background img

புதிய வரவு

Showing posts with label high court. Show all posts
Showing posts with label high court. Show all posts
ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் இருவரும் கடந்த 20-ந்தேதி கைது செய்யப்பட்டனர்.

சி.பி.ஐ. சிறப்புக் கோர்ட்டு அவர்களது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததால், அவர்கள் இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்கள்.

கடந்த 10 நாட்களாக கனிமொழியும், சரத்குமாரும் ஜெயிலில் இருந்து வருகிறார்கள். ஸ்பெக்ட்ரம் வழக்கில் தங்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்கள் இருவரும் கடந்த 23-ந்தேதி டெல்லி ஐகோர்ட்டில் மனு செய்தனர். கனிமொழி தனது மனுவில், என் மீதான குற்றச்சாட்டுக்கள் தவறானவை.

கலைஞர் டி.வி.யில் நான் வெறும் பங்குதாரர்தான் எனக்கு பண பரிவர்த்தனையில் எந்த தொடர்பும் இல்லை. எனக்கு பள்ளி செல்லும் வயதில் மகன் இருக்கிறான். அவனை நான் கவனிக்க வேண்டும். எனவே மனிதாபிமான அடிப்படையில் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

கனிமொழி மனுவுக்கு பதில் அளிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட்ட நீதிபதி பரிகோகே, அடுத்த விசாரணை 30-ந்தேதி நடைபெறும் என்று அறிவித்தார். அதன்படி டெல்லி ஐகோர்ட்டில் இன்று கனிமொழி, சரத்குமார் ஆகியோர் ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்தது. இதற்காக கனிமொழி, சரத்குமார் இருவரும் திகார் ஜெயிலில் இருந்து அழைத்து வரப்பட்டு டெல்லி ஐகோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

அப்போது கனிமொழியை ராஜாத்தி அம்மாள் சந்தித்துப் பேசினார். அவர் தன்னுடன் கனிமொழியின் மகன் ஆதித்யாவை அழைத்து வந்திருந்தார். கனிமொழியின் கணவர் அரவிந்தன் மற்றும் நடிகை குஷ்பு ஆகியோரும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். அவர்களுடன் கனிமொழி பேசிக்கொண்டிருந்தார். நீதிபதி பரிகோகே முன்னிலையில் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை மதியம் 2 மணி முதல் நடந்தது.

கனிமொழி சார்பில் ஆஜரான வக்கீல் மனுவில் கூறி இருப்பதை வலியுறுத்தினார். இதையடுத்து சி.பி.ஐ. சார்பில் வக்கீல் ஆஜராகி வாதாடுகிறார். கனிமொழி, சரத்குமார் இருவருக்கும் ஜாமீன் கிடைக்குமா? என்பது இன்று பிற்பகல் தெரியவரும். கரீம் மொரனிக்கு ஜாமீன் கிடைக்குமா என்பதும் இன்று தெரியும். டெல்லி ஐகோர்ட்டு வளா கத்தில் கடந்த புதன்கிழமை ஒரு குண்டு வெடித்தது.

இதனால் ஐகோர்ட்டு வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோர்ட்டுக்கு வந்த அனைவரும் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். வழக்குக்கு தொடர்பு இல்லாத யாரும் கோர்ட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

பாதுகாப்பு அதிகாரி அனுமதித்த ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் மட்டுமே கோர்ட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டன.

டெல்லி ஐகோர்ட்டில் கனிமொழி ஜாமீன் மனு விசாரணை தொடங்கியது; ராசாத்தி அம்மாள் பேரனுடன் வந்தார்

ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் இருவரும் கடந்த 20-ந்தேதி கைது செய்யப்பட்டனர்.

சி.பி.ஐ. சிறப்புக் கோர்ட்டு அவர்களது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததால், அவர்கள் இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்கள்.

கடந்த 10 நாட்களாக கனிமொழியும், சரத்குமாரும் ஜெயிலில் இருந்து வருகிறார்கள். ஸ்பெக்ட்ரம் வழக்கில் தங்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்கள் இருவரும் கடந்த 23-ந்தேதி டெல்லி ஐகோர்ட்டில் மனு செய்தனர். கனிமொழி தனது மனுவில், என் மீதான குற்றச்சாட்டுக்கள் தவறானவை.

