background img

புதிய வரவு

Showing posts with label congress. Show all posts
Showing posts with label congress. Show all posts
 Karunanidhi Rolls Back Pull Out Threat பெட்ரோல் விலையைக் குறைக்காவிட்டாலும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக் கூட்டணியில் கசப்புடன் நீடிப்போம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அண்ணா அறிவாலயத்தில் நிருபகளுக்கு அவர் அளித்த பேட்டி:

கேள்வி: மத்திய அரசை விட்டு வெளியேற தயங்க மாட்டோம் என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்களே..

பதில்: நான் எங்கே அப்படிச் சொன்னேன். மத்திய அரசை விட்டு வெளியேறுவோம் என்று என்னுடைய பேச்சில் எங்கேயாவது இருக்கிறதா? என்னிடம் பேச்சு `ஆடியோ' செய்யப்பட்டதே இருக்கிறது. 

கடந்த காலத்தில் பாஜகவோடு கூட்டணியிலே இருந்து கொண்டு, வி.பி. சிங் பிரதமராக இருந்த போதும் அந்தக் கூட்டணியிலே இருந்து கொண்டு, எந்த இடத்தில் இருந்தாலும் என்று சொல்லி எங்களுடைய கொள்கைகளில் ஒத்துவராத சூழ்நிலையில் நாங்கள் வெளியேற நேர்ந்தது என்று கடந்த காலத்தைத் தான் சொல்லியிருக்கிறேன். இப்போது வெளியேறுவோம் என்று சொல்லவில்லை. நீங்கள் நல்ல எதிர் காலத்தை உருவாக்க வேண்டிய பத்திரிகையாளர்கள். நீங்களாவது இவ்வாறு யூகம் செய்து கொண்டு கேட்பது விஷமத்தனமான காரியமாகும்.

கேள்வி: பெட்ரோல் விலை உயர்வைக் குறைக்காவிட்டால் நீங்கள் கூட்டணியிலிருந்து வெளியே வந்து விடுவீர்களா?

பதில்: நீங்கள் எல்லாம் விரும்புவதைப் போல அப்படி ஒரு நிபந்தனையை நாங்கள் வைக்க முடியாது. குறைக்காவிட்டால் கூட்டணியை விட்டு வெளியேறி விடுவோம் என்று கூற முடியாது.

ஏனென்றால், திடீரென்று கூட்டணியை விட்டு வெளியே வந்தால், மத்தியில் வரவிருக்கின்ற ஆட்சி பிற்போக்கான ஆட்சியாக மாறி விடலாம். மதவாத சார்புடைய ஆட்சியாக வரலாம். அதையும் நாங்கள் யோசிக்க வேண்டியிருக்கிறது. அதை மாத்திரம் காட்டி மக்களுக்குத் தேவையான காரியங்களில் மத்திய அரசும் இடையூறு செய்யக் கூடாது.

எனக்கு இப்போது வந்துள்ள தகவல்களின்படி, பிரதமர் இதைப் பற்றி யோசிப்பதாக நான் கேள்விப்படுகிறேன். மக்களுடைய கிளர்ச்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று பிரதமர் யோசிப்பதாக தகவல் வந்துள்ளது. அந்த யோசனை நல்ல முறையிலே விளைவுகளைத் தருமேயானால் மகிழ்ச்சி அடைவேன்.

கேள்வி: பெட்ரோல் விலையைக் குறைக்கப் போவதாக மத்திய அரசிடமிருந்து உங்களுக்கு கூட்டணி என்ற முறையில் தகவல் வந்திருக்கிறதா?

பதில்: யூகமான தகவல் தான். வரும் என்று எதிர்பார்க்கிறேன். பெட்ரோலைப் பொறுத்தவரையில் மத்திய அரசிடமிருந்து நல்ல செய்தி வரக் கூடும் என்று நினைக்கிறேன்.

கேள்வி: பெட்ரோல் விலையைக் குறைக்காவிட்டால் மத்திய அரசை விட்டு வெளியேறிவிடுவோம் என்று நீங்கள் பேசியதைப் பற்றி?

பதில்: மறுபடியும் அதையே கேட்கிறீர்கள். இப்போது இருக்கிற மத்திய அரசு இதற்கு முன்பு நான் சொன்ன அரசுகளைப் போல அல்ல. நாங்கள் இப்போது சொல்வதையெல்லாம் எண்ணிப் பார்க்கும். இந்தக் கிளர்ச்சிகளையெல்லாம் மதிக்கக் கூடிய அரசு தான் இப்போதுள்ள மத்திய அரசு. மாநில அரசு தான் மதிக்காத அரசு. அது மாத்திரமல்ல. விரைவிலே குடியரசு தலைவர் தேர்தல் வரவுள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில் ஒரு நெருக்கடியை மத்திய அரசுக்குக் கொடுக்கக்கூடிய காரியங்களை நாங்கள் உருவாக்க மாட்டோம். தி.மு.கழகம் கசப்போடு, இந்தக் கூட்டணியிலே நீடிக்கும். அவ்வளவு தான்.

கேள்வி:
 இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் தானே?

பதில்: மத்திய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் அல்ல. பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் என்றார் கருணாநிதி.

மனக் கசப்புடன் காங்கிரஸ் கூட்டணியில் நீடிப்போம்: கருணாநிதி

 Karunanidhi Rolls Back Pull Out Threat பெட்ரோல் விலையைக் குறைக்காவிட்டாலும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக் கூட்டணியில் கசப்புடன் நீடிப்போம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அண்ணா அறிவாலயத்தில் நிருபகளுக்கு அவர் அளித்த பேட்டி:

கேள்வி: மத்திய அரசை விட்டு வெளியேற தயங்க மாட்டோம் என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்களே..

பதில்: நான் எங்கே அப்படிச் சொன்னேன். மத்திய அரசை விட்டு வெளியேறுவோம் என்று என்னுடைய பேச்சில் எங்கேயாவது இருக்கிறதா? என்னிடம் பேச்சு `ஆடியோ' செய்யப்பட்டதே இருக்கிறது. 

கடந்த காலத்தில் பாஜகவோடு கூட்டணியிலே இருந்து கொண்டு, வி.பி. சிங் பிரதமராக இருந்த போதும் அந்தக் கூட்டணியிலே இருந்து கொண்டு, எந்த இடத்தில் இருந்தாலும் என்று சொல்லி எங்களுடைய கொள்கைகளில் ஒத்துவராத சூழ்நிலையில் நாங்கள் வெளியேற நேர்ந்தது என்று கடந்த காலத்தைத் தான் சொல்லியிருக்கிறேன். இப்போது வெளியேறுவோம் என்று சொல்லவில்லை. நீங்கள் நல்ல எதிர் காலத்தை உருவாக்க வேண்டிய பத்திரிகையாளர்கள். நீங்களாவது இவ்வாறு யூகம் செய்து கொண்டு கேட்பது விஷமத்தனமான காரியமாகும்.

கேள்வி: பெட்ரோல் விலை உயர்வைக் குறைக்காவிட்டால் நீங்கள் கூட்டணியிலிருந்து வெளியே வந்து விடுவீர்களா?

பதில்: நீங்கள் எல்லாம் விரும்புவதைப் போல அப்படி ஒரு நிபந்தனையை நாங்கள் வைக்க முடியாது. குறைக்காவிட்டால் கூட்டணியை விட்டு வெளியேறி விடுவோம் என்று கூற முடியாது.

ஏனென்றால், திடீரென்று கூட்டணியை விட்டு வெளியே வந்தால், மத்தியில் வரவிருக்கின்ற ஆட்சி பிற்போக்கான ஆட்சியாக மாறி விடலாம். மதவாத சார்புடைய ஆட்சியாக வரலாம். அதையும் நாங்கள் யோசிக்க வேண்டியிருக்கிறது. அதை மாத்திரம் காட்டி மக்களுக்குத் தேவையான காரியங்களில் மத்திய அரசும் இடையூறு செய்யக் கூடாது.

எனக்கு இப்போது வந்துள்ள தகவல்களின்படி, பிரதமர் இதைப் பற்றி யோசிப்பதாக நான் கேள்விப்படுகிறேன். மக்களுடைய கிளர்ச்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று பிரதமர் யோசிப்பதாக தகவல் வந்துள்ளது. அந்த யோசனை நல்ல முறையிலே விளைவுகளைத் தருமேயானால் மகிழ்ச்சி அடைவேன்.

கேள்வி: பெட்ரோல் விலையைக் குறைக்கப் போவதாக மத்திய அரசிடமிருந்து உங்களுக்கு கூட்டணி என்ற முறையில் தகவல் வந்திருக்கிறதா?

பதில்: யூகமான தகவல் தான். வரும் என்று எதிர்பார்க்கிறேன். பெட்ரோலைப் பொறுத்தவரையில் மத்திய அரசிடமிருந்து நல்ல செய்தி வரக் கூடும் என்று நினைக்கிறேன்.

கேள்வி: பெட்ரோல் விலையைக் குறைக்காவிட்டால் மத்திய அரசை விட்டு வெளியேறிவிடுவோம் என்று நீங்கள் பேசியதைப் பற்றி?

பதில்: மறுபடியும் அதையே கேட்கிறீர்கள். இப்போது இருக்கிற மத்திய அரசு இதற்கு முன்பு நான் சொன்ன அரசுகளைப் போல அல்ல. நாங்கள் இப்போது சொல்வதையெல்லாம் எண்ணிப் பார்க்கும். இந்தக் கிளர்ச்சிகளையெல்லாம் மதிக்கக் கூடிய அரசு தான் இப்போதுள்ள மத்திய அரசு. மாநில அரசு தான் மதிக்காத அரசு. அது மாத்திரமல்ல. விரைவிலே குடியரசு தலைவர் தேர்தல் வரவுள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில் ஒரு நெருக்கடியை மத்திய அரசுக்குக் கொடுக்கக்கூடிய காரியங்களை நாங்கள் உருவாக்க மாட்டோம். தி.மு.கழகம் கசப்போடு, இந்தக் கூட்டணியிலே நீடிக்கும். அவ்வளவு தான்.

கேள்வி:
 இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் தானே?

பதில்: மத்திய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் அல்ல. பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் என்றார் கருணாநிதி.

புதுடில்லி : நாட்டை மட்டுமின்றி, உலகையே உலுக்கிய "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல், பொருளாதார சீர்திருத்தங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணாதது போன்ற சூழலில், பிரதமர் மன்மோகன் சிங்(79) தலைமையில் இரண்டாவது முறையாக பதவியேற்ற, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, மூன்றாவது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது.

கடந்த 2004 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதன்பின், 2009 தேர்தலிலும் இந்தக் கூட்டணியே வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது. மன்மோகன் சிங் மீண்டும் பிரதமரானார். 2வது முறையாக ஆட்சி அமைத்த ஐ.மு., கூட்டணி அரசு, கடந்த எட்டு மாதங்களில் பலவிதமான சர்ச்சைகளில் சிக்கியது. ரூ.1.76 லட்சம் கோடி "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், மகாராஷ்டிரா ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல் உட்பட பல வகையான ஊழல் புகார்கள், மன்மோகன் சிங் அரசு மீது கூறப்பட்டன. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றும்போது, இடதுசாரிகளின் ஆதரவை இழந்த பிரதமர், அதை விட மிகவும் சிக்கலான நெருக்கடிக்கு உள்ளானது அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் வெளியான இக்காலகட்டத்தில்தான்.

" 2ஜி' ஊழலில், தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராஜா மீது ஏன் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதமரிடம், சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது இந்திய வரலாற்றில் முதன் முறையாக நிகழ்ந்தது. சுரேஷ் கல்மாடி, ராஜா, கனிமொழி போன்றோரின் கைதும், "2ஜி' வழக்கின் மையமான நிரா ராடியா விவகாரமும், இக்கூட்டணிக்குப் பெரும் தலைக்குனிவையே ஏற்படுத்தியுள்ளன. "2ஜி' ஸ்பெக்ட்ரம் மோசடி குறித்து விசாரிக்க பார்லிமென்ட் கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தி பார்லிமென்டின் குளிர்காலக் கூட்டத் தொடரையே எதிர்க்கட்சிகள் முடக்கின. அதேபோல், தலைமைக் கண்காணிப்பு கமிஷனராக பி.ஜே. தாமஸ் நியமிக்கப்பட்ட விவகாரத்திலும், மத்திய அரசு பெரும் தலைக்குனிவை சந்தித்தது.

விலைவாசியும், செயலின்மையும்: பொருளாதார மேதைகளான, மன்மோகன் சிங், சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, மாண்டேக் சிங் அலுவாலியா போன்றவர்கள் அதிகாரத்தில் இருந்தும் கூட, அடித்தட்டு மக்களால் தாங்க முடியாத அளவிற்கு விலைவாசி விண்ணை முட்டியது. விலைவாசியைக் குறைக்க இயலாமல் மத்திய அரசு விழிபிதுங்கியது. நாட்டின் பல்வேறு உணவுக் கிடங்குகளில், தானியங்கள் பாழாகிக் கொண்டிருந்த வேளையில், மத்திய விவசாய அமைச்சர், அவற்றை வினியோகிப்பதில் போதுமான அக்கறை காட்டாததை சுப்ரீம் கோர்ட் சுட்டிக் காட்டி, கண்டனம் தெரிவித்தது. இவை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் வகையில், மும்பையில் நடந்த சில குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான, வாசுர் கமார் கான் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தும் கூட, பாகிஸ்தானிடம் மத்திய அரசு அளித்த, தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் கானின் பெயர் சேர்க்கப்பட்டதும், அரசின் செயல்பாட்டில் பெரும் குளறுபடிகள் நடந்து கொண்டிருப்பதை வெட்டவெளிச்சமாக்கின. ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், வழக்கம் போல சாக்குபோக்கு சொல்லி இவ்விவகாரத்தைச் சமாளித்தார்.

ஊழல் புகார் உட்பட பலவிதமான புகார்களால் சர்ச்சைக்கு ஆளாகியிருக்கும் மன்மோகன் சிங் அரசு, வரும் ஆண்டுகளில் மேலும் பல சவால்களையும், சிக்கல்களையும் சந்திக்க நேரிடும் என, அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தி.மு.க., மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடனான காங்கிரசின் முரண்பாடான செயல்பாடுகள், 2012ல் உத்தரபிரதேசம், குஜராத், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தல்கள் ஆகியவை இவற்றில் குறிப்பிடத் தக்கவை. சமீபத்தில், ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் முடிவுகள், காங்கிரசுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் பாதியளவுக்கு நிம்மதியைத் தந்ததுள்ளன. அசாமில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதும், கேரளாவில் புதிய அரசு அமைத்ததும், மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலும், ஆட்சிப் பொறுப்பேற்றதும் அதற்கு காரணம். இந்த திருப்தி நிலை தொடர வேண்டும் எனில், இரண்டாவது முறையாக பதவியேற்று இன்று மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மன்மோகன் சிங் அரசு, மக்களின் மனநிலையை உணர்ந்து அதற்கேற்ற வகையில் நல்ல பல பணிகளைச் செய்ய வேண்டும். இதுவே பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பு.

