background img

புதிய வரவு

Showing posts with label Sports. Show all posts
Showing posts with label Sports. Show all posts
ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை பங்கேற்காமல் இருந்த சவுதி அரேபியா, கத்தார் மற்றும் புருனே நாட்டுப் பெண்கள் முதன்முறையாக உள்ளனர்.
2012ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் லண்டனில் நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் பல நாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இம்முறை அரேபிய நாடுகளில் உள்ள பெண்களும் பங்கறே்க உள்ளனர்.
சவுதி அரேபியாவில் பெண்கள் வண்டி ஓட்டுவதும், தேர்தலில் வாக்களிப்பதும், பொதுப்பதவிகளை வகிப்பதும் கிடையாது. இவர்கள் பள்ளிக்கூடம் செல்வதில் தொடங்கி திருமணம், வங்கிக் கணக்கு தொடங்குதல் என்று அனைத்திலுமே ஆண்களின் அனுமதியின்றி எதுவும் செய்யக்கூடாது.
ஒலிம்பிக் போட்டிகளைப் பொறுத்தவரையில் ஆண், பெண் பார்வையாளர்கள் கலந்திருந்து பார்ப்பதால் அரேபிய பெண்களுக்கு விளையாட அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது நிலைமைகள் மாறி வருகின்றன.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தால்மா ருஷ்டி மல்ஹாஸ் என்ற முதல் சவுதிப்பெண் தன் கனவு நனவாகியிருப்பதாகக் கூறியுள்ளார்.
தற்போது துப்பாக்கி சுடுதல், நீச்சல் மற்றும் ஓட்டப்போட்டிகளில் கலந்து கொள்ள மூன்று பெண்களை கத்தார் அனுப்புகிறது. தடையோட்டத்தில் மட்டும் பங்கு பெற ஒரு பெண்ணை புருனே அனுப்புகிறது. ஆனால், சவுதி அரேபியா அனுப்பும் வீராங்கனைகளின் எண்ணிக்கை இன்னும் முடிவாகவில்லை.

ஒலிம்பிக்கில் முதன்முறையாக அரேபியப் பெண்கள்

ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை பங்கேற்காமல் இருந்த சவுதி அரேபியா, கத்தார் மற்றும் புருனே நாட்டுப் பெண்கள் முதன்முறையாக உள்ளனர்.
2012ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் லண்டனில் நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் பல நாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இம்முறை அரேபிய நாடுகளில் உள்ள பெண்களும் பங்கறே்க உள்ளனர்.
சவுதி அரேபியாவில் பெண்கள் வண்டி ஓட்டுவதும், தேர்தலில் வாக்களிப்பதும், பொதுப்பதவிகளை வகிப்பதும் கிடையாது. இவர்கள் பள்ளிக்கூடம் செல்வதில் தொடங்கி திருமணம், வங்கிக் கணக்கு தொடங்குதல் என்று அனைத்திலுமே ஆண்களின் அனுமதியின்றி எதுவும் செய்யக்கூடாது.
ஒலிம்பிக் போட்டிகளைப் பொறுத்தவரையில் ஆண், பெண் பார்வையாளர்கள் கலந்திருந்து பார்ப்பதால் அரேபிய பெண்களுக்கு விளையாட அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது நிலைமைகள் மாறி வருகின்றன.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தால்மா ருஷ்டி மல்ஹாஸ் என்ற முதல் சவுதிப்பெண் தன் கனவு நனவாகியிருப்பதாகக் கூறியுள்ளார்.
தற்போது துப்பாக்கி சுடுதல், நீச்சல் மற்றும் ஓட்டப்போட்டிகளில் கலந்து கொள்ள மூன்று பெண்களை கத்தார் அனுப்புகிறது. தடையோட்டத்தில் மட்டும் பங்கு பெற ஒரு பெண்ணை புருனே அனுப்புகிறது. ஆனால், சவுதி அரேபியா அனுப்பும் வீராங்கனைகளின் எண்ணிக்கை இன்னும் முடிவாகவில்லை.

