background img

புதிய வரவு

Showing posts with label WORLD. Show all posts
Showing posts with label WORLD. Show all posts

எதிர்ப்பாளர்கள் 846 பேரை படுகொலை செய்தது தொடர்பான வழக்கில் எகிப்தில் விரட்டியடிக்கப்பட்ட முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எகிப்தில் அதிபராக இருந்தவர் ஹோஸ்னி முபாரக். கடந்த ஆண்டு முபாரக்கின் ஆட்சிக்கு எதிராக பெரும் கிளர்ச்சி நடைபெற்றது இக்கிளர்ச்சியின் போது எதிர்ப்பாளர்கள் 846 பேரை படுகொலை செய்ததாக முபாரக் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.இதே வழக்கில் முபாரக் ஆட்சிக்காலத்து அமைச்சர் ஒருவர் மற்றும் அவரது மகன் உட்பட 6 பாதுகாவலர்கள் மீதும்குற்றம்சாட்டப்பட்டுளது.

இந்த வ்ழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தீர்ப்பு நேரலையாகவும் ஒளிபரப்பபடும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து தீர்ப்பு நேரத்தின் போது பெருமளவிலானோர் நீதிமன்றத்தில் குவிந்திருந்தனர். 846 பேரை படுகொலை செய்த வழக்கில் முபாரக், முன்னாள் உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

ஆனால் முபாரக்கின் மகன் மற்றும் 6 பேரை குற்றவாளிகள் அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. இதற்கு நீதிமன்றத்தில் கூடியிருந்தோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எகிப்து முன்னாள் அதிபர் முபாரக்குக்கு ஆயுள் தண்டனை!


எதிர்ப்பாளர்கள் 846 பேரை படுகொலை செய்தது தொடர்பான வழக்கில் எகிப்தில் விரட்டியடிக்கப்பட்ட முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எகிப்தில் அதிபராக இருந்தவர் ஹோஸ்னி முபாரக். கடந்த ஆண்டு முபாரக்கின் ஆட்சிக்கு எதிராக பெரும் கிளர்ச்சி நடைபெற்றது இக்கிளர்ச்சியின் போது எதிர்ப்பாளர்கள் 846 பேரை படுகொலை செய்ததாக முபாரக் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.இதே வழக்கில் முபாரக் ஆட்சிக்காலத்து அமைச்சர் ஒருவர் மற்றும் அவரது மகன் உட்பட 6 பாதுகாவலர்கள் மீதும்குற்றம்சாட்டப்பட்டுளது.

இந்த வ்ழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தீர்ப்பு நேரலையாகவும் ஒளிபரப்பபடும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து தீர்ப்பு நேரத்தின் போது பெருமளவிலானோர் நீதிமன்றத்தில் குவிந்திருந்தனர். 846 பேரை படுகொலை செய்த வழக்கில் முபாரக், முன்னாள் உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

ஆனால் முபாரக்கின் மகன் மற்றும் 6 பேரை குற்றவாளிகள் அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. இதற்கு நீதிமன்றத்தில் கூடியிருந்தோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆப்கான் தலிபான்கள்கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேட்டோ இராணுவ தளம் ஒன்றுக்கு அருகே ஒரு பெரிய குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கோஸ்ட் மாகாணத்தில் உள்ள நேட்டோ தளத்துக்கு அருகே நடந்த இந்த வெடிப்பை அடுத்து, வானில் பெரும் புகை மண்டலம் எழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்றைப் பயன்படுத்தி தாம் அந்த இராணுவ தளத்தை தாக்கியதாக தலிபான்கள் கூறியுள்ளனர்.
இழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இன்னமும் வரவில்லை.

ஆப்கானில் நேட்டோ தளத்தின் மீது தாக்குதல்

ஆப்கான் தலிபான்கள்கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேட்டோ இராணுவ தளம் ஒன்றுக்கு அருகே ஒரு பெரிய குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கோஸ்ட் மாகாணத்தில் உள்ள நேட்டோ தளத்துக்கு அருகே நடந்த இந்த வெடிப்பை அடுத்து, வானில் பெரும் புகை மண்டலம் எழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்றைப் பயன்படுத்தி தாம் அந்த இராணுவ தளத்தை தாக்கியதாக தலிபான்கள் கூறியுள்ளனர்.
இழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இன்னமும் வரவில்லை.

பெய்ரூட்: சிரிய அதிபருக்கு எதிராக நடைபெற்று வரும் உள்நாட்டு போராட்டங்களை ஒடுக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 32 குழந்தைகள் உட்பட 92 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

அதிபர் பஷார் அல் ஆசாத் பதவி விலக வேண்டும் என்பதற்காக கடந்த 14 மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிரியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஹெளலாவில் நேற்று ராணுவம் நடத்திய தாக்குதலில் இளம் பிஞ்சுகள் அகோரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். சிலரது மண்டை ஓடுகள் பிளந்து ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடக்கிற காட்சிகள் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

சிரிய ராணுவத்தின் கோரத் தாக்குதலுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன், பொதுமக்களுக்கு எதிராக கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதை சிரியா ராணுவம் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

சிரிய ராணுவத்தின் அட்டூழியம்: கொடூர தாக்குதலில் குழந்தைகள் உட்பட 92 பேர் பலி

பெய்ரூட்: சிரிய அதிபருக்கு எதிராக நடைபெற்று வரும் உள்நாட்டு போராட்டங்களை ஒடுக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 32 குழந்தைகள் உட்பட 92 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

அதிபர் பஷார் அல் ஆசாத் பதவி விலக வேண்டும் என்பதற்காக கடந்த 14 மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிரியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஹெளலாவில் நேற்று ராணுவம் நடத்திய தாக்குதலில் இளம் பிஞ்சுகள் அகோரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். சிலரது மண்டை ஓடுகள் பிளந்து ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடக்கிற காட்சிகள் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

சிரிய ராணுவத்தின் கோரத் தாக்குதலுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன், பொதுமக்களுக்கு எதிராக கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதை சிரியா ராணுவம் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.


Obama
அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ரகசியமாக நேற்றிரவு ஆப்கானிஸ்தான் வந்தார்.
இந் நிலையில் இன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 3 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் வரை பலியாகியுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு அல் கொய்தா பொறுப்பேற்றுள்ளது.
இன்று அதிகாலை காபூல் வந்த ஒபாமா அங்கு பக்ராம் விமானப் படை மையத்தில் வீரர்களை சந்தித்தார். பின்னர் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாயுடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து இரு நாடுகளும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
பின்னர் அங்கிருந்தபடியே அமெரிக்க மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய ஒபாமா, தீவிரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு எதிரான நிலை திசை திருப்பப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக அல் கொய்தாவையும் தலிபான்களையும் எதிர்த்து போரிட்டு வந்தோம். இதில் கடந்த 3 ஆண்டுகளில் அவர்களை தோற்கடித்துக் காட்டியுள்ளோம். மேலும் அந்த அமைப்பு மீண்டும் உருவெடுக்காமல் தடுப்பதிலும் விரைவில் முழு வெற்றியை ஈட்டவுள்ளோம். ஆனால், அது மிக சவாலான பணியாகவே இருக்கும்.
அல் கொய்தா மற்றும் தலிபானைச் சேர்ந்த 30 மிக முக்கிய தலைவர்களில் 20 பேரை காலி செய்துவிட்டோம். இந்தப் போர் நாம் நினைத்ததை விட நீண்ட காலம் தொடர்ந்துவிட்டது. விரைவில் இந்த நாட்டின் முழுப் பாதுகாப்பையும் ஆப்கானிஸ்தான் படைகளே மேற்கொள்ளவுள்ளன. அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அமெரிக்காவும் நேடோ நாடுகளும் செய்யும்.
ஆனால், இந்த நாட்டில் நிரந்தர பாதுகாப்பு முகாம்களை அமைக்க மாட்டோம். இந்த நாட்டின் மலைகளையும் சமவெளிகளையும் இனி பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆப்கானிஸ்தான் மக்களுடையது.
போர் மூலம் மட்டுமல்லாமல் பேச்சுவார்த்தை மூலமும் தீவிரவாதத்தை ஒழிக்க நான் முயற்சி மேற்கொண்டுள்ளேன். தலிபான்களுடன் நேரடியாக பேச்சு நடத்தியுள்ளோம். அல் கொய்தாவுடன் தொடர்பை துண்டித்துக் கொள்ளுமாறு அவர்களிடம் கூறியுள்ளோம். பல தலிபான் தலைவர்கள் இதற்கு ஒப்புக் கொண்டுவிட்டனர். இந்த அமைதிக் கரத்தை கைப்பற்றாத தலிபான்கள் அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் தாக்குதலுக்கு உள்ளாவார்கள் என்றார் ஒபாமா.
ஒபாமா இந்த உரையை ஆற்றிவிட்டு அமெரிக்காவுக்குப் புறப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில் காபூலில் 3 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் பலியாகியுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
2014ம் ஆண்டில் அமெரிக்கா தலைமையிலான நேடோ படைகள் முழுவதும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த ஆண்டுக்குள் நாட்டின் முழுப் பாதுகாப்பும் ஆப்கானிஸ்தான் படைகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஓபாமா ரகசிய பயணம்: பல இடங்களில் குண்டு வெடிப்பு


