background img

புதிய வரவு

Showing posts with label cv thomas. Show all posts
Showing posts with label cv thomas. Show all posts
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே. தாமஸ் மீது பாமாயில் இறக்குமதி மீது ஊழல் வழக்கு நிலுவையில் இருப்பது குறித்து தேர்வுக் குழு முன்னரே விவாதித்திருந்ததாக மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தாமஸ் கேரளாவில் பணியாறியபோது நடந்த பாமாயில் இறக்குமதி மீது ஊழல் வழக்கில் அவரது பெயரும் சேர்க்கப்பட்டு,அவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஊழல் கண்காணிப்பு ஆணையராக அவர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான 3 பேர் கொண்ட தேர்வுக் குழு தாமஸை தேர்ந்தெடுத்தது குறித்து, ஒரு தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது,தாமஸ் மீது பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது குறித்து தேர்வுக் குழுவுக்கு தெரியாது என்று மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில், வழக்கறிஞர் அவ்வாறு கூறவில்லை என்று பின்னர் மத்திய அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் டெல்லியில் இன்று இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே. தாமஸ் மீது பாமாயில் இறக்குமதி மீது ஊழல் வழக்கு நிலுவையில் இருப்பது குறித்து தேர்வுக் குழு முன்னரே விவாதித்திருந்ததாகவும், இதனை மக்களவை எதிர்கட்சித் தலைவரும், தேர்வுக் குழு உறுப்பினர்களில் ஒருவருமான சுஷ்மா ஸ்வராஜ் ஒப்புக்கொண்டிருப்பது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என்றும் கூறினார்.

தாமஸ் நியமனம்: ப.சிதம்பரம் விளக்கம்

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே. தாமஸ் மீது பாமாயில் இறக்குமதி மீது ஊழல் வழக்கு நிலுவையில் இருப்பது குறித்து தேர்வுக் குழு முன்னரே விவாதித்திருந்ததாக மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தாமஸ் கேரளாவில் பணியாறியபோது நடந்த பாமாயில் இறக்குமதி மீது ஊழல் வழக்கில் அவரது பெயரும் சேர்க்கப்பட்டு,அவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஊழல் கண்காணிப்பு ஆணையராக அவர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான 3 பேர் கொண்ட தேர்வுக் குழு தாமஸை தேர்ந்தெடுத்தது குறித்து, ஒரு தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது,தாமஸ் மீது பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது குறித்து தேர்வுக் குழுவுக்கு தெரியாது என்று மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில், வழக்கறிஞர் அவ்வாறு கூறவில்லை என்று பின்னர் மத்திய அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் டெல்லியில் இன்று இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே. தாமஸ் மீது பாமாயில் இறக்குமதி மீது ஊழல் வழக்கு நிலுவையில் இருப்பது குறித்து தேர்வுக் குழு முன்னரே விவாதித்திருந்ததாகவும், இதனை மக்களவை எதிர்கட்சித் தலைவரும், தேர்வுக் குழு உறுப்பினர்களில் ஒருவருமான சுஷ்மா ஸ்வராஜ் ஒப்புக்கொண்டிருப்பது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என்றும் கூறினார்.

உச்ச நீதிமன்றத்தின் கிடுக்கு பிடி தொடர்வதால் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே. .தாமஸ் இன்று பதவி விலகிவிடுவார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஊழல் குற்றச்சாற்றுக்குள்ளான தாமஸ் மத்திய ஊழல் கண்காணிகாப்பாளராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் முந்தைய விசாரணையின்போது, தாமஸை ஊழல் கண்காணிப்பு ஆணையராக தேர்வு செய்த குழுவில் இடம்பெற்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட மூவர் குழுவுக்கு, தாமஸ் மீதான ஊழல் குற்றச்சாற்றுக்கள் குறித்து முன்கூட்டியே தெரியுமா என்று நீதிமன்றம் கேட்டிருந்தது.

இந்நிலையில்,உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தாம்ஸ் கேரளாவில் பணியாற்றியபோது,அவருக்கு எதிராக ஊழல் வழக்கில் குற்றச்சாற்றுகள் பதிவு செய்யப்பட்டது குறித்து தங்களுக்கு தெரியாது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து தாமஸை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்க பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. அப்போது தாமஸ் விடயத்தில் உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்த கருத்து குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் கிடுக்கு பிடி தொடர்வதால் தாமஸை பதவி விலகுமாறு மத்திய அரசு இன்று கேட்டுக்கொள்ளும் என்றும்,இதனால் அவர் இன்று பதவி விலகிவிடுவார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அநேகமாக தாமஸே குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்று தமது பதவி விலகல் கடிதத்தை இன்று அளித்துவிடுவார் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஊழல் கண்காணிப்பு ஆணையர் தாமஸ் பதவி விலகுகிறார்

உச்ச நீதிமன்றத்தின் கிடுக்கு பிடி தொடர்வதால் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே. .தாமஸ் இன்று பதவி விலகிவிடுவார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஊழல் குற்றச்சாற்றுக்குள்ளான தாமஸ் மத்திய ஊழல் கண்காணிகாப்பாளராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் முந்தைய விசாரணையின்போது, தாமஸை ஊழல் கண்காணிப்பு ஆணையராக தேர்வு செய்த குழுவில் இடம்பெற்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட மூவர் குழுவுக்கு, தாமஸ் மீதான ஊழல் குற்றச்சாற்றுக்கள் குறித்து முன்கூட்டியே தெரியுமா என்று நீதிமன்றம் கேட்டிருந்தது.

இந்நிலையில்,உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தாம்ஸ் கேரளாவில் பணியாற்றியபோது,அவருக்கு எதிராக ஊழல் வழக்கில் குற்றச்சாற்றுகள் பதிவு செய்யப்பட்டது குறித்து தங்களுக்கு தெரியாது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து தாமஸை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்க பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. அப்போது தாமஸ் விடயத்தில் உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்த கருத்து குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் கிடுக்கு பிடி தொடர்வதால் தாமஸை பதவி விலகுமாறு மத்திய அரசு இன்று கேட்டுக்கொள்ளும் என்றும்,இதனால் அவர் இன்று பதவி விலகிவிடுவார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அநேகமாக தாமஸே குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்று தமது பதவி விலகல் கடிதத்தை இன்று அளித்துவிடுவார் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முக நூல்

Popular Posts