background img

புதிய வரவு

Showing posts with label Simran. Show all posts
Showing posts with label Simran. Show all posts
சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக திகழ்ந்த நடிகை சிம்ரன், புதிதாக தயாரிப்பாளராக அவதரித்திருக்கும் இருக்கும் நிலையில், இப்போது இயக்குநராகவும் மாறி இருக்கிறார்.

வி.ஐ.பி., அவள் வருவாளா, ஜோடி, கண்ணெதிரே ‌தோன்றினாள், வாலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சிம்ரன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகள் நடித்த சிம்ரன், தீபக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்ட சிம்ரன், ஒரு குழந்தைக்கு தாயான பின்னர் மீண்டும் நடிக்க வந்தார். டி.வி., சீரியல் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் தான் சிம்ரனுக்கு மீண்டும் ஒரு குழந்தை பிறந்தது. இதனால் நடிப்பிற்கு முழுவதுமாக முழுக்கு போட்டுவிட்டு சினிமா தயாரிக்கலாம் என்று முடிவு செய்தார். முதற்கட்டமாக இந்தியில் பிளாக்பஸ்டரான படம் ஒன்றை தமிழில் ரீ-மேக் செய்ய இருக்கிறார். விரைவில் படத்திற்கான இயக்குநர் மற்றும் நடிகர்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது. இந்நிலையில் படத் தயாரிப்புகளுடன், டைரக்ட் பணியை செய்யலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார் சிம்ரன்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, படம் இயக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் ஆசை. நிறைய படங்களில் நடித்திருப்பதால் அதில் கிடைத்த அனுபவத்தை வைத்து என்னால் படம் இயக்க முடியும். தற்போது படம் இயக்குவதற்கான கதை எழுதும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறேன். விரைவில் ஒரு தயாரிப்பாளராக மற்றும் இயக்குநராக உங்கள் முன் தோன்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

தயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன்

சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக திகழ்ந்த நடிகை சிம்ரன், புதிதாக தயாரிப்பாளராக அவதரித்திருக்கும் இருக்கும் நிலையில், இப்போது இயக்குநராகவும் மாறி இருக்கிறார்.

வி.ஐ.பி., அவள் வருவாளா, ஜோடி, கண்ணெதிரே ‌தோன்றினாள், வாலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சிம்ரன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகள் நடித்த சிம்ரன், தீபக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்ட சிம்ரன், ஒரு குழந்தைக்கு தாயான பின்னர் மீண்டும் நடிக்க வந்தார். டி.வி., சீரியல் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் தான் சிம்ரனுக்கு மீண்டும் ஒரு குழந்தை பிறந்தது. இதனால் நடிப்பிற்கு முழுவதுமாக முழுக்கு போட்டுவிட்டு சினிமா தயாரிக்கலாம் என்று முடிவு செய்தார். முதற்கட்டமாக இந்தியில் பிளாக்பஸ்டரான படம் ஒன்றை தமிழில் ரீ-மேக் செய்ய இருக்கிறார். விரைவில் படத்திற்கான இயக்குநர் மற்றும் நடிகர்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது. இந்நிலையில் படத் தயாரிப்புகளுடன், டைரக்ட் பணியை செய்யலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார் சிம்ரன்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, படம் இயக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் ஆசை. நிறைய படங்களில் நடித்திருப்பதால் அதில் கிடைத்த அனுபவத்தை வைத்து என்னால் படம் இயக்க முடியும். தற்போது படம் இயக்குவதற்கான கதை எழுதும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறேன். விரைவில் ஒரு தயாரிப்பாளராக மற்றும் இயக்குநராக உங்கள் முன் தோன்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

பிரபல நடிகை சிம்ரன். இவர் நடித்த நேருக்கு நேர், வாலி, துள்ளாத மனமும் துள்ளும், பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம் போன்ற பல படங்கள் வெற்றிகரமாக ஓடின. சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த போதே தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மும்பையில் சில மாதங்கள் தங்கினார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அக்காள், அண்ணி வேடங்களில் நடித்தார். 2009-ல் அவர் கடைசியாக நடித்த “ஐந்தாம் படை” படம் ரிலீசானது. அதன் பிறகு சினிமாவில் நடிக்கவில்லை.

கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு பகுதியில் பங்களா வீடு கட்டி குடும்பத்துடன் குடியேறினார். இந்த நிலையில் கடந்த வாரம் அவருக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு பெயர் சூட்டு விழா அடுத்த மாதம் நடக்கிறது.

இதற்கிடையில் சினிமாவுக்கு நிரந்தர முழுக்கு போட சிம்ரன் முடிவு செய்துள்ளார். அடுத்து சினிமா தயாரிப்பில் இறங்குகிறார். இதற்காக புது படக்கம்பெனி துவங்குகிறார். அவர் தயாரிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஏப்ரலில் துவங்குகிறது.

இரண்டாவது குழந்தை பிறந்ததால் நடிப்புக்கு முழுக்கு; சினிமா தயாரிப்பில் சிம்ரன்

பிரபல நடிகை சிம்ரன். இவர் நடித்த நேருக்கு நேர், வாலி, துள்ளாத மனமும் துள்ளும், பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம் போன்ற பல படங்கள் வெற்றிகரமாக ஓடின. சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த போதே தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மும்பையில் சில மாதங்கள் தங்கினார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அக்காள், அண்ணி வேடங்களில் நடித்தார். 2009-ல் அவர் கடைசியாக நடித்த “ஐந்தாம் படை” படம் ரிலீசானது. அதன் பிறகு சினிமாவில் நடிக்கவில்லை.

கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு பகுதியில் பங்களா வீடு கட்டி குடும்பத்துடன் குடியேறினார். இந்த நிலையில் கடந்த வாரம் அவருக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு பெயர் சூட்டு விழா அடுத்த மாதம் நடக்கிறது.

இதற்கிடையில் சினிமாவுக்கு நிரந்தர முழுக்கு போட சிம்ரன் முடிவு செய்துள்ளார். அடுத்து சினிமா தயாரிப்பில் இறங்குகிறார். இதற்காக புது படக்கம்பெனி துவங்குகிறார். அவர் தயாரிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஏப்ரலில் துவங்குகிறது.

முக நூல்

Popular Posts