Obama
அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ரகசியமாக நேற்றிரவு ஆப்கானிஸ்தான் வந்தார்.
இந் நிலையில் இன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 3 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் வரை பலியாகியுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு அல் கொய்தா பொறுப்பேற்றுள்ளது.
இன்று அதிகாலை காபூல் வந்த ஒபாமா அங்கு பக்ராம் விமானப் படை மையத்தில் வீரர்களை சந்தித்தார். பின்னர் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாயுடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து இரு நாடுகளும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
பின்னர் அங்கிருந்தபடியே அமெரிக்க மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய ஒபாமா, தீவிரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு எதிரான நிலை திசை திருப்பப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக அல் கொய்தாவையும் தலிபான்களையும் எதிர்த்து போரிட்டு வந்தோம். இதில் கடந்த 3 ஆண்டுகளில் அவர்களை தோற்கடித்துக் காட்டியுள்ளோம். மேலும் அந்த அமைப்பு மீண்டும் உருவெடுக்காமல் தடுப்பதிலும் விரைவில் முழு வெற்றியை ஈட்டவுள்ளோம். ஆனால், அது மிக சவாலான பணியாகவே இருக்கும்.
அல் கொய்தா மற்றும் தலிபானைச் சேர்ந்த 30 மிக முக்கிய தலைவர்களில் 20 பேரை காலி செய்துவிட்டோம். இந்தப் போர் நாம் நினைத்ததை விட நீண்ட காலம் தொடர்ந்துவிட்டது. விரைவில் இந்த நாட்டின் முழுப் பாதுகாப்பையும் ஆப்கானிஸ்தான் படைகளே மேற்கொள்ளவுள்ளன. அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அமெரிக்காவும் நேடோ நாடுகளும் செய்யும்.
ஆனால், இந்த நாட்டில் நிரந்தர பாதுகாப்பு முகாம்களை அமைக்க மாட்டோம். இந்த நாட்டின் மலைகளையும் சமவெளிகளையும் இனி பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆப்கானிஸ்தான் மக்களுடையது.
போர் மூலம் மட்டுமல்லாமல் பேச்சுவார்த்தை மூலமும் தீவிரவாதத்தை ஒழிக்க நான் முயற்சி மேற்கொண்டுள்ளேன். தலிபான்களுடன் நேரடியாக பேச்சு நடத்தியுள்ளோம். அல் கொய்தாவுடன் தொடர்பை துண்டித்துக் கொள்ளுமாறு அவர்களிடம் கூறியுள்ளோம். பல தலிபான் தலைவர்கள் இதற்கு ஒப்புக் கொண்டுவிட்டனர். இந்த அமைதிக் கரத்தை கைப்பற்றாத தலிபான்கள் அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் தாக்குதலுக்கு உள்ளாவார்கள் என்றார் ஒபாமா.
ஒபாமா இந்த உரையை ஆற்றிவிட்டு அமெரிக்காவுக்குப் புறப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில் காபூலில் 3 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் பலியாகியுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
2014ம் ஆண்டில் அமெரிக்கா தலைமையிலான நேடோ படைகள் முழுவதும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த ஆண்டுக்குள் நாட்டின் முழுப் பாதுகாப்பும் ஆப்கானிஸ்தான் படைகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.


World Trade Center
 அல் கொய்தா பயங்கரவாதிகளால் விமானம் மூலம் மோதி தகர்க்கப்பட்ட அமெரிக்காவின் நியூயார்க் நகர இரட்டைக் கோபுரம் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டு உள்ளது.
2001-ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டது. இதில் 2500 பேர் பலியாகினர்.
சரித்திரத்தின் சோகமாகிப் போன உலக வர்த்தக மையத்தை உள்ளடக்கிய அந்த இரட்டைக் கோபுரத்தை மீண்டும் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து 1270 அடி உயரத்தில் ஒரு கட்டிடமும் 1776 அடி உயரத்தில் மற்றொரு கட்டிடமும் கட்டப்பட்டு வருகின்றன. இதில் 1250 அடி உயர கட்டிடம் முடிவடையும் நிலையில் உள்ளது.
1776 அடி உயர கோபுரத்தின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு முடிவடையும் என்று கூறப்படுகிறது. இது 104 மாடிகளைக் கொண்டதாக கட்டப்பட்டு வருகிறது.
இந்தப் புதிய கட்டிடம் மூலம் அமெரிக்காவின் உயரமான கட்டிடம் என்ற பெருமையை இரட்டைக் கோபுரம் பெற உள்ளது.
1931-ம் ஆண்டு கட்டப்பட்ட எம்பையர் கட்டிடம்தான் 1545 அடி உயரத்துடன் அமெரிக்காவின் மிக உயர்ந்த கட்டிடம் என்ற பெருமையைப் பெற்றிருந்தது.

விஸ்வரூபமாய் எழும் “இரட்டைக் கோபுரம்”


World Trade Center
 அல் கொய்தா பயங்கரவாதிகளால் விமானம் மூலம் மோதி தகர்க்கப்பட்ட அமெரிக்காவின் நியூயார்க் நகர இரட்டைக் கோபுரம் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டு உள்ளது.
2001-ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டது. இதில் 2500 பேர் பலியாகினர்.
சரித்திரத்தின் சோகமாகிப் போன உலக வர்த்தக மையத்தை உள்ளடக்கிய அந்த இரட்டைக் கோபுரத்தை மீண்டும் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து 1270 அடி உயரத்தில் ஒரு கட்டிடமும் 1776 அடி உயரத்தில் மற்றொரு கட்டிடமும் கட்டப்பட்டு வருகின்றன. இதில் 1250 அடி உயர கட்டிடம் முடிவடையும் நிலையில் உள்ளது.
1776 அடி உயர கோபுரத்தின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு முடிவடையும் என்று கூறப்படுகிறது. இது 104 மாடிகளைக் கொண்டதாக கட்டப்பட்டு வருகிறது.
இந்தப் புதிய கட்டிடம் மூலம் அமெரிக்காவின் உயரமான கட்டிடம் என்ற பெருமையை இரட்டைக் கோபுரம் பெற உள்ளது.
1931-ம் ஆண்டு கட்டப்பட்ட எம்பையர் கட்டிடம்தான் 1545 அடி உயரத்துடன் அமெரிக்காவின் மிக உயர்ந்த கட்டிடம் என்ற பெருமையைப் பெற்றிருந்தது.

வாஷிங்டன் : அடுத்தாண்டில் வரவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தனக்கு ஆதரவு திரட்டுவதற்காக, மூன்று மாகாணங்களுக்கான மூன்று நாள் பஸ் யாத்திரையை நேற்று முன்தினம் துவக்கினார்.

வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதாரப் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நிலவி வரும் சூழலில், அதிபராக பதவியேற்ற பின் ஒபாமா, முதன் முறையாக இந்த பஸ் யாத்திரையை மேற்கொள்கிறார்.

அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களான, மின்னசோட்டா, இல்லினாய்ஸ் மற்றும் அயவா ஆகியவற்றில் மூன்று நாட்கள் இந்த யாத்திரை நடக்கிறது. நேற்று முன்தினம் மின்னசோட்டாவில் தனது யாத்திரையைத் துவக்கிய ஒபாமா, அயவாவில் இன்று முடிக்கிறார். மின்னசோட்டாவில் மக்களிடையே பேசிய அவர், "எனது நடவடிக்கைகளுக்கு குடியரசு கட்சியினர் தொடர்ந்து முட்டுக்கட்டை இட்டு வந்தால், அவர்கள் கடுமையாகத் தோற்கடிக்கப்படுவர். விரைவில், காங்கிரஸ் சபையில் வேலைவாய்ப்புக்கான புதிய திட்டம் ஒன்றை கொண்டு வர உள்ளேன். அதை எதிர்க்கட்சியினர் எதிர்த்தால், அவர்களை எதிர்த்து நான் கடுமையான பிரசாரம் மேற்கொள்ள வேண்டி வரும்' என்றார். நேற்று அயாவா மாகாணத்தில் தனது யாத்திரையைத் தொடர்ந்தார்.

பஸ் யாத்திரையை துவக்கினார் ஒபாமா

வாஷிங்டன் : அடுத்தாண்டில் வரவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தனக்கு ஆதரவு திரட்டுவதற்காக, மூன்று மாகாணங்களுக்கான மூன்று நாள் பஸ் யாத்திரையை நேற்று முன்தினம் துவக்கினார்.

வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதாரப் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நிலவி வரும் சூழலில், அதிபராக பதவியேற்ற பின் ஒபாமா, முதன் முறையாக இந்த பஸ் யாத்திரையை மேற்கொள்கிறார்.

அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களான, மின்னசோட்டா, இல்லினாய்ஸ் மற்றும் அயவா ஆகியவற்றில் மூன்று நாட்கள் இந்த யாத்திரை நடக்கிறது. நேற்று முன்தினம் மின்னசோட்டாவில் தனது யாத்திரையைத் துவக்கிய ஒபாமா, அயவாவில் இன்று முடிக்கிறார். மின்னசோட்டாவில் மக்களிடையே பேசிய அவர், "எனது நடவடிக்கைகளுக்கு குடியரசு கட்சியினர் தொடர்ந்து முட்டுக்கட்டை இட்டு வந்தால், அவர்கள் கடுமையாகத் தோற்கடிக்கப்படுவர். விரைவில், காங்கிரஸ் சபையில் வேலைவாய்ப்புக்கான புதிய திட்டம் ஒன்றை கொண்டு வர உள்ளேன். அதை எதிர்க்கட்சியினர் எதிர்த்தால், அவர்களை எதிர்த்து நான் கடுமையான பிரசாரம் மேற்கொள்ள வேண்டி வரும்' என்றார். நேற்று அயாவா மாகாணத்தில் தனது யாத்திரையைத் தொடர்ந்தார்.

ஐக்கிய அரபு குடியரசு நாட்டைச் சேர்ந்தவர் முகம்மது அல்பலுசி. 65 வயதாகும் இந்த கோடீசுவரர் இதுவரை 17 பெண்களை திருமணம் செய்துள்ளார். 17 மனைவி மூலம் இவருக்கு 90 குழந்தைகள் பிறந்துள்ளனர். அந்த 90 பேரில் பலருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்து விட்டது.

அந்த வகையில் முகம்மது அல்பலுசிக்கு 50 பேரன்- பேத்திகள் உள்ளனர். தற்போது அவரது மனைவிகளில் 2 பேர் கர்ப்பமாக உள்ளனர். எனவே முகம்மது அல்பலுசியின் குழந்தைகள் எண்ணிக்கை விரைவில் 92 ஆக உயர உள்ளது.

