநிதியின் மகளாக பிறந்ததும், எம்.பி.,யாக இருப்பதும்தான் இவரது துரதிருஷ்டம் நாள்தோறும் என்ன நடக்கும் என்ற விஷயத்தில் இவரது கவனத்திற்கு வராது. ராஜாதான் முழுச்சதிக்கும் முக்கிய காரணம். மேலும் கனிமொழி ஒரு எம்.பி., சட்டத்தை மதித்து நடப்பவர், ஒரு பெண்ணும்கூட இதனால் இவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் . இவ்வாறு ராம்ஜெத்மலானி வாதாடினார். பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி ஆஜராகி வாதிட்டும் பயனில்லாமல் போனது.

ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி கைது வரை

2011 பிப். 2: "2ஜி' வழக்கு தொடர்பாக ராஜா, அவரது முன்னாள் தனி செயலாளர் சந்தோலியா மற்றும் முன்னாள் தகவல் தொடர்பு துறை செயலாளர் சித்தார்த் பெகுரா ஆகியோர் சி.பி.ஐ.,யால் கைது. அனைவரும் சி.பி.ஐ., காவலில் அடைப்பு.
2011 பிப். 8: ராஜாவுக்கு மேலும் 2 நாள் சி.பி.ஐ., காவல் நீட்டிப்பு. பெகுரா, சந்தோலியா கோர்ட் காவலில் சிறையில் அடைப்பு.
பிப். 8: ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர், சாகித் உஸ்மான் பல்வா, சி.பி.ஐ.,யால் கைது.
பிப். 10: ராஜாவின் சி.பி.ஐ., காவல் மேலும் 4 நாட்களுக்கு நீட்டிப்பு.
பிப். 14: ராஜா சி.பி.ஐ., காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு, உஸ்மான் பல்வாவுக்கு சி.பி.ஐ., காவல் 4 நாட்கள் நீட்டிப்பு.
பிப். 17: ராஜா, திகார் சிறையில் அடைப்பு.
பிப். 18: பல்வா, சிறையில் அடைப்பு.
பிப். 24: பல்வா, "கலைஞர் டிவி' க்கு சலுகைகாட்டினார் என டில்லி கோர்ட்டில் சி.பி.ஐ., தகவல்.
பிப். 28: வீடியோ கான்பரன்சிங் விசாரணைக்கு அனுமதிக்குமாறு ராஜா கோரிக்கை.
மார்ச் 1: 63 பேர் விசாரணை வளையத்தில் உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., தகவல். ராஜா வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு ஆஜராவதற்கு சி.பி.ஐ., கோர்ட் அனுமதி.
மார்ச் 14: டில்லி ஐகோர்ட், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரிப்பதற்கு ஸ்பெஷல் கோர்ட் ஒன்றை அமைத்தது. பல்வாவும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராவதற்கு டில்லி கோர்ட் அனுமதி.
மார்ச் 29: முதல் குற்றப்பத்திரிக்கையை மார்ச் 31க்கு பதிலாக, ஏப்., 2ல் தாக்கல் செய்கிறோம் என்ற சி.பி.ஐ., யின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் ஏற்றது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆசிப் பல்வா மற்றும் ராஜிவ் அகர்வால் ஆகிய மேலும் இருவர் கைது.
ஏப். 2: சி.பி.ஐ., சார்பில் ஸ்பெக்ட்ரம் வழக்கு சம்பந்தமாக முதல் குற்றப்பத்திரிகை தாக்கல்.
ஏப். 25: இரண்டாவது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ., தாக்கல் செய்தது. தி.மு.க., வைச் சேர்ந்த கனிமொழி "கூட்டுச்சதியாளர்' என சேர்ப்பு.
மே 6: கனிமொழி கோர்ட்டில் ஆஜர்.
மே 20: கனிமொழி ஜாமீன் மனுவை கோர்ட் நிராகரித்தது. அவர் கைது செய்யப்பட்டார்.

பணம் வந்த பாதை: கடந்த 2008ல் மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சராக ராஜா இருந்தபோது, ஷாகித் உஸ்மான் பல்வா பங்குதாரராக இருக்கும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு 1,537 கோடி ரூபாய்க்கு "2ஜி' லைசென்ஸ் வழங்கினார். ஒரு மாதத்துக்குள் 40 சதவீத பங்கை பல்வா, 4,500 கோடி ரூபாய்க்கு துபாய் நிறுவனத்துக்கு விற்று லாபம் அடைந்துள்ளார். "டிபி ரியாலிட்டி' என்ற நிறுவனத்தின் நிர்வாக மேலாளராகவும் பல்வா இருக்கிறார். இந்நிறுவனத்திலிருந்து கலைஞர் "டிவி'க்கு 200 கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடந்துள்ளது என சி.பி.ஐ., தெரிவித்தது. லைசென்ஸ் வழங்குவதில் ராஜா சலுகை காட்டியதற்காக பல்வா, இந்த தொகையை கலைஞர் "டிவி'க்கு அளித்தாக கூறப்படுகிறது. 214 கோடி ரூபாய் கடனாக தான் பெறப்பட்டது. அதையும் வட்டியுடன் திருப்பி செலுத்திவிட்டோம் என்று கலைஞர் "டிவி' தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

2G Spectrum case DMK chief daughter kanimozhi arrested in Delhi.

திகார் ஜெயிலில் கனிமொழி அடைப்பு: நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவு; தி.மு.க,அதிர்ச்சி

புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட்டுச்சதியாளராக இருக்கும் கனிமொழிக்கு ஜாமின் வழங்க முடியாது என்ற நீதிபதியின் முடிவை அடுத்து தி.மு.க., தலைவரும். தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழி இன்று கைது செய்யப்பட்டார். இவருக்கு ஜாமின் நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு பாட்டியாலா கோர்ட்டில் முன்னதாக வைக்கப்பட்டார்.

 தொடர்ந்து அவர் பலத்த போலீஸ பாதுகாப்புடன் திகார் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஜெயில் எண் 6 ல் அடைக்கப்பட்டார். இவரை மீண்டு் நாளை காலை 10 மணிக்கு வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி ஓ.பி.,சைனி கூறியுள்ளார். தமிழக ஆட்சி மாற்றம் காரணமாக கோட்டையை இழந்த தி.மு.க.,வுக்கு கனிமொழி ரிமாண்ட் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் தந்திருக்கிறது.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழலில் சிக்கிய மாஜி அமைச்சர் ராஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விஷயத்தில் ஆதாயம் அடைந்த டி.பி., ரியாலிட்டி குழுமத்தின் சினியுக் என்ற நிறுவனம் மூலம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி கைமாறியது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் கருணாநிதியின் மகள் கனிமொழி, டி.வி.,யின் இயக்குனர் சரத்குமார் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். கனிமொழி கூட்டுச்சதியில் ஈடுபட்டுள்ளார் என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பாக கடந்த 6 ம் தேதி சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் படி ஆஜராகி தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என பிரபல கிரிமினல் வக்கீல் ராம்ஜெத்மலானி மூலம் வாதாடினார். இந்த மனு மீதான உத்தரவை வரும் 14 ம் தேதி அறிவிப்பதாக நீதிபதி கூறியிருந்தார் ஆனால் அன்று உத்தரவு எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனையடுத்து 20 ம் தேதிக்கு தள்ளி வைத்தார். இருப்பினும் கோர்ட்டில் தினமும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கனிமொழியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நீதிபதி ஓ.பி.,சைனி ஜாமின் மனு மீதான தீர்ப்பை அறிவித்தார். கூட்டுச்சதியாளராக கருதப்படும் கனிமொழிக்கு ஜாமின் வழங்க முடியாது என கைவிரித்து விட்டார். இதனையடுத்து கனிமொழியும், கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.


நீதிபதி சொல்லியிருப்பது என்ன? : இன்றைய ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவில் நீதிபதி ஓ.பி., சைனி கூறியிருப்பதாவது: கனிமொழிக்கு ஜாமின் கொடுக்க இயலாது, காரணம் இவர் புரிந்துள்ள குற்றம் மிக பெரிய அளவிலானது. இவர் மீதான குற்ற முக்கியத்துவம் அடிப்படையில் இவர் பெண் என்பதால் ஜாமின் வழங்க வேண்டும் என்பதை பரிசீலனையில் எடுத்துக்கொள்ள முடியாது. இத்துடன் இந்த வழக்சில் சம்பந்தப்பட்ட யாருக்கும் ஜாமின் வழங்கப்படவில்லை. எனவே இந்த தருணத்தில் இவருக்கு ஜாமின் வழங்க முடியாது. மேலும் இவர் உடனடியாக கைது செய்யப்பட்டு நாளை காலை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளார்.

“ ராஜாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட கனி” : சி.பி.ஐ.,வக்கீல் வாதம் ; ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறையில் இருக்கும் மாஜி அமைச்சர் ராஜாவுடன் கனிமொழி நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என்று சி.பி.ஐ.,வக்கீல் யு.யு., லலித் வாதாடினார். மேலும் அவர் வாதாடுகையில் , கனிமொழி கலைஞர் தொலைக்காட்சியின் பின்னணியில் இருந்து மூளையாக செயல்பட்டார் என்றும், கலைஞர் டி.வி., துவங்கும் நேரத்தில் ராஜாவுடன் நெருக்கமாக இருந்தார். நெருக்கமாக இருந்ததால் கலைஞர் டி.வி.,க்கு எவ்வித ஆவணமும் இல்லாமல் ஸ்பெக்டரம் ஊழலில் ஆதாயம் பெற்ற டி.பி.,ரியாலிட்டி நிறுவனம் மூலம் எளிதாக ரூ. 214 கோடி கைமாறியது. இதில் இருவரது பங்கும் இருந்தது என்றும் இதனால் கனிமொழியை ஜாமினில் விடக்கூடாது நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் .

கலைஞர் தொலைக்காட்சியின் அன்றாட பணிகள் அனைத்தும் கனிமொழிக்கு தெரியும் . ராஜாவுடன் நெருக்கமாக இருந்ததால் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் பணம் கலைஞர் டி.வி., க்கு பரிமாற்றம் நடந்திருக்கிறது. கனிமொழியும் இந்த சதியில் பங்கு கொண்டவர் . இவர் கலைஞர் டி.வி.,யின் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். மேலும் பண பரிமாற்றம், திரும்ப அளித்தல் உள்ளிட்டவைகளில் போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. கலைஞர் டி.வி.,க்கு தொடர்பில்லை என்றும் பணம் பரிவர்த்தனை நேர்மையாக நடந்தது என்பதும் நம்ப முடியாததாகவே உள்ளது. எனவே கனிமொழியை ஜாமினில் விட முடியாது என்றார்.

“ முழுச்சதிக்கும் ராஜாதான் காரணம் ”; கனிமொழி வக்கீல் சொன்னது: 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மாஜி அமைச்சர் ராஜாதான் முழுச்சதிக்கும் காரணம் என்றும், இதில் கனிமொழிக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் இந்தியாவின் பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி கோர்ட்டில் தெரிவித்தார். கனிமொழிக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் அவர் வாதாடுகையில்; இந்த விவகாரத்தில் கனிமொழிக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. அவர் எந்தவொரு ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை. இவரால் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் இவர் மீது எவ்வித குற்றமும் இல்லை. இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு 20 சதவீத பங்குதாரர் மட்டுமே .கருணாநிதியின் மகளாக பிறந்ததும், எம்.பி.,யாக இருப்பதும்தான் இவரது துரதிருஷ்டம் நாள்தோறும் என்ன நடக்கும் என்ற விஷயத்தில் இவரது கவனத்திற்கு வராது. ராஜாதான் முழுச்சதிக்கும் முக்கிய காரணம். மேலும் கனிமொழி ஒரு எம்.பி., சட்டத்தை மதித்து நடப்பவர், ஒரு பெண்ணும்கூட இதனால் இவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் . இவ்வாறு ராம்ஜெத்மலானி வாதாடினார். பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி ஆஜராகி வாதிட்டும் பயனில்லாமல் போனது.

ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி கைது வரை

2011 பிப். 2: "2ஜி' வழக்கு தொடர்பாக ராஜா, அவரது முன்னாள் தனி செயலாளர் சந்தோலியா மற்றும் முன்னாள் தகவல் தொடர்பு துறை செயலாளர் சித்தார்த் பெகுரா ஆகியோர் சி.பி.ஐ.,யால் கைது. அனைவரும் சி.பி.ஐ., காவலில் அடைப்பு.
2011 பிப். 8: ராஜாவுக்கு மேலும் 2 நாள் சி.பி.ஐ., காவல் நீட்டிப்பு. பெகுரா, சந்தோலியா கோர்ட் காவலில் சிறையில் அடைப்பு.
பிப். 8: ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர், சாகித் உஸ்மான் பல்வா, சி.பி.ஐ.,யால் கைது.
பிப். 10: ராஜாவின் சி.பி.ஐ., காவல் மேலும் 4 நாட்களுக்கு நீட்டிப்பு.
பிப். 14: ராஜா சி.பி.ஐ., காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு, உஸ்மான் பல்வாவுக்கு சி.பி.ஐ., காவல் 4 நாட்கள் நீட்டிப்பு.
பிப். 17: ராஜா, திகார் சிறையில் அடைப்பு.
பிப். 18: பல்வா, சிறையில் அடைப்பு.
பிப். 24: பல்வா, "கலைஞர் டிவி' க்கு சலுகைகாட்டினார் என டில்லி கோர்ட்டில் சி.பி.ஐ., தகவல்.
பிப். 28: வீடியோ கான்பரன்சிங் விசாரணைக்கு அனுமதிக்குமாறு ராஜா கோரிக்கை.
மார்ச் 1: 63 பேர் விசாரணை வளையத்தில் உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., தகவல். ராஜா வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு ஆஜராவதற்கு சி.பி.ஐ., கோர்ட் அனுமதி.
மார்ச் 14: டில்லி ஐகோர்ட், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரிப்பதற்கு ஸ்பெஷல் கோர்ட் ஒன்றை அமைத்தது. பல்வாவும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராவதற்கு டில்லி கோர்ட் அனுமதி.
மார்ச் 29: முதல் குற்றப்பத்திரிக்கையை மார்ச் 31க்கு பதிலாக, ஏப்., 2ல் தாக்கல் செய்கிறோம் என்ற சி.பி.ஐ., யின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் ஏற்றது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆசிப் பல்வா மற்றும் ராஜிவ் அகர்வால் ஆகிய மேலும் இருவர் கைது.
ஏப். 2: சி.பி.ஐ., சார்பில் ஸ்பெக்ட்ரம் வழக்கு சம்பந்தமாக முதல் குற்றப்பத்திரிகை தாக்கல்.
ஏப். 25: இரண்டாவது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ., தாக்கல் செய்தது. தி.மு.க., வைச் சேர்ந்த கனிமொழி "கூட்டுச்சதியாளர்' என சேர்ப்பு.
மே 6: கனிமொழி கோர்ட்டில் ஆஜர்.
மே 20: கனிமொழி ஜாமீன் மனுவை கோர்ட் நிராகரித்தது. அவர் கைது செய்யப்பட்டார்.

பணம் வந்த பாதை: கடந்த 2008ல் மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சராக ராஜா இருந்தபோது, ஷாகித் உஸ்மான் பல்வா பங்குதாரராக இருக்கும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு 1,537 கோடி ரூபாய்க்கு "2ஜி' லைசென்ஸ் வழங்கினார். ஒரு மாதத்துக்குள் 40 சதவீத பங்கை பல்வா, 4,500 கோடி ரூபாய்க்கு துபாய் நிறுவனத்துக்கு விற்று லாபம் அடைந்துள்ளார். "டிபி ரியாலிட்டி' என்ற நிறுவனத்தின் நிர்வாக மேலாளராகவும் பல்வா இருக்கிறார். இந்நிறுவனத்திலிருந்து கலைஞர் "டிவி'க்கு 200 கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடந்துள்ளது என சி.பி.ஐ., தெரிவித்தது. லைசென்ஸ் வழங்குவதில் ராஜா சலுகை காட்டியதற்காக பல்வா, இந்த தொகையை கலைஞர் "டிவி'க்கு அளித்தாக கூறப்படுகிறது. 214 கோடி ரூபாய் கடனாக தான் பெறப்பட்டது. அதையும் வட்டியுடன் திருப்பி செலுத்திவிட்டோம் என்று கலைஞர் "டிவி' தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

2G Spectrum case DMK chief daughter kanimozhi arrested in Delhi.

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஐந்து வருடங்கள் உண்மையாகவும், நேர்மையாகவும், தலைவராக நான் பணிபுரிந்தது என்னுடன் இருந்த நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஏனைய தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் தெரியும்.

120 சிறு முதலீட்டு படங்களில் பணியாற்றிய நான் எளிமையே வலிமை என்ற உணர்வோடு வாழ்ந்து வருபவன். எந்த காலத்திலும் திரை உலகில் நான் யாருக்கும் பாக்கி வைத்ததில்லை. நேர்மை தவறியதில்லை. இது திரை உலகில் நான் பணியாற்றிய ஏவிஎம், கே. பாலச்சந்தரின் கவிதாலயா போன்ற பெரிய நிறுவனங்களுக்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் தெரியும்.

ஞாயப்படி நடக்கும் என்னை சங்கத்தின் முன்னாள் தலைவரும் மற்றவர்களும் சங்கத்தில் 15 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என பொய்யான தகவலை கொடுத்து ஒளிபரப்பி வருகின்றனர். சங்கத்தில் வரவு-செலவு கணக்கு ஒவ்வொரு மாதமும் நடைபெறும் செயற்குழு கூட் டத்தில் ஆடிட்டர் மூலம் தணிக்கை செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதை மினிட்ஸ் புத்தகத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

புதிதாக தலைவர் பொறுப்பேற்றுள்ள எஸ்.ஏ. சந்திரசேகரன் தீவிர விசாரித்து உண்மை நிலையை எல்லோருக்கும் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன். அவருக்கு மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் ராமநாராயணன் கூறி உள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்தில் ரூ.15 கோடி ஊழலா? ராம நாராயணன் மறுப்பு

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஐந்து வருடங்கள் உண்மையாகவும், நேர்மையாகவும், தலைவராக நான் பணிபுரிந்தது என்னுடன் இருந்த நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஏனைய தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் தெரியும்.

120 சிறு முதலீட்டு படங்களில் பணியாற்றிய நான் எளிமையே வலிமை என்ற உணர்வோடு வாழ்ந்து வருபவன். எந்த காலத்திலும் திரை உலகில் நான் யாருக்கும் பாக்கி வைத்ததில்லை. நேர்மை தவறியதில்லை. இது திரை உலகில் நான் பணியாற்றிய ஏவிஎம், கே. பாலச்சந்தரின் கவிதாலயா போன்ற பெரிய நிறுவனங்களுக்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் தெரியும்.

ஞாயப்படி நடக்கும் என்னை சங்கத்தின் முன்னாள் தலைவரும் மற்றவர்களும் சங்கத்தில் 15 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என பொய்யான தகவலை கொடுத்து ஒளிபரப்பி வருகின்றனர். சங்கத்தில் வரவு-செலவு கணக்கு ஒவ்வொரு மாதமும் நடைபெறும் செயற்குழு கூட் டத்தில் ஆடிட்டர் மூலம் தணிக்கை செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதை மினிட்ஸ் புத்தகத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

புதிதாக தலைவர் பொறுப்பேற்றுள்ள எஸ்.ஏ. சந்திரசேகரன் தீவிர விசாரித்து உண்மை நிலையை எல்லோருக்கும் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன். அவருக்கு மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் ராமநாராயணன் கூறி உள்ளார்.

திருப்பதி,மே 9: கனிமொழி தவறு செய்திருந்தால் நிச்சயம் கைது செய்யப்படுவார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான வி. ஹனுமந்தராவ் தெரிவித்தார்.
திங்கள்கிழமை திருமலை வந்த அவர் பெருமாளை வழிபட்ட பின் செய்தியாளகளுக்கு பேட்டியளித்த போது மேலும் கூறியதாவது:

சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஊழலுக்கு எதிரானது. அதனால் தான் அண்ணா ஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவரது கோரிக்கையையும் நிறைவேற்றியது.

மேலும் காமன்வெல்த் போட்டியில் ஊழல் நடைபெற்றதால் கல்மாடி கைது செய்யப்பட்டார். 2 ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தற்போது நீதிமன்ற விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். அவர் தவறு செய்திருந்தால் நிச்சயம் கைது செய்யப்படுவார்.

அதே போல அதிக அளவில் சொத்து வைத்துள்ள ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி மீதும் வருங்காலத்தில் விசாரணை மேற்கொள்ளப்படும். அவரும் தவறு செய்தது தெரிய வந்தால் கைது செய்யப்படுவார்.

தற்போது மத்தியிலும், ஆந்திர மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்தாலும், கடப்பா மற்றும் புலிவெந்துலா இடைத்தேர்தல்களில், அரசு அலுவலர்கள், தேர்தல் ஆணைய அதிகாரிகள் என அனைவரும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவாக உள்ளனர் என்று ஹனுமந்தராவ் தெரிவித்தார்.

கனிமொழி தவறு செய்திருந்தால் கைது செய்யப்படுவார்: ஹனுமந்தராவ்

திருப்பதி,மே 9: கனிமொழி தவறு செய்திருந்தால் நிச்சயம் கைது செய்யப்படுவார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான வி. ஹனுமந்தராவ் தெரிவித்தார்.
திங்கள்கிழமை திருமலை வந்த அவர் பெருமாளை வழிபட்ட பின் செய்தியாளகளுக்கு பேட்டியளித்த போது மேலும் கூறியதாவது:

சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஊழலுக்கு எதிரானது. அதனால் தான் அண்ணா ஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவரது கோரிக்கையையும் நிறைவேற்றியது.

மேலும் காமன்வெல்த் போட்டியில் ஊழல் நடைபெற்றதால் கல்மாடி கைது செய்யப்பட்டார். 2 ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தற்போது நீதிமன்ற விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். அவர் தவறு செய்திருந்தால் நிச்சயம் கைது செய்யப்படுவார்.

அதே போல அதிக அளவில் சொத்து வைத்துள்ள ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி மீதும் வருங்காலத்தில் விசாரணை மேற்கொள்ளப்படும். அவரும் தவறு செய்தது தெரிய வந்தால் கைது செய்யப்படுவார்.

தற்போது மத்தியிலும், ஆந்திர மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்தாலும், கடப்பா மற்றும் புலிவெந்துலா இடைத்தேர்தல்களில், அரசு அலுவலர்கள், தேர்தல் ஆணைய அதிகாரிகள் என அனைவரும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவாக உள்ளனர் என்று ஹனுமந்தராவ் தெரிவித்தார்.

டெல்லி: 2ஜி ஊழல் வழக்கு விசாரணை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று நடந்து.

முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையொட்டி திமுகவைச் சேர்ந்த எம்பிக்கள் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.

விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது, இதய நோயாளியான திமுக எம்பி ஆதிசங்கர் திடீரென நீதிமன்றத்தில் மயங்கி விழுந்தார். இதனால் அந்த இடத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

2ஜி விசாரணை: நீதிமன்றத்தில் திமுக எம்பி மயங்கி விழுந்தார்

டெல்லி: 2ஜி ஊழல் வழக்கு விசாரணை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று நடந்து.

முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையொட்டி திமுகவைச் சேர்ந்த எம்பிக்கள் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.

விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது, இதய நோயாளியான திமுக எம்பி ஆதிசங்கர் திடீரென நீதிமன்றத்தில் மயங்கி விழுந்தார். இதனால் அந்த இடத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு முதல்வர் கருணாநிதியின் மகளும் திமுக ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழிக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய கலைஞர் டி.வியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார், ஸ்வான் டெலிகாம் நிர்வாகி உஸ்மான் பல்வாவின் சகோதரர் ஆசிப் பல்வா, குசேகாவோன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவனத்தின் இயக்குனர் ராஜீவ் அகர்வால், சினியுக் நிறுவன இயக்குனர் கரீம் மொரானி ஆகியோருக்கும் சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன.

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act-PMLA) கீழ் இந்த சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் பணப் பரிவர்த்தனைகள், வருவாய் ஆதாரங்கள், சொத்துகள் பற்றிய ஆவணங்களையும் கனிமொழி உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் முறைகேடாக லாபமடைந்த டி.பி.ரியால்டி நிறுவனம், தனது குசேகாவோன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவனம் மற்றும் சினியுக் நிறுவனம் ஆகிய துணை நிறுவனங்கள் மூலமாக கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி நிதியுதவி அளித்தது.

இது தொடர்பாக கலைஞர் டி.வியில் தலா 20 சதவீத பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி, சரத்குமார் ஆகியோரிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரிப்பர் என்று தெரிகிறது.

இந்த வழக்கை ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ அமைப்பும் விசாரித்து வருவதும், சிபிஐ குற்றப் பத்திரிக்கையில் பெயர் சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி நாளை மறுதினம், 6ம் தேதி, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் நாளை நேரில் ஆஜராகுமாறு கனிமொழிக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கனிமொழி இல்லத்தில் ஆலோசனை:

இந் நிலையில் கனிமொழியின் இல்லத்தில் சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகின்றன.

சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள கனிமொழியின் இல்லத்தில் கடந்த சில நாள்களாக பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமலாக்கப் பிரிவுக்கு ராடியா லஞ்சம் தர முயன்ற வழக்கு:

இந் நிலையில் 2ஜி வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு உபேந்திர ராய் என்ற பத்திரிகையாளர் மூலமாக நீரா ராடியா ரூ. 2 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதில் முதற்கட்ட விசாரணையை சிபிஐ துவக்கிவிட்டது.

கனிமொழிக்கு அமலாக்கப் பிரிவு சம்மன்-நாளை ஆஜராக உத்தரவு

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு முதல்வர் கருணாநிதியின் மகளும் திமுக ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழிக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய கலைஞர் டி.வியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார், ஸ்வான் டெலிகாம் நிர்வாகி உஸ்மான் பல்வாவின் சகோதரர் ஆசிப் பல்வா, குசேகாவோன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவனத்தின் இயக்குனர் ராஜீவ் அகர்வால், சினியுக் நிறுவன இயக்குனர் கரீம் மொரானி ஆகியோருக்கும் சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன.

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act-PMLA) கீழ் இந்த சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் பணப் பரிவர்த்தனைகள், வருவாய் ஆதாரங்கள், சொத்துகள் பற்றிய ஆவணங்களையும் கனிமொழி உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் முறைகேடாக லாபமடைந்த டி.பி.ரியால்டி நிறுவனம், தனது குசேகாவோன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவனம் மற்றும் சினியுக் நிறுவனம் ஆகிய துணை நிறுவனங்கள் மூலமாக கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி நிதியுதவி அளித்தது.

இது தொடர்பாக கலைஞர் டி.வியில் தலா 20 சதவீத பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி, சரத்குமார் ஆகியோரிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரிப்பர் என்று தெரிகிறது.

இந்த வழக்கை ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ அமைப்பும் விசாரித்து வருவதும், சிபிஐ குற்றப் பத்திரிக்கையில் பெயர் சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி நாளை மறுதினம், 6ம் தேதி, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் நாளை நேரில் ஆஜராகுமாறு கனிமொழிக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கனிமொழி இல்லத்தில் ஆலோசனை:

இந் நிலையில் கனிமொழியின் இல்லத்தில் சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகின்றன.

சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள கனிமொழியின் இல்லத்தில் கடந்த சில நாள்களாக பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமலாக்கப் பிரிவுக்கு ராடியா லஞ்சம் தர முயன்ற வழக்கு:

இந் நிலையில் 2ஜி வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு உபேந்திர ராய் என்ற பத்திரிகையாளர் மூலமாக நீரா ராடியா ரூ. 2 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதில் முதற்கட்ட விசாரணையை சிபிஐ துவக்கிவிட்டது.

சென்னை: சட்டம் தனது கடமையை ஒழுங்காக செய்வதற்கும், மத்திய புலனாய்வுத் துறை தங்கு தடையின்றி ஸ்பக்ட்ரம் ஊழலில் விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும், உச்சநீதிமன்றமே நேரடியாக தலையிட்டு இந்த விசாரணையை கண்காணித்து வருவதால் அத்தகைய விசாரணைக்கு குந்தகம் ஏற்படாமல் இருக்கவும், குற்றச்சாட்டு எழுந்தவுடன் பதவி விலக வேண்டும் என்கின்ற அரசியல் நாகரீகத்தை கருதியும், தமிழ்நாட்டின் இன்றைய முதல்வராக உள்ள கருணாநிதி, முதல்வர் பதவியில் இருந்து வெளியேற வேண்டும் அல்லது அவரை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் நடைபெற்ற ஊழல் சம்பந்தமாக அதன் தலைவராக இருந்த காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் கல்மாடி மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வழக்கம்போல் காங்கிரஸ் கட்சியும் அவரை அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இடைநீக்கம் செய்துள்ளது.

ஒவ்வொரு முறையும் முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதும், அவ்வப்போது அரசியல் கட்சிகள் இடைநீக்கம் செய்வதும், அதற்குப் பிறகு அந்த வழக்குகள் என்ன ஆயின என்பதும் இதுவரையில் புரியாத புதிராகவே உள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் வயதாகி இறந்துள்ளார்களே தவிர, தண்டிக்கப்பட்டு சிறைக்கு சென்றதாக வரலாறு இல்லை. அந்த அளவுக்கு ஊழல் வழக்குகளில் காலதாமதம் நீடிப்பதுதான் வரலாறு.

ஊழல் குற்றம் சாட்டப்பட்டவுடன், ஊழல் செய்து அவர்கள் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களையும், சேமிப்பு மற்றும் முதலீடு செய்துள்ள கோடிக்கணக்கான ரூபாய்களையும் உடனடியாக இந்திய அரசு முடக்கி வைக்க வேண்டும்.

தொலைபேசி கட்டணம் செலுத்தவில்லை என்றால் தொலைபேசி துண்டிக்கப்படுகிறது. மின்சாரக் கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. வருமான வரி சோதனை என்றால் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுகின்றன.

பொதுமக்களுக்கு இத்தகைய உடனடி தண்டனையை வழங்குகிற மத்திய, மாநில அரசுகள் ஊழல் புரிந்து கோடிக்கணக்கான ரூபாய்களை வங்கிகளிலும், நிலங்களிலும், கட்டிடங்களிலும், கம்பெனி பங்குகளிலும், வெளிநாட்டு வங்கிகளிலும் போட்டு வைத்திருப்பதை உடனடியாக ஏன் முடக்கக் கூடாது என்பதே எனது கேள்வி.

அவற்றை அப்படியே விட்டு வைப்பதால் அந்த ஊழல் பணத்தைக் கொண்டு பெரிய பெரிய வக்கீல்களை நியமித்து வழக்குகளில் காலதாமதம் செய்கின்றனர் அல்லது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வழக்குகளை முடக்கிப் போடுகின்றனர்.

அந்த ஊழல் பணத்தை வைத்து தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் கொடுத்து அதிகாரத்தையும் கைப்பற்றுகின்றனர். ஜனநாயகமே ஊழல்நாயகமாக ஆகிவிடுவதை இந்திய அரசு ஏன் தடுக்கவில்லை.

ஒன்றே முக்கால் லட்சம் கோடிக்கு மேல் இந்திய அரசுக்கு வருவாய் இழப்பை தந்த 2ஜி அலைக்கற்றை ஊழலில் மத்திய அமைச்சராக இருந்த ராசா மீது மத்திய புலனாய்வுத் துறை குற்றம் சாட்டியது. வேறு வழியின்றி அமைச்சர் பதவியில் இருந்து ராசா விலக நேர்ந்தது. இன்று முக்கிய குற்றவாளியாக தில்லி திகார் சிறையில் இருக்கிறார்.

இந்த ஊழல் பணத்தில் 214 கோடி ரூபாய் கலைஞர் டிவி ஆரம்பிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது மத்திய புலனாய்வுத் துறை நேற்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த துணை குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. கருணாநிதியின் மகள் கனிமொழி இதில் கூட்டுச் சதியாளர் என்று கூறப்பட்டுள்ளார்.

கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையார் கலைஞர் டிவியில் 60 சதவிகிதப் பங்கு வகித்தும் கூட அவரை மத்திய புலனாய்வுத் துறை குற்றச்சாட்டில் சேர்க்கவில்லை. அவரை இயங்காத பங்குதாரர் என்று கூறி மத்திய புலனாய்வுத் துறை சேர்க்கவில்லை.

20 சதவிகிதப் பங்கினை பெற்றுள்ள கனிமொழி எம்.பி., சரத்குமார் ரெட்டி ஆகியோர் குற்றச்சாட்டில் சேர்க்கப்பட்டுள்ளபோது, அதைப் போல மும்மடங்கான 60 சதவிகித பெரும்பான்மை பங்கு வகிக்கும் தயாளு அம்மையாரையும் முறைப்படி சேர்க்கப்பட்டிருக்க வேண்டாமா?

எவ்வாறு மத்திய அமைச்சர் பதவியில் ராசா நீடித்தால் இந்த இமாலய ஊழலில் விசாரணைக்கு குந்தகம் ஏற்படுமோ, அதே போன்று கலைஞர் டிவி மீது இந்த 214 கோடி ரூபாய் தரப்பட்டுள்ள வழக்கு பாய்வதால் கருணாநிதி தமிழ்நாட்டின் முதல்வராக நீடிப்பதன் மூலம் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும், ஊழல் விசாரணை தொடர்வதற்கும், ஊழல் பேர்வழிகளை கண்டறிந்து உடனடியாக தண்டனை தருவதற்கும் ஒரு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சட்டம் தனது கடமையை ஒழுங்காக செய்வதற்கும், மத்திய புலனாய்வுத் துறை தங்கு தடையின்றி இந்த இமாலய ஊழலில் விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும், உச்சநீதிமன்றமே நேரடியாக தலையிட்டு இந்த விசாரணையை கண்காணித்து வருவதால் அத்தகைய விசாரணைக்கு குந்தகம் ஏற்படாமல் இருக்கவும், குற்றச்சாட்டு எழுந்தவுடன் பதவி விலக வேண்டும் என்கின்ற அரசியல் நாகரீகத்தை கருதியும், தமிழ்நாட்டின் இன்றைய முதல்வராக உள்ள கருணாநிதி, முதல்வர் பதவியில் இருந்து வெளியேற வேண்டும் அல்லது இந்திய அரசு மக்கள் நலனையும், சட்டத்தின் ஆட்சியையும் கருத்தில் கொண்டு நீதியை நிலைநாட்ட கருணாநிதி அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

ஸ்பெக்ட்ரம் விசாரணை முறையாக நடக்க கருணாநிதி அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்-விஜயகாந்த்

சென்னை: சட்டம் தனது கடமையை ஒழுங்காக செய்வதற்கும், மத்திய புலனாய்வுத் துறை தங்கு தடையின்றி ஸ்பக்ட்ரம் ஊழலில் விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும், உச்சநீதிமன்றமே நேரடியாக தலையிட்டு இந்த விசாரணையை கண்காணித்து வருவதால் அத்தகைய விசாரணைக்கு குந்தகம் ஏற்படாமல் இருக்கவும், குற்றச்சாட்டு எழுந்தவுடன் பதவி விலக வேண்டும் என்கின்ற அரசியல் நாகரீகத்தை கருதியும், தமிழ்நாட்டின் இன்றைய முதல்வராக உள்ள கருணாநிதி, முதல்வர் பதவியில் இருந்து வெளியேற வேண்டும் அல்லது அவரை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் நடைபெற்ற ஊழல் சம்பந்தமாக அதன் தலைவராக இருந்த காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் கல்மாடி மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வழக்கம்போல் காங்கிரஸ் கட்சியும் அவரை அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இடைநீக்கம் செய்துள்ளது.

ஒவ்வொரு முறையும் முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதும், அவ்வப்போது அரசியல் கட்சிகள் இடைநீக்கம் செய்வதும், அதற்குப் பிறகு அந்த வழக்குகள் என்ன ஆயின என்பதும் இதுவரையில் புரியாத புதிராகவே உள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் வயதாகி இறந்துள்ளார்களே தவிர, தண்டிக்கப்பட்டு சிறைக்கு சென்றதாக வரலாறு இல்லை. அந்த அளவுக்கு ஊழல் வழக்குகளில் காலதாமதம் நீடிப்பதுதான் வரலாறு.

ஊழல் குற்றம் சாட்டப்பட்டவுடன், ஊழல் செய்து அவர்கள் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களையும், சேமிப்பு மற்றும் முதலீடு செய்துள்ள கோடிக்கணக்கான ரூபாய்களையும் உடனடியாக இந்திய அரசு முடக்கி வைக்க வேண்டும்.

தொலைபேசி கட்டணம் செலுத்தவில்லை என்றால் தொலைபேசி துண்டிக்கப்படுகிறது. மின்சாரக் கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. வருமான வரி சோதனை என்றால் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுகின்றன.

பொதுமக்களுக்கு இத்தகைய உடனடி தண்டனையை வழங்குகிற மத்திய, மாநில அரசுகள் ஊழல் புரிந்து கோடிக்கணக்கான ரூபாய்களை வங்கிகளிலும், நிலங்களிலும், கட்டிடங்களிலும், கம்பெனி பங்குகளிலும், வெளிநாட்டு வங்கிகளிலும் போட்டு வைத்திருப்பதை உடனடியாக ஏன் முடக்கக் கூடாது என்பதே எனது கேள்வி.