கலைஞர் டி.வி.யில் நான் வெறும் பங்குதாரர்தான் எனக்கு பண பரிவர்த்தனையில் எந்த தொடர்பும் இல்லை. எனக்கு பள்ளி செல்லும் வயதில் மகன் இருக்கிறான். அவனை நான் கவனிக்க வேண்டும். எனவே மனிதாபிமான அடிப்படையில் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

கனிமொழி மனுவுக்கு பதில் அளிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட்ட நீதிபதி பரிகோகே, அடுத்த விசாரணை 30-ந்தேதி நடைபெறும் என்று அறிவித்தார். அதன்படி டெல்லி ஐகோர்ட்டில் இன்று கனிமொழி, சரத்குமார் ஆகியோர் ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்தது. இதற்காக கனிமொழி, சரத்குமார் இருவரும் திகார் ஜெயிலில் இருந்து அழைத்து வரப்பட்டு டெல்லி ஐகோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

அப்போது கனிமொழியை ராஜாத்தி அம்மாள் சந்தித்துப் பேசினார். அவர் தன்னுடன் கனிமொழியின் மகன் ஆதித்யாவை அழைத்து வந்திருந்தார். கனிமொழியின் கணவர் அரவிந்தன் மற்றும் நடிகை குஷ்பு ஆகியோரும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். அவர்களுடன் கனிமொழி பேசிக்கொண்டிருந்தார். நீதிபதி பரிகோகே முன்னிலையில் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை மதியம் 2 மணி முதல் நடந்தது.

கனிமொழி சார்பில் ஆஜரான வக்கீல் மனுவில் கூறி இருப்பதை வலியுறுத்தினார். இதையடுத்து சி.பி.ஐ. சார்பில் வக்கீல் ஆஜராகி வாதாடுகிறார். கனிமொழி, சரத்குமார் இருவருக்கும் ஜாமீன் கிடைக்குமா? என்பது இன்று பிற்பகல் தெரியவரும். கரீம் மொரனிக்கு ஜாமீன் கிடைக்குமா என்பதும் இன்று தெரியும். டெல்லி ஐகோர்ட்டு வளா கத்தில் கடந்த புதன்கிழமை ஒரு குண்டு வெடித்தது.

இதனால் ஐகோர்ட்டு வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோர்ட்டுக்கு வந்த அனைவரும் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். வழக்குக்கு தொடர்பு இல்லாத யாரும் கோர்ட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

பாதுகாப்பு அதிகாரி அனுமதித்த ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் மட்டுமே கோர்ட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டன.

சென்னை ஐகோர்ட்டுக்கு கோடைகால விடுமுறை தொடங்கியது. விடுமுறைகால கோர்ட்டுகளில் நீதிபதிகள் யார்? யார்? விசாரணை நடத்துவார்கள் என்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் எஸ்.விமலா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:


சென்னை ஐகோர்ட்டுக்கு மே 1ந் தேதியில் இருந்து ஜுன் 5ந் தேதி வரை கோடைகால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை கால கோர்ட்டுகளை நடத்துவதற்காக, விடுமுறை காலம் 3 பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது.


மே 1 15 தேதி முதல் பகுதி என்றும், மே 16 29 இரண்டாம் பகுதியாகவும், மே 30 முதல் ஜுன் 5 ந் தேதிவரை மூன்றாம் பகுதியாகவும் கோடைகால விடுமுறை பிரிக்கப்பட்டுள்ளது.


முதல் பகுதி விடுமுறை காலத்தில் மே 4, 5, 11, 12 ந் தேதிகளில் ஐகோர்ட்டு இயங்கும். அப்போது வழக்குகளை நீதிபதிகள் வி.தனபாலன், சி.எஸ்.கர்ணன், ஏ.ஆறுமுகசாமி விசாரிப்பார்கள். அனைத்து டிவிஷன் பெஞ்ச் விவகாரங்களையும் நீதிபதிகள் வி.தனபாலன், ஏ.ஆறுமுகசாமி ஆகியோர் விசாரிப்பார்கள்.


டிவிஷன் பெஞ்ச் விசாரணை முடிந்ததும், ரிட் மனுக்கள், வரி, மோட்டார் வாகன வழக்குகள், கல்வி, சுரங்கம் மற்றும் கனிமம், தொழிற்சாலைகள், மின்சாரம், நில ஆர்ஜிதம், உள்ளாட்சி விவகாரங்கள் ஆகிய வழக்குகளை நீதிபதி வி.தனபாலன் விசாரிப்பார்.


டிவிஷன் பெஞ்ச் பணிகள் முடிந்த பிறகு, ரிட் மனுக்கள், தொழிலாளர் நலன், அரசுப் பணி, சுங்கம் மற்றும் மத்திய கலால், வனம், நில சீர்திருத்தம், கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட வழக்குகளை நீதிபதி ஏ.ஆறுமுகசாமி விசாரிப்பார். அனைத்து கிரிமினல் வழக்குகளையும் நீதிபதி சி.எஸ்.கர்ணன் விசாரிப்பார்.