சவால்கள், பிரச்னைகளை சமாளிக்குமா மன்மோகன் அரசு? : இன்று 3ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது

புதுடில்லி : நாட்டை மட்டுமின்றி, உலகையே உலுக்கிய "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல், பொருளாதார சீர்திருத்தங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணாதது போன்ற சூழலில், பிரதமர் மன்மோகன் சிங்(79) தலைமையில் இரண்டாவது முறையாக பதவியேற்ற, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, மூன்றாவது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது.

கடந்த 2004 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதன்பின், 2009 தேர்தலிலும் இந்தக் கூட்டணியே வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது. மன்மோகன் சிங் மீண்டும் பிரதமரானார். 2வது முறையாக ஆட்சி அமைத்த ஐ.மு., கூட்டணி அரசு, கடந்த எட்டு மாதங்களில் பலவிதமான சர்ச்சைகளில் சிக்கியது. ரூ.1.76 லட்சம் கோடி "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், மகாராஷ்டிரா ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல் உட்பட பல வகையான ஊழல் புகார்கள், மன்மோகன் சிங் அரசு மீது கூறப்பட்டன. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றும்போது, இடதுசாரிகளின் ஆதரவை இழந்த பிரதமர், அதை விட மிகவும் சிக்கலான நெருக்கடிக்கு உள்ளானது அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் வெளியான இக்காலகட்டத்தில்தான்.

" 2ஜி' ஊழலில், தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராஜா மீது ஏன் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதமரிடம், சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது இந்திய வரலாற்றில் முதன் முறையாக நிகழ்ந்தது. சுரேஷ் கல்மாடி, ராஜா, கனிமொழி போன்றோரின் கைதும், "2ஜி' வழக்கின் மையமான நிரா ராடியா விவகாரமும், இக்கூட்டணிக்குப் பெரும் தலைக்குனிவையே ஏற்படுத்தியுள்ளன. "2ஜி' ஸ்பெக்ட்ரம் மோசடி குறித்து விசாரிக்க பார்லிமென்ட் கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தி பார்லிமென்டின் குளிர்காலக் கூட்டத் தொடரையே எதிர்க்கட்சிகள் முடக்கின. அதேபோல், தலைமைக் கண்காணிப்பு கமிஷனராக பி.ஜே. தாமஸ் நியமிக்கப்பட்ட விவகாரத்திலும், மத்திய அரசு பெரும் தலைக்குனிவை சந்தித்தது.

விலைவாசியும், செயலின்மையும்: பொருளாதார மேதைகளான, மன்மோகன் சிங், சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, மாண்டேக் சிங் அலுவாலியா போன்றவர்கள் அதிகாரத்தில் இருந்தும் கூட, அடித்தட்டு மக்களால் தாங்க முடியாத அளவிற்கு விலைவாசி விண்ணை முட்டியது. விலைவாசியைக் குறைக்க இயலாமல் மத்திய அரசு விழிபிதுங்கியது. நாட்டின் பல்வேறு உணவுக் கிடங்குகளில், தானியங்கள் பாழாகிக் கொண்டிருந்த வேளையில், மத்திய விவசாய அமைச்சர், அவற்றை வினியோகிப்பதில் போதுமான அக்கறை காட்டாததை சுப்ரீம் கோர்ட் சுட்டிக் காட்டி, கண்டனம் தெரிவித்தது. இவை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் வகையில், மும்பையில் நடந்த சில குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான, வாசுர் கமார் கான் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தும் கூட, பாகிஸ்தானிடம் மத்திய அரசு அளித்த, தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் கானின் பெயர் சேர்க்கப்பட்டதும், அரசின் செயல்பாட்டில் பெரும் குளறுபடிகள் நடந்து கொண்டிருப்பதை வெட்டவெளிச்சமாக்கின. ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், வழக்கம் போல சாக்குபோக்கு சொல்லி இவ்விவகாரத்தைச் சமாளித்தார்.

ஊழல் புகார் உட்பட பலவிதமான புகார்களால் சர்ச்சைக்கு ஆளாகியிருக்கும் மன்மோகன் சிங் அரசு, வரும் ஆண்டுகளில் மேலும் பல சவால்களையும், சிக்கல்களையும் சந்திக்க நேரிடும் என, அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தி.மு.க., மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடனான காங்கிரசின் முரண்பாடான செயல்பாடுகள், 2012ல் உத்தரபிரதேசம், குஜராத், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தல்கள் ஆகியவை இவற்றில் குறிப்பிடத் தக்கவை. சமீபத்தில், ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் முடிவுகள், காங்கிரசுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் பாதியளவுக்கு நிம்மதியைத் தந்ததுள்ளன. அசாமில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதும், கேரளாவில் புதிய அரசு அமைத்ததும், மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலும், ஆட்சிப் பொறுப்பேற்றதும் அதற்கு காரணம். இந்த திருப்தி நிலை தொடர வேண்டும் எனில், இரண்டாவது முறையாக பதவியேற்று இன்று மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மன்மோகன் சிங் அரசு, மக்களின் மனநிலையை உணர்ந்து அதற்கேற்ற வகையில் நல்ல பல பணிகளைச் செய்ய வேண்டும். இதுவே பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பு.

டெல்லி: தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்தது ஏன் என்பதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார் சோனியா காந்தி.

தமிழகத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு காங்கிரஸுக்கு ஒரு வேலையும் இல்லாமல் போய் விட்டது. மக்களால் நிராகரிக்கப்பட்டு விட்டது காங்கிரஸ். வெறும் ஐந்து பேரை மட்டுமே தமிழக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள இந்த அடி, அவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா என்பது தெரியவில்லை. காரணம், காங்கிரஸைப் பொறுத்தவரை எந்த வெற்றிவந்தாலும் அது ஓசிதான். எனவே இந்த தோல்வியால் காங்கிரஸார் யாரும் மனம் உடைந்து போனதாக தகவல் இல்லை.

இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் அடித்தளத்தை அடித்து தரைமட்டமாக்கி விட்ட இந்த தோல்வியால் காங்கிரஸ் மேலிடம் சற்றே அதிர்ச்சி அடைந்துள்ளது. காரணம், இந்த அடித்தளத்தை வைத்துத்தானே கூட்டணிக்குப் பேரம் பேச முடியும் என்பதால்.

மேலும் 2014ல் லோக்சபா தேர்தல் வேறு வருகிறது. எனவே அதற்குள் கட்சியை மீண்டும் பலப்படுத்தி ஸ்திரப்படுத்த வேண்டும் என்ற வேகத்தில் காங்கிரஸ் மேலிடம் உள்ளது. இதனால் தேர்தல் தோல்வி குறித்து தற்போது தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனையில் இறங்கியுள்ளார்.

முதலில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனை அழைத்து சோனியா பேசியுள்ளார். இவர்தான் தமிழக காங்கிரஸிலேயே மிகப் பெரிய கோஷ்டியின் தலைவராவார். இதையடுத்து எம்.பி. கார்வேந்தனை அழைத்து சோனியா பேசியுள்ளார். அடுத்து இளங்கோவன் உள்ளிட்ட அத்தனை கோஷ்டித் தலைவர்களையும் சோனியா அழைத்துப் பேசலாம் என்று தெரிகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர் தங்கபாலுவை தூக்கி விட்டு வேறு ஒரு தலைவரை காங்கிரஸ் மேலிடம் நியமிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, புதுச்சேரியில் காங்கிரஸ் அடைந்த படு தோல்விக்கு அம்மாநிலத்தைச் சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான நாராயணசாமி பொறுப்பேற்றுள்ளார்.

என்.ஆர். காங்கிரஸ் மூலம் காங்கிரஸுக்கு புதுவையில் ஆப்பு வைத்து விட்டார் முதல்வர் என்.ரங்கசாமி. இவரை பற்றி தப்புக் கணக்குப் போட்டு விட்டதாக தற்போது புலம்புகிறது காங்கிரஸ்.

புதுச்சேரியில் காங்கிரஸ் அடைந்த தோல்விக்கு தானே பொறுப்பேற்பதாக சோனியாவை சந்தித்த போது நாராயணசாமி தெரிவித்தாராம். அதேபோல பிரதமரிடமும் தான் தோல்விக்குப் பங்கேற்பதாக நாராயணசாமி கூறியபோது அவருக்கு ஆறுதல் கூறினாராம் பிரதமர்.

பாமகவும் ஆலோசனை:

காங்கிரஸை விட மோசமான தோல்வியைச் சந்தித்துள்ள கட்சி பாமக. தங்களது எதிர்காலம் என்னவென்றே தெரியாத நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது பாமக. அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணியே தோல்வியுற்று விட்டார்.

திமுக கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்டு பின்னர் சேர்க்கப்பட்ட கட்சி பாமக. மேலும் முதல் ஆளாக பாமகவுக்குத்தான் சீட் ஒதுக்கினார் கருணாநிதி. அக்கட்சிக்கு 30 இடங்களைக் கொடுத்தது திமுக. ஆனால் வெறும் 4 சீட்டில் மட்டுமே வென்றுள்ளது பாமக.

போட்டியிட்ட இடங்களிலெல்லாம் அது பெரும் அடியை வாங்கியுள்ளது. குறிப்பாக வட மாவட்டங்களில் அதாவது வன்னியர் பெல்ட் எனப்படும் தொகுதிகளில் எல்லாம் படு மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது.

குறிப்பாக வேளச்சேரி தொகுதியை கடுமையாக போராடி வாங்கியது பாமக. ஆனால் அங்கு அக்கட்சிக்கு நல்ல தோல்வி கிடைத்துள்ளது.

இப்படி தங்களுக்கான வாக்கு வங்கி பலமாக இருந்தும் தோல்வி அடைந்தது ஏன் என்று பாமகவினர் யோசித்து, ஆலோசித்து வருகின்றனர்.

தங்களது தோல்விக்கு திமுகதான் காரணம் என்பது பாமகவினரின் எண்ணம். அதாவது திமுக மீதான மக்கள் அதிருப்தியே தங்களை காலி செய்து விட்டதாக பாமகவினர் கருதுகின்றனர்.

இதற்கிடையே பாமகவின் சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை சென்னையில் நடைபெறுகிறது. ஏ.கே.மூர்த்தி தலைமையில்நடைபெறும் இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மொத்தமாக பங்கேற்கவுள்ளனர்.

அதேசமயம் திமுக தரப்பில் இதுவரை வெளிப்படையான முறையில் இப்படி எந்த ஆலோசனைக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்படவில்லை.

சட்டசபைத் தேர்தலில் ஏன் தோற்றோம்?-தமிழக தலைவர்களுடன் சோனியா ஆலோசனை!

டெல்லி: தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்தது ஏன் என்பதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார் சோனியா காந்தி.

தமிழகத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு காங்கிரஸுக்கு ஒரு வேலையும் இல்லாமல் போய் விட்டது. மக்களால் நிராகரிக்கப்பட்டு விட்டது காங்கிரஸ். வெறும் ஐந்து பேரை மட்டுமே தமிழக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள இந்த அடி, அவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா என்பது தெரியவில்லை. காரணம், காங்கிரஸைப் பொறுத்தவரை எந்த வெற்றிவந்தாலும் அது ஓசிதான். எனவே இந்த தோல்வியால் காங்கிரஸார் யாரும் மனம் உடைந்து போனதாக தகவல் இல்லை.

இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் அடித்தளத்தை அடித்து தரைமட்டமாக்கி விட்ட இந்த தோல்வியால் காங்கிரஸ் மேலிடம் சற்றே அதிர்ச்சி அடைந்துள்ளது. காரணம், இந்த அடித்தளத்தை வைத்துத்தானே கூட்டணிக்குப் பேரம் பேச முடியும் என்பதால்.

மேலும் 2014ல் லோக்சபா தேர்தல் வேறு வருகிறது. எனவே அதற்குள் கட்சியை மீண்டும் பலப்படுத்தி ஸ்திரப்படுத்த வேண்டும் என்ற வேகத்தில் காங்கிரஸ் மேலிடம் உள்ளது. இதனால் தேர்தல் தோல்வி குறித்து தற்போது தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனையில் இறங்கியுள்ளார்.

முதலில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனை அழைத்து சோனியா பேசியுள்ளார். இவர்தான் தமிழக காங்கிரஸிலேயே மிகப் பெரிய கோஷ்டியின் தலைவராவார். இதையடுத்து எம்.பி. கார்வேந்தனை அழைத்து சோனியா பேசியுள்ளார். அடுத்து இளங்கோவன் உள்ளிட்ட அத்தனை கோஷ்டித் தலைவர்களையும் சோனியா அழைத்துப் பேசலாம் என்று தெரிகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர் தங்கபாலுவை தூக்கி விட்டு வேறு ஒரு தலைவரை காங்கிரஸ் மேலிடம் நியமிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, புதுச்சேரியில் காங்கிரஸ் அடைந்த படு தோல்விக்கு அம்மாநிலத்தைச் சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான நாராயணசாமி பொறுப்பேற்றுள்ளார்.

என்.ஆர். காங்கிரஸ் மூலம் காங்கிரஸுக்கு புதுவையில் ஆப்பு வைத்து விட்டார் முதல்வர் என்.ரங்கசாமி. இவரை பற்றி தப்புக் கணக்குப் போட்டு விட்டதாக தற்போது புலம்புகிறது காங்கிரஸ்.

புதுச்சேரியில் காங்கிரஸ் அடைந்த தோல்விக்கு தானே பொறுப்பேற்பதாக சோனியாவை சந்தித்த போது நாராயணசாமி தெரிவித்தாராம். அதேபோல பிரதமரிடமும் தான் தோல்விக்குப் பங்கேற்பதாக நாராயணசாமி கூறியபோது அவருக்கு ஆறுதல் கூறினாராம் பிரதமர்.

பாமகவும் ஆலோசனை:

காங்கிரஸை விட மோசமான தோல்வியைச் சந்தித்துள்ள கட்சி பாமக. தங்களது எதிர்காலம் என்னவென்றே தெரியாத நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது பாமக. அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணியே தோல்வியுற்று விட்டார்.