என்றாலும் முகம்மது அல்பலுசிக்கு இன்னமும் திருமணம் செய்து கொள்ளும் ஆசையும் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசையும் விடவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் அவர் பாகிஸ்தான் பெண் ஒருவரை 18-வது மனைவியாக திருமணம் செய்ய உள்ளார்.

முகம்மது அல்பலுசிக்கு திருமணம் செய்து கொள்ளும் 4-வது பாகிஸ்தான் பெண் இவர் ஆவார். சட்ட விதிகள் குறுக்கிட்டாலும் இவர், அதற்கு ஏற்ப வளைந்து கொடுத்து பெண்களை திருமணம் செய்து கொள்கிறார்.

விபத்து ஒன்றில் ஒரு காலை இழந்த முகம்மது அல்பலுசி அடுத்த மாதம் ஜெய்ப்பூர் வந்து செயற்கைகால் கருவிகளை மாற்ற திட்டமிட்டுள்ளார். அப்போது அவர், இந்திய பெண் ஒருவரை 19-வது மனைவியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்.

இது குறித்து முகம்மது அல்பலுசி கூறியதாவது:-

என்னை திருமணம் செய்து கொள்ள பல பெண்கள் விரும்புகிறார்கள். அவர்கள் பேசுவது ஒன்றும் நடந்து கொள்வது ஒன்றுமாக இருப்பார்கள். எனக்கு தற்போது இந்திய பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்.

எனது 17 மனைவிகளும் படிக்காதவர்கள். எனவே இந்திய பெண் 18 முதல் 22 வயதுக்குள்ளும் படித்தவராக இருக்க வேண்டும்.

இவ்வாறு முகம்மது அல்பலுசி கூறினார்.

இந்திய பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவது ஏன் என்ற கேள்விக்கு இந்திய பெண்கள் மனிதாபிமானம் மிக்கவர்கள் என்றார்.

90 குழந்தை பெற்றும் ஆசை தீரவில்லை: 19-வது மனைவியை தேடும் சவுதி அரேபியா நாட்டு கிழவர்; 20 வயது படித்த இந்திய பெண் வேண்டும் என்கிறார்

ஐக்கிய அரபு குடியரசு நாட்டைச் சேர்ந்தவர் முகம்மது அல்பலுசி. 65 வயதாகும் இந்த கோடீசுவரர் இதுவரை 17 பெண்களை திருமணம் செய்துள்ளார். 17 மனைவி மூலம் இவருக்கு 90 குழந்தைகள் பிறந்துள்ளனர். அந்த 90 பேரில் பலருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்து விட்டது.

அந்த வகையில் முகம்மது அல்பலுசிக்கு 50 பேரன்- பேத்திகள் உள்ளனர். தற்போது அவரது மனைவிகளில் 2 பேர் கர்ப்பமாக உள்ளனர். எனவே முகம்மது அல்பலுசியின் குழந்தைகள் எண்ணிக்கை விரைவில் 92 ஆக உயர உள்ளது.

என்றாலும் முகம்மது அல்பலுசிக்கு இன்னமும் திருமணம் செய்து கொள்ளும் ஆசையும் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசையும் விடவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் அவர் பாகிஸ்தான் பெண் ஒருவரை 18-வது மனைவியாக திருமணம் செய்ய உள்ளார்.

முகம்மது அல்பலுசிக்கு திருமணம் செய்து கொள்ளும் 4-வது பாகிஸ்தான் பெண் இவர் ஆவார். சட்ட விதிகள் குறுக்கிட்டாலும் இவர், அதற்கு ஏற்ப வளைந்து கொடுத்து பெண்களை திருமணம் செய்து கொள்கிறார்.

விபத்து ஒன்றில் ஒரு காலை இழந்த முகம்மது அல்பலுசி அடுத்த மாதம் ஜெய்ப்பூர் வந்து செயற்கைகால் கருவிகளை மாற்ற திட்டமிட்டுள்ளார். அப்போது அவர், இந்திய பெண் ஒருவரை 19-வது மனைவியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்.

இது குறித்து முகம்மது அல்பலுசி கூறியதாவது:-

என்னை திருமணம் செய்து கொள்ள பல பெண்கள் விரும்புகிறார்கள். அவர்கள் பேசுவது ஒன்றும் நடந்து கொள்வது ஒன்றுமாக இருப்பார்கள். எனக்கு தற்போது இந்திய பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்.

எனது 17 மனைவிகளும் படிக்காதவர்கள். எனவே இந்திய பெண் 18 முதல் 22 வயதுக்குள்ளும் படித்தவராக இருக்க வேண்டும்.

இவ்வாறு முகம்மது அல்பலுசி கூறினார்.

இந்திய பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவது ஏன் என்ற கேள்விக்கு இந்திய பெண்கள் மனிதாபிமானம் மிக்கவர்கள் என்றார்.

கடல் பூமியின் 71 விழுக்காடு பரப்பைப் பொதிந்திருக்கும் உப்பு நீர் கடல் ஆகும்.

கடலின் ஆழம் சராசரியாக 3.8 கி.மீ. 71 விழுக்காடு பரப்பை இந்த மதிப்பினால் பெருக்கினால் கடலின் அளவு 1370 10 கன கிலோ மீட்டர்கள்.

உலகில் பெருமளவு உயிர்களின் வாழிடமாய்த் திகழ்கிறது கடல். கடலை நினைத்தவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது அதன் கவர்ந்திழுக்கும் நீலநிறம்.

ஓய்வில்லாது மோதும் அலைகள், ஓதங்கள், நீரோட்டங்கள், மீன்கள், உவர்ப்பு. கடலின் ஆழம் முழுவதும் ஒரே வெப்பநிலை நிலவுவதில்லை.

வெப்பமண்டல பகுதிகளில் மேல் கடலின் வெப்பநிலை 25 டிகிரி செல்ஷியஸாக இருக்கையில் 50 மீட்டர் ஆழத்தில் எட்டு டிகிரி இருக்கலாம்.

அதுபோன்றே துருவப்பிரதேசக் கடல்களில் மேல் கடல் 0டிகிரி வெப்பநிலையிலும் அதை ஒட்டிக் கிடக்கும் கீழ்ப்பகுதியில் 4டிகிரி வெப்பநிலையிலும் இருக்கும்.

அடிக்கடலில் 8டிகிரி வெப்பநிலையும் நீடிக்கின்றன. நீருக்கு வெப்பத்தை உள்வாங்கும் திறன் மிக அதிகம்.

நன்னீரிலிருந்து கடல்நீரை வேறுபடுத்துவது அதில் கலந்திருக்கும் பொருட்கள் தாம். சாதாரண மாகக் கடல்நீரில் 3.5 விழுக்காடு உப்பு, கடல்நீருக்கு அடர்த்தி அதிகம்.

நிங்கள் ஏரி, குளங்களில் மிதப்பதை விடக் கடல்நீரில் எளிதாய் மிதக்கலாம். கடலில் சூரிய வெளிச்சம் 200 மீட்டர் ஆழத்துக்குக் கீழே எட்டுவதில்லை.

மேல் திரட்டு, நீரோட்டங்கள் அலைகள் எல்லாமாகச் சேர்ந்து பிராணவாயுவைப் பிற்பகுதிகளில் கலந்து பரவச் செய்கின்றன.

இந்தியப் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய பங்களிப்பு செய்து வரும் கடற்சேவை கப்பல் போக்குவரத்து.

ஒரு கோடி இந்திய மக்களுக்கு நேரடி வேலையும் பிற தொழில் வாய்ப்புகளும் தரும் மற்றொரு கடற்சேவை மீன்வளம்.

இந்தியாவின் 7600 கிலோமீட்டர் தீபகற்பக் கடற்கரையில் 50,000 விசை மீன் பிடிப்படகுகளும் 200,000 மோட்டார்ப் படகு மற்றும் பாரம்பரிய மீன்பிடிக் கலங்களும் இயங்கி வருகின்றன.

ஆசிய மக்கள் உண்ணும் மாமிசத்தில் 45 விழுக்காடு மீனுணவுதான். இந்தியாவில் ஆண்டுக்கு 25 இலட்சம் டன் மீன்கள் அறுவடையாகின்றன.

இதன் பொருளாதார மதிப்பு 33000 கோடி ரூபாய் மீன் ஏற்றுமதியின் மூலம் இந்தியா ஆண்டுக்கு 8000 கோடி ஈட்டுகிறது.

வெளிநாடுகளுக்கு மீன்களைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பெருகியுள்ளன. கணவாய் மீன்வகைகள் (cuttle fish and squids) ஜப்பானுக்கு ஏற்றுமதியாகின்றன.

சுறாத் துடுப்புகள்(shark fins)வளைகுடா நாடுகளுக்கும் மேலை நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன.

இந்திய ஏற்றுமதியில் பெரும் பகுதி இரால்தான். வாவல் (pomphrets), கலவாய் (Perches) போன்ற மதிப்பு மிகுந்த மீன்கள் பெரும்பாலும் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.

"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!

கடல் பூமியின் 71 விழுக்காடு பரப்பைப் பொதிந்திருக்கும் உப்பு நீர் கடல் ஆகும்.

கடலின் ஆழம் சராசரியாக 3.8 கி.மீ. 71 விழுக்காடு பரப்பை இந்த மதிப்பினால் பெருக்கினால் கடலின் அளவு 1370 10 கன கிலோ மீட்டர்கள்.

உலகில் பெருமளவு உயிர்களின் வாழிடமாய்த் திகழ்கிறது கடல். கடலை நினைத்தவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது அதன் கவர்ந்திழுக்கும் நீலநிறம்.

ஓய்வில்லாது மோதும் அலைகள், ஓதங்கள், நீரோட்டங்கள், மீன்கள், உவர்ப்பு. கடலின் ஆழம் முழுவதும் ஒரே வெப்பநிலை நிலவுவதில்லை.

வெப்பமண்டல பகுதிகளில் மேல் கடலின் வெப்பநிலை 25 டிகிரி செல்ஷியஸாக இருக்கையில் 50 மீட்டர் ஆழத்தில் எட்டு டிகிரி இருக்கலாம்.

