background img

புதிய வரவு

Showing posts with label Pranab mukherjee. Show all posts
Showing posts with label Pranab mukherjee. Show all posts
இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களான பிரணாப் முகர்ஜி மற்றும் சங்மா ஆகியோர் தமது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளனர்.
இத்தேர்தலில் ஆளும் கூட்டணி சார்பில் நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியையும், பிரதான எதிர்கட்சியான பா ஜ க மற்றும் அ இ அ தி மு க, பிஜு ஜனதா தளம் உட்பட பல எதிர்கட்சிகள் சங்மாவையும் தமது வேட்பாளராக நிறுத்தியுள்ளன.
பிரணாப் முகர்ஜி தமது வேட்பு மனுவை தாக்கல் செய்யும் போது பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
எதிரணியின் வேட்பாளாரான சங்மாவுடன் பா ஜ க மூத்த தலைவர் அத்வானி, அகாலி தளத்தலைவரும் பஞ்சாப் முதலவருமான பிரகாஷ் சிங் பாதல், ஒதிஷா முதல்வர் பிஜு பட்நாயக் ஆகியாருடன் மேலும் பலரும் சென்றனர்.
குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் தற்போது வாக்கு பலத்தின் அடிப்படையில் பிரணாப் முகர்ஜி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளே கூடுதலாக உள்ளன என்று செய்திகள் கூறுகின்றன.
ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணமூல் காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தமது கட்சியின் நிலை என்ன என்பதை இதுவரை வெளியிடவில்லை.
எனினும் அக்கட்சியின் ஆதரவு தனக்கு கிடைக்கக் கூடும் என சங்மா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரணாப், சங்மா வேட்பு மனு தாக்கல்

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களான பிரணாப் முகர்ஜி மற்றும் சங்மா ஆகியோர் தமது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளனர்.
இத்தேர்தலில் ஆளும் கூட்டணி சார்பில் நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியையும், பிரதான எதிர்கட்சியான பா ஜ க மற்றும் அ இ அ தி மு க, பிஜு ஜனதா தளம் உட்பட பல எதிர்கட்சிகள் சங்மாவையும் தமது வேட்பாளராக நிறுத்தியுள்ளன.
பிரணாப் முகர்ஜி தமது வேட்பு மனுவை தாக்கல் செய்யும் போது பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
எதிரணியின் வேட்பாளாரான சங்மாவுடன் பா ஜ க மூத்த தலைவர் அத்வானி, அகாலி தளத்தலைவரும் பஞ்சாப் முதலவருமான பிரகாஷ் சிங் பாதல், ஒதிஷா முதல்வர் பிஜு பட்நாயக் ஆகியாருடன் மேலும் பலரும் சென்றனர்.
குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் தற்போது வாக்கு பலத்தின் அடிப்படையில் பிரணாப் முகர்ஜி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளே கூடுதலாக உள்ளன என்று செய்திகள் கூறுகின்றன.
ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணமூல் காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தமது கட்சியின் நிலை என்ன என்பதை இதுவரை வெளியிடவில்லை.
எனினும் அக்கட்சியின் ஆதரவு தனக்கு கிடைக்கக் கூடும் என சங்மா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் உயர் ஆஸ்பத்திரிகளில் அளிக்கப்படும் சிகிச்சைக்கு சேவை வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த வரியை ரத்து செய்வதாக மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

ஆஸ்பத்திரிகள் சேவை வரி ரத்து: பிரணாப் முகர்ஜி அறிவிப்பு

மத்திய பட்ஜெட்டில் உயர் ஆஸ்பத்திரிகளில் அளிக்கப்படும் சிகிச்சைக்கு சேவை வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த வரியை ரத்து செய்வதாக மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