இரண்டாம் பகுதி விடுமுறை காலத்தில் மே 18, 19, 25, 26 ந் தேதிகளில் ஐகோர்ட்டு இயங்கும். இந்த நாட்களில் நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், சி.எஸ்.கர்ணன், கே.பி.கே.வாசுகி ஆகியோர் விசாரணை நடத்துவார்கள். அனைத்து டிவிஷன் பெஞ்ச் வழக்குகளை நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், கே.பி.கே.வாசுகி ஆகியோர் விசாரிப்பார்கள்.


டிவிஷன் பெஞ்ச் விசாரணை முடிந்ததும், ரிட் மனுக்கள், வரி, மோட்டார் வாகன வழக்குகள், கல்வி, சுரங்கம் மற்றும் கனிமம், தொழிற்சாலைகள், மின்சாரம், நில ஆர்ஜிதம், உள்ளாட்சி விவகாரங்கள் ஆகிய வழக்குகளை நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் விசாரிப்பார்.


டிவிஷன் பெஞ்ச் பணிகள் முடிந்த பிறகு, ரிட் மனுக்கள், தொழிலாளர் நலன், அரசுப் பணி, சுங்கம் மற்றும் மத்திய கலால், வனம், நில சீர்திருத்தம், கூட்டுறவு சங்கம், சினிமா சம்பந்தப்பட்ட வழக்குகளை நீதிபதி கே.பி.கே.வாசுகி விசாரிப்பார். அனைத்து கிரிமினல் வழக்குகளையும் நீதிபதி சி.எஸ்.கர்ணன் விசாரிப்பார்.


மூன்றாம் பகுதி விடுமுறை காலத்தில் ஜுன் 1, 2 ந் தேதிகளில் ஐகோர்ட்டு இயங்கும். நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், சி.எஸ்.கர்ணன், ஜி.எம்.அக்பர் அலி ஆகியோர் விசாரணை நடத்துவார்கள். அனைத்து டிவிஷன் பெஞ்ச் வழக்குகளையும் நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், ஜி.எம்.அக்பர் அலி விசாரிப்பார்கள்.


டிவிஷன் பெஞ்ச் பணி முடிந்ததும் ரிட் மனுக்கள், வரி, மோட்டார் வாகன வழக்குகள், கல்வி, சுரங்கம் மற்றும் கனிமம், தொழிற்சாலைகள், மின்சாரம், நில ஆர்ஜிதம், உள்ளாட்சி விவகாரங்கள் ஆகிய வழக்குகளை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் விசாரிப்பார்.


டிவிஷன் பெஞ்ச் பணிகள் முடிந்த பிறகு, ரிட் மனுக்கள், தொழிலாளர் நலன், அரசுப் பணி, சுங்கம் மற்றும் மத்திய கலால், வனம், நில சீர்திருத்தம், கூட்டுறவு சங்கம், சினிமா சம்பந்தப்பட்ட வழக்குகளை நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி விசாரிப்பார். அனைத்து கிரிமினல் வழக்குகளையும் நீதிபதி சி.எஸ்.கர்ணன் விசாரிப்பார்.


விடுமுறை கால கோர்ட்டுகளில் அவசர வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அவசரத்துக்கான காரணத்தை தனியாக காட்ட வேண்டும். விடுமுறைகால கோர்ட்டு காலை 10.30 மணியில் இருந்து மாலை 4.45 மணிவரை இயங்கும்.


மே 2, 3, 9, 10, 16, 17, 23, 24, 30, 31 ஆகிய தேதிகளில் மனு தாக்கல் செய்யலாம். ஐகோர்ட்டு பதிவகம் காலை 10 மணி முதல் மாலை 4.45 மணிவரை இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டுக்கு கோடைகால விடுமுறை

சென்னை ஐகோர்ட்டுக்கு கோடைகால விடுமுறை தொடங்கியது. விடுமுறைகால கோர்ட்டுகளில் நீதிபதிகள் யார்? யார்? விசாரணை நடத்துவார்கள் என்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் எஸ்.விமலா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:


சென்னை ஐகோர்ட்டுக்கு மே 1ந் தேதியில் இருந்து ஜுன் 5ந் தேதி வரை கோடைகால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை கால கோர்ட்டுகளை நடத்துவதற்காக, விடுமுறை காலம் 3 பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது.


மே 1 15 தேதி முதல் பகுதி என்றும், மே 16 29 இரண்டாம் பகுதியாகவும், மே 30 முதல் ஜுன் 5 ந் தேதிவரை மூன்றாம் பகுதியாகவும் கோடைகால விடுமுறை பிரிக்கப்பட்டுள்ளது.


