background img

புதிய வரவு

Showing posts with label supreme court. Show all posts
Showing posts with label supreme court. Show all posts

அணுகுண்டுகளை விட பிளாஸ்டிக் பைகள் ஏற்படுத்தும் விளைவுகள் மோசமானவை' என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், தடை விதிப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

இந்தியா முழுவதிலும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி விலங்குகள் நலனுக்காக செயல்பட்டு வரும் கருணா சொசைட்டி என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், `சுற்றுச்சூழலுக்கு பெரிதும் அச்சுறுத்தலாக விளங்கும் பிளாஸ்டிக் பைகளை முறையாக அப்புறப்படுத்துவதில் அரசு மெத்தனத்துடன் செயல்பட்டு வருகிறது.

குப்பைக் கூளங்களில் வீசப்படும் பிளாஸ்டிக் பைகளை, ஆடு, மாடுகள் உண்பதால், அதனுடைய வயிற்றில் சிக்கி பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சமீபத்திய கால்நடை ஆராய்ச்சி ஒன்றில், ஆடு, மாடுகள் வயிற்றில் இருந்து 30 முதல் 50 கிலோ வரை பிளாஸ்டிக் பைகள் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

எனவே, பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டிற்கு நாடு முழுவதும் தடை விதிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது.

நேற்று இந்த மனு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு, மத்திய, மாநில அரசுகள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலும், இந்த மனு தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், ``அணுகுண்டுகள் ஏற்படுத்தும் அழிவை விட, எதிர்காலத்தில் பிளாஸ்டிக் பைகள் ஏற்படுத்தும் விளைவுகள் மோசமானதாக இருக்கும். பிளாஸ்டிக் உபயோகத்தால், நகர் மற்றும் கிராம பகுதிகள் நாசமடைகின்றன. நிலம், ஆறு மற்றும் நிலத்தடி நீர் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

இதனை தற்போது ஒழிக்க நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், இது எதிர்கால சந்ததியினரையும் கடுமையாக பாதிக்கும்'' என்று தெரிவித்தனர்.

அணுகுண்டுகளை விட பிளாஸ்டிக் பைகள் ஏற்படுத்தும் விளைவுகள் மோசமானவை: உச்சநீதிமன்றம்


அணுகுண்டுகளை விட பிளாஸ்டிக் பைகள் ஏற்படுத்தும் விளைவுகள் மோசமானவை' என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், தடை விதிப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

இந்தியா முழுவதிலும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி விலங்குகள் நலனுக்காக செயல்பட்டு வரும் கருணா சொசைட்டி என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், `சுற்றுச்சூழலுக்கு பெரிதும் அச்சுறுத்தலாக விளங்கும் பிளாஸ்டிக் பைகளை முறையாக அப்புறப்படுத்துவதில் அரசு மெத்தனத்துடன் செயல்பட்டு வருகிறது.

குப்பைக் கூளங்களில் வீசப்படும் பிளாஸ்டிக் பைகளை, ஆடு, மாடுகள் உண்பதால், அதனுடைய வயிற்றில் சிக்கி பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சமீபத்திய கால்நடை ஆராய்ச்சி ஒன்றில், ஆடு, மாடுகள் வயிற்றில் இருந்து 30 முதல் 50 கிலோ வரை பிளாஸ்டிக் பைகள் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

எனவே, பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டிற்கு நாடு முழுவதும் தடை விதிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது.

நேற்று இந்த மனு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு, மத்திய, மாநில அரசுகள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலும், இந்த மனு தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், ``அணுகுண்டுகள் ஏற்படுத்தும் அழிவை விட, எதிர்காலத்தில் பிளாஸ்டிக் பைகள் ஏற்படுத்தும் விளைவுகள் மோசமானதாக இருக்கும். பிளாஸ்டிக் உபயோகத்தால், நகர் மற்றும் கிராம பகுதிகள் நாசமடைகின்றன. நிலம், ஆறு மற்றும் நிலத்தடி நீர் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

இதனை தற்போது ஒழிக்க நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், இது எதிர்கால சந்ததியினரையும் கடுமையாக பாதிக்கும்'' என்று தெரிவித்தனர்.