புதுடில்லி:""பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வரி அறிவிப்புகளில், மருத்துவ சேவைக்கான சேவை வரி உட்பட சில வரி அம்சங்கள் பற்றி மறுபரிசீலனை மற்றும் மீனவர்கள் நலனுக்கு மானியம், கல்வி, சுகாதாரத் துறைக்கு சில சலுகைகள் அளிக்கப்படும்,'' என, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று சூசகமாக தெரிவித்தார்.
தமிழகம், மேற்கு வங்கம் உட்பட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதன் காரணமாக, பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க கட்சிகள் கோரிக்கை விடுத்தனஇதையடுத்து, வரும் 25ம் தேதி கூட்டத்தொடர் முடிகிறது. இதில் முக்கிய விஷயங்கள் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படுகிறது. முக்கியமாக எதிர்பார்க்கப்படும் மசோதாக்கள் பட்ஜெட் தொடர்பாக இரண்டாம் கட்ட தொடரில் எடுத்து கொள்ளப்படுகிறது. லோக்சபாவில் நேற்று பட்ஜெட் குறித்த பொது விவாதம் சுருக்கமாக முடிந்ததும், பிரணாப் பதிலளித்து பேசினார்.
இதன் பின் நடப்பாண்டிற்கான செலவினங்கள் தொடர்பான துணை மானிய கோரிக்கைக்கு சபை ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், பொது பட்ஜெட் அம்சங்களில் ஒப்புதல் பெறுவதில் முதல் கட்டத்தை அரசு தாண்டியுள்ளது.கச்சா எண்ணெய் விலை உயர்வால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட மானியம், உரமானியம் அளித்ததால் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினங்களுக்காக 79 ஆயிரத்து 590 கோடி ரூபாய் ஒதுக்கீடு, பார்லிமென்ட் ஒப்புதலை கடந்த வாரம் அரசு கோரியது.மானிய கோரிக்கைகள் மற்றும் நிதி மசோதா உட்பட பட்ஜெட் அம்சங்கள் குறித்து இம்மாதம் 24ம் தேதி எடுத்து கொள்ளப்பட உள்ளது. கிராமப்புற வளர்ச்சி, வெளியுறவுத் துறை, சுரங்கத் துறை, சாலை போக்குவரத்து ஆகிய அமைச்சகங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து அடுத்த வாரம் லோக்சபாவில் விவாதிக்கப்பட உள்ளது.
நேற்று பட்ஜெட் விவாதத்திற்கு பதிலளித்து பேசிய பிரணாப் குறிப்பிடுகையில், "மருத்துவ சிகிச்சைக்கு 5 சதவீத சேவை வரி விதிப்பு உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து சபையில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகள் பற்றி பரிசீலிக்கப்படும்.இது தொடர்பாக நிதி மசோதா தொடர்பான விவாதத்தின் போது, பதிலளிப்பதாக குறிப்பிட்டார். நிதியமைச்சர் பதிலுரைக்கு பின் துணை மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

மருத்துவ சிகிச்சைக்கு வரி ரத்து?