அவற்றை அப்படியே விட்டு வைப்பதால் அந்த ஊழல் பணத்தைக் கொண்டு பெரிய பெரிய வக்கீல்களை நியமித்து வழக்குகளில் காலதாமதம் செய்கின்றனர் அல்லது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வழக்குகளை முடக்கிப் போடுகின்றனர்.

அந்த ஊழல் பணத்தை வைத்து தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் கொடுத்து அதிகாரத்தையும் கைப்பற்றுகின்றனர். ஜனநாயகமே ஊழல்நாயகமாக ஆகிவிடுவதை இந்திய அரசு ஏன் தடுக்கவில்லை.

ஒன்றே முக்கால் லட்சம் கோடிக்கு மேல் இந்திய அரசுக்கு வருவாய் இழப்பை தந்த 2ஜி அலைக்கற்றை ஊழலில் மத்திய அமைச்சராக இருந்த ராசா மீது மத்திய புலனாய்வுத் துறை குற்றம் சாட்டியது. வேறு வழியின்றி அமைச்சர் பதவியில் இருந்து ராசா விலக நேர்ந்தது. இன்று முக்கிய குற்றவாளியாக தில்லி திகார் சிறையில் இருக்கிறார்.

இந்த ஊழல் பணத்தில் 214 கோடி ரூபாய் கலைஞர் டிவி ஆரம்பிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது மத்திய புலனாய்வுத் துறை நேற்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த துணை குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. கருணாநிதியின் மகள் கனிமொழி இதில் கூட்டுச் சதியாளர் என்று கூறப்பட்டுள்ளார்.

கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையார் கலைஞர் டிவியில் 60 சதவிகிதப் பங்கு வகித்தும் கூட அவரை மத்திய புலனாய்வுத் துறை குற்றச்சாட்டில் சேர்க்கவில்லை. அவரை இயங்காத பங்குதாரர் என்று கூறி மத்திய புலனாய்வுத் துறை சேர்க்கவில்லை.

20 சதவிகிதப் பங்கினை பெற்றுள்ள கனிமொழி எம்.பி., சரத்குமார் ரெட்டி ஆகியோர் குற்றச்சாட்டில் சேர்க்கப்பட்டுள்ளபோது, அதைப் போல மும்மடங்கான 60 சதவிகித பெரும்பான்மை பங்கு வகிக்கும் தயாளு அம்மையாரையும் முறைப்படி சேர்க்கப்பட்டிருக்க வேண்டாமா?

எவ்வாறு மத்திய அமைச்சர் பதவியில் ராசா நீடித்தால் இந்த இமாலய ஊழலில் விசாரணைக்கு குந்தகம் ஏற்படுமோ, அதே போன்று கலைஞர் டிவி மீது இந்த 214 கோடி ரூபாய் தரப்பட்டுள்ள வழக்கு பாய்வதால் கருணாநிதி தமிழ்நாட்டின் முதல்வராக நீடிப்பதன் மூலம் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும், ஊழல் விசாரணை தொடர்வதற்கும், ஊழல் பேர்வழிகளை கண்டறிந்து உடனடியாக தண்டனை தருவதற்கும் ஒரு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சட்டம் தனது கடமையை ஒழுங்காக செய்வதற்கும், மத்திய புலனாய்வுத் துறை தங்கு தடையின்றி இந்த இமாலய ஊழலில் விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும், உச்சநீதிமன்றமே நேரடியாக தலையிட்டு இந்த விசாரணையை கண்காணித்து வருவதால் அத்தகைய விசாரணைக்கு குந்தகம் ஏற்படாமல் இருக்கவும், குற்றச்சாட்டு எழுந்தவுடன் பதவி விலக வேண்டும் என்கின்ற அரசியல் நாகரீகத்தை கருதியும், தமிழ்நாட்டின் இன்றைய முதல்வராக உள்ள கருணாநிதி, முதல்வர் பதவியில் இருந்து வெளியேற வேண்டும் அல்லது இந்திய அரசு மக்கள் நலனையும், சட்டத்தின் ஆட்சியையும் கருத்தில் கொண்டு நீதியை நிலைநாட்ட கருணாநிதி அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தனிக்கோர்ட்டில் நடந்து வரும் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையை ஒத்திவைப்பு ஏதுமின்றி தினசரி நடத்துமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மத்திய அரசின் ஆட்சேபணையையும் மீறி, இந்த வழக்கின் சிறப்பு அரசு வக்கீலாக யு.யு.லலித்தை நியமிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.


ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பான எந்த மனுவையும் எந்த கோர்ட்டும் விசாரணைக்கு ஏற்கக்கூடாது என்றும், அத்தகைய மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில்தான் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


ஸ்பெக்ட்ரம் வழக்கில், வருகிற 24ந் தேதி துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சி.பி.ஐ. தெரிவித்தது. இதையடுத்து, அடுத்தகட்ட விசாரணையை 26ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

சிறப்பு வக்கீல் நியமனம்: ஸ்பெக்ட்ரம் வழக்கை தினசரி நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு

தனிக்கோர்ட்டில் நடந்து வரும் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையை ஒத்திவைப்பு ஏதுமின்றி தினசரி நடத்துமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மத்திய அரசின் ஆட்சேபணையையும் மீறி, இந்த வழக்கின் சிறப்பு அரசு வக்கீலாக யு.யு.லலித்தை நியமிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.


ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பான எந்த மனுவையும் எந்த கோர்ட்டும் விசாரணைக்கு ஏற்கக்கூடாது என்றும், அத்தகைய மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில்தான் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


ஸ்பெக்ட்ரம் வழக்கில், வருகிற 24ந் தேதி துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சி.பி.ஐ. தெரிவித்தது. இதையடுத்து, அடுத்தகட்ட விசாரணையை 26ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா அவரது உதவியாளர் சந்தோலியா, தொலை தொடர்பு முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ஸ்வான் டெலிகாம் உரிமையாளர் உஸ்மான் பல்வா ஆகிய 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை சிபிஐ அழைத்து விசாரித்தது. 2 தொலை தொடர்பு நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் மார்ச் 31-ந் தேதிக்குள் குற்ற பத்திரிகையை தாக்கல் செய்யவேண்டும் என்று சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் விசாரணை இன்னும் முடிவடையாததால் முதல்கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐ முடிவு செய்தது. அந்த குற்றப்பத்திரிகையை தயார் செய்யும் பணியில் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

தற்போது முதல் குற்றப்பத்திரிகை தயாரிப்பு பணி முடிந்துவிட்டது. டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்பு இந்த குற்றப் பத்திரிகையை ஓரிரு நாட்களில் தாக்கல் செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளது. முதல் குற்றப்பத்திரிகையில் யார், யார் பெயர் இடம் பெற்றிருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கைதான 4 பேரின் பெயர் இடம்பெறும் என்பது உறுதி ஆகி உள்ளது. அவர்களுக்கு உதவியதாக மேலும் சிலரது பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தபிறகு தொடர்ந்து விசாரணை நடைபெறும். செவ்வாய்க்கிழமை இந்த விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வர்களின் பெயர்களுடன், அவர்களுக்கும் ஸ்பெக்ட்ரம் முறைகேடுக்கும் உள்ள தொடர்பை உறுதிபடுத்தும் ஆவணங்களும் இடம் பெற்றிருக்கும். ஆனால் எத்தனை கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்பது குற்றப்பத்திரிகையில் இடம் பெறாது.

ஸ்பெக்ட்ரம் நிதி இழப்பு குறித்து டிராய் அமைப்பு ஆய்வு செய்து வருகிறது. அந்த அமைப்பின் முடிவுக்குப்பிறகே இழப்பு குறித்து இறுதி முடிவு எடுத்து குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படும்.

ஸ்பெக்ட்ரம் வழக்கு: சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தயாரிப்பு பணி முடிந்தது; ஆதாரங்களுடன் கோர்ட்டில் தாக்கலாகிறது

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா அவரது உதவியாளர் சந்தோலியா, தொலை தொடர்பு முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ஸ்வான் டெலிகாம் உரிமையாளர் உஸ்மான் பல்வா ஆகிய 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை சிபிஐ அழைத்து விசாரித்தது. 2 தொலை தொடர்பு நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் மார்ச் 31-ந் தேதிக்குள் குற்ற பத்திரிகையை தாக்கல் செய்யவேண்டும் என்று சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் விசாரணை இன்னும் முடிவடையாததால் முதல்கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐ முடிவு செய்தது. அந்த குற்றப்பத்திரிகையை தயார் செய்யும் பணியில் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

தற்போது முதல் குற்றப்பத்திரிகை தயாரிப்பு பணி முடிந்துவிட்டது. டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்பு இந்த குற்றப் பத்திரிகையை ஓரிரு நாட்களில் தாக்கல் செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளது. முதல் குற்றப்பத்திரிகையில் யார், யார் பெயர் இடம் பெற்றிருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கைதான 4 பேரின் பெயர் இடம்பெறும் என்பது உறுதி ஆகி உள்ளது. அவர்களுக்கு உதவியதாக மேலும் சிலரது பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தபிறகு தொடர்ந்து விசாரணை நடைபெறும். செவ்வாய்க்கிழமை இந்த விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வர்களின் பெயர்களுடன், அவர்களுக்கும் ஸ்பெக்ட்ரம் முறைகேடுக்கும் உள்ள தொடர்பை உறுதிபடுத்தும் ஆவணங்களும் இடம் பெற்றிருக்கும். ஆனால் எத்தனை கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்பது குற்றப்பத்திரிகையில் இடம் பெறாது.

ஸ்பெக்ட்ரம் நிதி இழப்பு குறித்து டிராய் அமைப்பு ஆய்வு செய்து வருகிறது. அந்த அமைப்பின் முடிவுக்குப்பிறகே இழப்பு குறித்து இறுதி முடிவு எடுத்து குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படும்.

புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, வரும் 31ம் தேதிக்குள் தி.மு.க., எம்.பி.,யும், முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழியிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தலாம் என, கூறப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டிற்கு விரைவில் பதிலளிக்க வேண்டிய சூழ்நிலை சி.பி.ஐ.,க்கு ஏற்பட்டிருக்கிறது.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா உட்பட சிலர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அமைச்சராக இருந்த போது, சுவான் டெலிகாம் நிறுவனத்திற்கு ராஜா சலுகை காட்டியதாகவும், அதற்கு பிரதிபலனாக கலைஞர் "டிவி'க்கு குறிப்பிட்ட தொகையை சுவான் நிறுவனத்தின் தலைவர் பல்வா வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவின்படி, வரும் 31ம் தேதிக்குள் ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதனால், அதற்கு முன்பாக முக்கிய பிரமுகர்கள் சிலரிடம் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மோசடி தொடர்பாக விசாரணை நடத்த சி.பி.ஐ., அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் குறிப்பிடத்தக்கவர் ராஜ்யசபா எம்.பி.,யும், முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி. அவரிடம் வரும் 31ம் தேதிக்குள் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தலாம்.

இது தொடர்பாக சி.பி.ஐ., உயர் அதிகாரி ஒருவர் ஐ.ஏ.என்.எஸ்., செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியிடம் விசாரணை நடத்துவது தவிர்க்க முடியாதது. அவரிடம் மார்ச் 31ம் தேதிக்குள் விசாரணை நடத்தப்படும். இது தொடர்பாக கனிமொழிக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும். சுவான் டெலிகாம் நிறுவன புரமோட்டர் ஷாகித் பல்வாவின் டிபி ரியாலிட்டி நிறுவனத்திடம் இருந்து கலைஞர் "டிவி'க்கு 200 கோடி ரூபாய் வழங்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படும். கலைஞர் "டிவி'யில் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களுக்கு பங்கு உள்ளது. குறிப்பாக கனிமொழிக்கு 20 சதவீத பங்கு உள்ளது' என்றார். இருந்தாலும், அதே கலைஞர் "டிவி'யின் மற்றொரு பங்குதாரராக உள்ள கருணாநிதியின் மனைவி தயாளுவிடம் விசாரணை நடத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை. அவர் அதில், "சிலீப்பிங் பார்ட்னர்' என்ற வகையில் அவரை விசாரிக்க வாய்ப்பில்லை என்று சி.பி.ஐ., தரப்பில் கூறப்படுகிறது.