அதுபோன்றே துருவப்பிரதேசக் கடல்களில் மேல் கடல் 0டிகிரி வெப்பநிலையிலும் அதை ஒட்டிக் கிடக்கும் கீழ்ப்பகுதியில் 4டிகிரி வெப்பநிலையிலும் இருக்கும்.

அடிக்கடலில் 8டிகிரி வெப்பநிலையும் நீடிக்கின்றன. நீருக்கு வெப்பத்தை உள்வாங்கும் திறன் மிக அதிகம்.

நன்னீரிலிருந்து கடல்நீரை வேறுபடுத்துவது அதில் கலந்திருக்கும் பொருட்கள் தாம். சாதாரண மாகக் கடல்நீரில் 3.5 விழுக்காடு உப்பு, கடல்நீருக்கு அடர்த்தி அதிகம்.

நிங்கள் ஏரி, குளங்களில் மிதப்பதை விடக் கடல்நீரில் எளிதாய் மிதக்கலாம். கடலில் சூரிய வெளிச்சம் 200 மீட்டர் ஆழத்துக்குக் கீழே எட்டுவதில்லை.

மேல் திரட்டு, நீரோட்டங்கள் அலைகள் எல்லாமாகச் சேர்ந்து பிராணவாயுவைப் பிற்பகுதிகளில் கலந்து பரவச் செய்கின்றன.

இந்தியப் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய பங்களிப்பு செய்து வரும் கடற்சேவை கப்பல் போக்குவரத்து.

ஒரு கோடி இந்திய மக்களுக்கு நேரடி வேலையும் பிற தொழில் வாய்ப்புகளும் தரும் மற்றொரு கடற்சேவை மீன்வளம்.

இந்தியாவின் 7600 கிலோமீட்டர் தீபகற்பக் கடற்கரையில் 50,000 விசை மீன் பிடிப்படகுகளும் 200,000 மோட்டார்ப் படகு மற்றும் பாரம்பரிய மீன்பிடிக் கலங்களும் இயங்கி வருகின்றன.

ஆசிய மக்கள் உண்ணும் மாமிசத்தில் 45 விழுக்காடு மீனுணவுதான். இந்தியாவில் ஆண்டுக்கு 25 இலட்சம் டன் மீன்கள் அறுவடையாகின்றன.

இதன் பொருளாதார மதிப்பு 33000 கோடி ரூபாய் மீன் ஏற்றுமதியின் மூலம் இந்தியா ஆண்டுக்கு 8000 கோடி ஈட்டுகிறது.

வெளிநாடுகளுக்கு மீன்களைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பெருகியுள்ளன. கணவாய் மீன்வகைகள் (cuttle fish and squids) ஜப்பானுக்கு ஏற்றுமதியாகின்றன.

சுறாத் துடுப்புகள்(shark fins)வளைகுடா நாடுகளுக்கும் மேலை நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன.

இந்திய ஏற்றுமதியில் பெரும் பகுதி இரால்தான். வாவல் (pomphrets), கலவாய் (Perches) போன்ற மதிப்பு மிகுந்த மீன்கள் பெரும்பாலும் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.

அடிஸ் அபாபா : சோமாலிய கடல் பகுதியில் நடக்கும் கடல் கொள்ளையை, ஆப்ரிக்க நாடுகளுடன் இணைந்து தடுக்க இந்தியா தயாராக உள்ளது என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங், எத்தியோபியா மற்றும் தான்சானியா நாடுகளுக்கு ஆறு நாள் பயணமாக சென்றுள்ளார். முதல் கட்டமாக, எத்தியோபியாவின் அடிஸ் அபாபா நகரில் நடந்த இந்திய - ஆப்ரிக்க நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்.

எத்தியோபிய பார்லிமென்டில் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவும், ஆப்ரிக்காவும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக இருந்தவை. இந்திய பெருங்கடல் நமது நாடுகளை பிரித்து விட்டது. இந்திய கலாசாரத்துக்கும், ஆப்ரிக்க நாட்டு மக்களுக்கிடையேயும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. எத்தியோபியாவில் அணியப்படும் தலைப்பாகைக்கும் இந்தியர்களின் தலைப்பாகைக்கும் நிறைய ஒற்றுமை காணப்படுகிறது. தென்னிந்தியர்களின் உணவான தோசைக்கும், எத்தியோபியாவின் "இன்ஜாரா' என்ற உணவுக்கும் ஒற்றுமை உள்ளது. எத்தியோபியாவின் அடுலிஸ் நகரம் முன்பொரு காலத்தில் பட்டு, தந்தம், தங்கம் மற்றும் நறுமண உணவுப் பொருட்களின் சந்தையாக இருந்துள்ளது. வியாபார நிமித்தமாக இந்த நகருக்கு வந்த இந்தியர்கள் பலர் இங்கேயே தங்கி விட்டனர். மகாராஷ்டிராவில் உள்ள முருட் ஜன்ஜிரா என்ற கோட்டை, ஆப்ரிக்க சின்னங்களை பிரதிபலிப்பவையாக உள்ளது.

மேற்கு ஆசியா மற்றும் வடக்கு ஆப்ரிக்க நாடுகளில் புரட்சியும், கிளர்ச்சியும் நடந்து கொண்டிருக்கிறது. அதே சமயத்தில், ஆப்ரிக்க கூட்டமைப்பு நாடுகள் தங்கள் பகுதியில் அமைதியையும், ஸ்திர தன்மையையும் ஏற்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வளர்ச்சி இலக்கை நிர்ணயிப்பதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது. சர்வதேச நடவடிக்கைகள் சட்டத்திற்கு உட்பட்டதாகவும், ஐ.நா., வரையறை செய்துள்ள தீர்மானத்துக்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும். சோமாலிய கடற்பகுதியில் கடற்கொள்ளையை தடுக்க ஆப்ரிக்க நாடுகளுடன் இணைந்து செயலாற்ற இந்தியா தயாராக உள்ளது. இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

கடற்கொள்ளையை தடுக்க இந்தியா தயார்: மன்மோகன்

அடிஸ் அபாபா : சோமாலிய கடல் பகுதியில் நடக்கும் கடல் கொள்ளையை, ஆப்ரிக்க நாடுகளுடன் இணைந்து தடுக்க இந்தியா தயாராக உள்ளது என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங், எத்தியோபியா மற்றும் தான்சானியா நாடுகளுக்கு ஆறு நாள் பயணமாக சென்றுள்ளார். முதல் கட்டமாக, எத்தியோபியாவின் அடிஸ் அபாபா நகரில் நடந்த இந்திய - ஆப்ரிக்க நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்.

எத்தியோபிய பார்லிமென்டில் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவும், ஆப்ரிக்காவும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக இருந்தவை. இந்திய பெருங்கடல் நமது நாடுகளை பிரித்து விட்டது. இந்திய கலாசாரத்துக்கும், ஆப்ரிக்க நாட்டு மக்களுக்கிடையேயும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. எத்தியோபியாவில் அணியப்படும் தலைப்பாகைக்கும் இந்தியர்களின் தலைப்பாகைக்கும் நிறைய ஒற்றுமை காணப்படுகிறது. தென்னிந்தியர்களின் உணவான தோசைக்கும், எத்தியோபியாவின் "இன்ஜாரா' என்ற உணவுக்கும் ஒற்றுமை உள்ளது. எத்தியோபியாவின் அடுலிஸ் நகரம் முன்பொரு காலத்தில் பட்டு, தந்தம், தங்கம் மற்றும் நறுமண உணவுப் பொருட்களின் சந்தையாக இருந்துள்ளது. வியாபார நிமித்தமாக இந்த நகருக்கு வந்த இந்தியர்கள் பலர் இங்கேயே தங்கி விட்டனர். மகாராஷ்டிராவில் உள்ள முருட் ஜன்ஜிரா என்ற கோட்டை, ஆப்ரிக்க சின்னங்களை பிரதிபலிப்பவையாக உள்ளது.

மேற்கு ஆசியா மற்றும் வடக்கு ஆப்ரிக்க நாடுகளில் புரட்சியும், கிளர்ச்சியும் நடந்து கொண்டிருக்கிறது. அதே சமயத்தில், ஆப்ரிக்க கூட்டமைப்பு நாடுகள் தங்கள் பகுதியில் அமைதியையும், ஸ்திர தன்மையையும் ஏற்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வளர்ச்சி இலக்கை நிர்ணயிப்பதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது. சர்வதேச நடவடிக்கைகள் சட்டத்திற்கு உட்பட்டதாகவும், ஐ.நா., வரையறை செய்துள்ள தீர்மானத்துக்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும். சோமாலிய கடற்பகுதியில் கடற்கொள்ளையை தடுக்க ஆப்ரிக்க நாடுகளுடன் இணைந்து செயலாற்ற இந்தியா தயாராக உள்ளது. இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