திமுக கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்டு பின்னர் சேர்க்கப்பட்ட கட்சி பாமக. மேலும் முதல் ஆளாக பாமகவுக்குத்தான் சீட் ஒதுக்கினார் கருணாநிதி. அக்கட்சிக்கு 30 இடங்களைக் கொடுத்தது திமுக. ஆனால் வெறும் 4 சீட்டில் மட்டுமே வென்றுள்ளது பாமக.

போட்டியிட்ட இடங்களிலெல்லாம் அது பெரும் அடியை வாங்கியுள்ளது. குறிப்பாக வட மாவட்டங்களில் அதாவது வன்னியர் பெல்ட் எனப்படும் தொகுதிகளில் எல்லாம் படு மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது.

குறிப்பாக வேளச்சேரி தொகுதியை கடுமையாக போராடி வாங்கியது பாமக. ஆனால் அங்கு அக்கட்சிக்கு நல்ல தோல்வி கிடைத்துள்ளது.

இப்படி தங்களுக்கான வாக்கு வங்கி பலமாக இருந்தும் தோல்வி அடைந்தது ஏன் என்று பாமகவினர் யோசித்து, ஆலோசித்து வருகின்றனர்.

தங்களது தோல்விக்கு திமுகதான் காரணம் என்பது பாமகவினரின் எண்ணம். அதாவது திமுக மீதான மக்கள் அதிருப்தியே தங்களை காலி செய்து விட்டதாக பாமகவினர் கருதுகின்றனர்.

இதற்கிடையே பாமகவின் சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை சென்னையில் நடைபெறுகிறது. ஏ.கே.மூர்த்தி தலைமையில்நடைபெறும் இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மொத்தமாக பங்கேற்கவுள்ளனர்.

அதேசமயம் திமுக தரப்பில் இதுவரை வெளிப்படையான முறையில் இப்படி எந்த ஆலோசனைக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்படவில்லை.

டெல்லி: மமதா பானர்ஜி தலைமையில் மேற்கு வங்கத்தில் அமையவுள்ள ஆட்சியில் பங்கேற்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ஆட்சியில் இணையுமாறு காங்கிரஸுக்கு மமதா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். இதை காங்கிரஸ் ஏற்கும் என்று தெரிகிறது.

இதுகுறித்து மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், அனைத்தும் சாதகமாக நடந்து வருவதாகவே தெரிகிறது என்றார்.

இதற்கிடையே, ஆட்சியில் பங்கேற்பது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களின் கருத்தையும் அவர் கேட்டு வருகிறார்.

மமதாவின் திரினமூல் காங்கிரஸ் கட்சி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இருப்பினும் காங்கிரஸையும் ஆட்சியில் வந்து இணையுமாறு மமதா அழைப்பு விடுத்துளளார். அதேபோல எஸ்.யு.சி.ஐயையும் ஆட்சியில் இணையுமாறு அவர் அழைத்துள்ளார்.

சோனியாவுக்கு நேரில் அழைப்பு
Read: In English
இதற்கிடையே, பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை நேரில் அழைக்கவுள்ளார் மமதா. இதற்காக அவர் நாளை டெல்லி வருகிறார்.

இதுகுறித்து மமதா கூறுகையில், பிரதமர், சோனியா காந்தி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். இதற்காக நானும் பிரணாப் முகர்ஜியும் டெல்லி சென்று இருவரையும் நேரில் அழைக்கவுள்ளோம் என்றார்.

மேற்கு வங்க திரினமூல் அரசில் இணைய காங்கிரஸ் முடிவு

டெல்லி: மமதா பானர்ஜி தலைமையில் மேற்கு வங்கத்தில் அமையவுள்ள ஆட்சியில் பங்கேற்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ஆட்சியில் இணையுமாறு காங்கிரஸுக்கு மமதா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். இதை காங்கிரஸ் ஏற்கும் என்று தெரிகிறது.

இதுகுறித்து மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், அனைத்தும் சாதகமாக நடந்து வருவதாகவே தெரிகிறது என்றார்.

இதற்கிடையே, ஆட்சியில் பங்கேற்பது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களின் கருத்தையும் அவர் கேட்டு வருகிறார்.

மமதாவின் திரினமூல் காங்கிரஸ் கட்சி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இருப்பினும் காங்கிரஸையும் ஆட்சியில் வந்து இணையுமாறு மமதா அழைப்பு விடுத்துளளார். அதேபோல எஸ்.யு.சி.ஐயையும் ஆட்சியில் இணையுமாறு அவர் அழைத்துள்ளார்.

சோனியாவுக்கு நேரில் அழைப்பு
Read: In English
இதற்கிடையே, பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை நேரில் அழைக்கவுள்ளார் மமதா. இதற்காக அவர் நாளை டெல்லி வருகிறார்.

இதுகுறித்து மமதா கூறுகையில், பிரதமர், சோனியா காந்தி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். இதற்காக நானும் பிரணாப் முகர்ஜியும் டெல்லி சென்று இருவரையும் நேரில் அழைக்கவுள்ளோம் என்றார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து தங்கபாலு ராஜினாமா செய்துள்ளார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று விலகுவதாகவும், ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்ப உள்ளதாகவும் தங்கபாலு கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளை பெற்றது. ஆனால் 5 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது.

காங். தலைவர் பதவி: தங்கபாலு ராஜினாமா

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து தங்கபாலு ராஜினாமா செய்துள்ளார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று விலகுவதாகவும், ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்ப உள்ளதாகவும் தங்கபாலு கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளை பெற்றது. ஆனால் 5 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது.

ஐதராபாத்:ஆந்திராவின் சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி, "பிரஜா ராஜ்யம்' என்ற கட்சியை சில ஆண்டுகளுக்கு முன் துவக்கினார். ஆனால், இந்த கட்சி கடந்த லோக்சபா தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. சில சட்டசபை தொகுதிகளை மட்டும் கைப்பற்றியது. கட்சியின் வளர்ச்சி தடைபட்டதால், அவர் தனது கட்சியை காங்கிரசுடன் இணைத்துள்ளார்.ஆந்திராவில், முதல்வர் ராஜசேகர ரெட்டி மறைவுக்கு பிறகு காங்., கட்சியில் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் யாரும் இல்லாத காரணத்தால், சிரஞ்சீவிக்கு முக்கியத்துவம் அளிக்க காங்., மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதற்காக சிரஞ்சீவியை காங்., மேலிடம் நேற்று டில்லிக்கு அழைத்தது. அவர் நேற்று டில்லி சென்றார்.

சிரஞ்சீவிக்குகாங்கிரசில் முக்கிய பதவி

ஐதராபாத்:ஆந்திராவின் சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி, "பிரஜா ராஜ்யம்' என்ற கட்சியை சில ஆண்டுகளுக்கு முன் துவக்கினார். ஆனால், இந்த கட்சி கடந்த லோக்சபா தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. சில சட்டசபை தொகுதிகளை மட்டும் கைப்பற்றியது. கட்சியின் வளர்ச்சி தடைபட்டதால், அவர் தனது கட்சியை காங்கிரசுடன் இணைத்துள்ளார்.ஆந்திராவில், முதல்வர் ராஜசேகர ரெட்டி மறைவுக்கு பிறகு காங்., கட்சியில் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் யாரும் இல்லாத காரணத்தால், சிரஞ்சீவிக்கு முக்கியத்துவம் அளிக்க காங்., மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதற்காக சிரஞ்சீவியை காங்., மேலிடம் நேற்று டில்லிக்கு அழைத்தது. அவர் நேற்று டில்லி சென்றார்.


தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி, கடந்த பல ஆண்டுகளாக மாநில கட்சிகளின் ஆதரவோடு தான் மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்கு, அக்கட்சியின் செல்வாக்கு தேர்தலுக்கு தேர்தல் சரிந்து வருவதே முக்கிய காரணம்.

இன்றைய நிலையில், வயதான தலைவர்களின் பிடிக்குள் தான் கட்சி இருக்கிறது. இந்த தலைவர்கள் மத்தியில் நிலவும் பிரச்னைகளால் பல்வேறு கோஷ்டிகள் உருவாகி, கட்சியின் ஸ்திரத்தன்மையை சீர்குலைத்து வருகின்றன.இந்நிலையில், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற ராகுல், கட்சி பொறுப்புகளை இளைஞர்கள் வசம் ஒப்படைக்க நினைத்தார். ஆனால், அது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல என்பதை அனுபவத்தில் உணர்ந்து கொண்ட அவர், இளைஞர் காங்கிரசை வலுப்படுத்த துவங்கினார். நாடு முழுவதும், ஒவ்வொரு மாநிலத்திலும் இளைஞர் காங்கிரஸ் அமைப்பிற்கு தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகளை நியமித்து, அவர்களை கட்சி பணியில் களம் இறக்கியுள்ளார்.
இவ்வாறு ராகுலால் களம் இறக்கப்பட்டவர்கள் கடந்த தேர்தல்களில் சிறப்பான களப்பணியாற்றினார்கள். கட்சியை வலுப்படுத்த தேவையான செயல்களை மேற்கொண்ட இவர்களை பார்த்து, மூத்த தலைவர்களுக்கு எரிச்சல் ஏற்பட்டது.
சமீபத்தில் நடந்த தமிழகம் மற்றும் கேரள சட்டசபை தேர்தலில், ராகுலின் சிபாரிசின் பேரில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு சீட் வழங்கப்பட்டது.

தமிழகத்தை பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 63 தொகுதிகளில், இளைஞர் காங்கிரசாருக்கு 10 சீட்டுகளை ஒதுக்கும்படியும், கேரளாவில் ஒதுக்கப்பட்ட 81 தொகுதிகளில், 24 சீட்டுகளை ஒதுக்கியும் ராகுல் உத்தரவிட்டார். ராகுலின் இந்த உத்தரவு, எரிந்து கொண்டிருந்த தீயில் எண்ணெய் வார்த்த மாதிரியாகிவிட்டது. ஏற்கனவே, இளைஞர் காங்கிரசாரின் நடவடிக்கைகளால் எரிச்சலில் இருக்கும் கட்சியின் மூத்த தலைவர்கள், தொகுதி ஒதுக்கீட்டிலும் இளையவர்களுக்கு சீட் கொடுக்க உத்தரவிட்டது மேலும் எரிச்சலூட்டியது.இதனால், கடந்த சட்டசபை தேர்தலில், பல தொகுதிகளில் மூத்த காங்கிரசார் பலர் தேர்தல் பணியில் இருந்து ஒதுங்கிக் கொண்டனர்.

அதேவேளையில், இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக பணி புரிய துவங்கினர். கோஷ்டி பூசலை ஒழித்து, கட்சிக்கு உள்ளாட்சி மட்டத்தில் இருந்து புத்துயிர் ஊட்டினால் மட்டுமே காங்கிரஸ் வளரும் என்ற கருத்தில் ராகுல் காய் நகர்த்த துவங்கிவிட்டார். இதற்கு அச்சாரமாகவே இளைஞர் காங்கிரசாருக்கு தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.மூத்த தலைவர்களை ஓரம் கட்டும் திட்டத்தை ராகுல் கடந்த சட்டசபை தேர்தலில் இருந்து துவக்கி விட்டதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். கட்சி தலைமைப் பொறுப்பை ஏற்கும் முன், மாநிலங்களில் நிலவும் கோஷ்டிகளை ஒழித்து, கட்சியை வளர்ச்சிப்பாதையில் திருப்ப வேண்டும் என்பதே ராகுலின் திட்டம். ஆனால், காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் என்பது இன்று நேற்றல்ல, கட்சி துவங்கிய காலத்தில் இருந்தே இருக்கிறது. இந்நிலையில், ராகுல் வெற்றி பெறுவாரா அல்லது கோஷ்டிகள் வெற்றி பெறுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

வெற்றி பெறுமா ராகுலின் "ஓரம் கட்டும்' திட்டம்?


தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி, கடந்த பல ஆண்டுகளாக மாநில கட்சிகளின் ஆதரவோடு தான் மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்கு, அக்கட்சியின் செல்வாக்கு தேர்தலுக்கு தேர்தல் சரிந்து வருவதே முக்கிய காரணம்.

இன்றைய நிலையில், வயதான தலைவர்களின் பிடிக்குள் தான் கட்சி இருக்கிறது. இந்த தலைவர்கள் மத்தியில் நிலவும் பிரச்னைகளால் பல்வேறு கோஷ்டிகள் உருவாகி, கட்சியின் ஸ்திரத்தன்மையை சீர்குலைத்து வருகின்றன.இந்நிலையில், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற ராகுல், கட்சி பொறுப்புகளை இளைஞர்கள் வசம் ஒப்படைக்க நினைத்தார். ஆனால், அது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல என்பதை அனுபவத்தில் உணர்ந்து கொண்ட அவர், இளைஞர் காங்கிரசை வலுப்படுத்த துவங்கினார். நாடு முழுவதும், ஒவ்வொரு மாநிலத்திலும் இளைஞர் காங்கிரஸ் அமைப்பிற்கு தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகளை நியமித்து, அவர்களை கட்சி பணியில் களம் இறக்கியுள்ளார்.
இவ்வாறு ராகுலால் களம் இறக்கப்பட்டவர்கள் கடந்த தேர்தல்களில் சிறப்பான களப்பணியாற்றினார்கள். கட்சியை வலுப்படுத்த தேவையான செயல்களை மேற்கொண்ட இவர்களை பார்த்து, மூத்த தலைவர்களுக்கு எரிச்சல் ஏற்பட்டது.
சமீபத்தில் நடந்த தமிழகம் மற்றும் கேரள சட்டசபை தேர்தலில், ராகுலின் சிபாரிசின் பேரில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு சீட் வழங்கப்பட்டது.

தமிழகத்தை பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 63 தொகுதிகளில், இளைஞர் காங்கிரசாருக்கு 10 சீட்டுகளை ஒதுக்கும்படியும், கேரளாவில் ஒதுக்கப்பட்ட 81 தொகுதிகளில், 24 சீட்டுகளை ஒதுக்கியும் ராகுல் உத்தரவிட்டார். ராகுலின் இந்த உத்தரவு, எரிந்து கொண்டிருந்த தீயில் எண்ணெய் வார்த்த மாதிரியாகிவிட்டது. ஏற்கனவே, இளைஞர் காங்கிரசாரின் நடவடிக்கைகளால் எரிச்சலில் இருக்கும் கட்சியின் மூத்த தலைவர்கள், தொகுதி ஒதுக்கீட்டிலும் இளையவர்களுக்கு சீட் கொடுக்க உத்தரவிட்டது மேலும் எரிச்சலூட்டியது.இதனால், கடந்த சட்டசபை தேர்தலில், பல தொகுதிகளில் மூத்த காங்கிரசார் பலர் தேர்தல் பணியில் இருந்து ஒதுங்கிக் கொண்டனர்.

