background img

புதிய வரவு

Showing posts with label Summer. Show all posts
Showing posts with label Summer. Show all posts
சென்னை ஐகோர்ட்டுக்கு கோடைகால விடுமுறை தொடங்கியது. விடுமுறைகால கோர்ட்டுகளில் நீதிபதிகள் யார்? யார்? விசாரணை நடத்துவார்கள் என்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் எஸ்.விமலா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:


சென்னை ஐகோர்ட்டுக்கு மே 1ந் தேதியில் இருந்து ஜுன் 5ந் தேதி வரை கோடைகால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை கால கோர்ட்டுகளை நடத்துவதற்காக, விடுமுறை காலம் 3 பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது.


மே 1 15 தேதி முதல் பகுதி என்றும், மே 16 29 இரண்டாம் பகுதியாகவும், மே 30 முதல் ஜுன் 5 ந் தேதிவரை மூன்றாம் பகுதியாகவும் கோடைகால விடுமுறை பிரிக்கப்பட்டுள்ளது.


முதல் பகுதி விடுமுறை காலத்தில் மே 4, 5, 11, 12 ந் தேதிகளில் ஐகோர்ட்டு இயங்கும். அப்போது வழக்குகளை நீதிபதிகள் வி.தனபாலன், சி.எஸ்.கர்ணன், ஏ.ஆறுமுகசாமி விசாரிப்பார்கள். அனைத்து டிவிஷன் பெஞ்ச் விவகாரங்களையும் நீதிபதிகள் வி.தனபாலன், ஏ.ஆறுமுகசாமி ஆகியோர் விசாரிப்பார்கள்.


டிவிஷன் பெஞ்ச் விசாரணை முடிந்ததும், ரிட் மனுக்கள், வரி, மோட்டார் வாகன வழக்குகள், கல்வி, சுரங்கம் மற்றும் கனிமம், தொழிற்சாலைகள், மின்சாரம், நில ஆர்ஜிதம், உள்ளாட்சி விவகாரங்கள் ஆகிய வழக்குகளை நீதிபதி வி.தனபாலன் விசாரிப்பார்.


டிவிஷன் பெஞ்ச் பணிகள் முடிந்த பிறகு, ரிட் மனுக்கள், தொழிலாளர் நலன், அரசுப் பணி, சுங்கம் மற்றும் மத்திய கலால், வனம், நில சீர்திருத்தம், கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட வழக்குகளை நீதிபதி ஏ.ஆறுமுகசாமி விசாரிப்பார். அனைத்து கிரிமினல் வழக்குகளையும் நீதிபதி சி.எஸ்.கர்ணன் விசாரிப்பார்.


இரண்டாம் பகுதி விடுமுறை காலத்தில் மே 18, 19, 25, 26 ந் தேதிகளில் ஐகோர்ட்டு இயங்கும். இந்த நாட்களில் நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், சி.எஸ்.கர்ணன், கே.பி.கே.வாசுகி ஆகியோர் விசாரணை நடத்துவார்கள். அனைத்து டிவிஷன் பெஞ்ச் வழக்குகளை நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், கே.பி.கே.வாசுகி ஆகியோர் விசாரிப்பார்கள்.


டிவிஷன் பெஞ்ச் விசாரணை முடிந்ததும், ரிட் மனுக்கள், வரி, மோட்டார் வாகன வழக்குகள், கல்வி, சுரங்கம் மற்றும் கனிமம், தொழிற்சாலைகள், மின்சாரம், நில ஆர்ஜிதம், உள்ளாட்சி விவகாரங்கள் ஆகிய வழக்குகளை நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் விசாரிப்பார்.


