background img

புதிய வரவு

Showing posts with label 3rd Year started in centeral Congress. Show all posts
Showing posts with label 3rd Year started in centeral Congress. Show all posts
புதுடில்லி : நாட்டை மட்டுமின்றி, உலகையே உலுக்கிய "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல், பொருளாதார சீர்திருத்தங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணாதது போன்ற சூழலில், பிரதமர் மன்மோகன் சிங்(79) தலைமையில் இரண்டாவது முறையாக பதவியேற்ற, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, மூன்றாவது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது.

கடந்த 2004 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதன்பின், 2009 தேர்தலிலும் இந்தக் கூட்டணியே வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது. மன்மோகன் சிங் மீண்டும் பிரதமரானார். 2வது முறையாக ஆட்சி அமைத்த ஐ.மு., கூட்டணி அரசு, கடந்த எட்டு மாதங்களில் பலவிதமான சர்ச்சைகளில் சிக்கியது. ரூ.1.76 லட்சம் கோடி "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், மகாராஷ்டிரா ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல் உட்பட பல வகையான ஊழல் புகார்கள், மன்மோகன் சிங் அரசு மீது கூறப்பட்டன. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றும்போது, இடதுசாரிகளின் ஆதரவை இழந்த பிரதமர், அதை விட மிகவும் சிக்கலான நெருக்கடிக்கு உள்ளானது அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் வெளியான இக்காலகட்டத்தில்தான்.

" 2ஜி' ஊழலில், தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராஜா மீது ஏன் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதமரிடம், சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது இந்திய வரலாற்றில் முதன் முறையாக நிகழ்ந்தது. சுரேஷ் கல்மாடி, ராஜா, கனிமொழி போன்றோரின் கைதும், "2ஜி' வழக்கின் மையமான நிரா ராடியா விவகாரமும், இக்கூட்டணிக்குப் பெரும் தலைக்குனிவையே ஏற்படுத்தியுள்ளன. "2ஜி' ஸ்பெக்ட்ரம் மோசடி குறித்து விசாரிக்க பார்லிமென்ட் கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தி பார்லிமென்டின் குளிர்காலக் கூட்டத் தொடரையே எதிர்க்கட்சிகள் முடக்கின. அதேபோல், தலைமைக் கண்காணிப்பு கமிஷனராக பி.ஜே. தாமஸ் நியமிக்கப்பட்ட விவகாரத்திலும், மத்திய அரசு பெரும் தலைக்குனிவை சந்தித்தது.

விலைவாசியும், செயலின்மையும்: பொருளாதார மேதைகளான, மன்மோகன் சிங், சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, மாண்டேக் சிங் அலுவாலியா போன்றவர்கள் அதிகாரத்தில் இருந்தும் கூட, அடித்தட்டு மக்களால் தாங்க முடியாத அளவிற்கு விலைவாசி விண்ணை முட்டியது. விலைவாசியைக் குறைக்க இயலாமல் மத்திய அரசு விழிபிதுங்கியது. நாட்டின் பல்வேறு உணவுக் கிடங்குகளில், தானியங்கள் பாழாகிக் கொண்டிருந்த வேளையில், மத்திய விவசாய அமைச்சர், அவற்றை வினியோகிப்பதில் போதுமான அக்கறை காட்டாததை சுப்ரீம் கோர்ட் சுட்டிக் காட்டி, கண்டனம் தெரிவித்தது. இவை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் வகையில், மும்பையில் நடந்த சில குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான, வாசுர் கமார் கான் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தும் கூட, பாகிஸ்தானிடம் மத்திய அரசு அளித்த, தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் கானின் பெயர் சேர்க்கப்பட்டதும், அரசின் செயல்பாட்டில் பெரும் குளறுபடிகள் நடந்து கொண்டிருப்பதை வெட்டவெளிச்சமாக்கின. ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், வழக்கம் போல சாக்குபோக்கு சொல்லி இவ்விவகாரத்தைச் சமாளித்தார்.

ஊழல் புகார் உட்பட பலவிதமான புகார்களால் சர்ச்சைக்கு ஆளாகியிருக்கும் மன்மோகன் சிங் அரசு, வரும் ஆண்டுகளில் மேலும் பல சவால்களையும், சிக்கல்களையும் சந்திக்க நேரிடும் என, அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தி.மு.க., மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடனான காங்கிரசின் முரண்பாடான செயல்பாடுகள், 2012ல் உத்தரபிரதேசம், குஜராத், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தல்கள் ஆகியவை இவற்றில் குறிப்பிடத் தக்கவை. சமீபத்தில், ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் முடிவுகள், காங்கிரசுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் பாதியளவுக்கு நிம்மதியைத் தந்ததுள்ளன. அசாமில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதும், கேரளாவில் புதிய அரசு அமைத்ததும், மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலும், ஆட்சிப் பொறுப்பேற்றதும் அதற்கு காரணம். இந்த திருப்தி நிலை தொடர வேண்டும் எனில், இரண்டாவது முறையாக பதவியேற்று இன்று மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மன்மோகன் சிங் அரசு, மக்களின் மனநிலையை உணர்ந்து அதற்கேற்ற வகையில் நல்ல பல பணிகளைச் செய்ய வேண்டும். இதுவே பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பு.

