background img

புதிய வரவு

Showing posts with label Rangaswamy. Show all posts
Showing posts with label Rangaswamy. Show all posts
புதுவை மாநிலத்தில் ரங்கசாமி பெற்ற அமோக வெற்றியின் பின்னணி என்ன? என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

புதுவை மாநிலத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து17 தொகுதிகளில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 15 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி புதுவை அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரங்கசாமி கட்சி தொடங்கிய 2 மாதத்தில் ஆட்சியை பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்த அமோக வெற்றியின் பின்னணிக்கு அனைத்து சமூகத்தினர் ஆதரவே காரணம் என்பது தெரியவந்துள்ளது.

ரங்கசாமி கட்சி தொடங்கியபோது காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்தது. தனி மனிதன் முதல்-அமைச்சர் பதவி பெறுவதற்காக ஒரே ஒரு சமுதாயத்தை நம்பி ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்று விமர்சனம் செய்தனர்.
ஆனால் இந்த விமர்சனம் தவிடுபொடியாகி உள்ளது.

புதுவை மாநிலத்தில் மொத்தம் உள்ள 5 தனி தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ் 4 தொகுதிகளில் போட்டியிட்டது. போட்டியிட்ட நெடுங்காடு, திருபுவனை, ஏம்பலம், ஊசுடு ஆகிய 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள நெட்டப்பாக்கம் தனி தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வே வெற்றி பெற்றுள்ளது. 5 தனி தொகுதிகளிலும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதின் மூலம் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வாக்குகளில் பெரும் பகுதியை கைப்பற்றி உள்ளது தெரியவந்துள்ளது.

இதோடு பிற சமூகத்தினர் மற்றும் சிறுபான்மையினரும் ரங்கசாமியின் பக்கமே இருந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. அதோடு பெண்களும், முதன்முறையாக வாக்களித்த இளைஞர்களும் பெரும்வாரியாக ரங்கசாமிக்கே வாக்களித்துள்ளனர்.

இதற்கு ரங்கசாமி தன்னுடைய ஆட்சி காலத்தில் முதியோர் மற்றும் விதவைகள் பென்சன் தொகை பெறலாம் என்பதால் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் பென்சன் பெறலாம் என்பதை இணைத்ததும் பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் முத்திரைதாள் கட்டணத்தில் சலுகை என்ற அறிவித்ததும் காரணம் ஆகும்.

இதேபோல் பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை ரங்கசாமி அறிவித்த காலை மாலை உணவு திட்டம், பள்ளி மாணவர்கள் உபகரணம் வாங்க நிதி, காமராஜர் கல்வி நிதி உதவி திட்டம் ஆகியவை கவர்ந்து இருந்தது.

இந்த திட்டங்களில் சிலவற்றை ரங்கசாமியை அடுத்து பதவிக்கு வந்த காங்கிரஸ் அரசு நிறுத்தியது. சில திட்டங்களில் வரைமுறைகளை மாற்றி அமைத்தது. இது முதன்முதலாக வாக்களிக்கும் மாணவர்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் இந்த வாக்குகள் ரங்கசாமி பக்கம் அப்படியே திரும்பியது.

இவையே ரங்கசாமியின் அமோக வெற்றிக்கு பின்னணியாக இருந்தது.

ரங்கசாமிக்கு அமோக ஆதரவு கிடைத்தது எப்படி?

புதுவை மாநிலத்தில் ரங்கசாமி பெற்ற அமோக வெற்றியின் பின்னணி என்ன? என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

புதுவை மாநிலத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து17 தொகுதிகளில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 15 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி புதுவை அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரங்கசாமி கட்சி தொடங்கிய 2 மாதத்தில் ஆட்சியை பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்த அமோக வெற்றியின் பின்னணிக்கு அனைத்து சமூகத்தினர் ஆதரவே காரணம் என்பது தெரியவந்துள்ளது.

ரங்கசாமி கட்சி தொடங்கியபோது காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்தது. தனி மனிதன் முதல்-அமைச்சர் பதவி பெறுவதற்காக ஒரே ஒரு சமுதாயத்தை நம்பி ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்று விமர்சனம் செய்தனர்.
ஆனால் இந்த விமர்சனம் தவிடுபொடியாகி உள்ளது.