முதல் பகுதி விடுமுறை காலத்தில் மே 4, 5, 11, 12 ந் தேதிகளில் ஐகோர்ட்டு இயங்கும். அப்போது வழக்குகளை நீதிபதிகள் வி.தனபாலன், சி.எஸ்.கர்ணன், ஏ.ஆறுமுகசாமி விசாரிப்பார்கள். அனைத்து டிவிஷன் பெஞ்ச் விவகாரங்களையும் நீதிபதிகள் வி.தனபாலன், ஏ.ஆறுமுகசாமி ஆகியோர் விசாரிப்பார்கள்.


டிவிஷன் பெஞ்ச் விசாரணை முடிந்ததும், ரிட் மனுக்கள், வரி, மோட்டார் வாகன வழக்குகள், கல்வி, சுரங்கம் மற்றும் கனிமம், தொழிற்சாலைகள், மின்சாரம், நில ஆர்ஜிதம், உள்ளாட்சி விவகாரங்கள் ஆகிய வழக்குகளை நீதிபதி வி.தனபாலன் விசாரிப்பார்.


டிவிஷன் பெஞ்ச் பணிகள் முடிந்த பிறகு, ரிட் மனுக்கள், தொழிலாளர் நலன், அரசுப் பணி, சுங்கம் மற்றும் மத்திய கலால், வனம், நில சீர்திருத்தம், கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட வழக்குகளை நீதிபதி ஏ.ஆறுமுகசாமி விசாரிப்பார். அனைத்து கிரிமினல் வழக்குகளையும் நீதிபதி சி.எஸ்.கர்ணன் விசாரிப்பார்.


இரண்டாம் பகுதி விடுமுறை காலத்தில் மே 18, 19, 25, 26 ந் தேதிகளில் ஐகோர்ட்டு இயங்கும். இந்த நாட்களில் நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், சி.எஸ்.கர்ணன், கே.பி.கே.வாசுகி ஆகியோர் விசாரணை நடத்துவார்கள். அனைத்து டிவிஷன் பெஞ்ச் வழக்குகளை நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், கே.பி.கே.வாசுகி ஆகியோர் விசாரிப்பார்கள்.


டிவிஷன் பெஞ்ச் விசாரணை முடிந்ததும், ரிட் மனுக்கள், வரி, மோட்டார் வாகன வழக்குகள், கல்வி, சுரங்கம் மற்றும் கனிமம், தொழிற்சாலைகள், மின்சாரம், நில ஆர்ஜிதம், உள்ளாட்சி விவகாரங்கள் ஆகிய வழக்குகளை நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் விசாரிப்பார்.


டிவிஷன் பெஞ்ச் பணிகள் முடிந்த பிறகு, ரிட் மனுக்கள், தொழிலாளர் நலன், அரசுப் பணி, சுங்கம் மற்றும் மத்திய கலால், வனம், நில சீர்திருத்தம், கூட்டுறவு சங்கம், சினிமா சம்பந்தப்பட்ட வழக்குகளை நீதிபதி கே.பி.கே.வாசுகி விசாரிப்பார். அனைத்து கிரிமினல் வழக்குகளையும் நீதிபதி சி.எஸ்.கர்ணன் விசாரிப்பார்.


மூன்றாம் பகுதி விடுமுறை காலத்தில் ஜுன் 1, 2 ந் தேதிகளில் ஐகோர்ட்டு இயங்கும். நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், சி.எஸ்.கர்ணன், ஜி.எம்.அக்பர் அலி ஆகியோர் விசாரணை நடத்துவார்கள். அனைத்து டிவிஷன் பெஞ்ச் வழக்குகளையும் நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், ஜி.எம்.அக்பர் அலி விசாரிப்பார்கள்.


டிவிஷன் பெஞ்ச் பணி முடிந்ததும் ரிட் மனுக்கள், வரி, மோட்டார் வாகன வழக்குகள், கல்வி, சுரங்கம் மற்றும் கனிமம், தொழிற்சாலைகள், மின்சாரம், நில ஆர்ஜிதம், உள்ளாட்சி விவகாரங்கள் ஆகிய வழக்குகளை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் விசாரிப்பார்.


டிவிஷன் பெஞ்ச் பணிகள் முடிந்த பிறகு, ரிட் மனுக்கள், தொழிலாளர் நலன், அரசுப் பணி, சுங்கம் மற்றும் மத்திய கலால், வனம், நில சீர்திருத்தம், கூட்டுறவு சங்கம், சினிமா சம்பந்தப்பட்ட வழக்குகளை நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி விசாரிப்பார். அனைத்து கிரிமினல் வழக்குகளையும் நீதிபதி சி.எஸ்.கர்ணன் விசாரிப்பார்.