அதேவேளையில், இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக பணி புரிய துவங்கினர். கோஷ்டி பூசலை ஒழித்து, கட்சிக்கு உள்ளாட்சி மட்டத்தில் இருந்து புத்துயிர் ஊட்டினால் மட்டுமே காங்கிரஸ் வளரும் என்ற கருத்தில் ராகுல் காய் நகர்த்த துவங்கிவிட்டார். இதற்கு அச்சாரமாகவே இளைஞர் காங்கிரசாருக்கு தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.மூத்த தலைவர்களை ஓரம் கட்டும் திட்டத்தை ராகுல் கடந்த சட்டசபை தேர்தலில் இருந்து துவக்கி விட்டதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். கட்சி தலைமைப் பொறுப்பை ஏற்கும் முன், மாநிலங்களில் நிலவும் கோஷ்டிகளை ஒழித்து, கட்சியை வளர்ச்சிப்பாதையில் திருப்ப வேண்டும் என்பதே ராகுலின் திட்டம். ஆனால், காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் என்பது இன்று நேற்றல்ல, கட்சி துவங்கிய காலத்தில் இருந்தே இருக்கிறது. இந்நிலையில், ராகுல் வெற்றி பெறுவாரா அல்லது கோஷ்டிகள் வெற்றி பெறுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

ஆந்திர மாநிலம் கடப்பா எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக நடிகை ரோஜா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நடிகர் சிரஞ்சீவி கட்சி தொடங்கியபோது காங்கிரஸ் தலைவர் சோனியாவை கடுமையாக விமர்சித்தார். அவரை பேய் என்று கூட சொல்லி இருக்கிறார். ஆனால் தற்போது தனது கட்சியையே காங்கிரசுக்கு விற்று விட்டார்.

இதற்காக அவர் ரூ. 500 கோடி வரை வாங்கி உள்ளார். பணத்திற்காக தனது கொள்கைகளையும், மானத்தையும் அடகு வைத்து விட்டார். இதை அவரது கட்சி தொண்டர்கள் யாரும் ஏற்கமாட்டார்கள். இப்படிப்பட்டவர் ஜெகன் மோகன் ரெட்டியை விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது.

பிரசாரத்தின் போது சினிமா ஸ்டைலில் தொடையை தட்டியும், மீசையை முறுக்கியும் சவால் விடுகிறார். இந்த சவால் எல்லாம் கடப்பா மக்களிடம் எடுபடாது. அவர்கள் காங்கிரசுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள்.

அவரது கட்சியில் தற்போது 18 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர் தனது கட்சியை காங்கிரசுடன் இணைக்கும்போது பாதி பேர் வேறு கட்சிகளுக்கு தாவி விடுவார்கள். ஆந்திர மக்கள் தொடக்கத்தில் இருந்தே சிரஞ்சீவியை நம்பவில்லை. இனியும் நம்ப மாட்டார்கள்.

இவ்வாறு ரோஜா பேசினார்.

கட்சியை இணைப்பதற்காக சிரஞ்சீவி காங்கிரசிடம் ரூ. 500 கோடி வாங்கினார்; நடிகை ரோஜா குற்றச்சாட்டு

ஆந்திர மாநிலம் கடப்பா எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக நடிகை ரோஜா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நடிகர் சிரஞ்சீவி கட்சி தொடங்கியபோது காங்கிரஸ் தலைவர் சோனியாவை கடுமையாக விமர்சித்தார். அவரை பேய் என்று கூட சொல்லி இருக்கிறார். ஆனால் தற்போது தனது கட்சியையே காங்கிரசுக்கு விற்று விட்டார்.

இதற்காக அவர் ரூ. 500 கோடி வரை வாங்கி உள்ளார். பணத்திற்காக தனது கொள்கைகளையும், மானத்தையும் அடகு வைத்து விட்டார். இதை அவரது கட்சி தொண்டர்கள் யாரும் ஏற்கமாட்டார்கள். இப்படிப்பட்டவர் ஜெகன் மோகன் ரெட்டியை விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது.

பிரசாரத்தின் போது சினிமா ஸ்டைலில் தொடையை தட்டியும், மீசையை முறுக்கியும் சவால் விடுகிறார். இந்த சவால் எல்லாம் கடப்பா மக்களிடம் எடுபடாது. அவர்கள் காங்கிரசுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள்.

அவரது கட்சியில் தற்போது 18 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர் தனது கட்சியை காங்கிரசுடன் இணைக்கும்போது பாதி பேர் வேறு கட்சிகளுக்கு தாவி விடுவார்கள். ஆந்திர மக்கள் தொடக்கத்தில் இருந்தே சிரஞ்சீவியை நம்பவில்லை. இனியும் நம்ப மாட்டார்கள்.

இவ்வாறு ரோஜா பேசினார்.

டெல்லி மாநகராட்சி புதிய மேயரை தேர்வு செய்ய நேற்று தேர்தல் நடந்தது. மேயர் பதவிக்கு பா.ஜ.க. சார்பில் ரஜினி அபி, காங்கிரஸ் சார்பில் சவீதா சர்மா போட்டியிட்டனர். டெல்லி மாநகராட்சி கவுன்சிலர்கள் 272 பேர் மேயரை தேர்வு செய்ய வாக்களித்தனர்.

நேற்று மாலை ஓட்டு எண்ணிக்கை நடந்தது. பா.ஜ.க. பெண் வேட்பாளர் ரஜினி அபி 170 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் சவீதாவுக்கு அதிக வாக்குகள் கிடைக்க வில்லை. அவர் 88 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். 8 வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

டெல்லி புதிய மேயராக தேர்வாகியுள்ள ரஜினி அபி டெல்லி பல்கலைக்கழகத்தில் 19 ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்தவர். முகர்ஜி நகர் தொகுதியில் இருந்து தேர்வான அவர் கடும் போட்டிக்கு பிறகு மேயர் ஆகி உள்ளார். டெல்லி நகரை சுத்தமான, பசுமையான நகரமாக மாற்ற பாடுபட போவதாக ரஜினி அபி அறிவித்துள்ளார். துணை மேயராக பா.ஜ.க. வேட்பாளர் 39 வயதான அணில் சர்மா தேர்வானார்.

பாரதீய ஜனதா வெற்றி: டெல்லியில் பெண் மேயர் தேர்வு; 88 ஓட்டில் காங்கிரஸ் தோல்வி

டெல்லி மாநகராட்சி புதிய மேயரை தேர்வு செய்ய நேற்று தேர்தல் நடந்தது. மேயர் பதவிக்கு பா.ஜ.க. சார்பில் ரஜினி அபி, காங்கிரஸ் சார்பில் சவீதா சர்மா போட்டியிட்டனர். டெல்லி மாநகராட்சி கவுன்சிலர்கள் 272 பேர் மேயரை தேர்வு செய்ய வாக்களித்தனர்.

நேற்று மாலை ஓட்டு எண்ணிக்கை நடந்தது. பா.ஜ.க. பெண் வேட்பாளர் ரஜினி அபி 170 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் சவீதாவுக்கு அதிக வாக்குகள் கிடைக்க வில்லை. அவர் 88 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். 8 வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

டெல்லி புதிய மேயராக தேர்வாகியுள்ள ரஜினி அபி டெல்லி பல்கலைக்கழகத்தில் 19 ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்தவர். முகர்ஜி நகர் தொகுதியில் இருந்து தேர்வான அவர் கடும் போட்டிக்கு பிறகு மேயர் ஆகி உள்ளார். டெல்லி நகரை சுத்தமான, பசுமையான நகரமாக மாற்ற பாடுபட போவதாக ரஜினி அபி அறிவித்துள்ளார். துணை மேயராக பா.ஜ.க. வேட்பாளர் 39 வயதான அணில் சர்மா தேர்வானார்.

சட்டசபை தேர்தலுக்கு முன்பும், பின்பும் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் மீது குற்றச்சாட்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது. அனேகமாக தமிழகத்தில் அதிகளவில் எரிக்கப்பட்ட உருவ பொம்மை அவருடையதாகத்தான் இருக்கலாம் என்கிற அளவுக்கு, காங்கிரசில் அவருக்கு எதிராக அதிருப்தி தொடர்கிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தங்கபாலு அளித்த "விறுவிறு' பேட்டி:

நீங்கள் தலைவர் பொறுப்பை ஏற்றப்பின் நடந்து முடிந்த லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் அதிக தொகுதிகளை கேட்டீர்கள். இருப்பினும் வேட்பாளர் தேர்வில் குளறுபடி ஏற்பட்டதாக கூறப்படுகிறதே?

தங்கபாலு என்ற தனிப்பட்ட ஒருவரால் எந்த முடிவும் எடுக்க முடியாது. தமிழக காங்கிரஸ் தேர்தல் குழு பரிந்துரை செய்து கொடுத்த பட்டியலில், ஒரு பெயரையும் விடாமல், அகில இந்திய தேர்தல் குழுவிடம் சமர்பிக்கப்பட்டது. அதன்பின், சிதம்பரம், வாசன், ஜெயந்தி நடராஜன், ஜெயகுமார், எம்.பி.,க்கள், முன்னணி தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தேர்வுக் குழுவினரை சந்தித்தனர்.அந்த குழு விவாதித்து பரிசீலனை செய்து வேட்பாளர் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் தேர்தல் குழுவிடம் சமர்பித்தது. அக்குழுவில் இடம்பெற்ற சோனியா, பிரதமர், பிரணாப் முகர்ஜி, அகமது படேல் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினரால் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.வாசனுக்கும் 23 வேட்பாளர்களும், சிதம்பரத்திற்கு 10 முதல் 15 வரை வேட்பாளர்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இளைஞர் காங்கிரஸ், மகளிர் காங்கிரஸ், ஐ.என்.டி.யு.சி., சிறுபான்மை துறையின் பரிந்துரையும் அந்த பட்டியலில் இடம் பெற்றது. வேட்பாளர் பட்டியல் என் விருப்பப்படிதான் முடிவு செய்யப்பட்டது என்றால், 63 வேட்பாளர்களும் எனது ஆதரவாளர்களாக தான் இருந்திருப்பர். கட்சிக்காக சிறை சென்றவர்களுக்கும், பல ஆண்டுகளாக கட்சிக்கு விசுவாசமாக உள்ளோருக்கும் தான் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. சிலருக்கு வாய்ப்பு கிடைக்காததில் எனக்கும் வருத்தம் உள்ளது. பட்டியலை இறுதி செய்யும் அதிகாரம் எனக்கு மட்டும் அல்ல; எந்த மாநில தலைவருக்கும் கிடையாது. தனிப்பட்ட தங்கபாலுவை விட காங்கிரஸ் கட்சிதான் எனக்கு முக்கியம்.

தேர்தல் முடிந்ததும் எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பலரை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கினீர்கள். எந்த அடிப்படையில் அவர்களை நீக்கினர்?

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டோர், அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்ட சிலரை தான் நீக்கினேன். அவர்களை நான் சமாதானப்படுத்தினேன்; எச்சரிக்கை விடுத்தேன். வேட்பாளர்கள் கொடுத்த கடிதத்தின் படி தான், இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தேன்.அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது. அவர்களை நீக்க மாநில தலைவர் என்ற முறையில் எனக்கு அதிகாரம் உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் செய்தித் துறை தலைவர் ஜனார்தன திரிவேதியும் எனது அதிகாரத்தை உறுதிச் செய்துள்ளார். உட்கட்சி விவகாரத்தை உள்ளரங்கிற்குள் தான் பேச வேண்டும். என் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு களை கூட கடிதம் மூலமோ, நேரிலோ அல்லது அமைப்பு ரீதியான முறையில் தான் தெரிவிக்க வேண்டும். பத்திரிகைகளுக்கு பேட்டி அளிப்பதுகூட கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல் தான். அதனடிப்படையில் கூட நடவடிக்கை எடுக்கலாம்.

தேர்தல் முடிவு எந்த அணிக்கு சாதகமாக இருக்கும்?

மத்திய, மாநில அரசுகளின் நல்லாட்சிக்கும், சாதனைகளுக்கும் வெற்றி கிடைக்கும். ஜனநாயக முற்போக்கு கூட்டணி மீண்டும் நல்லாட்சியை வழங்கும்.

மயிலாப்பூர் தொகுதியில் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

எனது வெற்றி உறுதிச் செய்யப்பட்டு விட்டது. சோனியா, ராகுல், பிரதமர் ஆகியோர் தமிழகத்தில் பல இடங்களில் பிரசாரம் செய்தனர். அதில் பங்கேற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதனால், எனது தொகுதிக்கு மூன்று நாட்கள் பிரசாரத்திற்கு போகவில்லை. நான் திடீர் வேட்பாளராக தான் அறிவிக்கப்பட்டேன். கட்சியின் கட்டளைப்படி நான் வேட்பாளராக போட்டியிட்டேன். எனது 40 ஆண்டு கால அரசியல் அனுபவம் மூலம், தொகுதிக்கு நன்மை செய்ய முடியுமென மக்கள் தீர்மானித்துள்ளதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

உங்கள் மனைவியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதது குறித்து உங்கள் கருத்து?

வாக்காளர் பட்டியலில் என் மனைவியின் பெயர் இருப்பதாக, வேளச்சேரி தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார். அதன்பின் தான் வேட்பு மனு தாக்கல் செய்ய முடிந்தது. ஆனால், தேர்தல் அன்று என் பெயர், என் மகள் பெயர் மட்டுமே இருந்தது. மனைவியின் பெயர் வாக்காளர் பட்டியலில் விடுப்பட்டிருந்தது. ஒரு மணி நேரம் தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தும் அவரால், ஓட்டுப்போட முடியவில்லை. இது எனக்கு எதிராக நடந்த சதி. இதில் ஏதோ தில்லுமுல்லு நடந்துள்ளது. இதை சட்ட ரீதியாக சந்திப்பேன். என் மனைவிக்கு முதலில் சீட்டு பிரச்னை. பிறகு ஓட்டுப் பிரச்னை. "ஆல் இன் தி கேம்'

உங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறதே?

அவர்கள் உண்மையான கட்சிக்காரர்களே அல்ல; சமூக விரோதிகள் நடத்தும் நாடகம். போட்டோவிற்காகவும், விளம்பரத்திற்காகவும் செய்கின்றனர்.