தனிக்கோர்ட்டில் நடந்து வரும் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையை ஒத்திவைப்பு ஏதுமின்றி தினசரி நடத்துமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மத்திய அரசின் ஆட்சேபணையையும் மீறி, இந்த வழக்கின் சிறப்பு அரசு வக்கீலாக யு.யு.லலித்தை நியமிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.


ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பான எந்த மனுவையும் எந்த கோர்ட்டும் விசாரணைக்கு ஏற்கக்கூடாது என்றும், அத்தகைய மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில்தான் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


ஸ்பெக்ட்ரம் வழக்கில், வருகிற 24ந் தேதி துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சி.பி.ஐ. தெரிவித்தது. இதையடுத்து, அடுத்தகட்ட விசாரணையை 26ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

சிறப்பு வக்கீல் நியமனம்: ஸ்பெக்ட்ரம் வழக்கை தினசரி நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு

தனிக்கோர்ட்டில் நடந்து வரும் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையை ஒத்திவைப்பு ஏதுமின்றி தினசரி நடத்துமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மத்திய அரசின் ஆட்சேபணையையும் மீறி, இந்த வழக்கின் சிறப்பு அரசு வக்கீலாக யு.யு.லலித்தை நியமிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.


ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பான எந்த மனுவையும் எந்த கோர்ட்டும் விசாரணைக்கு ஏற்கக்கூடாது என்றும், அத்தகைய மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில்தான் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


ஸ்பெக்ட்ரம் வழக்கில், வருகிற 24ந் தேதி துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சி.பி.ஐ. தெரிவித்தது. இதையடுத்து, அடுத்தகட்ட விசாரணையை 26ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

புதுதில்லி, மார்ச் 17: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய கூட்டாளியும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் விசாரிக்கப்பட்டவருமான சாதிக்பாட்சாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரும் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டிருக்கிறது.
கிரீன் ஹவுஸ் புரொமோட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சாதிக்பாட்சா சென்னையில் அவரது இல்லத்தில் புதன்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் இறந்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடிவெடுத்திருப்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் ஏ.கே.கங்குலி, ஜி.எஸ். சிங்வி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் முன்பு இந்த விவகாரம் வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டது. ஏற்கெனவே ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் தொடர்பாக விசாரித்து வரும் சிபிஐ, பாட்சா இறந்த வழக்கையும் விசாரிக்க வேண்டும் என்று சிபிஐஎல் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கோரினார்.
இதற்காக மனு தாக்கல் செய்யப்பட்டால் அதை விசாரிப்போம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். எனினும் மாநில அரசே சிபிஐ விசாரணைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகத் தெரிவதால் கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டும் என்றும் வழக்கறிஞரைக் கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து, சிபிஐ விசாரணை கோரி மாநில அரசு மனு செய்யாவிட்டால், தான் மனு தாக்கல் செய்யப் போவதாக பிரசாந்த பூஷண் தெரிவித்தார். இறந்த சாதிக் பாட்சாவை சிபிஐ அதிகாரிகள் 4 முறை விசாரித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதிக் பாட்சா இறந்த வழக்கு: சிபிஐ விசாரணை கோரும் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

