background img

புதிய வரவு

Showing posts with label Sathik basha. Show all posts
Showing posts with label Sathik basha. Show all posts
புதுதில்லி, மார்ச் 17: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய கூட்டாளியும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் விசாரிக்கப்பட்டவருமான சாதிக்பாட்சாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரும் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டிருக்கிறது.
கிரீன் ஹவுஸ் புரொமோட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சாதிக்பாட்சா சென்னையில் அவரது இல்லத்தில் புதன்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் இறந்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடிவெடுத்திருப்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் ஏ.கே.கங்குலி, ஜி.எஸ். சிங்வி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் முன்பு இந்த விவகாரம் வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டது. ஏற்கெனவே ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் தொடர்பாக விசாரித்து வரும் சிபிஐ, பாட்சா இறந்த வழக்கையும் விசாரிக்க வேண்டும் என்று சிபிஐஎல் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கோரினார்.
இதற்காக மனு தாக்கல் செய்யப்பட்டால் அதை விசாரிப்போம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். எனினும் மாநில அரசே சிபிஐ விசாரணைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகத் தெரிவதால் கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டும் என்றும் வழக்கறிஞரைக் கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து, சிபிஐ விசாரணை கோரி மாநில அரசு மனு செய்யாவிட்டால், தான் மனு தாக்கல் செய்யப் போவதாக பிரசாந்த பூஷண் தெரிவித்தார். இறந்த சாதிக் பாட்சாவை சிபிஐ அதிகாரிகள் 4 முறை விசாரித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதிக் பாட்சா இறந்த வழக்கு: சிபிஐ விசாரணை கோரும் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

புதுதில்லி, மார்ச் 17: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய கூட்டாளியும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் விசாரிக்கப்பட்டவருமான சாதிக்பாட்சாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரும் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டிருக்கிறது.
கிரீன் ஹவுஸ் புரொமோட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சாதிக்பாட்சா சென்னையில் அவரது இல்லத்தில் புதன்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் இறந்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடிவெடுத்திருப்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் ஏ.கே.கங்குலி, ஜி.எஸ். சிங்வி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் முன்பு இந்த விவகாரம் வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டது. ஏற்கெனவே ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் தொடர்பாக விசாரித்து வரும் சிபிஐ, பாட்சா இறந்த வழக்கையும் விசாரிக்க வேண்டும் என்று சிபிஐஎல் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கோரினார்.
இதற்காக மனு தாக்கல் செய்யப்பட்டால் அதை விசாரிப்போம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். எனினும் மாநில அரசே சிபிஐ விசாரணைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகத் தெரிவதால் கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டும் என்றும் வழக்கறிஞரைக் கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து, சிபிஐ விசாரணை கோரி மாநில அரசு மனு செய்யாவிட்டால், தான் மனு தாக்கல் செய்யப் போவதாக பிரசாந்த பூஷண் தெரிவித்தார். இறந்த சாதிக் பாட்சாவை சிபிஐ அதிகாரிகள் 4 முறை விசாரித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக நூல்

Popular Posts