background img

புதிய வரவு

Showing posts with label Andhra. Show all posts
Showing posts with label Andhra. Show all posts
மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மனைவி விஜயலட்சுமி மகன் ஜெகன் மோகன் ரெட்டி. காங்கிரஸ் மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த நவம்பர் மாதம் ஜெகன்மோகன் ரெட்டி கடப்பா தொகுதி எம்.பி. பதவியையும், விஜயலட்சுமி புலிவெந்துலா தொகுதி எம்.எல். ஏ. பதவியையும் ராஜினா செய்தனர்.

இந்த நிலையில் இந்த 2 தொகுதிகளுக்கும் வரும் மே மாதம் 8-ந்தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடப்பா எம்.பி. தொகுதியில் ஜெகன்மோகன் ரெட்டியும் புலிவெந்துலா சட்டசபை தொகுதிக்கு விஜயலட்சுமியும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

விரைவில் இருவரும் வேட்புமனுதாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.ராஜசேகர ரெட்டியின் சகோதரர் ஒய்.எஸ்.விவே கானந்தா ரெட்டி தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார். அவரது எம்.எல்.எல்.சி. பதவி காலம் முடிந்ததால் ராஜினாமா செய்தார்.

அவரை புலிவெந்துலா தொகுதியில் நிறுத்தி ஜெகன் மோகன் ரெட்டிக்கு நெருக்கடி கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதுபற்றி விவேகானந்தா கூறும்போது, காங்கிரஸ் மேலிடம் கட்டளையிட்டால் நான் எந்த தொகுதியிலும் போட்டியிடத் தயார் என்றார்.

ஆந்திராவில் கடப்பா எம்.பி. தொகுதிக்கு மே 8-ந்தேதி தேர்தல்; ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் போட்டி

மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மனைவி விஜயலட்சுமி மகன் ஜெகன் மோகன் ரெட்டி. காங்கிரஸ் மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த நவம்பர் மாதம் ஜெகன்மோகன் ரெட்டி கடப்பா தொகுதி எம்.பி. பதவியையும், விஜயலட்சுமி புலிவெந்துலா தொகுதி எம்.எல். ஏ. பதவியையும் ராஜினா செய்தனர்.

இந்த நிலையில் இந்த 2 தொகுதிகளுக்கும் வரும் மே மாதம் 8-ந்தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடப்பா எம்.பி. தொகுதியில் ஜெகன்மோகன் ரெட்டியும் புலிவெந்துலா சட்டசபை தொகுதிக்கு விஜயலட்சுமியும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

விரைவில் இருவரும் வேட்புமனுதாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.ராஜசேகர ரெட்டியின் சகோதரர் ஒய்.எஸ்.விவே கானந்தா ரெட்டி தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார். அவரது எம்.எல்.எல்.சி. பதவி காலம் முடிந்ததால் ராஜினாமா செய்தார்.

அவரை புலிவெந்துலா தொகுதியில் நிறுத்தி ஜெகன் மோகன் ரெட்டிக்கு நெருக்கடி கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதுபற்றி விவேகானந்தா கூறும்போது, காங்கிரஸ் மேலிடம் கட்டளையிட்டால் நான் எந்த தொகுதியிலும் போட்டியிடத் தயார் என்றார்.

ஆந்திராவில் ராஜசேகர ரெட்டியின் தம்பி விவேகானந்தரெட்டி விவசாயத் துறை மந்திரியாக இருக்கிறார். ஆந்திர சட்டசபை கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தபோது ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தெலுங்குதேசம் ஆட்சியில் நிலமோசடி நடந்ததாக எழுதப்பட்ட அட்டையை ஏந்தி கோஷ மிட்டனர். இதற்கு பதிலடியாக இன்று சட்டசபை கூட்டம் நடந்தபோது தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் ராஜசேகர ரெட்டி ஊழல்வாதி என்ற வாசகம் அடங்கிய அட்டையை ஏந்தி இருந்தனர்.