புதுதில்லி, மார்ச் 17: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய கூட்டாளியும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் விசாரிக்கப்பட்டவருமான சாதிக்பாட்சாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரும் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டிருக்கிறது.
கிரீன் ஹவுஸ் புரொமோட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சாதிக்பாட்சா சென்னையில் அவரது இல்லத்தில் புதன்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் இறந்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடிவெடுத்திருப்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் ஏ.கே.கங்குலி, ஜி.எஸ். சிங்வி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் முன்பு இந்த விவகாரம் வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டது. ஏற்கெனவே ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் தொடர்பாக விசாரித்து வரும் சிபிஐ, பாட்சா இறந்த வழக்கையும் விசாரிக்க வேண்டும் என்று சிபிஐஎல் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கோரினார்.
இதற்காக மனு தாக்கல் செய்யப்பட்டால் அதை விசாரிப்போம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். எனினும் மாநில அரசே சிபிஐ விசாரணைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகத் தெரிவதால் கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டும் என்றும் வழக்கறிஞரைக் கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து, சிபிஐ விசாரணை கோரி மாநில அரசு மனு செய்யாவிட்டால், தான் மனு தாக்கல் செய்யப் போவதாக பிரசாந்த பூஷண் தெரிவித்தார். இறந்த சாதிக் பாட்சாவை சிபிஐ அதிகாரிகள் 4 முறை விசாரித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தே.மு.தி.க கட்சி சார்பில் முரசு சின்னம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 13 கட்சிகள் தங்களுக்கு குறிப்பிட்ட சின்னம் ஒதுக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

கட்சி சின்னம் கேட்டு 13 கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

தே.மு.தி.க கட்சி சார்பில் முரசு சின்னம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 13 கட்சிகள் தங்களுக்கு குறிப்பிட்ட சின்னம் ஒதுக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.


டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடுகள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பலனடைந்த மற்றவர்களையும் விசாரிக்குமாறும் சிபிஐக்கும், மற்ற விசாரணை அமைப்புகளுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அதன் விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை கடந்த டிசம்பர் 16ம் தேதி விசாரித்த நீதிபதிகள் சிங்வி, கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த வழக்கை சி.பி.ஐ. மற்றும் விசாரணை அமைப்புகள் உரிய முறையில் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்றும், அதை நாங்கள் நேரடியாக கண்காணிப்போம் என்றும், விசாரணையின் விவரங்களை பிப்ரவரி 10ம் தேதி (இன்று) சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு ஆகியவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவுக்கு பின்னரே சி.பி.ஐ. தனது விசாரணையை தீவிரப்படுத்தி நிரா ராடியா, தொலை தொடர்புத்துறை முன்னாள்-இன்னாள் அதிகாரிகள், தொழிலதிபர்களின் வீடுகள், அலுவலகங்களில் ரெய்ட் நடத்தியது.

இதைத் தொடர்ந்து ராசா, அதிகாரிகள் சந்தோலியா, பெகுரியா, ஸ்வான் டெலிகாம் அதிபர் உஸ்மான் ஆகியோரை கைது செய்தது.

இந் நிலையில் கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் மற்றும் ரெய்டின்போது கிடைத்த தகவல்களை இன்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது.

மேலும் இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையான எப்ஐஆரை வரும் மார்ச் 31ம் தேதி தாக்கல் செய்வதாகவும் சிபிஐ அறிவித்தது.

இதையடுத்துப் பேசிய நீதிபதிகள், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டால் லாபம் அடைந்த மற்றவர்கள் குறித்தும் சிபிஐ முழு விசாரணை நடத்த வேண்டும்.

இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்த மத்திய அரசு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

ஏலம் விடாமல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தது தவறு:

இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. அவர் விசாரணை நடத்தி 143 பக்க அறிக்கையை மத்திய அமைச்சர் கபில் சிபலிடம் தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில் விவரம் வெளியாகி உள்ளது. அதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலம் விடாமல் முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு கொடுத்தது தவறு. இதில் வெளிப்படையான தன்மை இருந்திருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஸ்பெக்ட்ரம் ஊழல்: சிறப்பு நீதிமன்றம் அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு!


டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடுகள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பலனடைந்த மற்றவர்களையும் விசாரிக்குமாறும் சிபிஐக்கும், மற்ற விசாரணை அமைப்புகளுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அதன் விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை கடந்த டிசம்பர் 16ம் தேதி விசாரித்த நீதிபதிகள் சிங்வி, கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த வழக்கை சி.பி.ஐ. மற்றும் விசாரணை அமைப்புகள் உரிய முறையில் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்றும், அதை நாங்கள் நேரடியாக கண்காணிப்போம் என்றும், விசாரணையின் விவரங்களை பிப்ரவரி 10ம் தேதி (இன்று) சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு ஆகியவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவுக்கு பின்னரே சி.பி.ஐ. தனது விசாரணையை தீவிரப்படுத்தி நிரா ராடியா, தொலை தொடர்புத்துறை முன்னாள்-இன்னாள் அதிகாரிகள், தொழிலதிபர்களின் வீடுகள், அலுவலகங்களில் ரெய்ட் நடத்தியது.