கனிமொழியிடம் விசாரிப்பதற்கு முன்னதாக கலைஞர் "டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமாரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக கடந்த 8ம் தேதியே அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே சி.பி.ஐ., நடத்திய விசாரணையில், பல்வாவிடம் இருந்து பணம் ஏதும் பெறவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சி.பி.ஐ., விசாரிப்பதால், விசாரணைத் தகவல்கள், அது குறித்த டைரிக் குறிப்புகளை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன், காங்கிரஸ் - தி.மு.க., இடையே நடந்த "சீட்' ஒதுக்கீடு பிரச்னையின் போது, தி.மு.க., அமைச்சர்கள் ராஜினாமா முதலில் காங்கிரசை வியப்படைய வைத்தது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் நடத்தப்படும் விசாரணை சற்று மெதுவாகச் செல்ல வேண்டும் என்ற கருத்தை தி.மு.க., தரப்பில் முன்வைத்ததாகவும், இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா கோபமடைந்து முதலில் இவர்களுடைய குழுவுடன் பேச முன்வரவில்லை என்றும் கூறப்பட்டது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தங்கள் கைகள் கட்டப்பட்டிருக்கிறது என்றும், சுப்ரீம் கோர்ட்டிற்கு பதிலளிக்கும் நிலை இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டியதாகக் கூறப்பட்டது. ஆனால், தற்போது ஜே.பி.சி., விசாரணைக்கு அனுமதி, மறுபக்கம் பி.ஏ.சி., எனப்படும் பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழு ஆகியவை தீவிரமாக இருப்பதால், சி.பி.ஐ., மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் தலையிட முடியாத நிலை அரசுக்கு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

24ம் தேதி ஆலோசனை: "2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் முதல் கூட்டம், வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. இத்தகவலை, குழுவின் தலைவர் பி.சி.சாக்கோ கூறினார். இந்த கூட்டத்தில் குழுவினர் செய்ய வேண்டியது என்ன, யார் யாரிடம் விசாரணை நடத்துவது, என்னென்ன ஆவணங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்படும். 30 உறுப்பினர்களைக் கொண்ட பார்லிமென்ட் கூட்டுக்குழு, பார்லிமென்டின் அடுத்த கூட்டத்தொடர் முடிவடைவதற்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: கனிமொழியிடம் விரைவில் சி.பி.ஐ., விசாரணை

புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, வரும் 31ம் தேதிக்குள் தி.மு.க., எம்.பி.,யும், முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழியிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தலாம் என, கூறப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டிற்கு விரைவில் பதிலளிக்க வேண்டிய சூழ்நிலை சி.பி.ஐ.,க்கு ஏற்பட்டிருக்கிறது.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா உட்பட சிலர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அமைச்சராக இருந்த போது, சுவான் டெலிகாம் நிறுவனத்திற்கு ராஜா சலுகை காட்டியதாகவும், அதற்கு பிரதிபலனாக கலைஞர் "டிவி'க்கு குறிப்பிட்ட தொகையை சுவான் நிறுவனத்தின் தலைவர் பல்வா வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவின்படி, வரும் 31ம் தேதிக்குள் ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதனால், அதற்கு முன்பாக முக்கிய பிரமுகர்கள் சிலரிடம் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மோசடி தொடர்பாக விசாரணை நடத்த சி.பி.ஐ., அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் குறிப்பிடத்தக்கவர் ராஜ்யசபா எம்.பி.,யும், முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி. அவரிடம் வரும் 31ம் தேதிக்குள் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தலாம்.

இது தொடர்பாக சி.பி.ஐ., உயர் அதிகாரி ஒருவர் ஐ.ஏ.என்.எஸ்., செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியிடம் விசாரணை நடத்துவது தவிர்க்க முடியாதது. அவரிடம் மார்ச் 31ம் தேதிக்குள் விசாரணை நடத்தப்படும். இது தொடர்பாக கனிமொழிக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும். சுவான் டெலிகாம் நிறுவன புரமோட்டர் ஷாகித் பல்வாவின் டிபி ரியாலிட்டி நிறுவனத்திடம் இருந்து கலைஞர் "டிவி'க்கு 200 கோடி ரூபாய் வழங்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படும். கலைஞர் "டிவி'யில் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களுக்கு பங்கு உள்ளது. குறிப்பாக கனிமொழிக்கு 20 சதவீத பங்கு உள்ளது' என்றார். இருந்தாலும், அதே கலைஞர் "டிவி'யின் மற்றொரு பங்குதாரராக உள்ள கருணாநிதியின் மனைவி தயாளுவிடம் விசாரணை நடத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை. அவர் அதில், "சிலீப்பிங் பார்ட்னர்' என்ற வகையில் அவரை விசாரிக்க வாய்ப்பில்லை என்று சி.பி.ஐ., தரப்பில் கூறப்படுகிறது.

கனிமொழியிடம் விசாரிப்பதற்கு முன்னதாக கலைஞர் "டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமாரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக கடந்த 8ம் தேதியே அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே சி.பி.ஐ., நடத்திய விசாரணையில், பல்வாவிடம் இருந்து பணம் ஏதும் பெறவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சி.பி.ஐ., விசாரிப்பதால், விசாரணைத் தகவல்கள், அது குறித்த டைரிக் குறிப்புகளை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன், காங்கிரஸ் - தி.மு.க., இடையே நடந்த "சீட்' ஒதுக்கீடு பிரச்னையின் போது, தி.மு.க., அமைச்சர்கள் ராஜினாமா முதலில் காங்கிரசை வியப்படைய வைத்தது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் நடத்தப்படும் விசாரணை சற்று மெதுவாகச் செல்ல வேண்டும் என்ற கருத்தை தி.மு.க., தரப்பில் முன்வைத்ததாகவும், இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா கோபமடைந்து முதலில் இவர்களுடைய குழுவுடன் பேச முன்வரவில்லை என்றும் கூறப்பட்டது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தங்கள் கைகள் கட்டப்பட்டிருக்கிறது என்றும், சுப்ரீம் கோர்ட்டிற்கு பதிலளிக்கும் நிலை இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டியதாகக் கூறப்பட்டது. ஆனால், தற்போது ஜே.பி.சி., விசாரணைக்கு அனுமதி, மறுபக்கம் பி.ஏ.சி., எனப்படும் பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழு ஆகியவை தீவிரமாக இருப்பதால், சி.பி.ஐ., மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் தலையிட முடியாத நிலை அரசுக்கு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

24ம் தேதி ஆலோசனை: "2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் முதல் கூட்டம், வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. இத்தகவலை, குழுவின் தலைவர் பி.சி.சாக்கோ கூறினார். இந்த கூட்டத்தில் குழுவினர் செய்ய வேண்டியது என்ன, யார் யாரிடம் விசாரணை நடத்துவது, என்னென்ன ஆவணங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்படும். 30 உறுப்பினர்களைக் கொண்ட பார்லிமென்ட் கூட்டுக்குழு, பார்லிமென்டின் அடுத்த கூட்டத்தொடர் முடிவடைவதற்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரணை நடத்த, பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைப்பது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்குழுவில், லோக்சபா எம்.பி.,க்கள், 20 பேரும், ராஜ்யசபா எம்.பி.,க்கள், 10 பேரும் இடம்பெறுவார்கள். தமிழகத்தைச் சேர்ந்த டி.ஆர்.பாலு, தம்பிதுரை இடம்பெற்றுள்ளனர்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரிக்க, பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்க வேண்டுமென, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதை ஏற்றுக் கொண்டு, கூட்டுக்குழு அமைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதை, பிரதமர் மன்மோகன் சிங், நேற்று முன்தினம், பார்லிமென்டில் முறைப்படி அறிவித்தார். இந்நிலையில், கூட்டுக்குழு அமைக்க வழி வகை செய்யும் தீர்மானத்தை, லோக்சபாவில், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி முன்மொழிந்து பேசினார்.
அந்த தீர்மானத்தில், கூட்டுக்குழு அமைப்பது பற்றியும், அதற்குண்டான நடைமுறைகள், விதிமுறைகள் உள்ளிட்ட பல விஷயங்கள் இடம் பெற்றுள்ளன. அதன்படி, அந்த குழுவில், லோக்சபா எம்.பி.,க்கள், 20 பேரும், ராஜ்யசபா எம்.பி.,க்கள், 10 பேரும், மொத்தம், 30 பேர் இடம்பெறவுள்ளனர். முதலில், 20 பேர் கொண்ட குழு அமையும் என கூறப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சிகள் கோரிக்கையை அடுத்து, தற்போது, 30 உறுப்பினர் கொண்ட குழு அமைக்கப்படும். இதன் தலைவரை, சபாநாயகர் மீராகுமார் தேர்வு செய்வார். காங்கிரஸ் எம்.பி.,யான பி.சி.சாக்கோ பெயர் பரவலாகப் பேசப்படுகிறது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து, 1998 முதல், 2009ம் ஆண்டு வரையிலான அடுத்தடுத்த அரசுகளின் கொள்கை முடிவுகள், அவற்றை அமல்படுத்திய விதம் உள்ளிட்ட, பல்வேறு விஷயங்களையும் இந்த குழு ஆராயும். தொலைத்தொடர்பு லைசென்ஸ்கள், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, அதற்கான விலை நிர்ணயம் ஆகிய விஷயங்களும் ஆராயப்படும்.
இவற்றில் ஏதாவது குறைகள், குற்றங்கள், முரண்பாடுகள் இருந்தால், அவற்றை, இக்குழு சுட்டிக்காட்டும். தவிர, இந்த குறைபாடுகளுக்கு தீர்வாக பரிந்துரைகள், யோசனைகளையும் அளிக்கும். இக்குழு அமைக்கப்பட்ட தினத்தில் இருந்து, குழுவின் செயல்பாடுகள் துவங்கும். அரசு மற்றும் புலனாய்வு அமைப்புகள், போதுமான ஒத்துழைப்பை இக்குழுவுக்கு வழங்கும். மூன்றில் ஒருபங்கு உறுப்பினர்கள் இருந்தால் தான் கூட்டுக்குழு கூட்டம் நடைபெறும்.
அடுத்த பார்லிமென்ட் கூட்டத்தொடரின் இறுதிக்குள், இக்குழு தனது இறுதி அறிக்கையை அளிக்க வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. அடுத்த பார்லிமென்ட் கூட்டத்தொடர் என்பது, மழைக்கால கூட்டத் தொடர் தான்.
அந்த கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் வாக்கில் நிறைவடையும். அந்த வகையில், ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரணை அறிக்கையை, வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த குழு அளிக்க அதிக வாய்ப்புள்ளது. இந்த குழுவில் இடம்பெறும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் யார் யார் என்பது குறித்து, சில நாட்களில் தெரியவரும் நிலையில், இக்குழுவில் இடம்பெற்றுள்ள லோக்சபா எம்.பி..க்கள் பற்றிய விவரம்:
கி÷ஷார் சந்திரதேவ், பபன்சிங் கதோவார், ஜெய்பிரகாஷ் அகர்வால், திபீந்தர்சிங் ஹுடா, சாக்கோ, மணிஷ்திவாரி, நிர்மல் காத்ரி, அதிர் ரஞ்சன் சவுத்ரி, டி.ஆர்.பாலு, கல்யாண் பானர்ஜி, ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்கா, ஹரேன் பதக், கோபிநாத் முண்டே, சரத்யாதவ், தாராசிங் சவுகான், அகிலேஷ் யாதவ், குருதாஸ் தாஸ் குப்தா, அர்ஜுன் சரண்சேத்தி, தம்பிதுரை ஆகியோர்.
முன்னதாக, தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய அவை முன்னவர் பிரணாப், "ஒரு குறிப்பிட்ட கோரிக்கைக்காக பார்லிமென்ட் முடங்குவது என்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. முன்பு தெகல்கா விவகாரத்தில் அன்று அமைச்சராக இருந்த ஜேட்லி, ஜே.பி.சி., அமைப்பதை நிராகரித்தார்.
"ஒரு குழுவாக விசாரிப்பதை விட, பார்லிமென்டில் விவாதிக்கலாம்' என்றார். ஆனால், இன்று எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்ற அடிப்படையில், அவை முன்னவர் என்ற பொறுப்புடன் இது நிறைவேற்றப்படுகிறது' என்று குறிப்பிட்டார்.
இந்த விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், "நாங்கள் ஜே.பி.சி., வேண்டும் என்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானதா? அதுவும் எது முறையான கோரிக்கை, எது முறையற்றது என்பதை அறிந்த பிரணாப் இதை விளக்க வேண்டும்' என்றார்.
எதிர்க்கட்சியினர் போக்கை, "மாவோயிஸ்டுகள் போன்றவர்கள்' என, பிரணாப் சுட்டிக்காட்டி பேசியதை சுஷ்மா குறிப்பிட்ட போது, அதற்கு பதிலாக பிரணாப், "இடது சாரி தீவிரவாதிகள், பன்றிகளின் கூடாரம் பார்லிமென்ட் எனக் கூறுகின்றனர். ஆகவே, எல்லாரும் பொறுப்பாக நடப்பதே சரியான வழி' என, பதிலளித்தார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலை விசாரிக்க ஜே.பி.சி., : டி.ஆர்.பாலு, தம்பிதுரைக்கு இடம்

ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரணை நடத்த, பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைப்பது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்குழுவில், லோக்சபா எம்.பி.,க்கள், 20 பேரும், ராஜ்யசபா எம்.பி.,க்கள், 10 பேரும் இடம்பெறுவார்கள். தமிழகத்தைச் சேர்ந்த டி.ஆர்.பாலு, தம்பிதுரை இடம்பெற்றுள்ளனர்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரிக்க, பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்க வேண்டுமென, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதை ஏற்றுக் கொண்டு, கூட்டுக்குழு அமைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதை, பிரதமர் மன்மோகன் சிங், நேற்று முன்தினம், பார்லிமென்டில் முறைப்படி அறிவித்தார். இந்நிலையில், கூட்டுக்குழு அமைக்க வழி வகை செய்யும் தீர்மானத்தை, லோக்சபாவில், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி முன்மொழிந்து பேசினார்.
அந்த தீர்மானத்தில், கூட்டுக்குழு அமைப்பது பற்றியும், அதற்குண்டான நடைமுறைகள், விதிமுறைகள் உள்ளிட்ட பல விஷயங்கள் இடம் பெற்றுள்ளன. அதன்படி, அந்த குழுவில், லோக்சபா எம்.பி.,க்கள், 20 பேரும், ராஜ்யசபா எம்.பி.,க்கள், 10 பேரும், மொத்தம், 30 பேர் இடம்பெறவுள்ளனர். முதலில், 20 பேர் கொண்ட குழு அமையும் என கூறப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சிகள் கோரிக்கையை அடுத்து, தற்போது, 30 உறுப்பினர் கொண்ட குழு அமைக்கப்படும். இதன் தலைவரை, சபாநாயகர் மீராகுமார் தேர்வு செய்வார். காங்கிரஸ் எம்.பி.,யான பி.சி.சாக்கோ பெயர் பரவலாகப் பேசப்படுகிறது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து, 1998 முதல், 2009ம் ஆண்டு வரையிலான அடுத்தடுத்த அரசுகளின் கொள்கை முடிவுகள், அவற்றை அமல்படுத்திய விதம் உள்ளிட்ட, பல்வேறு விஷயங்களையும் இந்த குழு ஆராயும். தொலைத்தொடர்பு லைசென்ஸ்கள், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, அதற்கான விலை நிர்ணயம் ஆகிய விஷயங்களும் ஆராயப்படும்.
இவற்றில் ஏதாவது குறைகள், குற்றங்கள், முரண்பாடுகள் இருந்தால், அவற்றை, இக்குழு சுட்டிக்காட்டும். தவிர, இந்த குறைபாடுகளுக்கு தீர்வாக பரிந்துரைகள், யோசனைகளையும் அளிக்கும். இக்குழு அமைக்கப்பட்ட தினத்தில் இருந்து, குழுவின் செயல்பாடுகள் துவங்கும். அரசு மற்றும் புலனாய்வு அமைப்புகள், போதுமான ஒத்துழைப்பை இக்குழுவுக்கு வழங்கும். மூன்றில் ஒருபங்கு உறுப்பினர்கள் இருந்தால் தான் கூட்டுக்குழு கூட்டம் நடைபெறும்.
அடுத்த பார்லிமென்ட் கூட்டத்தொடரின் இறுதிக்குள், இக்குழு தனது இறுதி அறிக்கையை அளிக்க வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. அடுத்த பார்லிமென்ட் கூட்டத்தொடர் என்பது, மழைக்கால கூட்டத் தொடர் தான்.
அந்த கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் வாக்கில் நிறைவடையும். அந்த வகையில், ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரணை அறிக்கையை, வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த குழு அளிக்க அதிக வாய்ப்புள்ளது. இந்த குழுவில் இடம்பெறும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் யார் யார் என்பது குறித்து, சில நாட்களில் தெரியவரும் நிலையில், இக்குழுவில் இடம்பெற்றுள்ள லோக்சபா எம்.பி..க்கள் பற்றிய விவரம்:
கி÷ஷார் சந்திரதேவ், பபன்சிங் கதோவார், ஜெய்பிரகாஷ் அகர்வால், திபீந்தர்சிங் ஹுடா, சாக்கோ, மணிஷ்திவாரி, நிர்மல் காத்ரி, அதிர் ரஞ்சன் சவுத்ரி, டி.ஆர்.பாலு, கல்யாண் பானர்ஜி, ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்கா, ஹரேன் பதக், கோபிநாத் முண்டே, சரத்யாதவ், தாராசிங் சவுகான், அகிலேஷ் யாதவ், குருதாஸ் தாஸ் குப்தா, அர்ஜுன் சரண்சேத்தி, தம்பிதுரை ஆகியோர்.
முன்னதாக, தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய அவை முன்னவர் பிரணாப், "ஒரு குறிப்பிட்ட கோரிக்கைக்காக பார்லிமென்ட் முடங்குவது என்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. முன்பு தெகல்கா விவகாரத்தில் அன்று அமைச்சராக இருந்த ஜேட்லி, ஜே.பி.சி., அமைப்பதை நிராகரித்தார்.
"ஒரு குழுவாக விசாரிப்பதை விட, பார்லிமென்டில் விவாதிக்கலாம்' என்றார். ஆனால், இன்று எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்ற அடிப்படையில், அவை முன்னவர் என்ற பொறுப்புடன் இது நிறைவேற்றப்படுகிறது' என்று குறிப்பிட்டார்.
இந்த விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், "நாங்கள் ஜே.பி.சி., வேண்டும் என்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானதா? அதுவும் எது முறையான கோரிக்கை, எது முறையற்றது என்பதை அறிந்த பிரணாப் இதை விளக்க வேண்டும்' என்றார்.
எதிர்க்கட்சியினர் போக்கை, "மாவோயிஸ்டுகள் போன்றவர்கள்' என, பிரணாப் சுட்டிக்காட்டி பேசியதை சுஷ்மா குறிப்பிட்ட போது, அதற்கு பதிலாக பிரணாப், "இடது சாரி தீவிரவாதிகள், பன்றிகளின் கூடாரம் பார்லிமென்ட் எனக் கூறுகின்றனர். ஆகவே, எல்லாரும் பொறுப்பாக நடப்பதே சரியான வழி' என, பதிலளித்தார்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் லாபம் அடைந்த 
 
 டெலிபோன் நிறுவனங்களுக்கு
 
 விதிமுறைகளை மீறி
 
 ரூ.11 ஆயிரம் கோடி கடன்;
 
 பாங்கி அதிகாரிகளும் சிக்குகிறார்கள்2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சிங்வி, கங்குலி இருவரும் கூறுகையில், இந்த வழக்குக்காக சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும். இந்த முறைகேட்டில் தொடர்புடைய மிகப் பெரிய தொழில் நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தர விட்டனர்.

இதையடுத்து 2ஜி அலைக் கற்றை ஒதுக்கீட்டுக்கு முன் தொழில் நிறுவனங்கள் பெற்ற வங்கிக் கடன்கள் தொடர்பான பட்டியலை சி.பி.ஐ. வக்கீல் கே.கே. வேணுகோபால் தாக்கல் செய்தார். பிறகு அவர் கோர்ட்டில் கூறுகையில், 2ஜி அலைக்கற்றை உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு வங்கிகள் விதிகளை மீறி ரூ.11 ஆயிரம் கோடி வரை கடன்கள் கொடுத்துள்ளன என்றார். அவர் மேலும் கூறுகையில், இந்தியாவில் உள்ள 22 தொலைத் தொடர்பு வட்டங்களில் செயல்பட 122 உரிமங்கள் வழங்கப்பட்டன.

இதில் 110 உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள் தொலைத் தொடர்பில் எந்த முன் அனுபவமும் இல்லாதவை. அந்த தொழில் நிறுவனங்கள் பெரிய தொகைகளை விதிகளை மீறி பெற்றுள்ளன என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், விண்ணப்பங்களை சரியாக ஆய்வு செய்யாமல், விதிகளை மீறி வங்கிகள் எப்படி கடன் கொடுத்தன? தொலைத் தொடர்புத்துறைக்கு தொடர்பே இல்லாத நிறுவனம் கடன் வாங்கியது எப்படி? என்று கேள்வி எழுப்பினார்கள்.

வங்கிக் கடன்களை விதிகளை மீறி கொடுத்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து வங்கிக் கடன்கள் தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்த சி.பி.ஐ.யின் வங்கிப்பிரிவு தீர்மானித்துள்ளது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற தனியார் நிறுவனங்களில் யுனிடெக் என்ற நிறுவனம் மட்டும் அதிகபட்சமாக வங்கிகளில் இருந்து ரூ.10 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளது. இதில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மட்டும் ரூ.8050 கோடியை யுனிடெக் நிறுவனத்துக்கு கொடுத்துள்ளது.

கார்ப்பரேசன் வங்கி, அல காபாத் வங்கிகளிடம் இருந்து தலா ரூ.500 கோடியை யுனிடெக் நிறுவனம் கடனாக வாங்கி உள்ளது. சவுத் இந்தியன் வங்கியிடம் இருந்து ரூ.400 கோடி வாங்கி உள்ளது. கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் பாங்க் ஆகியவை தலா ரூ.120 கோடியை யுனிடெக்குக்கு கடனாக கொடுத்துள்ளன. ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி ரூ.100 கோடியையும், ஓரியண்டல் பாங்க், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, எஸ்.பாங்க் ஆகியவை தலா 70 கோடி ரூபாயை யுனிடெக் நிறுவனத்துக்கு கடனாக கொடுத்துள்ளன.

வங்கி அதிகாரிகள் விதிகளை மீறி கடன் கொடுத்தது பற்றி உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வழக்கை தொடுத்த மையத்தின் சார்பில் ஆஜரான பிரசாந்த் பூஷண் கேட்டுக் கொண்டார். இதையடுத்து வங்கி அதிகாரிகள் கடன் கொடுப்பதற்கு முன்பு பரிசீலனை செய்யாமல் போனது ஏன்? என்பது பற்றி விசாரணை நடைபெற உள்ளது. இந்த விசாரணையின் போது வங்கி அதிகாரிகள் சிக்குவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் லாபம் அடைந்த டெலிபோன் நிறுவனங்களுக்கு விதிமுறைகளை மீறி ரூ.11 ஆயிரம் கோடி கடன்; பாங்கி அதிகாரிகளும் சிக்குகிறார்கள்

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் லாபம் அடைந்த 
 
 டெலிபோன் நிறுவனங்களுக்கு
 
 விதிமுறைகளை மீறி
 
 ரூ.11 ஆயிரம் கோடி கடன்;
 
 பாங்கி அதிகாரிகளும் சிக்குகிறார்கள்2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சிங்வி, கங்குலி இருவரும் கூறுகையில், இந்த வழக்குக்காக சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும். இந்த முறைகேட்டில் தொடர்புடைய மிகப் பெரிய தொழில் நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தர விட்டனர்.

இதையடுத்து 2ஜி அலைக் கற்றை ஒதுக்கீட்டுக்கு முன் தொழில் நிறுவனங்கள் பெற்ற வங்கிக் கடன்கள் தொடர்பான பட்டியலை சி.பி.ஐ. வக்கீல் கே.கே. வேணுகோபால் தாக்கல் செய்தார். பிறகு அவர் கோர்ட்டில் கூறுகையில், 2ஜி அலைக்கற்றை உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு வங்கிகள் விதிகளை மீறி ரூ.11 ஆயிரம் கோடி வரை கடன்கள் கொடுத்துள்ளன என்றார். அவர் மேலும் கூறுகையில், இந்தியாவில் உள்ள 22 தொலைத் தொடர்பு வட்டங்களில் செயல்பட 122 உரிமங்கள் வழங்கப்பட்டன.

இதில் 110 உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள் தொலைத் தொடர்பில் எந்த முன் அனுபவமும் இல்லாதவை. அந்த தொழில் நிறுவனங்கள் பெரிய தொகைகளை விதிகளை மீறி பெற்றுள்ளன என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், விண்ணப்பங்களை சரியாக ஆய்வு செய்யாமல், விதிகளை மீறி வங்கிகள் எப்படி கடன் கொடுத்தன? தொலைத் தொடர்புத்துறைக்கு தொடர்பே இல்லாத நிறுவனம் கடன் வாங்கியது எப்படி? என்று கேள்வி எழுப்பினார்கள்.