இது ராஜசேகரரெட்டியின் தம்பியான மந்திரி விவேகானந்த ரெட்டிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. முத்து கிருஷ்ணநாயுடு, ராஜசேகர ரெட்டி குடும்பத்தினர் ஏராளமான சொத்து சேர்த்து விட்டார்கள் என்று விமர்சித்து பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த விவேகானந்த ரெட்டி முத்துகிருஷ்ண நாயுடுவை நோக்கி பாய்ந்து சென்றார். அப்போது முன் வரிசையில் இருந்த தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. ரமேஷ் கையில் இருந்த அட்டையை பறித்து கீழே வீசி விட்டு அவரை தாக்கினார்.

இதனால் விவேகானந்த ரெட்டியை ரமேஷ் கீழே தள்ளி விட்டார். இதில் தடுமாறி விழுந்த அவர் மீண்டும் முத்துகிருஷ்ண நாயுடுவை தாக்க ஓடினார். இதனால் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஓடிவந்து விவேகானந்த ரெட்டியை தடுத்துனர். இதை பார்த்ததும் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் விரைந்து வந்து தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்களை தாக்க முயன்றனர். நிலைமை மோசமாவதை உணர்ந்த சபாநாயகர் சபையை உடனடியாக ஒத்திவைத்தார்.

அப்போது முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி விரைந்து வந்து விவேகானந்த ரெட்டியை தனது அறைக்கு அழைத்து சென்று அமைதிபடுத்தினார். விவேகானந்த ரெட்டி ஆந்திர மேல்-சபை உறுப்பினராக இருந்து மந்திரி சபையில் இருக்கிறார். மந்திரி என்ற காரணத்தால் தனது துறை சம்பந்தமான கேள்விக்கு பதில் சொல்ல சட்டசபைக்கு வந்து இருந்தார். சட்டசபை உறுப்பினரை அவர் தாக்கியதால் அவரை மந்திரி சபையில் இருந்து நீக்க வேண்டும் என்று தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்தனர்.

சட்டசபையில் ஆவேசத்துடன் காணப்பட்ட விவேகானந்த ரெட்டி கோபமாக கூறும்போது என் குடும்பத்தை பற்றி மோசமாக விமர்சிப்பதை நான் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனக்கு மந்திரி பதவியே தேவையில்லை என்று கூறினார். எனவே அவர் மந்திரி பதவியை ராஜினாமா செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி காங்கிரசில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கி உள்ளார். அதில் சேராமல் விவேகானந்த ரெட்டி காங்கிரசிலேயே நீடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர சட்டசபையில் ரகளை: எம்.எல்.ஏ.வை தாக்கிய ராஜசேகர ரெட்டி தம்பி; அமளியால் சபை ஒத்திவைப்பு

ஆந்திராவில் ராஜசேகர ரெட்டியின் தம்பி விவேகானந்தரெட்டி விவசாயத் துறை மந்திரியாக இருக்கிறார். ஆந்திர சட்டசபை கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தபோது ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தெலுங்குதேசம் ஆட்சியில் நிலமோசடி நடந்ததாக எழுதப்பட்ட அட்டையை ஏந்தி கோஷ மிட்டனர். இதற்கு பதிலடியாக இன்று சட்டசபை கூட்டம் நடந்தபோது தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் ராஜசேகர ரெட்டி ஊழல்வாதி என்ற வாசகம் அடங்கிய அட்டையை ஏந்தி இருந்தனர்.

இது ராஜசேகரரெட்டியின் தம்பியான மந்திரி விவேகானந்த ரெட்டிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. முத்து கிருஷ்ணநாயுடு, ராஜசேகர ரெட்டி குடும்பத்தினர் ஏராளமான சொத்து சேர்த்து விட்டார்கள் என்று விமர்சித்து பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த விவேகானந்த ரெட்டி முத்துகிருஷ்ண நாயுடுவை நோக்கி பாய்ந்து சென்றார். அப்போது முன் வரிசையில் இருந்த தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. ரமேஷ் கையில் இருந்த அட்டையை பறித்து கீழே வீசி விட்டு அவரை தாக்கினார்.

இதனால் விவேகானந்த ரெட்டியை ரமேஷ் கீழே தள்ளி விட்டார். இதில் தடுமாறி விழுந்த அவர் மீண்டும் முத்துகிருஷ்ண நாயுடுவை தாக்க ஓடினார். இதனால் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஓடிவந்து விவேகானந்த ரெட்டியை தடுத்துனர். இதை பார்த்ததும் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் விரைந்து வந்து தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்களை தாக்க முயன்றனர். நிலைமை மோசமாவதை உணர்ந்த சபாநாயகர் சபையை உடனடியாக ஒத்திவைத்தார்.