இதைத் தொடர்ந்து ராசா, அதிகாரிகள் சந்தோலியா, பெகுரியா, ஸ்வான் டெலிகாம் அதிபர் உஸ்மான் ஆகியோரை கைது செய்தது.

இந் நிலையில் கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் மற்றும் ரெய்டின்போது கிடைத்த தகவல்களை இன்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது.

மேலும் இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையான எப்ஐஆரை வரும் மார்ச் 31ம் தேதி தாக்கல் செய்வதாகவும் சிபிஐ அறிவித்தது.

இதையடுத்துப் பேசிய நீதிபதிகள், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டால் லாபம் அடைந்த மற்றவர்கள் குறித்தும் சிபிஐ முழு விசாரணை நடத்த வேண்டும்.

இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்த மத்திய அரசு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

ஏலம் விடாமல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தது தவறு:

இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. அவர் விசாரணை நடத்தி 143 பக்க அறிக்கையை மத்திய அமைச்சர் கபில் சிபலிடம் தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில் விவரம் வெளியாகி உள்ளது. அதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலம் விடாமல் முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு கொடுத்தது தவறு. இதில் வெளிப்படையான தன்மை இருந்திருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

புதுடெல்லி: நாட்டில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பது பற்றி உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. வட மாநிலங்களில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கும்படியும், குழந்தை மற்றும் வயதுக்கு வராதோர் (மைனர்) குறித்து உள்ள குழப்பத்தை தெளிவுபடுத்த சட்டத்தில் திருத்தம் செய்ய அரசுக்கு உத்தரவிடக் கோரியும், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறிப்பாக, இந்திய தண்டனை சட்டத்தில் 16வயதுக்கு உட்பட குழந்தையை மைனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து திருமண சட்டத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள பெண் மைனர் என்று கூறப்பட்டுள்ளது. 18 வயதானோருக்கு ஓட்டளிக்கும் உரிமை உள்ளது. ஆனால், 18 வயது உள்ளவர்கள் தேர்தலில் நிற்க முடியாது. இந்த குழப்பங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி தல்வீர் பண்டாரி தலைமையிலான பெஞ்ச் நேற்று விசாரித்தது. அப்போது, ‘மைனர் திருமணங்களை தடுக்க சட்டம் உள்ளது. எனினும், நாட்டில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பது கவலையளிக்கிறது. குறிப்பாக அக்ஷய திருதியை போன்ற தினங்களில் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடக்கின்றன‘‘ என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஏப்ரல் மாதத்துக்கு தள்ளி வைத்தனர்.

குழந்தை திருமணம் உச்ச நீதிமன்றம் கவலை

புதுடெல்லி: நாட்டில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பது பற்றி உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. வட மாநிலங்களில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கும்படியும், குழந்தை மற்றும் வயதுக்கு வராதோர் (மைனர்) குறித்து உள்ள குழப்பத்தை தெளிவுபடுத்த சட்டத்தில் திருத்தம் செய்ய அரசுக்கு உத்தரவிடக் கோரியும், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறிப்பாக, இந்திய தண்டனை சட்டத்தில் 16வயதுக்கு உட்பட குழந்தையை மைனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து திருமண சட்டத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள பெண் மைனர் என்று கூறப்பட்டுள்ளது. 18 வயதானோருக்கு ஓட்டளிக்கும் உரிமை உள்ளது. ஆனால், 18 வயது உள்ளவர்கள் தேர்தலில் நிற்க முடியாது. இந்த குழப்பங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி தல்வீர் பண்டாரி தலைமையிலான பெஞ்ச் நேற்று விசாரித்தது. அப்போது, ‘மைனர் திருமணங்களை தடுக்க சட்டம் உள்ளது. எனினும், நாட்டில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பது கவலையளிக்கிறது. குறிப்பாக அக்ஷய திருதியை போன்ற தினங்களில் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடக்கின்றன‘‘ என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஏப்ரல் மாதத்துக்கு தள்ளி வைத்தனர்.