எல் ரெனோ : அமெரிக்காவின் மத்திய பகுதியில் உள்ள ஒக்லஹாமா, கன்சாஸ் மற்றும் அர்கன்சாஸ் மாகாணங்கள், நேற்று வீசிய பயங்கர சூறாவளியால் பெரும் பாதிப்படைந்தன. இச்சூறாவளிக்கு நேற்று மட்டும் 9 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை பலியானோரின் எண்ணிக்கை, 200ஐ தாண்டி விட்டது.
அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் கடந்த 22ம் தேதி, மணிக்கு 320 கி.மீ., வேகத்தில், "டொர்னடோ' என்றழைக்கப்படும் பயங்கர சூறாவளி வீசியது. இதில், 122 பேர் பலியாயினர். அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று அதிகாலையில், ஒக்லஹாமா மாகாணத்தில் உள்ள ஒக்லஹாமா நகரின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள கிராமப் புறங்களைத் தாக்கியது.
இதில், ஐந்து பேர் பலியாயினர். எல் ரெனோ நகரில், "டொர்னடோ' தாக்கியதில், ஒரு காஸ் நிலையம் தீப்பிடித்து எரிந்தது. எல் ரெனோ நகரில் பதிவான குறிப்புகளின்படி, நேற்றைய, "டொர்னடோ' மணிக்கு 243 கி.மீ., வேகத்தில் வீசியுள்ளது. ஒக்லஹாமா நகரின் கனடியன் பகுதியில் தரைமட்டமாகிப் போன வீடுகளைத் தவிர, மீதமுள்ள 58 ஆயிரம் வீடுகளில், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், அவை இருளில் மூழ்கியுள்ளன.
அதேபோல், கன்சாஸ் மற்றும் அர்கன்சாஸ் மாகாணங்களையும் நேற்று, "டொர்னடோ' தாக்கியது. இதில், அர்கன்சாஸ் மாகாணத்தில் பிராங்க்ளின் மற்றும் ஜான்சன் பகுதிகளில் இருவர் பலியாயினர். கன்சாஸ் மாகாணத்தில் இருவர் பலியாயினர். இன்னும் சில நாட்களில் வலுக்கும் இந்தப் புயல், வடகிழக்காகப் பயணிக்கக் கூடும் என்று, அமெரிக்க வானிலை மையம் அறிவித்துள்ளது. அதனால், ஏற்கனவே, "டொர்னடோ'வால் பாதிக்கப்பட்ட மிசவுரி மாகாணத்தின் ஜாப்ளின் நகர மக்கள், மேலும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
"டொர்னடோ' பயணித்த பகுதிகளில் இருந்த வீடுகள், தொழிற்சாலைகள் என அனைத்தும் தரைமட்டமாகியுள்ளன. பல இடங்களில் கார்கள் மற்றும் மரங்கள் கடும் வேகத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த வீடுகளை இழந்தவர்கள், ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, இம்மாதிரி சூறாவளிப் புயல் வழக்கமான ஒன்றுதான் என்றாலும், மிகக் குறுகிய காலத்தில் அடுத்தடுத்து தற்போது தாக்கி வருவதால், மேலும் பல தாக்குதல்களை நிகழ்த்துமோ என்ற பீதியைக் கிளப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை, அமெரிக்க அதிபர் ஒபாமா, வரும் 29ம் தேதி நேரில் பார்வையிடுவார் என, வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

அடுத்தடுத்து சூறாவளி: பலி 200 ஐ தாண்டியது

எல் ரெனோ : அமெரிக்காவின் மத்திய பகுதியில் உள்ள ஒக்லஹாமா, கன்சாஸ் மற்றும் அர்கன்சாஸ் மாகாணங்கள், நேற்று வீசிய பயங்கர சூறாவளியால் பெரும் பாதிப்படைந்தன. இச்சூறாவளிக்கு நேற்று மட்டும் 9 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை பலியானோரின் எண்ணிக்கை, 200ஐ தாண்டி விட்டது.
அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் கடந்த 22ம் தேதி, மணிக்கு 320 கி.மீ., வேகத்தில், "டொர்னடோ' என்றழைக்கப்படும் பயங்கர சூறாவளி வீசியது. இதில், 122 பேர் பலியாயினர். அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று அதிகாலையில், ஒக்லஹாமா மாகாணத்தில் உள்ள ஒக்லஹாமா நகரின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள கிராமப் புறங்களைத் தாக்கியது.
இதில், ஐந்து பேர் பலியாயினர். எல் ரெனோ நகரில், "டொர்னடோ' தாக்கியதில், ஒரு காஸ் நிலையம் தீப்பிடித்து எரிந்தது. எல் ரெனோ நகரில் பதிவான குறிப்புகளின்படி, நேற்றைய, "டொர்னடோ' மணிக்கு 243 கி.மீ., வேகத்தில் வீசியுள்ளது. ஒக்லஹாமா நகரின் கனடியன் பகுதியில் தரைமட்டமாகிப் போன வீடுகளைத் தவிர, மீதமுள்ள 58 ஆயிரம் வீடுகளில், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், அவை இருளில் மூழ்கியுள்ளன.
அதேபோல், கன்சாஸ் மற்றும் அர்கன்சாஸ் மாகாணங்களையும் நேற்று, "டொர்னடோ' தாக்கியது. இதில், அர்கன்சாஸ் மாகாணத்தில் பிராங்க்ளின் மற்றும் ஜான்சன் பகுதிகளில் இருவர் பலியாயினர். கன்சாஸ் மாகாணத்தில் இருவர் பலியாயினர். இன்னும் சில நாட்களில் வலுக்கும் இந்தப் புயல், வடகிழக்காகப் பயணிக்கக் கூடும் என்று, அமெரிக்க வானிலை மையம் அறிவித்துள்ளது. அதனால், ஏற்கனவே, "டொர்னடோ'வால் பாதிக்கப்பட்ட மிசவுரி மாகாணத்தின் ஜாப்ளின் நகர மக்கள், மேலும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
"டொர்னடோ' பயணித்த பகுதிகளில் இருந்த வீடுகள், தொழிற்சாலைகள் என அனைத்தும் தரைமட்டமாகியுள்ளன. பல இடங்களில் கார்கள் மற்றும் மரங்கள் கடும் வேகத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த வீடுகளை இழந்தவர்கள், ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, இம்மாதிரி சூறாவளிப் புயல் வழக்கமான ஒன்றுதான் என்றாலும், மிகக் குறுகிய காலத்தில் அடுத்தடுத்து தற்போது தாக்கி வருவதால், மேலும் பல தாக்குதல்களை நிகழ்த்துமோ என்ற பீதியைக் கிளப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை, அமெரிக்க அதிபர் ஒபாமா, வரும் 29ம் தேதி நேரில் பார்வையிடுவார் என, வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இஸ்லாமாபாத் தப்பும் தவறுமாக இந்தியா கொடுத்திருந்த 50 பேர் கொண்ட அதிகம் தேடப்படுவோர் பட்டியலை பாகிஸ்தான் நிராகரித்து விட்டது.

சமீபத்தில் இந்தியாவால் அதிகம் தேடப்படும் 50 பேரின் பட்டியலை பாகிஸ்தானிடம் அளித்திருந்தது இந்தியா. ஆனால் இதில் இரண்டு பேர் இந்தியாவிலேயே இருப்பது பின்னர் தெரிய வந்து இந்தியாவுக்கு பெரும் அசிங்கிமாகி விட்டது.

அதில் ஒரு நபர் சிறையி்ல் இருப்பதும், இன்னொரு நபர் ஜாமீனில் வெளியில் இருப்பதும், தானேவில் வசித்து வரும் தெரிய வந்தது.

சிபிஐக்கும், உள்துறை அமைச்சகத்திற்கும் இது பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தி விட்டது. இதையடுத்து புதிய திருத்தப் பட்டியலை விரைவில் அளிப்போம் என்று உள்துறை அமைச்சகம் கூறியிருந்தது.

இந்தநிலையில் இந்தியா கொடுத்திருந்த முதல் பட்டியலை தற்போது பாகிஸ்தான் அரசு நிராகரித்து விட்டது. இந்தப் பட்டியலில் இருப்பவர்கள் இந்தியாவில் இருக்கிறார்களா என்பதை முதலில் விசாரித்துப் பார்க்குமாறு இந்தியாவுக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் அட்வைஸ் கூறி மேலும் நம்மை அசிங்கப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் உள்நாட்டு அமைச்சகம், மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நீங்கள் எங்களுக்குக் கொடுத்த பட்டியலில் இருப்பவர்கள் இந்தியாவில் வசிக்கிறார்களா என்பதை நீங்கள் முதலில் விசாரித்துப் பாருங்கள். நீங்கள் கொடுத்த பட்டியலில் இருந்த 2 பேர் இந்தியாவிலேயே இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே மற்ற 48 பேரும் கூட இந்தியாவிலேயே இருக்கலாம். எனவே அதுகுறித்து முதலில் தெளிவாக விசாரணை நடத்தி விட்டுப் பின்னர் எங்களிடம் வாருங்கள் என்று தெரிவித்துள்ளது பாகிஸ்தான்.

இந்தியா கொடுத்திருந்த பட்டியலில் தாவூத் இப்ராகிம், லஷ்கர் இ தொய்பா தலைவன் ஹபீஸ் சயீத், மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட பிறமுக்கியத் தீவிரவாத தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா கொடுத்த 50 பேர் கொண்ட தேடப்படுவோர் பட்டியலை நிராகரித்தது பாக்.

இஸ்லாமாபாத் தப்பும் தவறுமாக இந்தியா கொடுத்திருந்த 50 பேர் கொண்ட அதிகம் தேடப்படுவோர் பட்டியலை பாகிஸ்தான் நிராகரித்து விட்டது.

சமீபத்தில் இந்தியாவால் அதிகம் தேடப்படும் 50 பேரின் பட்டியலை பாகிஸ்தானிடம் அளித்திருந்தது இந்தியா. ஆனால் இதில் இரண்டு பேர் இந்தியாவிலேயே இருப்பது பின்னர் தெரிய வந்து இந்தியாவுக்கு பெரும் அசிங்கிமாகி விட்டது.

அதில் ஒரு நபர் சிறையி்ல் இருப்பதும், இன்னொரு நபர் ஜாமீனில் வெளியில் இருப்பதும், தானேவில் வசித்து வரும் தெரிய வந்தது.

சிபிஐக்கும், உள்துறை அமைச்சகத்திற்கும் இது பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தி விட்டது. இதையடுத்து புதிய திருத்தப் பட்டியலை விரைவில் அளிப்போம் என்று உள்துறை அமைச்சகம் கூறியிருந்தது.