புதுவை மாநிலத்தில் மொத்தம் உள்ள 5 தனி தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ் 4 தொகுதிகளில் போட்டியிட்டது. போட்டியிட்ட நெடுங்காடு, திருபுவனை, ஏம்பலம், ஊசுடு ஆகிய 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள நெட்டப்பாக்கம் தனி தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வே வெற்றி பெற்றுள்ளது. 5 தனி தொகுதிகளிலும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதின் மூலம் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வாக்குகளில் பெரும் பகுதியை கைப்பற்றி உள்ளது தெரியவந்துள்ளது.

இதோடு பிற சமூகத்தினர் மற்றும் சிறுபான்மையினரும் ரங்கசாமியின் பக்கமே இருந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. அதோடு பெண்களும், முதன்முறையாக வாக்களித்த இளைஞர்களும் பெரும்வாரியாக ரங்கசாமிக்கே வாக்களித்துள்ளனர்.

இதற்கு ரங்கசாமி தன்னுடைய ஆட்சி காலத்தில் முதியோர் மற்றும் விதவைகள் பென்சன் தொகை பெறலாம் என்பதால் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் பென்சன் பெறலாம் என்பதை இணைத்ததும் பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் முத்திரைதாள் கட்டணத்தில் சலுகை என்ற அறிவித்ததும் காரணம் ஆகும்.

இதேபோல் பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை ரங்கசாமி அறிவித்த காலை மாலை உணவு திட்டம், பள்ளி மாணவர்கள் உபகரணம் வாங்க நிதி, காமராஜர் கல்வி நிதி உதவி திட்டம் ஆகியவை கவர்ந்து இருந்தது.

இந்த திட்டங்களில் சிலவற்றை ரங்கசாமியை அடுத்து பதவிக்கு வந்த காங்கிரஸ் அரசு நிறுத்தியது. சில திட்டங்களில் வரைமுறைகளை மாற்றி அமைத்தது. இது முதன்முதலாக வாக்களிக்கும் மாணவர்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் இந்த வாக்குகள் ரங்கசாமி பக்கம் அப்படியே திரும்பியது.

இவையே ரங்கசாமியின் அமோக வெற்றிக்கு பின்னணியாக இருந்தது.

புதுவை மாநில சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதில் 17 தொகுதிகளில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 15 இடங்களை பிடித்தது. இதில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட ரங்கசாமி 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால் என்.ஆர்.காங்கிரசின் பலம் 14 ஆக உள்ளது.

இந்த நிலையில் காரைக்கால் நிரவி-திருப்பட்டினம் தொகுதியில் இருந்து சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற வி.எம்.சி.சிவக்குமார் என்.ஆர்.காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதற்கான ஆதரவு கடிதத்தையும் ரங்கசாமியிடம் அளித்துள்ளார்.

இந்த கடிதம் கவர்னரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுயேட்சை எம்.எல்.வி.ன் ஆதரவு கிடைத்து இருப்பதால் ரங்கசாமி கட்சியான என்.ஆர்.காங்கிரசால் தனித்து ஆட்சி அமைக்க முடியும். இதனால் தனது ஆட்சியில் அ.தி.மு.க.வுக்கு பங்களிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து கவர்னர் இக்பால்சிங்கை சந்தித்து திரும்பிய ரங்கசாமியிடம் நிருபர்கள் எப்போது ஆட்சி அமைக்க போகிறீர்கள்? முதல்-அமைச்சராக எப்போது பதவி ஏற்பீர்கள்? உங்களது ஆட்சியில் அ.தி.மு.க.வுக்கு பங்கு உண்டா? ஜெயலலிதாவை எப்போது சந்திப்பீர்கள்? என பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

இந்த கேள்விகளுக்கு ரங்கசாமி பதில் அளிக்கும்போது, நேரடியாக ஆட்சியில் அ.தி.மு.க. பங்கேற்கும் என்று தெரிவிக்க வில்லை. அதற்கு பதிலாக தமிழக முதல்வர் டாக்டர் அம்மா அவர்களின் நல் ஆசியுடனும், ஆதரவுடனும் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமையும் என்று கூறினார். மேலும் பதவி ஏற்பதற்கான தேதியை முடிவு செய்தபின் தெரிவிப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

ஜெயலலிதா ஆசியுடன் ஆட்சி அமைப்போம்: ரங்கசாமி பேட்டி

புதுவை மாநில சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதில் 17 தொகுதிகளில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 15 இடங்களை பிடித்தது. இதில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட ரங்கசாமி 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால் என்.ஆர்.காங்கிரசின் பலம் 14 ஆக உள்ளது.