அப்போது முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி விரைந்து வந்து விவேகானந்த ரெட்டியை தனது அறைக்கு அழைத்து சென்று அமைதிபடுத்தினார். விவேகானந்த ரெட்டி ஆந்திர மேல்-சபை உறுப்பினராக இருந்து மந்திரி சபையில் இருக்கிறார். மந்திரி என்ற காரணத்தால் தனது துறை சம்பந்தமான கேள்விக்கு பதில் சொல்ல சட்டசபைக்கு வந்து இருந்தார். சட்டசபை உறுப்பினரை அவர் தாக்கியதால் அவரை மந்திரி சபையில் இருந்து நீக்க வேண்டும் என்று தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்தனர்.

சட்டசபையில் ஆவேசத்துடன் காணப்பட்ட விவேகானந்த ரெட்டி கோபமாக கூறும்போது என் குடும்பத்தை பற்றி மோசமாக விமர்சிப்பதை நான் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனக்கு மந்திரி பதவியே தேவையில்லை என்று கூறினார். எனவே அவர் மந்திரி பதவியை ராஜினாமா செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி காங்கிரசில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கி உள்ளார். அதில் சேராமல் விவேகானந்த ரெட்டி காங்கிரசிலேயே நீடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ஐதராபாத் : ஆந்திர சட்டசபையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும், கடும் அமளி நிலவியது. தனி தெலுங்கானா, எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் போன்ற விவகாரங்களை எழுப்பி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, தெலுங்கு தேசம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மூன்று முறை சபை ஒத்தி வைக்கப்பட்டது.
ஆந்திர சட்டசபையில், கடந்த இரண்டு நாட்களாக கடும் அமளி நிலவி வருகிறது. பட்ஜெட் கூட்டத் தொடரில், கவர்னர் துவக்க உரையாற்றிய போது, தெலுங்கு தேசம் மற்றும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்.,) கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள், அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, டி.ஆர்.எஸ்., கட்சியைச் சேர்ந்த மூன்று பேரும், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இரண்டு பேரும், ஒரு வாரத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இப்பிரச்னையால், இரண்டு நாட்களாக சட்டசபையில் அமளி ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று சபை கூடியதும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, இப்பிரச்னையை எழுப்பினார். அவர் பேசுகையில், "எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை திரும்ப பெற வேண்டும். அவர்கள் மீண்டும் சபை நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்' என்றார்.
இதற்கு பதிலளித்த தொழிலாளர் துறை அமைச்சர் தனம் நாகேந்தர், "சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், தங்களின் ஒழுங்கீனமான நடவடிக்கைகளுக்கு மன்னிப்பு கேட்டால், சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும்' என்றார். இதற்கு தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ., நாகம் ஜனார்த்த ரெட்டி, சபையின் மையப் பகுதிக்கு சென்று கோஷம் எழுப்பினார்.
இதற்கிடையே, தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு வசதியாக உடனடியாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, டி.ஆர்.எஸ்., கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளி நிலவியபோது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.,க்கள் (ஜெகன் மோகன் ஆதரவு) மாணவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் விவகாரத்தை எழுப்பி, கோஷமிட்டனர். இதனால், சபையில் ஒரே கூச்சலும், குழப்பமும் நிலவியது. இதையடுத்து, சபை ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கு பின் இரண்டு முறை சபை கூடியும், நிலைமையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால், தொடர்ந்து மூன்று முறை சபை ஒத்தி வைக்கப்பட்டது. இதன்பின், முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களை அழைத்து, உதவி சபாநாயகர் நாதெந்லா மனோகர் ஆலோசனை நடத்தினார்.
உஸ்மானியாவில் பதட்டம் : தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வலியுறுத்தி, ஐதராபாத், உஸ்மானியா பல்கலை மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, சட்டசபை நோக்கி ஊர்வலமாக செல்ல, அவர்கள் முயற்சித்தனர். பல்கலை நுழைவாயிலிலேயே அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர்.
கோபமடைந்த மாணவர்கள், போலீசார் மீது கல்வீசி தாக்கினர். இதனால், அங்கு பதட்டம் உருவானது. கடும் முயற்சிக்கு பின், மாணவர்கள் ஊர்வலம் செல்லும் முயற்சியை போலீசார் முறியடித்தனர். மேலும், தெலுங்கானா ஆதரவாளர்கள் சிலர், ஐதராபாத் ரயில்வே ஸ்டேஷன் மீது, திடீரென கல்வீசி தாக்குதல் நடத்தினர். போலீசார், அவர்களை விரட்டி அடித்தனர்.