இந்தநிலையில் இந்தியா கொடுத்திருந்த முதல் பட்டியலை தற்போது பாகிஸ்தான் அரசு நிராகரித்து விட்டது. இந்தப் பட்டியலில் இருப்பவர்கள் இந்தியாவில் இருக்கிறார்களா என்பதை முதலில் விசாரித்துப் பார்க்குமாறு இந்தியாவுக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் அட்வைஸ் கூறி மேலும் நம்மை அசிங்கப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் உள்நாட்டு அமைச்சகம், மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நீங்கள் எங்களுக்குக் கொடுத்த பட்டியலில் இருப்பவர்கள் இந்தியாவில் வசிக்கிறார்களா என்பதை நீங்கள் முதலில் விசாரித்துப் பாருங்கள். நீங்கள் கொடுத்த பட்டியலில் இருந்த 2 பேர் இந்தியாவிலேயே இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே மற்ற 48 பேரும் கூட இந்தியாவிலேயே இருக்கலாம். எனவே அதுகுறித்து முதலில் தெளிவாக விசாரணை நடத்தி விட்டுப் பின்னர் எங்களிடம் வாருங்கள் என்று தெரிவித்துள்ளது பாகிஸ்தான்.

இந்தியா கொடுத்திருந்த பட்டியலில் தாவூத் இப்ராகிம், லஷ்கர் இ தொய்பா தலைவன் ஹபீஸ் சயீத், மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட பிறமுக்கியத் தீவிரவாத தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜாப்ளின் : அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் நேற்று வீசிய பயங்கர சூறாவளியில் சிக்கி, 89 பேர் உயிரிழந்தனர். இச்சூறாவளியால் அம்மாகாணத்தின் ஜாப்ளின் நகர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் நேற்று, அதிவேக பயங்கர சூறாவளி வீசியது. இதில், ஜாப்ளின் நகரில் தென்பகுதியில் உள்ள வீடுகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் தரைமட்டமாயின. நகரின் முக்கிய சாலை 10 கி.மீ., தூரத்துக்கு துண்டிக்கப்பட்டது. பல இடங்களில் மின்சாரம் மற்றும் எரிவாயு இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. சூறாவளியில் சிக்கி 89 பேர் பலியானதாக, ஜாப்ளின் நகர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மிசவுரி மட்டுமல்லாமல், அதன் அருகில் உள்ள மூன்று மாகாணங்களும், பாதிக்கப்பட்டன.

சூறாவளியில் மிசவுரி பகுதியில் 89 பேர் பலி

ஜாப்ளின் : அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் நேற்று வீசிய பயங்கர சூறாவளியில் சிக்கி, 89 பேர் உயிரிழந்தனர். இச்சூறாவளியால் அம்மாகாணத்தின் ஜாப்ளின் நகர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் நேற்று, அதிவேக பயங்கர சூறாவளி வீசியது. இதில், ஜாப்ளின் நகரில் தென்பகுதியில் உள்ள வீடுகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் தரைமட்டமாயின. நகரின் முக்கிய சாலை 10 கி.மீ., தூரத்துக்கு துண்டிக்கப்பட்டது. பல இடங்களில் மின்சாரம் மற்றும் எரிவாயு இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. சூறாவளியில் சிக்கி 89 பேர் பலியானதாக, ஜாப்ளின் நகர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மிசவுரி மட்டுமல்லாமல், அதன் அருகில் உள்ள மூன்று மாகாணங்களும், பாதிக்கப்பட்டன.

காபூல்: ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாத அமைப்பின் தலைவரான முல்லா ஒமர் கொல்லப்பட்டு விட்டதாக ஆப்கானிஸ்தான் டிவி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முல்லா ஒமர், ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாத அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்தவன். தலிபான் இயக்கத்தின் மதப் பிரிவு தலைவராகவும் இவன் செயல்பட்டு வந்தான். தலிபான் அமைப்பினரை அமெரிக்கப் படைகள் ஒடுக்கிய பின்னர் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலுமாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தான்.

ஆப்கானிஸ்தானை தலிபான் தீவிரவாதிகள் பிடித்து ஆட்சியமைத்த போது அதன் தலைவராக செயல்பட்டு வந்தான் முல்லா ஒமர். இந்த அரசை பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை மட்டும் அங்கீகரித்திருந்தன.

2001ல் நடந்த நியூயார்க் தாக்குதலுக்குப் பின்னர் பின்லேடனுக்கும் பிற அல் கொய்தா தலைவர்களுக்கும் முல்லா ஒமர்தான் அடைக்கலம் கொடுத்து காத்து வந்தான். இதனால் முல்லா ஒமரையும் அமெரிக்கப் படைகள் தீவிரமாக தேடி வந்தன.

சமீபத்தில் பின்லேடனை அமெரிக்கப் படையினர் கொன்ற நிலையில் தற்போது முல்லா ஒமரும் கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முல்லா ஒமரை பாகிஸ்தான் படையினர்தான் கொன்றதாக தகவல்கள் கூறுகின்றன.

இதுகுறித்து ஆப்கானிஸ்தானின் டோலோ டிவி வெளியிட்ட செய்தியில், குவெட்டாவிலிருந்து வடக்கு வசிரிஸ்தானுக்கு முல்லா ஒமர் சென்று கொண்டிருந்தபோது பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் ஒமர் கொல்லப்பட்டான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குல் மற்றும் ஒமர் பலியானதை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் உறுதி செய்துள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

இருப்பினும் முல்லா ஒமர் கொல்லப்பட்டதை பாகிஸ்தான் அரசோ அல்லது அமெரிக்காவோ இதுவரை உறுதி செய்யவில்லை.

ஆப்கானிஸ்தான் தலிபான் தலைவன் முல்லா ஒமர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாத அமைப்பின் தலைவரான முல்லா ஒமர் கொல்லப்பட்டு விட்டதாக ஆப்கானிஸ்தான் டிவி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முல்லா ஒமர், ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாத அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்தவன். தலிபான் இயக்கத்தின் மதப் பிரிவு தலைவராகவும் இவன் செயல்பட்டு வந்தான். தலிபான் அமைப்பினரை அமெரிக்கப் படைகள் ஒடுக்கிய பின்னர் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலுமாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தான்.

ஆப்கானிஸ்தானை தலிபான் தீவிரவாதிகள் பிடித்து ஆட்சியமைத்த போது அதன் தலைவராக செயல்பட்டு வந்தான் முல்லா ஒமர். இந்த அரசை பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை மட்டும் அங்கீகரித்திருந்தன.

2001ல் நடந்த நியூயார்க் தாக்குதலுக்குப் பின்னர் பின்லேடனுக்கும் பிற அல் கொய்தா தலைவர்களுக்கும் முல்லா ஒமர்தான் அடைக்கலம் கொடுத்து காத்து வந்தான். இதனால் முல்லா ஒமரையும் அமெரிக்கப் படைகள் தீவிரமாக தேடி வந்தன.

சமீபத்தில் பின்லேடனை அமெரிக்கப் படையினர் கொன்ற நிலையில் தற்போது முல்லா ஒமரும் கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முல்லா ஒமரை பாகிஸ்தான் படையினர்தான் கொன்றதாக தகவல்கள் கூறுகின்றன.

இதுகுறித்து ஆப்கானிஸ்தானின் டோலோ டிவி வெளியிட்ட செய்தியில், குவெட்டாவிலிருந்து வடக்கு வசிரிஸ்தானுக்கு முல்லா ஒமர் சென்று கொண்டிருந்தபோது பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் ஒமர் கொல்லப்பட்டான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குல் மற்றும் ஒமர் பலியானதை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் உறுதி செய்துள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

இருப்பினும் முல்லா ஒமர் கொல்லப்பட்டதை பாகிஸ்தான் அரசோ அல்லது அமெரிக்காவோ இதுவரை உறுதி செய்யவில்லை.

உலகை அச்சுறுத்தி வந்த அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த 2-ந்தேதி பாகிஸ்தான் அபோதாபாத்தில் அமெரிக்க படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது அவர் தங்கியிருந்த வீட்டில் அமெரிக்கா உளவுத்துறை நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கின.

அதில், பின்லேடன் தீட்டி இருந்த சதி திட்டம் பற்றிய பல அதிர்ச்சிகள் இருந்தன. அதில், இந்திய பெருங்கடல், அரபிக்கடல் மற்றும் அட்லாண்டிக்கடல் பகுதியில் செல்லும் எண்ணை கப்பல்களை கடத்தி அவற்றை தகர்க்க அல்கொய்தா திட்டமிட்டிருந்தது. அதற்கான மிகப்பெரிய சதி திட்டத்தை பின்லேடன் தயாரித்து இருந்தார்.

இதை கடந்த ஆண்டு கோடை காலத்தில் செயல்படுத்த திட்டமிட்டிருந்தார்.இதன் மூலம் உலகம் முழுவதும் கச்சா எண்ணை விலை தாறுமாறாக உயரும். இதனால் உலக பொருளாதாரம் சீரழிந்து பெருமளவில் பாதிப்பு ஏற்படும் என பின்லேடன் கருதினார். ஆனால், கப்பல்களை தகர்க்கும் கடல் பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் வாழ்வதால் பெருமளவில் பாதிப்பு ஏற்படும் என கருதி அதற்கு மறுத்து விட்டார். அல்கொய்தா தீவிரவாதிகள் மறுத்து விட்டனர். அதனால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.

இவ்வாறு அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. இத்தகவலை அமெரிக்கா உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக பொருளாதாரத்தை சீர்குலைக்க எண்ணை கப்பல்களை தகர்க்க பின்லேடன் திட்டம் தீட்டியிருந்தார்; அமெரிக்கா தகவல்

உலகை அச்சுறுத்தி வந்த அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த 2-ந்தேதி பாகிஸ்தான் அபோதாபாத்தில் அமெரிக்க படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது அவர் தங்கியிருந்த வீட்டில் அமெரிக்கா உளவுத்துறை நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கின.

அதில், பின்லேடன் தீட்டி இருந்த சதி திட்டம் பற்றிய பல அதிர்ச்சிகள் இருந்தன. அதில், இந்திய பெருங்கடல், அரபிக்கடல் மற்றும் அட்லாண்டிக்கடல் பகுதியில் செல்லும் எண்ணை கப்பல்களை கடத்தி அவற்றை தகர்க்க அல்கொய்தா திட்டமிட்டிருந்தது. அதற்கான மிகப்பெரிய சதி திட்டத்தை பின்லேடன் தயாரித்து இருந்தார்.

