background img

புதிய வரவு

Showing posts with label World cup 2011. Show all posts
Showing posts with label World cup 2011. Show all posts
மும்பை: தோனிக்கு சாதகமாக கிரகங்களின் அமைப்பு இருப்பதால், இம்முறை இந்திய அணி உலக கோப்பை வெல்லும் என்ற, ஜோதிடரின் கணிப்பு பலித்தது.
பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இத்தொடரில் இந்திய அணி தான் கோப்பை வெல்லும் என, காலிறுதி போட்டிகள் துவங்கும் முன்பாக (மார்ச் 21), மும்பையை சேர்ந்த பிரபல ஜோதிடர் கணித்து இருந்தார்.
அதன் விபரம்:
கடந்த 1981ல் பிறந்ததால், கேப்டன் தோனிக்கு கிரக பலன் அதிகமாக கிடைக்கும். இதனால் தோனி கோப்பை வெல்வார். ஆனால் 1974ல் பிறந்த ஆஸ்திரேலியாவின் பாண்டிங், சூரியன், செவ்வாய் கிரகங்களின் ஆதிக்கம் நிறைந்த இலங்கை கேப்டன் சங்ககரா (1977), சக வீரர்களின் பலன் கிடைக்காத தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித் (1981), இங்கிலாந்தின் ஸ்டிராஸ் (1977), பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி (1980), நியூசிலாந்தின் வெட்டோரி (1979), வெஸ்ட் இண்டீசின் சமி (1983) ஆகியோருக்கு கிரகபலன்கள், அவ்வளவு அனுகூலமாக இல்லாததால், இம்முறை கோப்பை கிடைக்காது.
இவ்வாறு அவர் கணித்து இருந்தார்.
ஜோதிடம் பலித்தது:
அதேபோல, இந்திய அணி, "நாக் அவுட்' சுற்றில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. காலிறுதியில் ஆஸ்திரேலியாவை வீட்டுக்கு அனுப்பிய இந்திய அணி, அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. பைனலில் இலங்கையை வென்று, இரண்டாவது முறையாக இந்திய அணி உலக கோப்பை வென்று சாதித்தது.
----
சாதித்தது "எம்' மந்திரம்
இந்திய அணிக்கு இம்முறை "எம்' மந்திரம் கைகொடுத்தது எனலாம். அதாவது உலக கோப்பை தொடரின் துவக்கத்தில் இருந்தே, ஆங்கில எழுத்தான "எம்' என்று துவங்கும் இடங்கள் அல்லது மைதானங்களில் நடந்த போட்டிகளில் வென்று வந்தது. முதல் போட்டி நடந்த மிர்புர்(எதிர், வங்கதேசம்), எம்.ஏ.சின்னசாமி அரங்கம்(எதிர், அயர்லாந்து), எம்.ஏ. சிதம்பரம்(எதிர்,வெ.இண்டீஸ்), மொடிரா(எதிர், ஆஸி.,), மொகாலி(எதிர், பாக்.,) ஆகிய இடங்களில் வெற்றிபெற்றது. பைனல் நடந்த வான்கடேவும் மும்பையில் தான் இருந்தது. இதனால் இதிலும் வெல்லும் என்று நம்பப்பட்டது. தவிர, மகேந்திர சிங் தோனி என்ற பெயரும் "எம்' என்ற எழுத்தில் தான் துவங்குகிறது. இதற்கேற்ப, எல்லாம் சரியாக நடக்க, தோனி தலைமையிலான அணி கோப்பை வென்று அசத்தியது.
--
சரியாக கணித்த வார்ன்
உலக கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்ற போட்டிகளின் முடிவினை, ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் வார்ன், முன்னதாகவே சரியாக கணித்து தனது "டுவிட்டர்' இணையதளத்தில் வெளிட்டு வந்தார். இந்தியா, இங்கிலாந்து இடையிலான போட்டி "டை'யில் முடியும் என இவர் சரியாக கணித்தது சர்ச்சையை கிளப்பியது. இதனிடையே, நேற்று முன்தினம் நடந்த பைனலில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தால் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெல்லும். சேசிங் செய்தால், 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என கூறியிருந்தார். இருப்பினும், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
--
பிரதமருக்கு கிலானி பாராட்டு
இந்திய அணி கோப்பை வென்றதுக்கு, பிரதமர் மன்மோகன்சிங்கிடம், பாகிஸ்தான் பிரதமர் கிலானி பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார். தவிர, விளையாட்டு தொடர்பின் மூலம் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இடையிலான உறவு மேம்படும் என எதிர்பார்ப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
--
"லோகோ' அறிமுகம்
பத்தாவது உலக கோப்பை தொடர் நேற்று முன்தினம் முடிந்தது. இதையடுத்து அடுத்த தொடரை (2015) ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதுதொடர்பான "லோகோவை' ஐ.சி.சி., அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜோதிடம் பலித்தது