வங்கிக் கடன்களை விதிகளை மீறி கொடுத்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து வங்கிக் கடன்கள் தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்த சி.பி.ஐ.யின் வங்கிப்பிரிவு தீர்மானித்துள்ளது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற தனியார் நிறுவனங்களில் யுனிடெக் என்ற நிறுவனம் மட்டும் அதிகபட்சமாக வங்கிகளில் இருந்து ரூ.10 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளது. இதில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மட்டும் ரூ.8050 கோடியை யுனிடெக் நிறுவனத்துக்கு கொடுத்துள்ளது.

கார்ப்பரேசன் வங்கி, அல காபாத் வங்கிகளிடம் இருந்து தலா ரூ.500 கோடியை யுனிடெக் நிறுவனம் கடனாக வாங்கி உள்ளது. சவுத் இந்தியன் வங்கியிடம் இருந்து ரூ.400 கோடி வாங்கி உள்ளது. கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் பாங்க் ஆகியவை தலா ரூ.120 கோடியை யுனிடெக்குக்கு கடனாக கொடுத்துள்ளன. ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி ரூ.100 கோடியையும், ஓரியண்டல் பாங்க், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, எஸ்.பாங்க் ஆகியவை தலா 70 கோடி ரூபாயை யுனிடெக் நிறுவனத்துக்கு கடனாக கொடுத்துள்ளன.

வங்கி அதிகாரிகள் விதிகளை மீறி கடன் கொடுத்தது பற்றி உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வழக்கை தொடுத்த மையத்தின் சார்பில் ஆஜரான பிரசாந்த் பூஷண் கேட்டுக் கொண்டார். இதையடுத்து வங்கி அதிகாரிகள் கடன் கொடுப்பதற்கு முன்பு பரிசீலனை செய்யாமல் போனது ஏன்? என்பது பற்றி விசாரணை நடைபெற உள்ளது. இந்த விசாரணையின் போது வங்கி அதிகாரிகள் சிக்குவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில் கைதான ஸ்வான் இயக்குனர் ஷாகித் உஸ்மான் பல்வா கலைஞர் டி.வியில் ரூ.214 கோடி முதலீடு செய்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. ஆனால், இதை இன்னும் ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்த சிபிஐ உறுதிப்படுத்தவில்லை.

இது குறித்து சிபிஐ கூடுதல் எஸ்பி விவேக் பிரியதர்ஷினி தனது அறிக்கையை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோரிடம் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

2009ம் ஆண்டில் பல்வாவுக்குச் சொந்தமான சினியுக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற துணை நிறுவனத்தில் இருந்து கலைஞர் டி.விக்கு ரூ.214 கோடி பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.

பல்வாவின் உறவினர்கள் இயக்குநர்களாக உள்ள டி.பி. ரியாலிட்டி குழுமத்தின் துணை நிறுவனங்களிடமிருந்து இந்த நிதி பெறப்பட்டு கலைஞர் டி.விக்கு தரப்பட்டுள்ளது.

இந்த ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ரூ.1,537 கோடிக்கு
2ஜி ஸ்பெக்ட்ரத்தை அப்போதைய அமைச்சர் ராசா ஒதுக்கினார். இதில் 45 சதவீதத்தை யுஏஇயைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனமான எடிசலாட் நிறுவனத்துக்கு ரூ.4,200 கோடிக்கு ஸ்வான் விற்று லாபம் ஈட்டியது.

இந் நிலையில் ஸ்வானின் உரிமையாளரான டி.பி.ரியாலிட்டி ரூ. 214 கோடியை கலைஞர் டிவிக்கு முதலீடாகத் தந்தது சந்தேகங்களை ஏற்படுத்துவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

ஆனால், இந்தப் பணத்தை 8 சதவீத வட்டிக் கடனாகவே வாங்கியதாகவும், பின்னர் சில பிரச்சனைகள் வந்ததால் அந்தப் பணத்தை வட்டியோடு திருப்பித் தந்துவிட்டதாகவும் கலைஞர் டிவி கூறியுள்ளது. இதை ஆவணங்கள் மூலம் உறுதியும்படுத்தியுள்ளது.

ஆனால், இந்தப் பணத்தை முதலில் வேறு வகையில் தந்துவிட்டு பின்னர் ஸ்பெக்ட்ரம் விவகாரம் சூடுபிடித்தவுடன் அதை கடனாக மாற்றிவிட்டதாகக் கூறும் சிபிஐ, தனது இந்தக் கூற்றை நிரூபிக்க முடியாமல் திணறி வருகிறது.

இந் நிலையில் ராசா, பல்வா ஆகியோர் தரும் தகவலை வைத்து கலைஞர் டி.வியின் நிர்வாகி சரத் குமாரிடமும் சிபிஐ விசாரணை நடத்தலாம் என்றுபம் கூறப்படுகிறது. மேலும் ராசாவுக்கு டி.பி. நிறுவனம் தனது ரியல் எஸ்டேட் பங்குகளையும் செல்போன் நிறுவன பங்குகளையும் தந்திருக்கலாம் என்றும் சிபிஐ சந்தேகிக்கிறது. ஆனால், இதை உறுதிப்படுத்த ஆவணங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

சிபிஐ தனது அறிக்கையை தாக்கல் செய்த பின் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் கூறுகையில், இந்த வழக்குக்கு இணையான வழக்கு எதுவும் இல்லை.

இந்த முறைகேட்டில் தொடர்புடைய மிகப் பெரிய தொழில் நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ முனைய வேண்டும்.

தாங்களே சட்டம் என நம் நாட்டில் நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு சட்டத்தின் வலிமையைப் புரிய வைக்க வேண்டும். அவர்கள் 'போர்ப்ஸ்' பத்திரிகையின் பட்டியலில் இருந்தாலும் சரி, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றனர்.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்வான் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் விசாரிக்கப்படவில்லை என இந்த வழக்கை தொடுத்த பொதுநல வழக்குக்கான மையத்தின் சார்பில் ஆஜரான பிரசாந்த் பூஷண் சுட்டிக் காட்டியுள்ளார். ஆதாயம் பெற்ற நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் விசாரிக்கப்படாதது வியப்பாக உள்ளது.

இந்த வழக்கில் 4 பேர் முறைகேட்டில் ஈடுபட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் ஆதாயம் பெற்றவர்களின் நிலை என்ன?. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது? என்று கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து
சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கூறுகையில், இந்த முறைகேட்டில் ஆதாயம் பெற்றவர்கள் தொடர்பான விவரங்களை அளிக்க ஒரு மாதம் அவகாசம் அளியுங்கள். ராசா பதவிக் காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான குற்றப்பத்திரிகை மார்ச் 31க்குள் தாக்கல் செய்யப்படும் என்றார்.

இதைத் தொடர்ந்து அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு முன் தொழில் நிறுவனங்கள் பெற்ற வங்கிக் கடன்கள் தொடர்பான பட்டியலை கே.கே.வேணுகோபால் படித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், விண்ணப்பங்களை சரியாகப் பரிசீலிக்காமலே வங்கிகள் எப்படி கடன் கொடுத்தன?. தொலைத் தொடர்புத் துறைக்கு தொடர்பே இல்லாத ஒரு நிறுவனம் கூட வங்கிக் கடன் பெற்றுள்ளது எப்படி? என்றும் கேள்வி எழுப்பினர்.

கலைஞர் டி.விக்கு ஸ்பெக்ட்ரம் பணம்-உறுதிப்படுத்த முடியாமல் திணறும் சிபிஐ

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில் கைதான ஸ்வான் இயக்குனர் ஷாகித் உஸ்மான் பல்வா கலைஞர் டி.வியில் ரூ.214 கோடி முதலீடு செய்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. ஆனால், இதை இன்னும் ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்த சிபிஐ உறுதிப்படுத்தவில்லை.

இது குறித்து சிபிஐ கூடுதல் எஸ்பி விவேக் பிரியதர்ஷினி தனது அறிக்கையை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோரிடம் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

2009ம் ஆண்டில் பல்வாவுக்குச் சொந்தமான சினியுக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற துணை நிறுவனத்தில் இருந்து கலைஞர் டி.விக்கு ரூ.214 கோடி பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.

பல்வாவின் உறவினர்கள் இயக்குநர்களாக உள்ள டி.பி. ரியாலிட்டி குழுமத்தின் துணை நிறுவனங்களிடமிருந்து இந்த நிதி பெறப்பட்டு கலைஞர் டி.விக்கு தரப்பட்டுள்ளது.

இந்த ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ரூ.1,537 கோடிக்கு
2ஜி ஸ்பெக்ட்ரத்தை அப்போதைய அமைச்சர் ராசா ஒதுக்கினார். இதில் 45 சதவீதத்தை யுஏஇயைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனமான எடிசலாட் நிறுவனத்துக்கு ரூ.4,200 கோடிக்கு ஸ்வான் விற்று லாபம் ஈட்டியது.

இந் நிலையில் ஸ்வானின் உரிமையாளரான டி.பி.ரியாலிட்டி ரூ. 214 கோடியை கலைஞர் டிவிக்கு முதலீடாகத் தந்தது சந்தேகங்களை ஏற்படுத்துவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

ஆனால், இந்தப் பணத்தை 8 சதவீத வட்டிக் கடனாகவே வாங்கியதாகவும், பின்னர் சில பிரச்சனைகள் வந்ததால் அந்தப் பணத்தை வட்டியோடு திருப்பித் தந்துவிட்டதாகவும் கலைஞர் டிவி கூறியுள்ளது. இதை ஆவணங்கள் மூலம் உறுதியும்படுத்தியுள்ளது.

ஆனால், இந்தப் பணத்தை முதலில் வேறு வகையில் தந்துவிட்டு பின்னர் ஸ்பெக்ட்ரம் விவகாரம் சூடுபிடித்தவுடன் அதை கடனாக மாற்றிவிட்டதாகக் கூறும் சிபிஐ, தனது இந்தக் கூற்றை நிரூபிக்க முடியாமல் திணறி வருகிறது.

இந் நிலையில் ராசா, பல்வா ஆகியோர் தரும் தகவலை வைத்து கலைஞர் டி.வியின் நிர்வாகி சரத் குமாரிடமும் சிபிஐ விசாரணை நடத்தலாம் என்றுபம் கூறப்படுகிறது. மேலும் ராசாவுக்கு டி.பி. நிறுவனம் தனது ரியல் எஸ்டேட் பங்குகளையும் செல்போன் நிறுவன பங்குகளையும் தந்திருக்கலாம் என்றும் சிபிஐ சந்தேகிக்கிறது. ஆனால், இதை உறுதிப்படுத்த ஆவணங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

சிபிஐ தனது அறிக்கையை தாக்கல் செய்த பின் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் கூறுகையில், இந்த வழக்குக்கு இணையான வழக்கு எதுவும் இல்லை.

இந்த முறைகேட்டில் தொடர்புடைய மிகப் பெரிய தொழில் நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ முனைய வேண்டும்.

தாங்களே சட்டம் என நம் நாட்டில் நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு சட்டத்தின் வலிமையைப் புரிய வைக்க வேண்டும். அவர்கள் 'போர்ப்ஸ்' பத்திரிகையின் பட்டியலில் இருந்தாலும் சரி, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றனர்.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்வான் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் விசாரிக்கப்படவில்லை என இந்த வழக்கை தொடுத்த பொதுநல வழக்குக்கான மையத்தின் சார்பில் ஆஜரான பிரசாந்த் பூஷண் சுட்டிக் காட்டியுள்ளார். ஆதாயம் பெற்ற நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் விசாரிக்கப்படாதது வியப்பாக உள்ளது.

இந்த வழக்கில் 4 பேர் முறைகேட்டில் ஈடுபட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் ஆதாயம் பெற்றவர்களின் நிலை என்ன?. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது? என்று கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து
சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கூறுகையில், இந்த முறைகேட்டில் ஆதாயம் பெற்றவர்கள் தொடர்பான விவரங்களை அளிக்க ஒரு மாதம் அவகாசம் அளியுங்கள். ராசா பதவிக் காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான குற்றப்பத்திரிகை மார்ச் 31க்குள் தாக்கல் செய்யப்படும் என்றார்.

இதைத் தொடர்ந்து அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு முன் தொழில் நிறுவனங்கள் பெற்ற வங்கிக் கடன்கள் தொடர்பான பட்டியலை கே.கே.வேணுகோபால் படித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், விண்ணப்பங்களை சரியாகப் பரிசீலிக்காமலே வங்கிகள் எப்படி கடன் கொடுத்தன?. தொலைத் தொடர்புத் துறைக்கு தொடர்பே இல்லாத ஒரு நிறுவனம் கூட வங்கிக் கடன் பெற்றுள்ளது எப்படி? என்றும் கேள்வி எழுப்பினர்.


டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடுகள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பலனடைந்த மற்றவர்களையும் விசாரிக்குமாறும் சிபிஐக்கும், மற்ற விசாரணை அமைப்புகளுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அதன் விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை கடந்த டிசம்பர் 16ம் தேதி விசாரித்த நீதிபதிகள் சிங்வி, கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த வழக்கை சி.பி.ஐ. மற்றும் விசாரணை அமைப்புகள் உரிய முறையில் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்றும், அதை நாங்கள் நேரடியாக கண்காணிப்போம் என்றும், விசாரணையின் விவரங்களை பிப்ரவரி 10ம் தேதி (இன்று) சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு ஆகியவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவுக்கு பின்னரே சி.பி.ஐ. தனது விசாரணையை தீவிரப்படுத்தி நிரா ராடியா, தொலை தொடர்புத்துறை முன்னாள்-இன்னாள் அதிகாரிகள், தொழிலதிபர்களின் வீடுகள், அலுவலகங்களில் ரெய்ட் நடத்தியது.

இதைத் தொடர்ந்து ராசா, அதிகாரிகள் சந்தோலியா, பெகுரியா, ஸ்வான் டெலிகாம் அதிபர் உஸ்மான் ஆகியோரை கைது செய்தது.

இந் நிலையில் கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் மற்றும் ரெய்டின்போது கிடைத்த தகவல்களை இன்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது.

மேலும் இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையான எப்ஐஆரை வரும் மார்ச் 31ம் தேதி தாக்கல் செய்வதாகவும் சிபிஐ அறிவித்தது.

இதையடுத்துப் பேசிய நீதிபதிகள், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டால் லாபம் அடைந்த மற்றவர்கள் குறித்தும் சிபிஐ முழு விசாரணை நடத்த வேண்டும்.

இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்த மத்திய அரசு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

ஏலம் விடாமல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தது தவறு:

இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. அவர் விசாரணை நடத்தி 143 பக்க அறிக்கையை மத்திய அமைச்சர் கபில் சிபலிடம் தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில் விவரம் வெளியாகி உள்ளது. அதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலம் விடாமல் முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு கொடுத்தது தவறு. இதில் வெளிப்படையான தன்மை இருந்திருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஸ்பெக்ட்ரம் ஊழல்: சிறப்பு நீதிமன்றம் அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு!


டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடுகள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பலனடைந்த மற்றவர்களையும் விசாரிக்குமாறும் சிபிஐக்கும், மற்ற விசாரணை அமைப்புகளுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அதன் விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை கடந்த டிசம்பர் 16ம் தேதி விசாரித்த நீதிபதிகள் சிங்வி, கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த வழக்கை சி.பி.ஐ. மற்றும் விசாரணை அமைப்புகள் உரிய முறையில் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்றும், அதை நாங்கள் நேரடியாக கண்காணிப்போம் என்றும், விசாரணையின் விவரங்களை பிப்ரவரி 10ம் தேதி (இன்று) சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு ஆகியவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவுக்கு பின்னரே சி.பி.ஐ. தனது விசாரணையை தீவிரப்படுத்தி நிரா ராடியா, தொலை தொடர்புத்துறை முன்னாள்-இன்னாள் அதிகாரிகள், தொழிலதிபர்களின் வீடுகள், அலுவலகங்களில் ரெய்ட் நடத்தியது.

இதைத் தொடர்ந்து ராசா, அதிகாரிகள் சந்தோலியா, பெகுரியா, ஸ்வான் டெலிகாம் அதிபர் உஸ்மான் ஆகியோரை கைது செய்தது.

இந் நிலையில் கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் மற்றும் ரெய்டின்போது கிடைத்த தகவல்களை இன்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது.

மேலும் இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையான எப்ஐஆரை வரும் மார்ச் 31ம் தேதி தாக்கல் செய்வதாகவும் சிபிஐ அறிவித்தது.

இதையடுத்துப் பேசிய நீதிபதிகள், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டால் லாபம் அடைந்த மற்றவர்கள் குறித்தும் சிபிஐ முழு விசாரணை நடத்த வேண்டும்.

இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்த மத்திய அரசு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

ஏலம் விடாமல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தது தவறு:

இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. அவர் விசாரணை நடத்தி 143 பக்க அறிக்கையை மத்திய அமைச்சர் கபில் சிபலிடம் தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில் விவரம் வெளியாகி உள்ளது. அதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலம் விடாமல் முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு கொடுத்தது தவறு. இதில் வெளிப்படையான தன்மை இருந்திருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் முதல்வர் கருணாநிதியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் கருத்து தெரிவித்ததாகக் கூறி, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் புகார் தொடர்பான வழக்கு தில்லியில் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது சுப்பிரமணியன் சுவாமி ஆஜரானார்.
இந்த வழக்கில் தமிழக முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட சிலரையும் சேர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை பத்திரிகைகளில் செய்தி வெளியானது. சுப்பிரமணியன் சுவாமியின் மேற்படி புகார் தொடர்பாக அவருக்கு முதல்வர் சார்பில் வழக்கறிஞர் மூலம் ஞாயிற்றுக்கிழமை நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
நோட்டீஸ் விவரம்:
பொது வாழ்வில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருபவர் முதல்வர் கருணாநிதி. தி.மு.க. தலைவராகவும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகவும், ஐந்தாவது முறையாக தமிழக முதல்வராகவும் செயல்பட்டு வருகிறார். தமிழக அரசியலில் மட்டுமன்றி, இந்திய அரசியலிலும் மூத்த அரசியல்வாதியாக மதிக்கப்படுகிறார்.
2 ஜி அலைக்கற்றை வழக்கு சி.பி.ஐ. விசாரிக்கும் தன்மையைவிட விரிவானது என்றும், இதில் நாட்டின் பாதுகாப்புக்குக் கவலை தரும் விஷயங்கள் உள்ளடங்கி இருப்பதாகவும், ""தமிழக முதல்வருக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும்'' நீங்கள் கூறியதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தனிப்பட்ட அரசியல் விரோதம் காரணமாகவும், மலிவான விளம்பரம் தேடும் நோக்கிலும் நீங்கள் தெரிவித்த இந்தக் கருத்து, முதல்வர் கருணாநிதியின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
தவறானது என்று தெரிந்தும், எமது கட்சிக்காரரின் (முதல்வர் கருணாநிதி) புகழுக்கும் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் இதைக் கூறியிருக்கிறீர்கள்.
2 ஜி அலைக்கற்றை எனப்படும் இந்த வழக்கில் எனது கட்சிக்காரருக்குத் தொடர்பு இருப்பதாக எந்தத் தகவலும் உங்களிடம் இல்லை என்று எமது கட்சிக்காரர் (கருணாநிதி) தெரிவிக்கிறார்.
இந்த 2 ஜி அலைக்கற்றை விஷயத்தில் தமக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் அவர் உறுதியாகக் கூறியுள்ளார். அவருடைய நற்பெயரை இதில் சேர்க்கும் உங்களின் முயற்சி உள்நோக்கம் கொண்டது என்றும் கூறியுள்ளார். மேற்படி கருத்து அவருடைய நற்பெயருக்குக் களங்கம் கற்பிப்பதற்காக வேண்டுமென்றே செய்ததுபோல அமைந்துள்ளது.
எனவே, தங்களது இந்தக் கருத்தை 24 மணி நேரத்துக்குள் திரும்பப்பெற வேண்டும். இல்லையெனில் தங்கள் மீது அவதூறு வழக்குத் தொடரப்படும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதியின் சார்பில் வழக்கறிஞர் பி.ஆர். ராமன் இந்த நோட்டீûஸ அனுப்பியுள்ளார்.

இதுபற்றி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்த கருத்து:
முதல்வர் பெயரையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்பது தொடர்பான கருத்துகள் நீதிமன்றத்தில்தான் தெரிவிக்கப்பட்டன. எனவே இது குறித்து நோட்டீஸ் அனுப்புவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்துகளுக்கோ அல்லது அதை வெளியில் தெரிவித்தமைக்கோ சட்டபூர்வ நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது.
இது பற்றிய சட்ட விவரங்கள் தெரியாமல் நோட்டீஸ் அனுப்பியதாகச் செய்தி வெளியாகியுள்ளது. எனக்கு அதுபோன்ற நோட்டீஸ் எதுவும் இதுவரை வரவில்லை என்றார் சுவாமி.

சுப்பிரமணியன் சுவாமிக்கு கருணாநிதி நோட்டீஸ்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் முதல்வர் கருணாநிதியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் கருத்து தெரிவித்ததாகக் கூறி, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் புகார் தொடர்பான வழக்கு தில்லியில் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது சுப்பிரமணியன் சுவாமி ஆஜரானார்.
இந்த வழக்கில் தமிழக முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட சிலரையும் சேர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை பத்திரிகைகளில் செய்தி வெளியானது. சுப்பிரமணியன் சுவாமியின் மேற்படி புகார் தொடர்பாக அவருக்கு முதல்வர் சார்பில் வழக்கறிஞர் மூலம் ஞாயிற்றுக்கிழமை நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
நோட்டீஸ் விவரம்:
பொது வாழ்வில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருபவர் முதல்வர் கருணாநிதி. தி.மு.க. தலைவராகவும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகவும், ஐந்தாவது முறையாக தமிழக முதல்வராகவும் செயல்பட்டு வருகிறார். தமிழக அரசியலில் மட்டுமன்றி, இந்திய அரசியலிலும் மூத்த அரசியல்வாதியாக மதிக்கப்படுகிறார்.
2 ஜி அலைக்கற்றை வழக்கு சி.பி.ஐ. விசாரிக்கும் தன்மையைவிட விரிவானது என்றும், இதில் நாட்டின் பாதுகாப்புக்குக் கவலை தரும் விஷயங்கள் உள்ளடங்கி இருப்பதாகவும், ""தமிழக முதல்வருக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும்'' நீங்கள் கூறியதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தனிப்பட்ட அரசியல் விரோதம் காரணமாகவும், மலிவான விளம்பரம் தேடும் நோக்கிலும் நீங்கள் தெரிவித்த இந்தக் கருத்து, முதல்வர் கருணாநிதியின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
தவறானது என்று தெரிந்தும், எமது கட்சிக்காரரின் (முதல்வர் கருணாநிதி) புகழுக்கும் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் இதைக் கூறியிருக்கிறீர்கள்.
2 ஜி அலைக்கற்றை எனப்படும் இந்த வழக்கில் எனது கட்சிக்காரருக்குத் தொடர்பு இருப்பதாக எந்தத் தகவலும் உங்களிடம் இல்லை என்று எமது கட்சிக்காரர் (கருணாநிதி) தெரிவிக்கிறார்.
இந்த 2 ஜி அலைக்கற்றை விஷயத்தில் தமக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் அவர் உறுதியாகக் கூறியுள்ளார். அவருடைய நற்பெயரை இதில் சேர்க்கும் உங்களின் முயற்சி உள்நோக்கம் கொண்டது என்றும் கூறியுள்ளார். மேற்படி கருத்து அவருடைய நற்பெயருக்குக் களங்கம் கற்பிப்பதற்காக வேண்டுமென்றே செய்ததுபோல அமைந்துள்ளது.
எனவே, தங்களது இந்தக் கருத்தை 24 மணி நேரத்துக்குள் திரும்பப்பெற வேண்டும். இல்லையெனில் தங்கள் மீது அவதூறு வழக்குத் தொடரப்படும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதியின் சார்பில் வழக்கறிஞர் பி.ஆர். ராமன் இந்த நோட்டீûஸ அனுப்பியுள்ளார்.

இதுபற்றி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்த கருத்து:
முதல்வர் பெயரையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்பது தொடர்பான கருத்துகள் நீதிமன்றத்தில்தான் தெரிவிக்கப்பட்டன. எனவே இது குறித்து நோட்டீஸ் அனுப்புவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்துகளுக்கோ அல்லது அதை வெளியில் தெரிவித்தமைக்கோ சட்டபூர்வ நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது.
இது பற்றிய சட்ட விவரங்கள் தெரியாமல் நோட்டீஸ் அனுப்பியதாகச் செய்தி வெளியாகியுள்ளது. எனக்கு அதுபோன்ற நோட்டீஸ் எதுவும் இதுவரை வரவில்லை என்றார் சுவாமி.

முக நூல்

Popular Posts