“இத்தனை முன் நடவடிக்கைகள் எடுத்தும், ஜல்லிக்கட்டில் ஈடுபடுவோர் உயிரிழக்கும் நிலை தொடர்ந்தால், அதனை ஏன் தடை செய்யக்கூடாது? ஒவ்வொரு ஆண்டும் இப்படி அவர்கள் உயிரிழப்பதும், காயம்படுவதையும் அனுமதிக்க முடியாது” என்று இந்திய உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

ஜல்லிக்கட்டு வீர விளையாட்டிற்கு எதிராக விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கை செவ்வாய்க் கிழமை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.வி.இரவீந்திரன், ஏ.கே.பட்நாயக் ஆகியோர் கொண்டு நீதிமன்ற அமர்வு இவ்வாறு எச்சரித்துள்ளது.

இவ்வழக்கில் மத்திய விலங்குகள் நல வாரியத்தின் சார்பாக நேர் நின்ற வழக்கறிஞர் விஜய் பஞ்வானி, இநத ஆண்டு பொங்கல் கொண்டாட்டத்தின் போது, ஜனவரி 15 முதல் 19ஆம் தேதிவரை, ஒன்பது இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர், 215 போட்டியாளர்களும், 214 பார்வையாளர்களும் காயமுற்றுள்ளனர் என்று கூறியுள்ளதோடு, “இப்போட்டியில் கடைபிடிக்கப்படும் வழிமுறைகளை வைத்து இந்த விளையாட்டையே காட்டுமிராண்டித்தனமானது என்று கூறலாம் என்று கூறிவிட்டு, ஜல்லிக்கட்டிற்குத் தடை விதிக்க வேண்டும” என்று வாதிட்டுள்ளார்.

வழக்கு எதற்கு? காளையை காப்பாற்றவா? மனிதரைக் காக்கவா?


2008ஆம் ஆண்டு விலங்குகள் நல வாரியம் இந்த வழக்கைத் தொடர்ந்தபோது அது கூறிய மிக முக்கியமான காரணம்: ஜல்லிக்கட்டு விளையாட்டில் ஈடுபடுத்தப்படும் காளைகள் துன்புறுத்தலிற்குள்ளாகின்றன, அதனை அனுமதிக்க முடியாது என்பதே. அந்த ஒற்றை அடிப்படையில்தான் இந்த வழக்கு அப்போது தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு விசாரித்தது. ஆனால் விலங்குகள் நல வாரியத்தின் சார்பாக நேர் நின்று வாதிட்டுள்ள வழக்கறிஞர் விஜய் பஞ்வானி, பொங்கல் பண்டிகையின் போது நடந்த 9 ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் 2 பேர் உயிரிழ்ந்தனர், 215 போட்டியாளர்கள் காயமுற்றனர் என்றுதான் கூறியுள்ளாரே தவிர, இதில் ஈடுபடுத்தப்பட்ட காளைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றே கூறியுள்ளார். அப்படித்தான் பல நாளிதழ்கள் - தமிழனுக்கு எதிராக செய்திகள் வெளியிட்டுவரும் ஒரு ஆங்கில நாளிதழைத் தவிர - செய்திகளை வெளியிட்டுள்ளன.

ஆனால், நீதிபதிகள் இருவரும், அந்த அடிப்படையை விட்டுவிட்டு, அதில் களமிறங்கும் காளையர்கள் உயிரிழக்கின்றனரே என்று கேட்டுவிட்டு, அதனடிப்படையில் ஏன் தடை விதிக்கக் கூடாது என்று மிரட்டியுள்ளனர். இது அடிப்படையில் வழக்கை திசை திருப்பும் முயற்சியாகும். வழக்கின் ஒரே அடிப்படை, அதில் ஈடுபடுத்தப்படும் காளைகள் துன்புறுத்தப்படுகின்றனவா? இல்லையா? என்பதுதான்.