விடுமுறை கால கோர்ட்டுகளில் அவசர வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அவசரத்துக்கான காரணத்தை தனியாக காட்ட வேண்டும். விடுமுறைகால கோர்ட்டு காலை 10.30 மணியில் இருந்து மாலை 4.45 மணிவரை இயங்கும்.


மே 2, 3, 9, 10, 16, 17, 23, 24, 30, 31 ஆகிய தேதிகளில் மனு தாக்கல் செய்யலாம். ஐகோர்ட்டு பதிவகம் காலை 10 மணி முதல் மாலை 4.45 மணிவரை இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்: சர்ச்சைக்குரிய மகர ஜோதி விவகாரம் குறித்து 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி, கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலையில், கடந்த ஜனவரி 14-ந்தேதி மகர ஜோதி தரிசனம் முடிந்ததும் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 102 பக்தர்கள் பலியானார்கள். அதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய மகர ஜோதி விவகாரம் குறித்து, கேரள உயர்நீதிமன்றத்தில் 3 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

கேரள யுக்திவாடி சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த விவகாரம் குறித்து நீதிபதி சந்திரசேகர மேனன் கமிஷன் சட்டசபையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையை இந்த நீதிமன்றம் முன்பு சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

அகில பாரதீய யுக்திவாடி சங்கம் தனது மனுவில், மகர ஜோதி மனிதர்களால் ஏற்றப்படுவது என்றும், அதற்காக அரசு நிதியைப் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தது.

சபரிமலையின் முன்னாள் மேல்சாந்தி தாக்கல் செய்திருந்த மனுவில், மகரஜோதி மக்களின் நம்பிக்கை தொடர்பான விஷயம் என்பதால் இந்த பிரச்சினையில் யாரும் தலையிடக்கூடாது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

4 வாரங்களுக்குள் பதில்..

நீதிபதிகள் தோத்தாத்தில் பி.ராதாகிருஷ்ணன், எஸ்.சதீஷ் சந்திரன் ஆகியோரைக் கொண்ட கேரள ஐகோர்ட்டு பெஞ்ச் முன்பு இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன.

விசாரணைக்குப்பின், இந்த மனுக்கள் தொடர்பாக தங்கள் கருத்துக்களை 4 வாரங்களுக்குள் கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்று, மாநில அரசு, தேவசம் போர்டு மற்றும் வனத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

மனிதர்களால் ஏற்றப்படுகிறதா?:


இந்த பிரச்சினையில் சபரிமலை தந்திரியின் கருத்தை பெறும்படியும் தேவசம் போர்டுக்கு உத்தரவிடப்பட்டது. மகரஜோதி, மனிதர்களால் ஏற்றப்படுகிறதா? என்பது குறித்தும், மகர ஜோதிக்கும் மகரவிளக்குக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று அறிந்து கொள்ள விரும்புவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மகரஜோதி விவகாரம்... 4 வாரங்களுக்குள் பதில் தர கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு!

திருவனந்தபுரம்: சர்ச்சைக்குரிய மகர ஜோதி விவகாரம் குறித்து 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி, கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலையில், கடந்த ஜனவரி 14-ந்தேதி மகர ஜோதி தரிசனம் முடிந்ததும் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 102 பக்தர்கள் பலியானார்கள். அதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய மகர ஜோதி விவகாரம் குறித்து, கேரள உயர்நீதிமன்றத்தில் 3 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

கேரள யுக்திவாடி சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த விவகாரம் குறித்து நீதிபதி சந்திரசேகர மேனன் கமிஷன் சட்டசபையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையை இந்த நீதிமன்றம் முன்பு சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

அகில பாரதீய யுக்திவாடி சங்கம் தனது மனுவில், மகர ஜோதி மனிதர்களால் ஏற்றப்படுவது என்றும், அதற்காக அரசு நிதியைப் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தது.

சபரிமலையின் முன்னாள் மேல்சாந்தி தாக்கல் செய்திருந்த மனுவில், மகரஜோதி மக்களின் நம்பிக்கை தொடர்பான விஷயம் என்பதால் இந்த பிரச்சினையில் யாரும் தலையிடக்கூடாது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

4 வாரங்களுக்குள் பதில்..