மத்திய அமைச்சர்கள் உங்களை மாற்ற வேண்டுமென சோனியாவிடம் வலியுறுத்தி உள்ளார்களே?

அரசியல் என் தொழில் அல்ல. தலைவர் பதவியை நான் தேடி போகவில்லை. சேலத்தில் எம்.பி.,யாக இருந்தபோது, எனக்கு டில்லியிலிருந்து திடீரென போன் வந்தது. நீங்கள் தான் தலைவர் என்றார்கள். பதவியை ஏற்றுக் கொண்டேன். கொடுத்தப் பணியை சிறப்பாக செய்கிறேன்.நான் தலைவராக பொறுப்பேற்ற பின் 70 லட்சம் உறுப்பினர்கள் கட்சியில் சேர்க்கப்பட்டனர். அதில் அதிகபட்சமாக எனது ஆதரவாளர்கள் தான் சேர்த்தனர். 40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கும், சோனியா குடும்பத்திற்கு விசுவாசமாக உள்ளேன். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுவோர் என் நண்பர்களாக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளேன்.எல்லா மாவட்டத்திலும், வட்டார அளவிலும் எனக்கு ஆதரவாளர்கள் உள்ளனர். எனக்கும் தொண்டர்கள் பலம், ஆள்பலம் உண்டு. ஆனால், நான் அமைதியாகவும், அடக்கமாகவும் உள்ளேன். தமிழகம் முழுவதும் எனது ஆதரவாளர்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். அவர்களை நான் அடக்கி வைத்துள்ளேன். நான் ஒரு அறிக்கை வெளியிட்டால் தமிழகமே பற்றி எரியும். ஆனால், எனக்கு கட்சிதான் முக்கியம். தொண்டர்களை தவறாக பயன்படுத்த மாட்டேன்.

இலங்கை அரசுக்கு எதிராக திடீரென கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கு என்ன காரணம்?

தமிழக மீனவர்களை இலங்கை படையினர் சுட்டுக்கொன்று வருகின்றனர். தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக ஆர்ப்பாட்டம் நடத்தினேன். இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது.

நான் ஒரு அறிக்கைவிட்டால் தமிழகமே பற்றி எரியும்:கே.வி.தங்கபாலு

சட்டசபை தேர்தலுக்கு முன்பும், பின்பும் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் மீது குற்றச்சாட்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது. அனேகமாக தமிழகத்தில் அதிகளவில் எரிக்கப்பட்ட உருவ பொம்மை அவருடையதாகத்தான் இருக்கலாம் என்கிற அளவுக்கு, காங்கிரசில் அவருக்கு எதிராக அதிருப்தி தொடர்கிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தங்கபாலு அளித்த "விறுவிறு' பேட்டி:

நீங்கள் தலைவர் பொறுப்பை ஏற்றப்பின் நடந்து முடிந்த லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் அதிக தொகுதிகளை கேட்டீர்கள். இருப்பினும் வேட்பாளர் தேர்வில் குளறுபடி ஏற்பட்டதாக கூறப்படுகிறதே?

தங்கபாலு என்ற தனிப்பட்ட ஒருவரால் எந்த முடிவும் எடுக்க முடியாது. தமிழக காங்கிரஸ் தேர்தல் குழு பரிந்துரை செய்து கொடுத்த பட்டியலில், ஒரு பெயரையும் விடாமல், அகில இந்திய தேர்தல் குழுவிடம் சமர்பிக்கப்பட்டது. அதன்பின், சிதம்பரம், வாசன், ஜெயந்தி நடராஜன், ஜெயகுமார், எம்.பி.,க்கள், முன்னணி தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தேர்வுக் குழுவினரை சந்தித்தனர்.அந்த குழு விவாதித்து பரிசீலனை செய்து வேட்பாளர் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் தேர்தல் குழுவிடம் சமர்பித்தது. அக்குழுவில் இடம்பெற்ற சோனியா, பிரதமர், பிரணாப் முகர்ஜி, அகமது படேல் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினரால் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.வாசனுக்கும் 23 வேட்பாளர்களும், சிதம்பரத்திற்கு 10 முதல் 15 வரை வேட்பாளர்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இளைஞர் காங்கிரஸ், மகளிர் காங்கிரஸ், ஐ.என்.டி.யு.சி., சிறுபான்மை துறையின் பரிந்துரையும் அந்த பட்டியலில் இடம் பெற்றது. வேட்பாளர் பட்டியல் என் விருப்பப்படிதான் முடிவு செய்யப்பட்டது என்றால், 63 வேட்பாளர்களும் எனது ஆதரவாளர்களாக தான் இருந்திருப்பர். கட்சிக்காக சிறை சென்றவர்களுக்கும், பல ஆண்டுகளாக கட்சிக்கு விசுவாசமாக உள்ளோருக்கும் தான் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. சிலருக்கு வாய்ப்பு கிடைக்காததில் எனக்கும் வருத்தம் உள்ளது. பட்டியலை இறுதி செய்யும் அதிகாரம் எனக்கு மட்டும் அல்ல; எந்த மாநில தலைவருக்கும் கிடையாது. தனிப்பட்ட தங்கபாலுவை விட காங்கிரஸ் கட்சிதான் எனக்கு முக்கியம்.

தேர்தல் முடிந்ததும் எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பலரை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கினீர்கள். எந்த அடிப்படையில் அவர்களை நீக்கினர்?

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டோர், அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்ட சிலரை தான் நீக்கினேன். அவர்களை நான் சமாதானப்படுத்தினேன்; எச்சரிக்கை விடுத்தேன். வேட்பாளர்கள் கொடுத்த கடிதத்தின் படி தான், இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தேன்.அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது. அவர்களை நீக்க மாநில தலைவர் என்ற முறையில் எனக்கு அதிகாரம் உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் செய்தித் துறை தலைவர் ஜனார்தன திரிவேதியும் எனது அதிகாரத்தை உறுதிச் செய்துள்ளார். உட்கட்சி விவகாரத்தை உள்ளரங்கிற்குள் தான் பேச வேண்டும். என் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு களை கூட கடிதம் மூலமோ, நேரிலோ அல்லது அமைப்பு ரீதியான முறையில் தான் தெரிவிக்க வேண்டும். பத்திரிகைகளுக்கு பேட்டி அளிப்பதுகூட கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல் தான். அதனடிப்படையில் கூட நடவடிக்கை எடுக்கலாம்.

தேர்தல் முடிவு எந்த அணிக்கு சாதகமாக இருக்கும்?

மத்திய, மாநில அரசுகளின் நல்லாட்சிக்கும், சாதனைகளுக்கும் வெற்றி கிடைக்கும். ஜனநாயக முற்போக்கு கூட்டணி மீண்டும் நல்லாட்சியை வழங்கும்.

மயிலாப்பூர் தொகுதியில் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

எனது வெற்றி உறுதிச் செய்யப்பட்டு விட்டது. சோனியா, ராகுல், பிரதமர் ஆகியோர் தமிழகத்தில் பல இடங்களில் பிரசாரம் செய்தனர். அதில் பங்கேற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதனால், எனது தொகுதிக்கு மூன்று நாட்கள் பிரசாரத்திற்கு போகவில்லை. நான் திடீர் வேட்பாளராக தான் அறிவிக்கப்பட்டேன். கட்சியின் கட்டளைப்படி நான் வேட்பாளராக போட்டியிட்டேன். எனது 40 ஆண்டு கால அரசியல் அனுபவம் மூலம், தொகுதிக்கு நன்மை செய்ய முடியுமென மக்கள் தீர்மானித்துள்ளதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

உங்கள் மனைவியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதது குறித்து உங்கள் கருத்து?

வாக்காளர் பட்டியலில் என் மனைவியின் பெயர் இருப்பதாக, வேளச்சேரி தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார். அதன்பின் தான் வேட்பு மனு தாக்கல் செய்ய முடிந்தது. ஆனால், தேர்தல் அன்று என் பெயர், என் மகள் பெயர் மட்டுமே இருந்தது. மனைவியின் பெயர் வாக்காளர் பட்டியலில் விடுப்பட்டிருந்தது. ஒரு மணி நேரம் தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தும் அவரால், ஓட்டுப்போட முடியவில்லை. இது எனக்கு எதிராக நடந்த சதி. இதில் ஏதோ தில்லுமுல்லு நடந்துள்ளது. இதை சட்ட ரீதியாக சந்திப்பேன். என் மனைவிக்கு முதலில் சீட்டு பிரச்னை. பிறகு ஓட்டுப் பிரச்னை. "ஆல் இன் தி கேம்'

உங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறதே?

அவர்கள் உண்மையான கட்சிக்காரர்களே அல்ல; சமூக விரோதிகள் நடத்தும் நாடகம். போட்டோவிற்காகவும், விளம்பரத்திற்காகவும் செய்கின்றனர்.

மத்திய அமைச்சர்கள் உங்களை மாற்ற வேண்டுமென சோனியாவிடம் வலியுறுத்தி உள்ளார்களே?

அரசியல் என் தொழில் அல்ல. தலைவர் பதவியை நான் தேடி போகவில்லை. சேலத்தில் எம்.பி.,யாக இருந்தபோது, எனக்கு டில்லியிலிருந்து திடீரென போன் வந்தது. நீங்கள் தான் தலைவர் என்றார்கள். பதவியை ஏற்றுக் கொண்டேன். கொடுத்தப் பணியை சிறப்பாக செய்கிறேன்.நான் தலைவராக பொறுப்பேற்ற பின் 70 லட்சம் உறுப்பினர்கள் கட்சியில் சேர்க்கப்பட்டனர். அதில் அதிகபட்சமாக எனது ஆதரவாளர்கள் தான் சேர்த்தனர். 40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கும், சோனியா குடும்பத்திற்கு விசுவாசமாக உள்ளேன். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுவோர் என் நண்பர்களாக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளேன்.எல்லா மாவட்டத்திலும், வட்டார அளவிலும் எனக்கு ஆதரவாளர்கள் உள்ளனர். எனக்கும் தொண்டர்கள் பலம், ஆள்பலம் உண்டு. ஆனால், நான் அமைதியாகவும், அடக்கமாகவும் உள்ளேன். தமிழகம் முழுவதும் எனது ஆதரவாளர்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். அவர்களை நான் அடக்கி வைத்துள்ளேன். நான் ஒரு அறிக்கை வெளியிட்டால் தமிழகமே பற்றி எரியும். ஆனால், எனக்கு கட்சிதான் முக்கியம். தொண்டர்களை தவறாக பயன்படுத்த மாட்டேன்.

இலங்கை அரசுக்கு எதிராக திடீரென கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கு என்ன காரணம்?

தமிழக மீனவர்களை இலங்கை படையினர் சுட்டுக்கொன்று வருகின்றனர். தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக ஆர்ப்பாட்டம் நடத்தினேன். இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது.

தமிழகத்தில், காங்., தலைவர் தங்கபாலுவுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுப்பதால், அவரை நீக்கிவிட்டு, வேறு தலைவரை நியமிக்கலாமா என, கட்சித் தலைமை தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது. ஏற்கனவே, மத்திய அமைச்சர் சிதம்பரம், இதே கோரிக்கையை வலியுறுத்திய நிலையில், மத்திய அமைச்சர் வாசனும், சோனியாவை நேற்று சந்தித்து, தங்கபாலுவை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதையடுத்து, தமிழக காங்கிரசில், தேர்தல் முடிவுக்குப் பின், பெரிய மாற்றம் வரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியில் நாளுக்கு நாள், கோஷ்டிப் பூசல் வலுக்கிறது. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் துணைமேயர் கராத்தே தியாகராஜன், எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ., தென் சென்னை மாவட்டத்தலைவர் மங்கள்ராஜ் உட்பட, 19 பேரை, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, அதிரடியாக நீக்கினார்.நீக்கப்பட்ட மூவரும், மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன், முன்னாள் அமைச்சர் இளங்கோவனின் ஆதரவாளர்கள். எனவே, தங்கபாலுவின் அதிரடி நீக்கம் நடவடிக்கை, தமிழக காங்கிரசுக்குள் பெரும் புயலை கிளப்பியுள்ளது. வேட்பாளர் தேர்வில் தங்கபாலு செய்த குளறுபடியால், அனைத்து கோஷ்டித் தலைவர்களும் தங்கபாலு மீது அதிருப்தி அடைந்தனர்.தங்கபாலுவுக்கு எதிராக, தினமும் நடந்து வரும் போராட்டத்தை, டில்லி மேலிடம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. உள்துறை அமைச்சர் சிதம்பரம், சோனியாவை சந்தித்து பேசியபோது, "தங்கபாலு, தன்னிச்சையாக கட்சியை நடத்துகிறார். கட்சியின் விதிமுறைகளுக்கு முரணாக, பலரையும் நீக்கம் செய்துள்ளார். இவரது தலைமை நீடிக்கக் கூடாது' என்ற கோரிக்கையை விடுத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று காலை 11.30 முதல், 12.05 மணி வரை, சோனியாவை, வாசன் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, தேர்தல் வெற்றி வாய்ப்பு, வேட்பாளர்கள் குளறுபடி, தமிழக காங்கிரஸ் தலைமை மீது தொண்டர்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி குறித்து, சோனியாவிடம் விளக்கியுள்ளார்.வாசன் தெரிவித்த அனைத்து விவரங்களையும், அமைதியாக கேட்டு கொண்டிருந்த சோனியா, "நீங்கள் ஏன் தமிழக காங்., தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள கூடாது?' என கேட்டதாகவும், அதற்கு வாசன், "நான் அகில இந்திய காங்கிரஸ் செயலராகவும், தமிழக காங்., தலைவராகவும் பணியாற்றியிருக்கிறேன்' என்ற பதிலை மட்டும் கூறியதாகவும், டில்லி வட்டாரங்கள் கூறுகின்றன.சோனியாவே கேட்டுக் கொண்டதால், தட்டிக் கழிக்காமல், வாசன் தலைவர் பதவியை ஏற்க முன் வருவாரா அல்லது தன் ஆதரவாளர்களுக்கு தலைவர் பதவியை பெற்றுக் கொடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போது, அவர் கேபின்ட் அமைச்சராக இருப்பதால், மாநில தலைவர் பதவியை விரும்பவில்லை.