டிவிஷன் பெஞ்ச் பணிகள் முடிந்த பிறகு, ரிட் மனுக்கள், தொழிலாளர் நலன், அரசுப் பணி, சுங்கம் மற்றும் மத்திய கலால், வனம், நில சீர்திருத்தம், கூட்டுறவு சங்கம், சினிமா சம்பந்தப்பட்ட வழக்குகளை நீதிபதி கே.பி.கே.வாசுகி விசாரிப்பார். அனைத்து கிரிமினல் வழக்குகளையும் நீதிபதி சி.எஸ்.கர்ணன் விசாரிப்பார்.


மூன்றாம் பகுதி விடுமுறை காலத்தில் ஜுன் 1, 2 ந் தேதிகளில் ஐகோர்ட்டு இயங்கும். நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், சி.எஸ்.கர்ணன், ஜி.எம்.அக்பர் அலி ஆகியோர் விசாரணை நடத்துவார்கள். அனைத்து டிவிஷன் பெஞ்ச் வழக்குகளையும் நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், ஜி.எம்.அக்பர் அலி விசாரிப்பார்கள்.


டிவிஷன் பெஞ்ச் பணி முடிந்ததும் ரிட் மனுக்கள், வரி, மோட்டார் வாகன வழக்குகள், கல்வி, சுரங்கம் மற்றும் கனிமம், தொழிற்சாலைகள், மின்சாரம், நில ஆர்ஜிதம், உள்ளாட்சி விவகாரங்கள் ஆகிய வழக்குகளை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் விசாரிப்பார்.


டிவிஷன் பெஞ்ச் பணிகள் முடிந்த பிறகு, ரிட் மனுக்கள், தொழிலாளர் நலன், அரசுப் பணி, சுங்கம் மற்றும் மத்திய கலால், வனம், நில சீர்திருத்தம், கூட்டுறவு சங்கம், சினிமா சம்பந்தப்பட்ட வழக்குகளை நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி விசாரிப்பார். அனைத்து கிரிமினல் வழக்குகளையும் நீதிபதி சி.எஸ்.கர்ணன் விசாரிப்பார்.


விடுமுறை கால கோர்ட்டுகளில் அவசர வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அவசரத்துக்கான காரணத்தை தனியாக காட்ட வேண்டும். விடுமுறைகால கோர்ட்டு காலை 10.30 மணியில் இருந்து மாலை 4.45 மணிவரை இயங்கும்.


மே 2, 3, 9, 10, 16, 17, 23, 24, 30, 31 ஆகிய தேதிகளில் மனு தாக்கல் செய்யலாம். ஐகோர்ட்டு பதிவகம் காலை 10 மணி முதல் மாலை 4.45 மணிவரை இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டுக்கு கோடைகால விடுமுறை

சென்னை ஐகோர்ட்டுக்கு கோடைகால விடுமுறை தொடங்கியது. விடுமுறைகால கோர்ட்டுகளில் நீதிபதிகள் யார்? யார்? விசாரணை நடத்துவார்கள் என்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் எஸ்.விமலா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:


சென்னை ஐகோர்ட்டுக்கு மே 1ந் தேதியில் இருந்து ஜுன் 5ந் தேதி வரை கோடைகால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை கால கோர்ட்டுகளை நடத்துவதற்காக, விடுமுறை காலம் 3 பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது.


மே 1 15 தேதி முதல் பகுதி என்றும், மே 16 29 இரண்டாம் பகுதியாகவும், மே 30 முதல் ஜுன் 5 ந் தேதிவரை மூன்றாம் பகுதியாகவும் கோடைகால விடுமுறை பிரிக்கப்பட்டுள்ளது.


முதல் பகுதி விடுமுறை காலத்தில் மே 4, 5, 11, 12 ந் தேதிகளில் ஐகோர்ட்டு இயங்கும். அப்போது வழக்குகளை நீதிபதிகள் வி.தனபாலன், சி.எஸ்.கர்ணன், ஏ.ஆறுமுகசாமி விசாரிப்பார்கள். அனைத்து டிவிஷன் பெஞ்ச் விவகாரங்களையும் நீதிபதிகள் வி.தனபாலன், ஏ.ஆறுமுகசாமி ஆகியோர் விசாரிப்பார்கள்.


