background img

புதிய வரவு

பராமரிப்பு பணி: திருப்பதி மலைப்பாதை மூடப்படுகிறது


பராமரிப்பு பணி காரணமாக திருப்பதி மலைப்பாதை வருகிற 11 ஆம் தேதியன்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வர 2 மலைப்பாதைகள் உள்ளன. முதல் பாதை மலையின் மேல் பகுதிக்கு செல்வதற்கும், இரண்டாவது பாதை திருமலையில் இருந்து திருப்பதி மலை அடிவாரத்திற்கும் செல்ல பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் இரண்டாவது மலைப்பாதை பழுதாகி உள்ளது. சில இடங்களில் மலை சரிவு ஏற்படும் நிலை உள்ளது.

இத்ன் காரணமாக மலைப்பாதையை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சீரமைப்பு பணி வருகிற 11 ஆம் தேதி தொடங்கப்படுகிறது. இதனால் இப்பாதை அன்று முதல் தினமும் காலை 9 மணி முதல் 6 மணி வரை மூடப்படுகிறது.

இப்பணியை மார்ச் 31 ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts