background img

புதிய வரவு

Showing posts with label Petrol-Diesel. Show all posts
Showing posts with label Petrol-Diesel. Show all posts
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதால், வேறு வழியின்றி பெட்ரோல் விலையில் ரூ 2 குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் விலையை நிர்ணயித்துக் கொள்ளும் உரிமையை எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு கொடுத்துள்ளது. இதனால் ஒவ்வொரு மாதமும், 1-ந்தேதி மற்றும் 16-ந்தேதி பெட்ரோல் விலையை எண்ணை நிறுவனங்கள் மாற்றி அமைக்கின்றன.

பொதுவாக கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1 டாலர் உயர்ந்தாலும், உடனே விலையை ஏற்றிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன எண்ணெய் நிறுவனங்கள்.

ஆனால் இந்த முறை கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வந்தும்கூட, நஷ்டம் என்று கூறி லிட்டருக்கு ரூ 7.50 உயர்த்தி பொதுமக்களை அலற வைத்தன.

இதற்கு எதிர்ப்பும் நாடெங்கும் கண்டனப் போராட்டங்களும் நடந்து வருகின்றன. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணை நேற்று 111 டாலரில் இருந்து 106 டாலராக குறைந்துள்ளது. வரும் நாட்களில் மேலும் கூட குறைய வாய்ப்புள்ளது.

பெட்ரோல் விலை உயர்வு காரணமாக ரூபாய் மதிப்பில் எந்த வீழ்ச்சியும் ஏற்படவில்லை. இதன் காரணமாக கடந்த வாரம் உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை சற்று குறைக்க இந்திய எண்ணை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

தற்போதைய சூழ்நிலையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.50 முதல் ரூ.2 வரை குறைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. எண்ணை நிறுவன அதிகாரிகள் இன்று அல்லது நாளை இதுபற்றி ஆலோசித்து விலை குறைப்பு முடிவை அறிவிப்பார்கள்.

எண்ணை நிறுவனங்களின் அறிவிப்பு இன்றிரவு வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் பெட்ரோல் விலை குறைப்பு நாளை (வெள்ளிக்கிழமை) அமலுக்கு வரலாம்.

இதுகுறித்து பாரத் பெட்ரோலியம் நிறுவன தலைவர் ஆர்கே சிங் கூறுகையில், 'பெட்ரோல் விலை ரூ 1.50 வரை குறைக்கப்படலாம். அதற்கான சாத்தியம் உள்ளது,' என்றார்.

இதற்கான நடவடிக்கைகளை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வேகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்களை சற்று தணிக்க முடியும் என மத்திய அரசு கருதுகிறது!

கச்சா எண்ணெய் விலை மேலும் வீழ்ச்சி - பெட்ரோல் விலை ரூ 2 குறைய வாய்ப்பு!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதால், வேறு வழியின்றி பெட்ரோல் விலையில் ரூ 2 குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் விலையை நிர்ணயித்துக் கொள்ளும் உரிமையை எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு கொடுத்துள்ளது. இதனால் ஒவ்வொரு மாதமும், 1-ந்தேதி மற்றும் 16-ந்தேதி பெட்ரோல் விலையை எண்ணை நிறுவனங்கள் மாற்றி அமைக்கின்றன.

பொதுவாக கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1 டாலர் உயர்ந்தாலும், உடனே விலையை ஏற்றிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன எண்ணெய் நிறுவனங்கள்.

ஆனால் இந்த முறை கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வந்தும்கூட, நஷ்டம் என்று கூறி லிட்டருக்கு ரூ 7.50 உயர்த்தி பொதுமக்களை அலற வைத்தன.

இதற்கு எதிர்ப்பும் நாடெங்கும் கண்டனப் போராட்டங்களும் நடந்து வருகின்றன. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணை நேற்று 111 டாலரில் இருந்து 106 டாலராக குறைந்துள்ளது. வரும் நாட்களில் மேலும் கூட குறைய வாய்ப்புள்ளது.