டிவிஷன் பெஞ்ச் விசாரணை முடிந்ததும், ரிட் மனுக்கள், வரி, மோட்டார் வாகன வழக்குகள், கல்வி, சுரங்கம் மற்றும் கனிமம், தொழிற்சாலைகள், மின்சாரம், நில ஆர்ஜிதம், உள்ளாட்சி விவகாரங்கள் ஆகிய வழக்குகளை நீதிபதி வி.தனபாலன் விசாரிப்பார்.


டிவிஷன் பெஞ்ச் பணிகள் முடிந்த பிறகு, ரிட் மனுக்கள், தொழிலாளர் நலன், அரசுப் பணி, சுங்கம் மற்றும் மத்திய கலால், வனம், நில சீர்திருத்தம், கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட வழக்குகளை நீதிபதி ஏ.ஆறுமுகசாமி விசாரிப்பார். அனைத்து கிரிமினல் வழக்குகளையும் நீதிபதி சி.எஸ்.கர்ணன் விசாரிப்பார்.


இரண்டாம் பகுதி விடுமுறை காலத்தில் மே 18, 19, 25, 26 ந் தேதிகளில் ஐகோர்ட்டு இயங்கும். இந்த நாட்களில் நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், சி.எஸ்.கர்ணன், கே.பி.கே.வாசுகி ஆகியோர் விசாரணை நடத்துவார்கள். அனைத்து டிவிஷன் பெஞ்ச் வழக்குகளை நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், கே.பி.கே.வாசுகி ஆகியோர் விசாரிப்பார்கள்.


டிவிஷன் பெஞ்ச் விசாரணை முடிந்ததும், ரிட் மனுக்கள், வரி, மோட்டார் வாகன வழக்குகள், கல்வி, சுரங்கம் மற்றும் கனிமம், தொழிற்சாலைகள், மின்சாரம், நில ஆர்ஜிதம், உள்ளாட்சி விவகாரங்கள் ஆகிய வழக்குகளை நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் விசாரிப்பார்.


டிவிஷன் பெஞ்ச் பணிகள் முடிந்த பிறகு, ரிட் மனுக்கள், தொழிலாளர் நலன், அரசுப் பணி, சுங்கம் மற்றும் மத்திய கலால், வனம், நில சீர்திருத்தம், கூட்டுறவு சங்கம், சினிமா சம்பந்தப்பட்ட வழக்குகளை நீதிபதி கே.பி.கே.வாசுகி விசாரிப்பார். அனைத்து கிரிமினல் வழக்குகளையும் நீதிபதி சி.எஸ்.கர்ணன் விசாரிப்பார்.


மூன்றாம் பகுதி விடுமுறை காலத்தில் ஜுன் 1, 2 ந் தேதிகளில் ஐகோர்ட்டு இயங்கும். நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், சி.எஸ்.கர்ணன், ஜி.எம்.அக்பர் அலி ஆகியோர் விசாரணை நடத்துவார்கள். அனைத்து டிவிஷன் பெஞ்ச் வழக்குகளையும் நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், ஜி.எம்.அக்பர் அலி விசாரிப்பார்கள்.


டிவிஷன் பெஞ்ச் பணி முடிந்ததும் ரிட் மனுக்கள், வரி, மோட்டார் வாகன வழக்குகள், கல்வி, சுரங்கம் மற்றும் கனிமம், தொழிற்சாலைகள், மின்சாரம், நில ஆர்ஜிதம், உள்ளாட்சி விவகாரங்கள் ஆகிய வழக்குகளை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் விசாரிப்பார்.


