background img

புதிய வரவு

Showing posts with label Ready to join any alliance. Show all posts
Showing posts with label Ready to join any alliance. Show all posts
ஓசூர் : ""தமிழகத்தில், தி.மு.க., - காங்., ஊழல் கூட்டணியை தோற்கடிக்க, எந்த கட்சிகளுடனும் கூட்டணி அமைக்க பாரதிய ஜனதா தயாராக உள்ளது,'' என, மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூரில் பாரதிய ஜனதா கட்சி சட்டசபை தொகுதி தேர்தல் ஆலோசனை கூட்டம், மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆறு சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடுவது எனவும், தொகுதி வாரியாக மூன்று ஊராட்சிகளை ஒருங்கிணைத்து, தேர்தல் கமிட்டி அமைத்து, தேர்தல் பணி மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்பின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள தி.மு.க., - காங்., ஊழல் கூட்டணியை தோற்கடிக்க எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயாராக உள்ளோம். "2ஜி' முடிந்து தற்போது "4ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 2 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பணபலம் மற்றும் அதிகாரம் பலமிக்க ஊழல் கூட்டணியை, நாட்டை விட்டு விரட்டுவதற்கு மக்கள் முடிவு செய்து விட்டனர். மக்களை ஒருங்கிணைக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்.இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

தி.மு.க.,வை தோற்கடிக்க எந்த கூட்டணியிலும் சேர தயார் : பா.ஜ., மாநில தலைவர் பேச்சு

ஓசூர் : ""தமிழகத்தில், தி.மு.க., - காங்., ஊழல் கூட்டணியை தோற்கடிக்க, எந்த கட்சிகளுடனும் கூட்டணி அமைக்க பாரதிய ஜனதா தயாராக உள்ளது,'' என, மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூரில் பாரதிய ஜனதா கட்சி சட்டசபை தொகுதி தேர்தல் ஆலோசனை கூட்டம், மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆறு சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடுவது எனவும், தொகுதி வாரியாக மூன்று ஊராட்சிகளை ஒருங்கிணைத்து, தேர்தல் கமிட்டி அமைத்து, தேர்தல் பணி மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்பின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள தி.மு.க., - காங்., ஊழல் கூட்டணியை தோற்கடிக்க எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயாராக உள்ளோம். "2ஜி' முடிந்து தற்போது "4ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 2 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பணபலம் மற்றும் அதிகாரம் பலமிக்க ஊழல் கூட்டணியை, நாட்டை விட்டு விரட்டுவதற்கு மக்கள் முடிவு செய்து விட்டனர். மக்களை ஒருங்கிணைக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்.இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

முக நூல்

Popular Posts