புதுடில்லி:""பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வரி அறிவிப்புகளில், மருத்துவ சேவைக்கான சேவை வரி உட்பட சில வரி அம்சங்கள் பற்றி மறுபரிசீலனை மற்றும் மீனவர்கள் நலனுக்கு மானியம், கல்வி, சுகாதாரத் துறைக்கு சில சலுகைகள் அளிக்கப்படும்,'' என, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று சூசகமாக தெரிவித்தார்.
தமிழகம், மேற்கு வங்கம் உட்பட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதன் காரணமாக, பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க கட்சிகள் கோரிக்கை விடுத்தனஇதையடுத்து, வரும் 25ம் தேதி கூட்டத்தொடர் முடிகிறது. இதில் முக்கிய விஷயங்கள் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படுகிறது. முக்கியமாக எதிர்பார்க்கப்படும் மசோதாக்கள் பட்ஜெட் தொடர்பாக இரண்டாம் கட்ட தொடரில் எடுத்து கொள்ளப்படுகிறது. லோக்சபாவில் நேற்று பட்ஜெட் குறித்த பொது விவாதம் சுருக்கமாக முடிந்ததும், பிரணாப் பதிலளித்து பேசினார்.
இதன் பின் நடப்பாண்டிற்கான செலவினங்கள் தொடர்பான துணை மானிய கோரிக்கைக்கு சபை ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், பொது பட்ஜெட் அம்சங்களில் ஒப்புதல் பெறுவதில் முதல் கட்டத்தை அரசு தாண்டியுள்ளது.கச்சா எண்ணெய் விலை உயர்வால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட மானியம், உரமானியம் அளித்ததால் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினங்களுக்காக 79 ஆயிரத்து 590 கோடி ரூபாய் ஒதுக்கீடு, பார்லிமென்ட் ஒப்புதலை கடந்த வாரம் அரசு கோரியது.மானிய கோரிக்கைகள் மற்றும் நிதி மசோதா உட்பட பட்ஜெட் அம்சங்கள் குறித்து இம்மாதம் 24ம் தேதி எடுத்து கொள்ளப்பட உள்ளது. கிராமப்புற வளர்ச்சி, வெளியுறவுத் துறை, சுரங்கத் துறை, சாலை போக்குவரத்து ஆகிய அமைச்சகங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து அடுத்த வாரம் லோக்சபாவில் விவாதிக்கப்பட உள்ளது.
நேற்று பட்ஜெட் விவாதத்திற்கு பதிலளித்து பேசிய பிரணாப் குறிப்பிடுகையில், "மருத்துவ சிகிச்சைக்கு 5 சதவீத சேவை வரி விதிப்பு உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து சபையில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகள் பற்றி பரிசீலிக்கப்படும்.இது தொடர்பாக நிதி மசோதா தொடர்பான விவாதத்தின் போது, பதிலளிப்பதாக குறிப்பிட்டார். நிதியமைச்சர் பதிலுரைக்கு பின் துணை மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு ஆகியவற்றை பலப்படுத்தும் நோக்கிலும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த விவசாய உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கும் வகையிலும் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது. மத்திய அரசின் 2011-12ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று பார்லிமென்டில் தாக்கல் செய்தார். அதன்படி இந்தாண்டு பொருளாதார வளர்ச்சி என்பது 8.6 சதவீதமாக இருக்கும். வரும் 2012-13ம் ஆண்டில் இந்த வளர்ச்சியை 9 சதவீதமாக உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சீராகவும், உறுதியாகவும் அதிகரிக்க செய்யும் நோக்கத்திலும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாகவும் பல்வேறு நடவடிக்கைகள் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளன. தவிர விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கு முக்கிய நடவடிக்கையாக, விவசாய உற்பத்திக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்களின் விலையேற்றம் கவலையளிப்பதாக உள்ளது. உணவுப் பொருட்களின் வினியோகத்திற்கும், அதன் விற்பனைக்கும் இடையில் தான் மிகப்பெரும் குறைபாடுகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மொத்த விற்பனைக்கான விலைகள் எதுவுமே சில்லறை விற்பனையில் பிரதிபலிக்காமல் உள்ளது. இதனால், உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் விவசாயிகளுக்கும் பயனில்லை; நுகர்வோரான பொதுமக்களுக்கும் பயனில்லை. ஆகவே, இந்த சிக்கலை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