இதை கடந்த ஆண்டு கோடை காலத்தில் செயல்படுத்த திட்டமிட்டிருந்தார்.இதன் மூலம் உலகம் முழுவதும் கச்சா எண்ணை விலை தாறுமாறாக உயரும். இதனால் உலக பொருளாதாரம் சீரழிந்து பெருமளவில் பாதிப்பு ஏற்படும் என பின்லேடன் கருதினார். ஆனால், கப்பல்களை தகர்க்கும் கடல் பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் வாழ்வதால் பெருமளவில் பாதிப்பு ஏற்படும் என கருதி அதற்கு மறுத்து விட்டார். அல்கொய்தா தீவிரவாதிகள் மறுத்து விட்டனர். அதனால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.

இவ்வாறு அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. இத்தகவலை அமெரிக்கா உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நியூயார்க்: அமெரிக்காவின், "டைம்ஸ்' இதழ் வெளியிட்டுள்ள, முறைகேடாக அதிகார துஷ்பிரயோகம் செய்து அதனால் அவப்பெயர் பெற்ற தலைவர்கள் பட்டியலில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு இரண்டாமிடம் கிடைத்திருக்கிறது.

நியூயார்க்கில் இருந்து வெளியாகும், "டைம்ஸ்' இதழின் இப்பட்டியலில், முதலிடத்தில் இருப்பவர் டேனியல் எல்ஸ்பெர்க். இவர், அமெரிக்க முன்னாள் அதிபர் ரிச்சர்டு நிக்சன் அரசில், அந்நாட்டு ராணுவ ரகசியங்களை கசிய விட்டவர். இரண்டாம் இடத்தில் இருப்பவர், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா. லிபியா ஆட்சியாளர் முவாம்மர் கடாபி, வடகொரியா சர்வாதிகார ஆட்சியாளர் கிம் ஜாங் - 2, இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி ஆகியோரை பந்தயத்தில் முந்தி, ராஜா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இவர்கள் எல்லாம் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், ராஜா குறித்து, "டைம்ஸ்' இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், "முன்னர், அசைக்க முடியாத அளவிற்கு அதிகாரத்தில் பீடத்தில் அமர்ந்திருந்த இந்திய கூட்டணி ஆட்சிக்கு, தற்போது, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் சவாலாக அமைந்துள்ளது. இந்தியாவில் எப்போதும் நடைபெறும், குதிரை பேரத்தின் மூலம் மத்திய அமைச்சர் பதவியை பெற்றவர் ராஜா. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலால், இந்திய அரசுக்கு 32 ஆயிரத்து 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றிலேயே, இது மிகப்பெரிய ஊழல். இந்த ஊழலால், ராஜாவைச் சேர்ந்த கட்சி கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் பெரும் தோல்வியைத் தழுவியது. இந்திய நீதிமன்றத்தில், இந்த வழக்கு இஞ்ச், இஞ்சாக நகர்ந்து முன்னேறி வருகிறது' என்று அதில் கூறப்பட்டுள்ளது. இப்பட்டியலில், டைகோ தலைமை செயல் அதிகாரி டென்னிஸ் கோஸ்லோஸ்கி, இஸ்ரேல் முன்னாள் அதிபர் மோசி கத்சவ், சீனாவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் தலைவர் ஜெங் ஜியாவ்யு மற்றும் 1992ம் ஆண்டில் அமெரிக்காவின் உள்துறை அமைச்சராக இருந்த ஆல்பர்ட் பால் ஆகியோரின் பெயர் இடம் பெற்றுள்ளது.

அவப்பெயர் பெற்ற தலைவர்களில் ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு இரண்டாமிடம்

நியூயார்க்: அமெரிக்காவின், "டைம்ஸ்' இதழ் வெளியிட்டுள்ள, முறைகேடாக அதிகார துஷ்பிரயோகம் செய்து அதனால் அவப்பெயர் பெற்ற தலைவர்கள் பட்டியலில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு இரண்டாமிடம் கிடைத்திருக்கிறது.

நியூயார்க்கில் இருந்து வெளியாகும், "டைம்ஸ்' இதழின் இப்பட்டியலில், முதலிடத்தில் இருப்பவர் டேனியல் எல்ஸ்பெர்க். இவர், அமெரிக்க முன்னாள் அதிபர் ரிச்சர்டு நிக்சன் அரசில், அந்நாட்டு ராணுவ ரகசியங்களை கசிய விட்டவர். இரண்டாம் இடத்தில் இருப்பவர், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா. லிபியா ஆட்சியாளர் முவாம்மர் கடாபி, வடகொரியா சர்வாதிகார ஆட்சியாளர் கிம் ஜாங் - 2, இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி ஆகியோரை பந்தயத்தில் முந்தி, ராஜா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இவர்கள் எல்லாம் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், ராஜா குறித்து, "டைம்ஸ்' இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், "முன்னர், அசைக்க முடியாத அளவிற்கு அதிகாரத்தில் பீடத்தில் அமர்ந்திருந்த இந்திய கூட்டணி ஆட்சிக்கு, தற்போது, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் சவாலாக அமைந்துள்ளது. இந்தியாவில் எப்போதும் நடைபெறும், குதிரை பேரத்தின் மூலம் மத்திய அமைச்சர் பதவியை பெற்றவர் ராஜா. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலால், இந்திய அரசுக்கு 32 ஆயிரத்து 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றிலேயே, இது மிகப்பெரிய ஊழல். இந்த ஊழலால், ராஜாவைச் சேர்ந்த கட்சி கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் பெரும் தோல்வியைத் தழுவியது. இந்திய நீதிமன்றத்தில், இந்த வழக்கு இஞ்ச், இஞ்சாக நகர்ந்து முன்னேறி வருகிறது' என்று அதில் கூறப்பட்டுள்ளது. இப்பட்டியலில், டைகோ தலைமை செயல் அதிகாரி டென்னிஸ் கோஸ்லோஸ்கி, இஸ்ரேல் முன்னாள் அதிபர் மோசி கத்சவ், சீனாவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் தலைவர் ஜெங் ஜியாவ்யு மற்றும் 1992ம் ஆண்டில் அமெரிக்காவின் உள்துறை அமைச்சராக இருந்த ஆல்பர்ட் பால் ஆகியோரின் பெயர் இடம் பெற்றுள்ளது.

கெய்ரோ:ஒசாமா பின்லாடனின் பேச்சு அடங்கிய ஆடியோவை, அல்-குவைதா அமைப்பு வெளியிட்டுள்ளது.அல்-குவைதா அமைப்பின் தலைவரும், சர்வதேச பயங்கரவாதியுமான ஒசாமா பின்லாடன், கடந்த 2ம் தேதி, பாகிஸ்தானில், அமெரிக்க அதிரடி படையால் கொல்லப்பட்டார்.அவர் கொல்லப்படுவதற்கு, சில வாரங்களுக்கு முன்பாக பேசிய அவரது, 13 நிமிட உரை அடங்கிய ஆடியோவை, அல்-குவைதா அமைப்பு வெளியிட்டுள்ளது. இது, பெரும்பாலான அரேபிய இணையதளங்களில் வெளியாகியுள்ளது.இந்த ஆடியோவில் ஒசாமா குறிப்பிடுகையில், "வட ஆப்ரிக்காவின் மக்ரெப் பகுதியில் துவங்கிய புரட்சி தீ, துனிசியா, எகிப்து என பரவி வருகிறது. இது, பாராட்டுக்குரியது. மக்களின் ஒடுக்கப்பட்ட உணர்வுகள், தாமதமாக கிளர்தெழுந்ததால் தான் இந்த புரட்சி உருவாகியுள்ளது. இறைவன் அருளால் இந்த புரட்சி உலகம் முழுவதும் பரவும்' என தெரிவித்துள்ளார்.

ஒசாமா ஆடியோ வெளியீடு

கெய்ரோ:ஒசாமா பின்லாடனின் பேச்சு அடங்கிய ஆடியோவை, அல்-குவைதா அமைப்பு வெளியிட்டுள்ளது.அல்-குவைதா அமைப்பின் தலைவரும், சர்வதேச பயங்கரவாதியுமான ஒசாமா பின்லாடன், கடந்த 2ம் தேதி, பாகிஸ்தானில், அமெரிக்க அதிரடி படையால் கொல்லப்பட்டார்.அவர் கொல்லப்படுவதற்கு, சில வாரங்களுக்கு முன்பாக பேசிய அவரது, 13 நிமிட உரை அடங்கிய ஆடியோவை, அல்-குவைதா அமைப்பு வெளியிட்டுள்ளது. இது, பெரும்பாலான அரேபிய இணையதளங்களில் வெளியாகியுள்ளது.இந்த ஆடியோவில் ஒசாமா குறிப்பிடுகையில், "வட ஆப்ரிக்காவின் மக்ரெப் பகுதியில் துவங்கிய புரட்சி தீ, துனிசியா, எகிப்து என பரவி வருகிறது. இது, பாராட்டுக்குரியது. மக்களின் ஒடுக்கப்பட்ட உணர்வுகள், தாமதமாக கிளர்தெழுந்ததால் தான் இந்த புரட்சி உருவாகியுள்ளது. இறைவன் அருளால் இந்த புரட்சி உலகம் முழுவதும் பரவும்' என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், போரினால் இடம்பெயர்ந்திருந்த மக்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகள் திருப்தியளிக்கும் வகையில் இடம்பெறவில்லை என்றே பலரும் கூறுகின்றனர்.

போரினால் இடம்பெயர்ந்த சுமார் 3 லட்சம் பேர் மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தஞ்சமடைந்திருந்தனர். இவர்களில் சுமார் 17 ஆயிரம் பேரைத் தவிர ஏனையோர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது.