சவால்கள், பிரச்னைகளை சமாளிக்குமா மன்மோகன் அரசு? : இன்று 3ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது

புதுடில்லி : நாட்டை மட்டுமின்றி, உலகையே உலுக்கிய "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல், பொருளாதார சீர்திருத்தங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணாதது போன்ற சூழலில், பிரதமர் மன்மோகன் சிங்(79) தலைமையில் இரண்டாவது முறையாக பதவியேற்ற, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, மூன்றாவது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது.

கடந்த 2004 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதன்பின், 2009 தேர்தலிலும் இந்தக் கூட்டணியே வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது. மன்மோகன் சிங் மீண்டும் பிரதமரானார். 2வது முறையாக ஆட்சி அமைத்த ஐ.மு., கூட்டணி அரசு, கடந்த எட்டு மாதங்களில் பலவிதமான சர்ச்சைகளில் சிக்கியது. ரூ.1.76 லட்சம் கோடி "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், மகாராஷ்டிரா ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல் உட்பட பல வகையான ஊழல் புகார்கள், மன்மோகன் சிங் அரசு மீது கூறப்பட்டன. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றும்போது, இடதுசாரிகளின் ஆதரவை இழந்த பிரதமர், அதை விட மிகவும் சிக்கலான நெருக்கடிக்கு உள்ளானது அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் வெளியான இக்காலகட்டத்தில்தான்.

" 2ஜி' ஊழலில், தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராஜா மீது ஏன் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதமரிடம், சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது இந்திய வரலாற்றில் முதன் முறையாக நிகழ்ந்தது. சுரேஷ் கல்மாடி, ராஜா, கனிமொழி போன்றோரின் கைதும், "2ஜி' வழக்கின் மையமான நிரா ராடியா விவகாரமும், இக்கூட்டணிக்குப் பெரும் தலைக்குனிவையே ஏற்படுத்தியுள்ளன. "2ஜி' ஸ்பெக்ட்ரம் மோசடி குறித்து விசாரிக்க பார்லிமென்ட் கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தி பார்லிமென்டின் குளிர்காலக் கூட்டத் தொடரையே எதிர்க்கட்சிகள் முடக்கின. அதேபோல், தலைமைக் கண்காணிப்பு கமிஷனராக பி.ஜே. தாமஸ் நியமிக்கப்பட்ட விவகாரத்திலும், மத்திய அரசு பெரும் தலைக்குனிவை சந்தித்தது.

விலைவாசியும், செயலின்மையும்: பொருளாதார மேதைகளான, மன்மோகன் சிங், சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, மாண்டேக் சிங் அலுவாலியா போன்றவர்கள் அதிகாரத்தில் இருந்தும் கூட, அடித்தட்டு மக்களால் தாங்க முடியாத அளவிற்கு விலைவாசி விண்ணை முட்டியது. விலைவாசியைக் குறைக்க இயலாமல் மத்திய அரசு விழிபிதுங்கியது. நாட்டின் பல்வேறு உணவுக் கிடங்குகளில், தானியங்கள் பாழாகிக் கொண்டிருந்த வேளையில், மத்திய விவசாய அமைச்சர், அவற்றை வினியோகிப்பதில் போதுமான அக்கறை காட்டாததை சுப்ரீம் கோர்ட் சுட்டிக் காட்டி, கண்டனம் தெரிவித்தது. இவை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் வகையில், மும்பையில் நடந்த சில குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான, வாசுர் கமார் கான் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தும் கூட, பாகிஸ்தானிடம் மத்திய அரசு அளித்த, தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் கானின் பெயர் சேர்க்கப்பட்டதும், அரசின் செயல்பாட்டில் பெரும் குளறுபடிகள் நடந்து கொண்டிருப்பதை வெட்டவெளிச்சமாக்கின. ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், வழக்கம் போல சாக்குபோக்கு சொல்லி இவ்விவகாரத்தைச் சமாளித்தார்.

ஊழல் புகார் உட்பட பலவிதமான புகார்களால் சர்ச்சைக்கு ஆளாகியிருக்கும் மன்மோகன் சிங் அரசு, வரும் ஆண்டுகளில் மேலும் பல சவால்களையும், சிக்கல்களையும் சந்திக்க நேரிடும் என, அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தி.மு.க., மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடனான காங்கிரசின் முரண்பாடான செயல்பாடுகள், 2012ல் உத்தரபிரதேசம், குஜராத், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தல்கள் ஆகியவை இவற்றில் குறிப்பிடத் தக்கவை. சமீபத்தில், ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் முடிவுகள், காங்கிரசுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் பாதியளவுக்கு நிம்மதியைத் தந்ததுள்ளன. அசாமில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதும், கேரளாவில் புதிய அரசு அமைத்ததும், மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலும், ஆட்சிப் பொறுப்பேற்றதும் அதற்கு காரணம். இந்த திருப்தி நிலை தொடர வேண்டும் எனில், இரண்டாவது முறையாக பதவியேற்று இன்று மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மன்மோகன் சிங் அரசு, மக்களின் மனநிலையை உணர்ந்து அதற்கேற்ற வகையில் நல்ல பல பணிகளைச் செய்ய வேண்டும். இதுவே பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பு.

முக நூல்

Popular Posts