வருமான வரி விலக்கு உச்சவரம்பு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயாக உயரும். இத்துடன் தனி நபருக்கு, வருடத்திற்கு 2,000 ரூபாய் கிடைக்கும் வகையில் சலுகைகள் தரப்பட்டிருக்கின்றன. இதனால், அரசுக்கு 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும். "சுகம்' என்ற பெயரில் எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி செலுத்தும் படிவம் இந்தாண்டு அறிமுகமாகும்.
கலால் வரி: கடந்தாண்டு ஊக்குவிப்பு நிதியாக 370 பொருட்களுக்கு கலால் வரி விலக்கு அளிக்கப்பட்டது. இதில் 130 பொருட்களுக்கான வரிவிலக்கு ரத்து செய்யப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் வந்த பிறகு இது அமலுக்கு வரும். வரி சீர்திருத்தம் செய்யும் வகையில் இரண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நேரடி வரி குறியீடு என்பது 2012ம் ஆண்டு முதல் அமல் ஆகும். சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் குறித்து, மாநில அரசுகளுடன் இருந்த சில சிக்கல்கள் களையப்பட்டுவிட்டதால், வரைவு மசோதா குறித்து இந்த பார்லிமென்ட் கூட்டத்தொடரிலேயே அறிமுகப்படுத்தப்படும்.
பங்குகள் விற்பனை வாயிலாக 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை திரட்டப்படும். உள்கட்டமைப்புக்கு 2 லட்சத்து 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். கங்கை நதி தவிர நாட்டின் பிற நதிகளை சுத்தம் செய்வதற்கு 200 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்படும்.
அங்கன்வாடி பணியாளர்களின் சம்பளம் 3,000 ரூபாயாகவும், அங்கன்வாடி உதவியாளர்களின் சம்பளம் 1,500 ரூபாயாகவும் உயரும். விலைவாசி உயர்வுக்கு ஏற்பட ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியும் உயர்த்தி வழங்கப்படும். 2,000 பேர் வசிக்கும் 73 ஆயிரம் கிராமங்களில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகள் துவங்கப்படும்.
விவசாயிகளுக்கு கடந்தாண்டு 3 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டது. இந்தாண்டு 4 சதவீத வட்டியில் 4 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும். தற்போது 20 லட்ச ரூபாய் வரையில் வழங்கப்படும் வீட்டுக் கடன், இனி 25 லட்ச ரூபாய் வரையில் வழங்கப்படும்.
கிராமப்புற சுகாதார திட்டங்களுக்கு 26 ஆயிரத்து 700 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்படும். இது கடந்தாண்டை காட்டிலும் 20 சதவீதம் கூடுதல் ஆகும். கல்வி திட்டங்களுக்கு 52 ஆயிரத்து 57 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்படும். இது கடந்தாண்டை காட்டிலும் 24 சதவீதம் கூடுதல் ஆகும்.
பெண்கள் சுயஉதவிக் குழுக்களை மேம்படுத்துவதற்கு 500 கோடி ரூபாய் செலவில் தனி திட்டமும், சிறு தொழில் முனைவோர்கள் மேம்பாட்டிற்கு என 5,000 கோடி ரூபாய் செலவில் தனி திட்டமும் செயல்படுத்தப்படும். 80 வயதை தாண்டிய முதியோர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 800 ரூபாயாக உயர்த்தப்படுமென்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் பட்ஜெட்

பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு ஆகியவற்றை பலப்படுத்தும் நோக்கிலும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த விவசாய உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கும் வகையிலும் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது. மத்திய அரசின் 2011-12ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று பார்லிமென்டில் தாக்கல் செய்தார். அதன்படி இந்தாண்டு பொருளாதார வளர்ச்சி என்பது 8.6 சதவீதமாக இருக்கும். வரும் 2012-13ம் ஆண்டில் இந்த வளர்ச்சியை 9 சதவீதமாக உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சீராகவும், உறுதியாகவும் அதிகரிக்க செய்யும் நோக்கத்திலும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாகவும் பல்வேறு நடவடிக்கைகள் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளன. தவிர விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கு முக்கிய நடவடிக்கையாக, விவசாய உற்பத்திக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்களின் விலையேற்றம் கவலையளிப்பதாக உள்ளது. உணவுப் பொருட்களின் வினியோகத்திற்கும், அதன் விற்பனைக்கும் இடையில் தான் மிகப்பெரும் குறைபாடுகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மொத்த விற்பனைக்கான விலைகள் எதுவுமே சில்லறை விற்பனையில் பிரதிபலிக்காமல் உள்ளது. இதனால், உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் விவசாயிகளுக்கும் பயனில்லை; நுகர்வோரான பொதுமக்களுக்கும் பயனில்லை. ஆகவே, இந்த சிக்கலை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
வருமான வரி விலக்கு உச்சவரம்பு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயாக உயரும். இத்துடன் தனி நபருக்கு, வருடத்திற்கு 2,000 ரூபாய் கிடைக்கும் வகையில் சலுகைகள் தரப்பட்டிருக்கின்றன. இதனால், அரசுக்கு 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும். "சுகம்' என்ற பெயரில் எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி செலுத்தும் படிவம் இந்தாண்டு அறிமுகமாகும்.
கலால் வரி: கடந்தாண்டு ஊக்குவிப்பு நிதியாக 370 பொருட்களுக்கு கலால் வரி விலக்கு அளிக்கப்பட்டது. இதில் 130 பொருட்களுக்கான வரிவிலக்கு ரத்து செய்யப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் வந்த பிறகு இது அமலுக்கு வரும். வரி சீர்திருத்தம் செய்யும் வகையில் இரண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நேரடி வரி குறியீடு என்பது 2012ம் ஆண்டு முதல் அமல் ஆகும். சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் குறித்து, மாநில அரசுகளுடன் இருந்த சில சிக்கல்கள் களையப்பட்டுவிட்டதால், வரைவு மசோதா குறித்து இந்த பார்லிமென்ட் கூட்டத்தொடரிலேயே அறிமுகப்படுத்தப்படும்.
பங்குகள் விற்பனை வாயிலாக 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை திரட்டப்படும். உள்கட்டமைப்புக்கு 2 லட்சத்து 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். கங்கை நதி தவிர நாட்டின் பிற நதிகளை சுத்தம் செய்வதற்கு 200 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்படும்.
அங்கன்வாடி பணியாளர்களின் சம்பளம் 3,000 ரூபாயாகவும், அங்கன்வாடி உதவியாளர்களின் சம்பளம் 1,500 ரூபாயாகவும் உயரும். விலைவாசி உயர்வுக்கு ஏற்பட ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியும் உயர்த்தி வழங்கப்படும். 2,000 பேர் வசிக்கும் 73 ஆயிரம் கிராமங்களில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகள் துவங்கப்படும்.
விவசாயிகளுக்கு கடந்தாண்டு 3 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டது. இந்தாண்டு 4 சதவீத வட்டியில் 4 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும். தற்போது 20 லட்ச ரூபாய் வரையில் வழங்கப்படும் வீட்டுக் கடன், இனி 25 லட்ச ரூபாய் வரையில் வழங்கப்படும்.
கிராமப்புற சுகாதார திட்டங்களுக்கு 26 ஆயிரத்து 700 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்படும். இது கடந்தாண்டை காட்டிலும் 20 சதவீதம் கூடுதல் ஆகும். கல்வி திட்டங்களுக்கு 52 ஆயிரத்து 57 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்படும். இது கடந்தாண்டை காட்டிலும் 24 சதவீதம் கூடுதல் ஆகும்.
பெண்கள் சுயஉதவிக் குழுக்களை மேம்படுத்துவதற்கு 500 கோடி ரூபாய் செலவில் தனி திட்டமும், சிறு தொழில் முனைவோர்கள் மேம்பாட்டிற்கு என 5,000 கோடி ரூபாய் செலவில் தனி திட்டமும் செயல்படுத்தப்படும். 80 வயதை தாண்டிய முதியோர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 800 ரூபாயாக உயர்த்தப்படுமென்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட் இன்று பெரிய எதிர்பார்ப்புடன் தாக்கலாகிறது. இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் சுதந்திர இந்தியாவின் 80வது பட்ஜெட் ஆகும். நடுத்தர மக்கள், விவசாயத்தை முன்னேற்ற வழிகள், உணவுப் பாதுகாப்பு திட்டத்திற்கு அதிக முன்னுரிமை, அடிப்படை கட்டுமானப் பணிகளுக்கு அதிக முன்னுரிமை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக பட்ஜெட்டிற்கு முன் தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வறிக்கை அரசின் செயல்பாட்டைக் காட்டும் கண்ணாடி என்று கூறுவது வழக்கம். அதில், மொத்த வளர்ச்சி 9 சதவீதத்தை எட்டும் என்று நம்பிக்கை காட்டப்பட்டிருக்கிறது. அதை மீடியாக்கள் அதிக விளம்பரப்படுத்தியுள்ளன. ஆனால், தலைசிறந்த பொருளாதார நிபுணர்கள் இந்த சதவீதத்தை எட்ட முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளனர். எர்னஸ்ட் அண்ட் யங்க் என்ற பொருளாதார அமைப்பின் தலைவர் அஸ்வின் பரேக் கூறுகையில், " 9 சதவீத வளர்ச்சி என்பதை அடைவது சிரமம். கடந்த நான்கு மாதங்களில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள் இதற்கு ஆதாரம். இதைவிட லிபியாவில் ஏற்பட்ட நெருக்கடியால், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பும் சுமையாகும்' என்றிருக்கிறார். தவிரவும் மற்ற துறைகள் வளர்ச்சி காணப்படாமல் மொத்த வளர்ச்சி என்பது சுலபமல்ல என்றும் கூறப்படுகிறது.