மும்பை: தோனிக்கு சாதகமாக கிரகங்களின் அமைப்பு இருப்பதால், இம்முறை இந்திய அணி உலக கோப்பை வெல்லும் என்ற, ஜோதிடரின் கணிப்பு பலித்தது.
பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இத்தொடரில் இந்திய அணி தான் கோப்பை வெல்லும் என, காலிறுதி போட்டிகள் துவங்கும் முன்பாக (மார்ச் 21), மும்பையை சேர்ந்த பிரபல ஜோதிடர் கணித்து இருந்தார்.
அதன் விபரம்:
கடந்த 1981ல் பிறந்ததால், கேப்டன் தோனிக்கு கிரக பலன் அதிகமாக கிடைக்கும். இதனால் தோனி கோப்பை வெல்வார். ஆனால் 1974ல் பிறந்த ஆஸ்திரேலியாவின் பாண்டிங், சூரியன், செவ்வாய் கிரகங்களின் ஆதிக்கம் நிறைந்த இலங்கை கேப்டன் சங்ககரா (1977), சக வீரர்களின் பலன் கிடைக்காத தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித் (1981), இங்கிலாந்தின் ஸ்டிராஸ் (1977), பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி (1980), நியூசிலாந்தின் வெட்டோரி (1979), வெஸ்ட் இண்டீசின் சமி (1983) ஆகியோருக்கு கிரகபலன்கள், அவ்வளவு அனுகூலமாக இல்லாததால், இம்முறை கோப்பை கிடைக்காது.
இவ்வாறு அவர் கணித்து இருந்தார்.
ஜோதிடம் பலித்தது:
அதேபோல, இந்திய அணி, "நாக் அவுட்' சுற்றில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. காலிறுதியில் ஆஸ்திரேலியாவை வீட்டுக்கு அனுப்பிய இந்திய அணி, அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. பைனலில் இலங்கையை வென்று, இரண்டாவது முறையாக இந்திய அணி உலக கோப்பை வென்று சாதித்தது.
----
சாதித்தது "எம்' மந்திரம்
இந்திய அணிக்கு இம்முறை "எம்' மந்திரம் கைகொடுத்தது எனலாம். அதாவது உலக கோப்பை தொடரின் துவக்கத்தில் இருந்தே, ஆங்கில எழுத்தான "எம்' என்று துவங்கும் இடங்கள் அல்லது மைதானங்களில் நடந்த போட்டிகளில் வென்று வந்தது. முதல் போட்டி நடந்த மிர்புர்(எதிர், வங்கதேசம்), எம்.ஏ.சின்னசாமி அரங்கம்(எதிர், அயர்லாந்து), எம்.ஏ. சிதம்பரம்(எதிர்,வெ.இண்டீஸ்), மொடிரா(எதிர், ஆஸி.,), மொகாலி(எதிர், பாக்.,) ஆகிய இடங்களில் வெற்றிபெற்றது. பைனல் நடந்த வான்கடேவும் மும்பையில் தான் இருந்தது. இதனால் இதிலும் வெல்லும் என்று நம்பப்பட்டது. தவிர, மகேந்திர சிங் தோனி என்ற பெயரும் "எம்' என்ற எழுத்தில் தான் துவங்குகிறது. இதற்கேற்ப, எல்லாம் சரியாக நடக்க, தோனி தலைமையிலான அணி கோப்பை வென்று அசத்தியது.
--
சரியாக கணித்த வார்ன்
உலக கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்ற போட்டிகளின் முடிவினை, ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் வார்ன், முன்னதாகவே சரியாக கணித்து தனது "டுவிட்டர்' இணையதளத்தில் வெளிட்டு வந்தார். இந்தியா, இங்கிலாந்து இடையிலான போட்டி "டை'யில் முடியும் என இவர் சரியாக கணித்தது சர்ச்சையை கிளப்பியது. இதனிடையே, நேற்று முன்தினம் நடந்த பைனலில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தால் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெல்லும். சேசிங் செய்தால், 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என கூறியிருந்தார். இருப்பினும், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
--
பிரதமருக்கு கிலானி பாராட்டு
இந்திய அணி கோப்பை வென்றதுக்கு, பிரதமர் மன்மோகன்சிங்கிடம், பாகிஸ்தான் பிரதமர் கிலானி பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார். தவிர, விளையாட்டு தொடர்பின் மூலம் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இடையிலான உறவு மேம்படும் என எதிர்பார்ப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
--
"லோகோ' அறிமுகம்
பத்தாவது உலக கோப்பை தொடர் நேற்று முன்தினம் முடிந்தது. இதையடுத்து அடுத்த தொடரை (2015) ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதுதொடர்பான "லோகோவை' ஐ.சி.சி., அறிமுகப்படுத்தியுள்ளது.