அதற்கான விளக்கத்தை தமிழக அரசும், ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை நடத்திவரும் பல்வேறு கிராம அமைப்புகளின் ஒன்றிணைப்பு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தெளிவாக விளக்கப்பட்டுவிட்டது. ஜல்லிக்கட்டில் ஈடுபடுத்தப்படும் காளைகள் பயிற்றுவிக்கப்பட்டவை, அதற்காகவே வளர்க்கப்பட்டவை என்று விளக்கப்பட்டதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில்தான், சர்க்கஸில் பயன்படுத்தப்படும் விலங்குகளைப் போல இவையும் பயிற்றுவிக்கப்பட்ட விலங்குகள் (Performing Animals) என்று விலங்குகள் நலச் சட்டத்தில் உள்ள பிரிவின்படி ஒப்புக்கொள்ளப்பட்டது. அந்த அடிப்படையில்தான் ஜல்லிக்கட்டு நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதனை கிராம மக்கள் நடத்த முடியாதபடி செய்ய நிபந்தனையும் விதிக்கப்பட்டது!

இப்போது மனிதர்கள் உயிரிழக்கிறார்கள், காயப்படுகிறார்கள், காளைகளின் கண்களில் மிளகாய் பொடி தூவி இறக்குகிறார்கள் என்று எப்படியாவது ஜல்லிக்கட்டு தடை விதித்தே அழித்துவிடும் நோக்கில்...

ஜல்லிக்கட்டு: சட்ட திருத்தம் மட்டுமே காப்பாற்றும்


“இத்தனை முன் நடவடிக்கைகள் எடுத்தும், ஜல்லிக்கட்டில் ஈடுபடுவோர் உயிரிழக்கும் நிலை தொடர்ந்தால், அதனை ஏன் தடை செய்யக்கூடாது? ஒவ்வொரு ஆண்டும் இப்படி அவர்கள் உயிரிழப்பதும், காயம்படுவதையும் அனுமதிக்க முடியாது” என்று இந்திய உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

ஜல்லிக்கட்டு வீர விளையாட்டிற்கு எதிராக விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கை செவ்வாய்க் கிழமை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.வி.இரவீந்திரன், ஏ.கே.பட்நாயக் ஆகியோர் கொண்டு நீதிமன்ற அமர்வு இவ்வாறு எச்சரித்துள்ளது.

இவ்வழக்கில் மத்திய விலங்குகள் நல வாரியத்தின் சார்பாக நேர் நின்ற வழக்கறிஞர் விஜய் பஞ்வானி, இநத ஆண்டு பொங்கல் கொண்டாட்டத்தின் போது, ஜனவரி 15 முதல் 19ஆம் தேதிவரை, ஒன்பது இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர், 215 போட்டியாளர்களும், 214 பார்வையாளர்களும் காயமுற்றுள்ளனர் என்று கூறியுள்ளதோடு, “இப்போட்டியில் கடைபிடிக்கப்படும் வழிமுறைகளை வைத்து இந்த விளையாட்டையே காட்டுமிராண்டித்தனமானது என்று கூறலாம் என்று கூறிவிட்டு, ஜல்லிக்கட்டிற்குத் தடை விதிக்க வேண்டும” என்று வாதிட்டுள்ளார்.

வழக்கு எதற்கு? காளையை காப்பாற்றவா? மனிதரைக் காக்கவா?


2008ஆம் ஆண்டு விலங்குகள் நல வாரியம் இந்த வழக்கைத் தொடர்ந்தபோது அது கூறிய மிக முக்கியமான காரணம்: ஜல்லிக்கட்டு விளையாட்டில் ஈடுபடுத்தப்படும் காளைகள் துன்புறுத்தலிற்குள்ளாகின்றன, அதனை அனுமதிக்க முடியாது என்பதே. அந்த ஒற்றை அடிப்படையில்தான் இந்த வழக்கு அப்போது தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு விசாரித்தது. ஆனால் விலங்குகள் நல வாரியத்தின் சார்பாக நேர் நின்று வாதிட்டுள்ள வழக்கறிஞர் விஜய் பஞ்வானி, பொங்கல் பண்டிகையின் போது நடந்த 9 ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் 2 பேர் உயிரிழ்ந்தனர், 215 போட்டியாளர்கள் காயமுற்றனர் என்றுதான் கூறியுள்ளாரே தவிர, இதில் ஈடுபடுத்தப்பட்ட காளைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றே கூறியுள்ளார். அப்படித்தான் பல நாளிதழ்கள் - தமிழனுக்கு எதிராக செய்திகள் வெளியிட்டுவரும் ஒரு ஆங்கில நாளிதழைத் தவிர - செய்திகளை வெளியிட்டுள்ளன.

ஆனால், நீதிபதிகள் இருவரும், அந்த அடிப்படையை விட்டுவிட்டு, அதில் களமிறங்கும் காளையர்கள் உயிரிழக்கின்றனரே என்று கேட்டுவிட்டு, அதனடிப்படையில் ஏன் தடை விதிக்கக் கூடாது என்று மிரட்டியுள்ளனர். இது அடிப்படையில் வழக்கை திசை திருப்பும் முயற்சியாகும். வழக்கின் ஒரே அடிப்படை, அதில் ஈடுபடுத்தப்படும் காளைகள் துன்புறுத்தப்படுகின்றனவா? இல்லையா? என்பதுதான்.

அதற்கான விளக்கத்தை தமிழக அரசும், ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை நடத்திவரும் பல்வேறு கிராம அமைப்புகளின் ஒன்றிணைப்பு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தெளிவாக விளக்கப்பட்டுவிட்டது. ஜல்லிக்கட்டில் ஈடுபடுத்தப்படும் காளைகள் பயிற்றுவிக்கப்பட்டவை, அதற்காகவே வளர்க்கப்பட்டவை என்று விளக்கப்பட்டதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில்தான், சர்க்கஸில் பயன்படுத்தப்படும் விலங்குகளைப் போல இவையும் பயிற்றுவிக்கப்பட்ட விலங்குகள் (Performing Animals) என்று விலங்குகள் நலச் சட்டத்தில் உள்ள பிரிவின்படி ஒப்புக்கொள்ளப்பட்டது. அந்த அடிப்படையில்தான் ஜல்லிக்கட்டு நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதனை கிராம மக்கள் நடத்த முடியாதபடி செய்ய நிபந்தனையும் விதிக்கப்பட்டது!

இப்போது மனிதர்கள் உயிரிழக்கிறார்கள், காயப்படுகிறார்கள், காளைகளின் கண்களில் மிளகாய் பொடி தூவி இறக்குகிறார்கள் என்று எப்படியாவது ஜல்லிக்கட்டு தடை விதித்தே அழித்துவிடும் நோக்கில்...

மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி)அறிக்கையின் அடிப்படையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் 2ஜி ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், எனவே ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட அலைக்கற்றை வரிசையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கூறி தன்னார்வ அமைப்பு ஒன்றும், ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிஏஜி-யின் அறிக்கை மற்றும் அதில் உள்ள புகார்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட உரிமங்களை ரத்து செய்ய முடியாது என்று கூறினர்.

மேலும், மத்திய அரசு தாக்கல் செய்யும் அந்த அறிக்கையின் அடிப்படையிலும், விசாரணையின் முடிவில் கிடைக்கப்பெறும் உண்மையின் அடிப்படையிலுமே நீதிமன்றம் முடிவெடுக்க முடியும் என்று நீதிபதிகள் கூறினர்.