இன்று தாக்கல் செய்யப்படும் 2011 - 2012ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி வரம்பு ஆண்டு ஒன்றுக்கு 2 லட்ச ரூபாயாக உயர்த்தப்படலாம் என்ற நம்பிக்கை காணப்படுகிறது. அதே போல சேமிப்பு மேற்கொள்ளும் போது, அதிக சலுகை இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனெனில், சமீபத்திய விலைவாசி உயர்வு பாமர மற்றும் நடுத்தர மக்களின் பர்சை காலியாக்கி விட்டதால், அரசு அதை தடுப்பதுடன், சேமிப்பையும் அதிகரிக்க வழிகாணும் என்ற கருத்து உள்ளது. ஏற்கனவே மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டிருக்கும் புதிய நேரடி வரிவிதிப்பு நடைமுறை இன்னமும் அமலாகவில்லை. ஆனால், அதன் நோக்கங்களின் படி தனி நபர் வருமான வரி வரம்பு ஆண்டுக்கு 2 லட்ச ரூபாயாக உயர்த்தப்படலாம் என்று, வரி குறித்த நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

விவசாயம் : அரசுக்குள்ள மற்றொரு பயங்கர சவால், விவசாயத்துறை வளர்ச்சியாகும். இந்த ஆண்டில் பருவ மழை நன்றாக அமைந்த காரணத்தால், அரசு வெளியிட்ட சர்வேயின்படி, விவசாய வளர்ச்சி 5 சதவீதத்தைத் தாண்டி விட்டது. இருந்தாலும், நிதியமைச்சர் உலக உணவு தானிய உற்பத்தி நிலைமையைக் கணக்கில் கொண்டு, இந்த உற்பத்தியை அதிகரிக்க விரும்பி, இனி இரண்டாவது பசுமைப் புரட்சி தேவை என்று வலியுறுத்தியிருக்கிறார். இந்த விஷயத்தில், வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன், "விவசாயத்தில் இளைஞர்களை ஈர்க்கும் திட்டங்கள் தேவை, விவசாயத்தில் அறுவடை காலத்திலும், விவசாயப் பொருட்களைச் சந்தைப் படுத்துவதிலும் அரசும் தனியாரும் இணைந்த ஆதரவுக் கொள்கை தேவை' என்று வலியுறுத்தியுள்ளார். அதைத் தவிர, பிரதமருக்கு விவசாயத் தொழில் சம்பந்தமாக ஆலோசனை கூறும் பூபீந்தர் ஹோடா குழு, " விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் 4 சதவீத வட்டியில் தரப்பட வேண்டும்' என்று யோசனை கூறியிருக்கிறது. இது பட்ஜெட்டில் எதிரொலித்தால், விவசாயிகளைக் கவரும் திட்டமாக அமையும். ஏனெனில், அடுத்த ஆண்டு விவசாய மொத்த உற்பத்தி 3 சதவீதத்தை மட்டுமே எட்டும் என்று அரசு அறிக்கை கூறுகிறது. ஆகவே, இந்த பட்ஜெட்டில் விவசாயத் துறைக்கு 4 லட்சம் கோடி ரூபாய் கடன் தர இலக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில், கடந்த இருபது ஆண்டுகளில் விவசாய நிலம் மொத்த அளவில் 2 சதவீதம் சுருங்கி விட்டது. கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன் 1.85 கோடி எக்டேர் விவசாய நிலம் இருந்தது. உணவு உற்பத்தியை இது பாதிக்கவில்லை என்றாலும், இது கவலை தரும் அம்சமாகும். அது போல, கால்நடைச் செல்வங்களால் கிடைக்கும் வளமும் குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால், பால் பொருட்களுக்கு இறக்குமதியை நம்ப வேண்டி வரும் என, அரசின் பொருளாதார அறிக்கை தெரிவிக்கிறது. பால் உற்பத்தி அதிகரிப்பு, கால்நடைத் தீவனங்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது ஆகியவற்றிற்கு நடைமுறை தேவை என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பங்குச் சந்தை: இதைத் தவிர, கறுப்புப்பணம் மீட்புக்கான நடவடிக்கை குறித்த தகவல் பட்ஜெட்டில் இருக்கும். பங்குச் சந்தை தற்போது இறக்கத்தில் உள்ளது. சோதிடர்கள் கருத்துப்படி, இது நவம்பர் வரை தொடருமாம். மேலும், நிதியமைச்சர் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தை விட மொத்த நிதிப்பற்றாக்குறை அபாயத்தை அடிக்கடி பேசுபவர். அதனால் தான் "3ஜி' ஸ்பெக்ட்ரம் விற்பனையில் அதிக வருவாயை ஈட்டித் தந்திருக்கிறார். குறிப்பாக கச்சா எண்ணெய் விலை உயர்வு எண்ணெய் கம்பெனிகளை பாதிக்காதிருக்க மத்திய அரசின் சுங்க வரிக் குறைப்பை அவர் அறிவிக்கலாம்.மேலும் தமிழகம், அசாம் உட்பட ஐந்து மாநில தேர்தலுக்காக, சில சலுகைகளும் இதில் இடம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.


10 தடவை மொரார்ஜி பட்ஜெட் : இன்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தனது ஆறாவது பட்ஜெட்டை ( 2011 - 2012) தாக்கல் செய்கிறார். இது இந்தியா சுதந்திரம் பெற்ற பின் தாக்கல் செய்யப்படும் 80வது பட்ஜெட். தவிரவும் மத்திய நிதியமைச்சராக ஆறாவது தடவை பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.இந்தியா 1947ல் சுதந்திரம் பெற்ற பின் நவ., 26, 1947 ல் முதலாவதாக தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.கே.சண்முகம் செட்டியார் பட்ஜெட் தாக்கல் செய்தார். நாட்டில் அதிக அளவாக பத்து முறை பட்ஜெட் தாக்கல் செய்த பெருமை மொரார்ஜி தேசாயைச் சாரும். மத்திய நிதியமைச்சர்களாக சிதம்பரம், யஷ்வந்த் சின்கா, சி.டி.தேஷ்முக், ஒய்.பி.சவான் ஆகியோர் ஆறுமுறை பட்ஜெட் தாக்கல் செய்திருக்கின்றனர். மன்மோகன் சிங், டி.டி.கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் ஆறுமுறை பட்ஜெட் தாக்கல் செய்தவர்கள். அந்த வரிசையில் இன்று இடம் பெறுகிறார் பிரணாப்.÷ நரு, இந்திரா, ராஜிவ், சரண்சிங், என்.டி.திவாரி, மதுதண்டவதே போன்றவர்கள் ஒருமுறை பட்ஜெட் தாக்கல் செய்தவர்கள். இரு முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர்களில் ஜஸ்வந்த் சிங், சி.சுப்ரமணியம் குறிப்பிடத்தக்கவர்கள்.நாடு சுதந்திரம் பெற்ற பின், இன்றுடன் 64 முறை வழக்கமான பட்ஜெட்டும், 12 இடைக்கால பட்ஜெட்களும் மற்றும் நான்கு முறை விசேஷ கோரிக்கைக்கான நிதிநிலை அறிக்கைளும் சேர்த்து, மொத்தம் 80 என்ற எண்ணிக்கையை எட்டுகிறது.