இந்த நிலையில் காரைக்கால் நிரவி-திருப்பட்டினம் தொகுதியில் இருந்து சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற வி.எம்.சி.சிவக்குமார் என்.ஆர்.காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதற்கான ஆதரவு கடிதத்தையும் ரங்கசாமியிடம் அளித்துள்ளார்.

இந்த கடிதம் கவர்னரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுயேட்சை எம்.எல்.வி.ன் ஆதரவு கிடைத்து இருப்பதால் ரங்கசாமி கட்சியான என்.ஆர்.காங்கிரசால் தனித்து ஆட்சி அமைக்க முடியும். இதனால் தனது ஆட்சியில் அ.தி.மு.க.வுக்கு பங்களிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து கவர்னர் இக்பால்சிங்கை சந்தித்து திரும்பிய ரங்கசாமியிடம் நிருபர்கள் எப்போது ஆட்சி அமைக்க போகிறீர்கள்? முதல்-அமைச்சராக எப்போது பதவி ஏற்பீர்கள்? உங்களது ஆட்சியில் அ.தி.மு.க.வுக்கு பங்கு உண்டா? ஜெயலலிதாவை எப்போது சந்திப்பீர்கள்? என பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

இந்த கேள்விகளுக்கு ரங்கசாமி பதில் அளிக்கும்போது, நேரடியாக ஆட்சியில் அ.தி.மு.க. பங்கேற்கும் என்று தெரிவிக்க வில்லை. அதற்கு பதிலாக தமிழக முதல்வர் டாக்டர் அம்மா அவர்களின் நல் ஆசியுடனும், ஆதரவுடனும் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமையும் என்று கூறினார். மேலும் பதவி ஏற்பதற்கான தேதியை முடிவு செய்தபின் தெரிவிப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

புதுச்சேரி : புதுச்சேரியில் முதன் முறையாக, இரண்டு தொகுதியில் ரங்கசாமி வெற்றி பெற்று, சாதனை படைத்துள்ளார். புதுச்சேரி சட்டசபை தேர்தலில், என்.ஆர்.காங்., கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான ரங்கசாமி கதிர்காமம், இந்திராநகர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரு தொகுதியிலும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாதனை படைத்துள்ளார். இந்திரா நகர் தொகுதியில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்.,வேட்பாளர் ஆறுமுகத்தை விட, ரங்கசாமி கூடுதலாக 16,677 ஓட்டுகள் பெற்றார். கதிர்காமம் தொகுதியில், காங்., சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாளை விட, ரங்கசாமி 9,757 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
புதுச்சேரியில் முதன் முறையாக, இரண்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரங்கசாமி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

2 தொகுதிகளிலும் ரங்கசாமி வெற்றி

புதுச்சேரி : புதுச்சேரியில் முதன் முறையாக, இரண்டு தொகுதியில் ரங்கசாமி வெற்றி பெற்று, சாதனை படைத்துள்ளார். புதுச்சேரி சட்டசபை தேர்தலில், என்.ஆர்.காங்., கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான ரங்கசாமி கதிர்காமம், இந்திராநகர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரு தொகுதியிலும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாதனை படைத்துள்ளார். இந்திரா நகர் தொகுதியில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்.,வேட்பாளர் ஆறுமுகத்தை விட, ரங்கசாமி கூடுதலாக 16,677 ஓட்டுகள் பெற்றார். கதிர்காமம் தொகுதியில், காங்., சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாளை விட, ரங்கசாமி 9,757 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
புதுச்சேரியில் முதன் முறையாக, இரண்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரங்கசாமி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

முக நூல்

Popular Posts