மத்திய அமைச்சர் மற்றும் மாநில தலைவர் என்ற இரண்டு பதவிகளையும் கொடுத்தால், தலைவர் பதவியை ஏற்க வாசன் விருப்பம் தெரிவிப்பார். இல்லையென்றால் தன் ஆதரவாளர்களான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு தலைவர் பதவியை பெற்றுக் கொடுப்பார் என, அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிதம்பரம் தரப்பில், கடலூர் எம்.பி., கே.எஸ்.அழகிரியை தலைவராக்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. ஒட்டு மொத்த கோஷ்டித் தலைவர்களுக்கும் பொதுவானவர் என்ற அடிப்படையில், இளங்கோவனை தலைவராக நியமிக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.தேர்தல் முடிவு வெளியாகி, புதிய அரசுகள் அமைந்த பின், சில மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்கள் பதவி மாற்றப்படுகிறது. அந்த மாநில தலைவர்கள் மாற்றம் பட்டியலில், தமிழகமும் இடம் பெறும் என, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் காங்., தலைவருக்கு வலுக்கிறது எதிர்ப்பு: கட்சித் தலைமை தீவிர யோசனை

தமிழகத்தில், காங்., தலைவர் தங்கபாலுவுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுப்பதால், அவரை நீக்கிவிட்டு, வேறு தலைவரை நியமிக்கலாமா என, கட்சித் தலைமை தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது. ஏற்கனவே, மத்திய அமைச்சர் சிதம்பரம், இதே கோரிக்கையை வலியுறுத்திய நிலையில், மத்திய அமைச்சர் வாசனும், சோனியாவை நேற்று சந்தித்து, தங்கபாலுவை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதையடுத்து, தமிழக காங்கிரசில், தேர்தல் முடிவுக்குப் பின், பெரிய மாற்றம் வரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியில் நாளுக்கு நாள், கோஷ்டிப் பூசல் வலுக்கிறது. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் துணைமேயர் கராத்தே தியாகராஜன், எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ., தென் சென்னை மாவட்டத்தலைவர் மங்கள்ராஜ் உட்பட, 19 பேரை, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, அதிரடியாக நீக்கினார்.நீக்கப்பட்ட மூவரும், மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன், முன்னாள் அமைச்சர் இளங்கோவனின் ஆதரவாளர்கள். எனவே, தங்கபாலுவின் அதிரடி நீக்கம் நடவடிக்கை, தமிழக காங்கிரசுக்குள் பெரும் புயலை கிளப்பியுள்ளது. வேட்பாளர் தேர்வில் தங்கபாலு செய்த குளறுபடியால், அனைத்து கோஷ்டித் தலைவர்களும் தங்கபாலு மீது அதிருப்தி அடைந்தனர்.தங்கபாலுவுக்கு எதிராக, தினமும் நடந்து வரும் போராட்டத்தை, டில்லி மேலிடம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. உள்துறை அமைச்சர் சிதம்பரம், சோனியாவை சந்தித்து பேசியபோது, "தங்கபாலு, தன்னிச்சையாக கட்சியை நடத்துகிறார். கட்சியின் விதிமுறைகளுக்கு முரணாக, பலரையும் நீக்கம் செய்துள்ளார். இவரது தலைமை நீடிக்கக் கூடாது' என்ற கோரிக்கையை விடுத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று காலை 11.30 முதல், 12.05 மணி வரை, சோனியாவை, வாசன் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, தேர்தல் வெற்றி வாய்ப்பு, வேட்பாளர்கள் குளறுபடி, தமிழக காங்கிரஸ் தலைமை மீது தொண்டர்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி குறித்து, சோனியாவிடம் விளக்கியுள்ளார்.வாசன் தெரிவித்த அனைத்து விவரங்களையும், அமைதியாக கேட்டு கொண்டிருந்த சோனியா, "நீங்கள் ஏன் தமிழக காங்., தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள கூடாது?' என கேட்டதாகவும், அதற்கு வாசன், "நான் அகில இந்திய காங்கிரஸ் செயலராகவும், தமிழக காங்., தலைவராகவும் பணியாற்றியிருக்கிறேன்' என்ற பதிலை மட்டும் கூறியதாகவும், டில்லி வட்டாரங்கள் கூறுகின்றன.சோனியாவே கேட்டுக் கொண்டதால், தட்டிக் கழிக்காமல், வாசன் தலைவர் பதவியை ஏற்க முன் வருவாரா அல்லது தன் ஆதரவாளர்களுக்கு தலைவர் பதவியை பெற்றுக் கொடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போது, அவர் கேபின்ட் அமைச்சராக இருப்பதால், மாநில தலைவர் பதவியை விரும்பவில்லை.


மத்திய அமைச்சர் மற்றும் மாநில தலைவர் என்ற இரண்டு பதவிகளையும் கொடுத்தால், தலைவர் பதவியை ஏற்க வாசன் விருப்பம் தெரிவிப்பார். இல்லையென்றால் தன் ஆதரவாளர்களான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு தலைவர் பதவியை பெற்றுக் கொடுப்பார் என, அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிதம்பரம் தரப்பில், கடலூர் எம்.பி., கே.எஸ்.அழகிரியை தலைவராக்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. ஒட்டு மொத்த கோஷ்டித் தலைவர்களுக்கும் பொதுவானவர் என்ற அடிப்படையில், இளங்கோவனை தலைவராக நியமிக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.தேர்தல் முடிவு வெளியாகி, புதிய அரசுகள் அமைந்த பின், சில மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்கள் பதவி மாற்றப்படுகிறது. அந்த மாநில தலைவர்கள் மாற்றம் பட்டியலில், தமிழகமும் இடம் பெறும் என, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல் எம்.எல்.ஏ., வாக இருப்பவரையும், இன்ன பிற முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களையும் தன்னிச்சையாக தங்கபாலு நீக்கியுள்ளார். இவரை, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென்று சோனியாவிடம் உள்துறை அமைச்சர் சிதம்பரம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி கராத்தே தியாகராஜன், மங்கள்ராஜ், செங்கை செல்லப்பா என 19 பேரை தமிழக காங்கிரசில் இருந்து தங்கபாலு அதிரடியாக நீக்கம் செய்தார். சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்த மறுநாளே எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, தமிழக காங்கிரசில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது.
நீக்கப்பட்டவர்கள் பலரும் தங்கபாலுவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வரும் நிலையில், சோனியாவை உடனடியாக சிதம்பரம் சந்தித்தார். டில்லியில் சோனியாவை சந்தித்த உள்துறை அமைச்சர் சிதம்பரம், தங்கபாலுவின் தன்னிச்சையான நடவடிக்கைகள் குறித்து புகார் எழுப்பியதாக கூறப்படுகிறது.

சோனியாவுடனான சிதம்பரத்தின் சந்திப்பு குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் நேற்று கூறியதாவது: சென்னையில் தங்கபாலு நீக்கம் செய்து அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து, காலதாமதம் ஏதுமின்றி உடனடியாக சிதம்பரம் களத்தில் இறங்கி சோனியாவை சந்தித்தார். அப்போது எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் என 19 பேர், தமிழக காங்கிரசில் இருந்து திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களது நீக்கம் குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் விதிமுறைகள் எவையும் பின்பற்றப்படவில்லை. முழுக்க முழுக்க தன்னிச்சையாக தங்கபாலு செயல்பட்டுள்ளார்.

தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசின் வெற்றிவாய்ப்பு என்பது கூட தங்கபாலுவின் தவறான நடவடிக்கைகள் காரணமாகவே பெரிதும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், அவர் போட்டியிடும் மயிலாப்பூர் தொகுதியிலேயேகூட தங்கபாலு பெரும் தோல்வியை சந்திப்பார் என்றே தகவல்கள் வருவதாகவும் சிதம்பரம் தெரிவித்தார்.
தங்கபாலு, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தன் இஷ்டத்திற்கு நடத்துவது ஏற்கத்தக்கது அல்ல என்றும், அவரது இந்த எதேச்சதிகார நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதமானது. இவரது தலைமை தமிழகத்தில் தொடர்ந்தால், கட்சியின் எதிர்காலம் நிச்சயம் பாழாகிவிடும். அந்த அபாயத்திலிருந்து கட்சியை மீட்டெடுக்க வேண்டுமெனில் உடனடியாக தங்கபாலுவை, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். சிதம்பரத்தின் புகாரை கேட்டுக் கொண்ட சோனியா, இதுகுறித்து உரிய முறையில் பரிசீலனை செய்வதாகவும் உறுதியளித்துள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தாமதமின்றி தங்கபாலுவை நீக்குங்கள் : சோனியாவிடம் சிதம்பரம் கோரிக்கை

நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல் எம்.எல்.ஏ., வாக இருப்பவரையும், இன்ன பிற முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களையும் தன்னிச்சையாக தங்கபாலு நீக்கியுள்ளார். இவரை, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென்று சோனியாவிடம் உள்துறை அமைச்சர் சிதம்பரம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி கராத்தே தியாகராஜன், மங்கள்ராஜ், செங்கை செல்லப்பா என 19 பேரை தமிழக காங்கிரசில் இருந்து தங்கபாலு அதிரடியாக நீக்கம் செய்தார். சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்த மறுநாளே எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, தமிழக காங்கிரசில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது.
நீக்கப்பட்டவர்கள் பலரும் தங்கபாலுவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வரும் நிலையில், சோனியாவை உடனடியாக சிதம்பரம் சந்தித்தார். டில்லியில் சோனியாவை சந்தித்த உள்துறை அமைச்சர் சிதம்பரம், தங்கபாலுவின் தன்னிச்சையான நடவடிக்கைகள் குறித்து புகார் எழுப்பியதாக கூறப்படுகிறது.

சோனியாவுடனான சிதம்பரத்தின் சந்திப்பு குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் நேற்று கூறியதாவது: சென்னையில் தங்கபாலு நீக்கம் செய்து அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து, காலதாமதம் ஏதுமின்றி உடனடியாக சிதம்பரம் களத்தில் இறங்கி சோனியாவை சந்தித்தார். அப்போது எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் என 19 பேர், தமிழக காங்கிரசில் இருந்து திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களது நீக்கம் குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் விதிமுறைகள் எவையும் பின்பற்றப்படவில்லை. முழுக்க முழுக்க தன்னிச்சையாக தங்கபாலு செயல்பட்டுள்ளார்.

தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசின் வெற்றிவாய்ப்பு என்பது கூட தங்கபாலுவின் தவறான நடவடிக்கைகள் காரணமாகவே பெரிதும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், அவர் போட்டியிடும் மயிலாப்பூர் தொகுதியிலேயேகூட தங்கபாலு பெரும் தோல்வியை சந்திப்பார் என்றே தகவல்கள் வருவதாகவும் சிதம்பரம் தெரிவித்தார்.
தங்கபாலு, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தன் இஷ்டத்திற்கு நடத்துவது ஏற்கத்தக்கது அல்ல என்றும், அவரது இந்த எதேச்சதிகார நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதமானது. இவரது தலைமை தமிழகத்தில் தொடர்ந்தால், கட்சியின் எதிர்காலம் நிச்சயம் பாழாகிவிடும். அந்த அபாயத்திலிருந்து கட்சியை மீட்டெடுக்க வேண்டுமெனில் உடனடியாக தங்கபாலுவை, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். சிதம்பரத்தின் புகாரை கேட்டுக் கொண்ட சோனியா, இதுகுறித்து உரிய முறையில் பரிசீலனை செய்வதாகவும் உறுதியளித்துள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பனாஜி : "அரசு வேலை தேடும் இளைஞர்கள், மாநிலத்தில் இளைஞர் காங்கிரசில் சேர வேண்டும்' என்று கோவா முதல்வர் திகம்பர் காமத் அழைப்பு விடுத்துள்ளார். கோவாவில், இம்மாதத்துடன், இளைஞர் காங்கிரசில் தொண்டர்கள் சேர்ப்பு பணி முடிவடைகிறது. இதன் பின்னர் தேர்தல் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து மாநில முதல்வர் திகம்பர் காமத் பனாஜியில் கூறுகையில், "மாநிலத்தின் முதல்வராக, இதுவரை, நான், குறைந்தது 1,000 அரசு வேலை வழங்கி உள்ளேன், என்பதை தொடர்ந்து சொல்லி வருகிறேன். ஞாபகம் வைத்து கொள்ளுங்கள் 35 வயதுக்கு குறைந்தவர்கள் யார் வேண்டுமானாலும், இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆகலாம். வேலை தேடுபவர்கள், வேலை கிடைத்தவர்கள் என யார் வேண்டுமானாலும் உறுப்பினர்கள் ஆகலாம். நீங்கள் உறுப்பினரானால், வேலை வழங்குவது பற்றி பரிசீலிக்கலாம். இது ஒன்றும் அரசியல் அமைப்பு அல்ல' என்று தெரிவித்தார்.
ஆனால், இளைஞர் காங்கிரஸ் இணையதளத்தில், "நாட்டிலேயே உள்கட்சி தேர்தல் நடத்தும் ஒரே அரசியல் அமைப்பு இளைஞர் காங்கிரஸ்' என்று தெரிவித்துள்ளது. மாநிலத்தில் ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வும், குறைந்தது 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் இளைஞர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று முதல்வர் காமத் உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இளைஞர் காங்கிரசில் சேர்ந்தால் கோவா மாநிலத்தில் அரசு வேலை

பனாஜி : "அரசு வேலை தேடும் இளைஞர்கள், மாநிலத்தில் இளைஞர் காங்கிரசில் சேர வேண்டும்' என்று கோவா முதல்வர் திகம்பர் காமத் அழைப்பு விடுத்துள்ளார். கோவாவில், இம்மாதத்துடன், இளைஞர் காங்கிரசில் தொண்டர்கள் சேர்ப்பு பணி முடிவடைகிறது. இதன் பின்னர் தேர்தல் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து மாநில முதல்வர் திகம்பர் காமத் பனாஜியில் கூறுகையில், "மாநிலத்தின் முதல்வராக, இதுவரை, நான், குறைந்தது 1,000 அரசு வேலை வழங்கி உள்ளேன், என்பதை தொடர்ந்து சொல்லி வருகிறேன். ஞாபகம் வைத்து கொள்ளுங்கள் 35 வயதுக்கு குறைந்தவர்கள் யார் வேண்டுமானாலும், இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆகலாம். வேலை தேடுபவர்கள், வேலை கிடைத்தவர்கள் என யார் வேண்டுமானாலும் உறுப்பினர்கள் ஆகலாம். நீங்கள் உறுப்பினரானால், வேலை வழங்குவது பற்றி பரிசீலிக்கலாம். இது ஒன்றும் அரசியல் அமைப்பு அல்ல' என்று தெரிவித்தார்.
ஆனால், இளைஞர் காங்கிரஸ் இணையதளத்தில், "நாட்டிலேயே உள்கட்சி தேர்தல் நடத்தும் ஒரே அரசியல் அமைப்பு இளைஞர் காங்கிரஸ்' என்று தெரிவித்துள்ளது. மாநிலத்தில் ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வும், குறைந்தது 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் இளைஞர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று முதல்வர் காமத் உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக, மயிலாப்பூர் எம்எல்ஏ எஸ்.வி.சேகர் உள்பட 19 பேரை கட்சியில் இருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு நீக்கியுள்ளார்.

