background img

புதிய வரவு

Showing posts with label Strong Quake rocks. Show all posts
Showing posts with label Strong Quake rocks. Show all posts
கிறிஸ்ட்சர்ச் : நியூசிலாந்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை, 400 ஆக அதிகரித்துள்ளது; மேலும் பலர் காணாமல் போயிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. நியூசிலாந்தில், 1936ம் ஆண்டுக்குப் பின் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், அந்நாட்டின் தென்பகுதியில் உள்ள கிறிஸ்ட் சர்ச் நகரம், பெரிதும் பாதிப்புக்கு உள்ளானது.
இதையடுத்து, பிரதமர் ஜான் கீ, தேசிய அவசர நிலையை அறிவித்தார். கிறிஸ்ட்சர்ச் நகரில் தற்போது போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.பலர், இடிபாடுகளுக்கிடையில் சிக்கியுள்ளனர். இவர்களில் எத்தனை பேர் இறந்தனர், எத்தனை பேர் தப்பிப் பிழைத்தனர் என்பது சரியாகத் தெரியவில்லை. எனினும், பலி எண்ணிக்கை 400 ஐத் தொட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நகரின் முக்கிய அடையாளமான, 150 ஆண்டுகள் பழைமையான கதீட்ரல் சர்ச் பெரிதும் சேதமடைந்து விட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டதால், நகரின் பெரும்பான்மைப் பகுதிகள், இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. இதனால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டாலும், நேற்று முன்தினம் இரவு இடிபாடுகளுக்கிடையில் இருந்து, 30 பேர் மீட்கப்பட்டனர்.
தொடர்ந்து இடிபாடுகள் மத்தியில் உயிருடன் இருப்பவர்களைத் தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. குழந்தை பிழைத்த அதிசயம்: நிலநடுக்கம் ஏற்பட்ட போது, நகரின் முக்கியப் பகுதியில் இருந்த கேஷல் செயின்ட் வணிக வளாகத்தில் ஒரு பெண் தன் கையில் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார். நிலநடுக்கத்தின் போது, பீதியில் அவர் அங்கிருந்து வெளியே ஓடி வருவதற்குள் அந்த வளாகம் இடிந்து அவர் மீது விழுந்தது.
அதைப் பார்த்தவர்கள் அவரை மீட்கப் போராடினர். ஆனால், அவர் இறந்து விட்டார். அதிசயமாக அவரது கையில் இருந்த குழந்தை உயிருடன் தப்பி விட்டது.

அழிந்தது கிறிஸ்ட்சர்ச் நகரம் பூகம்ப பலி 400; பலர் காணோம்

கிறிஸ்ட்சர்ச் : நியூசிலாந்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை, 400 ஆக அதிகரித்துள்ளது; மேலும் பலர் காணாமல் போயிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. நியூசிலாந்தில், 1936ம் ஆண்டுக்குப் பின் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், அந்நாட்டின் தென்பகுதியில் உள்ள கிறிஸ்ட் சர்ச் நகரம், பெரிதும் பாதிப்புக்கு உள்ளானது.
இதையடுத்து, பிரதமர் ஜான் கீ, தேசிய அவசர நிலையை அறிவித்தார். கிறிஸ்ட்சர்ச் நகரில் தற்போது போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.பலர், இடிபாடுகளுக்கிடையில் சிக்கியுள்ளனர். இவர்களில் எத்தனை பேர் இறந்தனர், எத்தனை பேர் தப்பிப் பிழைத்தனர் என்பது சரியாகத் தெரியவில்லை. எனினும், பலி எண்ணிக்கை 400 ஐத் தொட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நகரின் முக்கிய அடையாளமான, 150 ஆண்டுகள் பழைமையான கதீட்ரல் சர்ச் பெரிதும் சேதமடைந்து விட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டதால், நகரின் பெரும்பான்மைப் பகுதிகள், இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. இதனால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டாலும், நேற்று முன்தினம் இரவு இடிபாடுகளுக்கிடையில் இருந்து, 30 பேர் மீட்கப்பட்டனர்.
தொடர்ந்து இடிபாடுகள் மத்தியில் உயிருடன் இருப்பவர்களைத் தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. குழந்தை பிழைத்த அதிசயம்: நிலநடுக்கம் ஏற்பட்ட போது, நகரின் முக்கியப் பகுதியில் இருந்த கேஷல் செயின்ட் வணிக வளாகத்தில் ஒரு பெண் தன் கையில் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார். நிலநடுக்கத்தின் போது, பீதியில் அவர் அங்கிருந்து வெளியே ஓடி வருவதற்குள் அந்த வளாகம் இடிந்து அவர் மீது விழுந்தது.
அதைப் பார்த்தவர்கள் அவரை மீட்கப் போராடினர். ஆனால், அவர் இறந்து விட்டார். அதிசயமாக அவரது கையில் இருந்த குழந்தை உயிருடன் தப்பி விட்டது.