மூன்றாம் நாளாக ஆந்திராவில் எம்.எல்.ஏ.,க்கள் சபையில் அமளி

ஐதராபாத் : ஆந்திர சட்டசபையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும், கடும் அமளி நிலவியது. தனி தெலுங்கானா, எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் போன்ற விவகாரங்களை எழுப்பி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, தெலுங்கு தேசம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மூன்று முறை சபை ஒத்தி வைக்கப்பட்டது.
ஆந்திர சட்டசபையில், கடந்த இரண்டு நாட்களாக கடும் அமளி நிலவி வருகிறது. பட்ஜெட் கூட்டத் தொடரில், கவர்னர் துவக்க உரையாற்றிய போது, தெலுங்கு தேசம் மற்றும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்.,) கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள், அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, டி.ஆர்.எஸ்., கட்சியைச் சேர்ந்த மூன்று பேரும், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இரண்டு பேரும், ஒரு வாரத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இப்பிரச்னையால், இரண்டு நாட்களாக சட்டசபையில் அமளி ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று சபை கூடியதும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, இப்பிரச்னையை எழுப்பினார். அவர் பேசுகையில், "எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை திரும்ப பெற வேண்டும். அவர்கள் மீண்டும் சபை நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்' என்றார்.
இதற்கு பதிலளித்த தொழிலாளர் துறை அமைச்சர் தனம் நாகேந்தர், "சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், தங்களின் ஒழுங்கீனமான நடவடிக்கைகளுக்கு மன்னிப்பு கேட்டால், சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும்' என்றார். இதற்கு தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ., நாகம் ஜனார்த்த ரெட்டி, சபையின் மையப் பகுதிக்கு சென்று கோஷம் எழுப்பினார்.
இதற்கிடையே, தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு வசதியாக உடனடியாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, டி.ஆர்.எஸ்., கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளி நிலவியபோது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.,க்கள் (ஜெகன் மோகன் ஆதரவு) மாணவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் விவகாரத்தை எழுப்பி, கோஷமிட்டனர். இதனால், சபையில் ஒரே கூச்சலும், குழப்பமும் நிலவியது. இதையடுத்து, சபை ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கு பின் இரண்டு முறை சபை கூடியும், நிலைமையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால், தொடர்ந்து மூன்று முறை சபை ஒத்தி வைக்கப்பட்டது. இதன்பின், முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களை அழைத்து, உதவி சபாநாயகர் நாதெந்லா மனோகர் ஆலோசனை நடத்தினார்.
உஸ்மானியாவில் பதட்டம் : தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வலியுறுத்தி, ஐதராபாத், உஸ்மானியா பல்கலை மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, சட்டசபை நோக்கி ஊர்வலமாக செல்ல, அவர்கள் முயற்சித்தனர். பல்கலை நுழைவாயிலிலேயே அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர்.
கோபமடைந்த மாணவர்கள், போலீசார் மீது கல்வீசி தாக்கினர். இதனால், அங்கு பதட்டம் உருவானது. கடும் முயற்சிக்கு பின், மாணவர்கள் ஊர்வலம் செல்லும் முயற்சியை போலீசார் முறியடித்தனர். மேலும், தெலுங்கானா ஆதரவாளர்கள் சிலர், ஐதராபாத் ரயில்வே ஸ்டேஷன் மீது, திடீரென கல்வீசி தாக்குதல் நடத்தினர். போலீசார், அவர்களை விரட்டி அடித்தனர்.

முக நூல்

Popular Posts