சலுகைகள் ஏதாவது இருக்குமா? நிதியமைச்சர் பிரணாப் இன்று அறிவிப்பு

மத்திய பட்ஜெட் இன்று பெரிய எதிர்பார்ப்புடன் தாக்கலாகிறது. இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் சுதந்திர இந்தியாவின் 80வது பட்ஜெட் ஆகும். நடுத்தர மக்கள், விவசாயத்தை முன்னேற்ற வழிகள், உணவுப் பாதுகாப்பு திட்டத்திற்கு அதிக முன்னுரிமை, அடிப்படை கட்டுமானப் பணிகளுக்கு அதிக முன்னுரிமை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக பட்ஜெட்டிற்கு முன் தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வறிக்கை அரசின் செயல்பாட்டைக் காட்டும் கண்ணாடி என்று கூறுவது வழக்கம். அதில், மொத்த வளர்ச்சி 9 சதவீதத்தை எட்டும் என்று நம்பிக்கை காட்டப்பட்டிருக்கிறது. அதை மீடியாக்கள் அதிக விளம்பரப்படுத்தியுள்ளன. ஆனால், தலைசிறந்த பொருளாதார நிபுணர்கள் இந்த சதவீதத்தை எட்ட முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளனர். எர்னஸ்ட் அண்ட் யங்க் என்ற பொருளாதார அமைப்பின் தலைவர் அஸ்வின் பரேக் கூறுகையில், " 9 சதவீத வளர்ச்சி என்பதை அடைவது சிரமம். கடந்த நான்கு மாதங்களில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள் இதற்கு ஆதாரம். இதைவிட லிபியாவில் ஏற்பட்ட நெருக்கடியால், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பும் சுமையாகும்' என்றிருக்கிறார். தவிரவும் மற்ற துறைகள் வளர்ச்சி காணப்படாமல் மொத்த வளர்ச்சி என்பது சுலபமல்ல என்றும் கூறப்படுகிறது.

இன்று தாக்கல் செய்யப்படும் 2011 - 2012ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி வரம்பு ஆண்டு ஒன்றுக்கு 2 லட்ச ரூபாயாக உயர்த்தப்படலாம் என்ற நம்பிக்கை காணப்படுகிறது. அதே போல சேமிப்பு மேற்கொள்ளும் போது, அதிக சலுகை இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனெனில், சமீபத்திய விலைவாசி உயர்வு பாமர மற்றும் நடுத்தர மக்களின் பர்சை காலியாக்கி விட்டதால், அரசு அதை தடுப்பதுடன், சேமிப்பையும் அதிகரிக்க வழிகாணும் என்ற கருத்து உள்ளது. ஏற்கனவே மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டிருக்கும் புதிய நேரடி வரிவிதிப்பு நடைமுறை இன்னமும் அமலாகவில்லை. ஆனால், அதன் நோக்கங்களின் படி தனி நபர் வருமான வரி வரம்பு ஆண்டுக்கு 2 லட்ச ரூபாயாக உயர்த்தப்படலாம் என்று, வரி குறித்த நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