இதுதொடர்பாக தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், மயிலாப்பூர் எம்எல்ஏ எஸ்.வி.சேகர், தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மங்கள் ராஜ், தென்சென்னை இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜேம்ஸ் ஜி.பிரகாஷ், சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் சாந்தி, செங்கை செல்லப்பன், விஜயசேகர் உள்பட மொத்தம் 19 பேர் நீக்கப்பட்டுள்ளதாக தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இவர்கள் அனைவரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அதிகாரப்பூர்வ காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டதாக, தங்கபாலு கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எஸ்.வி.சேகர், என்னை கட்சியில் இருந்து நீக்க தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஒப்புதலை பெறாமல் தங்கபாலு, தன்னிச்சையாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். தனக்கு எதிராக கட்சியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நீக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தங்கபாலு செயல்பட்டுள்ளார். தங்கபாலு நடவடிக்கை குறித்து ராகுல் காந்திக்கு இமெயில் அனுப்ப உள்ளேன் என்றார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து எஸ்.வி.சேகர் நீக்கம்

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக, மயிலாப்பூர் எம்எல்ஏ எஸ்.வி.சேகர் உள்பட 19 பேரை கட்சியில் இருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு நீக்கியுள்ளார்.

இதுதொடர்பாக தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், மயிலாப்பூர் எம்எல்ஏ எஸ்.வி.சேகர், தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மங்கள் ராஜ், தென்சென்னை இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜேம்ஸ் ஜி.பிரகாஷ், சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் சாந்தி, செங்கை செல்லப்பன், விஜயசேகர் உள்பட மொத்தம் 19 பேர் நீக்கப்பட்டுள்ளதாக தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இவர்கள் அனைவரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அதிகாரப்பூர்வ காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டதாக, தங்கபாலு கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எஸ்.வி.சேகர், என்னை கட்சியில் இருந்து நீக்க தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஒப்புதலை பெறாமல் தங்கபாலு, தன்னிச்சையாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். தனக்கு எதிராக கட்சியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நீக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தங்கபாலு செயல்பட்டுள்ளார். தங்கபாலு நடவடிக்கை குறித்து ராகுல் காந்திக்கு இமெயில் அனுப்ப உள்ளேன் என்றார்.

புதுடில்லி:"சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு யாரும் சவால்விட கூடாது' என, அதிருப்தி வேட்பாளர்களை, கட்சியின் "சந்தேஷ்' பத்திரிகையில் தலைவர் சோனியா கடுமையாக எச்சரித்துள்ளார். மேலும், பட்ஜெட் கூட்டத்தொடரின் நேரத்தை வீணடித்த எதிர்க்கட்சியினரையும் சாடியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின், "சந்தேஷ்' பத்திரிக்கையின், முதல் பக்கத்தில், அக்கட்சி தலைவர் சோனியா தலையங்கம் எழுதியுள்ளார்.அதில் அவர் கூறியுள்ளதாவது:தமிழகம், அசாம், கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில், கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு யாரும் சவால்விட கூடாது. ஒவ்வொருவருக்கும் சீட் வழங்க முடியாது. கட்சியின் முடிவை, இறுதி முடிவாக எடுத்து கொள்ள வேண்டும். கட்சியினர் யாரும் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்க்க கூடாது. கட்சியால் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களுக்கு, கட்சி தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஆதரவு தெரிவிக்க வேண்டும்.போதிய பார்லிமென்ட் ஜனநாயக அக்கறையின்மையால், பட்ஜெட் நேரத்தை எதிர்க்கட்சிகள் வீணடித்தனர்.

பட்ஜெட் கூட்டம் முக்கியமானது. பல்வேறு அமைச்சகங்களுக்கு, திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதுகுறித்து பார்லிமென்டில் வாதம் செய்யப்படும். ஆனால், உண்மையில் அது நடக்காதது வருத்தம் அளிக்கிறது. தொடர்ந்து பார்லிமென்ட் கூட்டத்தை ஒத்திவைத்து, ஏன் மக்களின் வரி பணம் வீணடிக்கப்பட்டது என்பதற்கு, மக்களுக்கு பா.ஜ., கட்சி விளக்கம் அளிக்க வேண்டும்.பொருட்கள் மற்றும் சேவை வரி உட்பட அனைத்து அம்சங்களும் பட்ஜெட்டில் நல்ல முறையில் வழங்கப்பட்டுள்ளது. புதிதாக கொண்டு வரப்பட்ட பொருட்கள் மற்றும் சேவை வரி சட்டம், மாநிலங்களுக்கு இடையில், பொருட்கள் மற்றும் சேவைகளை எளிதில் மாற்றி கொள்ள உதவும். முன்பு இருந்த சிக்கல்கள் களையப்படும்.இவ்வாறு சோனியா எழுதியுள்ளார்.

அதிருப்தி வேட்பாளர்கள் சோனியா கடும் சூடு

புதுடில்லி:"சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு யாரும் சவால்விட கூடாது' என, அதிருப்தி வேட்பாளர்களை, கட்சியின் "சந்தேஷ்' பத்திரிகையில் தலைவர் சோனியா கடுமையாக எச்சரித்துள்ளார். மேலும், பட்ஜெட் கூட்டத்தொடரின் நேரத்தை வீணடித்த எதிர்க்கட்சியினரையும் சாடியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின், "சந்தேஷ்' பத்திரிக்கையின், முதல் பக்கத்தில், அக்கட்சி தலைவர் சோனியா தலையங்கம் எழுதியுள்ளார்.அதில் அவர் கூறியுள்ளதாவது:தமிழகம், அசாம், கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில், கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு யாரும் சவால்விட கூடாது. ஒவ்வொருவருக்கும் சீட் வழங்க முடியாது. கட்சியின் முடிவை, இறுதி முடிவாக எடுத்து கொள்ள வேண்டும். கட்சியினர் யாரும் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்க்க கூடாது. கட்சியால் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களுக்கு, கட்சி தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஆதரவு தெரிவிக்க வேண்டும்.போதிய பார்லிமென்ட் ஜனநாயக அக்கறையின்மையால், பட்ஜெட் நேரத்தை எதிர்க்கட்சிகள் வீணடித்தனர்.

பட்ஜெட் கூட்டம் முக்கியமானது. பல்வேறு அமைச்சகங்களுக்கு, திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதுகுறித்து பார்லிமென்டில் வாதம் செய்யப்படும். ஆனால், உண்மையில் அது நடக்காதது வருத்தம் அளிக்கிறது. தொடர்ந்து பார்லிமென்ட் கூட்டத்தை ஒத்திவைத்து, ஏன் மக்களின் வரி பணம் வீணடிக்கப்பட்டது என்பதற்கு, மக்களுக்கு பா.ஜ., கட்சி விளக்கம் அளிக்க வேண்டும்.பொருட்கள் மற்றும் சேவை வரி உட்பட அனைத்து அம்சங்களும் பட்ஜெட்டில் நல்ல முறையில் வழங்கப்பட்டுள்ளது. புதிதாக கொண்டு வரப்பட்ட பொருட்கள் மற்றும் சேவை வரி சட்டம், மாநிலங்களுக்கு இடையில், பொருட்கள் மற்றும் சேவைகளை எளிதில் மாற்றி கொள்ள உதவும். முன்பு இருந்த சிக்கல்கள் களையப்படும்.இவ்வாறு சோனியா எழுதியுள்ளார்.

திருவனந்தபுரம்:கேரளாவின் கோட்டயம் மாவட்டம் புதுபள்ளி தொகுதியில், 10வது முறையாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் உம்மன்சாண்டி அடுத்த முதல்வராவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.கேரளாவில் மூத்த காங்கிரஸ் தலைவர்களான அந்தோணி, வயலார் ரவியை தொடர்ந்து மக்களிடம் அதிகம் செல்வாக்கு பெற்றவர் உம்மன்சாண்டி. தேசிய அரசியலில் அவ்வளவாக நாட்டம் இல்லாத உம்மன்சாண்டி, லோக்சபா தேர்தலில் போட்டியிட்டதில்லை.
கோட்டயம் மாவட்டத்தின் புதுபள்ளி தொகுதியில், கடந்த 1970ம் ஆண்டு முதல், தொடர்ந்து ஒன்பது முறை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று வந்துள்ளார். ஏற்கனவே, இவர் கேரள முதல்வராகவும் இருந்துள்ளார். அந்தோணியும், வயலார் ரவியும் மத்திய அமைச்சர்களாக உள்ளதால், இந்த முறை உம்மன்சாண்டி வெற்றி பெற்றால் முதல்வராவதற்குரிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.புதுபள்ளி தொகுதியில் இவரை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுஜாசூசன் போட்டியிடுகிறார். "புதுபள்ளி தொகுதியில் உம்மன்சாண்டி தோற்றால் அது அதிசயமாக தான் கருதப்படும்' என, காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.ஆனால், கல்லூரி விரிவுரையாளரான சூசன் குறிப்பிடுகையில், "அதிசயம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். ஒரே நபரை தொடர்ந்து சட்டசபைக்கு அனுப்புவது பண்ணையாளர் நடைமுறைக்கு சமமானதாகும். ஜனநாயக நடைமுறைப்படி இது தவறு.
இத்தொகுதி மக்கள் புதிய வேட்பாளரை விரும்பு கின்றனர். எனக்கு பெண்களிடம் நிறைய செல்வாக்கு உள்ளது' என தெரிவித்துள்ளார்.கடந்த தேர்தலில் உம்மன்சாண்டியை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளர் சிந்து ஜாய், தற்போது அந்த கட்சியிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்துள்ளார். கடந்த முறை சாண்டியை எதிர்த்து பிரசாரம் செய்த சிந்து ஜாய், தற்போது, சாண்டியை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

10வது முறையாக போட்டி:உம்மன்சாண்டி வெல்வாரா?

திருவனந்தபுரம்:கேரளாவின் கோட்டயம் மாவட்டம் புதுபள்ளி தொகுதியில், 10வது முறையாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் உம்மன்சாண்டி அடுத்த முதல்வராவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.கேரளாவில் மூத்த காங்கிரஸ் தலைவர்களான அந்தோணி, வயலார் ரவியை தொடர்ந்து மக்களிடம் அதிகம் செல்வாக்கு பெற்றவர் உம்மன்சாண்டி. தேசிய அரசியலில் அவ்வளவாக நாட்டம் இல்லாத உம்மன்சாண்டி, லோக்சபா தேர்தலில் போட்டியிட்டதில்லை.
கோட்டயம் மாவட்டத்தின் புதுபள்ளி தொகுதியில், கடந்த 1970ம் ஆண்டு முதல், தொடர்ந்து ஒன்பது முறை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று வந்துள்ளார். ஏற்கனவே, இவர் கேரள முதல்வராகவும் இருந்துள்ளார். அந்தோணியும், வயலார் ரவியும் மத்திய அமைச்சர்களாக உள்ளதால், இந்த முறை உம்மன்சாண்டி வெற்றி பெற்றால் முதல்வராவதற்குரிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.புதுபள்ளி தொகுதியில் இவரை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுஜாசூசன் போட்டியிடுகிறார். "புதுபள்ளி தொகுதியில் உம்மன்சாண்டி தோற்றால் அது அதிசயமாக தான் கருதப்படும்' என, காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.ஆனால், கல்லூரி விரிவுரையாளரான சூசன் குறிப்பிடுகையில், "அதிசயம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். ஒரே நபரை தொடர்ந்து சட்டசபைக்கு அனுப்புவது பண்ணையாளர் நடைமுறைக்கு சமமானதாகும். ஜனநாயக நடைமுறைப்படி இது தவறு.
இத்தொகுதி மக்கள் புதிய வேட்பாளரை விரும்பு கின்றனர். எனக்கு பெண்களிடம் நிறைய செல்வாக்கு உள்ளது' என தெரிவித்துள்ளார்.கடந்த தேர்தலில் உம்மன்சாண்டியை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளர் சிந்து ஜாய், தற்போது அந்த கட்சியிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்துள்ளார். கடந்த முறை சாண்டியை எதிர்த்து பிரசாரம் செய்த சிந்து ஜாய், தற்போது, சாண்டியை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

கோல்கட்டா : "எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், திரிணமுல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் காங்கிரஸ் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை' என, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டசபை தேர்தல் ஆறு கட்டமாக நடக்கிறது. இதையொட்டி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி நிருபர்களிடம் கூறியதாவது:மேற்கு வங்கத்தில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், திரிணமுல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை வெளியே இருந்து ஆதரிப்போம். ஆட்சியில் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. ஆட்சியில் பங்கேற்பது குறித்து, மேலிட ஆலோசனைக்கு பிறகு தான் முடிவு செய்யப்படும். முதலில் பாலத்தை நெருங்குவோம்; அதன் பிறகு பாலத்தைக் கடப்பது குறித்து யோசிப்போம்.தேர்தலில் சீட் கிடைக்காத காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் போட்டி வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்வதை வாபஸ் பெற வேண்டும்.

தேர்தலில் சீட் வேண்டும் என்பது பிறப்புரிமை கிடையாது. யாருக்கு சீட் கொடுப்பது என்பதை கட்சி தான் முடிவு செய்யும். மீறி போட்டி வேட்பாளராக மனு செய்பவர்கள், கட்சியிலிருந்து ஆறாண்டு காலத்துக்கு நீக்கப்படுவர் . இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஒழுங்கு நடவடிக்கை குழு தேவையில்லை. மாநில காங்கிரஸ் கட்சித் தலைவருக்கே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போதிய அதிகாரம் உள்ளது.நான் காங்கிரஸ் செயற்குழுவில் இடம் பெற்றிருந்தாலும் கூட, 1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட விரும்பினேன். ஆனால், கட்சி மேலிடம் எனக்கு சீட் கொடுக்கவில்லை. அதன் பின் நடந்த தேர்தலில் சீட் கிடைத்து, இன்று முக்கிய பதவியில் இருக்கிறேன். எனவே, தேர்தலில் சீட் கிடைக்காததையெல்லாம் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

மம்தா கட்சி ஆட்சிக்கு வந்தால் காங்., நிலை என்ன: பிரணாப்

கோல்கட்டா : "எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், திரிணமுல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் காங்கிரஸ் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை' என, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டசபை தேர்தல் ஆறு கட்டமாக நடக்கிறது. இதையொட்டி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி நிருபர்களிடம் கூறியதாவது:மேற்கு வங்கத்தில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், திரிணமுல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை வெளியே இருந்து ஆதரிப்போம். ஆட்சியில் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. ஆட்சியில் பங்கேற்பது குறித்து, மேலிட ஆலோசனைக்கு பிறகு தான் முடிவு செய்யப்படும். முதலில் பாலத்தை நெருங்குவோம்; அதன் பிறகு பாலத்தைக் கடப்பது குறித்து யோசிப்போம்.தேர்தலில் சீட் கிடைக்காத காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் போட்டி வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்வதை வாபஸ் பெற வேண்டும்.