மும்பை: கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி அதை நாட்டிற்கும், சச்சின் டெண்டுல்கருக்கும் அர்ப்பணி்த்தது.

நேற்று மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி இலங்கையை தோற்கடித்து 28 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றது.

கோப்பையை வென்றவுடன் இந்திய அணி வீரர்கள் சச்சினை தங்கள் தோளில் வைத்து மைதானத்தில் வலம் வந்தனர். தங்களுக்கு போராதரவு அளித்த ரசிகர்களுக்கும், சச்சினுக்கும் வீரர்கள் நன்றி தெரிவித்தனர்.

உலகக் கோப்பை என்பது ஒரு பெரிய விஷயம், இன்று நாங்கள் வென்றுவிட்டோம். இதை சச்சினுக்கு கொடுக்கிறோம். இது நான் விளையாடிய 3-வது உலகக் கோப்பை. இறைவனுக்கு நன்றி என்று ஆனந்தக் கண்ணீருடன் கூறினார் ஹர்பஜன் சிங்.

நான் விளையாடிய முதல் உலகக் கோப்பையிலேயே வெற்றி பெற்றுவிட்டோம். இதைவிட வேறு என்ன வேண்டும். இநத கோப்பையை இந்திய மக்களுக்கு அளிக்கிறோம். சச்சின் கடந்த 21 வருடங்களாக சுமையை தன் தோளில் சுமந்தார் இன்று நாங்கள் அவரை தோளில் வைத்து கொண்டாடினோம் என்றார் விராத் கோலி.

இதை நம்ப முடியவில்லை. இந்தியாவிற்காகவும், சச்சினுக்காகவும் இந்த உலகக் கோப்பையை எங்கள் அணி வென்றதில் மிகவும் மகிழ்ச்சி. இதை சொல்ல வார்த்தையே இல்லை என்றார் வெற்றி பெற்றவுடன் ஆனந்தக் கண்ணீர் விட்ட யுவராஜ் சிங்.