'சிஏஜி அறிக்கையின் அடிப்படையில் 2ஜி உரிமங்களை ரத்து செய்ய முடியாது

மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி)அறிக்கையின் அடிப்படையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் 2ஜி ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், எனவே ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட அலைக்கற்றை வரிசையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கூறி தன்னார்வ அமைப்பு ஒன்றும், ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிஏஜி-யின் அறிக்கை மற்றும் அதில் உள்ள புகார்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட உரிமங்களை ரத்து செய்ய முடியாது என்று கூறினர்.

மேலும், மத்திய அரசு தாக்கல் செய்யும் அந்த அறிக்கையின் அடிப்படையிலும், விசாரணையின் முடிவில் கிடைக்கப்பெறும் உண்மையின் அடிப்படையிலுமே நீதிமன்றம் முடிவெடுக்க முடியும் என்று நீதிபதிகள் கூறினர்.

புதுடெல்லி: 2ஜி அலைக்கற்றை உரிமத்தை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தணிக்கை அறிக்கையை ஆதாரமாக வைத்து உரிமத்தை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் 2ஜி அலைக்கற்றை வழக்கை மார்ச் 1ந் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

2ஜி அலைக்கற்றை உரிமத்தை ரத்து செய்ய முடியாது: உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: 2ஜி அலைக்கற்றை உரிமத்தை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தணிக்கை அறிக்கையை ஆதாரமாக வைத்து உரிமத்தை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் 2ஜி அலைக்கற்றை வழக்கை மார்ச் 1ந் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

குஜராத் கலவர வழக்கில் அன்னிய தலையீடு தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 

குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் சாட்சியம் அளிப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரி, ஜெனீவாவை தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகளுக்கான தூதரகத்தை, குஜராத்தை சேர்ந்த சமூக சேவகர் செட்வால்ட் என்பவர் தலைமையிலான 'நீதி மற்றும் அமைதிக்கான மையம்' அணுகியிருந்தது. 

மேலும் குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் தம்மையும் ஒரு மனுதாரராக செட்வால்ட் சேர்த்திருந்தார். 

இந்நிலையில் குஜராத் கலவர வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, கலவர வழக்கில் சாட்சியமளிப்பவர்களுக்கு பாதுகாப்பு கோரி ஜெனீவா அமைப்பிடம் செட்வால்ட் முறையிட்டதற்கு நீதிபதி டி.கே. ஜெயின் தலைமையிலான அமர்வு கடும் ஆட்சேபம் தெரிவித்தது; 

அத்துடன் குஜராத் கலவர வழக்குகளில் அன்னிய தலையீடை அனுமதிக்க முடியாது என்றும், அவர்களது வழிகாட்டுதல்படி நீதிமன்றத்தால் செயல்பட முடியாது என்றும் நீதிபதிகள் காட்டமாக கூறினர். 

குஜராத் கலவர வழக்கில் அன்னிய தலையீடு தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

குஜராத் கலவர வழக்கில் அன்னிய தலையீடு தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 

குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் சாட்சியம் அளிப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரி, ஜெனீவாவை தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகளுக்கான தூதரகத்தை, குஜராத்தை சேர்ந்த சமூக சேவகர் செட்வால்ட் என்பவர் தலைமையிலான 'நீதி மற்றும் அமைதிக்கான மையம்' அணுகியிருந்தது. 

மேலும் குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் தம்மையும் ஒரு மனுதாரராக செட்வால்ட் சேர்த்திருந்தார். 

இந்நிலையில் குஜராத் கலவர வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, கலவர வழக்கில் சாட்சியமளிப்பவர்களுக்கு பாதுகாப்பு கோரி ஜெனீவா அமைப்பிடம் செட்வால்ட் முறையிட்டதற்கு நீதிபதி டி.கே. ஜெயின் தலைமையிலான அமர்வு கடும் ஆட்சேபம் தெரிவித்தது; 

அத்துடன் குஜராத் கலவர வழக்குகளில் அன்னிய தலையீடை அனுமதிக்க முடியாது என்றும், அவர்களது வழிகாட்டுதல்படி நீதிமன்றத்தால் செயல்பட முடியாது என்றும் நீதிபதிகள் காட்டமாக கூறினர். 

முக நூல்

Popular Posts