background img

புதிய வரவு

Showing posts with label Petrol rate. Show all posts
Showing posts with label Petrol rate. Show all posts
புதுடில்லி : பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல் மீதான விலை நிர்வாக கட்டுப்பாட்டு முறையை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு கைவிட்டு விட்டதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போதெல்லாம், உள் நாட்டில் பெட்ரோல் விலையை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்திக் கொள்ள முடியும். அதன்படி, சர்வதேச சந்தையில், இதுவரை இல்லாத வகையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், பெட்ரோல் விலையை கடந்த ஜனவரி மாதமே உயர்த்த, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டன. ஆனால், ஐந்து மாநில சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, மத்திய அரசு பிறப்பித்த வாய்மொழி உத்தரவால், விலையை உயர்த்துவது நிறுத்தி வைக்கப்பட்டது.


இப்போது, சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டதால், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 4.99 முதல் 5.01 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. டில்லியில் தற்போது, பெட்ரோல் விலை லிட்டருக்கு 58.37 ரூபாய்.

"சர்வதேச விலை நிலவரங்களின்படி பார்த்தால், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 9.50 முதல் 10 ரூபாய் வரை உயர்த்த வேண்டும். ஆனால், அதில் பாதியளவுக்கு மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன' என்று, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். விரைவில், மீண்டும் ஒரு முறை பெட்ரோல் விலை உயர்த்தப்படலாம் என்றும், அவர் மேலும் கூறினார்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்வு

புதுடில்லி : பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல் மீதான விலை நிர்வாக கட்டுப்பாட்டு முறையை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு கைவிட்டு விட்டதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போதெல்லாம், உள் நாட்டில் பெட்ரோல் விலையை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்திக் கொள்ள முடியும். அதன்படி, சர்வதேச சந்தையில், இதுவரை இல்லாத வகையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், பெட்ரோல் விலையை கடந்த ஜனவரி மாதமே உயர்த்த, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டன. ஆனால், ஐந்து மாநில சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, மத்திய அரசு பிறப்பித்த வாய்மொழி உத்தரவால், விலையை உயர்த்துவது நிறுத்தி வைக்கப்பட்டது.


இப்போது, சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டதால், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 4.99 முதல் 5.01 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. டில்லியில் தற்போது, பெட்ரோல் விலை லிட்டருக்கு 58.37 ரூபாய்.

"சர்வதேச விலை நிலவரங்களின்படி பார்த்தால், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 9.50 முதல் 10 ரூபாய் வரை உயர்த்த வேண்டும். ஆனால், அதில் பாதியளவுக்கு மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன' என்று, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். விரைவில், மீண்டும் ஒரு முறை பெட்ரோல் விலை உயர்த்தப்படலாம் என்றும், அவர் மேலும் கூறினார்.

கடந்த ஜுன் மாதத்தில் இருந்து பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பு அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டது. சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்து வந்தன. இருந்தபோதிலும், விலை நிர்ணயம் செய்வதில் மத்திய அரசின் அதிகாரபூர்வமற்ற வழிகாட்டுதலின்படி எண்ணெய் நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன.

ஆனால், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மத்திய அரசின் ஆலோசனைப்படி பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

தமிழ்நாடு, கேரளா உள்பட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலே, இந்த நடவடிக்கைக்கு காரணமாகும். தற்போது 5 மாநில தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது .

இந்நிலையில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 4.99 முதல் 5.01 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 58.37 ரூபாயாக உள்ளது

பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் அதிகரிப்பு நள்ளிரவு முதல் அமல்

கடந்த ஜுன் மாதத்தில் இருந்து பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பு அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டது. சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்து வந்தன. இருந்தபோதிலும், விலை நிர்ணயம் செய்வதில் மத்திய அரசின் அதிகாரபூர்வமற்ற வழிகாட்டுதலின்படி எண்ணெய் நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன.

ஆனால், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மத்திய அரசின் ஆலோசனைப்படி பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

தமிழ்நாடு, கேரளா உள்பட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலே, இந்த நடவடிக்கைக்கு காரணமாகும். தற்போது 5 மாநில தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது .

இந்நிலையில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 4.99 முதல் 5.01 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 58.37 ரூபாயாக உள்ளது

முக நூல்

Popular Posts