இந்த உலகக் கோப்பை தொடரில் அதிகமாக 21 விக்கெட் எடுத்தவர்கள் ஜாஹிர் கானும், பாகிஸ்தான் கேப்டன் ஷஹித் அப்ரிடியும் தான். நாங்கள் இந்த கோப்பையை வென்றே தீர வேண்டும் என்றிருந்தோம். நாங்கள் சச்சினுக்காக சந்தோஷப்படுகிறோம். அவர் நாட்டிற்காக எவ்வளவோ செய்திருக்கிறார். இந்த வெற்றியை இந்திய மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம் என்றார் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த ஜாஹிர் கான்.

நேற்றைய ஆட்டத்தில் 97 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தவர் கௌதம் கம்பீர். எங்கள் கனவு நனவாகிவிட்டது. அனைத்து பெருமையும் சச்சினுக்கு தான். அவருக்காக நாங்கள் விளையாடினோம் என்றார் கம்பீர்.

உலகக் கோப்பையை நாட்டிற்கும், சச்சினுக்கும் அர்ப்பணித்த அணி: கனவு மெய்ப்பட்டது

மும்பை: கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி அதை நாட்டிற்கும், சச்சின் டெண்டுல்கருக்கும் அர்ப்பணி்த்தது.

நேற்று மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி இலங்கையை தோற்கடித்து 28 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றது.

கோப்பையை வென்றவுடன் இந்திய அணி வீரர்கள் சச்சினை தங்கள் தோளில் வைத்து மைதானத்தில் வலம் வந்தனர். தங்களுக்கு போராதரவு அளித்த ரசிகர்களுக்கும், சச்சினுக்கும் வீரர்கள் நன்றி தெரிவித்தனர்.

உலகக் கோப்பை என்பது ஒரு பெரிய விஷயம், இன்று நாங்கள் வென்றுவிட்டோம். இதை சச்சினுக்கு கொடுக்கிறோம். இது நான் விளையாடிய 3-வது உலகக் கோப்பை. இறைவனுக்கு நன்றி என்று ஆனந்தக் கண்ணீருடன் கூறினார் ஹர்பஜன் சிங்.

நான் விளையாடிய முதல் உலகக் கோப்பையிலேயே வெற்றி பெற்றுவிட்டோம். இதைவிட வேறு என்ன வேண்டும். இநத கோப்பையை இந்திய மக்களுக்கு அளிக்கிறோம். சச்சின் கடந்த 21 வருடங்களாக சுமையை தன் தோளில் சுமந்தார் இன்று நாங்கள் அவரை தோளில் வைத்து கொண்டாடினோம் என்றார் விராத் கோலி.

இதை நம்ப முடியவில்லை. இந்தியாவிற்காகவும், சச்சினுக்காகவும் இந்த உலகக் கோப்பையை எங்கள் அணி வென்றதில் மிகவும் மகிழ்ச்சி. இதை சொல்ல வார்த்தையே இல்லை என்றார் வெற்றி பெற்றவுடன் ஆனந்தக் கண்ணீர் விட்ட யுவராஜ் சிங்.

இந்த உலகக் கோப்பை தொடரில் அதிகமாக 21 விக்கெட் எடுத்தவர்கள் ஜாஹிர் கானும், பாகிஸ்தான் கேப்டன் ஷஹித் அப்ரிடியும் தான். நாங்கள் இந்த கோப்பையை வென்றே தீர வேண்டும் என்றிருந்தோம். நாங்கள் சச்சினுக்காக சந்தோஷப்படுகிறோம். அவர் நாட்டிற்காக எவ்வளவோ செய்திருக்கிறார். இந்த வெற்றியை இந்திய மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம் என்றார் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த ஜாஹிர் கான்.

நேற்றைய ஆட்டத்தில் 97 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தவர் கௌதம் கம்பீர். எங்கள் கனவு நனவாகிவிட்டது. அனைத்து பெருமையும் சச்சினுக்கு தான். அவருக்காக நாங்கள் விளையாடினோம் என்றார் கம்பீர்.

முக நூல்

Popular Posts