மெல்போர்ன்: நியூசிலாந்தில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் , தொன்மையான கட்டடங்களுக்குப் புகழ்பெற்ற கிறிஸ்ட் சர்ச் நகரம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்கிடையில் சிக்கி 65 பேர் பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.ஆஸ்திரேலியா அருகில் உள்ள நியூசிலாந்து நாட்டின் தென்பகுதியில் நேற்று நண்பகலில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகள் பதிவான இந்நிலநடுக்கத்தில், தென்பகுதியின் முக்கிய நகரமான கிறிஸ்ட் சர்ச் நகரம் பெரிதும் சேதம் அடைந்தது.
அந்நகரில் உள்ள பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. தொலைபேசி மற்றும் மின்சார இணைப்புத் துண்டிக்கப்பட்டது. கிறிஸ்ட்சர்ச் விமான நிலையம் மூடப்பட்டது. அங்கிருந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தண்ணீர்க் குழாய்கள் உடைந்ததால் பல தெருக்கள் வெள்ளத்தில் மிதந்தன.இந்நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்கிடையில் சிக்கி 65 பேர் பலியாகியுள்ளனர். பலர் காணாமல் போய்விட்டனர். எனினும் இடிபாடுகளுக்கிடையில் பலர் சிக்கியிருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
கிறிஸ்ட் சர்ச் மேயர் கூறுகையில், "பல கட்டடங்கள் தரை மட்டமானதால், அதில்சிக்கி இறந்தவர்களை கண்டறிய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன' என்றார்,தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுக் கொண்டே இருந்ததால், பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்நகரில் 7.1 புள்ளியளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்குப் பின், மிக அதிகளவில் தற்போது ஏற்பட்டிருக்கிறது.

நியூசிலாந்தில் கடும் பூகம்பம்:65 பேர் பலி: கட்டடங்கள் சேதம்

மெல்போர்ன்: நியூசிலாந்தில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் , தொன்மையான கட்டடங்களுக்குப் புகழ்பெற்ற கிறிஸ்ட் சர்ச் நகரம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்கிடையில் சிக்கி 65 பேர் பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.ஆஸ்திரேலியா அருகில் உள்ள நியூசிலாந்து நாட்டின் தென்பகுதியில் நேற்று நண்பகலில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகள் பதிவான இந்நிலநடுக்கத்தில், தென்பகுதியின் முக்கிய நகரமான கிறிஸ்ட் சர்ச் நகரம் பெரிதும் சேதம் அடைந்தது.
அந்நகரில் உள்ள பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. தொலைபேசி மற்றும் மின்சார இணைப்புத் துண்டிக்கப்பட்டது. கிறிஸ்ட்சர்ச் விமான நிலையம் மூடப்பட்டது. அங்கிருந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தண்ணீர்க் குழாய்கள் உடைந்ததால் பல தெருக்கள் வெள்ளத்தில் மிதந்தன.இந்நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்கிடையில் சிக்கி 65 பேர் பலியாகியுள்ளனர். பலர் காணாமல் போய்விட்டனர். எனினும் இடிபாடுகளுக்கிடையில் பலர் சிக்கியிருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
கிறிஸ்ட் சர்ச் மேயர் கூறுகையில், "பல கட்டடங்கள் தரை மட்டமானதால், அதில்சிக்கி இறந்தவர்களை கண்டறிய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன' என்றார்,தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுக் கொண்டே இருந்ததால், பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்நகரில் 7.1 புள்ளியளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்குப் பின், மிக அதிகளவில் தற்போது ஏற்பட்டிருக்கிறது.

கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்தில் இன்று காலை சக்தி வாய்ந்த பூகம்பம் தாக்கியது. இதில் பல கட்டடங்கள் இடிந்து சேதமடைந்தன. அதில் சிக்கி பலர் பலியாகியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. பூகம்பம் தாக்கியதைத் தொடர்ந்து கிறிஸ்ட்சர்ச் நகர விமான நிலையம் மூடப்பட்டது.

ஆறு மாதங்களுக்கு முன்புதான் தெற்கு நியூசிலாந்தின் முக்கிய சுற்றுலா நகரான கிறிஸ்ட்சர்ச்சில் 7.1 ரிக்டர் அளவிலான பூகம்பம் தாக்கியது. இந்த நிலையில் இன்று காலை கிறிஸ்ட்சர்ச் நகருக்கு அருகே 6.3 ரிக்டர் அளவிலான பூகம்பம் தாக்கியது.

இந்த பூகம்பத்தால் பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. அதில் சிக்கி பலர் பலியாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பதாகவும் கூறப்படுகிறது. ஏராளமான வீடுகள், வணிக நிறுவனங்கள் இடிந்துள்ளன.

ஆங்கிலிகன் கதீட்ரல் என்ற நகரின் பழமையான சர்ச் முற்றிலும் தரைமட்டமாகியுள்ளது. சாலைகள் பிளவுபட்டுள்ளன. பூகம்பம் தாக்கிய பகுதிகளில் உள்ள கட்டடங்களிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

கிறிஸ்ட்சர்ச் விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டு விட்டது. அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி மதியம் 12.51 மணிக்கு இந்த பூகம்பம் தாக்கியது. இது ஏற்பட்ட 10 நிமிடங்கள் கழித்து 5.6 ரிக்டர் அளவிலான நில அதிர்வும் ஏற்பட்டது.

முழுமையான சேத விவரம், பலி விவரம் தெரிய வரவில்லை.

நியூசிலாந்தில் 6.3 ரிக்டர் அளவிலான பூகம்பம் தாக்கியது-பலர் பலி

கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்தில் இன்று காலை சக்தி வாய்ந்த பூகம்பம் தாக்கியது. இதில் பல கட்டடங்கள் இடிந்து சேதமடைந்தன. அதில் சிக்கி பலர் பலியாகியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. பூகம்பம் தாக்கியதைத் தொடர்ந்து கிறிஸ்ட்சர்ச் நகர விமான நிலையம் மூடப்பட்டது.

ஆறு மாதங்களுக்கு முன்புதான் தெற்கு நியூசிலாந்தின் முக்கிய சுற்றுலா நகரான கிறிஸ்ட்சர்ச்சில் 7.1 ரிக்டர் அளவிலான பூகம்பம் தாக்கியது. இந்த நிலையில் இன்று காலை கிறிஸ்ட்சர்ச் நகருக்கு அருகே 6.3 ரிக்டர் அளவிலான பூகம்பம் தாக்கியது.

இந்த பூகம்பத்தால் பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. அதில் சிக்கி பலர் பலியாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பதாகவும் கூறப்படுகிறது. ஏராளமான வீடுகள், வணிக நிறுவனங்கள் இடிந்துள்ளன.

ஆங்கிலிகன் கதீட்ரல் என்ற நகரின் பழமையான சர்ச் முற்றிலும் தரைமட்டமாகியுள்ளது. சாலைகள் பிளவுபட்டுள்ளன. பூகம்பம் தாக்கிய பகுதிகளில் உள்ள கட்டடங்களிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

கிறிஸ்ட்சர்ச் விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டு விட்டது. அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி மதியம் 12.51 மணிக்கு இந்த பூகம்பம் தாக்கியது. இது ஏற்பட்ட 10 நிமிடங்கள் கழித்து 5.6 ரிக்டர் அளவிலான நில அதிர்வும் ஏற்பட்டது.

முழுமையான சேத விவரம், பலி விவரம் தெரிய வரவில்லை.

முக நூல்

Popular Posts