background img

புதிய வரவு

Showing posts with label M K Azhagiri. Show all posts
Showing posts with label M K Azhagiri. Show all posts
மதுரை: 6வது முறை மட்டுமல்ல, 7 வது முறையும் கருணாநிதியே முதல்வராவார் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடந்த மேலூர் காவிரிக் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு அழகிரி பேசுகையில்,

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.28 கோடியில் கட்டப்பட்டுள்ள உயிர் காக்கும் சிகிச்சைப் பிரிவு வசதி தமிழகத்திலேயே மதுரை மாவட்டத்தில்தான் உள்ளது.

மதுரையில் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததை அடுத்து முதல்வரிடம் பேசி அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்போது புதிய வளாகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் மாநகராட்சிக்கு உள்பட்ட சுடலை முத்துப்பிள்ளை காலனியில் 330 அடுக்கு மாடி வீடுகள், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் எல்லீஸ் நகரில் 752 வீடுகள், அவனியாபுரம் நகராட்சிக்கு உள்பட்ட அருப்புக்கோட்டை சாலையில் 192 வீடுகள், ராஜாக்கூர் பெரியார் நகரில் அரசின் மானியத்துடன் 720 வீடுகள் என, மொத்தம் 1994 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, தற்போது திறக்கப்பட்டுள்ளன.

ரூ.780 கோடி மதிப்பிலான மேலூர் காவிரிக் கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் சுமார் 12 லட்சம் மக்கள் பயன்பெறுவர்.

தி.மு.க. ஆட்சியில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நலத் திட்டங்கள் சென்றடைகின்றன. ஏழை, எளிய மக்கள் இந்த ஆட்சியை மறக்க மாட்டார்கள். 6-வது முறையல்ல; 7-வது முறையாகக் கூட தமிழக முதல்வராக கருணாநிதி தேர்வு செய்யப்படுவார் என்றார் அழகிரி.

6வது முறை மட்டுமல்ல, 7வது முறையும் கருணாநிதியே முதல்வராவார்-அழகிரி

மதுரை: 6வது முறை மட்டுமல்ல, 7 வது முறையும் கருணாநிதியே முதல்வராவார் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடந்த மேலூர் காவிரிக் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு அழகிரி பேசுகையில்,

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.28 கோடியில் கட்டப்பட்டுள்ள உயிர் காக்கும் சிகிச்சைப் பிரிவு வசதி தமிழகத்திலேயே மதுரை மாவட்டத்தில்தான் உள்ளது.

மதுரையில் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததை அடுத்து முதல்வரிடம் பேசி அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்போது புதிய வளாகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் மாநகராட்சிக்கு உள்பட்ட சுடலை முத்துப்பிள்ளை காலனியில் 330 அடுக்கு மாடி வீடுகள், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் எல்லீஸ் நகரில் 752 வீடுகள், அவனியாபுரம் நகராட்சிக்கு உள்பட்ட அருப்புக்கோட்டை சாலையில் 192 வீடுகள், ராஜாக்கூர் பெரியார் நகரில் அரசின் மானியத்துடன் 720 வீடுகள் என, மொத்தம் 1994 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, தற்போது திறக்கப்பட்டுள்ளன.

ரூ.780 கோடி மதிப்பிலான மேலூர் காவிரிக் கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் சுமார் 12 லட்சம் மக்கள் பயன்பெறுவர்.

தி.மு.க. ஆட்சியில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நலத் திட்டங்கள் சென்றடைகின்றன. ஏழை, எளிய மக்கள் இந்த ஆட்சியை மறக்க மாட்டார்கள். 6-வது முறையல்ல; 7-வது முறையாகக் கூட தமிழக முதல்வராக கருணாநிதி தேர்வு செய்யப்படுவார் என்றார் அழகிரி.

முக நூல்

Popular Posts