நீதிபதிகள் தோத்தாத்தில் பி.ராதாகிருஷ்ணன், எஸ்.சதீஷ் சந்திரன் ஆகியோரைக் கொண்ட கேரள ஐகோர்ட்டு பெஞ்ச் முன்பு இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன.

விசாரணைக்குப்பின், இந்த மனுக்கள் தொடர்பாக தங்கள் கருத்துக்களை 4 வாரங்களுக்குள் கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்று, மாநில அரசு, தேவசம் போர்டு மற்றும் வனத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

மனிதர்களால் ஏற்றப்படுகிறதா?:


இந்த பிரச்சினையில் சபரிமலை தந்திரியின் கருத்தை பெறும்படியும் தேவசம் போர்டுக்கு உத்தரவிடப்பட்டது. மகரஜோதி, மனிதர்களால் ஏற்றப்படுகிறதா? என்பது குறித்தும், மகர ஜோதிக்கும் மகரவிளக்குக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று அறிந்து கொள்ள விரும்புவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்வதற்கு த‌மிழக அரசு அனுமதிக்கக்கூடாது என்று சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தில் திருப்பூர் மாவ‌ட்ட‌ம் வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம், ஆண்டிபாளையத்தைச் சேர்ந்த பூமணி ஆகியோர் தா‌க்க‌ல் செ‌ய்த மனு‌வி‌ல், எங்களுக்கு சொந்தமாக திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் உள்ளன. அவற்றில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்வதற்கு வருவாய் கோட்டாட்சியர், காவ‌ல்துறை‌யின‌ர் குறுக்கிடுகின்றனர்.

எங்கள் கிணற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரை திருப்பூர், பல்லடம் பகுதிக்கு கொண்டு செல்கிறோம். எனவே தண்ணீரை கொண்டு செல்வதில் தலையிட அவர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது, புதிய திருப்பூர் பகுதி வளர்ச்சி ஆணையம் தரப்பில் தங்களையும் இந்த வழக்கில் இணைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர். ஆனால் இதை தனி நீதிபதி ஏற்கவில்லை. மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

அந்த உத்தரவை எதிர்த்து உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் தர்மாராவ், அரிபரந்தாமன் ஆகியோர் விசாரித்து அ‌ளி‌த்த உ‌த்தர‌வி‌ல், தமிழ்நாடு நிலத்தடி நீர்மேம்பாடு, நிர்வாகச் சட்டத்தின் (2003) அடிப்படையில் அரசிடம் இருந்து சில விளக்கங்களை பலமுறை ‌நீ‌திம‌ன்ற‌ம் கேட்டது.

கடந்த ஜனவரி மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு அரசு பிளீடர், பொதுப்பணித்துறை செயலாளரின் கடிதம் ஒன்றை தாக்கல் செய்தார். அதில், வேளாண்மையை ஊக்குவிக்கவும், விவசாயிகளின் சமூக, பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டும் நிலத்தடி நீர்மேம்பாடு, நிர்வாக சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வருவதாக கூறப்பட்டு இருந்தது.

2003ஆம் ஆண்டில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. 3 ஆண்டுகள் முடிந்தும் அதை அமல்படுத்துவதற்கான நடைமுறைகளை அரசு மேற்கொள்ளவில்லை. இதற்கு என்ன காரணம் என்பதும் தெரியவில்லை. உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் 2 முறை உத்தரவு பிறப்பித்த பிறகும், அந்த சட்டத்தை அறிவிப்பாணையாக வெளியிடவில்லை என்று கேள்வி எழுப்பிய பிறகும் அதை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை.

எனவே விவசாயிகளுக்காக, வர்த்தக நோக்கம் உள்ளவர்களிடம் இருந்து நிலத்தடி நீரை பாதுகாப்பதற்காக உத்தரவு பிறப்பிக்கிறோம். அதன்படி இந்த சட்டம் சம்பந்தமான அறிவிப்பாணை வெளியிடப்படும் வரை, நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்வதற்கு யாரையும் அரசு அனுமதிக்கக் கூடாது எ‌ன்று உ‌த்தர‌வி‌ட்ட ‌நீ‌திப‌திக‌ள், வழக்‌கு விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவை‌த்தன‌ர்.

நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்ய தடை

நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்வதற்கு த‌மிழக அரசு அனுமதிக்கக்கூடாது என்று சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தில் திருப்பூர் மாவ‌ட்ட‌ம் வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம், ஆண்டிபாளையத்தைச் சேர்ந்த பூமணி ஆகியோர் தா‌க்க‌ல் செ‌ய்த மனு‌வி‌ல், எங்களுக்கு சொந்தமாக திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் உள்ளன. அவற்றில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்வதற்கு வருவாய் கோட்டாட்சியர், காவ‌ல்துறை‌யின‌ர் குறுக்கிடுகின்றனர்.