பெட்ரோல் விலை உயர்வு காரணமாக ரூபாய் மதிப்பில் எந்த வீழ்ச்சியும் ஏற்படவில்லை. இதன் காரணமாக கடந்த வாரம் உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை சற்று குறைக்க இந்திய எண்ணை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

தற்போதைய சூழ்நிலையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.50 முதல் ரூ.2 வரை குறைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. எண்ணை நிறுவன அதிகாரிகள் இன்று அல்லது நாளை இதுபற்றி ஆலோசித்து விலை குறைப்பு முடிவை அறிவிப்பார்கள்.

எண்ணை நிறுவனங்களின் அறிவிப்பு இன்றிரவு வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் பெட்ரோல் விலை குறைப்பு நாளை (வெள்ளிக்கிழமை) அமலுக்கு வரலாம்.

இதுகுறித்து பாரத் பெட்ரோலியம் நிறுவன தலைவர் ஆர்கே சிங் கூறுகையில், 'பெட்ரோல் விலை ரூ 1.50 வரை குறைக்கப்படலாம். அதற்கான சாத்தியம் உள்ளது,' என்றார்.

இதற்கான நடவடிக்கைகளை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வேகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்களை சற்று தணிக்க முடியும் என மத்திய அரசு கருதுகிறது!

புதுடில்லி : பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல் மீதான விலை நிர்வாக கட்டுப்பாட்டு முறையை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு கைவிட்டு விட்டதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போதெல்லாம், உள் நாட்டில் பெட்ரோல் விலையை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்திக் கொள்ள முடியும். அதன்படி, சர்வதேச சந்தையில், இதுவரை இல்லாத வகையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், பெட்ரோல் விலையை கடந்த ஜனவரி மாதமே உயர்த்த, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டன. ஆனால், ஐந்து மாநில சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, மத்திய அரசு பிறப்பித்த வாய்மொழி உத்தரவால், விலையை உயர்த்துவது நிறுத்தி வைக்கப்பட்டது.


இப்போது, சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டதால், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 4.99 முதல் 5.01 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. டில்லியில் தற்போது, பெட்ரோல் விலை லிட்டருக்கு 58.37 ரூபாய்.

"சர்வதேச விலை நிலவரங்களின்படி பார்த்தால், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 9.50 முதல் 10 ரூபாய் வரை உயர்த்த வேண்டும். ஆனால், அதில் பாதியளவுக்கு மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன' என்று, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். விரைவில், மீண்டும் ஒரு முறை பெட்ரோல் விலை உயர்த்தப்படலாம் என்றும், அவர் மேலும் கூறினார்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்வு

புதுடில்லி : பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல் மீதான விலை நிர்வாக கட்டுப்பாட்டு முறையை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு கைவிட்டு விட்டதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போதெல்லாம், உள் நாட்டில் பெட்ரோல் விலையை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்திக் கொள்ள முடியும். அதன்படி, சர்வதேச சந்தையில், இதுவரை இல்லாத வகையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், பெட்ரோல் விலையை கடந்த ஜனவரி மாதமே உயர்த்த, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டன. ஆனால், ஐந்து மாநில சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, மத்திய அரசு பிறப்பித்த வாய்மொழி உத்தரவால், விலையை உயர்த்துவது நிறுத்தி வைக்கப்பட்டது.


இப்போது, சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டதால், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 4.99 முதல் 5.01 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. டில்லியில் தற்போது, பெட்ரோல் விலை லிட்டருக்கு 58.37 ரூபாய்.

"சர்வதேச விலை நிலவரங்களின்படி பார்த்தால், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 9.50 முதல் 10 ரூபாய் வரை உயர்த்த வேண்டும். ஆனால், அதில் பாதியளவுக்கு மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன' என்று, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். விரைவில், மீண்டும் ஒரு முறை பெட்ரோல் விலை உயர்த்தப்படலாம் என்றும், அவர் மேலும் கூறினார்.

புதுடில்லி:பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கழகம், பெட்ரோல் விலை எந்த நேரத்திலும் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது.

பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் கட்டுப்பாடு முறை, மத்திய அரசு வசம் இருந்துவந்தது. இதனால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்வை ஈடுகட்ட முடியாமல், அரசு நிர்ணயித்த விலைக்கு விற்றுவந்தன.இதனால், பெரும் இழப்பு ஏற்பட்டது. இதை ஈடுகட்ட, மானியம் உட்பட, சில சலுகைகளை அரசு வழங்கியபோதும், அது, போதுமானதாக இல்லை. சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப, பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்கும் வகையில் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது.இது, கடந்தாண்டு முதல் அமலுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, 50 ரூபாய்க்கு கீழ் இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல், தொடர்ந்து ஆறு முறை உயர்த்தப்பட்டு, தற்போது, 60 ரூபாயை தாண்டி நிற்கிறது.

தற்போது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரே போய் கொண்டிருக்கிறது. இதனால், பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு, எண்ணெய் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. ஆனால், சட்டசபை தேர்தலை காரணம் காட்டி, இதை தள்ளிப்போடும்படி மத்திய அரசு கொடுத்த நிர்பந்தம் காரணமாக, நிறுவனங்கள், முடிவை தள்ளிப்போட்டு வந்தன.

இந்நிலையில், இந்தியன் ஆயில் கழக தலைவர் ரன்பீர சிங் புடோலா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:சட்டசபை தேர்தல் காரணமாக, கடந்த ஜனவரி முதல், பெட்ரோல் விலை எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. மக்கள் மற்றும் அரசை பாதிக்காத வகையில், நாங்கள் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நாங்கள் எடுக்கும் சில நடவடிக்கைகள், மக்களையும், அரசையும் பாதிக்கக் கூடாது என்பதற்காக, பொறுமை காக்க வேண்டியுள்ளது.இருப்பினும், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.கடந்த மார்ச் வரை, 53 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. இந்திய ஆயில் கழகத்திற்கு, ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை மூலம், 7 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, விரைவில் பெட்ரோல் விலை உயர்வு பற்றிய அறிவிப்பு வரும்.இவ்வாறு ரன்பீர சிங் புடோலா கூறினார்.

மேற்கு வங்கத்தில், மே மாதம் 10ம் தேதியுடன், சட்டசபை தேர்தல் முடிகிறது. அன்று இரவிலிருந்து, பெட்ரோல் விலை உயர்வு பற்றிய அறிவிப்பு வரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.எண்ணெய் நிறுவனங்களின் கூற்றுப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 70 ரூபாயை நெருங்கும் எனத் தெரிகிறது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70 ஆகும்

புதுடில்லி:பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கழகம், பெட்ரோல் விலை எந்த நேரத்திலும் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது.

பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் கட்டுப்பாடு முறை, மத்திய அரசு வசம் இருந்துவந்தது. இதனால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்வை ஈடுகட்ட முடியாமல், அரசு நிர்ணயித்த விலைக்கு விற்றுவந்தன.இதனால், பெரும் இழப்பு ஏற்பட்டது. இதை ஈடுகட்ட, மானியம் உட்பட, சில சலுகைகளை அரசு வழங்கியபோதும், அது, போதுமானதாக இல்லை. சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப, பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்கும் வகையில் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது.இது, கடந்தாண்டு முதல் அமலுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, 50 ரூபாய்க்கு கீழ் இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல், தொடர்ந்து ஆறு முறை உயர்த்தப்பட்டு, தற்போது, 60 ரூபாயை தாண்டி நிற்கிறது.

தற்போது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரே போய் கொண்டிருக்கிறது. இதனால், பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு, எண்ணெய் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. ஆனால், சட்டசபை தேர்தலை காரணம் காட்டி, இதை தள்ளிப்போடும்படி மத்திய அரசு கொடுத்த நிர்பந்தம் காரணமாக, நிறுவனங்கள், முடிவை தள்ளிப்போட்டு வந்தன.

