நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இம்மாதம் 19ம் தேதி துவங்கி ஏப்.,2ம் தேதி வரை நடக்கவுள்ளது. இவ்வாண்டு உலகக் கோப்பையை இந்தியா வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து கூறியுள்ளதால், கிரிக்கெட் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரையும், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு மார்ச் 28ல் துவங்கி ஏப்.,11ம் தேதி வரை நடக்கிறது. இதே காலகட்டத்தில் கிரிக்கெட் போட்டிகளும் நடக்க உள்ளதால், இந்தாண்டு மாணவர்களின் தேர்வு சதவீதம் குறைய வாய்ப்புள்ளது.
மாணவர்களின் படிப்பை கவனத்தில் கொண்ட ஒரு சில பெற்றோர், தங்கள் வீடுகளில் உள்ள கேபிள் "டிவி' இணைப்பை துண்டித்துள்ளனர். இருந்தாலும் மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவரோ என்ற கவலை பெற்றோர்களிடம் ஏற்பட்டுள்ளது.இத்தகைய சூழ்நிலையில், தங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு படிப்பில் கவனம் செலுத்தினால் சிறந்த மதிப்பெண் பெற முடியும் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். எனவே, பொதுத்தேர்வின் அவசியம் குறித்த ஆலோசனைகளை ஆசிரியர்களும், பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து பெற்றோரும் ஆலோசனை வழங்கி, மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.
0 comments :
Post a Comment