எங்கள் கிணற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரை திருப்பூர், பல்லடம் பகுதிக்கு கொண்டு செல்கிறோம். எனவே தண்ணீரை கொண்டு செல்வதில் தலையிட அவர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது, புதிய திருப்பூர் பகுதி வளர்ச்சி ஆணையம் தரப்பில் தங்களையும் இந்த வழக்கில் இணைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர். ஆனால் இதை தனி நீதிபதி ஏற்கவில்லை. மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

அந்த உத்தரவை எதிர்த்து உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் தர்மாராவ், அரிபரந்தாமன் ஆகியோர் விசாரித்து அ‌ளி‌த்த உ‌த்தர‌வி‌ல், தமிழ்நாடு நிலத்தடி நீர்மேம்பாடு, நிர்வாகச் சட்டத்தின் (2003) அடிப்படையில் அரசிடம் இருந்து சில விளக்கங்களை பலமுறை ‌நீ‌திம‌ன்ற‌ம் கேட்டது.

கடந்த ஜனவரி மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு அரசு பிளீடர், பொதுப்பணித்துறை செயலாளரின் கடிதம் ஒன்றை தாக்கல் செய்தார். அதில், வேளாண்மையை ஊக்குவிக்கவும், விவசாயிகளின் சமூக, பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டும் நிலத்தடி நீர்மேம்பாடு, நிர்வாக சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வருவதாக கூறப்பட்டு இருந்தது.

2003ஆம் ஆண்டில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. 3 ஆண்டுகள் முடிந்தும் அதை அமல்படுத்துவதற்கான நடைமுறைகளை அரசு மேற்கொள்ளவில்லை. இதற்கு என்ன காரணம் என்பதும் தெரியவில்லை. உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் 2 முறை உத்தரவு பிறப்பித்த பிறகும், அந்த சட்டத்தை அறிவிப்பாணையாக வெளியிடவில்லை என்று கேள்வி எழுப்பிய பிறகும் அதை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை.

எனவே விவசாயிகளுக்காக, வர்த்தக நோக்கம் உள்ளவர்களிடம் இருந்து நிலத்தடி நீரை பாதுகாப்பதற்காக உத்தரவு பிறப்பிக்கிறோம். அதன்படி இந்த சட்டம் சம்பந்தமான அறிவிப்பாணை வெளியிடப்படும் வரை, நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்வதற்கு யாரையும் அரசு அனுமதிக்கக் கூடாது எ‌ன்று உ‌த்தர‌வி‌ட்ட ‌நீ‌திப‌திக‌ள், வழக்‌கு விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவை‌த்தன‌ர்.


கடந்த ஆண்டுகளில் எவ்வளவு மணல் அள்ளப்பட்டது எ‌ன்று‌ம் பக்கத்து மாநிலங்களில் மணல் குவாரிகளின் செயல்பாடு பற்றி பதிலளிக்க தமிழக அரசுக்கு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவிட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றுப்படுகையில் மணல் அள்ளுவது தொட‌ர்பான வழக்கில், 5 ஆண்டுகளுக்கு மணல் அள்ள உய‌ர் ‌நீ‌திம‌ன்ற மதுருை ‌கிளை கட‌ந்த ஆ‌ண்டு டிச‌ம்ப‌‌ர் 2ஆ‌ம் தே‌தி உத்தரவிட்டது.

இந்த உத்தரவு குறித்து உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தமிழக தொழில்துறை செயலாளர், கனிமம் மற்றும் தாதுப் பொருட்கள் துறை இயக்குனர், தூத்துக்குடி மாவட்ட ஆ‌ட்‌‌சிய‌ர், தூத்துக்குடியில் உள்ள தாமிரபரணி ஆற்றுப் படுகைக்கான செயல் பொறியாளர் ஆகியோர் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

''ஆட்களை வைத்து அள்ளுவதற்கும் கூலியாள் பற்றாக்குறை உள்ளது. ஆட்களை வைத்து விரைவாக மணல் அள்ளவும் முடியாது. எனவே அந்த உத்தரவை சற்று திருத்தி அமைக்க வேண்டும்'' எ‌ன்று மனு‌வி‌ல் கூ‌‌றி‌யிரு‌ந்தன‌ர்.