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கும் மேலாகின்ற போதிலும் இன்னும் பலர் தரப்பாள் கொட்டில்களிலேயே வசிக்க நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மீள்குடியேற்றப்படும்போது உடனடியாகத் தங்குவதற்கு வழங்கப்பட்ட கூடாரங்களைக் கொண்டு இந்தத் தரப்பாள் கொட்டில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக தற்காலிக வீடும், அதற்கு அடுத்ததாக நிரந்தர வீடமைப்பிற்கான உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆயினும் இந்த உதவிகள் மீள்குடியேறியுள்ள அனைவருக்கும் கிடைக்கவில்லை என மீள்குடியேற்றப் பகுதியில் உள்ள மக்கள் கூறுகின்றார்கள்.

மீள்குடியேற்றப் பிரதேசங்களில் வாழ்வாதார உதவிகளும் சீராக வழங்கப்படவில்லை, உட்கட்டமைப்பு வசதிகளில் குறிப்பாக போக்குவரத்திற்குரிய வீதிகள் முறையாகத் திருத்தப்படவில்லை, பொதுமக்களுக்கு, போரினால் ஏற்பட்ட இழப்புகளுக்கான இழப்பீடுகள் வழங்கப்படவில்லை, அரச ஊழியர்கள் மற்றும் இராணுவத்தினரிடம் சரணடைந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றததின் ஊடாக விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஆகியோருக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளிலும் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்றும் பலரும் தெரிவிக்கின்றனர்.

மீள்குடியேற்றப் பகுதிகளில் சர்வதேச நிதி நிறுவனங்களின் நிதியுதவி மற்றும் அரச நிதியொதுக்கீட்டின் கீழ் வீதி புனரமைப்பு உட்பட உட்கட்டமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகக் கூறும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், புனர்வாழ்வு மற்றும் வாழ்வாதார உதவிகள் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

புனர்வாழ்வு மற்றும் வாழ்வாதார உதவித் திட்டங்களில் எவரையும் அரசாங்கம் புறக்கணிக்கவில்லை. கிடைக்கின்ற உதவித்திட்டங்களுக்கமைய அனைவருக்கும் படிப்படியாக உதவிகள் வழங்கப்படும் என்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் கூறுகின்றார்.

போருக்கு பிறகு மக்களின் வாழ்க்கை

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், போரினால் இடம்பெயர்ந்திருந்த மக்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகள் திருப்தியளிக்கும் வகையில் இடம்பெறவில்லை என்றே பலரும் கூறுகின்றனர்.

போரினால் இடம்பெயர்ந்த சுமார் 3 லட்சம் பேர் மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தஞ்சமடைந்திருந்தனர். இவர்களில் சுமார் 17 ஆயிரம் பேரைத் தவிர ஏனையோர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது.

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கும் மேலாகின்ற போதிலும் இன்னும் பலர் தரப்பாள் கொட்டில்களிலேயே வசிக்க நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மீள்குடியேற்றப்படும்போது உடனடியாகத் தங்குவதற்கு வழங்கப்பட்ட கூடாரங்களைக் கொண்டு இந்தத் தரப்பாள் கொட்டில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக தற்காலிக வீடும், அதற்கு அடுத்ததாக நிரந்தர வீடமைப்பிற்கான உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆயினும் இந்த உதவிகள் மீள்குடியேறியுள்ள அனைவருக்கும் கிடைக்கவில்லை என மீள்குடியேற்றப் பகுதியில் உள்ள மக்கள் கூறுகின்றார்கள்.

மீள்குடியேற்றப் பிரதேசங்களில் வாழ்வாதார உதவிகளும் சீராக வழங்கப்படவில்லை, உட்கட்டமைப்பு வசதிகளில் குறிப்பாக போக்குவரத்திற்குரிய வீதிகள் முறையாகத் திருத்தப்படவில்லை, பொதுமக்களுக்கு, போரினால் ஏற்பட்ட இழப்புகளுக்கான இழப்பீடுகள் வழங்கப்படவில்லை, அரச ஊழியர்கள் மற்றும் இராணுவத்தினரிடம் சரணடைந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றததின் ஊடாக விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஆகியோருக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளிலும் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்றும் பலரும் தெரிவிக்கின்றனர்.

மீள்குடியேற்றப் பகுதிகளில் சர்வதேச நிதி நிறுவனங்களின் நிதியுதவி மற்றும் அரச நிதியொதுக்கீட்டின் கீழ் வீதி புனரமைப்பு உட்பட உட்கட்டமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகக் கூறும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், புனர்வாழ்வு மற்றும் வாழ்வாதார உதவிகள் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

புனர்வாழ்வு மற்றும் வாழ்வாதார உதவித் திட்டங்களில் எவரையும் அரசாங்கம் புறக்கணிக்கவில்லை. கிடைக்கின்ற உதவித்திட்டங்களுக்கமைய அனைவருக்கும் படிப்படியாக உதவிகள் வழங்கப்படும் என்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் கூறுகின்றார்.

அர்ஜென்டினாவில் ஒரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான குட்டி விமானம் ரியோநெக்ரா மாகாணத்தில் உள்ள நியூகுயனில் இருந்து கமோடொரோ ரிவாடாவியா நகருக்கு புறப்பட்டு சென்றது.

அதில் ஒரு குழந்தை உள்பட 19 பயணிகளும், 3 விமான ஊழியர்களும் இருந்தனர். அந்த விமானம் புறப்பட்ட 45 நிமிடத்தில் தெற்கு அர்ஜென்டினாவில் உள்ள படகோனியா என்ற இடத்தில் நடுவானில் வெடித்து சிதறியது.

இதனால் தீப்பந்து போன்று எரிந்த நிலையில் தரையில் விழுந்தது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 22 பேரும் உடல் கருகி பலியானார்கள். விமானத்தின் பாகங்கள் எதுவும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தூள் தூளாக நொறுங்கியது.

இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அர்ஜென்டினாவில் விமான விபத்து; 22 பேர் கருகி பலி

அர்ஜென்டினாவில் ஒரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான குட்டி விமானம் ரியோநெக்ரா மாகாணத்தில் உள்ள நியூகுயனில் இருந்து கமோடொரோ ரிவாடாவியா நகருக்கு புறப்பட்டு சென்றது.

அதில் ஒரு குழந்தை உள்பட 19 பயணிகளும், 3 விமான ஊழியர்களும் இருந்தனர். அந்த விமானம் புறப்பட்ட 45 நிமிடத்தில் தெற்கு அர்ஜென்டினாவில் உள்ள படகோனியா என்ற இடத்தில் நடுவானில் வெடித்து சிதறியது.

இதனால் தீப்பந்து போன்று எரிந்த நிலையில் தரையில் விழுந்தது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 22 பேரும் உடல் கருகி பலியானார்கள். விமானத்தின் பாகங்கள் எதுவும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தூள் தூளாக நொறுங்கியது.

இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் 47 ஆயிரம் வகை தாவர இனங்களும், 90 ஆயிரம் வகை விலங்கு இனங்களும் உள்ளன. இவை வனப்பகுதியில் உள்ளன. அவற்றின் மேம்பாட்டுக்காக உலக வங்கி ரூ.105 கோடி கடன் உதவி வழங்கி உள்ளது. அதில் ரூ.36 கோடி மானியமாகும்.

இந்தியாவுக்கு உலக வங்கி ரூ.105 கோடி கடன் உதவி

இந்தியாவில் 47 ஆயிரம் வகை தாவர இனங்களும், 90 ஆயிரம் வகை விலங்கு இனங்களும் உள்ளன. இவை வனப்பகுதியில் உள்ளன. அவற்றின் மேம்பாட்டுக்காக உலக வங்கி ரூ.105 கோடி கடன் உதவி வழங்கி உள்ளது. அதில் ரூ.36 கோடி மானியமாகும்.

ஜெனிவா:பீகார் முதல்வர் நிதிஷ்குமார், குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதாக, உலக கோடீஸ்வரரான பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்துக்கு, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, "மைக்ரோ சாப்ட்' நிறுவன தலைவர் பில்கேட்ஸ் தான், அதிக நிதியுதவி அளித்து வருகிறார்.உலக சுகாதார நிறுவனத்தின், 64வது ஆண்டு கூட்டம் ஜெனிவாவில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில் கலந்து கொண்டு பில்கேட்ஸ் பேசுகையில், "மருத்துவ வசதிகள் அதிகரித்து விட்டதாக கூறப்பட்டாலும் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாகத்தான் உள்ளது. குறிப்பாக இந்தியாவில் தான் குழந்தைகளின் இறப்பு விகிதம் உலகிலேயே அதிகமாக உள்ளது."குழந்தைகளுக்கான தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் சகாய விலையில் இந்த மருந்தை அளிக்க முன்வர வேண்டும். குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டத்தை நிறைவேற்றுவதில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும், நைஜீரியா நாட்டின் போலியோ ஒழிப்பு திட்ட தலைவர் முகமது பேட்டும் சிறப்பாக செயல்படுகின்றனர்' என்றார்.

பீகார் முதல்வருக்கு பில்கேட்ஸ் பாராட்டு

ஜெனிவா:பீகார் முதல்வர் நிதிஷ்குமார், குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதாக, உலக கோடீஸ்வரரான பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்துக்கு, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, "மைக்ரோ சாப்ட்' நிறுவன தலைவர் பில்கேட்ஸ் தான், அதிக நிதியுதவி அளித்து வருகிறார்.உலக சுகாதார நிறுவனத்தின், 64வது ஆண்டு கூட்டம் ஜெனிவாவில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில் கலந்து கொண்டு பில்கேட்ஸ் பேசுகையில், "மருத்துவ வசதிகள் அதிகரித்து விட்டதாக கூறப்பட்டாலும் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாகத்தான் உள்ளது. குறிப்பாக இந்தியாவில் தான் குழந்தைகளின் இறப்பு விகிதம் உலகிலேயே அதிகமாக உள்ளது."குழந்தைகளுக்கான தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் சகாய விலையில் இந்த மருந்தை அளிக்க முன்வர வேண்டும். குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டத்தை நிறைவேற்றுவதில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும், நைஜீரியா நாட்டின் போலியோ ஒழிப்பு திட்ட தலைவர் முகமது பேட்டும் சிறப்பாக செயல்படுகின்றனர்' என்றார்.

முக நூல்

Popular Posts