தேர்தலில் சீட் வேண்டும் என்பது பிறப்புரிமை கிடையாது. யாருக்கு சீட் கொடுப்பது என்பதை கட்சி தான் முடிவு செய்யும். மீறி போட்டி வேட்பாளராக மனு செய்பவர்கள், கட்சியிலிருந்து ஆறாண்டு காலத்துக்கு நீக்கப்படுவர் . இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஒழுங்கு நடவடிக்கை குழு தேவையில்லை. மாநில காங்கிரஸ் கட்சித் தலைவருக்கே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போதிய அதிகாரம் உள்ளது.நான் காங்கிரஸ் செயற்குழுவில் இடம் பெற்றிருந்தாலும் கூட, 1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட விரும்பினேன். ஆனால், கட்சி மேலிடம் எனக்கு சீட் கொடுக்கவில்லை. அதன் பின் நடந்த தேர்தலில் சீட் கிடைத்து, இன்று முக்கிய பதவியில் இருக்கிறேன். எனவே, தேர்தலில் சீட் கிடைக்காததையெல்லாம் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

கோல்கட்டா:மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து, காங்கிரஸ் அதிருப்தியாளர்கள் போட்டி வேட்பு மனு தாக்கல் செய்தனர்.தமிழகத்தை தொடர்ந்து, மேற்கு வங்க காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்விலும், அதிருப்தி ஏற்பட்டுள்ளது. திரிணமுல் தலைமையிலான கூட்டணியில், போராடி பெற்ற 65 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.மேலும், 2006ல், காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளை தற்போது திரிணமுல் காங்கிரஸ் கட்சி எடுத்து கொண்டது. இதனாலும், வேட்பாளர்கள் தேர்வில் அதிருப்தியடைந்த மாநில காங்கிரசின் இரண்டாம் கட்ட தலைவர்கள், மாநிலத்தின் வடக்கில், பல தொகுதிகளில் சுயேச்சைகளாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வடக்கில் 54 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல், இன்றுடன் முடிவடைகிறது.முராரி தொகுதி, காலம் காலமாக, காங்கிரஸ் வசமிருந்து வருகிறது. இத்தொகுதியை தற்போது, திரிணமுல் கட்சி எடுத்து கொண்டது. இங்கு, கோல்கட்டா ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி நூரி ஆலம் சவுத்ரியை, திரிணமுல் கட்சி நிறுத்தியுள்ளது.இதை எதிர்த்து பிர்பும் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள், காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் மோதகர் உசேன் மகனை, போட்டி வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளனர். கடந்த ஊராட்சி தேர்தலில், முராரி தொகுதியின் பல ஊராட்சிகளில், காங்கிரஸ் வெற்றி பெற்றது.காங்கிரஸ் தலைவர் பிரிய ரஞ்ஜன் தாஸ்முன்ஷியின் மனைவி தீபா கூறுகையில், "காங்கிரஸ் போட்டியிடும் ஐந்து தொகுதிகளில், திரிணமுல் காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசாரம் செய்ய வரவில்லை' என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து மேற்குவங்க காங்கிரஸ் கமிட்டி தலைவர் மானஸ் புனியா கூறுகையில், "பிர்பும் மாவட்டத்தில் இருந்து தகவல்களை சேகரிக்க, முயற்சித்து வருகிறோம். ஆட்சியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விரட்ட, திரிணமுல் கட்சியுடன் கூட்டணி அமைக்க, மேலிடம் முடிவு செய்துள்ளது. இதற்கு கட்டுப்பட வேண்டும் என, காங்கிரஸ் தலைவர்களை கேட்டு கொண்டுள்ளேன்' என்கிறார்.கடந்த 2001ம் ஆண்டு தேர்தலிலும், இதேபோல் தோன்றிய அதிருப்தி வேட்பாளர்களால், திரிணமுல், காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பல தொகுதிகளில் பாதிக்கப்பட்டது. உள்கட்சி குழப்பம் நடப்பு தேர்தலிலும் குழிபறித்து விடுமோ என, மாநில காங்கிரஸ் தலைமை கவலை கொண்டுள்ளது.

மேற்கு வங்கத்திலும் வெடித்தது காங்கிரசின் பிறவி குணம்

கோல்கட்டா:மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து, காங்கிரஸ் அதிருப்தியாளர்கள் போட்டி வேட்பு மனு தாக்கல் செய்தனர்.தமிழகத்தை தொடர்ந்து, மேற்கு வங்க காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்விலும், அதிருப்தி ஏற்பட்டுள்ளது. திரிணமுல் தலைமையிலான கூட்டணியில், போராடி பெற்ற 65 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.மேலும், 2006ல், காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளை தற்போது திரிணமுல் காங்கிரஸ் கட்சி எடுத்து கொண்டது. இதனாலும், வேட்பாளர்கள் தேர்வில் அதிருப்தியடைந்த மாநில காங்கிரசின் இரண்டாம் கட்ட தலைவர்கள், மாநிலத்தின் வடக்கில், பல தொகுதிகளில் சுயேச்சைகளாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வடக்கில் 54 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல், இன்றுடன் முடிவடைகிறது.முராரி தொகுதி, காலம் காலமாக, காங்கிரஸ் வசமிருந்து வருகிறது. இத்தொகுதியை தற்போது, திரிணமுல் கட்சி எடுத்து கொண்டது. இங்கு, கோல்கட்டா ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி நூரி ஆலம் சவுத்ரியை, திரிணமுல் கட்சி நிறுத்தியுள்ளது.இதை எதிர்த்து பிர்பும் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள், காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் மோதகர் உசேன் மகனை, போட்டி வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளனர். கடந்த ஊராட்சி தேர்தலில், முராரி தொகுதியின் பல ஊராட்சிகளில், காங்கிரஸ் வெற்றி பெற்றது.காங்கிரஸ் தலைவர் பிரிய ரஞ்ஜன் தாஸ்முன்ஷியின் மனைவி தீபா கூறுகையில், "காங்கிரஸ் போட்டியிடும் ஐந்து தொகுதிகளில், திரிணமுல் காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசாரம் செய்ய வரவில்லை' என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து மேற்குவங்க காங்கிரஸ் கமிட்டி தலைவர் மானஸ் புனியா கூறுகையில், "பிர்பும் மாவட்டத்தில் இருந்து தகவல்களை சேகரிக்க, முயற்சித்து வருகிறோம். ஆட்சியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விரட்ட, திரிணமுல் கட்சியுடன் கூட்டணி அமைக்க, மேலிடம் முடிவு செய்துள்ளது. இதற்கு கட்டுப்பட வேண்டும் என, காங்கிரஸ் தலைவர்களை கேட்டு கொண்டுள்ளேன்' என்கிறார்.கடந்த 2001ம் ஆண்டு தேர்தலிலும், இதேபோல் தோன்றிய அதிருப்தி வேட்பாளர்களால், திரிணமுல், காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பல தொகுதிகளில் பாதிக்கப்பட்டது. உள்கட்சி குழப்பம் நடப்பு தேர்தலிலும் குழிபறித்து விடுமோ என, மாநில காங்கிரஸ் தலைமை கவலை கொண்டுள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தங்கபாலுவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. மயிலாப்பூர் தொகுதியில் ஜெயந்தியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு தங்கபாலு வேட்பாளரானது காங்கிரசாரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை 11 மணி அளவில் மத்திய சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரசார் மாவட்ட பொதுச் செயலாளர் ரஞ்சன்குமார் தலைமையில் சத்தியமூர்த்தி பவனுக்கு திரண்டு வந்தனர். அலுவலக வாசலில் முற்றுகையிட்டு அமர்ந்தனர்.

அனைவரும் தங்கபாலுவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். மயிலாப்பூர் தொகுதி மகளிர் காங்கிரஸ் நிர்வாகி சுசீலா என்பவர் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்தனர்.

இளைஞர் காங்கிரசார் தயாராக வைத்திருந்த தங்கபாலு உருவ பொம்மைகளை தீ வைத்து எரித்தனர்.

சத்தியமூர்த்தி பவனில் இன்று நடந்த சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநில தலைவர் செங்கை செல்லப்பன் தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மகா கவிபாரதி நகரில் நடந்தது.

இதன் பின்னர், காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநில பொதுச் செயலாளர் உலகநம்பி கூறும்போது, சோனியாகாந்தியை ஏமாற்றி மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் தங்கபாலுவை தோற்கடிக்க வேண்டும். அவருக்கு எதிராக காங்கிரசார் பிரசாரம் செய்ய வேண்டும் என்றார்.

சோனியாவை ஏமாற்றிய தங்கபாலு : காங்கிரசார் ஆவேசம்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தங்கபாலுவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. மயிலாப்பூர் தொகுதியில் ஜெயந்தியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு தங்கபாலு வேட்பாளரானது காங்கிரசாரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை 11 மணி அளவில் மத்திய சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரசார் மாவட்ட பொதுச் செயலாளர் ரஞ்சன்குமார் தலைமையில் சத்தியமூர்த்தி பவனுக்கு திரண்டு வந்தனர். அலுவலக வாசலில் முற்றுகையிட்டு அமர்ந்தனர்.

அனைவரும் தங்கபாலுவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். மயிலாப்பூர் தொகுதி மகளிர் காங்கிரஸ் நிர்வாகி சுசீலா என்பவர் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்தனர்.

இளைஞர் காங்கிரசார் தயாராக வைத்திருந்த தங்கபாலு உருவ பொம்மைகளை தீ வைத்து எரித்தனர்.

சத்தியமூர்த்தி பவனில் இன்று நடந்த சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநில தலைவர் செங்கை செல்லப்பன் தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மகா கவிபாரதி நகரில் நடந்தது.

இதன் பின்னர், காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநில பொதுச் செயலாளர் உலகநம்பி கூறும்போது, சோனியாகாந்தியை ஏமாற்றி மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் தங்கபாலுவை தோற்கடிக்க வேண்டும். அவருக்கு எதிராக காங்கிரசார் பிரசாரம் செய்ய வேண்டும் என்றார்.

திரு.வி.க. நகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வ.நீலகண்டனை ஆதரித்து புளியந்தோப்பில் பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பாலன் தலைமை தாங்கினார்.

நடிகர் ராதாரவி இதில் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர், ‘’அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை கைது செய்து 28 நாட்கள் சிறையில் வைத்தனர்.

அவர் வெளியே வந்து மீண்டும் வெற்றி பெற்றார். அது போல் இந்த தேர்தலிலும் ஜெயிப்பது உறுதி. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நிறைய இலவசங்களை அறிவித்துள்ளனர்.

பெட்ரோல் இலவசம், மின்சாரம் இலவசம் என்று சொல்ல முடியுமா? அவர்கள் தேர்தல் அறிக்கையை பார்த்து என்ன ஆகுமோ என்று பயப்பட வேண்டாம். வெற்றி நமக்குத்தான். அ.தி.மு.க.வுடன் நல்ல கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

விஜயகாந்தும் சேர்ந்து இருக்கிறார். ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த் ஜெயிப்பார். அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்ததால் அவர் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. முரசு கொட்டப்படும் காங்கிரஸ் கட்சிக்கு ஆயுள்ரேகை இல்லை.

எனவே அக்கட்சி தோற்பது உறுதி காங்கிரஸ்காரர்கள் வயதானவர்கள். வீடுகளில் ஏறி இறங்கி ஓட்டு கேட்க முடியாது. அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறாது என்று ராமதாஸ் பேசுகிறார். அவர் குறைமாத குழந்தை மாதிரி பேசுகிறார்.

அ.தி.மு.க. வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. வ.நீலகண்டன் வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், லயன் முருகேஷ், ஆர்.டி. சாம்சன், சந்தான கிருஷ்ணன், முகுந்தன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரசுக்கு ஆயுள்ரேகை இல்லை: நடிகர் ராதாரவி பேச்சு

திரு.வி.க. நகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வ.நீலகண்டனை ஆதரித்து புளியந்தோப்பில் பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பாலன் தலைமை தாங்கினார்.

நடிகர் ராதாரவி இதில் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர், ‘’அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை கைது செய்து 28 நாட்கள் சிறையில் வைத்தனர்.

அவர் வெளியே வந்து மீண்டும் வெற்றி பெற்றார். அது போல் இந்த தேர்தலிலும் ஜெயிப்பது உறுதி. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நிறைய இலவசங்களை அறிவித்துள்ளனர்.

பெட்ரோல் இலவசம், மின்சாரம் இலவசம் என்று சொல்ல முடியுமா? அவர்கள் தேர்தல் அறிக்கையை பார்த்து என்ன ஆகுமோ என்று பயப்பட வேண்டாம். வெற்றி நமக்குத்தான். அ.தி.மு.க.வுடன் நல்ல கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

விஜயகாந்தும் சேர்ந்து இருக்கிறார். ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த் ஜெயிப்பார். அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்ததால் அவர் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. முரசு கொட்டப்படும் காங்கிரஸ் கட்சிக்கு ஆயுள்ரேகை இல்லை.

எனவே அக்கட்சி தோற்பது உறுதி காங்கிரஸ்காரர்கள் வயதானவர்கள். வீடுகளில் ஏறி இறங்கி ஓட்டு கேட்க முடியாது. அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறாது என்று ராமதாஸ் பேசுகிறார். அவர் குறைமாத குழந்தை மாதிரி பேசுகிறார்.

அ.தி.மு.க. வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. வ.நீலகண்டன் வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், லயன் முருகேஷ், ஆர்.டி. சாம்சன், சந்தான கிருஷ்ணன், முகுந்தன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முக நூல்

Popular Posts