நாட்டை காக்கும் ராணுவ சேவை என்பது மகத்தான சேவை. கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் எதிர்காலத்தில் ராணுவத்தில் சேவை என்று கிரிக்கெட் கேப்டன் மகேந்திரசிங் டோணி கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியின் சேவையை பாராட்டி அவருக்கு ராணுவத்தில் கவுரவ "லெப்டினன்ட் கர்னல்' பதவி வழங்கப்பட்டது. இதனையடுத்து அவர் சனிக்கிழமையன்று ஜம்மு-காஷ்மிரில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்கு சென்று அங்கு வீரர்களை சந்தித்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரம்பரிய நடனங்கள் ஆடப்பட்டதை டோணி உற்சாகத்துடன் கண்டு ரசித்தார். பின்னர் ராணுவ வீரர்களிடையே அவர் உரையாற்றியதாவது,
 cricket now army the future ms dhoni
இப்போது உங்கள் முன் நிற்பதற்கு காரணம் கிரிக்கெட் தான். கிரிக்கெட் போட்டிகளால் தான் நான் இந்தளவுக்கு பிரபலமாக உள்ளேன்.இதற்கு பாதிப்பு வரும் வகையில் எப்போதும் செயல்பட மாட்டேன். கிரிக்கெட் வாழ்க்கை முடிந்த பின், ராணுவத்துக்காக நிச்சயம், தீவிர சேவை செய்வேன். இதில் எனக்கு அதிக ஆர்வம் உள்ளது.

போர்க்களத்தில் அதிகாரிகள் எதிர்கொள்ளும் சவால்களை பார்க்க வேண்டும் என்ற விருப்பமும் உள்ளது. தற்போது தான் இவர்களை மிக அருகில் சந்திக்கும் வாய்ப்பு வந்துள்ளது. இதுபோன்று எல்லைப் பகுதிக்கு வருவது இதுதான் முதன் முறை. இங்குள்ள அதிகாரிகளின் குடும்பத்தினர் இங்கு வந்துள்ளனர். இப்போது தான் இவர்களை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பொதுவாக விளையாட்டுக்கு எவ்வித தடைகளையும் தகர்க்கும் சக்தி உண்டு. இதனால், இந்தியா, பாகிஸ்தான் இடையில் போட்டிகளை மீண்டும் துவங்குவது முக்கியம். இரு நாட்டு கிரிக்கெட் போர்டுகளும் இணைந்து, எப்போது விளையாடுவது என்பதை முடிவு செய்ய வேண்டும். இதேபோல நாமும் அங்கு சென்று விளையாட வேண்டும். என்ன நடக்கின்றது என பொறுத்திருந்து பார்க்கலாம் என்றார்.

டோணிக்கு ராணுவ உடை மிடுக்கான தோற்றத்தை அளித்தாலும் அவருடைய நீண்ட தலைமுடி மற்ற ராணுவ வீரர்களிடம் இருந்து அவரை வித்தியாசப்படுத்தி காட்டியது.

இப்போ கிரிக்கெட் எதிர்காலத்தில் ராணுவ சேவை: எம்.எஸ். டோணி

நாட்டை காக்கும் ராணுவ சேவை என்பது மகத்தான சேவை. கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் எதிர்காலத்தில் ராணுவத்தில் சேவை என்று கிரிக்கெட் கேப்டன் மகேந்திரசிங் டோணி கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியின் சேவையை பாராட்டி அவருக்கு ராணுவத்தில் கவுரவ "லெப்டினன்ட் கர்னல்' பதவி வழங்கப்பட்டது. இதனையடுத்து அவர் சனிக்கிழமையன்று ஜம்மு-காஷ்மிரில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்கு சென்று அங்கு வீரர்களை சந்தித்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரம்பரிய நடனங்கள் ஆடப்பட்டதை டோணி உற்சாகத்துடன் கண்டு ரசித்தார். பின்னர் ராணுவ வீரர்களிடையே அவர் உரையாற்றியதாவது,
 cricket now army the future ms dhoni
இப்போது உங்கள் முன் நிற்பதற்கு காரணம் கிரிக்கெட் தான். கிரிக்கெட் போட்டிகளால் தான் நான் இந்தளவுக்கு பிரபலமாக உள்ளேன்.இதற்கு பாதிப்பு வரும் வகையில் எப்போதும் செயல்பட மாட்டேன். கிரிக்கெட் வாழ்க்கை முடிந்த பின், ராணுவத்துக்காக நிச்சயம், தீவிர சேவை செய்வேன். இதில் எனக்கு அதிக ஆர்வம் உள்ளது.

போர்க்களத்தில் அதிகாரிகள் எதிர்கொள்ளும் சவால்களை பார்க்க வேண்டும் என்ற விருப்பமும் உள்ளது. தற்போது தான் இவர்களை மிக அருகில் சந்திக்கும் வாய்ப்பு வந்துள்ளது. இதுபோன்று எல்லைப் பகுதிக்கு வருவது இதுதான் முதன் முறை. இங்குள்ள அதிகாரிகளின் குடும்பத்தினர் இங்கு வந்துள்ளனர். இப்போது தான் இவர்களை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பொதுவாக விளையாட்டுக்கு எவ்வித தடைகளையும் தகர்க்கும் சக்தி உண்டு. இதனால், இந்தியா, பாகிஸ்தான் இடையில் போட்டிகளை மீண்டும் துவங்குவது முக்கியம். இரு நாட்டு கிரிக்கெட் போர்டுகளும் இணைந்து, எப்போது விளையாடுவது என்பதை முடிவு செய்ய வேண்டும். இதேபோல நாமும் அங்கு சென்று விளையாட வேண்டும். என்ன நடக்கின்றது என பொறுத்திருந்து பார்க்கலாம் என்றார்.