இந்நிலையில், இந்தியன் ஆயில் கழக தலைவர் ரன்பீர சிங் புடோலா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:சட்டசபை தேர்தல் காரணமாக, கடந்த ஜனவரி முதல், பெட்ரோல் விலை எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. மக்கள் மற்றும் அரசை பாதிக்காத வகையில், நாங்கள் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நாங்கள் எடுக்கும் சில நடவடிக்கைகள், மக்களையும், அரசையும் பாதிக்கக் கூடாது என்பதற்காக, பொறுமை காக்க வேண்டியுள்ளது.இருப்பினும், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.கடந்த மார்ச் வரை, 53 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. இந்திய ஆயில் கழகத்திற்கு, ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை மூலம், 7 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, விரைவில் பெட்ரோல் விலை உயர்வு பற்றிய அறிவிப்பு வரும்.இவ்வாறு ரன்பீர சிங் புடோலா கூறினார்.

மேற்கு வங்கத்தில், மே மாதம் 10ம் தேதியுடன், சட்டசபை தேர்தல் முடிகிறது. அன்று இரவிலிருந்து, பெட்ரோல் விலை உயர்வு பற்றிய அறிவிப்பு வரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.எண்ணெய் நிறுவனங்களின் கூற்றுப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 70 ரூபாயை நெருங்கும் எனத் தெரிகிறது.

டெல்லி: தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் பெட்ரோல் விலை மேலும் உயர்த்தப்படும் என்று தெரிகிறது.

கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பல மடங்கு உயர்நததுள்ளதால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதை சரிகட்ட பெட்ரோல் விலையை மீண்டும் உயர்த்த வேண்டும் என்று இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், மேற்கு வங்கத்தில் தேர்தல் முடியும் வரை மத்திய அரசு விலை உயர்வை ஒத்தி வைத்துள்ளதாகத் தெரிகிறது.

சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 110 டாலருக்கு விற்பதால், பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டியது அவசியமாகும் என்று இந்தியன் ஆயில் கழகம் கூறியுள்ளது.

தற்போது இந்திய எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.4.50 இழப்பை சந்திப்பதாக கூறப்படுகிறது. டீசலுக்கு ரூ.15.79, மண்ணெண்ணெய் விற்பனையில் ரூ.24.74 மற்றும் சமையல் கேஸ் விற்பனையில் சிலிண்டருக்கு ரூ.297.80 இழப்பு ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.

எனவே பெட்ரோலியப் பொருட்களின் விலையை கணிசமாக உயர்த்த மத்திய பெட்ரோலிய அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் 13ம் தேதி வெளியாகின்றன.

அதன் பிறகு உடனடியாக பெட்ரோல்- டீசல் விலை உயர்த்தப்படும் என்று தெரிகிறது.

5 மாநில தேர்தல் முடிந்ததும் பெட்ரோல்-டீசல் விலை மேலும் உயரும்

டெல்லி: தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் பெட்ரோல் விலை மேலும் உயர்த்தப்படும் என்று தெரிகிறது.

கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பல மடங்கு உயர்நததுள்ளதால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதை சரிகட்ட பெட்ரோல் விலையை மீண்டும் உயர்த்த வேண்டும் என்று இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், மேற்கு வங்கத்தில் தேர்தல் முடியும் வரை மத்திய அரசு விலை உயர்வை ஒத்தி வைத்துள்ளதாகத் தெரிகிறது.

சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 110 டாலருக்கு விற்பதால், பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டியது அவசியமாகும் என்று இந்தியன் ஆயில் கழகம் கூறியுள்ளது.

தற்போது இந்திய எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.4.50 இழப்பை சந்திப்பதாக கூறப்படுகிறது. டீசலுக்கு ரூ.15.79, மண்ணெண்ணெய் விற்பனையில் ரூ.24.74 மற்றும் சமையல் கேஸ் விற்பனையில் சிலிண்டருக்கு ரூ.297.80 இழப்பு ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.

எனவே பெட்ரோலியப் பொருட்களின் விலையை கணிசமாக உயர்த்த மத்திய பெட்ரோலிய அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் 13ம் தேதி வெளியாகின்றன.

அதன் பிறகு உடனடியாக பெட்ரோல்- டீசல் விலை உயர்த்தப்படும் என்று தெரிகிறது.

முக நூல்

Popular Posts