டிவிஷன் பெஞ்ச் பணிகள் முடிந்த பிறகு, ரிட் மனுக்கள், தொழிலாளர் நலன், அரசுப் பணி, சுங்கம் மற்றும் மத்திய கலால், வனம், நில சீர்திருத்தம், கூட்டுறவு சங்கம், சினிமா சம்பந்தப்பட்ட வழக்குகளை நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி விசாரிப்பார். அனைத்து கிரிமினல் வழக்குகளையும் நீதிபதி சி.எஸ்.கர்ணன் விசாரிப்பார்.


விடுமுறை கால கோர்ட்டுகளில் அவசர வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அவசரத்துக்கான காரணத்தை தனியாக காட்ட வேண்டும். விடுமுறைகால கோர்ட்டு காலை 10.30 மணியில் இருந்து மாலை 4.45 மணிவரை இயங்கும்.


மே 2, 3, 9, 10, 16, 17, 23, 24, 30, 31 ஆகிய தேதிகளில் மனு தாக்கல் செய்யலாம். ஐகோர்ட்டு பதிவகம் காலை 10 மணி முதல் மாலை 4.45 மணிவரை இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை வந்துவிட்டாலே நமது மனம் கொண்டாட்ட 'மூடு' க்கு மாறிவிடும். உறவினர்களோடு அரட்டை, கூச்சல் கும்மாளத்தோடு டி.வி.யில் படம் பார்ப்பது, சீட்டுக் கச்சேரி என களை கட்டும் கோடை விடுமுறையில், பல குடும்பங்களில் பிக்னிக்கும் கட்டாயம் இடம் பெறும்

ஆனால் இந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாது, பிக்னிக் பேக்க்குகளிலும் நம்மவர்களின் மிக விருப்பமான நொறுக்கு தீனிகளாக சிப்ஸ் பாக்கெட்டுகளும், சாக்லேட்டுகளும், தாகம் தணிக்கும் பானங்களாக குளிர்பானங்களும் பயண பைகளுக்குள் கட்டாயம் திணிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் இந்த இடத்தில்தான் எச்சரிக்கை மணி அடிக்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்களும், மருத்துவர்களும்!

இதுபோன்ற சிப்ஸ் மற்றும் சாக்லேட்டுகளுக்கு பதிலாக பழங்கள்,காய்கறி சாலட்டுகள் போன்றவற்றை நிறைய எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்துகின்றனர்.

வழக்கமான உணவுகள் மற்றும் முறையான உடற்பயிற்சிகளோடு, மேற்கூறியபடி காய்கறி மற்றும் பழங்களை எடுத்துக் கொண்டால், கோடை கொண்டாட்ட குதூகலத்தில், உடல் எடை அதிகரிப்பதை தடுக்க முடியும் என்கின்றனர்.

தாகத்தை தணிக்க தண்ணீர்:

கோடையில், குறிப்பாக வெயிலில் சுற்றி வந்தால் நாக்கு வறண்டு தாகம் அதிகமாக எடுப்பது சகஜம்தான். இந்த சமயத்தில் நம்மில் பலர் உடனடியாக தாகத்தை தணிக்க பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர் பானங்களை வாங்கிக் குடிக்கிறார்கள்.இவ்வாறு செயற்கையாக தயாரிக்கப்படும் குளிர்பானங்களை வாங்கி குடித்தால், அது நமது உடலுக்கும் உபாதைகளை ஏற்படுத்துவதோடு, பர்ஸ்-க்கும் வேட்டு வைக்கிறது.

அதற்கு பதிலாக தாகத்தை தணிக்க தண்ணீரே போதுமானது.அது நமது உடலை குளுமைபடுத்துவதோடு,உடலில் நீரிழப்பு ஏற்படுவதையும் தடுக்கிறது.மேலும் தேவையற்ற கூடுதல்கலோரிகள் உங்கள் உடலில் சேருவதையும் அது தடுக்கிறது.செயற்கை குளிர் பானங்கள் நமது உடலில் தேவையற்ற அதிக கலோரிகளை உருவாக்கி விடுகிறது.