டோணிக்கு ராணுவ உடை மிடுக்கான தோற்றத்தை அளித்தாலும் அவருடைய நீண்ட தலைமுடி மற்ற ராணுவ வீரர்களிடம் இருந்து அவரை வித்தியாசப்படுத்தி காட்டியது.


அஸ்லான் ஷா ஹொக்கி தொடரின் பரபரப்பான லீக் போட்டியில், இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி பெற்றது.
மலேசியாவில் உள்ள இபோ நகரில், 21வது சுல்தான் அஸ்லான் ஷா கிண்ண ஹொக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, மலேசியா, தென் கொரியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, அர்ஜென்டினா உள்ளிட்ட ஏழு அணிகள் பங்கேற்கின்றன.
நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி தனது பரம எதிரியான பாகிஸ்தான் அணியுடன் மோதியது. விறுவிறுப்பான இப்போட்டியில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
30வது நிமிடத்தில் கிடைத்தபெனால்டி கார்னர்வாய்ப்பை இந்தியாவின் சந்தீப் சிங் கோலாக மாற்றினார். இதற்கு பாகிஸ்தான் வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் பாகிஸ்தான் அணியின் கோலடிக்கும் முயற்சியை இந்திய கோல் கீப்பர் பாரத் செத்ரி அருமையாக தடுத்தார். தொடர்ந்து போராடிய பாகிஸ்தான் அணிக்கு 59வது நிமிடத்தில் கிடைத்தபெனால்டி கார்னர்வாய்ப்பை சோகைல் அபாஸ் கோலாக மாற்ற போட்டி 1-1 என்று சமநிலை அடைந்தது.
கடைசி நேரத்தில் சுதாரித்துக் கொண்ட இந்திய அணியின் சுனில், 69வது நிமிடத்தில் ஒரு சூப்பர் கோல் அடித்தார். இதனால் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்தது. ஆறு போட்டிகளின் முடிவில் 9 புள்ளிகளுடன் உள்ள இந்திய அணி, மற்ற போட்டிகளின் முடிவைப் பொறுத்து 3 அல்லது 4வது இடம் பிடிக்கலாம்.
நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 4-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. இதன்மூலம் 5 போட்டியில் 12 புள்ளிகள் பெற்ற நியூசிலாந்து அணி, முதன்முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
இங்கிலாந்து, தென் கொரியா அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது.
அஸ்லான் ஷா கிண்ண இறுதிச் சுற்றில் விளையாட இந்தியாவுக்கு லேசான வாய்ப்பு உள்ளது. இதற்கு, நாளை நடைபெறவுள்ள போட்டியில் இங்கிலாந்து அணி (8 புள்ளி), பாகிஸ்தானிடம் (3 புள்ளி) தோற்க வேண்டும்.
மற்றொரு போட்டியில் அர்ஜென்டினா அணி (9 புள்ளி), மலேசியாவிடம் (5 புள்ளி) அதிக கோல் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்திக்க வேண்டும். ஆனால் நல்ல பார்மில் உள்ள அர்ஜென்டினா, இங்கிலாந்து அணிகள் எளிதில் விட்டுக் கொடுக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்லான் ஷா ஹொக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா


அஸ்லான் ஷா ஹொக்கி தொடரின் பரபரப்பான லீக் போட்டியில், இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி பெற்றது.
மலேசியாவில் உள்ள இபோ நகரில், 21வது சுல்தான் அஸ்லான் ஷா கிண்ண ஹொக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, மலேசியா, தென் கொரியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, அர்ஜென்டினா உள்ளிட்ட ஏழு அணிகள் பங்கேற்கின்றன.
நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி தனது பரம எதிரியான பாகிஸ்தான் அணியுடன் மோதியது. விறுவிறுப்பான இப்போட்டியில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
30வது நிமிடத்தில் கிடைத்தபெனால்டி கார்னர்வாய்ப்பை இந்தியாவின் சந்தீப் சிங் கோலாக மாற்றினார். இதற்கு பாகிஸ்தான் வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் பாகிஸ்தான் அணியின் கோலடிக்கும் முயற்சியை இந்திய கோல் கீப்பர் பாரத் செத்ரி அருமையாக தடுத்தார். தொடர்ந்து போராடிய பாகிஸ்தான் அணிக்கு 59வது நிமிடத்தில் கிடைத்தபெனால்டி கார்னர்வாய்ப்பை சோகைல் அபாஸ் கோலாக மாற்ற போட்டி 1-1 என்று சமநிலை அடைந்தது.
கடைசி நேரத்தில் சுதாரித்துக் கொண்ட இந்திய அணியின் சுனில், 69வது நிமிடத்தில் ஒரு சூப்பர் கோல் அடித்தார். இதனால் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்தது. ஆறு போட்டிகளின் முடிவில் 9 புள்ளிகளுடன் உள்ள இந்திய அணி, மற்ற போட்டிகளின் முடிவைப் பொறுத்து 3 அல்லது 4வது இடம் பிடிக்கலாம்.
நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 4-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. இதன்மூலம் 5 போட்டியில் 12 புள்ளிகள் பெற்ற நியூசிலாந்து அணி, முதன்முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
இங்கிலாந்து, தென் கொரியா அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது.
அஸ்லான் ஷா கிண்ண இறுதிச் சுற்றில் விளையாட இந்தியாவுக்கு லேசான வாய்ப்பு உள்ளது. இதற்கு, நாளை நடைபெறவுள்ள போட்டியில் இங்கிலாந்து அணி (8 புள்ளி), பாகிஸ்தானிடம் (3 புள்ளி) தோற்க வேண்டும்.
மற்றொரு போட்டியில் அர்ஜென்டினா அணி (9 புள்ளி), மலேசியாவிடம் (5 புள்ளி) அதிக கோல் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்திக்க வேண்டும். ஆனால் நல்ல பார்மில் உள்ள அர்ஜென்டினா, இங்கிலாந்து அணிகள் எளிதில் விட்டுக் கொடுக்காது என்பது குறிப்பிடத்தக்கது.



இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் யூன் 4ம் திகதி மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்க உள்ளார்.
கடந்த ஏப்ரல் 26ல் மத்திய அரசால் மாநிலங்களவை எம்.பி பதவிக்கு சச்சின் டெண்டுல்கர் பரிந்துரைக்கப்பட்டார்.
.பி.எல் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தால் அவரால் அப்போது பதவியேற்க முடியவில்லை.
இதனையடுத்து, சச்சின் வரும் யூன் 4ம் திகதி பதவியேற்றுக் கொள்வார் என்று மாநிலங்களவை இணை அமைச்சர் ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சச்சின் டெண்டுல்கருக்கு மாநிலங்களவைத் தலைவர் ஹமீத் அன்சாரி பதவிப் பிரமாணம் செய்துவைப்பார் எனவும் கூறப்படுகிறது.
சச்சினுடன் மாநிலங்களவை எம்.பியாக நியமிக்கப்பட்ட நடிகை ரேகா மற்றும் தொழிலதிபர் அனு ஆகா ஆகியோர் தற்போது முடிவடைந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே பதவியேற்றுக் கொண்டனர்.
மேலும், மாநிலங்களவை உறுப்பினராகும் முதல் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

சதநாயகன் சச்சின் 4ம் திகதி எம்.பி யாக பதவியேற்கிறார்


இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் யூன் 4ம் திகதி மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்க உள்ளார்.
கடந்த ஏப்ரல் 26ல் மத்திய அரசால் மாநிலங்களவை எம்.பி பதவிக்கு சச்சின் டெண்டுல்கர் பரிந்துரைக்கப்பட்டார்.
.பி.எல் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தால் அவரால் அப்போது பதவியேற்க முடியவில்லை.
இதனையடுத்து, சச்சின் வரும் யூன் 4ம் திகதி பதவியேற்றுக் கொள்வார் என்று மாநிலங்களவை இணை அமைச்சர் ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சச்சின் டெண்டுல்கருக்கு மாநிலங்களவைத் தலைவர் ஹமீத் அன்சாரி பதவிப் பிரமாணம் செய்துவைப்பார் எனவும் கூறப்படுகிறது.
சச்சினுடன் மாநிலங்களவை எம்.பியாக நியமிக்கப்பட்ட நடிகை ரேகா மற்றும் தொழிலதிபர் அனு ஆகா ஆகியோர் தற்போது முடிவடைந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே பதவியேற்றுக் கொண்டனர்.
மேலும், மாநிலங்களவை உறுப்பினராகும் முதல் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக நூல்

Popular Posts