இந்த மனுவை ‌விசா‌ரி‌த்த நீதிபதிகள் ஆர்.பானுமதி, எஸ்.நாகமுத்து ஆகியோர் கொ‌ண்ட அம‌ர்வு, ஒவ்வொரு மணல் குவாரியிலும் அதிகபட்சம் இரண்டு பொக்லைன் எந்திரங்களை மட்டுமே பயன்படுத்தலாம். எத்தனை பொக்லைன் எந்திரங்கள் தேவை என்பதை குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதி உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

காலை 6 மணிக்கு முன்பதாகவும், மாலை 7 மணிக்கு பிறகும் பொக்லைன் எந்திரங்களை உபயோகிக்கக் கூடாது என்று கடந்த 10ஆ‌ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பி‌த்தது.

இ‌ந்த மனு நே‌ற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பி‌ல் அடவகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் வாதிட்டார். இதை‌த் தொட‌ர்‌ந்து ‌‌நீ‌திபதிகள் ‌பிற‌ப்‌பி‌த்த உ‌த்தர‌வி‌ல், கடந்த ஆண்டுகளில் எவ்வளவு மணல் அள்ளப்பட்டது? எத்தனை எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது? அண்டை மாநிலங்களில் மணல் குவாரிகளின் செயல்பாட்டின் விவரம் என்ன? எ‌ன்பது பற்றி வரு‌ம் 1ஆ‌ம் தேதி பதிலளிக்கும்படி த‌மிழக அரசு‌க்கு உத்தரவிட்டனர்.

இதுவரை எவ்வளவு மணல் அள்ளப்பட்டது: பதிலளிக்க த‌மிழக அரசு‌க்கு உத்தரவு


கடந்த ஆண்டுகளில் எவ்வளவு மணல் அள்ளப்பட்டது எ‌ன்று‌ம் பக்கத்து மாநிலங்களில் மணல் குவாரிகளின் செயல்பாடு பற்றி பதிலளிக்க தமிழக அரசுக்கு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவிட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றுப்படுகையில் மணல் அள்ளுவது தொட‌ர்பான வழக்கில், 5 ஆண்டுகளுக்கு மணல் அள்ள உய‌ர் ‌நீ‌திம‌ன்ற மதுருை ‌கிளை கட‌ந்த ஆ‌ண்டு டிச‌ம்ப‌‌ர் 2ஆ‌ம் தே‌தி உத்தரவிட்டது.

இந்த உத்தரவு குறித்து உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தமிழக தொழில்துறை செயலாளர், கனிமம் மற்றும் தாதுப் பொருட்கள் துறை இயக்குனர், தூத்துக்குடி மாவட்ட ஆ‌ட்‌‌சிய‌ர், தூத்துக்குடியில் உள்ள தாமிரபரணி ஆற்றுப் படுகைக்கான செயல் பொறியாளர் ஆகியோர் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

''ஆட்களை வைத்து அள்ளுவதற்கும் கூலியாள் பற்றாக்குறை உள்ளது. ஆட்களை வைத்து விரைவாக மணல் அள்ளவும் முடியாது. எனவே அந்த உத்தரவை சற்று திருத்தி அமைக்க வேண்டும்'' எ‌ன்று மனு‌வி‌ல் கூ‌‌றி‌யிரு‌ந்தன‌ர்.

இந்த மனுவை ‌விசா‌ரி‌த்த நீதிபதிகள் ஆர்.பானுமதி, எஸ்.நாகமுத்து ஆகியோர் கொ‌ண்ட அம‌ர்வு, ஒவ்வொரு மணல் குவாரியிலும் அதிகபட்சம் இரண்டு பொக்லைன் எந்திரங்களை மட்டுமே பயன்படுத்தலாம். எத்தனை பொக்லைன் எந்திரங்கள் தேவை என்பதை குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதி உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

காலை 6 மணிக்கு முன்பதாகவும், மாலை 7 மணிக்கு பிறகும் பொக்லைன் எந்திரங்களை உபயோகிக்கக் கூடாது என்று கடந்த 10ஆ‌ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பி‌த்தது.

இ‌ந்த மனு நே‌ற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பி‌ல் அடவகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் வாதிட்டார். இதை‌த் தொட‌ர்‌ந்து ‌‌நீ‌திபதிகள் ‌பிற‌ப்‌பி‌த்த உ‌த்தர‌வி‌ல், கடந்த ஆண்டுகளில் எவ்வளவு மணல் அள்ளப்பட்டது? எத்தனை எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது? அண்டை மாநிலங்களில் மணல் குவாரிகளின் செயல்பாட்டின் விவரம் என்ன? எ‌ன்பது பற்றி வரு‌ம் 1ஆ‌ம் தேதி பதிலளிக்கும்படி த‌மிழக அரசு‌க்கு உத்தரவிட்டனர்.

முக நூல்

Popular Posts