விவசாயம் : அரசுக்குள்ள மற்றொரு பயங்கர சவால், விவசாயத்துறை வளர்ச்சியாகும். இந்த ஆண்டில் பருவ மழை நன்றாக அமைந்த காரணத்தால், அரசு வெளியிட்ட சர்வேயின்படி, விவசாய வளர்ச்சி 5 சதவீதத்தைத் தாண்டி விட்டது. இருந்தாலும், நிதியமைச்சர் உலக உணவு தானிய உற்பத்தி நிலைமையைக் கணக்கில் கொண்டு, இந்த உற்பத்தியை அதிகரிக்க விரும்பி, இனி இரண்டாவது பசுமைப் புரட்சி தேவை என்று வலியுறுத்தியிருக்கிறார். இந்த விஷயத்தில், வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன், "விவசாயத்தில் இளைஞர்களை ஈர்க்கும் திட்டங்கள் தேவை, விவசாயத்தில் அறுவடை காலத்திலும், விவசாயப் பொருட்களைச் சந்தைப் படுத்துவதிலும் அரசும் தனியாரும் இணைந்த ஆதரவுக் கொள்கை தேவை' என்று வலியுறுத்தியுள்ளார். அதைத் தவிர, பிரதமருக்கு விவசாயத் தொழில் சம்பந்தமாக ஆலோசனை கூறும் பூபீந்தர் ஹோடா குழு, " விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் 4 சதவீத வட்டியில் தரப்பட வேண்டும்' என்று யோசனை கூறியிருக்கிறது. இது பட்ஜெட்டில் எதிரொலித்தால், விவசாயிகளைக் கவரும் திட்டமாக அமையும். ஏனெனில், அடுத்த ஆண்டு விவசாய மொத்த உற்பத்தி 3 சதவீதத்தை மட்டுமே எட்டும் என்று அரசு அறிக்கை கூறுகிறது. ஆகவே, இந்த பட்ஜெட்டில் விவசாயத் துறைக்கு 4 லட்சம் கோடி ரூபாய் கடன் தர இலக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில், கடந்த இருபது ஆண்டுகளில் விவசாய நிலம் மொத்த அளவில் 2 சதவீதம் சுருங்கி விட்டது. கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன் 1.85 கோடி எக்டேர் விவசாய நிலம் இருந்தது. உணவு உற்பத்தியை இது பாதிக்கவில்லை என்றாலும், இது கவலை தரும் அம்சமாகும். அது போல, கால்நடைச் செல்வங்களால் கிடைக்கும் வளமும் குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால், பால் பொருட்களுக்கு இறக்குமதியை நம்ப வேண்டி வரும் என, அரசின் பொருளாதார அறிக்கை தெரிவிக்கிறது. பால் உற்பத்தி அதிகரிப்பு, கால்நடைத் தீவனங்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது ஆகியவற்றிற்கு நடைமுறை தேவை என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பங்குச் சந்தை: இதைத் தவிர, கறுப்புப்பணம் மீட்புக்கான நடவடிக்கை குறித்த தகவல் பட்ஜெட்டில் இருக்கும். பங்குச் சந்தை தற்போது இறக்கத்தில் உள்ளது. சோதிடர்கள் கருத்துப்படி, இது நவம்பர் வரை தொடருமாம். மேலும், நிதியமைச்சர் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தை விட மொத்த நிதிப்பற்றாக்குறை அபாயத்தை அடிக்கடி பேசுபவர். அதனால் தான் "3ஜி' ஸ்பெக்ட்ரம் விற்பனையில் அதிக வருவாயை ஈட்டித் தந்திருக்கிறார். குறிப்பாக கச்சா எண்ணெய் விலை உயர்வு எண்ணெய் கம்பெனிகளை பாதிக்காதிருக்க மத்திய அரசின் சுங்க வரிக் குறைப்பை அவர் அறிவிக்கலாம்.மேலும் தமிழகம், அசாம் உட்பட ஐந்து மாநில தேர்தலுக்காக, சில சலுகைகளும் இதில் இடம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.


10 தடவை மொரார்ஜி பட்ஜெட் : இன்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தனது ஆறாவது பட்ஜெட்டை ( 2011 - 2012) தாக்கல் செய்கிறார். இது இந்தியா சுதந்திரம் பெற்ற பின் தாக்கல் செய்யப்படும் 80வது பட்ஜெட். தவிரவும் மத்திய நிதியமைச்சராக ஆறாவது தடவை பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.இந்தியா 1947ல் சுதந்திரம் பெற்ற பின் நவ., 26, 1947 ல் முதலாவதாக தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.கே.சண்முகம் செட்டியார் பட்ஜெட் தாக்கல் செய்தார். நாட்டில் அதிக அளவாக பத்து முறை பட்ஜெட் தாக்கல் செய்த பெருமை மொரார்ஜி தேசாயைச் சாரும். மத்திய நிதியமைச்சர்களாக சிதம்பரம், யஷ்வந்த் சின்கா, சி.டி.தேஷ்முக், ஒய்.பி.சவான் ஆகியோர் ஆறுமுறை பட்ஜெட் தாக்கல் செய்திருக்கின்றனர். மன்மோகன் சிங், டி.டி.கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் ஆறுமுறை பட்ஜெட் தாக்கல் செய்தவர்கள். அந்த வரிசையில் இன்று இடம் பெறுகிறார் பிரணாப்.÷ நரு, இந்திரா, ராஜிவ், சரண்சிங், என்.டி.திவாரி, மதுதண்டவதே போன்றவர்கள் ஒருமுறை பட்ஜெட் தாக்கல் செய்தவர்கள். இரு முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர்களில் ஜஸ்வந்த் சிங், சி.சுப்ரமணியம் குறிப்பிடத்தக்கவர்கள்.நாடு சுதந்திரம் பெற்ற பின், இன்றுடன் 64 முறை வழக்கமான பட்ஜெட்டும், 12 இடைக்கால பட்ஜெட்களும் மற்றும் நான்கு முறை விசேஷ கோரிக்கைக்கான நிதிநிலை அறிக்கைளும் சேர்த்து, மொத்தம் 80 என்ற எண்ணிக்கையை எட்டுகிறது.

முக நூல்

Popular Posts