ஒருவேளை சிலருக்கு வெறும் தண்ணீரை அருந்த விருப்பமில்லாமல் இருந்தால், அதற்கு பதிலாக புதிதாக தயாரிக்கப்பட்ட எலுமிச்சை பழ ஜூஸ், இளநீர் அல்லது மோர் போன்றவற்றை அருந்தலாம். இவை கோடையின் சிறந்த தாகம் தணிப்பு பானங்கள் என்றே சொல்லலாம்.

கோடையை சமாளிக்கும் உணவு!

கோடை விடுமுறை வந்துவிட்டாலே நமது மனம் கொண்டாட்ட 'மூடு' க்கு மாறிவிடும். உறவினர்களோடு அரட்டை, கூச்சல் கும்மாளத்தோடு டி.வி.யில் படம் பார்ப்பது, சீட்டுக் கச்சேரி என களை கட்டும் கோடை விடுமுறையில், பல குடும்பங்களில் பிக்னிக்கும் கட்டாயம் இடம் பெறும்

ஆனால் இந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாது, பிக்னிக் பேக்க்குகளிலும் நம்மவர்களின் மிக விருப்பமான நொறுக்கு தீனிகளாக சிப்ஸ் பாக்கெட்டுகளும், சாக்லேட்டுகளும், தாகம் தணிக்கும் பானங்களாக குளிர்பானங்களும் பயண பைகளுக்குள் கட்டாயம் திணிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் இந்த இடத்தில்தான் எச்சரிக்கை மணி அடிக்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்களும், மருத்துவர்களும்!

இதுபோன்ற சிப்ஸ் மற்றும் சாக்லேட்டுகளுக்கு பதிலாக பழங்கள்,காய்கறி சாலட்டுகள் போன்றவற்றை நிறைய எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்துகின்றனர்.

வழக்கமான உணவுகள் மற்றும் முறையான உடற்பயிற்சிகளோடு, மேற்கூறியபடி காய்கறி மற்றும் பழங்களை எடுத்துக் கொண்டால், கோடை கொண்டாட்ட குதூகலத்தில், உடல் எடை அதிகரிப்பதை தடுக்க முடியும் என்கின்றனர்.

தாகத்தை தணிக்க தண்ணீர்:

கோடையில், குறிப்பாக வெயிலில் சுற்றி வந்தால் நாக்கு வறண்டு தாகம் அதிகமாக எடுப்பது சகஜம்தான். இந்த சமயத்தில் நம்மில் பலர் உடனடியாக தாகத்தை தணிக்க பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர் பானங்களை வாங்கிக் குடிக்கிறார்கள்.இவ்வாறு செயற்கையாக தயாரிக்கப்படும் குளிர்பானங்களை வாங்கி குடித்தால், அது நமது உடலுக்கும் உபாதைகளை ஏற்படுத்துவதோடு, பர்ஸ்-க்கும் வேட்டு வைக்கிறது.

அதற்கு பதிலாக தாகத்தை தணிக்க தண்ணீரே போதுமானது.அது நமது உடலை குளுமைபடுத்துவதோடு,உடலில் நீரிழப்பு ஏற்படுவதையும் தடுக்கிறது.மேலும் தேவையற்ற கூடுதல்கலோரிகள் உங்கள் உடலில் சேருவதையும் அது தடுக்கிறது.செயற்கை குளிர் பானங்கள் நமது உடலில் தேவையற்ற அதிக கலோரிகளை உருவாக்கி விடுகிறது.

ஒருவேளை சிலருக்கு வெறும் தண்ணீரை அருந்த விருப்பமில்லாமல் இருந்தால், அதற்கு பதிலாக புதிதாக தயாரிக்கப்பட்ட எலுமிச்சை பழ ஜூஸ், இளநீர் அல்லது மோர் போன்றவற்றை அருந்தலாம். இவை கோடையின் சிறந்த தாகம் தணிப்பு பானங்கள் என்றே சொல்லலாம்.

முக நூல்

Popular Posts